TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:13 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu May 23, 2024 4:07 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 21, 2024 2:55 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 12:02 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


டெரர் புத்தூர்.. ரத்தக்கோடு தாண்டிய லட்சுமணன்!

Go down

டெரர் புத்தூர்.. ரத்தக்கோடு தாண்டிய லட்சுமணன்! Empty டெரர் புத்தூர்.. ரத்தக்கோடு தாண்டிய லட்சுமணன்!

Post by மாலதி Wed Oct 09, 2013 9:54 pm

[You must be registered and logged in to see this image.]
ஒரு வாரத்துக்கு முன், அந்திசாயும் நேரம்... சென்னை புரசைவாக்கத்தில் உள்ள பிரபல கடைவாசலில் நின்று தனது செல்போன் கேமராவில் ஏதோ படம் எடுத்துக்கொண்டிருந்தார் இன்ஸ்பெக்டர் லட்சுமணன். நாம் யதேச்சையாக அவரை கவனித்தோம். அருகில் சென்று 'என்ன சார் ஏதாவது ஸ்பெஷல் அசைன்மென்ட்டா?' என்று சிரித்தபடி கேட்டபோது, ''ஆமாம்.. நான் ஸ்பெஷல் டிவிஷன் பிரிவில் பணியில் இருக் கிறேன். எனது வேலையே பாரீஸ் கார்னர், கொத்தவால் சாவடி, பெரியமேடு ஏரியாக்​களில்தான். இங்கு தீவிரவாதிகள் நடமாட்டம் உள்ளதா, அப்படி இருந்தால் அது எங்கே அதிகமாக இருக்கிறது? அந்த நபர்கள் யார்? என்று பார்ப்​பதுதான் என்னுடைய வேலை. சந்தேகப்படும் வகையில் நடமாடும் நபர்களை ரகசியமாகக் கண்காணித்து வருகிறேன். இதோ பாருங்கள்.... எனது செல்போன் கேமராவில் பதிவாகி இருக்​கும் காட்சிகளை...!'' என்று சொல்லிக்கொண்டே சில படங்களை நம்மிடம் காட்டினார். 
'நெட்வொர்க்கை உடைப்போம்!’
சென்னையில் மக்கள் அதிகம் புழங்கும் இடம் அது. டிரில் மாஸ்டர் போல ஒருவர் நின்று உத்தரவுகளைப் பிறப்பிக்க... அவர் எதிரில் இளைஞர்கள் சிலர் வரிசைகட்டி நின்றிருந்தனர். தொடர்ந்து நம்மிடம் பேசிய லட்சுமணன், ''இந்த டிரில் மாஸ்டர் நிறைய குற்றவழக்குகளில் தொடர்புஉள்ளவர். அது மட்டுமல்லாமல் தீவிரவாத இயக்கத்தினருடன் தொடர்பு வைத்திருக்கிறார். இந்தமாதிரி அப்பாவி இளைஞர்களை மூளைச்சலவை செய்து அடுத்தகட்ட உடற்பயிற்சி தருகிறார். பிறகு, வெளிநாடுகளில் ஆயுதப் பயிற்சி தருகிறோம் என்று அனுப்பி இந்தியாவையே சீரழிக்கிறார். இவனை நான் தொடர்ந்து கண்காணித்து வருகிறேன். மற்ற விவரங்களை பிறகு சொல்கிறேன். இனிமேல் வன்முறை நடக்காமல் தடுப்பது மட்டுமல்ல, இந்த நெட்வொர்க்கை முழுமையாக முடக்குவதுதான் எங்களுடைய ஒரே லட்சியம்!'' என்று உற்சாகமாகப் பேசிவிட்டு, தன்னுடைய பணியில் மும்முரமானார். அந்த இடத்தில் லட்சுமணன் நின்றிருந்தபோது, அவர் ஒரு போலீஸ் அதிகாரி என்பது யாருக்கும் தெரியவில்லை. ஏதோ ஸ்போர்ட்ஸ் பிளேயர் மாதிரி இருந்தார்.
[You must be registered and logged in to see this image.]
அவர்தான், புத்தூரில் நடந்த தீவிரவாதிகள் வேட்டையில் ரத்தக்கோடு தாண்டிய லட்சுமணன். தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாகச் சொல்லப்படும் வீட்டை, அச்சத்தை அலேக்காக எடுத்து வைத்துவிட்டு துணிச்சலாகப் போய்த் தட்டியது லட்சுமணனின் கைகள்தான். இதுவரை இத்தகைய கதவுதட்டும் ஓசையைக் கேட்காத தீவிரவாதிகள் அரிவாளோடு பாய்ந்து லட்சுமணன் தலையில் போட்டனர். போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார் லட்சுமணன். அவரை, பெருமை கலந்த அக்கறையுடன் காவல் துறை தலைமை கவனிக்கிறது. தீவிரவாதிகளும் லட்சுமணனை கண் இமைக்காமல் கவனிக்க ஆரம்பித்து இருக்கிறார்கள்.
[You must be registered and logged in to see this image.]'நாங்கள் தடுத்த கொலைகள் அதிகம்!’
கடந்த மூன்று ஆண்டுகளாகத் தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீரழிவுச் சம்பவங்கள், இந்து அமைப்பு பிரமுகர்கள் கொலைச் சம்பவங்கள், குற்றச் சம்பவங்கள்... இவை அனைத்துக்கும் காரணம் உளவுத் துறை ஃபெயிலியர். இப்படியாக இறங்குமுகத்தில் போய்க்கொண்டிருந்த உளவுத் துறையின் இமேஜை தூக்கி நிறுத்தியிருக்கிறது புத்தூர் ஆபரேஷன்.
''கால்பந்தில் நாங்கள் கோல் கீப்பர் மாதிரி. கோல் போஸ்டுக்குள் செல்லாமல் எத்தனை பந்துகளை தடுத்திருக்கிறோம் என்பதை யாரும் கண்டுகொள்ளவே மாட்டார்கள். ஒரு பந்தை கோல் போஸ்ட்டுக்குள் போகவிட்டுவிட்டால், அதுதான் பெரிதாகப் பேசப்படும். கடந்த ஆறு மாதங்களில் இந்து அமைப்பினரை தீவிரவாதிகள் கொன்ற சம்பவங்களைத்தான் நீங்கள் பார்க்​கிறீர்கள். ஆனால், ஐந்து வி.ஐ.பி-களை அவர்கள் கொல்ல முயன்று நாங்கள் தடுத்​திருக்கிறோம். முஸ்லிம் சமூகத்தில் உள்ள பெரிய வி.வி.ஐ.பி-யை தீவிரவாதிகள் வேறு ஆட்கள் மூலம் கொலை செய்து பழியை இந்து அமைப்பினர் மீது போடப் பார்த்தனர். நாங்கள் அதைத் தடுத்துவிட்டோம். அதேபோல், தென்காசியில் இந்து அமைப்பினரின் அலுவலகத்தில் குண்டு வெடித்தது. அதைச் செய்தது முஸ்லிம் என்று திசைதிருப்பிவிட முயற்சி நடந்தது. நாங்கள் அதை நம்பாமல் உண்மைக் குற்றவாளியைப் பிடித்தோம். இப் போது, புத்தூரில் நடந்ததும் தீவிரவாதிகளைத் தொடர்ந்து சேஸிங் செய்துவருவதில் ஒரு காட்சிதான். இப்படி இன்னும் பல சம்பவங்கள் நடக்கும்'' என்று உளவுத் துறை அதிகாரி ஒருவர் முன்னுரை கொடுத்தார்.
புத்தூர் ஆபரேஷனை முழுவதுமாக டி.ஜி.பி-யிடம் கேட்டுத்தெரிந்துகொண்ட முதல்​வர் ஜெயலலிதா, உளவுத் துறையினரை மனதாரப் பாராட்ட... அதைத் தனக்கே உரித்தான பாணியில் உளவுத் துறையினருக்கு  'கங்கிராட்ஸ்' என்று எஸ்.எம்.எஸ். அனுப்பினார் டி.ஜி.பி. ஒட்டுமொத்த உளவுத் துறை​​யினருக்கும் அக்டோபர் 5-ம் தேதியன்று மாலை சந்தோஷம் ஏற்பட்டாலும், இன்ஸ்பெக்டர் லட்சுமணன் உயிருக்குப் போராடிக்கொண்டிருப்பதை நினைத்து சோகத்​தில் மூழ்கினர்.
'ராப் பிசாசு’
1996-ம்ஆண்டு எஸ்.ஐ-ஆக காவல் துறைக்கு வந்து, இன்ஸ்பெக்டராக பதவிஉயர்வு அடைந்தவர் லட்சுமணன். உளவுத் துறையின் ஸ்பெஷல் டிவிஷன் இன்ஸ்பெக்டராக மூன்று ஆண்டு களுக்கு முன் பொறுப்பேற்றார். தீவிரவாதிகளை ரகசியமாகப் பின்தொடர்ந்து பிடிக்கும் பணியில் இறங்கினார். இவருடைய அப்பாவும், அண்ணனும் போலீஸ்துறையை சேர்ந்தவர்கள்தான். வடசென்னை ஏரியாவில் ரௌடி களுக்கு சிம்ம சொப்பனமாக இருந்தவர். 'ராப் பிசாசு' என்று துறையில் இவருக்கு ஒரு பெயர் உண்டு. தமிழகத்தில் எங்கே குற்றச் சம்பவங்கள் நடந்தாலும் அதுகுறித்து துப்பு கொடுப்பதில் கில்லாடி [You must be registered and logged in to see this image.]என்பதால் 'துப்பு' லட்சுமணன் என்ற அடைமொழியும் உண்டு. வட சென்னை ஏரியாவில் லட்சுமணனுக்கு என்று சோர்ஸ்கள், முன்னாள் ரௌடிகள், ரிட்டயர்டு கிரிமினல்கள் என்று தனக்கென ஒரு நெட்-வொர்க்கை வைத்திருப்பவர்.
இப்படித்தான், அண்ணா சாலை ஏரியாவில் இரவுநேர டான்ஸ் கிளப்பில் ஒரு வடநாட்டு நபர் கத்தை கத்தையாக ரூபாய் நோட்டுகளை வீசுவதாக சோர்ஸ் ஒருவர் லட்சுமணனுக்கு தகவல் சொல்ல... இவர் அங்கே போனார். மிகப்பெரிய கள்ளநோட்டு கும்பலை அந்த வட நாட்டு நபர் காட்டிக்கொடுத்தாராம். இன்​னொரு சம்பவம்... கருவாடு ஏற்றிவந்த லாரி ஒன்றை நிறுத்தி, 'என்னப்பா.. நாற்றம் ஓவராக இருக்கிறதே?' என்று சோதனை செய்திருக்கிறார். கருவாடு கூடைகளுக்கு கீழே நூற்றுக்கணக்கான பாம்புத் தோல்கள் இருந்தன. வெளிநாட்டுக்கு கடத்துவதற்கு முன் பிடித்திருக்கிறார்.
தென் சென்னையில் உள்ள ஜுவல்லரி ஒன்றுக்கு ஐந்து நேபாளி பெண்கள் வந்து 150 தங்கக் காசுகளைத் திருடிவிட்டனர். அவர்கள் கிளம்பிப்போன ஆட்​டோவில் தங்கக்காசு பாக்ஸை மட்டும் போட்​டுவிட்டு இறங்கிச்​சென்றுவிட்டனர். யோசித்த ஆட்டோ டிரைவர், அந்தப் பெண்​கள் கிளம்பிய ஜுவல்லரி வாசலுக்கு வந்து விஷயத்தைச் சொல்ல, பிறகுதான் தெரிந்தது தங்கக்காசுகள் திருடப்பட்ட தகவல். இதை, அப்போதைய கமிஷனர் விஜயகுமார் மைக்கில் சொல்ல... இன்ஸ்பெக்டர் லட்சுமணன் டீம் மின்னல் வேகத்தில் சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே லாட்ஜுகளில் புகுந்துதேட ஆரம்பிக்க... சிகரெட் அடித்தபடி ரூமில் இருந்த நேபாளி பெண்களை சந்தேகத்தின்பேரில் சுற்றி வளைக்க... இரண்டே மணிநேரத்தில் திருடிகள் சிக்கினர். லட்சுமணன் டீமுக்கு 25 ஆயிரம் ரூபாய் பரிசை மைக்கில் அறிவித்தார் கமிஷனர் விஜயகுமார்.
அதே போல், சௌகார்பேட்டையில் ஏழரை கிலோ தங்கம் கொள்ளை போனது. தனது சோர்ஸ்களை முடுக்கிவிட்டு ஒரேநாளில் கொள்ளையரைப் பிடித்தாராம் லட்சுமணன். திருச்சியைச் சேர்ந்த பிரபல நகைக் கடைக்கு சொந்தமான நாலரை கோடி மதிப்புள்ள நகைகளை வேனில் கொண்டு செல்லும்போது, கொள்ளையர் வழிமறித்து அபகரித்தனர். அப்போது, சென்னை டி.பி. சத்திரம் இன்ஸ்பெக்டராக இருந்தார் லட்சுமணன். ஒரு இன்ஃபார்மர் கொடுத்த தகவலையடுத்து, லட்சுமணன் டீம் கீரனூர் வரை போய் முக்கியக் குற்றவாளியைப் பிடித்து அங்குள்ள போலீஸாரிடம் கொடுத்து​விட்டுத் திரும்பினார்களாம். வட சென்னையை கலக்கிவந்த சுறா என்ற ரௌடி என்கவுன்ட்டர் செய்யப்பட்டார். அந்த டீமிலும் லட்சுமணன் இருந்தார்.
வட சென்னையில் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டுவந்த கோடீஸ்வரர்களை பிடித்து உள்ளே தள்ளினார் லட்சுமணன். திருட்டு வி.சி.டி, போலி மதுபான பாட்டில் குடோன் இவற்றை நடத்திவந்த சமூக விரோதிகள் பலரும் லட்சுமணன் டார்ச்சர் தாங்காமல் சென்னையை விட்டே ஓடினார்களாம். ஆனால், எதிர்ப்புகளும் அதிகரித்துவந்ததாம். இவரின் நடவடிக்கைளுக்கு முட்டுக்கட்டை போட நினைத்து சிலர் அவதூறுகளை அள்ளிவீச... ஒரு ஆண்டு சஸ்பெண்ட் செய்யப்படடார் லட்சுமணன். அதன்பிறகு, வடசென்னை குற்றப்பிரிவுக்கு ஒரு கும்பிடு போட்டுவிட்டு, கூடுவாஞ்சேரி இன்ஸ்பெக்டராகப் பொறுப்பேற்றார். அங்கிருந்துதான் உளவுத் துறையின் ஸ்பெஷல் டிவிஷன் பிரிவுக்கு மாற்றப்பட்டார்.
'புத்தூர் போனதை எனக்குச் சொல்லவில்லை!’
லட்சுமணனின் மனைவி மது பென் காந்தியிடம் பேசினோம். ''நேர்மைக்கு உதாரணமாக நடந்து கொண்டவர் என் கணவர். முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பாரீஸ் கார்னர் ஏரியாவில் 14 வருடங்கள் பணியில் இருந்தார். அப்போது அங்கிருக்கும் முஸ்லிம் அன்பர்கள் பலரும் என் கணவரின் நண்பர்களாக ஆனார்கள். ஸ்பெஷல் டிவி ஷனுக்குப் போன பிறகும்கூட, முஸ்லிம் நண்பர்களுடன் நட்புடன்தான் இருந்தார். இப்போதும்கூட, அவர் வேலைசெய்யும் போலீஸ் துறைக்கு கடமை தவறாத அதிகாரியாக நடந்துகொண்டதில் எங்களுக்கு பெருமைதான். அக்டோபர் 4-ம் தேதி மாலை, போலீஸ் பக்ரூதீனைப் பிடித்துவிட்டதாக சொன்னார். ஆனால், நள்ளிரவு வரை நான் போன் செய்துகொண்டிருந்தேன். புத்தூருக்கு போனதை அவர் ஏனோ என்​னிடம் சொல்லவே இல்லை. அவர் விரைவில் குணமாகி திரும்பவேண்டும் என்று பிரார்த்தனை செய்துகொண்டிருக்கிறேன்'' என்று கண்ணீர் சிந்தினார்.
லட்சுமணன் தலையில் ஏழு வெட்டுக்கள்!
[You must be registered and logged in to see this image.]
சம்பவ இடத்தில் இருந்த போலீஸ் அதிகாரி அன்றைய ரத்தம் உறைய வைக்கும் காட்சிகளை நம்மிடம் விவரித்தார். ''அக்டோபர் 4-ம் தேதி ஸ்பெஷல் டிவிஷன் மேலி​டத்தில் இருந்து இன்ஸ்பெக்டர்கள் லட்சுமணன், ரவீந்திரன் இருவரையும் அழைத்திருக்கிறார்கள். 'போலீஸ் பக்ருதீன் பெரியமேடு ஏரியாவில் நடமாடுவதாக தகவல். நீங்கள் உடனே போகவும்' என்றார்கள். இரண்டு இன்ஸ்பெக்டர்களும் பக்ருதீனின் லேட்டஸ்ட் புகைப்படத்தை எடுத்துக்கொண்டு மாலை நேரத்தில் ஏரியாவை வலம் வந்திருக்கிறார்கள். அப்போது, தூரத்தில் பக்ருதீனை பார்த்ததும் விரட்டி இருக்கின்றனர். பக்ருதீன் எதிர்ப்பைக்காட்ட... இருதரப்பினரும் கட்டிப்புரண்டு  சண்டை போட்டிருக்கிறார்கள். லட்சுமணனின் உடும்புப் பிடியில் சிக்கிக்கொண்ட பக்ருதீனால் திமிரமுடிய​வில்லை. உடனே, பெரியமேடு போலீஸ் இன்ஸ் பெக்டர் வீரகுமாருக்கு தகவல் சொல்லி அவரை வரவழைத்து அவரிடம் பக்ருதீனை ஒப்படைத்து இருக்கின்றனர். அதன்பிறகு, நள்ளிரவில் லட்சுமணனை மீண்டும் அழைத்திருக்கிறார்கள். 'உனக்குத்தான் தெலுங்கு நன்றாக பேசவருமே? புத்தூரில் ஒரு தேடுதல் வேட்டை' என்று சொன் னதும் உடனே கிளம்பிவிட்டார். புத்தூரில் தீவிரவாதிகள் பதுங்கியிருந்த வீட்டின் கதவைத் தட்டி மூன்று அதிகாரிகள் உள்ளே நுழைந்ததனர். அவர்களில் முதலில் சென்றவர்தான் லட் சுமணன். மின்னல் வேகத்தில் அவரை உள்ளே இழுத்துவிட்டார் பன்னா இஸ்மாயில். கதவையும் சாத்திவிட்டனர். லட்சுமணன் சுதாரிப்பதற்குள் கொடுவாளால் தலையில் ஏழு இடங்களில் வெட்டிவிட்டனர். குக்கர் மூடியால் கண்மூடித்தனமாகத் தாக்கி  இருக்கின்றனர். நிலையை உணர்ந்த டி.எஸ்.பி. கார்த்திகேயன் தனது கைத்துப்பாக்கியால் ஜன்னல் வழியாக பன்னா இஸ்மாயிலை நோக்கிச் சுட்டார். ஒரு குண்டு அவர் வயிற்றில் பாய... அலறிக்கொண்டு சரிந்தார். அருகில் இருந்த பில்லா மாலிக் உடனே தனது கூட்டாளி பன்னா இஸ்மாயிலை அலேக்காகத் தூக்கிக்கொண்டு ஒரு அறைக்குள் புகுந்துகொண்டார். இந்தச் சந்தடியில் உள்ளே புகுந்த எங்கள் அதிகாரிகள் லட்சுமணனை தூக்கிக்கொண்டு வெளியே வந்தனர்'' என்றார்கள்.
புத்தூர் டு போரூர்... திக்திக் நிமிடங்கள்! அதே அதிகாரி தொடர்ந்தார்...
''ஸ்பெஷல் டிவிஷன் எஸ்.பி-யான அர. அருளரசு அவரது ஜீப்பில் லட்சு​மணனை  ஏற்றிக்கொண்டு உடனே கிளம்பிவிட்டார். முதலில், புத்தூரில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்குப் போக... அங்கே நர்ஸ் மட்டும்தான் இருந்தார். அவரும் லட்சுமணனுக்கு முதலுதவி செய்தபடி, 'சார்.. இப்போ மணி 4.55. காலை ஐந்து மணிக்கு இங்கே தெலங்கானா ஸ்டிரைக். வாகனங்களை ஓட விடமாட்டார்கள். உடனே எங்க ஊர் எல்லையைவிட்டுப் போய்விடுங்கள்...’ என்று அவசரப்படுத்தி இருக்கிறார். அப்போது அங்கே இருந்த உள்ளூர் பிரமு​கர்கள், 'எல்லை வரை நாங்கள் வருகிறோம். கவலைப்படாதீர்கள். யாராவது வழிமறித்தால் நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்' என்று ஜீப்பில் ஏறினர். '108’ ஆம்புலன்ஸுக்கு தகவல் சொல்லி, ஆந்திர எல்லைக்குள் 20 கி.மீ. தூரத்துக்கு வந்து காத்திருந்தது. ஜீப்பில் இருந்த லட்சுமணனை ஆம்புலன்ஸுக்கு மாற்றினர். வழிநெடுகிலும் லட்சுமணனிடம் பேச்சுக்கொடுத்தபடியே வந்தாராம் எஸ்.பி. 'புத்தூர் ஆபரேஷன் சக்ஸஸா? என்ன சார் நிலவரம்?' என்று கேட்டபடி வந்தாராம் லட்சுமணன். இடையிடையே மூச்சுவிட சிரமப்படுவதை கவனித்த எஸ்.பி. உடனே நவீனவசதி கொண்ட தனியார் ஆம்புலன்ஸுக்கு தகவல் சொல்லியிருக்கிறார். அந்த வாகனத்தை திருவள்ளூர் ரோட்டுக்கு வர வழைத்திருக்கிறார்கள். வழியில் '108’ ஆம்புலன்ஸை விட்டு ஸ்டரக்சரில் தனியார் ஆம்புலன்ஸுக்கு மாற்றியிருக்கிறார்கள். அதில், செயற்கை சுவாசக் கருவிகளை லட்சு​மணனுக்குப் பொருத்தியதும், கொஞ்சம் ஈஸியாக சுவாசித்திருக்கிறார். அதற்குள் போரூர் ராமச்​சந்திரா ஆஸ்பத்திரி டாக்டர்களுக்குத் தகவல் போக, அவர்கள் தயாராக வாசலில் காத்திருந்தனர். அவர்கள் லட்சுமணனை ஆம்புலன்ஸில் இருந்து இறக்கி ஆஸ்பத்திரிக்குள் கொண்டுபோய் ஐ.சி.யு-வில் வைத்து சிகிச்சையை ஆரம்பித்திருக்கிறார்கள். அரிவாள் வெட்டுக் காயத்தால், கபாலத்தின் பல இடங்கள் நொறுங்கி இருந்தது. அதன் காரணமாக, இரண்டு காற்றுக் குமிழிகள் மூளையில் இருந்ததைப் பார்த்து அதற்கு சிகிச்சை அளித்தனர். இடுப்பிலும் ஆறு விலா எலும்புகள் உடைந்துள்ளன. அவற்றில் ஒன்று நுரையீரலை அழுத்தியதால், மூச்சுத் திணறல் அதிகமானது. அக்டோபர் 7-ம் தேதி நிலவரப்படி லட்சுமணனின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது'' என்றார்.
புத்தூர் ஆபரேஷன் மூலமாக தமிழகத்தின் மிகமுக்கியமான டெரர் நெட்வொர்க்கின் இடுப்பை உடைத்துள்ளது தமிழக போலீஸ். தன்னுடைய தைரியத்தின் மூலமாக இந்த ஆப​ரேஷனை ஆரம்பித்து வைத்த இன்ஸ்பெக்டர் லட்சுமணன் பூரண குணம் அடைந்து திரும்பி வரவேண்டும்!
- கனிஷ்கா
படங்கள்: ச.வெங்கடேசன்
[You must be registered and logged in to see this image.]
 
லட்சுமணன் மீட்புக்குப் பிறகு, தீவிரவாதிகள் தங்கியிருந்த வீட்டின் கூரையில் ஆந்திராவின் ஆக்டோபஸ் அதிரடிப் படையினர் சிறு துளையிட்டு கம்பி முனையில் கேமராவை இணைத்து வீட்டுக்குள் அனுப்பினர். உள்ளே இருந்தவர்களிடம் பயங்கர ஆயுதங்கள் ஏதுமில்லை என்பதை உறுதிப்படுத்தினர். ஆனால், கம்பியை வீட்டுக்குள் பதுங்கியிருந்த பிலால் மாலிக் கடுமையாக தாக்கினாராம்.
-vikatan-


[You must be registered and logged in to see this link.]
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» வேஷத்தலைவன் மன்மோகனுக்கு ஒரு "டெரர் கும்மி" வரவேற்பு.
»  புத்தூர் இராணுவ காவலரணுக்கு அருகில் இளம் பெண்ணின் எலும்புக்கூடு மீட்பு! கொலையில் இராணுவத்திற்கும் தொடர்பு?
» “ஒரு படத்தில் நடிக்க ஒரு கோடி சம்பளம்! ” – டெரர் காட்டும் பவர் ஸ்டார்
» நீங்கள் 35 வயதை தாண்டிய பெண்ணா?
» 5 நகரங்களில் 100 டிகிரியை தாண்டிய வெயில்.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum