TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 6:34 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Yesterday at 10:47 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 10:39 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 10, 2024 4:56 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


ஈழத் தமிழர்களுக்கு பா.ஜ.க. நண்பனா? - உணர்வாளர்களின் கருத்து!

Go down

ஈழத் தமிழர்களுக்கு பா.ஜ.க. நண்பனா? - உணர்வாளர்களின் கருத்து! Empty ஈழத் தமிழர்களுக்கு பா.ஜ.க. நண்பனா? - உணர்வாளர்களின் கருத்து!

Post by ஜனனி Sat Oct 05, 2013 9:47 pm

ஈழத் தமிழர்களுக்கு பா.ஜ.க. நண்பனா? - உணர்வாளர்களின் கருத்து!
[You must be registered and logged in to see this image.]

ம.தி.மு.க.வின் இணையதள நிர்வாகிகள் நடத்தும் கூட்டங்கள் தொடங்கி தூத்துக்குடி மாவட்டத்தில் திங்கட்கிழமை தொடங்கிய முதல் பிரச்சாரக் கூட்டம்வரை வைகோ, ""வாஜ்பாய் பிரதம ராக இருந்தபோது ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகவே செயல்பட்டார்.
அவர் அளவிற்கு ஈழத் தமிழினத்திற்கு உதவியவர்கள் வேறு யாரும் இல்லை'' என்பதை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

அதேபோல், தமிழகத்தில் மாற்று சக்தி உருவாக வேண்டும் என்பதை அழுத்தமாக வலியுறுத்தி வரும் வைகோவின் நண்பரும் ஈழ ஆதரவாளருமான தமிழருவி மணியன், ஒட்டுமொத்த தமிழினத்தின் துரோகி காங்கிரஸ். ஈழப்பிரச்சினைக்கு ஒரு நிரந்தரத் தீர்வினை பா.ஜ.க.வால் தான் கொ டுக்க முடியும் என்பதையும் சொல்லி வருகிறார். இந்த சூழலில், பா.ஜ.க. ஆட்சிக்கு வந் தால் தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் தடுக் கப்படும், கச்சத் தீவு மீட்கப்படும், ஈழப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணப்படும் என்று தமிழக பா.ஜ.க. தலைவர்கள் சொல்லி வருகிறார்கள். திருச்சிக்கு வந்த நரேந்திரமோடியும் தமிழக மீனவர்கள் பிரச்சினையைத் தொட்டு பேசிவிட்டு போயிருக்கிறார். இப்படிப் பட்ட சூழலில் ஈழ ஆதரவு அமைப்புகளின் தலைவர்கள் பலரிடம் இந்திய ஊடகம் நக்கீரன் கருத்துக்களை கேட்டுள்ளது.

மே 17 இயக்கத்தின் தலைவர் திருமுருகன் காந்தி: இலங்கையில் தமிழீழம் அமைவது ஒன்றே ஈழ இனச்சிக்கல்களுக்கு நிரந்தர தீர்வாக இருக்க முடியும். இந்த தீர்வில், பா.ஜ.க.வோ நரேந்திரமோடியோ எந்த வகையிலும் காங்கிரஸுக்கு மாற்று கிடையாது. ஏனெனில் ஈழப்பிரச்சனையில் காங்கிரஸின் கொள்கை எதுவோ அதை நடைமுறைப்படுத்தும் ஒரு நாணயத்தின் மற்றொரு பக்கமாக இருக்கிறது பா.ஜ.க. ஈழத்துக்கும் ஈழத்தமிழர்களுக்கும் எதிரான சு.சாமி போன்றவர்களை தன்னகத்தே கொண்டுள்ள பா.ஜ.க., எப்படி ஈழத் தமிழர்கள் விரும்பும் ஒரு தீர்வினை தர முடியும்? பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரான சுஷ்மா சுவராஜ், ""இலங்கை மீதான காங்கிரஸின் கொள்கையே தமது கொள்கை'' என பகிரங்கமாக தெரிவித் திருக்கிறார். மற்றொரு தலைவரான ரவி சங்கர் பிரசாத், ""இலங்கை மீது போர்க்குற்றம் தேவை யில்லை. அப்படிப் பட்ட ஒரு விசா ரணையை நாங்கள் ஏற்கப்போவதுமில்லை'' என்கிறார். ஆக, ""தமிழீழப் பிரச் சனையை முன்னிறுத்தி காங்கிரசுக்கு எதிரான நெருக்கடியை அதிகரிக்கச் செய்ய வேண்டும்'' என்கிற அரசியல் தந்திரம் தவிர….. இந்துத்துவா சக்திகளுக்கு ஈழத் தமிழர்கள் மீது உண்மையான அக்கறை கிடையாது. 

தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர்கோவை ராமகிருஷ்ணன் : பா.ஜ.க.ஆட்சிக்கு வந்தால் ஈழ விடுதலையை பெற்றுத் தராது. ஈழப்போர் 30 வருடங்களாக நடந்தது. இந்த காலக்கட்டத்தில் பா.ஜ.க.வும் மத்தியில் ஒருமுறை ஆட்சியில் இருந்தது. வாஜ்பாய் பிரதமர், பாதுகாப்பு துறை அமைச் சர் ஜார்ஜ் ஃபெர்ணாண்டஸ். அப்போதும் ஈழத்தமிழர்கள் விரும்பும் அரசியல் தீர்வுக்கு முயற்சி எடுங்கள் என்கிற கோரிக்கைகள் வலுப்பெற்றன. அசைந்து கொடுக்கவில்லை பா.ஜ.க.அரசு. 

ஈழத்தமிழர்களின் கோரிக்கைகளை எப்போதும் ஆதரிக்கும் ஃபெர்ணாண்டஸ் கொடுத்த அழுத்தத்தின் காரணமாக இலங் கைக்கு ஆயுதங்கள் கொடுப்பதை மட்டும் நிறுத்திவைத்ததே தவிர, மற்றபடி இன்றைய காங்கிரஸைப் போல இலங்கைக்கு அனுசரணையாகத்தான் இருந்தது பா.ஜ.க.! முள்ளிவாய்க்கால் படுகொலைகளுக்குப் பிறகு திருப்பதி வந்த ராஜ பக்சேவுக்கு தமிழகம் முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பிய போதும் ராஜபக்சேவை எதிர்த்து குரல் கொடுக்காதவர்கள் பா.ஜ.க. தலை வர்கள். அதுமட்டுமல்லாமல் பா.ஜ.க.ஆட்சி இருக்கும் மத்திய பிரதேசத்திற்கு ராஜபக்சேவை வரவழைத்து சிவப்பு கம்பளம் கொடுத்தவர்களும் அவர்கள் தான். தமிழீழத்தில் 400-க்கும் மேற்பட்ட இந்து கோவில்கள் அழிக்கப்பட்ட போதும் வாய் மூடி மௌனியாகவே இருந்தவர்கள். நீர்த்துப் போன ஜெனிவா ஒப்பந்தத்தை இந்தியா ஆதரிக்கக் கூடாது என்று ஒட்டுமொத்த தமிழகமும் காங்கிரஸ் அரசுக்கு நெருக்கடி கொடுத்த போது "ஆதரிக்கலாம்' என்றவர் பா.ஜ.க.சுஷ்மா சுவராஜ். ஆக, எந்த சூழலிலும் தமிழீழ எதிர்ப்பு நிலைப்பாடுகளில் உறுதியாகவே இருப்பவர்கள் பா.ஜ.க.வினர். அப்படிப்பட்டவர்கள், மத்தியில் ஆட்சிக்கு வந்தால் ஈழம் கிடைத்து விடும் என்பதில் நம்பிக்கை இல்லை. அது நடக்கவும் நடக்காது. 

உலகத் தமிழர் பாதுகாப்புப் பேரவை தலைவர் ராஜா ஸ்டாலின்: இந்திய வெளியுறவு கொள்கை என்பது இலங்கை அரசுக்கு ஆதரவாகவும் ஈழத்தமிழர்களுக்கு எதிராகவும் இருக்கிறது. இந்த கொள்கைக்கு எதிராக தமிழக பா.ஜ.க. தலைவர்களிடம், இலங்கை இனப்பிரச்சினையில் ஈழத்தமிழர்கள் விரும்பும் அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்று இருந்தாலும் பா.ஜ.க.வின் அகில இந்திய தலைவர்களிடத்தில் அப்படியொரு நிலைப்பாடு இருக்கவில்லை. இந்திய வெளியுறவு கொள்கையை ஆதரிக்கும் பா.ஜ.க., இன சிக்கல்களுக்கு தீர்வு கண்டு விடும் என்பது கேள்விக்குறிதான். 

வாஜ்பாய் பிரதமராக இருந்த போதும் ஈழத்தமிழர்களுக்கு எதிரான இலங்கையின் நடவடிக்கைகள் அதிகரிக்கவே செய்தன. யாழ் கோட்டையை மீட்க அதனை புலிகள் முற்றுகையிட்டபோது, இந்தியாவின் உதவியை இலங்கை கோரியது. உடனே வாஜ்பாய், "யாழ் முற்றுகையிலிருந்து விடுதலை புலிகள் விலக வேண்டும். இல்லையேல் இந்திய ராணுவ விமானங்கள் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படும்' என்று எச்சரித்து இலங்கை அரசுக்கு ஆதரவாகவே செயல்பட்டார். தமிழர் பகுதிகளை ஆராய்ந்து வர காங்கிரஸ் அர சால் இலங்கைக்கு எம்.பி.க்கள் குழு ஒன்று அனுப்பி வைக்கப்பட்டது. 

அதில் இடம்பெற்றிருந்த பா.ஜ.க.சுஷ்மா சுவராஜ், ஈழத் தமிழர்களின் அரசியல் கோரிக்கை குறித்தோ தமிழீழத்தில் நடந்துள்ள இனப்படுகொலைகள் குறித்தோ எந்த ஒரு இடத்திலும் கவலைப்படவே இல்லை. மாறாக, ராஜபக்சே கொடுத்த விருந்தை ரசித்தும் ருசித்தும் சாப்பிட்டு விட்டு வந்தார். இதனை தமிழகம் மறக்கவில்லை. அதேசமயம், ஈழப்பிரச்சனையில் யஸ்வந்த்சின்ஹா போன்றவர்களின் பாராளுமன்ற பேச்சுகள்…. ஈழ ஆதரவு நிலையில் பா.ஜ.க.வின் நிலைப்பாடு சற்று மாறத்துவங்கியிருக்கிறது என கருதினாலும் இவர்கள் ஆட்சிக்கு வந்தால் ஈழத்திற்கான தீர்வு கிடைத்து விடும் என்பது ஒரு கேள்விக் குறிதான். 

திராவிடர் விடுதலைக்கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி : ஈழப்பிரச்சனைக்கு தீர்வு காண அணுகுவதில் காங்கிரஸுக்கும் பா.ஜ.க.வுக்கும் பெரிய வேறுபாடு எதுவும் இல்லை. புதிய பொருளாதார கொள்கை, உலக மயமாக்கல், பன்னாட்டு நிறுவனங்களின் ஆதிக்கம் உள்ளிட்ட பல்வேறு காரணிகளில் காங்கிரஸின் நிலைப்பாடு எதுவோ அதற்கு இணையான நிலைப்பாடு பா.ஜ.க.வினுடையது. அதே நிலைப்பாடு தான் ஈழ பிரச்சனையிலும். இரண்டு கட்சி களும் ஒரு தராசின் இரண்டு தட்டுகள். தமிழ் நாட்டு பா.ஜ.க. தலை வர்கள் சொல்வதையெல்லாம் அகில இந்திய பா.ஜ.க.தலைவர்கள் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்வதே இல்லை. ஈழத்துக்கு ஆதரவாக ஒட்டுமொத்த தமி ழகமும் குரல் கொடுத்து நாடாளுமன்றத்தில் விவாதித்த போது அதில் கலந்துகொண்ட பா.ஜ.க., ஈழப்பிரச்சனைக்காக உருப்படியான எந்த விவாதத் தையும் முன்வைக்கவில்லை. அதனால், மத்தியில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் இலங்கை இனச்சிக்கலை தீர்த்து விடு வார்கள் என்று சொல்வதெல்லாம் அரசியலுக்கானது என்பதை தவிர வேறு ஒன்றுமில்லை. 

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் : இந்திய வெளியுறவு கொள்கையில் மாற்றம் நிக ழாதவரை ஈழச்சிக்கலில் எந்த முன்னேற்றத்தையும் நாம் அடைந்துவிட முடியாது. இந்திராகாந்தி கடைப் பிடித்த வெளியுறவு கொள்கையின் நிலைப்பாடு ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகவும் அவருக்கு பிறகு அதிகாரத்திற்கு வந்தவர்களால் மாற்றியமைக்கப்பட்ட வெளியுறவு கொள்கை நிலைப்பாடு இலங்கை அரசுக்கு ஆதரவாகவும் இருக்கிறது. அந்த வகையில் ஈழப்பிரச்சனையில் காங்கிரஸின் நிலைப்பாடு எதுவோ அது தான் பா.ஜ.க.வின் நிலைப்பாடு. ஈழம் அமைவது தான் இந்தியாவுக்கு பாதுகாப்பானது என்பதை பா.ஜ.க. உணர வேண்டும். ஆனால், அவர்கள் உணர்ந்ததாகத் தெரியவில்லை. ஈழத் தமிழர்களுக்கு எதிரான சு.சாமி, சுஸ்மா போன்றவர்கள் அகில இந்திய பா.ஜ.க. வில் இருக்கும் போது ஈழப் பிரச்சனையில் தமிழர்கள் எதிர்பார்க்கும் எந்த தீர்வையும் பா.ஜ.க.வால் தந்துவிட முடியாது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இந்திய வெளியுறவு கொள்கையை மாற்றியமைப்போம் என்று கூட சொல்ல முடியாதவர்கள் தான் பா.ஜ.க.வினர். 

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தலைவர்பெ.மணியரசன் : ஆனையிறவை மீட்ட கையோடு யாழ்ப்பாணத்தை மீட்கும் நடவடிக்கையில் புலிகள் சுற்றி வளைத்து நின்றனர்.செய்வதறியாது திகைத்து நின்றது இலங்கை. அப்போது இந்தியாவின் பிரதமர் வாஜ்பாய். வெளியுறவுத்துறை அமைச்சர் யஸ்வந்த்சிங். அன்றைக்கு இலங்கை கேட்டதும் அவசரம் அவசரமாக ஒரு போர்க்கப்பலை அனுப்பி வைத்தார் வாஜ்பாய். அத்துடன், "யாழ் மீது புலிகள் தாக்கு தலை நடத்தக்கூடாது. நடத்தினால்…இலங்கை முழுவதும் ரத்த ஆறு ஓடும். மனித அழிவு ஏற்படும்' என்று எச்சரித்தார் யஸ்வந்த்சிங். அன்றைக்கு மனித அழிவு பற்றி பேசிய பா.ஜ.க, "2009-ல் ராஜபக்சே நடத்திய இறுதி யுத்தத்தில் ஒரே நாளில் 40 ஆயிரம் தமிழர்கள் கொல்லப்பட்ட போது…மனித நேய அடிப்படையில் கூட இலங்கையை கண்டிக்கவில்லை. அந்த யுத்தத்தில் சர்வதேச போர் நெறிகளுக்கு எதிரான அத்தனை வழிமுறைகளையும் கையாண்டு ஈழத்தமிழர்களை கொன்று குவித்தார் ராஜபக்சே. அந்த சமயத்தில் யுத்தத்தை நிறுத்த வேண்டும் என்று கூட குரல் கொடுக்கவில்லை பா.ஜ.க.! 2013 மார்ச்சில், இலங்கையில் நடந்திருப்பது இனப்படுகொலை என ஒரு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று தமிழக அரசியல் கட்சிகள் நாடாளுமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தன. 

இது குறித்து அனைத்து அரசியல் கட்சிகளின் கருத்துக்களை கேட்டறியுமாறு நாடாளுமன்ற சபாநாயகர் மீராக்குமாரிடம் காங்கிரஸ் அரசு கேட்டுக்கொண்டது. மீரா குமாரும் அனைத்து கட்சி தலைவர்களை அழைத்து ஆலோசனை நடத்திய போது, "இனப்படுகொலை என்பதை ஏற்க மாட்டோம்' என முதலில் சொன்னது பா.ஜ.க.வின் சுஸ்மா சுவராஜ்தான். ஐ.நா.வின் பொதுச்செயலாளர் பான்-கீ-மூன் அமைத்த மூவர் குழுவே இலங்கையில் நடந்திருப்பது அப்பட்டமான மனித உரிமை மீறல் என்றும் அங்கு நடந்தது இனப்படுகொலை தான் என்று அறிக்கை தாக்கல் செய்திருக்கிறது. 

அப்படியிருக்கும் நிலையில், இனப்படுகொலை என்பதைக் கூட ஒப்புக்கொள்ளாத பா.ஜ.க., "எப்படி ஈழப்பிரச்சனையில் நியாயமான ஒரு தீர்வினை கொண்டு வர முடியும்? ராஜபக்சே மீது பன்னாட்டு விசாரணை ஆணையம் வேண்டும்' என்கிற குரல் சர்வதேச அளவில் அழுத்தமாக இருக்கும் போது அதற்கேற்ப ஒரு தீர்மானத்தை அகில இந்திய பா.ஜ.க.நிறைவேற்றுமா? ஒரு தீர்மானத்தை கூட ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக போட முடியாத பா.ஜ.க., ஆட்சிக்கு வந்தால் இலங்கை அரசுக்கு சாமரம் வீசவே கடைமைப்பட்டதாக மாறிப்போகும். ஆரியத்திற்கு ஒரு தமிழ் முகமூடி அணிந்து தமிழர்களின் வாக்குகளை கவர நினைக்கிறார்கள் இந்துத்துவாவாதிகள். தனது இணைய தளத்தில், ஆரியர்களும் சிங்களர்களும் ஒன்றுதான் என பதிவு செய்திருக்கிறார் அத்வானி. அப்படிப்பட்ட நிலையில் பா.ஜ.க.வால் எப்படி தீர்வு தந்துவிட முடியும்? அகில இந்திய பா.ஜ.க.வின் உண்மை முகம் ஈழத்தமிழினத்திற்கு எதிரானது. 

பாராளுமன்றத் தேர்தல் நெருங்குவதால் தமிழகத்தில் வாக்குகளை அறுவடை செய்வதற்காகவே ஈழத் தமிழின பிரச்சினையில் அக்கறை இருப்பது போல பா.ஜ.க. காட்டிக் கொள்கிறது என்பதே யதார்த்த நிலவரமாக இருக்கிறது.
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» இந்திய அரசுக்கு ஒரு நியாயம். ஈழத் தமிழர்களுக்கு இன்னொரு நியாயமா?
» பிரித்தானியாவில் ஈழத் தமிழர்களுக்கு 2 வது இடம்:பாராட்டியுள்ள ஊடகங்கள் !
» பிலிப்பைன்ஸ் நாட்டின் கிளர்ச்சியாளர்கள் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவு: அதிரடி
» இந்தியாவில் வாழும் ஈழத் தமிழர்களுக்கு நீண்டகால விஸா?
» ஈழத் தமிழர்களுக்கு இனி நாம் என்ன செய்யவேண்டும்? -பேராசிரியர் வி.மருதவாணன்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum