TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Yesterday at 7:12 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 12:02 am

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 17, 2024 5:06 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


இன அழிப்பைத் தடுப்பதற்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கையெழுத்து வேட்டை – நீங்களும் வாக்களியுங்கள்!

Go down

இன அழிப்பைத் தடுப்பதற்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கையெழுத்து வேட்டை – நீங்களும் வாக்களியுங்கள்! Empty இன அழிப்பைத் தடுப்பதற்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கையெழுத்து வேட்டை – நீங்களும் வாக்களியுங்கள்!

Post by அருள் Wed Mar 27, 2013 7:22 am

இலங்கைத்தீவில் தமிழ் மக்களுக்கு எதிராக இடம்பெற்ற இனஅழிப்பு, மற்றும்
பாரிய குற்றங்கள் தொடர்பாகத் தயாரிக்கப்பட்டுள்ள அறிக்கைகளையும் அவை பற்றிய
ஆய்வுகளையும் உடனடியாகப் பகிரங்கப்படுத்துமாறு ஐ.நா செயலாளர் நாயகத்தின்
இன அழிப்பைத் தடுப்பதற்கு சிறப்பு ஆலோசகர் Adama Dieng அவர்களை வேண்டும்
பொருட்டு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கையெழுத்து வேட்டையொன்றை உடனடியாக
தொடங்கியுள்ளது.இன அழிப்பைத் தடுப்பதற்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கையெழுத்து வேட்டை – நீங்களும் வாக்களியுங்கள்! NTTE-2இன
அடிப்படையிலான பாரிய மனித உரிமை மீறல்களும், அனைத்துலக சட்ட விதிகளுக்கு
மாறான குற்றங்களும் இடம்பெறுமிடத்து அவை பற்றிய தகவல்களைச் சேகரித்து,
அத்தகைய குற்றங்கள் இன அழிப்பாக மாறாது தடுப்பதற்காக செயலாளர் நாயகத்தின்
ஊடாக ஐநாவின் பாதுகாப்புச் சபையின் கவனத்துக்கு ஒரு முன்னெச்சரிக்கை போலக்
கொண்டு வரவேண்டிய பொறுப்பு உள்ளது’ எனும் ஐ.நா. விதிகளை சுட்டிக்காட்டி
இந்த கையெழுத்து வேட்டையினை நா.தமிழீழ அரசாங்கத்தின் இனஒழிப்பு,
போர்க்குற்றங்கள் குற்றவிசாரணைக்கும் தடுப்புக்குமான விவகார அமைச்சு
முன்னெடுக்கின்றது.

எதிர்வரும் யூலை 31ம் நாள் வரை இடம்பெறவுள்ள இக்கையெழுத்து வேட்டையில் நேரடியாக ஒப்பமிட்டுக் கொள்ளக்கூடியதாக இருக்கும்.

நீங்களும் கையெழுத்து இட இங்கே அழுத்தவும்…..

அவர்களை நோக்கிய கோரிக்கையின் விபரம்:

மாண்புமிகு அதியாமா தியாங் அவர்கள்,
இன அழிப்பைத் தடுப்பதற்கான செயலாளர் நாயகத்தின் சிறப்பு ஆலோசகர்
866, ஐக்கிய நாடுகள் நிறுவன பணிமனை
நியுயோர்க் நகர், 10017 ஐக்கிய அமெரிக்கா

மதிப்புக்குரிய தியாங் அவர்களுக்கு வணக்கம்,

இலங்கைத்தீவில் தமிழ் மக்களுக்கு எதிராக இடம்பெற்ற இனஅழிப்பு, மற்றும்
பாரிய குற்றங்கள் தொடர்பாகத் தயாரிக்கப்பட்டுள்ள அறிக்கைகளையும் அவை
பற்றிய ஆய்வுகளையும் உடனடியாகப் பகிரங்கப் படுத்துமாறு தங்களைப் பணிவுடன்
வேண்டுகின்றோம்.

சிறிலங்கா நாட்டுக்கான ஐநாவின் நிபுணர் குழுவின் கணிப்பின்படி அங்கு
நடந்தேறிய இறுதி யுத்தத்தின் போது 40 000 தமிழ் பொது மக்கள் கொலை
செய்யப்பட்டுள்ளார்கள். அதேவேளை ஐநா உள்ளக மீளாய்வுக் குழுவின்
மதிப்பீட்டின்படி 70 000 பொது மக்கள் கொலை செய்யப்பட்டுள்ளார்கள். மன்னார்
மாவட்ட கத்தோலிக்க ஆண்டகை மதிப்புக்குரிய கலாநிதி இராயப்பு ஜோசேப்பு
அவர்கள் கற்றுக்கொண்ட பாடங்களுக்கும் நல்லிண க்கத்துக்குமான ஆணைக்குழு முன்
வழங்கிய தனது தகவல்களின் படி இறுதி யுத்தத்தின்போது 146 679
எண்ணிக்கையிலான தமிழ் மக்களின் கதி என்னவாயிற்று எனத் தெரியவில்லை என்று
கூறியுள்ளார்.

ஓரளவு முற்று முழுதாக சிங்கள இனத்தவர்களை மட்டும் கொண்டுள்ள அரசினாலும்
அதன் முகவர்களினாலும் (பாதுகாப்புப் படை போன்றவை) தமிழர்களின் சமூக,
அரசியல், பொருளாதார, மத உரிமைகள் தொடர்ந்தும் இன அடிப்படையிலான
தாக்குதல்கட்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றன. யுத்தம் முடிவடைந்து ஏறத்தாழ
நான்கு வருடங்களாகிய நிலையிலும் தமிழ்த் தேசத்தை அழிக்கும் முயற்சிகள்
தொடர்கின்றன. பாரம்பரிய தமிழர் பிரதேசங்களில் தமிழ் மக்களின் இனப் பரம்பலை
மாற்றும் நடவடிக்கைகள், அரசியல் உரிமைகளை அடக்கி ஒடுக்குதல்,
இராணுவமயமாக்கல், இராணுவ ஆதிக்கம் என்பனவே இன்று தமிழர் பிரதேசங்களில்
நிலவும் யதார்த்த நிலைமையாகும்.

தமிழ் இனத்தை அழித்தொழிக்க இனவாத சிங்கள் அரசினால் மேற்கொள்ளப்படும்
இத்தகைய இனவாத நடவடிக்கைகளை எமது மக்கள் நீண்ட காலமாக எதிர்கொண்டு
வருகின்றோம். இத்தகைய குற்றச் செயல்கள் இன்று எவ்வாறு பாரதூரமாகி விட்டன
என்பதையும், இவ்வகை ஆபத்தினுள் வாழும் எமது மக்களின் மன உறுதியையும்
தாக்குப்பிடிக்கும் வலிமையையும் நாம் சாட்சியாகவே கண்டு அவற்றினை
உலகத்தவர்க்கு எடுத்துக் காட்டியும் வருகிறோம். ஆனாலும் இவற்றின்
பாதிப்பினை உலகம் உணர்ந்து கொண்டதாகத் தெரியவில்லை. அதனாற்றான் சிறீலங்கா
அரசானது தமிழ் மக்களுக்கு எதிரான தாக்குதல்களை ‘பயங்கரவாதத்துக்கு எதிரான
போர்’ எனக் காட்டித் தப்பித்துக் கொள்ள முனைகின்றது. இதே போன்றுதான் சிரிய
நாட்டு அரசாங்கமும் தனக்கு எதிரானவர்களைப் பயங்கரவாதிகள் எனப் பெயரிட்டுத்
தப்பித்துக் கொள்கிறது.

தமிழ்த் தேசத்தின் பாதுகாப்பின் பெயரால் தங்கள் கையிலுள்ள அனைத்து
தகவல்களையும் உடனடியாக வெளியிடுமாறு மரியாதையுடன் கோருகின்றோம். தமிழ்
மக்களின் பாதுகாப்பு விடயத்தில் ‘அமைதியான இ,ராஜதந்திரம்’;
வெற்றியளிக்கவில்லை என்பதை ஐநாவின் உள்ளக மீளாய்வு அறிக்கை மூலம்
அறியக்கூடியதாக உள்ளது. ஒரு இலட்சம் மக்களின் இறப்புகளின் பின்னணியில்
பகிரங்கமான இராஜதந்திரம் ஒன்று மட்டுமே ஏற்றதென நாம் திடமாக நம்புகின்றோம்.

தங்கள் வசம் உள்ள அனைத்துத் தகவல்களையும் எதுவித தாமதமுமின்றி
வெளியிடுமாறு இத்தால் தங்களை நாம் வலியுறுத்துகின்றோம். இவ்வாறு செய்வது
தங்களின் பணிக்கென வழங்கப்படுள்ள அதிகாரங்களுக்கு உட்பட்டதாக அமையும்
எனவும் குறிப்பிட விரும்புகின்றோம். இதன் தொடர்பிலான ஐநாவின் விதியினையும்
இங்கு தருகின்றோம். ‘இன அடிப்படையிலான பாரிய மனித உரிமை மீறல்களும்,
அனைத்துலக சட்ட விதிகளுக்கு மாறான குற்றங்களும் இடம்பெறுமிடத்து அவை பற்றிய
தகவல்களைச் சேகரித்து, அத்தகைய குற்றங்கள் இன அழிப்பாக மாறாது
தடுப்பதற்காக செயலாளர் நாயகத்தின் ஊடாக ஐநாவின் பாதுகாப்புச் சபையின்
கவனத்துக்கு ஒரு முன்னெச்சரிக்கை போலக் கொண்டு வரவேண்டிய பொறுப்பு உள்ளது’

அனைத்து மக்களின் நல்வாழ்வுக்காக தாங்கள் மேற்கொள்ளும் பணிகள் சிறப்புற நிறைவேற வாழ்த்துகின்றோம். நன்றி.

இவ்வாறு கையெழுத்து வேட்டையின் கோரிக்கை விபரம் அமைந்துள்ளது.
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» ஐநாவின் அறிக்கையை முன்னிறுத்தி நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அனைத்துலகரீதியிலான கையெழுத்து வேட்டை!
» தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு என்றும் தென்சூடான் துணையிருக்கும்: நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்
» நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் உத்தியோகபூர்வமான அமைப்பாகியது!
» "யாழ். உதயன் தாக்குதல் எதிரொலி: ஐ.நா ஆணையாளரிடம் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் "
»  கறுப்பு யூலையினை நினைவேந்தி தபால் அட்டை பிரச்சாரம்: - நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum