TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 3:03 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Apr 24, 2024 2:31 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Apr 23, 2024 12:00 am

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 22, 2024 9:07 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


இன்று விழுந்தாழும் நாளை எழுவோம்

Go down

இன்று விழுந்தாழும் நாளை எழுவோம் Empty இன்று விழுந்தாழும் நாளை எழுவோம்

Post by மாலதி Sun Jun 23, 2013 7:56 pm

இன்று விழுந்தாழும் நாளை எழுவோம் BT-Lt-Col-Nalayini-600x849

இன்று விழுந்தாழும் நாளை எழுவோம் : கடற்கரும்புலி லெப் கேணல் நளாயினி.
கட்டையான குண்டு உருவம். காற்று அடித்த பலூன் மாதிரி வெடித்து விடுவதுபோன்று வீங்கிய கன்னங்கள். மல்யுத்த வீரர்களுக்கு இருப்பது போன்று உருண்டையான கை , கால்கள். இதுதான் நளாயினி.
இந்தப் பெரிய உடலையும் சுமந்து கொண்டு நளாயினி சாதித்தவைகள் ஏராளம்.
மிக வேகமான ஓட்டம். யாராலும் நம்பவே முடியாது. ஆனால் முதலாவது – இரண்டாவது , மூன்றாவதுதான் ஓடி முடிப்பார். பெரிய உடலையும் தூக்கிக்கொண்டு தன குண்டுக் கால்களை வீசி வீசி நளாயினி ஓடும் அழகைப் பார்த்து பயிற்சிப் பாசறையில் தோழிகள் இருவருக்கு இட்ட பட்டப்பெயர் ‘ தவளைக்குட்டி ‘
எதையுமே ஏன் எதற்கு எப்படி ?  என்று தூண்டித் துருவி விசாரிப்பது இவரின் வழக்கம். எல்லாவற்றையும் விளங்கிக் கொள்ளவேண்டும் என்ற ஆர்வத்தில் எல்லோரையும் கேள்விகள் கேட்பதால் ‘ விஞ்ஞானி ‘  என்ற அதிஉயர் விருதும் தோழிகளால் இவருக்கு வழங்கிக் கெளரவிக்கப்பட்டது.
வயதில் சின்னவர் என்பதாலும் துடியான இயல்பைக் கொண்டவர் என்பதாலும் மேஜர் சோதியாவுக்கு இவரில் நல்ல விருப்பம். ஐவரும் மேஜர் சோதியாவுடன் தாயிடம் பிள்ளை கதைப்பது போன்று செல்லமாகக் கதைப்பதுதான் வழக்கம்.
காதிலேயே நாம் வாழ்ந்த காலத்தில் திசையறி கருவிதான் எமக்குப் பாதைகளை இனங்கண்டு கொள்ளப் பெரிதும் உதவியது.  ஒவ்வொரு அணியும் தன்னிடம் ஒரு திசையறிகருவியையாவது கட்டாயம் வைத்திருக்கும். காட்டுக்கு நளாயினி வந்த புதிதில் எல்லாப் போராளிகளும் காடு ஏதோ தமக்கு நன்கு பழகிய இடம்போல திசையரிகருவியுடன் போவதும் வருவதும் நளாயினிக்கு வியப்பை ஊட்டியது. தானும் அதுபோலப் போய்வரவேண்டும் என்ற ஆர்வம் தீவிரமாக ஏற்ப்பட்டுவிட்டது.  தமக்குரிய பயிற்சிகள் ஆரம்பிக்கப்படமுன்னரே மூத்த போராளிகளிடம் திசையரிகருவிபற்றிய பூரணமான விளக்கத்தைக் கேட்டுத் தெரிந்து கொண்டுவிட்டார்.  காட்டிலே நின்ற காலத்தில் திசையறி கருவிகளைப் பார்த்துப் பாதைகளைப் பிடித்துப் போவதில் ஒருமுறைகூட நளாயினி தவறியது கிடையாது.,  அதனால் தான் எந்த இரவிலும் எந்த நடுக்கடலிலும் நளாயினியால் தனது படகைச் சரியாகன பாதையில் செலுத்தமுடிந்தது.
1990ம் ஆண்டின் முற்பகுதி , விடுதலைப்ப்புலிகள் மகளிர் அமைப்பு ‘ முன்னணி ‘  என்ற பெயருடன் செயற்ப்பட ஆரம்பகாலம். வவுனியா மாவட்டத்தில் அரசியல் வேலை செய்யவெனவிடபட்ட ஆறு பெண்போராளிகளுள் நாலாயினியும் ஒருவர்.
ஒவ்வொருவருக்கும் மாறி மாறிச் சமையல் முறை வரும். நளாயினியில் சமையல்முறை நாளில் எல்லோருக்கும் கஷ்டகாலம். நளாயினி க்கு சமைக்கவும் தெரியாது.  தேநீர் தயாரிப்பதாகக் கூறிக்கொண்டு கழனி தண்ணீர் தயாரிப்பதுதான் நளாயினியின் வழக்கம். அன்று பார்த்து யாராவது வெளியாட்கள் வந்துவிட்டால் அவர்களின் நிலை விபரிக்க முடியாததாகிப் போய்விடும்.
தேநீரே இப்படியென்றால் , சமயலைப்பற்றிச் சொல்லத் தேவையில்லை. அறுசுவை என்று சொல்லப்படுகின்ற எல்லைக்கு அப்பாற்பட்டு புதுச்சுவையாக இருக்கும். மனித நாக்கின் சுவையுனர்மொட்டுக்கள் நளாயினியின் சமையலின் சுவையை இனங்காணமுயன்ற ஒவ்வொரு தடவையும் சமையலைச் சகிக்க முடியாத பொறுப்பாளர் நளாயினியைக் கூப்பிட்டு உன்ர சமையல் முறையில் நீ சோறும் சம்பலும் மட்டும் செய் ராசாத்தி. நாங்க சந்தோசமாக சாப்பிட்டுவிடுப் போரம் என்று சொல்லிவிட்டார்.
அதன் பின்னர் அவர் தன்னுடைய சமையல் முறையன்று அடுப்பில் உலைப் பானையை ஏற்றிவிட்டு வீட்டின் பின்புறம் இருக்கும் உரலில் சம்பல் இடிக்கப் போய்விடுவார். நிறைய வேலைகளைச் செய்யவேண்டும் என்றே எப்போதும் நினைக்கிற நளாயினி , ஏன் நேரத்தை வீணாக்க வேண்டும் ? என்ற எண்ணத்தில் சுவரில் நிற்கும் பல்லியையும் இரும்பையும் பார்த்தவாறு சாம்பலை இடித்து இடித்து …..
” அன்பான தமிழீழ மக்களே…!  இந்தத் தமிழீழ விடுதலைப் போராட்டமானது….. ”
என்று தனது பேச்சுப் பயிற்சியை ஆரம்பித்து விடுவார். ஒருநாள் பின்புறம் யாரோ கதைக்கும் குரல் கேட்டதைக் கவனித்த ஒரு போராளி என்னவென்று எட்டிப் பார்த்துவிட்டு ஓடிப்போய் மற்றவர்களையும் கூட்டிக்கொண்டு வர….
ஐந்து பேர் மறைந்திருந்து தன்னைக் கவனிப்பதை அறியாத நளாயினி தொடர்ந்து சொற்பொழிவாற்றிக் கொண்டிருக்க….
இவர்கள் அடக்கமாட்டாமல் சிரித்து விட்டார்கள். திரும்பிப் பார்த்த நளாயினி வெட்கப்பட்டு என்னக்கா நீங்க…?
என்று சிணுங்க அடுத்தமுறை நளாயினி இந்தமாதிரி ஏறுமாறாக ஏதாவது செய்யும் வரை சொல்லிச் சிரிப்பதற்கு அவர்களுக்கு ஒரு சுவையான செய்தி கிடைத்து விட்டது.
வவுனியாக் கோட்டத்தில் வேலை செய்த காலத்தில் நளாயினி வாங்காத தண்டனைகள் இல்லை. வெளியில் போய்விட்டு இரவு தளத்துக்கு வந்து முகம் கழுவுவதாதற்க்கு இரவில் நிலத்தை கூட்டாமல் பாயை விரிக்காமல் படுபதர்க்கு காலையில் குளிக்காமல் வெளியில் புறப்படுவதற்கு , குளித்தாலும் உடைகளைத் தோய்க்காமல் – துய்த்தாலும் கொடியில் விரிக்காமல் – விரித்தாலும் காய்ந்தவுடன் மடித்து வைக்காமல் என்று நீண்ட பட்டியல் ஒன்றையே தயாரிக்கலாம்.
ஒவ்வொரு நாளும் தன் மக்களிடம் போய் சமயலரியில் அம்மாமார்களுடன் அமர்ந்து அவர்களுக்கு வெங்காயம் உரித்துக் கொடுத்து தேங்காய் துருவிக்கொடுத்து ஐயாமார்களுடன் அமர்ந்து பழையதுகள் கதைத்து அரசியல் வேலை செய்து அந்த மக்களின் மனங்களில் தனக்கென ஒரு சிம்மாசனத்தைக் கட்டி எழுப்பியவர் நளாயினி. தளத்தில் இருக்கும் போது குழந்தை போலவே நடந்து கொள்வார்.
வவுனியா மாவட்டப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட பின் மதியம் 12.30 மணிக்கு எங்கிருந்தாலும் தன் தளத்துக்கு வந்து சேர்ந்துவிடுவார்.  பாடசாலை முடிந்து வரும் கீழ்ப்பிரிவு மாணவர்கள் நளாயினியின் தளத்தைத் தாண்டித்தான் செல்லவேண்டும். அவர்களின் கொப்பிகளை வாங்கிப் பார்த்து சரி – பிழைகளை விளங்கப்படுத்தி முதல் நாள் பாடசாலைக்குப் போயிருக்காவிட்டால் அதற்க்குக் காரணம் கேட்டு ஆசிரியர்கள் ஒழுங்காகப் பாடங்களை நடத்துகின்றார்களா என்பதைக் கேட்டறிந்து பின்னர் மாணவர்களின் பெற்றோர்களுடனும் ஆசிரியர்களுடனும் அதைப் பற்றிக் கதைத்து முடிவெடுத்து , இது நளாயினியின் நாளாந்த நடவடிக்கைகளில் ஒன்று. வீதியில் போகும் சிறுமிகள் – சிறுவர்கள் அழுக்காகப் போனால் வீதியிலேயே அவர்களை நிறுத்தி தன் கைக்குட்டையால் முகம் துடைத்துவிட்டு தன் சீப்பால் தலைவாரிவிட்டு அவர்களின் உடைகளைச் சீர்ப்படுத்தி அனுப்புவதில் நளாயினி என்றுமே பின்னின்றதில்லை.
அப்போதுதான் அந்தச் சண்டை நடந்தது.  திடீரென முன்னேறிய சிறீலங்கா இராணுவம் கோழியாகுலத்திளிருந்த நளாயினியின் தளம்வரை வர நளாயினியின் துப்பாக்கி சீறியது. சிறிது நேரத்துக்குள்ளேயே ஏனைய போராளி அணிகளின் உதவியும் கிடைக்க அன்று நடந்த சண்டையில் இராணுவம் பின்வாங்கியது.
ஆனால் அனுமதியிலாமல் சண்டை பிடித்த தற்குத் தண்டனையாக நளாயினி பொறுப்பிலிருந்து எடுக்கப்பட்டார்.
ஆணியிரவுத் தளம் மீதான தாக்குதலுக்காக விடுதலைப்புலிகள் மகளிர் படையணி தயாராகிக் கொண்டிருந்தது. அப்போது வவுனியா – பூவரசங்குளத்தில் வைத்து சிறீலங்கா இராணுவத்தை வழிமறித்துத் தாக்குவதெனத் திட்டம் தயாரிக்கப்பட்டது.ஆணையிரவு மீதான தாக்குதலுக்குத் தயாராகிக் கொண்டிருந்த போராளிகளில் ஒரு பகுதியினர் பூவரசங்குளத்திர்க்குப் புறப்பட்டனர்.  வவுனியாவின் ஒவ்வொரு மூளையும் தலைகீழ்ப் பாடம் என்பதால் நளாயினியும் தாக்குதலநியுடன் புறப்பட்டார்.
இந்த மோதலின் போது நளாயினி வயிற்றில் பலத்த காயமடைந்தார். காயமடைந்த நளாயினியைப் தூக்கி அவரது ஆயுதங்க்காளி அவரிடமிருந்து அப்புறப்படுத்திய பொழுது அவரது ரவைக்கூடுகள் எல்லாம் வெறுமையாக இருந்தன. கிரினைத்க்கூட எஞ்சியிருக்கவில்லை. எல்லாவற்றையுமே சந்தியில் பாவித்து விட்டார். ஏனென்றால் வவுனியாவின் தள அமைப்பைத் துல்லியமாகத் தெரிந்த நளாயினி இராணுவம் தம்மை நோக்கி முன்னேருவடஹ்ர்க்கு வாய்ப்பாக இருக்கக்கூடிய ஒரு சின்ன இடைவேளியைக்கூட விடாமல் தனித்து நின்று ஒரு பக்கத்தில் சண்டை பிடித்தார். அவர் தாகிய பக்கத்திலிருந்து இராணுவம் முன்னே வரவில்லை.
காயமடைந்த நளாயினியைத் தூக்கிக் கொண்டு பின்னுக்கு வருவதற்கிடையில் ,
எங்க எங்கட பிள்ளை ?
நளாயினிக்குக் காயமாமே. என்னமாதிரி ?  என்ன்று கேட்டவாறு வவுனியா மக்கள் சூழ்ந்து கொண்டார்கள்.  அந்த மக்களை விளக்கி .  …… நளாயினிக்கு ஒன்றுமில்லை.
என்று பொய் சொல்லி நளாயினியை அந்த இடத்திலிருந்து கொண்டு வருவதற்குள் எல்லோரும் மிகவும் சிரமப்பட்டுத்தான் போனோம்.
தான் ஒரு கரும்புலியாகப் போக விரும்புவதாக நளாயினி தலைவருக்குக் கடிதம் எழுதினார். அந்த நேரம் விடுதலைப்புலிகளின் கடற்புலிகள் அமைப்பில் பெண் போராளிகள் இருக்கவில்லை.
” கணிசமான அளவு போராளிகளைக் கொண்ட அமைப்பாக கடற்புலிகள் மகளிர் படையணியை வளர்த்தபின் கரும்புலியாகப் போகலாம் ” என்று கூறிய தலைவர் கடற்புலிகள் மகளிர் படையணியைக் கட்டி எழுப்பும் பொறுப்பை நளாயினியிடம் ஒப்படைத்தார்.  லெப் கேணல் நளாயினி , மேஜர் சுகன்யா , மேஜர் மங்கை உட்பட முப்பது பெண் போராளிகளுடன் 1992 . 03 . 01 இல் ” கடற்புலிகள் மகளிர் படையணி ” தோற்றம் கொண்டது.
ஆரம்ப காலத்தில் வாகன வசதி ஒன்றுமில்லை. நடந்து திரிந்து மிதிவண்டியில் திரிந்தும் இயக்கத்தோடு பெண்களை இணைத்தார்கள்.  இந்த முப்பது பெரும் பலதுறை சார்ந்த பிரிவுகளாகப் பிரித்து ஏலலவர்ரையும் கவனித்தார்கள். முப்பது பேரில் பத்துப் பேர் நீச்சர் பயிற்சிக்கென விடப்பட்டனர். அவர்களுள் நளாயினியும் ஒருவர். அந்த பத்துப் பெரும் ஒரு கடல் மெயில் தூரத்தை நீந்திமுடித்தால் கடற்புலிகள் மகளிர் படையணிக்கென ஒரு வாகனம் தருவதாக சூசையண்ணை சொல்லிவிட்டார். அவர்கள் நீந்த வேண்டிய நாளும் வந்து விட பத்துபேரும் கடலுக்குள் குதித்தார்கள். ஒன்பது பேர் நீர்ந்தி முடித்தார்கள். நளாயினியால் முடியவில்லை. வயிற்றுக் காயம் மிகுந்த வேதனையை உண்டாக்கியதால் நீந்தமுடியாமல் கரையேற நெஞ்ர்ந்தது. அன்று முழுவதும் ஒரே அழுகைதான். காயத்தின் வேதனை குறையாதபோதும் மறுநாள் மீண்டும் நீந்தினார். ஒரு கடல்மைல் கடக்காமல் கரையேறுவதில்லை என்ற உறுதியுடன் போய் நீந்தி முடித்துவிட்டார்.
அதன் பின்னர் சூசையண்ணியிடம் வாகனம் வாங்கியதும் பின்னர் பல கடல்மைல்கள் நீந்திக் கடந்தும் விசைப்படகுகளை ஓட்டும் வலல்மை பெற்றதும் மிக நீண்ட கதைகள்.
பூக்களின் மென்மையில் பூத்தது…
வோட்டர் ஜெட் எடுக்கவேணும். அவனை அடித்து அவன்ர ” 50 கலிபர் ” எடுக்கவேணும் என்பது தான் நளாயினியின் தாரக மந்திரமகிவிட்டிருந்தது.  இந்த நேரத்தில்தான் பூநகரி இராணுவத் தளம் மீதான தாக்குதலுக்குத் நாள் நிட்சயிக்கப்பட்டு அதற்க்கான பயிற்சிகள் நடைபெற்ருக்கொண்டிருந்தன. நளாயினியும் கடற்புலிகள் மகளிர் படையணியின் ஒரு அணியும் தரைச் சண்டைக்கான பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
பூநகரித் தளத்தின் மாதிரி அமைப்பைப்ச் சூழ பெண் – ஆன் போராளி அணிகளின் பொறுப்பாளர்கள் தளபதி சொர்ணமண்ணை தாங்குதல் திட்டத்தைப் பற்றிச் சொல்வதை அவதானித்துக் கொண்டிருந்தார்கள்.  நளாயினிக்கு தரைப்பகுதியில்தான் இலக்குக் கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால் நளாயினியின் கண்களோ நாகதேவன்துறைக் கடலில் நிறுத்தப்பட்டிருந்த விசைப்படகுகளை அவதானித்துவிட்டன.
” ஆய்  வோட்ட ஜெட் நிக்குது ”
என்று தன்னை மறந்த நிலையில் நளாயினி சொல்ல எல்லோரும் நளாயிநியையே திரும்பிப் பார்த்தார்கள். கண்களை அகல விரித்தவாறு மெய்மறந்து நின்ற நளாயினியை அருகிலுள்ள தோழிகள் தட்டித்தான் சுய நினைவுக்குக் கொண்டுவர வேண்டியிருந்தது.  மாதிரி அமைப்பு விலக்கப்பட்ட பின்னர் ,
நான் என்ர பக்கத்தை அடித்துப் பிடித்து அப்படியே நடுப்பகுதியாள அங்கால போய் நாகதேவந்துறையையும் அடித்துப் பிடித்து அங்க நிற்கிற வோட்ட ஜெட்டுகளை எல்லாம் எடுத்து காஜப்பட்டவர்களை அதில் ஏற்றிக்கொண்டு போவேன்.
தன் தோழிகளிடம் சொல்லிக்கொண்டு திரிந்தார்.  தனது குரலை அடிக் குரலில் மாற்றி தொலைத்தொடர்பு சாதனத்தில் கதைத்து தன்னுடைய குரல் கம்பீரமாக இருக்கின்றதா என்று தோழிகளிடம் கேட்ப்பார்.
சண்டை ஆரம்பமானது. நள்ளிரவில் நடுக்கடலில் நட்சத்திரங்களைப் பார்த்து திசையறிந்து கரைசேருகின்ர நளாயினிக்கு அந்த இரவில் தனக்குக் கொடுக்கப்பட்ட இலக்கை இனங்கண்டு கொள்வதில் எந்தச் சிரமமும் ஏற்படவில்லை.  தனக்குக் கொடுக்கப்பட்ட அரண்களில் சிலவற்றைக் கைப்பற்றி அழித்து அந்த இடையூடாக உதவிக் குழுவை பிரதான தளத்துக்கு அனுப்பவழிவகை செய்துவிட்டு தொடர்ந்தும் நடந்த சண்டையில் நளாயினி வயிற்றில் காயமடைந்தார்.
முன்னர் காயமடைந்த அதேஇடத்தில் இம்முறை மிகமோசமாகப் பாதிப்புக்குள்ளானது.  இரத்த உட்கசிவு ஏற்படும் ஆபத்தான நிலையில் இருந்தவர் பலத்த முயற்சிகளின் பின் பிழைத்தார்.   நிமிர்ந்து உட்காரமுடியாத நிலையில் வைத்தியசாலைக் கட்டிலில் படுத்திருந்தார்.
மாவீரர் நல நெருங்கிக் கொண்டேயிருந்தது. தன்னைத் துயிலுமில்லத்துக்கு போக அனுமதிக்குமாறு நச்சரித்துக் கொண்டேயிருந்தார். யாருமே பிடிகொடுக்கவில்லை.  1993.11.27 அன்று ஒருவருக்குமே சொல்லாமல் ஒரு காரை வாடகைக்குப் பிடித்துக் கொண்டு துயிலுமில்லத்துக்குப் போய்ச் சேர்ந்துவிட்டார்.  அனைத்துத் தளபதிகளும் – போருபாலர்களும் நளாயினியைக் கோபத்துடன் பேச …..
நான் என்னென்று வைத்தியசாலையில இருக்கிறது ? கண்ணை மூடினாலும் துறந்தாலும் துயிலுமில்லந்தான் தெரியுது. நான் என்ன செய்ய… ?
என்று எல்லோரையும் சமாதானப்படுத்திவிட்டார்.  நளாயினியை ஓய்வாக இருக்கும்படி விட அவர் புறப்பட்டு தனது தளத்துக்கு வந்து சேர்ந்துவிட்டார்.  தான் நன்றாக ஓய்வெடுத்துக் கொண்டிருப்பதாக எல்லோருக்கும் சொல்லிக் கொண்டு நீச்சல் பயிற்சிகளிலும் படகோட்டும் பயிற்சிகளிலும் தொடர்ந்து ஈடுபட்டார்.
பூநகரித் தாக்குதலில் லெப் கேணல் பாமா நீருந்து விசைப்படகைக் கைப்பற்றி வந்த பின்னர் , அவன்ரை கப்பலோன்றைத் தாக்கவேன்றும் என்பதே நளாயினியின் கனவாகிப் போயிருந்தது.
கடற்புலிகளின் படைத்துறைப் பள்ளியில் ஒரு முறை விளையாட்டுப்போட்டி நடந்தது முடிய பொறுப்பாளருக்கான அஞ்சலோட்டம் நடந்தது. பெண் போராளிகளின் பொறுப்பாளர்களும் -  ஆண் போராளிகளின் பொறுப்பாளர்களும் ஓட ஆரம்பித்தார்கள்.  பெண் போராளிகளின் தரப்பில் நளாயினி முதலில் ஓட ஆரம்பித்தார்.  வயிற்றுகாயம் வேகமான ஓட்டத்துக்குத் தடை போட்டது. ஆனாலும் விடாது ஓடி அடுத்தவிரின் கோலை மாற்றிக் கொடுகுமிடத்தை அடைய ஏறத்தாள பத்து மீர்ரர்களே இருக்கும்போதே நளாயினி தடக்கிக் கீழே விழுந்துவிட்டார். எல்லோரும் கூக்குரலிட்டு விசில் அடித்தனர்.  ஆனால் நளாயினி உடனேயே எழும்பி ஓடிக் கோலை அடுத்தவரிடம் மாற்றிக் கொடுத்தார்.  அன்று பெண் போராளிகளின் அணி கடைசியாகத்தான் வந்தது.  எல்லோரும் நளாயினியைக் கேலி செய்தார்கள்.  அவர்கள் எல்லோருக்குமே நளாயினி சொன்ன பதில் இதுதான்.
” இன்றைக்கு விழுவம் நாளைக்கு எழும்புவம். “
படைத்துறைப் பள்ளியின் ஆண் போராளிகளில் எட்டுப்பேர் இந்து கடல்மைல்களை நீந்திக்கடந்துவிட்டார்கள். அவர்களின் பொறுப்பாளர் பெண் போராளிகளின் போருபாலரிட்ம் வந்து ,  உங்களின் ஆக்களில ஒரு ஐந்து பேரையாவது நீந்த வையுங்கள் இல்லாவிட்டால் மரியாதை இராது , என்று சொல்லிவிட்டு போக அதை அறிந்த நளாயினி வந்து பெண் போராளிகளின் பொறுப்பாளரிடம்  பத்துப்பேரையாவது  கட்டாயம் நீந்த வைக்கவேணும்  பெண்களால சாதிக்க முடியும் என்று எல்லோருக்கும் தெரியவேணும்.
மறுநாள் படைத்துறைப் பள்ளியின் பெண் போராளிகள் நீந்தத் தொடங்கினார்கள். நளாயினி ஒரு படகில் ஏறி நீந்திக்கொண்டிருந்த ஒவ்வொரு போராளியின் அருகேயும் வந்து படகை நிறுத்தி நீந்தி முடிக்கவேணும் என்னம்மா நல்லா நீந்தவேணும்.
என்று சொல்லிச் சொல்லி உற்சாகப்படுத்தினார். படகின் இயந்திரத்தை நிறுத்தி நிறுத்தி இயக்குவதிலுள்ள சிரமத்தையும் பாராது எல்லாப் பெண் போராளிகளையுமே ஐந்து கடல்மைல் கடக்க வைக்கவேண்டும் என்ர ஆர்வத்தில் வேகத்தில் அபப்டிச் செய்தார். அன்று பத்தொன்பது பெண் போராளிகள் ஐந்து கடல்மைல்களை நீந்திக் கடந்தார்கள்.  அன்று முழுவதும் நளாயினியின் பாதங்கள் நிலத்தில் படவில்லை. அவ்வளவு உற்சாகம்.
எல்லாச் சின்னப் போராளிகளையும் கிட்டண்ணாவின் நினைவுப் பூங்காவுக்கு கூட்டி வந்து விளையாடவிட்டு அவர்கள் விளையாடுவதை ரசித்து அவர்களுக்கு குளிர்களி வாங்கிக் கொடுத்து அவர்கள் குடிப்பதை ரசித்து அவர்களைப் பற்றி பெருமைப்பட்டு…..
” உங்களை நான் நேவியாகத்தான் பார்க்கிறான் ”
என்று தன் கனவை அடிக்கடி அவர்களிடம் சொல்லிச் சொல்லியே வளர்த்தார்.
தன் பிள்ளைகளுடன் பெரும்பாலும் ஒவ்வொரு நாளும் ஆறுதலாக இருந்து கதைப்பது நளாயினியின் வழக்கம். அப்படிக் கதைக்கும் நேரங்களில்….
” எங்களுக்கு அம்மா அப்பா எலலாமே தலைவர்தான்.  அவர் சொல்லுறதையெல்லாம்  நாங்க கேட்கவேணும் ”
பெண் போராளிகள் எப்போதுமே தங்கைகள் வேலைகளைத் தனித்துவமாகவும் திறமையாகவும் செய்யவேணும்.  கடற் சண்டைகளில் தொடர்ந்து ஈடுபடவேணும்.
இந்தக் கடல் எங்கள் கடல். இந்தக் கடலில் தான் நாங்கள் சாகனும்.
அண்ணைக்கு உங்களில சரியான நம்பிக்கை இருக்கு. அதுக்கேற்ற மாதிரி நடந்து கொள்ள வேணும்.
என்றெல்லாம் சொல்லுவார். ….  பிள்ளைகளைப் பாடச்சொல்லிக் கேட்பார்.  இல்லாவிட்டால் தானே தன் அடைத்த குரலில் பாடிக் காட்டுவார்.
பிள்ளைகளைத் தன்னை சுற்றி வட்டமாக அமரச் செய்துவிட்டு அவர்களுக்குச் சோறு குழைத்துக் கொடுப்பது நளாயினியின் நாளாந்த நடவடிக்கைகளில் ஒன்று. ஒருமுறை லெப் கேணல் சாள்ஸ் தலைமையில் கனரக ஆயுதங்ககளை இயக்க வேகப் படகுகளை ஓட்ட நீச்சல் பயிற்சிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சமயத்தில் ஒரு முறை தவறுதலாக நளாயினியின் ஆட்கள் ஒரு கொள்கலனிலிருந்து மண்ணெண்ணெய் கசிவதைக் கவனிக்காது விட்டதில் என்னை முழுவதும் வெளியில் வழிந்து விட்டது. அதற்குத் தண்டனையாக குறிப்பிட்ட காலம் வரை இவர்களுக்கு காலை உணவு நிறுத்தப்பட்டு விட்டது.  பயிற்சியோ மிகக் கடுமையானது.  கடற்புலிகளின் வய்ரோ கடலைவிட ஆழம் கூடியது. காலையில் சாப்பிடாமல் பயிற்சி எடுபப்து என்பது அவ்வளவு இலகுவானதாக இருக்கவில்லை. எப்போதடா மதியமாகும் என்ற ஆவலுடன் காத்திருபபர்கள்.
ஒரு நாள் பயிற்சி ஆசிரியர்கள் இவர்களுக்குரிய மதிய உணவை அனுப்ப மறந்து விட்டார்கள்.  இவர்களோ உணவுக்காகக் காத்துக்கொண்டிருந்தார்கள், நேரமோ மாலையை நெருங்கிக்கொண்டிருந்தது. எல்லோருடைய வாடிய முகங்களையும் பார்க்கச் சகிக்காத நளாயினி பயிற்சி ஆசிரியர்களிடம் போய்ச் சாப்பாட்டைக் கேட்டபோதுதான் அவர்களுக்கு ஞாபகம் வந்தது சமையலறைக்குப் போய்ப் பார்த்தார்கள். சொற்ப அளவிலான உணவு தான் எஞ்சியிருந்தது. அதை வாங்கி வந்த நளாயினி எல்லோருக்கும் குழைத்துச் சாபிடக்கொடுத்து விட்டுத்தான் தான் சாப்பிட்டார்.
இப்படியெல்லாம் பழகுவதாலேயோ என்னவோ இதுவரை இடையிடையில் அம்மா என்றும் போராளிகள் கூப்பிடுவதுண்டு.
என்னோட எப்படி பழக விரும்புகின்றீர்களோ அப்படி நினைத்துப் பழகுங்கள் என்றுதான் நளாயினி போராளிகளிடம் சொல்லுவார்.
கரும்புலித் தாக்குதலுக்கான கடும் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது தற்செயலாக விசைப்படகு ஒருமுறை கவிழ்ந்ததில் நளாயினியின் வயிர்ருக்காயம் பலமாகத் தாக்கப்பட்டது.  தாங்க முடியாத வேதனை ஏற்ப்பட்டபோதிலும் சமாளித்துக் கொண்டு தொடர்ந்து பயிற்சியில் ஈடுபட்டார்.
கடுமையான பயிற்சியை ஆரம்பித்த நாளிலிருந்து நளாயினியின் கனவு நினைவெல்லாம் ” சாகரவர்த்தன ” வுடன் மோதும் கற்பனைதான். எந்த நேரமும் நான் அப்படிப்போய் இடிப்பன்.  நான் இப்படிப்போய் இடிப்பன் என்றே சொல்லிக் கொண்டிருப்பார். இருட்டில் தன் இலக்கைச் சரியாக
அடைய முடியாமல் தவறுதலாக வேறெங்காவது மோதி இலக்குத் தப்பிப் போககூடாது என்பதில் எப்போதுமே நளாயினிக்குக் கவனம் இருந்தது. கடைசி நேரத்தில் ஏற்படும் பதட்டத்தால் தவறு நேராமல் தவிர்ப்பதற்காக எந்த நேரமும் சாகரவர்த்தனாவுடன் தன் படகு மோதும் காட்சியையே திரும்பி கற்பனை செய்து பார்த்துக் கொண்டார்.
இலக்குக்கு மிக அண்மையிலுள்ள ஒரு தரைப்பகுதி லேப் கேணல் நளாயினி – மேஜர் மங்கை – கப்டன் லஷ்மன் – கப்டன் வாமன் உட்பட கடற்புலிகளின் பெண் – ஆண் போராளிகளைக் கொண்ட ஒரு அணி தயார் நிலையில் நின்றது.  அங்கு நிற்கும் வரை சமையல் முறை ஒரு நாள் ஆண் போராளிகளுக்கும் மறுநாள் பெண் போராளிகளுக்கும் என மாறி மாறி வரும்.  பெண் போராளிகளின் சமையல் முறை என்றால் நளாயிநிதான் மெயின் சமையல் சுவையாகச் சமைப்பவர்களுக்கு கண்டோஸ் வாங்கித் தருவதாக சூசையண்ணை  சொல்லியிருந்ததால் போட்டியாகத்தான் சமையல் நடக்கும்.  சாப்பாடு நேரத்தில் வழக்கம் போல நளாயினி பெண் போராளிகள் எல்லோரையும் தன்னைச் சுற்றிவர இருத்து சோறு குழைய்த்துக் கொடுத்து….
தன் படகு மோதி சாகரவர்த்தனா நீருள் மூழ்கத் தொடங்கியதும் எல்லோரும் சாப்பிட என்று இனிப்புகள் வாங்கிக் கொடுத்து….
இன்று விழுந்தாழும் நாளை எழுவோம் Karppidi-Attack-_-thesakkaaru-600x337

1994 . 09 . 19 அன்று நள்ளிரவில் தயாரிக்கப்பட்ட திட்டத்தில் எந்தப் பிசகுமே இல்லாமல் பார்த்த பயிற்சிகளில் எந்தத் தவறுமே நேராமல் நளாயினியும் – மங்கையும் இவர்களைத் தொடர்ந்து வாமனும் – லஸ்மனும் மோதியதில் சாகரவர்த்தனா மூழ்கத் தொடங்கியது.
நளாயினியையும் இன்னும் எண்ணற்ற வீரர்களையும் தன்னுடன் இணைத்துக் கொண்ட கடலைன்னியின் அலைகரங்களிலே நீந்தி விளையாடிப் படகோட்டிப் பயிற்சிகள் செய்யும் அந்த வேகமான வீராங்கனைகள் யார்…?

தெரியவில்லை…..! ?
இன்னும் கொஞ்சம் கிட்டப் போய்ப் பார்ப்போமா…. அட ” நளாயினி படையணி ”
- உயிராயிதத்திலிருந்து….


மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum