TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 10:39 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 7:48 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat May 04, 2024 5:18 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


ஏன் சிந்தனைக்களம் வரப் பிடிக்கவில்லை.

2 posters

Go down

ஏன் சிந்தனைக்களம் வரப் பிடிக்கவில்லை. Empty ஏன் சிந்தனைக்களம் வரப் பிடிக்கவில்லை.

Post by sakthy Mon Apr 28, 2014 3:34 pm

ஏன் சிந்தனைக்களம் வரப் பிடிக்கவில்லை.

மற்றைய மொழி இணையத்தளங்களில் எல்லாமே இருக்கிறது. தளங்களும் கொட்டிக் கிடக்கிறது.சினிமா,அறிவியல்,இலக்கியம்,அரசியல்,
தொழில் நுட்பம்....இப்படி அனைத்தும். ஆனால் இருக்கும் தமிழ் இணையத்தளங்களில், விரல் விட்டு எண்ணக் கூடிய, ஓரிரு தளங்களே அவற்றை ஓரளவு பூர்த்தி செய்கிறது. அப்படி இருக்கும் ஒரு சிலவற்றில் கூட சினிமாவும்,உணவும் சமையலும்,போலி இந்து மதமும்,இந்துக் கடவுள்களும், நடிகர்கள்/நடிகைகள் செய்திகளும் ஆக்கிரமித்துக் கொள்கின்றன.

இது மசாலாவாக மாறிக் கொண்டிருக்கும் சிந்தனைக்களத்திற்கும் பொருந்தும்.தமிழுக்கு ஒரு தலைப்பு வரவில்லை என ஏங்கிய போது,தமிழ்ப் தலைப்புப் பகுதியில், ஆரிய இந்துமதமும் தலையை விரித்துக் கொண்டு,முன்னால் நின்று ஜிங்கு ஜிங்கு என ஆடிக் கொண்டிருக்கிறது.

இது கருத்துத்தளம் (forum page) என்பதால் உரிமையாளர்கள்(Admin) எதுவும் செய்ய முடியாத நிலை உண்டு.
ஆனால் பதிவு தருபவர்கள் இரசனையும் அப்படி போலியாக இருந்தால் என்ன செய்ய முடியும்.அவர்கள் பதிவை அதிகம் தர விரும்புகிறார்களே தவிர ,அவை தரம் மிக்கதா,பயந்தரக் கூடியவையா  என்று பார்ப்பதில்லை. வரும் பார்வையாளர்கள் அப்படியான சாக்கடையை இரசித்து இருசிக்க  விரும்புவதால்,பதிவர்களும் அவர்கள் விரும்புவதை ,அவர்களுக்கு தீனியாகப் போடுகிறார்கள்.

பாரதியும் பாரதிதாசனும் எழுதிய கவிதைகளில் சுதந்திர உணர்வு,பெண் அடிமைத்தனமும் விடுதலையும்,சாதி மதக் கொடுமைகள்,மலையாளிகள் தமிழர்களை காலில் போட்டு மிதித்தும்,எழாது காலடியில் அடிமையாக இருக்கும் தமிழன் நிலை இப்படி பல சமூக நிலை பற்றி எழுதினார்கள். இன்றோ?

காதல் சீர்கேடுகள்,சாதி மத அரசியல்,பாலியல் கொடுமைகள்,ஏன் குழந்தை முதல் முதியோர் வரை கொடுமைக்குள்ளாக்கும் சிங்களத்தின் அராஜகம் பற்றி, எழுதவா இல்லை சமூகக் குற்றங்கள். யாரும் கண்டு கொள்வதில்லை.மரபுக் கவிதை,புதுக்கவிதை,கைக்கு என எழுதிக் குவிப்பவர்கள்,ஏன் குப்பைகளையே எழுதிக் குவிக்கிறார்கள்?

சமீப நாட்களாக இவை இன்னும் அதிகரித்து, ஆக்கிரமிப்பின் உச்ச நிலைக்கு சென்றுள்ளதை,தொடர்ந்து வருபவர்கள் கவனிக்கலாம்.

இப்படியான தளங்களுக்கு வரப் பிடிக்குமா,பிடிக்காதா?

எழுதுவதெல்லாம் எழுத்தல்ல
மனிதனை விழித்து எழச் செய்வதே எழுத்து! எழுத்து என்பதற்குப் பதில், பதிவு என்பதை சேர்த்துக் கொண்டு படிக்கலாம்.

பதிவதெல்லாம் பதிவல்ல,மனிதனை விழித்து எழச் செய்வதே பதிவு.
ஒரு வார்த்தை வெல்லும், ஒரு வார்த்தை கொல்லும், என்பது நம் முன்னோர் வாக்கு.

நாம் எவ்வளவு அறிவுச் செல்வங்களை சேமித்து வைத்திருக்கிறோம்? என்பது எவ்வளவு மதிப்புமிக்கதோ, அதுபோலவே நாம் அதனை எந்த அளவுக்குப் படிக்கிறோம், புரிந்துகொள்கிறோம் வாழ்க்கையில் பின்பற்றுகிறோம் என்பதும் நோக்கத்தக்கது.

தமிழன் பெருமையை,தமிழின் பெருமையை பேசுகிறோம். ஆனால் அதைப் பின்பற்றி  நடப்பதில்லை. அமெரிக்கா போன்ற வெளி நாடுகளில் சாதனை செய்யும் இந்தியனை, இந்திய வம்சாவழி என்று பெருமை பேசிக் கொள்ளும் நாம், அங்கே இந்தியன் செய்யும் ,பக்கம் பக்கமாக ஊடகங்கள் வெளிக் கொணரும்,தில்லு முல்லுகளை, கொலைகளை, பாலியல் துன்புறுத்தல்களை கண்டு கொள்வதில்லை. அப்படி எல்லாம் நடக்கும் போது, ஏன் இந்திய வம்சாவளியினர் செய்த கொடுமை, என்று நாம் சொல்லிக் கொள்வதில்லை?

நூலளவே ஆகுமாம் நுண்ணறிவு, என்பார் ஔவையார்.

நூல்கள் நம்மை அடுத்த படிநிலைக்கு உயர்த்தின என்பது உண்மைதான் என்றாலும். எழுத்துக்களில் மட்டும், அறிவு என்பது இல்லை. நம் வாழ்நாளோ மிகவும் குறைவு. இந்த விரிந்த உலகமே பல்கலைக்கழகம். அதில் கற்பதற்கு நிறையவே உள்ளது. நூல்களையும் கடந்து சிந்திப்பவர்களின் வார்த்தைகள் நூல்களை விட மதிப்புமிக்கன என்பதை நாம் உணரவேண்டும்.

இணையத்தில் கொட்டிக் கிடக்கும் செய்திகள் தகவல்களைப் படித்து முடிக்க பல ஆயிரம் ஆண்டுகள் வேண்டும். அவற்றில் சிலவற்றையாவது கொண்டு வரலாமே! இவை நம் தமிழ் இணையங்கள் அனைத்துக்கும் பொருந்தும்.

இன்னொருவர் செய்யும் தவறுகளில் இருந்தும் நாம் பாடம் கற்றுக்கொள்வோம்!
எல்லாத் தவறுகளையும் நாமே செய்து, பாடம் கற்றுக் கொள்வதற்கு நமக்கு வாழ்நாள் போதாது!

தவறுகளைத் திருத்திக் கொண்டு, நல்லவற்றைச் செய்யாத வரை,பழம்பெருமை பேசிக் கொள்வதில் அர்த்தமே கிடையாது.
avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

ஏன் சிந்தனைக்களம் வரப் பிடிக்கவில்லை. Empty Re: ஏன் சிந்தனைக்களம் வரப் பிடிக்கவில்லை.

Post by ஜனனி Mon Apr 28, 2014 6:16 pm

நன்றிகள் சக்தி உங்களின் ஆலோசனைகளுக்கு ...நாம் அடுத்த கட்டம் என்ன செய்யலாம் என்று நீங்கள் கூறுங்கள்
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

ஏன் சிந்தனைக்களம் வரப் பிடிக்கவில்லை. Empty Re: ஏன் சிந்தனைக்களம் வரப் பிடிக்கவில்லை.

Post by sakthy Tue Apr 29, 2014 11:50 pm

இப்படியான கருத்துக்களங்கள்-forum- தமிழ்,ஆங்கிலம்,பிரென்ச் மொழிகளில் பார்த்திருக்கிறேன்.அவற்றில் ஒருவர் தன்னிச்சையாக அனுமதி இன்றிப் பதிவேற்றவும்,அவர்களால் பதிவேற்றப்பட்ட பதிவுகளை திருத்த,நீக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.இருந்தும் சில கட்டுப்பாடுகளை வைத்திருக்கிறார்கள்.அந்தப் பதிவுகள் தரமற்றவையானால் உடனே நீக்கி விடுகிறார்கள். அப்படிச் செய்வதால், மீண்டும் அப்படியான பதிவுகளை கொண்டு வரமாட்டார்கள்.அப்படி நீக்கும் போது, பதிவைக் கொண்டு வருபவர்கள்,தாங்களாகவே நல்ல தரமான பதிவுகளை தர முனைவார்கள்.

தரமான பதிவுகள்,சொந்தப்பதிவுகள்,வேறு இடத்தில் இருந்து கொண்டு வரும் பதிவுகளில் எழுதியவர் பெயர் அல்லது தளத்தின் பெயர் சேர்த்துக் கொள்ள வேண்டும், இப்படி சில விதி முறைகள் அங்கே உண்டு.

எத்தனை நல்ல உள்ளங்கள் தமிழர்களுக்காக, தமிழில் தங்கள் நேரத்தை செலவு செய்து, பதிவுகளை ,விக்கிப்பீடியா போல்,எழுதி வருகிறார்கள். செய்திகள் தவிர்ந்த மற்றைய முக்கியமான பதிவுகளை, எழுதியவர் பெயருடன் அல்லது தளப் பெயருடன் வெளியிடுவது நாகரீகம் மட்டுமல்ல,அவருக்குக் கொடுக்கும் மதிப்பும் மரியாதையுமாகும். அப்படி செய்வதால் அவர் தொடர்ந்தும் ஊக்கமுடன் ஈடுபடுவார்.

இங்கே அனேகமாக எல்லாப் பதிவுகளும் வேறு இடத்தில் இருந்து கொண்டு வந்து பதிவேற்றுகிறார்கள். இருந்தும் கூட நல்ல தரமான பதிவுகள் கொண்டு வரப்படுவது மிகக் குறைவாகவே உள்ளது.இன்று நமக்கு ,நம் சமூகத்திற்கு என்ன தேவை என்பதைக் கருத்தில் கொண்டு பதிவுகள் இருக்கலாம்.இணையத்தில் பதியப்படுபவை ஒவ்வொன்றும் பொக்கிசங்கள்.அடுத்த தலைமுறைக்கு அவை ஆதாரங்களாக இருக்க வேண்டியவை.

இந்துமதக் கொடுமைகளை எதிர்த்துப் போராடிய சோழ மன்னன் வஞ்சகமாக கொல்லப்பட்டு,அதை தமிழனையே தீபாவளியாக கொண்டாட வைத்த கொடுமைகள் போல்,இந்துமத கோட்பாடுகளை எதிர்த்தவர்களை கழுவேற்றிக் கொன்ற பார்ப்பண நாயன்மார்கள் இன்று கடவுள்களாக்கப்பட்டது போல்,ஈழத்து இனப்படுகொலையும் ஒரு நாள் தமிழனுக்கு எதிராக,சிங்களவர்களுக்கு சாதகமாக மாறிவிடக் கூடாது.இப்போதே அவர்களுக்கு சாதகமாக மாறி வருகிறது.

முதலில் ஒரு கட்டுப்பாட்டை அறிவிக்க வேண்டும்.இந்தக் கட்டுப்பாடுகள் நிர்வாகிகளுக்கும், பதிவுகளைக் கொண்டு வருபவர்களுக்கும் ஆக இருக்க வேண்டும்.முன்னர் காலை, மாலை,இரவு வணக்கம் பற்றிக் கூறி இருந்தேன்.இது இணையம் ஒன்றுக்குப் பொருந்தாது. அதே போல் இணையத்திற்கு வருபவர்கள் சைவர்கள், கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள்,மதச்சார்பற்றவர்கள் என,இது இந்துக்களுக்கு மட்டும் என்று அறிவிக்காத வரை, யாரும் வரலாம்.அப்படியானால் இந்துசமயம் என ஒரு தலைப்பு இருக்கும் போது, ஏன் எல்லாத் தலைப்புகளின் கீழேயும் இந்துக் கடவுள்களின் படங்கள் இருக்க வேண்டும்? அதை இந்துசமயத் தலைப்பின் கீழ் மட்டும் இருக்கலாமே!பதிவர்கள் படங்களை வெளியிடுவது வேறாகவும், நிர்வாகிகள் வெளியிடுவது வேறாகவும் பார்க்கப்படும்.அதாவது நிர்வாகிகள்  நடுநிலையுடன் இருக்க வேண்டும்.

தரமற்ற தேவையற்ற பதிவுகள் நீக்கப்படும் என அறிவுறுத்தலாம். பதிபவர்கள் முதலில் அந்தப் பதிவு சமீபத்தில் வந்துள்ளதா என பார்த்துவிட்டு பதிவிட்டால், ஒரே மாதிரியான பதிவுகள் அடிக்கடி வராமல் தடுக்கலாம்.
இப்படி விரும்பிய சில அறிவுறுத்தல்களை வெளியிடலாம்.
avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

ஏன் சிந்தனைக்களம் வரப் பிடிக்கவில்லை. Empty Re: ஏன் சிந்தனைக்களம் வரப் பிடிக்கவில்லை.

Post by ஜனனி Wed Apr 30, 2014 6:51 am

நன்றி ...நீங்க; கூறிய இந்து மத போட்டோக்கள் மாற்றம் செய்ய பட்டு விட்டது ...சிந்தனை களம் விதிமுறைகள் இந்த லிங்கில் உள்ளது ..அதுமட்டும் இல்லாமல் உங்களை தளத்தில் உள்ள பதிவுகளை திருத்தும் அல்லது நீக்கும் பொறுப்பு உங்களுக்கு வழங்கபடுகிறது ..... நன்றிகள் சக்தி தளத்தின் வளர்சிக்கு உங்களின் அறிவுரைகள் மிகுந்த பலன் தருகிறது
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

ஏன் சிந்தனைக்களம் வரப் பிடிக்கவில்லை. Empty Re: ஏன் சிந்தனைக்களம் வரப் பிடிக்கவில்லை.

Post by sakthy Sun May 11, 2014 5:45 pm

மன்னிக்கவும். இதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது.

மருத்துவத்தில் கலப்படம்,அரசியலில்,சினிமாவில்,
கல்வியில்,உயிர் காக்கும் மருந்துகளில்,உயிர் வாழ வைக்கும்
உணவுகளில் என்று தொடங்கி, என் தாய்த் தமிழிலும் கலப்படமாகி விட்டது.

நகைகள் உருவாக்க தங்கத்தில் கலப்படம் தேவைப்படுகிறது.அது போல், தொழில்நுட்பம்,மருத்துவம் போன்ற சில இடங்களில், தமிழுடன் ஆங்கிலம் கலந்து விடுவது தவிர்க்க முடியாது போய் விடுகிறது. எல்லா இடங்களிலும் அல்ல.

தடுத்து நிறுத்தக் கூடிய தமிழ் இணையங்களிலும் ஆங்கிலக் கலப்படம்.ஏன் என்ற கேள்விக்குப் பதில் கிடைக்கவில்லை.
avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

ஏன் சிந்தனைக்களம் வரப் பிடிக்கவில்லை. Empty Re: ஏன் சிந்தனைக்களம் வரப் பிடிக்கவில்லை.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum