TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:45 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:44 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 3:24 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun May 12, 2024 10:47 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


எண்சாண் உடம்பைக் கண்போல காப்போம்

2 posters

Go down

எண்சாண் உடம்பைக் கண்போல காப்போம் Empty எண்சாண் உடம்பைக் கண்போல காப்போம்

Post by oviya Mon Apr 19, 2010 5:32 pm

வயிறு

அரிசி, கோதுமை, கேழ்வரகு உணவு
சரியாய் உண்டால் உடல்நலம் கூடும்;
இட்டிலி, தோசை உளுந்தின் திறனால்
கெட்டியாய் எலும்பை வைத்திட உதவும்!
உண்ணும் போதினில் இடையிடையே நீர்
உண்ணும் பழக்கம் தவிர்த்திட வேண்டும்!
காய்கறி பழங்கள் கணிசமாய் உண்டால்
நோய் அணுகாது உடல்சீர் அடையும்!
பச்சைக் கீரை நெல்லிக்காயை
இச்சையாய் உண்டால் இளமை துள்ளிடும்!
வல்லாரைக்கீரை வெண்டைக்காய்
துல்லியமாய் நினைவாற்றல் வளர்த்திடும்
வேப்பம்பூவும் பாகற்காயும்
சாப்பிட வயிற்றில் கிருமிகள் தங்கா!
வாழைப் பழத்தால் சீரணம் எளிதாம்
ஏழைகள் இதனை என்றும் உண்பர்;
சிறுநீர்க் கற்கள் சேரா வண்ணம்
சிறிய வாழைத் தண்டுகள் காத்திடும்!
பித்தம் போக்கிடும் இஞ்சியும் சுக்கும்
மெத்தப் பசியை எழுப்பிட உதவும்!
கொத்த மல்லி பனங்கருப்பட்டியை
சுத்தமாகக் காய்ச்சிக் குடித்தால்
ஒத்தைத் தலைவலி பறந்து போய்விடும்!
இயற்கைத் தேனோ மருந்தாம்! உணவாம்!
இயற்கை உணவே என்றும் நல்லது!
சைவ உணவே சாலச் சிறந்தது
அசைவம் தவிர்த்தால் ஆயுள் நீளும்
வள்ளுவர் கூறும் கொல்லாமையினைத்
தள்ளிட வேண்டா; தகவாய் நடப்பீர்!
பசித்தபின் புசிக்கப் பழகிட வேண்டும்
பசித்திடும் வயிறு ருசி அறியாது!
பயறுகள் கிழங்குகள் அளவாய் உண்டால்
வயிறும் நலமாம் வாய்வும் குறையும்!
உறைகொள் புதுத்தயிர் எலும்பையும் காக்கும்
இரவினில் வேண்டாம் கீரையும் தயிரும்!
மிளகு, பூண்டு, பருப்பு ரசம் சுவை
அளவுடன் பருகலாம் அதுவே தனிச்சுவை!
எண்ணையில் பொரித்தவை தின்னச்சுவைதரும்
கண்ணியமாகச் சிறிதே உண்பீர்!
ஆவியில் வெந்த உணவே நல்லது
நோவை எளிதில் அண்ட விடாது!
பலநாள் குளிர்பதப் பெட்டியுள் உணவு
நலமாய் இராது; மிகுந்திடும் கெடுதி!
'சுத்தம் சோறு போடும்' என்பர்
சுத்தமாய் நகங்களை வைத்திட வேண்டும்
புளிப்பும் உப்பும் இனிப்பும் உரப்பும்
அளவாய் உண்டால் உடல்நலம் பெருகும்!
மிளகுத் தூளும் எலுமிச்சையும்
எளிதாய் உரப்பு புளிப்புக்கு உதவும்!
'நொறுங்கத் தின்றால் நூறு வயது'
விரைந்தே உண்டால் உடல்நலக் கேடு!
வயிற்றை மூன்று பகுதியாய்ப் பிரித்து
வயிற்றுக்கு உணவை வழங்கிட வேண்டும்
ஒருபங்கு உணவும் ஒருவாய் நீரும்
ஒருபுறம் வாய்வுக்கு ஒதுக்கிட வேண்டும்!
வேளா வேளைக்கு உண்ணா விட்டால்
கோளாறாகும் குடல்புண் வந்திடும்
வாரம் ஒருநாள் வயிற்றுக்கு ஓய்வுஎனில்
சீராய் உடல்நலம் செம்மை பெற்றிடும்!
உணவே மருந்தாம் உணர்ந்தே உண்டால்
துணையென எந்த மருந்தும் வேண்டா!
வெற்றிலை பாக்கு ஓரிரண்டெடுத்து
சற்றே மென்றால் செரித்திட உதவும்
வாய்க்குள் புகையிலைக் கவளம் ஒதுக்கினால்
நோய்க்கு இடமாகும் புற்றுநோய் முளைக்கும்
வெற்றிலைக் காவி பற்களைக் கெடுக்கும்
வெற்றிலை எச்சில் சுற்றிலும் கெடுத்திடும்!
காய்ச்சி நன்கு வடிகட்டிய நீர்

நோய்க் கிருமிகள் இல்லாக் குடிநீர்

குடல்

குடிநீர் அசுத்தமாக இருந்திடில்
கொடிய வாந்தி பேதிநோய் வந்திடும்!
அதிகாலையிலே ஐந்து குவளை
மெதுவாய்த் தண்ணீர் குடித்தால் உடலின்
கழிவுப் பொருள்கள் வெளியேறிடவே
எளிதாய் அமையும் இன்றே செய்வீர்!
குடலும் வயிறும் சுத்தமாய் இருந்தால்
உடலும் உள்ளமும் மகிழ்ச்சியில் துள்ளும்!
காலையும் மாலையும் கடன் கழிக்காவிழல்
சூலமாய்க் குத்திடும் மலச்சிக்கல் வலி
மூலநோயும் குடல் இறக்கமும் நமை
வேலை செய்ய விடாமல் அழுத்தும்!
நீரைச் சுருக்கி நெய்யை உருக்கி
மோரைப் பெருக்கி உண்பவர் தமது
பேரைச் சொன்னால் பறந்திடும் நோய்கள்!

மது விலக்கு

'மது'எனும் அரக்கன் மதியினைக் கெடுப்பான்
மதுவை ஒழித்தால் குடும்பம் மகிழ்வுறும்
மதுவைக் குடித்தே குடல் புண்ணாகி
விதியெனச் செத்தவர் கணக்கில் அடங்கார்
குடியது மிகவும் கொடியது, நல்ல
குடியைக் குடியே கெடுத்திடும் நாட்டில்!

கள்ளச் சாராயத்தை குடித்தோர்

கொள்ளியால் தலையைத் தேய்த்தது போன்று

பார்வை இழந்து நாத்தடுமாறி

கோரமாக மரணம் தழுவினார்!

போதை மருந்தும் போதை ஊசியும்

பாதை மாற்றிடும் பயங்கரப் பேய்களாம்!


எலும்புகள்


நோய் எதுவாயினும் கலங்கிட வேண்டா

நீயே மருந்தைக் கலக்கிட வேண்டா

மருத்துவர் சொல்லா மருந்துகள் உண்பது

வருத்தமாய்ப் பக்க விளைவுகள் அளித்திடும்!

எலும்பு முறிவுஎனில் ஏற்ற சிகிச்சை

நலமாய்ச் செய்தே நலம்பெற வேண்டும்;

நாட்டு மருந்துகள் பச்சிலைக் கட்டுகள்

மூட்டைப் பொருத்த முற்றிலும் உதவா!


உடல்

சுவர் இருந்தால்தான் சித்திரம் தீட்டலாம்

தவறிலாப் பழக்க வழக்கம் வேண்டும்

நல்ல உள்ளம் நல்ல உடலில்

வல்லமையுடனே இருந்திடும் என்பர்;

'உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த்தேன்' என

திறம்பட உரைக்கும் திருமந்திரமும்!

உடல்வலுவு அடையப் பயிற்சிகள் வேண்டும்

திடகாத்திரமாய்த் தெரிந்திட தினமும்

உடற்பயிற்சியினை விடாது செய்வீர்!

நடைப் பழக்கமும் ஓர் நல்ல பயிற்சி!

தற்காப்புக் கலை தெரிந்திடல் நலமே

மற்போர் சிலம்பம் போற்றிட வேண்டும்!

நீந்தத் தெரிதல் பிறர்க்கும் உதவும்

நீந்தினால் உடலும் வலுவாய் மாறிடும்!

உதவியில் சிறந்தது முதல் உதவியாகும்

முதல் உதவியினால் உயிரைக் காக்கலாம்

மனத்தை அடக்கி ஒருநிலைப்படுத்தி

தினமும் தியானம் செய்து வந்தால்

உள்ளமும் உடலும் உற்சாகம் பெறும்!

பருத்திநூல் ஆடைகள் விருப்புடன் உடுத்துக

கோடை குளிர்ச்சி இரு பருவத்திலும்

சோடை போகாது சுகமாய் உழைக்கும்!

நொறுக்குத் தீனியும் நொடிக் கொரு 'காப்பி'யும்

பெருத்திடச் செய்யும் எவரது உடலையும்!

பருத்த தொந்தி பார்ப்பதற்கு அழகா?

சிறுத்த கொடியிடைப் பெண்விரும்பிடுமா?

இதய நோய்கள் மூட்டு வலிகள்

பொதபொத உடம்பில் புகுந்து ஆட்டமிடும்

சர்க்கரையுடனே உடல் எடை குறைப்பீர்!

சித்திரம் வரைதல் கைக்கும் பழக்கம்

சுத்தமாய் செந்தமிழ் நாவின் பழக்கம்

உரக்கப் படித்தால் உச்சரிப்பு உயரும்

உரக்கவே மேடையில் பேசவும் முடியும்!

சிரிப்பும் சிறந்த மருந்தே ஆகும்

சிரிக்கும்படி நாம் வாழ்ந்திடல் தவறு!

உழைத்தப்பின் உண்பது உடலுடன் ஒட்டும்!

உழைப்புக்கு ஏற்ற உறக்கம் வேண்டும்

பகலில் உறங்கினால் பருத்திடும் உடம்பு

சுகமாய் உறங்கிட இரவே சரியாம்!

வடக்கே தலையை வைத்துப் படுத்தால்

இடக்குப் பண்ணிடும் காந்தப் புலன்கள்.

உடையும் படுக்கையும் மனமும் தூய்மை

நொடிப்பொழுதினிலே தாலாட்டிசைக்கும்

இரவில் பத்து மணிக்குப்படுத்து,

வைகறையில் ஐந்து மணிவரை உறங்குக

சூரியன் உதிக்குமுன் எழுந்து குளிப்பது

சீரிய பழக்கம் சிந்தனை வளம்பெறும்

காலையில் படித்தால் மனதில் பதியும்

காலையில் பாடினால் குரல் வளம் பெறுமாம்!
oviya
oviya
உதய நிலா
உதய நிலா

Posts : 2
Join date : 19/04/2010

Back to top Go down

எண்சாண் உடம்பைக் கண்போல காப்போம் Empty Re: எண்சாண் உடம்பைக் கண்போல காப்போம்

Post by Tamil Mon Apr 19, 2010 5:45 pm

நல்ல இருக்கு
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum