TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 12:02 am

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:24 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 17, 2024 5:06 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun May 12, 2024 10:47 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


உலகத் தமிழினத்தின் தலைவியாக உயர்ந்து நிற்கும் தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா!

2 posters

Go down

உலகத் தமிழினத்தின் தலைவியாக உயர்ந்து நிற்கும் தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா! Empty உலகத் தமிழினத்தின் தலைவியாக உயர்ந்து நிற்கும் தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா!

Post by mmani Thu Jun 05, 2014 7:53 pm

உலகத் தமிழினத்தின் தலைவியாக உயர்ந்து நிற்கும் தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா! 10169221_562252657227329_8897280684640250540_n
ஈழத் தமிழர்கள்மீது உண்மையான அன்பு கொண்டிருந்தவர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள். அதனால், ஈழத் தமிழர்களது பேரன்புக்கும் பெரு மரியாதைக்கும் உரியவராகத் திகழ்ந்த தம்பி பிரபாகரன் அவர்கள் மீதும் பாசத்தைக் கொண்டிருந்தார். அவருக்காக, புரட்சித் தலைவர் அவர்களது இல்லமும், அவரது மனக் கதவுகளும் என்றுமே திறந்தே இருந்தது என்றால் அது மிகை அல்ல. இதனை, தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்கள் 'போரும் சமாதானமும்' என்ற நூலில் மிகத் தெளிவாகத் தெரிவித்திருந்தார். ஈழத் தமிழர்களது விடுதலைப் போராட்டத்திற்காக அள்ளிக் கொடுத்த வள்ளலாக அவர் அதனை விவரித்திருந்தார்.
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களது தடம் பற்றி நடைபோடும் தாயுள்ளம் கொண்ட புரட்சித் தலைவி செல்வி ஜெயலலிதா அவர்களும் மாமனிதர் எம்.ஜி.ஆர். அவர்களது பாணியில், ஈழத் தமிழர்களது அவலங்களுக்குப் பரிகாரம் தேடி வருகின்றார். தமிழகத்தின் முதல்வராக மீண்டும் பதவி ஏற்ற நாள் முதல், ஈழத் தமிழர்களது அவலங்களுக்காகத் தமிழக சட்ட சபையில் பல தீர்மானங்களை இயற்றியதுடன், சிங்கள அதிபர் ராஜபக்சேவை போர்க் குற்றவாளியாகவும் அறிவித்தார்.
நேற்றைய தினம், 03-06-2014 செவ்வாய்க்கிழமை புது டெல்லி சென்று பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்தபோதும், தமிழகத்தின் தேவைகள் மட்டுமல்லாமல், ஈழத் தமிழர்களது விடிவுக்கான தனது தீர்மானங்களையும் அவரிடம் கையளித்துள்ளார்.
- இலங்கையில் நடந்த இனப் படுகொலையைக் கண்டித்து ஐநாவில் இந்தியா கண்டனத் தீர்மானம் கொண்டுவர வேண்டும்,
- தனித் தமிழ் ஈழம் அமைக்க இலங்கைத் தமிழர்களிடமும் புலம்பெயர்ந்த தமிழர்களிடமும் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என அந்தத் தீர்மானத்தில் வலியுறுத்த வேண்டும்
என்பது தமிழக முதலமைச்சர் அவர்களது முக்கிய கோரிக்கைகளாக இருந்தது.
இதே போன்றதொரு காலப் பகுதியில், ஈழத் தமிழினம் இன அழிப்புக்குள்ளாக்கப்பட்டு, ஒன்றரை இலட்சம் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டு, மூன்றரை இலட்சம் தமிழர்கள் மந்தைகள் போல், சிங்கள ஆட்சியாளர்கள் முள்வேலி முகாம்களுக்குள் அடைக்கப்பட்ட காலப் பகுதியில், அன்றைய தமிழக முதல்வர் கருணாநிதி அவர்களும் புது டெல்லி சென்றிருந்தார். அப்போது, காங்கிரஸ் பிரதமராகப் பதவி ஏற்றிருந்த மன்மோகன் சிங்கையும், காங்கிரஸ் தலைவி சோனியா காந்தியையும், அவரது பரிவாரங்களையும்கூட சந்தித்தார்.
மிகுந்த கௌரவமும், மரியாதையும் வழங்கப்பட்டிருந்த அன்றைய நாளில் அவரும் பல கோரிக்கைகளை காங்கிரஸ் தலைமையிடமும், பிரதமர் மன்மோகன் சிங்கிடமும் கையளித்திருந்தார். அவற்றினை நிறைவேற்றத் தயங்கிய காங்கிரஸ் கட்சியிடம் கோபித்துக்கொண்டு வெளிநடப்பும் செய்தார். அவர் கையளித்திருந்த எந்தக் கோரிக்கையும் ஈழத் தமிழர்களது கண்ணீரைத் துடைப்பதற்காக அல்ல... ஈழத் தமிழர்களது அவலங்களைப் போக்குவதற்காக அல்ல... ஈழத் தமிழர்களை சிங்களப் புதைகுழிகளிலிருந்து மீட்பதற்காக அல்ல...
மாறாக, வாரிச் சுருட்ட வசதியான மந்திரிப் பதவிகளைத் தனது வாரிசுகளுக்காகவும், தனக்கு வளம் சேர்க்கக்கூடியவர்களுக்காகவும் கேட்டுக் கோரிக்கை வைப்பதற்காகவே அவர் டெல்லி சென்றிருந்தார். அதற்காகவே, அவர் தனது கோபத்தையும் வெளிக்காட்டினார். அதை நிறைவேற்றிய பெருமையுடன் மீண்டும் சென்னை திரும்பினார். தமிழகத்து மக்கள் கூனிக் குறுகி, தமது வரலாற்றுத் தவறுக்காக வருந்திய நாட்கள் அது. ஆனாலும், அதைத் திருத்துவதற்காக, அவர்கள் ஐந்து ஆண்டுகள் காத்திருக்க வேண்டியதாகியது.
கடந்த சட்டமன்றத் தேர்தலில், தமிழக சட்ட சபையில் எதிர்க் கட்சியாக அமரும் தகுதியைக்கூட அவர்கள் தி.மு.க.வுக்கு வழங்கவில்லை. அதைப் புரிந்து கொண்ட கருணாநிதி அவர்கள், பரணில் போட்டு வைத்திருந்த 'டெசோ' வைத் தூசு தட்டி எடுத்து மீண்டும் தன் முகத்தில் பொருத்திக் கொண்டார். ஆனாலும், முற்றாக விழிப்படைந்த தமிழகத்தை அவரால் ஏமாற்ற முடியவில்லை. நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க.வால் ஒற்றைத் தொகுதியைக்கூட கைப்பற்ற முடியாமல் போனது.
இன்று, தமிழகத்தில் அனைத்தும் மாறிவிட்டது. ஈழத் தமிழர்கள் மீதான இன அழிப்பிற்குத் தலைமை தாங்கியவர்களும், அதற்குத் தவில் வாசித்தவர்களும் இப்போது தமிழகத்தில் இருந்தே துடைத்து எறியப்பட்ட நிலையில், தாய்ப் பாசத்திற்குரிய தலைவியாக 'அம்மா' அவர்கள் தமிழகத்திற்கு மட்டுமல்ல, தமிழினத்திற்கே தலைவி ஆகிவிட்டார். இப்போது, உலகத் தமிழர்களது ஒற்றை நட்சத்திரமாக, ஈழத் தமிழினத்திற்கான விடி வெள்ளியாக 'அம்மா' பெரும் சக்தி வடிவெடுத்துள்ளார்.
தங்களது அவலங்களையும், அவமானங்களையும், உணர்வுகளையும் வெளிப்படுத்த முடியாத பாவப்பட்ட மனிதர்களாக ஈழத் தமிழினம் வாழ்விழந்து நிற்கின்றது. கருணாநிதியைத் தமிழினம் நம்பியது போலவே, சம்பந்தர் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைத் தமிழீழ மக்கள் நம்பிக் காத்திருக்கும் நிலையில் மீண்டும் அரங்கேற்றப்படவிருந்த 'ஒன்றிணைந்த இலங்கைக்குள் தீர்வு' என்ற கூட்டமைப்பு பாடிய சிங்களத்துப் பல்லவிக்கு முற்றுப்புள்ளி போடப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்கள், 'தனித் தமிழ் ஈழம் அமைக்க இலங்கைத் தமிழர்களிடமும் புலம்பெயர்ந்த தமிழர்களிடமும் வாக்கெடுப்பு நடத்த வேண்டும்' என்ற தமிழர்களது விருப்பத்தினை பாரதப் பிரதமர் மோடி அவர்களிடம் தனது கோரிக்கையாக முன்வைத்துள்ளார்.
இதுவரை காலமும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு திருப்பி உச்சரிக்கத் தவறிய தமிழ் மக்களது விருப்பங்கள், தமிழக முதல்வர் அவர்களது வாயால், உலகப் பரப்பெங்கும் ஒலிக்க விடப்பட்டுள்ளது. ஈழத் தமிழர்கள் தமது இழந்த உரிமையை மீளப் பெறுவது தொடர்பாக, மீண்டும் அவர்களே முடிவு எடுக்க வேண்டும் என்ற இந்த ஜனநாயக உரிமையை யாரும் நிராகரிக்க முடியாது. இதுவே, உலகின் நடைமுறையாகவும் உள்ளது.
தமிழீழ மக்கள் தமது முடிவை, வட்டுக்கோட்டைத் தீர்மானம் முதல், வட மாகாணசபைத் தேர்தல் வரை இதனையே உறுதிப்படுத்தியுள்ளனர். புலம்பெயர் தமிழர்கள், வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் மீள் வாக்கெடுப்பு மூலமும் இதனையே வலியுறுத்தியுள்ளனர். இப்போது, தமிழக மக்களின் விருப்பங்களை, தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்கள், தனது கோரிக்கையாக, பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களிடம் கையளித்துள்ளார்.
இதனை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எப்படிக் கையாளப்போகின்றது என்பதிலேயே தமிழினத்தின் தலைவிதி தங்கியிருக்கின்றது. தமது விருப்பு - வெறுப்புக்களுக்கு அப்பால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ்த் தேசிய ஆன்மாவை மகிமைப்படுத்த வேண்டிய கட்டாயத்தினுள் சிக்கி நிற்கின்றது. தமிழீழ மக்களுக்கு என்ன வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் முழுமையான அதிகாரம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குக் கிடையாது. ஏனெனில், தமிழீழ மக்களின் பாதித் தொகையினர் சிங்கள அரச பயங்கரவாதம் காரணமாக, புலம்பெயர்ந்து பல நாடுகளிலும் சிக்குண்டுபோயுள்ளார்கள். அத்துடன், தமிழீழ மக்களுக்கு, தேர்தல் காலங்களில் வழங்கிய வார்த்தைகளையும், வாக்குறுதிகளையும் மீறி, சிங்கள விருப்பங்களுக்குள் அவர்களைச் சிறை வைக்கும் அதிகாரம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குக் கிடையாது.
எனவே, தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்களது 'தனித் தமிழ் ஈழம் அமைக்க இலங்கைத் தமிழர்களிடமும் புலம்பெயர்ந்த தமிழர்களிடமும் வாக்கெடுப்பு நடத்த வேண்டும்' என்ற கோரிக்கையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உடனடியாக அங்கீகரிக்க வேண்டும். அதனை, வலியுறுத்தி உலகப் பரப்பெங்கும் கொண்டு செல்ல வேண்டும். இதுவே, தமிழீழக் கனவோடு மரணித்த அத்தனை ஆன்மாக்களுக்குமான அஞ்சலியாக அமையும்.
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

உலகத் தமிழினத்தின் தலைவியாக உயர்ந்து நிற்கும் தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா! Empty Re: உலகத் தமிழினத்தின் தலைவியாக உயர்ந்து நிற்கும் தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா!

Post by அனுராகவன் Thu Jun 05, 2014 8:49 pm

பகிர்வுக்கு நன்றி
அனுராகவன்
அனுராகவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 342
Join date : 31/07/2012
Location : madurai

Back to top Go down

Back to top

- Similar topics
» இலங்கை தூதரை கடுமையாக கண்டிக்குமாறு கோரி தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா கடிதம் அனுப்பியுள்ளார்.
» தமிழக பள்ளிக்கூடங்களில் வெஜிடபிள் பிரியாணி: முதல்வர் ஜெயலலிதா
» ராஜபக்சவுடன் கை குலுக்கும் பிரதமர் தேவையா? தமிழக முதல்வர் ஜெயலலிதா
» என்.எல்.சி. பங்குகளை தமிழக பொதுத்துறை நிறுவனங்களுக்கு விற்க வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம்.
» ஜெயலலிதா செயல்படுத்திய தொட்டில் குழந்தை திட்டம் மீண்டும் மேம்படுத்தப்படும்; அமைச்சர் செல்வி ராமஜெயம் பேட்டி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum