TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 3:01 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 3:03 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Apr 24, 2024 2:31 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 22, 2024 9:07 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


போர் நிலவரங்கள் குறித்து உண்மைக்கு மாறான தகவல்களை வெளியிட புலிகள் நிர்ப்பந்திக்கவில்லை! - டாக்டர் வரதராஜா செவ்வி.

Go down

போர் நிலவரங்கள் குறித்து உண்மைக்கு மாறான தகவல்களை வெளியிட புலிகள் நிர்ப்பந்திக்கவில்லை! - டாக்டர் வரதராஜா செவ்வி.  Empty போர் நிலவரங்கள் குறித்து உண்மைக்கு மாறான தகவல்களை வெளியிட புலிகள் நிர்ப்பந்திக்கவில்லை! - டாக்டர் வரதராஜா செவ்வி.

Post by ஜனனி Fri Mar 21, 2014 3:08 pm

போர் நிலவரங்கள் குறித்து உண்மைக்கு மாறான தகவல்களை வெளியிட புலிகள் நிர்ப்பந்திக்கவில்லை! - டாக்டர் வரதராஜா செவ்வி. 
போர் நிலவரங்கள் குறித்து உண்மைக்கு மாறான தகவல்களை வெளியிட புலிகள் நிர்ப்பந்திக்கவில்லை! - டாக்டர் வரதராஜா செவ்வி.  1965060_684531564937300_2054485149_n

இறுதிக்கட்டப் போரின்போது வைத்தியசாலைகளின் மீது ஷெல் தாக்குதல் நடத்தப்பட்டமை மற்றும் பொதுக்கள் காயமடைந்தது தொடர்பாக தாம் பொய்யான அறிக்கையை வெளியிடவோ, விடுதலைப்புலிகள் தமக்கு எந்த அச்சுறுத்தலையும் விடுக்கவோ இல்லை என்று முல்லைத்தீவில் பணியாற்றிய வைத்தியர் டி.வரதராஜா தெரிவித்துள்ளார். பி.பி.சி. சிங்களசேவைக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். எனினும், சகோதர வைத்தியர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் பாதுகாப்பை கவனத்திற் கொண்டு, பி.பி.சி.யுடனான நேர்காணலை டாக்டர் வரதராஜா நிராகரித்து விட்டார்.

அதேவேளை தன்னை, நான்காவது மாடியில் தடுத்து வைத்திருந்த காலத்தில், பொய் கூறுமாறு அரசாங்கம் தனக்கு அழுத்தம் கொடுத்தது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இரகசிய பொலிசார் முன்னிலையில் மீண்டும் ஆஜராகுமாறு வீட்டுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகவும். உங்களால் வருகை தர முடியாதுவிடின் உங்களுடைய தங்கையை பொலிஸுக்கு அனுப்பி வைக்குமாறும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்ததாகவும் டாக்டர் வரதராஜா தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகளுக்கும் இராணுவத்தினருக்கும் இடையில் வடக்கில் இடம்பெற்ற யுத்தம் நிறைவடையும் வரையிலும் யுத்தம் இடம்பெற்ற வலயத்தில் நோயாளர்களுக்கு சிகிச்சையளித்த அரச வைத்தியர்களில் டாக்டர் டி.வரதராஜாவும் ஒருவராவார். அவர் உள்ளிட்ட ஐந்து வைத்தியர்கள் அந்த நாட்களில் யுத்த கள நிலவரங்கள் தொடர்பில் பி.பி.சி சிங்கள சேவை உள்ளிட்ட பல ஊடகங்களுக்கு தொடர்ச்சியாக தகவல்களை வெளியிட்டிருந்தனர்.
யுத்தத்திற்கு பின்னர் கைது செய்யப்பட்ட இந்த ஐந்து வைத்தியர்களும், பல மாதங்கள் தடுத்து வைக்கப்பட்டதுடன் 2009ஆம் ஆண்டு ஜூலை 8ஆம் திகதி தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் நடத்தப்பட்ட ஊடகவியலாளர் மாநாட்டில், புலிகளின் அச்சுறுத்தலினால் யுத்த களம் தொடர்பில் கருத்துகளை தெரிவித்ததாக கூறினர்.
இந்தநிலையில், தற்போது பிபிசியிடம், டாக்டர் வரதராஜா , யுத்த காலத்தில் தான் எவ்விதமான மிகைப்படுத்தல் செய்திகளையும் வழங்கவில்லை என்றும் தான் அக்காலப்பகுதியில் தான் கூறியவை உண்மையானவை என்றும் தான் வழங்கிய செய்திகள் உண்மை என்பதை அங்கிருந்த சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தினரும் ஐக்கிய நாடுகள் சபையின் பணியாளர்களும் உறுதிப்படுத்தியுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.
நாளொன்றுக்கு காயமடைந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் எங்களிடம் வருவர். ஆனால், காயமடைந்தவர்களின் எண்ணிக்கையை அதிகரித்து கூறுமாறு புலிகள் எங்களிடம் கூறவில்லை. விசேடமாக நாங்கள் சேவையாற்றிய தற்காலிக வைத்தியசாலைகள் பலவற்றின் மீது ஷெல் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. யுத்தத்தின் இறுதி மூன்று மாதத்திற்குள் செஞ்சிலுவை சங்கத்தினால் படுகாயமடைந்த 9,000 பேர், முள்ளிவாய்க்கால் மற்றும் புதுமாத்தளன் ஆகிய பிரதேசங்களிலிருந்து திருகோணமலை மற்றும் வவுனியா ஆகிய இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
யுத்த வலயத்தில் 3 இலட்சம் மக்கள் சிக்கியிருந்த வேளையில் அங்கு 80 ஆயிரம் பேர் மாத்திரமே எஞ்சி இருந்தனர் என்று அரசாங்கம் தெரிவித்தது. மருந்துகள்,சாப்பாடு உள்ளிட்ட சகலதையும் 80 ஆயிரம் பேருக்கும் போதுமான அளவு கொடுத்தோம் என்று அரசாங்கம் கூறியிருந்தது. எனினும் மயக்கமடைய செய்யும் மருந்து இல்லை, இரத்தம் கொடுக்கவில்லை, அதனால் பெரிய பெரிய காயங்கள் ஏற்பட்டவர்கள் மருந்துகள் இன்றி, சிகிச்சை இல்லாமல் மரணமடைந்தனர் என்றும் வைத்தியர் தெரிவித்தார்.
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

போர் நிலவரங்கள் குறித்து உண்மைக்கு மாறான தகவல்களை வெளியிட புலிகள் நிர்ப்பந்திக்கவில்லை! - டாக்டர் வரதராஜா செவ்வி.  Empty Re: போர் நிலவரங்கள் குறித்து உண்மைக்கு மாறான தகவல்களை வெளியிட புலிகள் நிர்ப்பந்திக்கவில்லை! - டாக்டர் வரதராஜா செவ்வி.

Post by ஜனனி Fri Mar 21, 2014 3:17 pm

இறுதி யுத்தத்தில் மக்களின் கண்ணீரை ஆதாரத்துடன் ஐ.நாவில் எடுத்துரைத்த வைத்திய கலாநிதி வரதராஜா
இறுதிக்கட்ட யுத்தத்தின் பேது இலங்கையில் நடந்த அவலங்கள் இன்று உலகின் கண்களை திறந்துள்ளதாகவும் ஆனாலும் இதற்கு ஐ.நாவின் மனித உரிமை சபையின் உறுப்பு நாடுகள் தெளிவு படுத்தும் நடவடிக்கையில் சர்வதேச மனித உரிமைகள் அமைப்புக்கள் முன்னெடுத்தன.
என்னால் வாகரை முதல் மாத்தளன் வரை நடந்தவற்றை குறிப்பிட முடியும் எம்மை சுயாதீன வைத்தியத் துறையான எம்மால் மக்கள் பணியை முழுமையாக செய்ய அரச தரப்பு தடைகளை ஏற்படத்தியதுடன் மக்கள் பாரிய பின்னடைவைச் சந்திக்க காரணமாயிருந்தது எனலாம்,
வாகரை பிரதேசத்தை இராணுவம் ஆக்கிரமித்த போது பலத்த உயிரிழப்புக்களும் மனித உயிர்கள் வதையும் இடம் பெற்றதை யாவரும் நன்கறிவர் இதற்கு இன்று பல சாட்சியங்கள் உண்டு. விடுதலைப் புலிகளி கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் இருந்து வந்த எனக்கு கருணா குழு, பிள்ளையான் குழு, மற்றும் ஈபிடிபியின் அச்சுறுத்தலும் மிரட்டலும் மீண்டும் என்னை விடதலைப் புலிகளின் கட்டுப் பாட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்றது
அங்கும் முன்னர் பட்ட பாடுகளுக்கு ஈடான அதீத பாடுகள் இறுதி யுத்தத்தில் மக்கள் பட்ட படுகள் இழப்புக்கள் அவலங்களை கூறுவதற்கு வரிகளில்லை இதை யார் அறிவார் நான் மட்டும் மக்களுக்கு வைத்தியம் செய்ய பட்ட கஸ்ரங்கள் எண்ணிலடங்காதவை
முழுமையான வைத்திய உபகரணம் இல்லை மக்களை பராமரிக்க வைத்திய வசதிகள் இல்லை
இவ்வாறாக பாரிய அழிவுகளைச் சந்தித்து மீண்டு வந்த எம்மை அரசு மிரட்டி அங்க நடந்த உண்மைச் சம்பவங்களை மூடி மறைக்க எம்மை கையான்டது எமது பயபீதி அதற்கு அனுமதித்தது என்றார்.
தற்பொழுது அமெரிக்காவில் வசித்து வரும் வைத்திய கலாநிதி துரைராஜா வரதராஜா இன்றைய கலந்துரையாடலில் மனித உரிமைகள் கூட்டத் தொடரில் பங்கெடுத்துள்ள பல நாடுகள் தன்னார்வ நிறுவனப் பிரதி நிதிகள் கலந்து கொண்ட அமர்வில் சனல் 4 ஊடகவியலாளர் கலம் மக்ரே யுத்த சூனியவலயத்தில் மக்கள் படும் அவலம் அன்மையில் இலங்கை இராணுவத்தால் பலியல் சீரளிவுக்கு உள்ளாக்கப் பட்ட பெண்களின் திரைப்பட்த்தையும் திரையிட்டதுடன் பல பங்கு பற்றுனர்களின் கவனத்தை ஈர்த்தமை குறிப்பிடத் தக்கது
சர்வதேச விசாரணைக்கு கொண்டு செல்ல ஐ.நா மனித உரிமைகள் பேரவை தகைமையற்றது: சட்டத்தரணி குருபரன்
https://youtu.be/l4gZUyhBSQU
அமெரிக்காவின் திட்டவரைபு முழுமையான சர்வதேச விசாரணையை நோக்கியதென்று கூற முடியாது என சட்டத்தரணியும் விரிவுரையாளருமான குமாரவடிவேல் குருபரன் தெரிவித்துள்ளார்.
இலங்கை விடயத்தில் சர்வதேச விசாரணை தேவை: ஐ நாவில் கலம் மக்ரே
https://youtu.be/jbmpXHAUyPs
இலங்கைத் தமிழர்களின் நிலையைக் கண்டு கவலைப்படுகிறோம்: பிரான்ஸ் தன்னார்வ தொண்டு நிறுவனப் பணியாளர்
https://youtu.be/XGntLLijhr8
இலங்கையிலுள்ள தமிழ் பேசும் தமிழ் மக்கள் படும் கஸ்டங்களை கண்டு நாங்கள் தொடர்ந்து கவலைப்படுகிறோம் என பிரான்ஸ் தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் பணியாளர் பிரேட்ரிக் பெப்பனி தெரிவித்துள்ளார்.
ஜெனிவாவில் லங்காசிறி கலையகத்தில் தனது கருத்துக்களை பகிர்ந்து கொண்ட அவர், இலங்கையின் உள்நாட்டுப் போர் தொடக்கம் தற்போது வரை தமிழர்களின் நிலையினைக் கண்டு கவலைப்படுகிறோம். இந்தப் பிரச்சினைக்கு ஒரு சுமூகமான தீர்வை எதிர்நோக்கி உழைக்க எங்களது தெண்டு நிறுவனம் மிகவும் ஆவலாக உள்ளது.
பிரான்ஸ் தன்னார்வ தொண்டு நிறுவனம் 2009ம் ஆண்டிலிருந்து தற்போது வரை 20 நாடுகளில் வெற்றி கரமாக பணியாற்றி வருகின்றது என்றார்.
**
அச்சுறுத்தல் காரணமாகவே கொழும்பில் வைத்து பொய் கூறினோம் – வைத்தியர் வரதராஜா
இலங்கையில் இறுதி யுத்த காலப்பகுதியில் வைத்தியசாலைகள் மீதான தாக்குதல்கள் மற்றும் காயமடைந்த சிவிலியன்கள் தொடர்பில் பொய்யான தகவலை வழங்குமாறு விடுதலைப் புலிகள் இயக்கம் வற்புறுத்தவில்லை என யுத்த காலப்பகுதியில் முல்லைத்தீவு மாவட்டத்தில் கடமையாற்றிய வைத்தியர் வரதராஜா கூறுகிறார்.

பொலிஸாரின் தடுப்பில் இருந்தபோது அரசின் அச்சுறுத்தல் காரணமாகவே, புலிகள் தங்களை வற்புறுத்தினர் என கொழும்பில் நடந்த ஊடகவியலாளர் மாநாட்டின்போது தெரிவிக்க நேர்ந்தது என அவர் மேலும் கூறுகிறார்.
ஜெனீவாவிலிருந்து பிபிசி சிங்களச் சேவைக்கு வழங்கிய செவ்வியின்போதே மேற்கண்டவாறு வரதராஜா தெரிவித்துள்ளார்.
“நான் நான்காவது மாடியில் இருந்தபோது, பொய் சொன்னதாக சொல்லாவிட்டால் மூன்று அல்லது நான்கு வருடங்கள் உங்களை வைத்துக்கொள்வோம் என அரசு வற்புறுத்தியது” என வைத்தியர் கூறுகிறார்.
ஜெனீவாவில் மனித உரிமைகள் கண்காணிப்பகம் ஏற்பாடு செய்திருந்த கூட்டமொன்றில் தான் முகம்கொடுத்த அனுபவத்தை தெரிவித்த பின்னரே பிபிசி சிங்கள சேவைக்கு வைத்தியர் அது பற்றி கூற ஆரம்பித்தார்.
பொலிஸால் தங்கைக்கு அழைப்பு
இருப்பினும், சகோதர வைத்தியர்கள் மற்றும் குடும்பத்தவர்களின் பாதுகாப்பு கருதி நேர்காணலொன்றில் கலந்துகொள்வதை அவர் நிராரித்தார்.
மீண்டும் ஒருமுறை புலனாய்வுப் பொலிஸாரை வந்து சந்திக்குமாறு தெரிவித்து கடிதமொன்று வீட்டுக்கு வந்திருப்பதாகத் தெரிவிக்கும் அவர், தன்னால் வரமுடியாவிட்டால் தங்கையையாவது பொலிஸுக்கு வருமாறு அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறுகிறார்.
யுத்த இறுதிக் காலப்பகுதி வரை யுத்தம் இடம்பெற்ற வலயத்துள் நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கிவந்த வைத்தியர் சிலருள் வரதராஜாவும் ஒருவர். அந்த காலப்பகுதியில் இவர் உட்பட மேலும் 5 வைத்தியர்கள் பிபிசி மற்றும் ஏனைய ஊடகங்களுக்கு யுத்தத்தின் கோரம் குறித்து தொடர்ந்து தகவல்களை வழங்கிவந்தனர்.
யுத்தத்தின் பின்னர் கைதுசெய்யப்பட்ட இவர்கள் சில மாதங்கள் தடுத்துவைக்கப்பட்டிருந்தனர். 2009 ஜூலை 08ஆம் திகதி தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையத்தில் ஊடகவியலாளர்களை சந்தித்த இவர்கள், விடுதலைப் புலிகளின் அச்சுறுத்தல் காரணமாகவே யுத்தம் தொடர்பாக பொய்கூற நேர்ந்தது என அவ்வேளை தெரிவித்திருந்தனர்.
அதன் பின்னர் கடமையாற்ற அவர்களுக்கு அனுமதி கிடைத்தது.
யுத்த காலப்பகுதியில் தான் பொய் கூறவில்லை எனத் தெரிவிக்கும் வைத்தியர், தான் தெரிவித்தவை உண்மை என்பதை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபை போன்றன உறுதிப்படுத்தியுள்ளன எனவும் அவர் கூறுகிறார்.
மருந்து இல்லை
“ஒரு நாளைக்கு நூற்றுக்கு மேற்பட்ட காயமடைந்தோர் வருவார்கள். விடுதலைப் புலிகளும் இந்த எண்ணிக்கையை அதிகரித்துக் கூறுமாறு சொல்லவில்லை. நாங்களும் கூட்டிச் சொல்லவில்லை” என அவர் கூறுகிறார்.
“80,000 பேருக்கு ஏற்ற வகையிலேயே மருந்து மற்றும் உணவு தரப்பட்டது. மயக்கமடையச் செய்யும் மருந்து, இரத்தம் தரவேயில்லை. அதனால், படுகாயமடைந்தவர்கள் மருந்து இன்றி, சிகிச்சை இன்றி இறந்தனர்”
தான் சேவை செய்த பல தற்காலிக வைத்தியசாலைகள் மீது ஷெல் தாக்குதல்கள் நடத்தப்பட்டன எனத் தெரிவிக்கும் வைத்தியர் வரதராஜா, யுத்தத்தின் இறுதி மூன்று மாத காலப்பகுதியில் மட்டும் படுகாயமடைந்த 9000 பேர் செஞ்சிலுவைச் சங்கத்தினால் முள்ளிவாய்க்கால் மற்றும் புதுமாத்தளன் பகுதிகளில் இருந்து திருகோணமலை மற்றும் வவுனியா பகுதிகளுக்குக் கொண்டு செல்லப்பட்டனர் என மேலும் கூறுகிறார்.
மூன்று இலட்சம் மக்கள் யுத்த வலயத்தில் சிக்குண்டிருக்க, அங்கு 80,000 மக்கள் தொகையினரே இருக்கின்றனர் என அரசு தெரிவித்ததை வைத்தியர் நினைவுபடுத்துகிறார்.
“80,000 பேருக்கு ஏற்ற வகையிலேயே மருந்து மற்றும் உணவு தரப்பட்டது. மயக்கமடையச் செய்யும் மருந்து, இரத்தம் தரவேயில்லை. அதனால், படுகாயமடைந்தவர்கள் மருந்து இன்றி, சிகிச்சை இன்றி இறந்தனர்” என வைத்தியர் வரதராஜா கூறுகிறார்.
இருப்பினும், யுத்த காலப்பகுதியில் வைத்தியர்களினால் வெளியிடப்பட்ட கருத்து உண்மைக்குப் புறம்பானது என இலங்கை அரசு தொடர்ந்து கூறிவருகிறது.
நன்றி | பிபிசி சிங்களச் சேவை
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» கச்சதீவு தொடர்பாக உண்மைக்கு மாறான தகவல்களை மத்திய அரசு கொடுத்துள்ளது! – உயர்நீதிமன்றில் பதில் மனு.
» இறுதிக்கட்டப் போரில் புலிகள் தொடர்பான தகவல்களை வழங்கியமைக்கு சிதம்பரத்துக்கு இலஞ்சம் கொடுத்த மஹிந்தர்!
» சோனியா வெளிநாட்டு பயணம் தகவல்களை வெளியிட உத்தரவு
» மூவர் தொடர்பான கருணை மனு தகவல்களை வெளியிட மத்திய அரசுக்கு தகவல் ஆணையம் உத்தரவு
» போர் இரகசியங்களை வெளியிட ஐரோப்பா செல்ல தயாராகும் பதவி நீக்கப்பட்ட அதிகாரி.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum