TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon May 27, 2024 8:13 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu May 23, 2024 4:07 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 21, 2024 2:55 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 12:02 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


மானாட, மயிலாட்டத்தை பார்த்து பொழுதை களித்த கருணாநிதி சட்ட ஒழுங்கு சரியில்லை என்பதா? ஜெயலலிதா கண்டனம்

Go down

மானாட, மயிலாட்டத்தை பார்த்து பொழுதை களித்த கருணாநிதி சட்ட ஒழுங்கு சரியில்லை என்பதா? ஜெயலலிதா கண்டனம் Empty மானாட, மயிலாட்டத்தை பார்த்து பொழுதை களித்த கருணாநிதி சட்ட ஒழுங்கு சரியில்லை என்பதா? ஜெயலலிதா கண்டனம்

Post by மாலதி Sun Aug 11, 2013 1:28 pm

மானாட, மயிலாட்டத்தை பார்த்து பொழுதை களித்த கருணாநிதி சட்ட ஒழுங்கு சரியில்லை என்பதா? ஜெயலலிதா கண்டனம் Jaya%20200%2839%29சென்னை: முதலமைச்சராக இருந்தபோது மானாட, மயிலாட நிகழ்ச்சியை பார்த்து பொழுதை களித்தவர் கருணாநிதி என்றும், அப்போது சட்டம் - ஒழுங்கு எவ்வாறு சீரழிந்த நிலையில் இருந்தது என்பதும் மக்களுக்கு தெரியும் என்றும் முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "வேலியே பயிரை மேய்ந்தால் விளைவதெப்படி?" என்ற பழமொழிக்கேற்ப, ஐந்தாண்டு கால மைனாரிட்டி தி.மு.க. ஆட்சிக் காலத்தில் தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கையே சீர்குலைத்து அமைதிப் பூங்காவாக இருந்த தமிழகத்தை அமளிக்காடாக மாற்றிய கருணாநிதி, "ஒரு மாதத்திற்கு மேலாக முதலமைச்சர் தலைநகர் சென்னையிலே இல்லையே" ன்ற கேள்வியை தனக்குத் தானே கேட்டு கொண்டு, சில கொலை, கொள்ளைச் சம்பவங்களைச் சுட்டிக்காட்டி, இவற்றின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய நான் தலைநகரில் இல்லாமல் இருப்பது சரியல்ல என்ற ரீதியில் பதில் அளித்து, எந்தப் பத்திரிகையாவது இதைப்பற்றி ஒரு வார்த்தை எழுதியதுண்டா என்றும் அங்கலாய்த்துள்ளார்.

கடந்த ஒரு மாத காலத்தில் தமிழகத்தின் நன்மைக்காக பல முக்கியப் பிரச்னைகளில் நான் எடுத்துள்ள நடவடிக்கைகளை தமிழக மக்களும், பத்திரிகையாளர்களும் நன்கு அறிவர். பிரச்னைகளுக்கு உடனுக்குடன் சரியான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றனவா என்பதைத்தான் மக்களும், ஊடகங்களும் கூர்ந்து நோக்குவார்களே தவிர, முதலமைச்சர் அதிகாரிகளின் கூட்டத்தை நடத்தி முடிவெடுத்தாரா? அந்தக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடத்தப்பட்டதா? முதலமைச்சரின் இல்லத்தில் நடத்தப்பட்டதா? முதலமைச்சரின் முகாம் அலுவலகத்தில் நடத்தப்பட்டதா? முதலமைச்சர் யார் யாருடன் விவாதம் நடத்தினார்? என்பதையெல்லாம் ஒரு பொருட்டாக கருத மாட்டார்கள். அவ்வாறு கருத வேண்டிய அவசியமும் இல்லை. எந்தப் பிரச்னையாக இருந்தாலும், அதன் மீது தீர்க்கமான, தன்னலமில்லாத, நியாயமான, பாரபட்சமற்ற முடிவை முதலமைச்சர் எடுக்கிறாரா அல்லது தன்னலத்தையும், தனது குடும்ப நலத்தையும் கருதி முடிவுகளை எடுக்கிறாரா என்பது தான் முக்கியமே தவிர, அந்த முடிவு எந்த இடத்திலிருந்து எடுக்கப்படுகிறது என்பது முக்கியமல்ல.

நீலகிரி மாவட்டம், கோடநாட்டில் ஒரு சில நாட்கள் தங்கியிருந்து, அங்கிருந்தபடியே அரசுப் பணிகளை நான் மேற்கொள்வேன் என்ற செய்தி தமிழக அரசின் செய்திக் குறிப்பு மூலம் மக்களுக்கு தெரிவிக்கப்பட்டது. கோடநாடு என்பது தமிழ்நாட்டின் ஒரு பகுதி.  அந்தப் பகுதியில் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களும், பழங்குடியின மக்களும் வசித்து வருகிறார்கள். அந்தப் பகுதியில் சில காலம் தங்கியிருப்பது அப்படி என்ன மாபாதக செயலா? கோடநாடு என்ன லண்டனிலா இருக்கிறது? இல்லை கர்நாடக மாநிலத்தில் இருக்கிறதா?  நான் சில நாட்கள் கோடநாட்டில் தங்கி இருந்தாலும், அன்றாட அரசுப் பணிகளை செவ்வனே மேற்கொண்டு வருகிறேன் என்பதை நியாய உணர்வுடைய அனைவரும் ஏற்றுக் கொள்வார்கள்.

கோடநாட்டில் தங்கியிருந்த கடந்த சில நாட்களில் நான் செய்த அரசுப் பணிகள் அனைத்தையும் பட்டியிலிட விரும்பவில்லை. அதே சமயத்தில் ஒரு சில முக்கிய பிரச்னைகள் குறித்து நான் எடுத்த நடவடிக்கைகளை இங்கே கோடிட்டுக் காட்டுவது எனது கடமையென கருதுகிறேன்.

தமிழகத்தில் நிலவும் சட்டம்-ஒழுங்குப் பிரச்னைகள் குறித்தும், தமிழகத்திற்கு எதிரான மத்திய அரசின் நடவடிக்கைகள் குறித்தும், தமிழகத்தின் உரிமைகள் குறித்தும் அவ்வப்போது கலந்தாலோசித்து நடவடிக்கை எடுத்து வரும் நான், தமிழக மக்களுக்கு எதிரான கருணாநிதியின் துரோகச் செயல்களையும் தோலுரித்துக் காட்டியுள்ளேன். விலைவாசி உயர்விற்கு வித்திடும் பெட்ரோல், டீசல் விலைகளை மாதத்திற்கு இரு முறை மத்திய அரசு உயர்த்திக் கொண்டே வருவதற்கு நான் எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்து, விலை உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தியதுடன், பெட்ரோலியப் பொருட்களின் விலையை நிர்ணயிக்க வேண்டிய முறை குறித்தும் எனது அறிக்கையில் சுட்டிக்காட்டி இருந்தேன்.

இதே போன்று, மத்திய அரசின் எரிவாயு விலை நிர்ணயக் கொள்கைக்கும் எனது எதிர்ப்பைத் தெரிவித்து நான் அறிக்கை வெளியிட்டேன். அந்த அறிக்கையில், 2014 ஏப்ரல் முதல் அமலுக்கு வரும் எரிவாயு விலை நிர்ணயக் கொள்கையை நிர்ணயம் செய்யும் தார்மீக உரிமை அடுத்த ஆண்டு மே மாதம் வரை மட்டுமே ஆட்சியில் இருக்க தகுதியுடைய மத்திய அரசுக்கு இல்லை என்பதையும் சுட்டிக் காட்டியுள்ளேன்.

இது தவிர, காப்பீட்டுத் துறை, தொலைத்தொடர்பு துறை, பாதுகாப்புத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அந்நிய நேரடி முதலீட்டின் அளவை அதிகரிப்பதற்கு எடுக்கப்பட்ட முடிவினை எதிர்த்து நான் அறிக்கை வெளியிட்டேன்.  அந்த அறிக்கையில், இது போன்ற அந்நிய நேரடி முதலீட்டினை தொலைத்தொடர்புத் துறை, பாதுகாப்புத் துறை போன்றவற்றில் அதிகரிப்பது இந்தியாவின் பாதுகாப்பிற்கே அச்சுறுத்தலாக அமையும் என்பதையும் சுட்டிக் காட்டி இருந்தேன்.

இது மட்டுமல்லாமல், என்.எல்.சி. நிறுவனத்தின் பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்வது என்ற மத்திய அரசின் முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏற்கெனவே எழுதிய கடிதங்களின் தொடர்ச்சியாக 7.7.2013 அன்று பிரதமருக்கு ஒரு கடிதத்தை எழுதினேன்.  அந்தக் கடிதத்தில், என்.எல்.சி. நிறுவனத்தின் பங்குகளை வாங்குவதற்கு தமிழக அரசின் பொதுத் துறை நிறுவனங்கள் தகுதியுள்ளவை என்பதை மீண்டும் சுட்டிக் காட்டி, தமிழக பொதுத் துறை நிறுவனங்களுக்கு என்.எல்.சி.யின் பங்குகளை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொண்டேன்.

இது குறித்து விவாதிக்க தொடர்பு அலுவலரை நியமிக்குமாறு மத்திய அரசு கேட்டுக் கொண்டது. இது குறித்து அதிகாரிகளுடன் கலந்தாலோசித்த நான், என்.எல்.சி. பங்குகளை தமிழக அரசின் பொதுத் துறை நிறுவனங்கள் வாங்குவது தொடர்பான கருத்துருவுக்கு நிதித் துறையின் முதன்மைச் செயலாளரை தொடர்பு அலுவலராக நியமித்தேன்.  இந்தத் தகவல் மத்திய அரசுக்கு தலைமைச் செயலாளரால் தெரிவிக்கப்பட்டது. என்னுடைய உத்தரவின் பேரில், 10.7.2013 அன்று நிதித் துறை முதன்மைச் செயலாளர், திட்டம் மற்றும் வளர்ச்சித் துறையின் முதன்மைச் செயலாளர் மற்றும் தொழில் துறையின் இணைச் செயலாளர் ஆகியோர் டெல்லிக்கு சென்று மத்திய அரசு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனைத் தொடர்ந்து, மீண்டும் எனது உத்தரவின் பேரில், 15.7.2013 அன்று அந்த அதிகாரிகள் குழு மும்பை சென்று ‘செபி’ நிறுவன அதிகாரிகளுடன் விவாதித்தது. என்னுடைய அறிவுரைகள் மற்றும் ஆலோசனைகளின் பேரில் தான் என்.எல்.சி. நிறுவனத்தின் பங்கினை தமிழக அரசின் பொதுத் துறை நிறுவனங்கள் வாங்க வழிவகை ஏற்பட்டது.  இதனையடுத்து, தமிழக அரசின் பொதுத் துறை நிறுவனங்கள் இந்த பங்கு விற்பனையில் பங்கேற்று, அதன் மூலம் இந்தப் பிரச்சனைக்கு ஒரு சுமுகமான தீர்வு காணப்பட்டது.

மேலும், ஈரான் நாட்டுச் சிறையில் 16 தமிழக மீனவர்கள் உள்ளனர் என்ற விவரம் எனக்கு கிடைக்கப் பெற்றவுடன், அவர்களை மீட்பதற்கான நடவடிக்கையை எடுக்கும்படி பிரதமருக்கு நான் கடிதம் எழுதினேன். மேலும், சிறையில் உள்ள மீனவர்களின் குடும்பங்கள் வறுமையில் வாடுவதைக் கருத்தில் கொண்டு, முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ஒவ்வொரு குடும்பத்திற்கும் 1 லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட்டேன்.  இந்த உதவித் தொகை அமைச்சர்கள் மூலம் அந்தந்த மீனவக் குடும்பங்களுக்கு நேரடியாக வழங்கப்பட்டுவிட்டது.

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் சிறை பிடிக்கப்படுவதை தடுத்து நிறுத்துமாறு பாரதப் பிரதமருக்கு தொடர்ந்து கடிதங்கள் எழுதி வருகிறேன். சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடுவது குறித்து அதிகாரிகளுடன் நான் விரிவாக விவாதித்தேன். இந்த விரிவான விவாதத்திற்குப் பிறகு, 12.8.2013 முதல் தண்ணீர் திறந்துவிட முடிவெடுக்கப்பட்டு அதற்கான அறிவிப்பினை 27.7.2013 அன்று வெளியிட்டேன். அதன் பின்னர், கர்நாடக மாநிலத்தில் உள்ள காவேரி நீர்பிடிப்புப் பகுதிகளில் மிக அதிக அளவு மழை பெய்ததன் காரணமாக மேட்டூர் அணைக்கு 90,000 கன அடிக்கும் அதிகமாக நீர்வரத்து வந்தது. இவ்வாறு வரும் நீரினை அதிகபட்சம் பயன்படுத்திட வேண்டும் என்பதாலும், விவசாயிகள் சம்பா சாகுபடிக்கு தயார் நிலையில் இருந்ததாலும், மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்காக தண்ணீரை முன்கூட்டியே, அதாவது 2.8.2013 முதல் திறந்துவிடுவது குறித்து 29.7.2013 அன்று ஓர் அறிக்கையினை நான் வெளியிட்டேன். இந்தத் துரித நடவடிக்கை, திடீரென அதிகளவு பெறப்பட்ட நீரினை இயன்ற அளவு பயன்படுத்திக் கொள்ள ஏதுவாக எடுக்கப்பட்டது.

கோடநாட்டில் தங்கியிருந்த ஒவ்வொரு நாளும், நாள் தவறாமல் பல முறை தொலைபேசியில் தமிழக அரசின் தலைமைச் செயலாளருடனும், காவல்துறை தலைமை இயக்குநருடனும், பிற அரசு அதிகாரிகளுடனும் அவ்வப்போது பேசிக் கொண்டு இருந்தேன்.  அதனால் தான் பல பிரச்சினைகளில் உடனுக்குடன் விவாதித்து துரித முடிவுகள் எடுத்து செயல்படுத்த முடிந்தது. இதைப் பற்றி எல்லாம் சரியாக புரிந்து கொள்ளாமல், மனம் போன போக்கில் இந்த அரசின் மீது குறை சொல்லி இருக்கிறார் கருணாநிதி.
  
பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு பொதுச் செயலாளர் ஆடிட்டர் ரமேஷ் கொலை செய்யப்பட்டதை பொறுத்தவரை, 21.7.2013 அன்று நான் ஓர் அறிக்கையினை வெளியிட்டேன்.  அந்த அறிக்கையில், இந்த வழக்கில் புலன் விசாரணையை துரிதமாக மேற்கொள்ள ஏதுவாக, ஒரு சிறப்பு புலனாய்வு குழு ஒன்று ஏற்படுத்தப்படும் என்று அறிவித்திருந்தேன். பின்னர், இது குறித்தும், சட்டம் ஒழுங்கு நிலைமை குறித்தும் தலைமைச் செயலாளர், உள் துறை செயலாளர் மற்றும் காவல் துறை தலைமை இயக்குநர் ஆகியோருடன் 25.7.2013 அன்று கோடநாட்டில் ஆய்வுக் கூட்டம் ஒன்றை நடத்தினேன். 

கலப்புத் திருமணம் செய்து கொண்ட தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த இளவரசன் மரணம் அடைந்தவுடன், இதன் காரணமாக சாதி மோதல்கள் ஏற்படா வண்ணம் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள நான் உத்தரவிட்டேன்.  இந்த மரணம் குறித்து தீர விசாரிக்க ஒரு நபர் விசாரணை ஆணையத்தை அமைத்து 8.7.2013 அன்று அறிக்கை வெளியிட்டேன்.

ஒகேனக்கல் வெள்ளப் பெருக்கில் தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த நால்வர் சிக்கி பரிதவிக்கின்றனர் என்ற தகவல் கிடைத்தவுடன்,  அவர்களை ஹெலிகாப்டர் மூலம் மீட்க நான் உத்தரவிட்டேன். இதனைத் தொடர்ந்து, அவர்கள் நால்வரும் இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

கருணாநிதி தனது கேள்வி  – பதில் அறிக்கையில் ஒரு சில கொலைச் சம்பவங்களை சுட்டிக்காட்டி, தமிழ்நாட்டின் சட்டம்-ஒழுங்கு நிலைமை குறித்து விமர்சித்துள்ளார். கருணாநிதி முதலமைச்சராக இருந்த போது சட்டம் ஒழுங்கு எவ்வாறு சீரழிந்த நிலையில் இருந்தது என்பது பற்றியும், தற்போது சட்டம் ஒழுங்கு நிலைமை எவ்வாறு சிறப்பாக உள்ளது என்பது பற்றியும் நான் சட்ட மன்றத்திலேயே பல முறை பேசியுள்ளேன். எனவே, இது குறித்து மீண்டும் விரிவாக தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை.

கருணாநிதி முதலமைச்சராக இருந்து தமிழக முன்னேற்றத்திற்காக என்ன நடவடிக்கை எடுத்தார்?  கருணாநிதி முதலமைச்சராக இருந்த போது தனக்குத் தானே பாராட்டு விழாக்களை நடத்திக் கொள்வது, திரைப்படங்களை பார்த்து ரசிப்பது, புகழ் பாடுபவர்கள் மத்தியில் உலா வருவது, சினிமா கலைஞர்களை வைத்து தனக்குப் பாராட்டு விழா நடத்திக் கொள்வது, திரைப்படங்களுக்கு கதை எழுதுகிறேன் என்று சொல்லி பணம் சம்பாதிப்பது, தன் குடும்ப உறுப்பினர்களுக்கு பதவிகளைப் பெற்றுத் தருவது, மானாட, மயிலாட நிகழ்ச்சியை கண்டு களிப்பது போன்ற பணிகளுக்கே பெரும்பான்மை நேரத்தை ஒதுக்கினார். அரசு நிர்வாகமே முடங்கிக் கிடந்தது. இது நாடறிந்த உண்மை. 

கற்கால மனிதரைப் போல் கருணாநிதி அறிக்கை விடுகிறார்

எனவே, தலைநகரிலேயே எப்பொழுதும் முதலமைச்சர் இருக்கிறாரா, இல்லையா என்பது முக்கியமல்ல.  தலைநகரில் இருந்தாலும், தமிழ்நாட்டின் இதர பகுதிகளில் இருந்தாலும், மக்கள் நலனுக்கான துரித நடவடிக்கைகளை எடுக்கிறாரா என்பது தான் முக்கியம்.
 
தற்போது மின்னணு அஞ்சல், நிகரி, கைபேசி போன்ற தகவல் தொடர்பு சாதனங்கள் பெருகிவிட்ட நிலையில், காணொலிக் காட்சி மூலமாகவே உரையாடுகின்ற வசதி இருக்கின்ற சூழ்நிலையில், கற்கால மனிதரைப் போல் கருணாநிதி அறிக்கை விடுவது அறியாமையின் வெளிப்பாடு.

கருணாநிதி முதலமைச்சராக இருந்த போது, தமிழ்நாட்டில் பல்வேறு அதிகார மையங்கள் செயல்பட்டதையும், அப்பாவி மக்களின் நிலங்கள் அபகரிக்கப்பட்டதையும், தன் குடும்ப வியாபாரத்திற்காக அரசு கேபிள் டி.வி. நிறுவனத்திற்கு மூடு விழா நடத்தப்பட்டதையும், தமிழகத்தின் உரிமைகள் விட்டுக் கொடுக்கப்பட்டதையும், பதவி சுகத்திற்காக இலங்கைத் தமிழர்கள் அழிக்கப்படுவதற்கு உறுதுணையாக இருந்ததையும் தமிழக மக்கள் நன்கு அறிவார்கள். தன்னலமின்றி தமிழக மக்களுக்காக உழைப்பது தியாகம்.  தன்னலத்திற்காக தமிழக மக்களுக்கு உழைப்பது போல் நடிப்பது வியாபாரம்.  இதில் கருணாநிதி எந்த வகையைச் சார்ந்தவர் என்பதை அறிவார்ந்த தமிழக மக்கள் எளிதில் புரிந்து கொள்வர்" என்று கூறியுள்ளார்.
=http://news.vikatan.com-


[You must be registered and logged in to see this link.]
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» சட்ட ஒழுங்கு கெடும் ; படித்தவர் என்பது ஏற்புடையதல்ல ;
» மக்கள் அமோக ஆதரவு தருவார்கள் என்கிறார் ஜெ., - ஆட்சியே சரியில்லை; காமிரா எப்படி ? கருணாநிதி
» ‘டேம் 999’ படத்தை திரையிட்டால் சட்டம், ஒழுங்கு பிரச்னை ஏற்படும் : கருணாநிதி எச்சரிக்கை
» ஜெயலலிதா கண்டனம்
» தலைமை தகவல் ஆணையர் நியமனம் சட்ட விரோதம்: ஜெயலலிதா

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum