TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon May 27, 2024 8:13 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu May 23, 2024 4:07 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 21, 2024 2:55 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 12:02 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


தனக்குத் தானே பொறி வைக்கும் மகிந்தா: எழிலன் மனைவி அனந்தியை கைது செய்து புனர்வாழ்வுக்கு அனுப்ப அரசாங்கம் முனையுமா ?

Go down

தனக்குத் தானே பொறி வைக்கும் மகிந்தா: எழிலன் மனைவி அனந்தியை கைது செய்து புனர்வாழ்வுக்கு அனுப்ப அரசாங்கம் முனையுமா ? Empty தனக்குத் தானே பொறி வைக்கும் மகிந்தா: எழிலன் மனைவி அனந்தியை கைது செய்து புனர்வாழ்வுக்கு அனுப்ப அரசாங்கம் முனையுமா ?

Post by piraba Thu Jan 23, 2014 7:32 am

தனக்குத் தானே பொறி வைக்கும் மகிந்தா: எழிலன் மனைவி அனந்தியை கைது செய்து புனர்வாழ்வுக்கு அனுப்ப அரசாங்கம் முனையுமா ?
தனக்குத் தானே பொறி வைக்கும் மகிந்தா: எழிலன் மனைவி அனந்தியை கைது செய்து புனர்வாழ்வுக்கு அனுப்ப அரசாங்கம் முனையுமா ? 1622823_662567147140594_1370503419_n
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் உயர் மட்டம் வரை அறியப்பட்ட ஒருவராகிவிட்ட அனந்தி சசிதரன் விடயத்தில் அரசாங்கம் கடும் போக்கில் நடவடிக்கை எடுக்க முனைந்தால், அது அரசாங்கத்துக்கே பாதகமான விளைவுகளை கொண்டு வரும். ஏனெனில் மனிதஉரிமை மீறல்கள், போர்க்குற்றங்களுக்கான ஒரு சாட்சியாளராகவே அவரை அமெரிக்கா பார்க்கிறது. அதைவிட அவருக்கு கிடைத்த வாக்குகளையும் ஜனநாயக நாடுகள் மதிப்புடன் நோக்குகின்றன. இத்தகைய நிலையில், அனந்தி மீதான எந்த நடவடிக்கையும், ஜனநாயக ரீதியான மக்களின் ஆதரவையும், போர்க்குற்றங்களுக்கான சாட்சிகளையும் இலங்கை அரசாங்கம் அழிக்க முனைவதாகவே வெளியுலகினால் கருதப்படும். ஆனாலும், அத்தகையதொரு நிலையை அரசாங்கமே விரும்பி உருவாக்கும் என்றால், ஜெனிவாவில் வசமாக மாட்டிக் கொள்ளப் போகிறது என்று தான் அர்த்தம் கொள்ள வேண்டும். 

ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டம் வரும் மார்ச் மாதம் நடக்கவுள்ள நிலையில்,அதில் இலங்கை குறித்த அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில் , அதில் இன்னொரு தீர்மானத்தை அமெரிக்கா கொண்டு வரலாம் என்று கருதப்படுகின்ற நிலையில்- அனந்தியை கைது செய்து புனர்வாழ்வுக்கு அனுப்ப அரசாங்கம் முனையுமா என்ற கேள்வியும் எழுகிறது. ஏனென்றால் அவரைக் கைது செய்து, புனர்வாழ்வுக்கு அனுப்புவதை உலகம் ஏற்றுக் கொள்ளாது. காரணம் அவர் விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினராக இருந்தவரல்ல. விடுதலைப் புலிகள் இயக்கத்தில் தலைவர்களாக இருந்த பலர், எந்தப் புனர்வாழ்வுத் திட்டங்களுக்கும் உட்படாமல் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், அரசாங்க பதவிகளை பெற்றுள்ள நிலையில், புலிகள் இயக்க உறுப்பினரல்லாத ஒருவர், புனர்வாழ்வு முகாமில் அடைக்கப்படுவது மிகப்பெரிய மனிதஉரிமை மீறலாக பார்க்கப்படும். இது அரசாங்கத்துக்கு தெரியாத விடயமல்ல. ஆனாலும் அரசாங்கம் இப்படியொரு திட்டத்தை கொண்டிருக்கிறது என்றால், அல்லது இத்தகைய திட்டத்தை வெளியே கசிய விட்டுள்ளது என்றால் நிச்சயம் அதில் ஒரு உள்நோக்கம் இருக்கும். 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாணசபை உறுப்பினரான அனந்தி சசிதரனை, கைது செய்து புனர்வாழ்வு முகாமில் வைத்து புனர்வாழ்வு அளிப்பது குறித்து பாதுகாப்பு அமைச்சு ஆலோசித்து வருவதாக கடந்த வாரம் செய்திகள் வெளியாகின. பாதுகாப்பு அமைச்சின் தேவைகளை நிறைவு செய்யும் ஆங்கில நாளிதழ் ஒன்றே இந்தச் செய்தியை வெளியிட்டிருந்ததால், இதில் ஒரு உள்நோக்கம் இருப்பது மட்டும் உறுதியானதாக கருதப்பட்டது. பிரிவினைவாதக் கருத்துகளை தொடர்ந்து வெளியிட்டு வருவதால், விடுதலைப் புலிகளுக்கு அளிக்கப்படும் புனர்வாழ்வு அனந்திக்கும் அளிக்கப்பட வேண்டும் என்று பாதுகாப்பு அமைச்சு கருதுவதாக, பாதுகாப்பு அமைச்சின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்திருந்தார். 

போரின் இறுதியில் சரணடைந்தவர்களுக்கும், கைது செய்யப்பட்டவர்களுக்கும் புனர்வாழ்வு அளிக்கப்பட்டது. சரணடையாமலும், கைது செய்யப்படாமலும் இருந்த பலர் புனர்வாழ்வில் இருந்து தப்பி விட்டனர். அவ்வாறு தப்பியவர்களில் ஒருவர் தான் அனந்தி. அவர் புனர்வாழ்வு பெற்றிருந்தால் அரசாங்கத்துக்கு எதிரான கருத்துகளை பரப்புரை செய்திருக்க முடியாது என்று பாதுகாப்பு அமைச்சின் அதிகாரி தெரிவித்திருந்தார். 

ஆக,

புனர்வாழ்வு என்பது அரசாங்கத்துக்கு எதிரான மாற்றுக் கருத்துகளை அடக்குகின்ற ஒரு கருவியாகவே கருதப்படுகிறது. 

இப்போது கோத்தாபய ராஜபக்சவின் தலைமையிலான பாதுகாப்பு அமைச்சினால், அனந்தி சசிதரன் குறிவைக்கப்பட்டுள்ளதற்கு காரணம், அவர் வெளியிடும் பிரிவினைவாதக் கருத்துக்கள் தான் என்று கூறுவதற்கில்லை. 

ஏனென்றால், 

பிரிவினையை ஊக்குவிக்கும் வகையில், அவர் பெரியளவில் எந்த பிரசாரங்களை செய்ததாகவோ, உரை நிகழ்த்தியதாகவோ தெரியவில்லை. 

அனந்தியை விடவும், கடுமையான கருத்துகளை வெளியிட்ட பலரையும், அரசாங்கம் கண்டுகொள்ளாத நிலையில், இவரை மட்டும் குறிவைக்க நினைப்பது ஆச்சரியமானதே. 

ஆனால் அதற்கு காரணம் உள்ளது. 

விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல் பொறுப்பாளராக இருந்த எழிலனின் மனைவி தான் அனந்தி சசிதரன். 

போரின் இறுதிக்கட்டத்தில், படையினரிடம் சரணடைந்த எழிலன் இன்னமும் எங்கிருக்கிறார் என்று கண்டறியப்படவில்லை. வட்டுவாகலில் கத்தோலிக்க குருவான வண. பிரான்சிஸ் யோசப் அடிகளாரின் ஏற்பாட்டில் படையினரிடம் சரணடைந்த எழிலன் உள்ளிட்ட விடுதலைப் புலிகளின் தலைவர்கள் பலரும், பஸ்களில் ஏற்றிச் செல்லப்பட்ட பின்னர், அவர்கள் பற்றிய எந்த தகவலும் இல்லை. 

விடுதலைப் புலிகளின் தலைவர்கள் பஸ்ஸில் ஏற்றிச் செல்லப்பட்டதை தாமும் கண்டதாக கூறிய பல சாட்சிகளில் அனந்தியும் ஒருவர். பின்னர் அவர் தனது கணவன் எழிலனை தேடிக்கண்டு பிடித்து தருமாறு கோரி, வவுனியா மேல் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்து, அந்த வழக்கு நடந்து வருகிறது. 

போர் முடிவுக்கு வந்த பின்னர், கிளிநொச்சியில் அரச அதிகாரியாக பணியாற்றி வந்த, அனந்தியை கடந்த செப்ரெம்பரில் நடந்த வடக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளராக களமிறக்கியது, ஒரு கட்டத்தில் அவருக்கான ஆதரவு அதிகரித்த போது அச்சுறுத்தல்களும், அதிகரித்தன. அரசதரப்புக்குத் தாவி விட்டதாக போலி நாளிதழை வெளியிட்டு, அனந்தியின் விருப்பு வாக்குகளைக் குறைக்கும் முயற்சிகள் மட்டுமன்றி அவரை இலக்கு வைத்து அவரது வீட்டின் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. இத்தகைய அச்சுறுத்தல்கள், மிரட்டல்கள் தாக்குதல்கள் என்பன, அனந்திக்கான விருப்பு வாக்குகளையே அதிகரிக்கச் செய்தது. இதன் மூலம் மாகாணசபைத் தேர்தலில் 1 இலட்சத்து 32 ஆயிரத்துக்கும் அதிகமான விருப்பு வாக்குகளைப் பெற்ற முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு அடுத்ததாக, யாழ். மாவட்டத்தில் அனந்தி 87 ஆயிரத்துக்கும் அதிகமான விருப்புவாக்குகளுடன் இரண்டாமிடத்தைப் பெற்றிருந்தார். 

அனந்திக்கு கிடைத்த மிகப்பெரியளவிலான விருப்பு வாக்குகள், அரசாங்கத்தை அதிர்ச்சியுடன் பார்க்க வைத்தது உண்மை. 

ஏனென்றால்,

அவரையும் ஒரு புலிப் பிரதிநிதியாகவே அரசாங்கம் உருவகப்படுத்தி மிரட்டியிருந்தது. 

அவ்வாறான ஒருவருக்கு கிடைத்த பெருவாரியான விருப்பு வாக்குகள், அரசாங்கத்தின் அத்தகைய பிரசாரங்களை உடைத்துப் போட்டிருந்தன. பின்னர், இவரை வைத்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உடைக்கும் முயற்சிகளும் நடந்தன. அதை தனியே அரசாங்கம் மட்டும் செய்யவில்லை, புலம்பெயர் தமிழர்களில் ஒரு பகுதியினரும் கூட அதற்கான துண்டுதல்களில் ஈடுபட்டனர். ஆனாலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விட்டு வெளியேறும் எண்ணம் தமக்குக் கிடையாது என்று அவர் தெளிவாக அறிவித்திருந்தார். 

வடக்கு மாகாணசபை உறுப்பினரான பின்னர், காணாமற்போனவர்களின் உறவினர்களை ஒருங்கிணைத்து, போராட்டங்களை நடத்துவதிலும் அனந்தி அதிக கவனம் செலுத்தத் தொடங்கியிருந்தார். 

மேலும்,

மாகாணசபை உறுப்பினரானதும் கனடா, அமெரிக்கா, ஜேர்மனி, நோர்வே உள்ளிட்ட நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டிருந்தார் இவர். 

இவர் அமெரிக்கா சென்றிருந்தபோது, இராஜாங்கத் திணைக்கள உயர்மட்ட அதிகாரிகள் பலரும், இவருடன் சந்திப்புகளை நடத்தியதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், இராஜாங்கத் திணைக்களத்தைச் சேர்ந்த யார், யார் இவரை வொசிங்டனில் சந்தித்தனர் என்ற விபரங்கள் வெளியாகவில்லை. எனினும், போரின் இறுதிக்கட்டம், சரணடைந்தவர்கள் காணாமற்போனமை குறித்த விவகாரங்களில் அனந்தியிடம் இருந்து தகவல்களை அறிந்து கொள்ள அமெரிக்க அதிகாரிகள் முயன்றதாகவே கருதப்படுகிறது. 

இது அரசாங்கத்துக்கு ஆரம்பத்திலேயே ஒரு அச்சத்தை ஏற்படுத்தியது. 

அண்மையில், இலங்கைக்கு வந்திருந்த அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பூகோள குற்றவியல் பணியகத்தில் போர்க்குற்ற விவகாரங்களைக் கையாளும் சிறப்புத் தூதுவர் ஸ்டீபன் ஜே ராப், வடக்கில் முக்கியமாகச் சந்தித்தவர்களில் அனந்தியும் ஒருவர். 

அமெரிக்கத் தூதுவர் மிச்சேல் சிசனும், ஸ்டீபன் ராப்பும், யாழ்ப்பாணத்தில் கிறீன் கிராஸ் விடுதியில் வைத்து அனந்தியை சந்தித்த போது எடுக்கப்பட்ட படத்தையும் கூட அமெரிக்கத் தூதரகம் வெளியிட்டது. இத்தகைய பின்னணியில் தான், அனந்தியை புனர்வாழ்வு முகாமுக்கு அனுப்புவது குறித்து பாதுகாப்பு அமைச்சு ஆராய்ந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

அனந்தியை புனர்வாழ்வு முகாமுக்கு அனுப்பும் பாதுகாப்பு அமைச்சின் திட்டம் குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும் என்று பாதுகாப்பு அமைச்சின் உயர் அதிகாரி கூறியுள்ளார். இவரை கைது செய்தால் அல்லது புனர்வாழ்வுக்கு அனுப்பினால், சர்வதேச அளவில் நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதையும் அவர் ஒப்புக் கொண்டுள்ளார். ஆனாலும், இவரைப் புனர்வாழ்வுக்கு அனுப்பாது போனால், போருக்குப் பிந்திய நல்லிணக்க முயற்சிகளை சீரழித்து விடுவார் என்றும் அவர் கூறியிருக்கிறார். 

வரும் மார்ச் மாதம் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டம் நடக்கவுள்ள நிலையில் � அதில் இலங்கை குறித்த அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில் � அதில் இன்னொரு தீர்மானத்தை அமெரிக்கா கொண்டு வரலாம் என்று கருதப்படுகின்ற நிலையில்- அனந்தியை கைது செய்து புனர்வாழ்வுக்கு அனுப்ப அரசாங்கம் முனையுமா என்ற கேள்வியும் எழுகிறது. 

ஏனென்றால் அவரைக் கைது செய்து, புனர்வாழ்வுக்கு அனுப்புவதை உலகம் ஏற்றுக் கொள்ளாது. காரணம் அவர் விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினராக இருந்தவரல்ல. விடுதலைப் புலிகள் இயக்கத்தில் தலைவர்களாக இருந்த பலர், எந்தப் புனர்வாழ்வுத் திட்டங்களுக்கும் உட்படாமல் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், அரசாங்க பதவிகளை பெற்றுள்ள நிலையில், புலிகள் இயக்க உறுப்பினரல்லாத ஒருவர், புனர்வாழ்வு முகாமில் அடைக்கப்படுவது மிகப்பெரிய மனிதஉரிமை மீறலாக பார்க்கப்படும். இது அரசாங்கத்துக்கு தெரியாத விடயமல்ல. ஆனாலும் அரசாங்கம் இப்படியொரு திட்டத்தை கொண்டிருக்கிறது என்றால், அல்லது இத்தகைய திட்டத்தை வெளியே கசிய விட்டுள்ளது என்றால் நிச்சயம் அதில் ஒரு உள்நோக்கம் இருக்கும். 

ஒருவேளை இதை வெளியே கசிய விட்டு பிரதிபலிப்பு எவ்வாறு இருக்கும் என்று ஆழம் அறிய முற்பட்டிருக்கலாம். அல்லது புனர்வாழ்வு முகாமுக்கு அனுப்பப்படுவாய் என்று அனந்தியை மிரட்டி, அவரது வாயை அடக்க நினைத்திருக்கலாம். 

எவ்வாறாயினும். அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் உயர் மட்டம் வரை அறியப்பட்ட ஒருவராகிவிட்ட அனந்தி சசிதரன் விடயத்தில் அரசாங்கம் கடும் போக்கில் நடவடிக்கை எடுக்க முனைந்தால், அது அரசாங்கத்துக்கே பாதகமான விளைவுகளை கொண்டு வரும். ஏனெனில் மனிதஉரிமை மீறல்கள், போர்க்குற்றங்களுக்கான ஒரு சாட்சியாளராகவே அவரை அமெரிக்கா பார்க்கிறது. அதைவிட அவருக்கு கிடைத்த வாக்குகளையும் ஜனநாயக நாடுகள் மதிப்புடன் நோக்குகின்றன. இத்தகைய நிலையில், அனந்தி மீதான எந்த நடவடிக்கையும், ஜனநாயக ரீதியான மக்களின் ஆதரவையும், போர்க்குற்றங்களுக்கான சாட்சிகளையும் இலங்கை அரசாங்கம் அழிக்க முனைவதாகவே வெளியுலகினால் கருதப்படும். ஆனாலும், அத்தகையதொரு நிலையை அரசாங்கமே விரும்பி உருவாக்கும் என்றால், ஜெனிவாவில் வசமாக மாட்டிக் கொள்ளப் போகிறது என்று தான் அர்த்தம் கொள்ள வேண்டும்.


[You must be registered and logged in to see this link.]
piraba
piraba
பண்பாளர்
பண்பாளர்

Posts : 1302
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» எழிலன் மனைவி அனந்தி நவநீதம்பிள்ளையை சந்தித்து பேச்சு
» அந்த 17,500 பேர் எங்கே? புலிகளின் தளபதி எழிலன் மனைவி ஆனந்தியின் போர் வாக்குமூலம் இது!
» மாவீரர் மேஜர் கணேஷ்சின் மனைவி கொழும்பு கட்டுநாயக்க விமானநிலையத்தில் புலனாய்வுத்துறையினரால் கைது
» தானே டிரைவ் செய்து பார்க்கிங்கில் நிற்கும் கார்!(படம் இணைப்பு) |
» மகளை பலாத்காரம் செய்ய முயன்ற கணவர் படுகொலை: மனைவி கைது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum