TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 17, 2024 8:41 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 17, 2024 5:06 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Thu May 16, 2024 8:45 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun May 12, 2024 10:47 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


அனைவரும் அவசியம் அறிந்திருக்க வேண்டிய முதல் உதவி சிகிச்சைகள்!

4 posters

Go down

 அனைவரும் அவசியம் அறிந்திருக்க வேண்டிய முதல் உதவி சிகிச்சைகள்!  Empty அனைவரும் அவசியம் அறிந்திருக்க வேண்டிய முதல் உதவி சிகிச்சைகள்!

Post by KAPILS Tue Sep 10, 2013 9:29 pm

விபத்து மற்றும் அவசர காலங்களில் முதல் உதவி சிகிச்சை அளிக்கும் முறைகள் பற்றிய விளக்கங்கள். நோய்க்குறி அறிதல்:

1. விபத்து நடந்த இடத்தில் முதல் உதவியாளர் இருக்கிறார் என்று வைத்துக்கொண்டால் விபத்து எப்படி நிகழ்ந்தது என்ற விபரங்களை பாதிக்கப்பட்டவரோ அல்லது அதைப் பார்த்தவர்களோ சொல்லுவதாகும். விபத்து நிகழ்ந்த இடத்தில் உள்ள இரண்டு சக்கர வாகனம், உடைந்த தூண்கள், இடிபாடுகள் போன்றவைகளும் நடந்த சம்பவத்தை நமக்கு உணர்த்தும்.


2. அறிகுறிகள்: வலி, குளிரினால் நடுக்கம், மயக்கம் வரும் நிலை போன்ற உணர்ச்சிகளை பாதிக்கப்பட்டவரே முதல் உதவியாளரிடம் சொல்லுதல். வலி எடுக்குமிடம் பெரும்பாலும் பாதிப்புகளை வெளிப்படுத்தும்.

3. அடையாளங்கள்: முதல் உதவியாளரே கண்டும், உணர்ந்தும் அறிதல்- உதாரணமாக வெளுத்துப் போதல், வீக்கம், ரத்த ஒழுக்கு, முறிந்த எலும்புகள் உருமாறிப் போதல், சில்லிட்டுப் போதல் போன்றவைகள்.

பாதிக்கப்பட்டவரை சோதிப்பது எப்படி?

நோயாளியை சோதிக்கும் போது அவர் சுயநினைவோடு இருக்கின்றாரா? இல்லையா? என்பதை கண்டறிந்து, உயிரை பாதிக்கக்கூடிய பாதிப்புகள் இருக்கின்றனவா என்றும் கண்டுபிடிக்க வேண்டும். சோதிக்கும் போது:

1. தேவைக்கேற்ப அசைத்துப் பார்த்து- அதிக அசைவினால் ஏற்கனவே ஏற்பட்டுள்ள காயங்களுக்கு குந்தகம் விளைவிக்கக்கூடாது.

2. உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை முறையாக சோதித்துப் பார்க்க வேண்டும்.

3. உங்களின் புலன்களான � பார்த்தல், உணருதல், கேட்டல், முகருதல் போன்றவைகளை முழுமையாக உபயோகிக்க வேண்டும்.

4. சோதனையின் போது அடிப்பட்ட பாகத்தை அடிபடாத பாகத்தோடு ஒப்பிட்டு- ஏற்பட்டுள்ள வீக்கம், அசாதாரண மாற்றங்களை கண்டு முதலுதவி செய்ய வேண்டும்.

குறிப்பு:

சோதனையின் போது சுவாசம் �கள கள� என்ற சத்தத்துடனோ, சிரமமாகவோ காணப்பட்டால் உடனடியாக மீட்பு நிலையில் படுக்க வைக்க வேண்டும்.

சிகிச்சை:

சோதனையின் போது கண்டுபிடித்தவைகளுக்கு உரித்தான சிகிச்சைகளை கிரமமாகச் செய்யவும். அவருக்கு ஆதரவும் அன்பும் தரக்கூடிய வார்த்தைகளால் பேச வேண்டும். பொறுமையாகவும், திறமையாகவும் செயல்பட வேண்டும். ஏதாவது சொன்னாலோ, கேட்டுக் கொண்டாலோ, அவைகளை உடனடியாக கவனிக்க வேண்டும்.

அடிக்கடி கேள்விகள் கேட்டு தொந்தரவு செய்யக்கூடாது. இது அவருக்கு தொல்லையாக இருப்பதோடு அல்லாமல், முதல் உதவியாளரின் திறமையை சந்தேகிக்க நேரிடும். சிகிச்சை அளித்த பின் நிலைமைக்கேற்ப அவரை கிடத்த வேண்டும். அதோடு உதவி வரும் வரை கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொள்ள வேண்டும். முதலுதவியாளர் தன் குறிக்கோள்களை மறந்து விடக்கூடாது.

1. உயிரைக் காக்க:

1. காற்றும் செல்லும் பாதையில், எந்த நிலையிலும் அடைப்பு வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

2. சுவாசமும், இரத்த ஓட்டமும் இல்லையெனில் உடனடியாக செயற்கை சுவாசமும், வெளிப்புறமாக இருந்து மார்பில் இழுத்தி இருதயத்தை ஊக்குவித்தலும் தொடர்ந்து மருத்துவ வசதி கிடைக்கும் வரை செய்ய வேண்டும்.

3. வெளிப்புற இரத்த ஒழுக்கை நிறுத்த வேண்டும்.

2. நோயாளியின் நிலை மோசமாகாமல் இருக்க:

1. காயங்களுக்கு கட்டு போட வேண்டும்.

2. பெரிய காயங்களுக்கும்- எலும்பு முறிவுகளுக்கும் பாதிக்காமலிருக்க ஆதரவும் கட்டும் போட வேண்டும்.

3. பாதிப்புகளின் சிகிச்சைக்கு ஏற்றவாறு அவரை வசதியாக இருக்கையில் வைக்க வேண்டும்.

3.நோய் நீங்குதலை விரைவுபடுத்த:

1. என்ன நடக்குமோ என்ற அச்சம் நீங்க அவர்களுக்கு அன்பும், ஆதரவும் நிறைந்த வார்த்தைகளால் பேசி நம்பிக்கை உண்டாக்க வேண்டும்.

2. வலியிலிருந்தும் மற்ற உபாதைகளிலிருந்தும் மீட்க தொடர்ந்து செயல்பட வேண்டும்.

3. பொறுமையோடும், நிதானமாகவும் அவரை கையாள வேண்டும்.

4. குளிர்ந்து போகாமலும், ஈரமாக ஆகாமலும் நோயாளியை பார்த்து கொள்ள வேண்டும்.

முதல் உதவியின் கட்டங்கள்: மென்மையாகவும், துரிதமாகவும் செயல்பட வேண்டும்.

1. விபத்து நடந்த இடத்திற்கு விரைந்து சென்றால் உயிரை பாதுகாக்க முடியும்.

2. அமைதியாகவும், முறையாகவும், விரைவாகவும் இவ்வாறு செயல்பட்டால் வலியும் மற்ற பாதிப்புகளும் குறையும். இதனால் உயிரும் காக்கப்படும். அறைகுறையாக பாதிக்கப்பட்டவரை கையாண்டால் அவரின் உடல் நலம் இன்னும் அதிகமாக பாதிக்கப்படும்.

3. சுவாசம் தடைபடுகிறதா? ரத்த ஒழுக்கு அதிகமாக இருக்கின்றதா? அவருக்கு ஏற்பட்டுள்ள அதிர்ச்சி குறைவானதா, அதிகமானதா? என்பதை கவனிக்கவும்.

உடனடி சிகிச்சை

1.மேற்கண்டவற்றுக்கும் சுலபமாக தெரியக்கூடிய காயங்களுக்கும் உடனடி சிகிச்சை அளிக்க வேண்டும்.

2. ஒவ்வொரு வினாடியும் முக்கியமானதால் சுவாசம் இழந்தவருக்கு உடனடியாக செயற்கை சுவாசம் கொடுக்க வேண்டும்.

3. ரத்த ஒழுக்கு ஏற்படும் இடத்தில் பற்றுத்துணி, அணை வைத்து நேரிடையாக அதன் மேல் அழுத்தியோ அல்லது தமனிகளை உரிய இத்தில் அழுத்தியோ ரத்த ஒழுக்கை நிறுத்த வேண்டும்.

4.அதிர்ச்சிக்கு சிகிச்சை கொடுக்கவும்.

5. அனாவசியமாக பாதிக்கப்பட்டவரை அலைக்கழிக்காதே.

6. ரெயில் நிலையம், ரெயில் வண்டி, பேருந்துகளிலும் முதல் உதவி மருந்துப் பெட்டி இருக்கும். அவைகளிலிருந்து தேவையானவற்றை எடுத்து முதல் உதவி செய்யலாம். பல நேரங்களில் முதல் உதவி உபகரணங்கள் கிடைக்கவில்லை என்றால் அங்கு கிடைக்கும் பொருட்களை உபயோகித்து முதலுதவி செய்ய வேண்டும்.

7. விபத்து நடந்த இடத்தில் மின்சாரம், இடிபாடுகள், தீ, விஷ வாயுக்கள் ஓடும் இயந்திரங்களால் மேற்கொண்டு பாதிப்பு ஏற்படாமல் அப்புறப்படுத்த வேண்டும்.

8. கூட்டம் சேராமல் தடுத்து காற்றோட்டமான இடத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். மருத்துவர் இருந்தால் அவர் சொல்படி செயல்பட வேண்டும். முதல் உதவியாளர் ஒருவர் இருந்தால் அவர் உதவியையும் எடுத்துக் கொண்டு, இல்லையெனில் பொது மக்களில் சிலரின் ஒத்துழைப்போடு சிகிச்சை அளிக்க வேண்டும்.

9. வானிலைக்கு ஏற்றவாறு பாதிக்கப்பட்டவரை அப்புறப்படுத்தி, குளிர், வெயில், காற்று இவைளிலிருந்தும் காக்க வேண்டும். தேவைப் பட்டால் குடை, விரித்தத் துணி, செய்தித்தாள் இவைகளையும் உபயோகிக்கலாம்.

10. மென்மையான வார்த்தைகளைப் பேசி அன்போடும், ஆதரவோடும் செயல்பட்டு அமைதியாக இருக்கச் சொல்ல வேண்டும்.

11. மருத்துவ வசதிக்கு அனுப்ப ஏற்பாடு செய். உறவினருக்கு செய்தி அனுப்ப வேண்டும்.

12. உயிரைப் பாதுகாக்கவும், நிலைமை மோசமாகாமல் தடுக்கவும் தேவையான சிகிச்சை அளித்தால் போதும். அதற்கு அதிகமாக சிகிச்சை கொடுப்பதை தவிர்க்கவும்.

குறிப்பு:

கீழ்கண்ட மூன்று அவசர நிலைமைகள் பாதிக்கப்பட்டவரின் உயிரிழப்புக்கு ஏதுவாகும்.

1.சுவாசமும் ரத்த ஓட்டமும் தடைபடுதல்

2.அதிக ரத்த ஒழுக்கு.

3.உணர்வு அற்றுப் போதல்.

உயிரைக்காக்க அடிப்படை ஆதார தேவைகளான காற்று செல்லும் பாதையை சீராக்குதல். தேவையான சுவாசமளித்தல். தேவையான இரத்த ஓட்டம் உண்டாக்குதல் போன்ற செயல்பாடுகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். பாதிக்கப்பட்டவருக்கு

ரத்த ஓட்டத்தை உண்டாக்க:

தரை, நாற்காலி, மேசை போன்ற உறுதியானவற்றின் மீது படுக்க வைக்கவும். கால்பக்கம் சிறிது உயர்த்தி வைத்தால் தலைக்கு இரத்த ஓட்டம் அதிகமாகும். சுவாசம் தடைபட்டதை கண்ட றிந்து இரண்டு முறை வாயோடு வாய் வைத்து ஊதிய பின்பு வெளிப்புறமாக இருந்து இருதயத்தை அழுத்தி இரத்த ஓட்டத்தை உண்டாக்க வேண்டும்.

1. மார்பில் தெரியும் விலா எழும்பினை நடு விரலால் உணர்ந்து அது மார்பு எலும்போடு இணையும் இடத்தை அறியவும். அங்கிருந்து இரண்டு விரல் கனத்திற்கு அப்பால் உள்ளங்கையின் அடிப்பாகத்தை மார்பு எலும்பின் மீது வை.

2. மற்ற உள்ளங்கையின் அடிப்பாகத்தை முன் வைத்த கையின் மீது வைத்து, விரல்களை கோர்த்துப்பிடித்துக் கொள். முட்டி மீது நின்று, முழங்கையை மடக்காமல் நேராக வைத்து மார்பு எலும்பின் மீது 4 அல்லது 5 செ.மீ (1-2') ஆழம் முதுகெலும்பை நோக்கி (கீழ்) செல்லும்படி அழுத்தவும். 30 முறை அழுத்தவும் (ஒரு நிமிடத்திற்கு 100 முறை).

3. பிறகு 2 முறை ஊதவும். மீண்டும் 30 முறை அழுத்தவும். இம்மாதிரி 5 முறை செய்யவும்.

4. 6-வது முறை தொடங்கும் முன் 10 வினாடிக்குள் மீண்டும் கழுத்துத்தமனியை அழுத்தி ரத்த ஓட்டமும் பிறகு தாடையை மூச்சு பாதிக்கப்பட்டவரின் முகத்திற்கு அருகில் கொண்டு சென்று சுவாசமும் உள்ளதா என்று கவனிக்கவும்.

5. இல்லையெனில் தொடர்ந்து செயற்கை சுவாசமும், மார்பு எலும்பை அழுத்தி இரத்த ஓட்டத்தையும் உண்டாக்க வேண்டும். மருத்துவ ஊர்தியில் அழைத்துச் செல்லும் போது தொடர்ந்து செயல்படவும்.

6. விலா எலும்புகள் மீது அல்லது மார்பெலும்பின் அடிபாக நுனியில் அழுத்தம் செய்யாமல் எச்சரிக்கையோடு செயல்படவும். சுவாசம் மட்டும் தடைபட்டால் ஒரு நிமிடத்திற்கு 12 முறை வாயின் மீது வாய் வைத்து ஊதவும். நன்றாக சுவாசிக்க ஆரம்பித்தவுடன் அல்லது ரத்த ஓட்டமும் சீரடைந்த பின், உணர்வற்று இருந்தால் அவரை மீட்பு நிலையில்படுக்க வைத்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.

ரத்த ஓட்டம் ஆரம்பித்தால்:

1. மறுபடியும் உடல் நிறம் பழைய நிலைக்கு வரும்.

2.கண்மணிகள் சுருக்கமடைந்து பழைய நிலையை அடையும்.

3. கழுத்திலுள்ள தமனிகளில் நாடித்துடிப்பையும் காணலாம்.

அனுப்புதல்

மருத்துவரிடமோ, மருத்துவமனைக்கோ அனுப்பும் முன் பாதிக்கப்பட்டவரிடம் கண்டறிந்தவைகளை எழுத்தில் குறிப்பிட வேண்டும். எவ்வளவு விரைவில் பாதிக்கப்பட்டவர் மருத்து சிகிச்சைக்கு அனுப்பப்படுகிறாரோ அது அவருக்கு நல்லது.

உறவினர்களுக்கு சாதுரியமாக செய்தி அனுப்ப வேண்டும். அதோடு அவர் எங்கு அழைத்துச் செல்லப்படுகிறார் என்பதனையும் தெரிவிக்க வேண்டும். கூட்டத்தில் ஒருவரிடம் செய்தி சொல்லி அனுப்பலாம். இது விசயமாக காவலர் உதவியை நாடுவது நல்லது.
KAPILS
KAPILS
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 4340
Join date : 11/12/2011
Location : Tamilnadu

http://kabiltech.blogspot.in/

Back to top Go down

 அனைவரும் அவசியம் அறிந்திருக்க வேண்டிய முதல் உதவி சிகிச்சைகள்!  Empty Re: அனைவரும் அவசியம் அறிந்திருக்க வேண்டிய முதல் உதவி சிகிச்சைகள்!

Post by மாலதி Tue Sep 10, 2013 10:01 pm

நீங்கள் அறிந்திருக்க வேண்டிய முதலுதவிகள்
[You must be registered and logged in to see this image.]
முதல் உதவி என்பது பாதிக்கபட்ட அல்லது விபத்துக்குள்ளான ஒருவரின் உயிரை காக்க அல்லது பாதிப்பினை தற்காலிகமாக குறைக்க மேற்கொள்ளபடும் சிகிச்சை முறை. இதன்போது சில வேளைகளில் சிறிய உபகரணங்கள் பயன்படுத்த வேண்டய தேவை ஏற்படலாம். இன்றைய விபத்துகள் அதிகமான காலத்தில் நாம் அனைவரும் கட்டாயமாக இந்த முதல் உதவிகள் பற்றி அறிந்திருக்க வேண்டியது அவசியம்.
மாரடைப்பு அல்லது நெஞ்சுவலி
 
இதய தசைகளுக்கு செல்ல வேண்டிய முடியுருநாடியின் குருதி வழங்கள் தடைப்பட்டதும் இதய தசைகளின் செயற்பாடு நிறுத்தப்படும். எனவே நெஞ்சு வலி, மூச்சு திணறல் அதிகம் வியர்த்தல், தோள் மற்றும் கைவலி ஏற்படல் போன்ற அறிகுறிகள் தோன்றும். இதற்க்கு உயர்குருதி அமுக்கம், மன உளைச்சல், கொலஸ்ரோல், இதயத்தில் கோளாறு போன்றன காரணமாக அமையலாம்.
 
இவ்வாறு அறிகுறிகளுக்கு உற்பட்ட ஒருவரினை சுற்றியுள்ள சூழலை அமைதியானதாக காற்றோட்டம் நிறைந்ததாக மாற்றி நன்றாக ஓய்வெடுக்க அனுமதிக்க வேண்டும். இறுக்கமாக ஆடைகள் அணிந்திருப்பின் அவற்றை தளர்த்த வேண்டும். ஏற்கனவே நெஞ்சு வலிக்கான மாத்திரைகள் பயன்படுத்துபவராயின் அந்த மாத்திரையை வழங்கலாம். மாத்திரை வழங்கி மூன்று நிமிடத்தில் வலி நீங்க வேண்டும்.
 
இல்லையாயின் மருத்துவரை உடனடியாக நாட வேண்டும். தேவைப்படின் செயற்கை மூச்சு வழங்க வேண்டும். நாடி துடிப்பு இனக்கானப்படவில்லை எனின் உள்ளங்கைகளை நெஞ்சின் மேல் வைத்து அழுத்தவும்.15 அழுத்தங்களுக்கு 2 செயற்கை மூச்சு வழங்கல் என்பதற்கமைய தொடர்ந்து இந்த செயலை நோயாளியை anbulance இல் ஏற்றும் வரைக்கும் செய்யவும்.
 
எரி காயங்கள்
 
இதல் மூன்று வகை உண்டு. தோலில் மூன்று படையுண்டு. முதலாவது மேல் படை எரிவுக்குட்படுதல் பெரியளவு பாதிப்பினை ஏற்படுத்தாது. இதன்போது எறிந்த பகுதி சிறிதளவு சிவந்து சிறிய வீக்கம் காணப்படலாம். வலி நேரம் செல்ல செல்ல அதிகரிப்பது போல் தோன்றும். கொப்பளங்கள் கண்ணுக்கு தெரியாது. எறிந்த பகுதி சிறிது நேரத்தில் வெண்ணிறமாகும்.
 
குளிர் நீரினை காயத்துக்கு மேல் தொடர்ந்து சிறிது நேரத்துக்கு உற்றவும் பாதிக்கப்பட்ட இடத்தினை சுத்தம் செய்யவும். நீரினை மட்டும் பயன்படுத்துவது நன்று. anti biotic வகைகளில் ஒன்றான silver sulphadiazine இனை பூசவும். தூய்மையான துணியினால் எரிகாயத்தினை சுற்றி கட்டு போடவும். வைத்தியாரின் ஆலோசனையுடன் tetanus vaccine ஏற்றவும்.
 
அடுத்து தோலின் இரண்டாவது படையும் எரிவுக்குட்பட்டால் எரிவு வலி என்பன அதிகமாக காணப்படும். கொப்பளம் தோன்றும், தெளிவான திரவம் கொப்பளத்தினுள் காணப்படும். பாதிக்கபட்டவரை படுக்க வைத்து காயத்தினை சுத்தப்படுத்தி உலர வைக்கவும். எரிவுற்ற பகுதியை உயர்த்தி வைக்கவும். anti biotic creame பூசவும்.
 
எரிவு உட்தோலையும் தாக்குமெனின் உரோம முடியின் வேர்பகுதி வியர்வை சுரப்பி நரம்பு முடிவிடங்கள் என்பன அழிக்கபடும். எரிவு வலி என்பன மிக அதிகமாக காணப்படும்.கொப்பளம் ஏற்படும், தோலில் உரு குலைவு ஏற்படலாம். 90 % உடல் மேற்பரப்பு இந்த எரிவிற்கு உட்பட்டால் இறப்பு நிகழ வாய்ப்பு மிக அதிகம். 60 % மேற்பரப்பு எரிவிற்கு உட்பட்டால் இளவயதினர் எனின் உயிர் ஆபத்து குறைவு, இதுவே வயதானவர எனின் ஆபத்து அதிகம். தாமதிக்காது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுவது நன்று. சுற்றுபுறத்தை குளிராக வைக்க ஈரத்துணி குளிர் நீரை பயன்படுத்தவும். காற்றோட்டமானதாக சூழல் இருத்தல் வேண்டும்.
 
மின்சாரம் தாக்குதல்
 
மின்சார தாக்கத்துக்கு உள்ளன ஒருவர் தூக்கி வீசப்பட்டு மயக்க நிலைக்கு கொண்டு செல்லப்பட்டால் உடலில் பல சமநிலை குலம்பல்கள் ஏற்படும். தசைப்பிடிப்பு, குருதி உறைதல், இழையங்கள் இறக்கும், சுவாசம் பாதிக்கப்படும், இதயம், சிறுநீரகம் என்பனவற்றின் செயல்கள் பாதிக்கப்படும்.
 
மின்சாரம் பாய்ந்த மூலத்தினை கையினால் அகற்ற வேண்டாம். முதலில் ஆளியினை நிறுத்த வேண்டும். தாக்கப்பட்டவருக்கு மூச்சு இல்லையெனில் செயற்கை மூச்சு கொடுக்கவும்.
 
வாய் மூலமாக செயற்கை மூச்சு வழங்குதல். பாதிக்க பட்டவரின் மூக்கு துவாரங்களை கைவிரல்களினால் மூடவும். உங்கள் வாயினை தாக்கபட்டவரின் வாயின் மேல் வைத்து மூச்சினை கொடுக்கவும். மூச்சு வழங்கும் போது நெஞ்சு பகுதி மேல் எழுகின்றதா என்பதை அவதானிக்கவும். எழுந்தால் இரண்டாவது மூச்சினை வழங்கவும் இல்லையென்றால் தலையினை பிடித்து நாடிப்பகுதியினை உயர்த்தி இரண்டாவது மூச்சு வழங்கவும். நாடி துடிப்பு இனக்கானப்படவில்லை எனின் உள்ளங்கைகளை நெஞ்சின் மேல் வைத்து அழுத்தவும். 15 அழுத்தங்களுக்கு 2 செயற்கை மூச்சு வழங்கல் என்பதற்கமைய தொடர்ந்து இந்த செயலை நோயாளியை anbulance இல் ஏற்றும் வரைக்கும் செய்யவும்.
 
பாம்பு கடி
 
பாம்பு கடித்த இடத்தினை நன்றாக சவர்க்காரம் இட்டு கழுவவும். காயமடைந்த பகுதியினை அசைக்காமல் அந்த பகுதியிலிருந்து உறுதி ஏனைய இடங்களுக்கு செல்லாமல் இறுக்கமாக கட்டவும். காயப்பட்ட பகுதியிலிருந்து 2 -4 அங்குலம் அளவிற்கு மேல் இந்த கட்டு இடப்பட வேண்டும். காயப்பட்ட பகுதியை உயர்த்தி வைக்கவும். ஈரத்துணி அல்லது குளிரூட்டல் மூலம் காயப்பகுதியை குளிரான சூழலில் பேணவும்.கடித்த பாம்பினை கொள்ள முயற்சிக்க வேண்டாம். முடியுமானால் தனியாக பிடித்து வைக்கவும்.உடனடியாக அருகிலுள்ள வைத்தியரை நாடவும்.
 
இது போன்ற சிகிச்சையை மேற்கொள்ளுபவர்கள் தைரியமாக இருக்க வேண்டும். பாதிக்கபட்டவரை பயத்திலிருந்து வெளிகொணர்ந்து அமைதியான நிலைக்கு கொண்டு வர வேண்டும். பாதிக்க பட்டவரை சுற்றி கூட்டம் கூடுவதை தவிர்க்கவும். எப்போதும் சுற்று புறத்தை காற்றோட்டமாக வைத்திருக்க வேண்டும்.
 
- ஆரணி நீதிராஜா


[You must be registered and logged in to see this link.]
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

 அனைவரும் அவசியம் அறிந்திருக்க வேண்டிய முதல் உதவி சிகிச்சைகள்!  Empty Re: அனைவரும் அவசியம் அறிந்திருக்க வேண்டிய முதல் உதவி சிகிச்சைகள்!

Post by Muthumohamed Tue Sep 10, 2013 11:59 pm

பலருக்கும் பயன்படும் நல்ல பதிவு பகிர்வுக்கு நன்றி
Muthumohamed
Muthumohamed
பண்பாளர்
பண்பாளர்

Posts : 835
Join date : 21/06/2013
Location : Palakkad

Back to top Go down

 அனைவரும் அவசியம் அறிந்திருக்க வேண்டிய முதல் உதவி சிகிச்சைகள்!  Empty Re: அனைவரும் அவசியம் அறிந்திருக்க வேண்டிய முதல் உதவி சிகிச்சைகள்!

Post by mmani Wed Sep 11, 2013 7:04 am

Muthumohamed wrote:பலருக்கும் பயன்படும் நல்ல பதிவு பகிர்வுக்கு நன்றி
அறிவிப்பு அறிவிப்பு அறிவிப்பு
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

 அனைவரும் அவசியம் அறிந்திருக்க வேண்டிய முதல் உதவி சிகிச்சைகள்!  Empty Re: அனைவரும் அவசியம் அறிந்திருக்க வேண்டிய முதல் உதவி சிகிச்சைகள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» அவசியம் அறிந்திருக்க வேண்டிய பாலியல் நோய்கள்!
»  சிறுநீரகப் பாதுகாப்பு தொடர்பில் அவசியம் அறிந்திருக்க வேண்டிய சில தகவல்கள்!
»  கர்ப்பகால தாம்பத்திய உறவு தொடர்பில் அவசியம் அறிந்திருக்க வேண்டிய தகவல்கள்!
» ஒவ்வொரு நோய்க்கும் செய்ய வேண்டிய முதல் உதவி சிகிச்சை முறை
» எல்லோரும் அறிந்திருக்க வேண்டிய 100 மருத்துவக் குறிப்புகள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum