TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon May 27, 2024 8:13 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu May 23, 2024 4:07 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 21, 2024 2:55 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 12:02 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


முதலமைச்சருக்கு, வைகோ வேண்டுகோள்

Go down

முதலமைச்சருக்கு, வைகோ வேண்டுகோள் Empty முதலமைச்சருக்கு, வைகோ வேண்டுகோள்

Post by அருள் Mon Mar 25, 2013 7:36 am

முதலமைச்சருக்கு, வைகோ வேண்டுகோள்


முதலமைச்சருக்கு, வைகோ வேண்டுகோள் 401985_345176272270536_1427899179_n
சுதந்திரமான பன்னாட்டு விசாரணைக்கும்,
தமிழ் ஈழத்திற்கான பொது வாக்கெடுப்பிற்கும்,

தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற
முதலமைச்சருக்கு, வைகோ வேண்டுகோள்

மாவீர மகன் பாலச்சந்திரன் கண்களால் கேட்டான். ஆகாவென்று எழுந்தது பார் மாணவர் புரட்சி! என வரலாற்றின் குரல் ஒலிக்கிறது.

இலங்கைத் தீவில் இதுவரை சிங்கள இனவாத அரசு 60 ஆண்டுகளாக நடத்தியதும்,
இப்போது நடத்துவதும் திட்டமிட்ட தமிழ் இனப்படுகொலை ஆகும். கட்டமைக்கப்படும்
தமிழ் இன அழிப்பாகும்.

இலட்சக் கணக்கான ஈழத் தமிழ் மக்கள்,
பச்சிளம் குழந்தைகள், பாலகர்கள், வயதில் மூத்தோர், தாய்மார்கள் ஈவு
இரக்கமின்றி சிங்கள இராணுவத்தால் கொல்லப்பட்டனர்.

பல்லாயிரக்கணக்கான இளம் பெண்கள் கொடூரமான கற்பழிப்பிலும், பாலியல் வன்முறையிலும் நாசமாக்கப்பட்டு அவர்களில் பலரும் கொல்லப்பட்டனர்.

முள்ளிவாய்க்கால் பேரழிவுக்குப் பின்னரும், இக்கொடுமைகள் இன்றளவும்
தொடருகின்றன என்பதை அசைக்க முடியாத ஆதாரங்களுடன், சாட்சியங்களுடன்
அனைத்துலக மனித உரிமைகள் கண்காணிப்பகம் பிப்ரவரி 26 ஆம் தேதி அறிக்கை மூலம்
தெரிவித்துள்ளது.

இத்தகைய துன்ப நரகத்திலிருந்து ஈழத்தமிழர்கள்
விடுபட மானத்தோடும் உரிமையோடும் அமைதியாக வாழ, ஒரே ஒரு தீர்வுதான் உள்ளது,
அது தான் சுதந்திரத் தமிழ் ஈழ தேசமாகும்.
இலங்கைத் தீவில் தமிழர்கள்
பிரிவினை கேட்கவில்லை. இழந்த சுதந்திரத்தை மீண்டும் பெறுவதற்கே
போராடுகிறார்கள். ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக அந்தத் தீவின் பூர்வ
குடிமக்களான ஈழத் தமிழர்கள் சுதந்திரமான அரசுகளை ஆண்டு வந்தனர். 17 ஆம்
நூற்றாண்டில் ஐரோப்பிய வருகைக்குப் பின்னரே, குறிப்பாக பிரித்தானியப்
பேரரசின் ஆதிக்கத்திற்குப் பின்னரே தங்கள் சுதந்திரத்தை இழந்து,
சிங்களவர்களோடு கட்டாயமாக இணைக்கப்பட்டனர்.

1948 பிப்ரவரி 4
முதல் சிங்களர் ஆதிக்கத்தின் கீழே ஈழத் தமிழர்கள் உரிமைகள் இழந்தனர்.
உரிமைக்காக அவர்கள் நடத்திய அறவழிப் போராட்டங்கள் துப்பாக்கி முனையில்
நசுக்கப்பட்டன. அப்பொழுதே தொடங்கிவிட்டது இன அழிப்பு வேலை.


தமிழர் வழிபாட்டுத் தலங்கள் உடைக்கப்பட்டதும், கல்வி வேலை வாய்ப்பு
அனைத்திலும் தமிழர்கள் நிராகரிக்கப்பட்டதும், தந்தை செல்வாவுடன் செய்த
1957, 1965 ஒப்பந்தங்களை கிழித்துக் குப்பையில் வீசியதும், இக்கொடுமைகள்
தொடர்ந்ததும் தான், 1976 மே 14 இல் பன்னாகம் வட்டுக்கோட்டையில்,
இறையாண்மையுள்ள சுதந்திர தமிழ் ஈழ தேசம் என்று அனைத்துத் தமிழ் அமைப்புகளை
ஒருங்கிணைத்து தந்தை செல்வா பிரகடனம் செய்ய காரணம் ஆயிற்று.


சிங்கள அரசின் முப்படைகளின் பயங்கவாத தாக்குதலை எதிர்கொள்ளவே தமிழ் ஈழ
விடுதலைப் புலிகள், தமிழ் தேசியத் தலைவர் பிரபாரகன் அவர்கள் தலைமையில்
ஆயுதப்போரை முன்னெடுத்தனர்.

இந்திராகாந்தி அம்மையார்
காலத்திற்குப் பின்னர், காங்கிரÞ தலைமையிலான இந்திய அரசு, ஈழத் தமிழர்கள்,
விடுதலைப் புலிகள் விருப்பத்திற்கு மாறாக, அன்றைய இந்திய அரசியலில் ஏற்பட்ட
போபர்Þ பேர ஊழல் சிக்கலில் இருந்து மக்கள் கவனத்தைத் திசை திருப்ப
இந்திய-இலங்கை ஒப்பந்தத்தைத் திணித்தது. ஒப்பந்தத்தின் மை
காய்வதற்குள்ளாகவே, சிங்கள அதிபர் ஜெயவர்த்தனே வடக்கு-கிழக்கு இணைப்புக்கு
எதிர்ப்பு என அறிவித்தார்.

நீதி கேட்டு, துளி நீரும் பருகாமல்
உயிர் நீத்தான் திலிபன். புலிப்படையின் வீரமிக்க தளபதிகள் 12 பேர் சிங்கள
இராணுவத்தால் கொல்லப்பட்டனர். அதைத் தடுக்கின்ற வாய்ப்பு இருந்தும், இந்திய
அரசு துரோகம் செய்தது. அமைதிப்படை அமளிப்படை ஆயிற்று. புலிகளும்,
தமிழர்களும் கொல்லப்பட்டனர். ‘வல்வெட்டித்துறை இந்தியாவின் மைலாய்
ஆகிவிட்டது’ என்று டைம்Þ பத்திரிகை குற்றம் சாட்டியது. புலிகளின் முன்னணித்
தளபதி கிட்டு சர்வதேசக் கடலில் இந்தியக் கடற்படையால் சாகடிக்கப்பட்டார்.

1998 ஆம் ஆண்டு, அன்றைய இந்தியப் பிரதமர் வாஜ்பாய் அவர்கள், இலங்கைக்கு
ஆயுதங்கள் விற்பனை செய்வதில்லை என்று அனைத்துக்கட்சிக் கூட்டத்தில்
முடிவெடுத்தார்.
2004 காங்கிரÞ கட்சி தலைமையில் அமைந்த ஐக்கிய
முற்போக்குக் கூட்டணி அரசு, ஈழத் தமிழர்களை இனப்படுகொலையைச் செய்ய, சிங்கள
அரசுக்கு அனைத்து வகையிலும் உதவியது. கொடியவன் இராஜபக்சே அரசுக்கு முப்படை
ஆயுதங்களையும் வழங்கி, இந்தியத் தளபதிகளை அனுப்பி ஆலோசனை தந்து, தமிழ்க்
குலத்தை அழிக்க முனைந்த கோரமான யுத்தத்திற்கு உடந்தையாக செயல்பட்டது.

தமிழகம் கொந்தளித்தது. வீரத்தியாகி முத்துக்குமார் உள்ளிட்ட 16 தமிழர்கள்
அக்காலகட்டத்தில் தீக்குளித்து உயிர்த் தியாகம் செய்தனர். இயல்பாக எழுந்த
தமிழகத்தின் கொந்தளிப்பை தடுக்க, அன்றைய தி.மு.க. அரசு அடக்குமுறையை
ஏவியது. தீக்குளிப்பு தியாக மரணங்களை காவல்துறையின் மூலம்
கொச்சைப்படுத்தியது.

போர் நிறுத்தம் என்ற கோரிக்கைக்கு மாறாக,
யுத்தத்தை வேகமாக சிங்கள அரசு நடத்துவதற்கு இந்திய அரசு அனைத்து வழிகளிலும்
உதவி இயக்கியது. இலட்சக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர்.

2009
ஆம் ஆண்டு மே இறுதியில் ஜெனீவாவில், ஐ.நா.மனித உரிமை கவுன்சிலில் சிங்கள
அரசை வெகுவாகப் பாராட்டி, 29 நாடுகளின் வாக்குகளைப் பெற வைத்து தீர்மானத்தை
நிறைவேற்றிய துரோகத்தை இந்திய அரசு செய்தது. கடந்த ஆண்டும் அதே
துரோகத்தைச் செய்ய முனைந்தபோது, தமிழக முதல்வரும் அனைத்துக் கட்சிகளும்
அதனை வெகுண்டு எதிர்த்ததால், வெளிப்படையாக துரோகம் செய்ய முடியாமல்,
அமெரிக்காவின் கவைக்கு உதவாத தீர்மானத்தையும் நீர்த்துக்போகச் செய்தது.

இந்த ஆண்டும் தமிழக மாணவர்கள் எரிமலையாக சீறி எழுந்த பின்னரும், தமிழக
முதலமைச்சர் அவர்கள் மார்ச் 19 ஆம் தேதி சரியான வரலாற்று ஆதாரங்களோடு
திட்டவட்டமான கோரிக்கையை மத்திய அரசுக்கு முன்வைத்த பின்னரும்கூட,
அமெரிக்கத் தீர்மானத்தில் ஒப்புக்கு இடம்பெற்று இருந்த சுதந்திரமான
பன்னாட்டு விசாரணை கோரிக்கையையும் நீக்கச் செய்தது.

தமிழக
மாணவர்களின் அறவழிப் புரட்சி அனைத்துத் தரப்பு மக்களின் அறப்போராக தற்போது
உருவெடுத்துள்ளது. ஈழத் தமிழர்களுக்கு விடியல் வேண்டும் என்ற குரல் எட்டுத்
திக்கிலும் பலமாக ஒலிக்கிறது.

2011 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 8
தேதி, தமிழக சட்டப் பேரவையில் சிங்கள அரசுக்கு எதிராகவும், ஈழத்
தமிழர்களுக்கு ஆதரவாகவும் ஒரு மகத்தான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இன்றைய நிலையில், உலகமெங்கும் வாழும் தமிழர்களும் மரண பூமியில் வதைப்பட்டுக்கொண்டிருக்கும்
ஈழத் தமிழர்களும், தாய்த் தமிழகத்து மக்களும், குறிப்பாக மாணவர் உலகமும்
வேண்டுவதெல்லாம் சுதந்திரத் தமிழ் ஈழத்திற்கான பொதுவாக்கெடுப்பும்,
இனப்படுகொலை நடத்திய சிங்கள அரசு மீது சுதந்திரமான பன்னாட்டு விசாரணையும்
தான்.

கரிய இரவுக்குப் பிறகு பொழுது விடிவது இயற்கையின் நியதி
என்பது போல், ஈழத் தமிழர்கள் சுமக்கின்ற கொடும் துயரத்திற்குப் பின்னர்,
தமிழ் ஈழ தேச விடுதலை என்பது வரலாற்றில் நிகழ்ந்தே தீரும். அதனை விரைவு
படுத்துவதும், அதற்குத் தோள் கொடுப்பதும் தொப்புள் கொடி உறவு தமிழர்கள்
வாழும் தமிழ்நாட்டின் தலையாய கடமையாகும்.

எனவே, தமிழக
முதலமைச்சர் அவர்கள் இதற்கான ஒரு தீர்மானத்தை சட்டமன்றத்தில் கொண்டுவந்து
சரித்திரத்தில் அழியாத புகழ் தரும் கல்வெட்டாக ஆக்கித்தர வேண்டுகிறேன்.

இலங்கைத் தீவின் தமிழர் தாயகத்தில் அக்கிரமமாக கடந்த 60 ஆண்டுகளில்
திணிக்கப்பட்ட சிங்களக் குடியேற்றங்கள் அனைத்தும் வெளியேற்றப்படவும்,
தமிழர்களை துன்புறுத்தி வதைக்கும் சிங்கள ஆக்கிரமிப்பு இராணுவமும்,
போலிசும் வெளியேற்றப்படவும், தமிழர் வழிபாட்டுத் தலங்களின் அருகே
அமைக்கப்பட்டுள்ள பௌத்த விகாரைகள் அகற்றப்படவும், சிங்களச் சிறைகளிலும்,
வதை முகாம்களிலும் விசாரணையின்றி அடைபட்டுக் கிடக்கும் விடுதலைப் புலிகள்
உள்ளிட்ட அனைத்து ஈழத் தமிழர்களையும் விடுவிக்கவும், வீடு வாசல் இழந்து
உணவுக்கும், மருந்துக்கும் வழியின்றி துயர்படும் ஈழத் தமிழர்களுக்கு
செஞ்சிலுவைச் சங்கம் உள்ளிட்ட பன்னாட்டுத் தொண்டு நிறுவனங்களும்,
ஐ.நா.மன்றமும் நேரிடையாக நிவாரணம் வழங்கவும், இனப்படுகொலை செய்த சிங்கள
இராஜபக்சே அரசு மீது சுதந்திரமான பன்னாட்டு விசாரணை நடைபெறச் செய்யவும்,
போராடி விடுதலை பெற்ற பல நாடுகளில் அமைக்கப்பட்டது போன்ற ஒரு இடைக்கால
நிர்வாகத்தை ஈழத்தமிழர்களைக் கொண்டே செயல்படுத்துவதற்கான ஏற்பாட்டை
ஐ.நா.மன்றம் மேற்கொள்ளவும், ஐ.நா. சபையின் மனித உரிமை பிரகடனம் அங்கீகரித்த
சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில், ஈழத் தமிழர் தாயகத்தில் உலக நாடுகள்
மேற்பார்வையில் இறையாண்மையுள்ள சுதந்திர ஈழத்திற்கான பொதுவாக்கெடுப்பு
நடைபெறச் செய்யவும், உலகத்தின் பல நாடுகளில் வசிக்கின்ற புலம்பெயர் ஈழத்
தமிழர்கள் அத்தகைய பொதுவாக்கெடுப்பில், அந்தந்த நாடுகளிலேயே தங்களது வாக்கை
பதிவு செய்யவும் ஐ.நா. மன்றம் அதற்கான உரிய ஏற்பாட்டை செய்யவும்
வலியுறுத்தி தமிழக சட்டப் பேரவையில் ஒரு தீர்மானத்தை முதலமைச்சர் அவர்கள்
கொண்டுவந்து நிறைவேற்ற வேண்டுமென அன்புடன் வேண்டுகிறேன்.


வரலாற்றின் பக்கங்களில் வட்டுக்கோட்டை தீர்மானத்தின் தொடர்ச்சியாக
வடிக்கப்படும் புதிய பரிமாணமாக அத்தீர்மானம் சரித்திரத் திருப்பமாக அமையும்
என்பதால், ஈழத்தமிழர் பிரச்சினையில் 2011 ஆட்சிக்கு வந்தது முதல்
இலங்கைக்குப் பொருளாதாரத் தடை உள்ளிட்ட சரியான நிலைப்பாட்டை மேற்கொண்டுள்ள
தமிழக முதல்வர் அவர்கள், துன்ப இருளிலே இருந்து ஈழத்தமிழர்களை மீட்டு
அவர்களுக்கு விடியலைத் தரும் தீர்மானத்தை சட்டமன்றத்தில் நிறைவேற்றிட
வேண்டுகிறேன்.

‘தாயகம்’ வைகோ
சென்னை - 8 பொதுச்செயலாளர்
23.03.2013 மறுமலர்ச்சி தி.மு.க.
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» கொழும்பு செல்ல வேண்டாம்: வைகோ வேண்டுகோள்
» தாயகத்தை இயக்குவதற்கு பண உதவி செய்யுங்கள்!: வைகோ வேண்டுகோள்!
» தேர்தல் பற்றி மதிமுகவினர் கருத்துக் கூற வேண்டாம்: வைகோ வேண்டுகோள்
»  """ தமிழக மக்களுக்கு வடசென்னை நினைவேந்தல் கூட்டத்தில் "வைகோ' வேண்டுகோள் """
» முதலமைச்சருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்க சிறிலங்கா அதிபருக்கு அழைப்பு – கூட்டமைப்பு திடீர் முடிவு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum