TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:45 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:44 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 3:24 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun May 12, 2024 10:47 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


இரண்டாம் உலகம் -திரை விமர்சனம்

2 posters

Go down

இரண்டாம் உலகம் -திரை விமர்சனம் Empty இரண்டாம் உலகம் -திரை விமர்சனம்

Post by ஜனனி Fri Nov 22, 2013 9:04 pm

உலகம் – 1
அனுஷ்கா ஒரு மருத்துவர்… அவருடைய மருத்துவமனையில் நோயாளிகளுக்கு பல்வேறு உதவிகள் செய்யும் ஒரு நல்ல உள்ளம் படைத்தவராக ஆர்யா…ஆர்யாவின் குணம் அனுஷ்காவுக்கு பிடித்துப்போக தன்னை திருமணம் செய்துக்கொள்ளுமாறு கேட்கிறார். காதல், திருமணம், போன்றவற்றில் ஆர்வமில்லாத ஆர்யா… அனுஷ்காவின் காதலை நிராகரிக்கிறார்… மேலும் உடல்நலம் சரியில்லாத தனது தந்தைக்காக திருமணம் வேண்டாம் என்று முடிவெடுக்கிறார்.இதற்கிடையில் அனுஷ்காவுக்கு வேறொரு இடத்தில் திருமணம் நிச்சயம் நடந்து விடுகிறது.
இரண்டாம் உலகம் -திரை விமர்சனம் Nov-22-iranom-ulagam
அதே சமயம் அனுஷ்காவை பார்க்க பார்க்க ஆர்யாவுக்கு காதல் மலர்கிறது. திருமண விருப்பத்தை ஆர்யா சொல்ல இப்போது அவர் மறுத்து விடுகிறார்….. ஒரு மருத்துவ கேம்புக்காக கோவா செல்லும் அனுஷ்காவை தொடர்ந்து செல்லும் ஆர்யா எப்படியோ முயன்று அனுஷ்காவை காதலிக்க வைக்கிறார்.

ஆர்யாவும் அனுஷ்காவும் காதலிக்க தெடங்கும்போது ஒரு இரவு தனியாக வெட்டவெளியில் பேசிக்கொண்டிருக்கிறார்கள்… அங்கு மகிழ்ச்சியாக இருக்கும் இருவரும்… நான் கிளம்புகிறேன் என்று கிளம்பும் அனுஷ்காவை விரட்ட… ஓடிக்கொண்டிருந்த அனுஷ்கா கால் இடறி கீழே விழந்து எதிர்பாராத விதமாய் தலையில் அடிப்பட்டு இறந்துவிடுகிறார்… அப்போது இடைவேளை..!
உலகம் 2 (கற்பனை உலகம் அல்ல… இன்னொரு உலகம்)
அங்கு வீரம் நிறைந்த அனுஷ்கா… வெறிபிடித்த ஒரு ஓநாயைக்கூட அசால்டாக தூக்கி வீசுகிறார் என்றால் பாருங்களேன்… பார்ப்பதற்கு அவதார் மாதிரி ஒரு வித்தியாசமான உலகம் ஆனால் உண்மையில் பழைய ஹாலிவுட் படங்கள் போல் இருக்கிறது…
அங்கு ‌இருக்கும் ஆர்யா அனுஷ்பாவை ஒரு தலையாக காதலிக்கிறார். பலமுறை தன்னுடைய காதலை சொல்லி அனுஷ்காவிடம் நல்ல அடிவாங்குகிறார். இதற்கிடையில் அந்தப்பகுதி ராஜா அனுஷ்காவை தன்னுடைய அரண்மனைக்கு தூக்கிசெல்கிறார்.. கோவம்கொண்ட ஆர்யா அனுஷ்காவை தன்னுடன் ஒப்படைக்கும்படி கேட்கிறார்.
அதற்கு தனக்கு ஒரு சிங்கத்தில் தோல் வேண்டும்…. ஒரு சிங்கத்தை கொண்று அதன்தோளுடன் வந்தால் இவளை நான் ஒப்படைக்கிறேன் என்று சொல்ல உடனே காட்டுக்கு புறப்படுகிறார்.. ஆர்யா…
வெறிகொண்ட ஒரு கிராப்பிக்ஸ் சிங்கத்தை சண்டையிட்டு அதனுடைய தோலை ராஜாவுக்கு அளிக்கிறார்… தன்னுடன் அனுப்பும் அனுஷ்காவை திருமணம் முடிக்க ஏற்பாடுகள் தயாராகிறது… காதல் என்னவென்று அறியாத அந்த உலகத்தில் நான் யாருக்கும் அடிமையாக இருக்க மாட்டேன் என்று ராஜாவை கொல்ல துணியிம் அனுஷ்கா இறுதியில் தன்னையே மாய்த்துக்கொள்கிறார்…திருமணம் நடக்க வேண்டிய இடத்தில் அனுஷ்கா இறந்து போகிறார்… அப்போது இடைவேளை...
இடைவேளை வரை இந்த இருகதைகளும் மாறிமாறி வருகிறது..
இப்படி இரண்டு உலகத்திலும் தன்னுடைய காதலியான அனுஷ்கா இறந்துபோக என்னசெய்வதென்று பித்துப்பிடித்தவராகிறார் ஆர்யா..
அதன் பிறகுதான் செல்வராகவனின் கொலைவெறி ஆரம்பிக்கிறது…
என்ன செய்வதென்னு இரண்டு உலகத்திலும் தனித்தனியே பைத்தியமாக சுற்றுகிறார் ஆர்யா…. இரண்டாம் உலகத்தில் உள்ள ஆர்யா ஒரு சவால் விட்டு ஒரு சாமி மலையில் ஏறுகிறார்…
அதே வேளையில் நம்முடைய உலகத்தில் இருக்கும் ஆர்யா என்ன செவ்வதென்று புரியாது ஒரு தன்னை அழைப்து போன்ற ஒரு காரில் காரில் மலைமேல் போகிறார்… கடைசியில் இரண்டு ஆர்யாக்களும் ஏறுவது ஒரே மலை தான் என் தெரிகிறது…
காரில் இருந்து மலையில் இருந்து கீழே விழநினைக்கும் ஆர்யாவை இரண்டாம் உலக ஆர்யா காப்பாற்றி அந்த உலகத்திற்கு கொண்டு செல்கிறார்… (இரண்டாம்உலக ஆர்யாவின் அம்மாதான் இந்த இருவருரை தன்னுடைய தெய்வசக்தியால் சந்திக்க வைக்கிறார் என்று பின்னர் புரிய வைக்கிறது)
அடப்பாவிகளா….
இதுவரை பொறுமையா படத்தை பார்த்தது பத்தாதுன்னு இன்னும் கொடுமையிருக்கான்னு பார்த்த… அந்த இரண்டாம் உலக அனுஷ்காவை அந்த ஆர்யாகாதலித்து இருவரும் இணைய இந்த ஆர்யாவை பயன்படுத்திக் கொள்கிறார் என்று புரியவருகிறது..
நம் ஆர்யா எப்படி அந்த ஜோடி சேர காரணமாகிறார்கள் என்று கடைசி மீதிக் கதையை அப்படி இப்படி என முடித்திருக்கிறார்…
இடைவேளை வரை வரும் கதையை முழுதாக நீட்டித்து முடித்திருந்தால் கூட படம் கொஞ்சம் பிக்கப் ஆயிருக்கும்… இந்த கதையை இந்த படத்தை என்ன சொல்வதென்று புரியாமல் தவிக்கிறேன்…
வித்தியாசமான இரண்டாம் உலகத்தை காட்டப் போகிறேன் என்று சொன்னதால் நான் உள்பட அனைவரும் ஆர்வமாக இருந்தோம் ஆனால் இந்த உலகம் சாதாரண லைட்டிங் எப்பைக்ட் மற்றும் கொஞ்சம் சுமாரான கிராப்பிக்ஸ் கொண்டு செய்யப்பட்டுள்ளது என்று பார்க்கும் அனைவருக்கும் தெரிந்துப்போகிறது.
ஆர்யாவின் நடிப்பு அப்படியொன்றும் பிரமாதமாய் இல்லை.. ஒரு எதார்த்தம் தெரிகிறது… அதை கடைசி வரை தக்கவைக்க முடியவில்லை… இரண்டாம் உலக ஆர்யா பரவாயில்லை கொஞ்சம் மெனக்கிட்டு இருக்கிறார்…
அனுஷ்கா டாக்டர் கதாபாத்திரத்தில் எதார்த்தமாய் வந்திருக்கிறார்… இரண்டாம் உலக அனுஷ்கா கலக்கியிருக்கிறார்.. வீரமான தைரியமாக சண்டைக்காட்சிகள் என அசத்தியிருக்கிறார்…
நகைச்சுவைக்கு என்று யாரும் இல்லை படத்தில் நகைச்சுவையும் இல்லை…
நம் காதலி இறந்துவிட்டாள் என்பதற்காக கவலை அடைய வேண்டாம் நம் மனதுக்குள் உண்மையான காதல் இருந்தால் நம் காதலியை எந்த உலகத்திலாவது கண்டறிந்துவிடலாம் என்று கதையில் சாரம் சொ்லலியிருக்கிறது.
ஆனால் எந்த ஒரு வித்தியாசமான கதை களமோ.. காட்சி அமைப்போ புதுமைகளோ இந்த படத்தில் நம் கண்ணுக்கு புலப்படவில்லை..படம் பார்த்துவிட்டு கிளம்பும் அனைவரும் அப்பா முடிஞ்சதா என்ற மனநிலையோடு கிளம்புகிறார்கள்..
இந்த படத்தை எதற்க்கு இரண்டு வருடங்கள் எடுத்தார்கள் என்று புரியவில்லை…ஹாரிஸ் ஜெயராஜ் பாடல்களுக்கு மட்டும் இசையமைத்திருக்கிறார்… பாடல்கள் சுமார் ரகம்தான்… பிண்ணனி இசை அனிருத் இதுவும் பரவாயில்லை ரகம்தான்…இந்த இரண்டாம் உலகம் படத்தை ‘உலக தொலைக் காட்சி’யில் முதல் முறையாக போடும் போது கூட நீங்க பார்க்க வேண்டாம் – இதுவே நம் எச்சரிக்கை

கவிதை வீதி… சௌந்தர்
 /@http://kavithaiveedhi.blogspot.com/2013/11/irandam-ulagam-movie-review.html
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

இரண்டாம் உலகம் -திரை விமர்சனம் Empty Re: இரண்டாம் உலகம் -திரை விமர்சனம்

Post by Tamil Sat Nov 23, 2013 7:55 am

இரண்டாம் உலகம்

அன்புள்ள வலைப்பூவிற்கு,

செல்வராகவன் படம் என்பதைத் தவிர இரண்டாம் உலகம் பார்க்க வேறேதும் காரணங்கள் தேவையில்லை என்று நினைக்கிறேன். இல்லையென்றாலும் ஃபேண்டஸி வகையறா என்பதாலும் எக்கச்சக்க எதிர்பார்ப்போடு காத்திருந்தேன். படத்தின் ட்ரைலர் அப்படியொன்றும் ஈர்க்கவில்லை. ஆனாலும் முன்கூறிய இரண்டு காரணிகளால் பார்த்தே ஆகவேண்டிய நிலை.

இரண்டாம் உலகம் -திரை விமர்சனம் Irandam+Ulagam+Posters
[color][font]
படத்தின் கதை வழவழ கொழகொழ ரகம். சில இடியாப்ப சிக்கல்களை வாசகர்கள் நலன் கருதி தவிர்த்துவிட்டு சொல்வதென்றால், உலகம் போலவே ஒரு கிரகம். இரண்டாம் உலகம் என்று வைத்துக்கொள்வோம். அது காதலில்லா உலகம். அங்கே பெண்கள் மதிக்கப்படுவதில்லை. காதலில்லா, பெண்களை மதிக்காத உலகம் எப்படி பிழைக்கும்...? அழிவை நோக்கி சென்றுக்கொண்டிருக்கிறது. அதனை காப்பாற்ற ஒரு வீரன் தேவை. காதல் தேவை. வீரன் ஆர்யா இருக்கிறார். காதல்...? காதலை கற்றுக்கொடுக்க பூமியிலிருந்து ஒரு ஆர்யா அங்கே அனுப்பி வைக்கப்படுகிறார். இரண்டாம் உலகம் காப்பாற்றப்படுகிறது. இவ்வுலகம் மட்டுமல்ல, எவ்வுலகம் ஆனாலும் காதலில்லாமல் இயங்க முடியாது என்ற கருத்தோடு படம் நிறைவடைகிறது.

உலகம், இரண்டாம் உலகம் குறித்த காட்சிகள் இணையொத்து காண்பிக்கப்படுகின்றன. உலகத்தில் அனுஷ்கா ஆர்யாவை மணந்துகொள்ள விரும்புகிறார். பின்பு ஆர்யாவும். சிலகால ஊடலுக்குப் பிறகு இருவரும் காதலிக்க துவங்குகின்றனர். எதிர்பாரா விபத்தொன்றில் அனுஷ்கா இறந்துவிடுகிறார்.

செல்வராகவனுக்கென்று சில தனிக்கூறுகள் இருக்கின்றன. பெண்களின் காதல் சார்ந்த உணர்வுகளை செல்வராகவனைப் போல யாராலும் அவ்வளவு கச்சிதமாக காட்டிவிட முடியாது. முதலில் மறுப்பது. பின்னர் உணர்வுகள் மெல்ல தலை தூக்குவது, இருப்பினும் சூழ்நிலை கருதி மறுக்க முயல்வது, மறுக்க முடியாமல் தவிப்பது, இறுதியாக கட்டுப்படுத்த முடியாமல் உணர்வு பிரவாகம் எடுப்பது போன்ற காட்சிகளை அவருடைய முந்தைய படங்களான 7G ரெயின்போ காலனி, யாரடி நீ மோகினி, மயக்கம் என்ன...? ஆகியவற்றில் பார்த்திருக்கலாம். இம்முறை தான் சிறந்து விளங்கும் மேற்கண்ட பரப்பிலேயே செல்வராகவன் படுமோசமான தோல்வியுற்றிருக்கிறார். ஆர்யா – அனுஷ்கா காதல் காட்சிகள் ஏதோ மூன்றாம் தர மசாலா பட சாயலில் அமைந்துள்ளன. குறிப்பாக கோவா மெடிக்கல் ட்ரிப் காட்சிகள் அபத்தத்தின் உச்சக்கட்டம். ஒருவேளை, அபத்தமான நகைச்சுவை படங்களை ரசிக்கும் தமிழ் ரசிகர்களை பகடி செய்யும் நோக்கத்தோடு செல்வா இப்படியெல்லாம் காட்சி அமைத்திருக்கக்கூடும். அனுஷ்கா ஏதோ வந்தா மலை போனா மசுரு என்கிற ரீதியில் ஆர்யாவை காதலிப்பதாக தோன்றுகிறது.


[/font][/color]
இரண்டாம் உலகம் -திரை விமர்சனம் Irandam+Ulagam+Anushka
[color][font]

மற்றொரு உலகத்தில், ஆர்யா அனுஷ்காவை விரும்புகிறார். அனுஷ்கா யாருக்கும் அடிமையாக இருக்க விரும்பவில்லை. அதனால் ஆர்யாவை வெறுக்கிறார். இருப்பினும் சூழ்நிலை காரணமாக இருவரும் மணந்துக்கொள்கின்றனர்.

இரண்டாம் உலகத்தில் காதலே இல்லை என்கிறார்கள். ஆனால் ஆர்யா மட்டும் அனுஷ்காவை விரட்டி விரட்டி காதலிக்கிறார். இ.உலகம் குறித்த காட்சிகள் ஜார்ஜியாவில் படமாக்கப்பட்டுள்ளன. துணை நடிக / நடிகைகளை எல்லாம் பட்டாளத்தோடு ஜார்ஜியா அழைத்துச் செல்ல முடியாது என்பதால் அங்குள்ள ஜூனியர் ஆர்டிஸ்ட்களை நடிக்க வைத்து, அவர்கள் தமிழ் பேசுவது போல காட்டியிருக்கிறார்கள். அது என்னவென்றால், ஏதோ பென் ஹர் காலத்து ஆங்கில படத்தை தமிழில் டப் செய்தது போலிருக்கிறது. போதாத குறைக்கு பிரதான வேடம் ஒன்றில் அயல்நாட்டு சுமார் மூஞ்சி பெண் நடித்திருக்கிறார். அங்கேயும் ஒரு மதுக்கூடம் இருக்கிறது. அதிலும் அடிடா, வெட்டுறா ரீதியில் ஒரு காதல் தோல்வி குத்துப்பாடல் இருக்கிறது. ஃபேண்டஸி படங்களில் இப்படியெல்லாம் கேள்வி கேட்கக்கூடாது என்றாலும் எதற்கும் ஒரு எல்லை இருக்கிறது. தவிர, எல்லை மீறல்கள் இருப்பினும் ரசிக்கின்ற வகையில் இருந்திருக்க வேண்டும்.

ஆர்யாவை பார்க்கும்போது 7G ரவிகிருஷ்ணா நினைவுக்கு வருகிறார். அனுஷ்காவை பார்க்கும்போதெல்லாம் ஈ’யென்று இளிக்கிறார். இ.உலகத்து ஆர்யா வாட்ட சாட்டமாக நியாண்டர்தால் மனிதர் போல இருக்கிறார். அனுஷ்காவின் ஆளுமை படத்திற்கு மிகப்பெரிய பலம். தெலுங்கு டப்பிங்கில் அனுஷ்கா தான் முன்னிலைபடுத்தப் படுகிறார். அனுஷ்கா அவருடைய கேரியரின் இறுதிப்பகுதியை நெருங்குவதாக அவருடைய தொப்பை ஜோசியம் சொல்கிறது.

சில பாடல்கள் படம் வெளிவருவதற்கு முன்பே ஹிட் என்றாலும் படத்தோடு பார்க்கும்போது ரசிக்க முடியவில்லை. படத்தில் முக்கியமான காட்சிகள் வரும்போதெல்லாம் ஒரு இசையை பயன்படுத்தியிருக்கிறார் அனிருத். அதை கேட்டதும் ரசிகர்களின் நரம்பெல்லாம் புடைத்துக்கொள்ளும் என்று நினைத்திருப்பார் போல.

[/font][/color]
இரண்டாம் உலகம் -திரை விமர்சனம் Irandam+Ulagam+Stills
[color][font]
மொத்தத்தில் படத்தில் உருப்படியான விஷயங்கள் என்று பார்த்தால், விஷுவல் விருந்து என்ற சொல்லக்கூடிய ஆர்யா – சிங்கம் சண்டைக்காட்சி, அனுஷ்கா, காதலில்லாமல் உலகமில்லை என்கிற கதைக்கரு. அவ்வளவுதான்.

செல்வராகவனின் தீவிர விசிறிகள், அவரது நலம்விரும்பிகள் வேண்டுமானால் தங்களது மன திருப்திக்காக இரண்டாம் உலகம் பார்க்கலாம். மற்றவர்களுக்கு திரையரங்கில் பார்க்கக்கூடிய அளவிற்கு படம் வொர்த் கிடையாது. பிரச்சனை என்னவென்றால் இரண்டாம் உலகத்தை ஆதரிக்காத பட்சத்தில் தமிழ் சினிமாவில் மீண்டுமொரு ஃபேண்டஸி படத்தினை இயக்க யாரும் தைரியமாக முன்வர மாட்டார்கள். ஆமாம், ஒரு மோசமான ஃபேண்டஸி படத்தினை கொடுத்து தமிழில் ஃபேண்டஸி படங்களுக்கு கனகச்சிதமாக ஒரு முட்டுக்கட்டையை போட்டுவிட்டார் செல்வராகவன்...!

[/font][/color]
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

இரண்டாம் உலகம் -திரை விமர்சனம் Empty Re: இரண்டாம் உலகம் -திரை விமர்சனம்

Post by Tamil Sat Nov 23, 2013 7:56 am

இரண்டாம் உலகம் - சினிமா விமர்சனம்

இரண்டாம் உலகம் -திரை விமர்சனம் B3 


12 பி படத்தில் வருவது  போல் 2 டிராக்கில் அடுத்தடுத்து 2 கதைகள் . முதல் கதைல அனுஷ்கா ஒரு டாக்டர். அவர் வாலண்ட்ரியா போய் ஆர்யா கிட்டே ஐ லவ் யூ சொல்றார். ஆர்யா தன் குடும்ப சூழல் காரணமா அப்போதைக்கு நாட் ஓக்கே சொல்றார்.உடனே வீட்ல பார்க்கும் மாப்ளைக்கு அனுஷ்கா ஓக்கே சொல்லிடுது .ஏன்னா பொண்ணுங்க எப்பவும் பிராக்டிகல்.

ஆர்யா அப்புறமா யோசனை பண்ணி “ இப்போ நான் உன்னை லவ் பண்றேன்”னு சொல்லும்போது அனுஷ்கா  ஓக்கே சொல்லலை. இவங்க ஊடல் விளையாடல் கொஞ்சம் போகுது .

இன்னொரு உலகத்துல இதே கால கட்டத்துல  இன்னொரு ஆர்யா , அனுஷ்கா .அதுல ஒரு நாட்டின் தளபதியின் மகன் ஆர்யா.அனுஷ்கா அந்த நாட்டு பிரஜை.விஜயசாந்தி மாதிரி .மகனோட ஆசைக்காக அனுஷ்கா விருப்பம் இல்லாமலேயே 2 பேருக்கும் மேரேஜ் பண்ணி வெச்சுடறாங்க .அனுஷ்கா மேரேஜ் பண்ணிக்கிட்டா  தன் சுதந்திரம் போய்டும்னு நினைக்கறதால ஆர்யாவை வெறுக்கறாங்க .

இரண்டாம் உலகம் -திரை விமர்சனம் Irandam_ulagam_movie_stills_arya_anushka_541b43c

முதல் கதைல வர்ற அனுஷ்கா ஒரு விபத்துல செத்துடுது. இந்த ஆர்யா எப்படியோ அந்த உலகத்துல போய் தன் காதலியின் உருவத்தில் இன்னொரு ஆளைப்பார்த்து அப்படியே ஷாக் ஆகிடறார். அவர் தான் ஷாக் ஆகறார். நாம தான் பல எம் ஜி ஆர் , சிவாஜி படங்கள் லயே இதெல்லாம் பார்த்துட்டமே. நமக்கு எதுவும் ஆகலை. இதுக்குப்பின் எந்த ஆர்யா அனுஷ்கா கூட ஜோடி சேர்ந்தாங்க என்பதுதான் கதை . ( எந்த ஆர்யா கூட ஜோடி சேர்ந்தாத்தான் என்ன? -னு நமக்கு ஒரு அசால்ட்டு)

அனுஷ்கா தான் படத்தின் முதுகெலும்பு , செஸ்ட் எலும்பு எல்லாம். படம் பூரா அவரைச்சுத்தித்தான் நகருது கதையும் , கேமராவும் .அனுஷ்கா ஒரு தேவதை, அஸ்கா உதட்டழகி ,பீட்ரூட் கன்ன அழகி , ஆனா அவருக்கு 2 கேரக்டர்லயும் கோப முகம் அல்லது உம்மணாம்மூஞ்சி கொடுத்து ஆஃப் பண்ணியது ஏனோ? இருந்தாலும் அவர் நடிப்பு அழகு ( நாம எந்தக்காலத்துல பொண்ணுங்க நடிப்பைப்பார்த்தோம் ? )

இரண்டாம் உலகம் -திரை விமர்சனம் ActressAnushkaShettyHot1-1
ஆர்யா ஒரு லக்கி மேன் , அவருக்கு சினிமா வாழ்வில் நல்ல  நல்ல படங்களா செட் ஆகுது , பர்சனல் லைஃப்ல புதுப்புது ஃபிகரா செட் ஆகுது . ஆனா பாருங்க அவர் பேட்டில சொன்ன மாதிரி 100  கோடிடார்கெட்டை அச்சீவ் பண்ண உதவி செய்யும் படமா இது அமைய வாய்ப்பே இல்லை .அவர் இரு மாறு பட்ட கேரக்டர் ல நடிப்பு , குரல் , பாடி லேங்குவேஜ் ( ஜிம் பாடி , சாதா பாடி ) எல்லாத்துக்கும் மெனக்கெட்டு இருக்கார் , ச்பாஷ் ஆர்யா . 


இரண்டாம் உலகம் -திரை விமர்சனம் Irandam-Ulagam-Movie-Release-Date2ம் உலகத்துல ஒரு அம்மா கேரக்டர் வருது. தேவதை மாதிரி , 22 வயசுதான்  இருக்கும் , குட் ஃபிகர் .( இயக்குநருக்கும் , இந்த தேவதைக்கும் ஷூட்டிங்க் டைம்ல கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகி இருக்கும் போல , கேமரா அவரையே காட்டிட்டு இருக்கு , நமக்கெதுக்கு பெரிய இடத்துப்பொல்லாப்பு ? ) 


இசை ஹாரீஸ் ஜெயராஜ் , பாடல்கள் ஓக்கே  ரகம் . செல்வராகவனின் வழக்கமான சூப்பர் ஹிட் பாடல்கள் இந்தப்படத்தில் இல்லை .அனிரூத் 2 பாட்டுக்கு இசை , பின்னணி இசை . பிரமாதம்னு சொல்லிட முடியாது ,ஆனாலும் நல்லாப்பண்ணி இருக்கார் . 


ஒரே பி ஜி எம்மை ( இருவர் தீம் மியூசிக் ) பல இடங்களில் அவர் தொடர்ந்து ஏன் பயன் ”படுத்தினார்”னு தெரியலை .

 இரண்டாம் உலகம் -திரை விமர்சனம் Anushka

பலே பரிமளா 


1.காதல் சாதல்  2ம் 1  பாட்டு எடுக்கப்பட்ட விதம் , இசை , ஒளிப்பதிவு , லொக்கேஷன் அழகு 


2. 2ம் உலக அனுஷ்காவிடம் ஆர்யா அடி வாங்கும்போது ஆ , அய்யய்யோ , ம் என்ற ஒலியை அவர் சகாக்கள் கில்மா சத்தம் என புரிந்து சிரிப்பது பழைய காமெடி என்றாலும்   ஆடியன்ஸ் சிரிக்கறாங்க 


3 இந்த உலக ஆர்யா அனுஷ்கா ஓக்கே சொல்லாத போது  சீனியர் டாக்டரை லவ்வுவது போல் கலாய்க்கும் காட்சிகள் கலக்கல் காமெடி 


4.  ஒளிப்பதிவு , லொக்கேஷன் செலக்‌ஷன் , முன் பாதி திரைக்கதை , அனுஷ்கா கண்ணிய அழகு எல்லாம் பட்த்தின் +


இரண்டாம் உலகம் -திரை விமர்சனம் Anushka-stills-in-ragada-movie-stills021
சொதப்பிட்டியே சொப்னா 


1. அனுஷ்கா வீரமான பெண். ஓப்பனிங்க் சீனில் தன்னைத்துரத்தும்  விலங்கிடம் தனியாளாக ஃபைட் போடறார், ஆர்யாவைத்தாக்கறார். ஆனா 4 ரவுடிகளிடம் மட்டும் பம்முவது ஏன் ? ( ரவுடிங்க மேல தன் கை படக்கூடாதுன்னு நினைக்கறாரோ? )


2 இடைவேளை டைமில்  அனுஷ்கா  விபத்தில் இறப்பது செய்ற்கை


3 ஆர்யா இந்த உலகத்தில் இருந்து இன்னொரு புதிய உலகத்துக்கு எதேச்சையாய்ப்போவது , இறந்து போன அப்பா வழிகாட்டியாய் வாழ்த்து சொல்வது எல்லாம் காதில் பூ



4 2வது உலக அனுஷ்கா தன் கணவர் ஆர்யா மேல் அளவுக்கதிகமாக வெறுப்பைத்தேவை இல்லாமல் உமிழ்வதும் , தடாலடியாய் அவர் மேல் காதல் வருவதும் நம்ப முடியவில்லை .


5. புது ஆர்யா மேல் அனுஷ்காவுக்கு ஆர்வம் இருப்பது போல் காட்டி விட்டு திடீர்னு அவர் எனக்குக்குழந்தை மாதிரின்னு அனுஷ்கா இந்த ஆர்யாவிடம் பல்டி அடிப்பது செம காமெடி


6. பின் பாதி திரைக்கதை இழுவை , எப்படிக்கொண்டு போக என இயக்குநர் தடுமாறி இருக்கிறார்

இரண்டாம் உலகம் -திரை விமர்சனம் 9741,xitefun-hot-anushka-photo-gallery-04

நச் டயலாக்ஸ்


1. நாம புத்துணர்ச்சியா உணர நாம யாரையாவது காதலிக்கனும் , அல்லது நம்மை யாராவது காதலிக்கனும்


2  எங்கே பெண்கள் மதிக்கப்படலையோ  அந்த தேசம் சீக்கிரமே அழிஞ்சிடும் ( சாண்டில்யன் -ன்  ஜலதீபம் நாவல் வசனம் )


3  ஆள்கலரா இருக்காண்டி , கறுப்புன்னா இன்னும் ஓக்கே


4 அவன் எல்லா சொத்துக்களையும் ஏழைகளுக்கே எழுதி வெச்சுட்டாண்டி

 அப்போ உனக்கு எதுவும்  மிச்சம் இருக்காது


5  ஏய் ,ரொம்ப வலியனா போனே இல்லை , அதான் அவன் உன்னை கண்டுக்கலை , உன்னை அயிட்டம்னு நினைச்ட்டானோ ?


6 சப்பையோ , குப்பையோ , வெந்ததோ வேகாததோ ஏதாவது 1 கிடைக்காதா?ன்னு அவனவன் ஏங்கிட்டு இருக்கான் , தேவதை மாதிரி கிடைச்ச ஃபிகரை வேணாம்னு விட்டுட்டியே?
இரண்டாம் உலகம் -திரை விமர்சனம் Anushka-hot1

7 இந்த நாட்டிலே 1000 ஆண்களுக்கு 800 பெண்கள் தான் இருக்காங்க , மீதி 200 ஆண்கள் என்ன செய்வாங்க ? ( ராமன் தேடிய சீதை  சேரன் வசனம் )

8. ஏண்டி  அவன் பாட்டுக்கு நிம்மதியா சுத்திட்டு இருந்தான் , அலைய விட்டுட்டியேடி ?


9  ராஜாவோட பொண்ணைக்கேட்கறவனுக்கு சிங்கத்தை கொல்லும் தைரியமும் இருக்கனும்


10 சிங்கத்தோட தோல் இருந்தா அவனுக்கு சொர்க்கம் நிச்சயம்னு சாஸ்திரம் சொல்லுது


11 இந்த  உலகம் காதலர்களுக்கு மட்டும் அசைஞ்சு கொடுக்கும்

12. என்னை மாதிரியே நடிச்சு என் பொண்டாட்டியை மயக்கபார்க்கறியா? 


அது எப்டிங்க முடியும்? அவங்களுக்குத்தான் உங்களைப்பிடிக்கலையே? 


இரண்டாம் உலகம் -திரை விமர்சனம் Anushka_looking_2_hot-226x300-200x265

சி பி கமெண்ட் ஸ் -  ஹாலிவுட் தரத்தில் செல்வராகவனின் நல்ல முயற்சி , ஆனால் முன் பாதியில் இருந்த அழகியல் , பின் பாதியில் இல்லை , அனைவரும் பார்க்கும்படி இருந்தாலும் பொறுமை வேண்டும் 

 விக்டன் எதிர்பார்ப்பு மார்க் - 41 


குமுதம் ரேங்க்கிங்க் - ஓக்கே 



 ரேட்டிங்க் -  3 / 5 


திருப்பூர் சக்தி தியேட்ட்ர்ல படம் பார்த்தேன். சூப்பர் தியேட்டர் . காதலர்கள் , கள்ளக்காதலர்களுக்குன்னே கட்டி இருப்பாங்க போல . உடன் பார்த்தவர்கள் ஆகாய மனிதன் யுவராஜ் , இட்ஸ் பிரசாந்த் .


இரண்டாம் உலகம் -திரை விமர்சனம் Anushka+Hot+photos+%289%29 


படம் பார்க்கும்  பொழுது போட்ட ட்விட்ஸ்

1.கதை சொல்லும் உத்தியில் 12 பி
இந்த உலகம் ,அந்த் உலகம் .விஷூவல்ஸ் கலக்கல்ஸ்


2. அய்யயோ அனுஷ்கா சார்.ஓடி வருது சார் # ஸ்லோமோஷன் ஷாட் வைக்கலை :-(


3.சீன் பை சீன் மணிரத்னம் படம் போலவே இருக்கு # செல்வா ராக்ஸ் ;-))


4.அண்ணன் அனிரூத் இருவர் பிஜிஎம் மை ரீமேக்கிட்டார் ;-


5.செல்வராகவன் இன்னும் குழந்தை மனசாவே இருக்காரு.அம்புலிமாமா காமிக்ஸ் ஹி ஹி


6.இடைவேளை வரை ஓக்கே.ஸ்லோ.காதலர்களுக்குப்பிடிக்கும்.பின் பாதி இயக்குநருக்கு சவால் காத்திருக்கு #2ம் உலகம்


7.ஜாம்பவான் இயக்குநர்கள் பின் பாதி திரைக்கதையில் தடுமாறுவது ஏனோ? :-(


8.2 ம் உலகம் - முன் பாதி மணிரத்னம் ஸ்டைல் ,பின் பாதி தடுமாற்றம் - கமர்சியல் வெற்றி சிரமம் - விகடன் மார்க் - 41 ,ரேட்டிங் - 3 / 5
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

இரண்டாம் உலகம் -திரை விமர்சனம் Empty Re: இரண்டாம் உலகம் -திரை விமர்சனம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum