TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:33 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 07, 2024 3:00 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat May 04, 2024 5:18 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


சவூதி அரேபியாவின் நல்ல நீதிக்கோர் உதாரணம்.- மகளை கொலை செய்த சவூதி அரேபியாவின் மதகுரு விடுதலை.

4 posters

Go down

சவூதி அரேபியாவின் நல்ல நீதிக்கோர் உதாரணம்.- மகளை கொலை செய்த சவூதி அரேபியாவின் மதகுரு விடுதலை. Empty சவூதி அரேபியாவின் நல்ல நீதிக்கோர் உதாரணம்.- மகளை கொலை செய்த சவூதி அரேபியாவின் மதகுரு விடுதலை.

Post by ஜனனி Mon Feb 04, 2013 9:02 pm

சவூதி அரேபியாவின் நல்ல நீதிக்கோர் உதாரணம்.- மகளை கொலை செய்த சவூதி அரேபியாவின் மதகுரு விடுதலை. Saudi1சவூதி
அரேபியாவின் பிரபலமான இஸ்லாமியப் போதகரும் மத குருவுமான சேய்க் பைஹான் அல்
கம்தி தனது ஐந்து வயது மகளைக் வல்லுறவுக்குட்படுத்தி, துன்புறுத்தி கொலை
செய்த குற்றத்துக்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
நேற்று முன்தினம் சனிக்கிழமை அவர் தான் செய்த கொலைக்கு ஈடாக குருதிப்
பணத்தை தனது மனைவிக்கு செலுத்தி விட்டு அவர் செய்த கொலைக்
குற்றத்திலிருந்து விடுதலை செய்யப்பட்டதாக சவூதியிலிருந்து கிடைத்த
செய்திகள் கூறுகின்றன.

அவரது விடுதலையைக் கண்டித்து மனித உரிமைகள் அமைப்புகள் கண்டன அறிக்கைகளை வெளியிட்டிருக்கின்றன.

சவூதி அரேபியாவின் நல்ல நீதிக்கோர் உதாரணம்.- மகளை கொலை செய்த சவூதி அரேபியாவின் மதகுரு விடுதலை. Saudi2ஐந்து
வயதுக் குழந்தை லாமியா அல் கம்தி, கடந்த டிசெம்பர் 25, 2011ஆம் வருடம்
கடுமையான காயங்களுடன் குற்றுயிராக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சென்ற
வருடம் (2012) ஒக்டோபர் 22ஆம் திகதி காலமானார்.

லாமியா அல் கம்தியின் தந்தையும் சவூதி அரேபியாவின் பிரபலமான
தொலைக்காட்சி இஸ்லாமியப் போதகரும் மத குருவுமான செய்க் பைஹான் அல் கம்தி
லாமியா அல் கம்தியின் துன்புறுத்தல்களுக்கு காரணமானவர் என்று விசாரணைகளின்
மூலம் அறிந்தவுடன் சவூதி அராபிய அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டு சிறையில்
அடைக்கப்பட்டார்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட லாமியா அல் கம்தி – வல்லுறவுக்கு
உட்படுத்தப்பட்டிருப்பதை பரிசோதனையின் பொழுது கண்டறியப்பட்டது. அதற்குக்
காரணமானவர் அவரது தந்தை என்ற விடயமும் பரிசோதனையின் பொழுது தெரியவந்தது.
அது மட்டுமன்றி அவரது இடது கையில் எலும்பு முறிவும், கை விரல்களில்
ஒன்றிலிருந்து ஒரு நகம் கழட்டப் பட்டும், தலையில் மண்டையோடு உடைந்தும்
இருந்திருக்கிறது.

அதிகாரிகளின் விசாரணையின்போது பைஹான் அல் கம்தி தான் தனது மகளைத்
துன்புறுத்தியதை ஒப்புக் கொண்டிருக்கிறார். என்றாலும், சவூதி அரேபியாவில்
அமுலில் இருக்கின்ற நீதிமன்றம் அவரது கொலைக்கு பகரமாக குருதிப் பணத்தை
தாய்க்கு வழங்குமாறு பணித்து அவரை விடுதலை செய்துவிட்டது.

சவூதியில் அமுலில் இருக்கும் நீதியின் பிரகாரம் தனது பாதுகாப்பில்
இருக்கும் குழந்தையை அல்லது மனைவியைக் கொலை செய்யும் குற்றத்துக்கு
தண்டனையாக மரண தண்டனையை தந்தைக்கு அல்லது கணவனுக்கு தீர்ப்பாக
தீர்ப்பளிப்பதில்லை. இந்தத் தீர்ப்புக்கும் செய்கைக்கும் எதிராக “நான்
லாமியா அல் கம்தி பேசுகிறேன்” என்ற தலைப்பில் உலகில் இருக்கின்ற பல சமூக
சேவைகள் அமைப்புகள் பெண்களையும், குழந்தைகளையும் பாதுகாக்கின்ற நீதி கேட்டு
களமிறங்கியிருக்கின்றன.

இக்கொலைக்கு நட்டஈடாக சுமார் 50,000 அமெரிக்க டொலர்களை பைஹான் அல் கம்தி செலுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இது வரை ஏழை என்ற ஒரு காரணம் தானா ரிசானாவின் மரணத்திற்கு காரணம் என்று
புரியாமலே போய்விட்டது. ஆக நிறையப் பணம் இருந்தால் பணத்தை ஏற்றுக்கொள்ளக்
கூடியவர்களின் குடும்பங்களில் இருப்பவர்களை எதுவும் செய்யலாம் என்ற நீதி
தான் சவூதியின் நீதி!

அங்குள்ள அரசகுடும்பங்கள் தாங்கள் செய்யக்கூடிய குற்றங்களில் இருந்து
தப்புவதற்காக இந்த சட்டங்களை அங்கீகரிப்பது அவர்களுக்கு சரிதான், ஆனால் ஏழை
நாடுகளில் இருக்கும் பலரும் இந்தச் சட்டத்திற்கு வக்காலத்து வாங்குவது ஏன்
என்றுதான் புரியவில்லை!

நான் ஒரு மதத்தையோ அதன் சட்டத்தையோ விமர்சிக்க முற்படவில்லை ஆனால் அந்த
சட்டங்கள் மேலே குறிப்பிட்ட மத குருவை விடுதலை செய்வதற்கும் ரிசானா போன்ற
சிறுமியை மரணதண்டனைக்கு உள்ளாக்குவதற்கும் பயன்படும் போது அந்த சட்டத்தில்
எங்கோ ஒரு பெரிய குறை தெரிகிறதை சொல்கிறேன்.

நன்றி : தமிழ் மிரர்.
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

சவூதி அரேபியாவின் நல்ல நீதிக்கோர் உதாரணம்.- மகளை கொலை செய்த சவூதி அரேபியாவின் மதகுரு விடுதலை. Empty Re: சவூதி அரேபியாவின் நல்ல நீதிக்கோர் உதாரணம்.- மகளை கொலை செய்த சவூதி அரேபியாவின் மதகுரு விடுதலை.

Post by Tamil Tue Feb 05, 2013 12:13 pm

நல்ல அரசுக்கு உதாரணம் சவூதி அரேபியாவின் நல்ல நீதிக்கோர் உதாரணம்.- மகளை கொலை செய்த சவூதி அரேபியாவின் மதகுரு விடுதலை. 917304
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

சவூதி அரேபியாவின் நல்ல நீதிக்கோர் உதாரணம்.- மகளை கொலை செய்த சவூதி அரேபியாவின் மதகுரு விடுதலை. Empty Re: சவூதி அரேபியாவின் நல்ல நீதிக்கோர் உதாரணம்.- மகளை கொலை செய்த சவூதி அரேபியாவின் மதகுரு விடுதலை.

Post by logu Wed Feb 06, 2013 7:32 am

பிரபாகரன் wrote:நல்ல அரசுக்கு உதாரணம் சவூதி அரேபியாவின் நல்ல நீதிக்கோர் உதாரணம்.- மகளை கொலை செய்த சவூதி அரேபியாவின் மதகுரு விடுதலை. 917304
ஆளுக்கு ஒரு சட்டம் சவூதி அரேபியாவின் நல்ல நீதிக்கோர் உதாரணம்.- மகளை கொலை செய்த சவூதி அரேபியாவின் மதகுரு விடுதலை. 526513
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

சவூதி அரேபியாவின் நல்ல நீதிக்கோர் உதாரணம்.- மகளை கொலை செய்த சவூதி அரேபியாவின் மதகுரு விடுதலை. Empty Re: சவூதி அரேபியாவின் நல்ல நீதிக்கோர் உதாரணம்.- மகளை கொலை செய்த சவூதி அரேபியாவின் மதகுரு விடுதலை.

Post by logu Wed Feb 06, 2013 7:35 am

எங்கே நவாஸ் ....சிறிய விடையத்திற்கு எல்லாம் பெரிய கட்டுரை எழுதும் நீங்கள் இதற்கு என்ன பதில்? சொல்லமுடியுமா? சவூதி அரேபியாவின் நல்ல நீதிக்கோர் உதாரணம்.- மகளை கொலை செய்த சவூதி அரேபியாவின் மதகுரு விடுதலை. 917304
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

சவூதி அரேபியாவின் நல்ல நீதிக்கோர் உதாரணம்.- மகளை கொலை செய்த சவூதி அரேபியாவின் மதகுரு விடுதலை. Empty Re: சவூதி அரேபியாவின் நல்ல நீதிக்கோர் உதாரணம்.- மகளை கொலை செய்த சவூதி அரேபியாவின் மதகுரு விடுதலை.

Post by navas Thu Feb 07, 2013 2:08 am

logu wrote:எங்கே நவாஸ் ....சிறிய விடையத்திற்கு எல்லாம் பெரிய கட்டுரை எழுதும் நீங்கள் இதற்கு என்ன பதில்? சொல்லமுடியுமா? சவூதி அரேபியாவின் நல்ல நீதிக்கோர் உதாரணம்.- மகளை கொலை செய்த சவூதி அரேபியாவின் மதகுரு விடுதலை. 917304
சவூதியில் தனது மகளை கொலை செய்த தந்தை மத போதகர் இல்லை இது ஊடகங்களின் வழக்காமான சதி ... இதோ உண்மை கதை!....
--------------------------------------------------------------------
சவூதி அரேபியாவைச் சேர்ந்த பைஹான் அல் காம்தி என்பவர் தனது மகளை கொலை செய்த விவகாரம் ஊடகங்களில் பெரும் சர்ச்சைகளை கிளப்பிவிட்டுள்ளது. அவர் மதப் போதகர் என்பதும், தனது ஐந்து வயதேயான மகளை மிக மோசமான முறையில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி கொலை செய்தும் அவருக்கு உரிய தண்டனை வழங்கப் படாமல் விடுதளையாகியுள்ளமையே சர்ச்சைக்கான காரணம்.

இவர் தனது குழந்தையான லமா அல் காமிதியை மிகவும் கொடூரமாக தண்டித்ததை ஏற்றுக் கொண்டுள்ளார். இதற்கு காரணம் அக்குழந்தை மீது இவருக்கு ஏற்பட்ட சந்தேகமே. அதற்காக அவர் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டதாகவும் அவரின் தாய் தெரிவித்துள்ளார்.

இவரின் கொடூர தண்டனைகளே குழந்தை லாமாவின் மரணத்துக்கு காரணம் என்பதை வைத்திய அறிக்கயை வைத்து நீதி மன்றம் உறுதி செய்தது.

தந்தை பிள்ளையை கொலை செய்தால் அதற்காக அவருக்கு மரண தண்டனை விதிக்கப் படமாட்டாது என்பது இஸ்லாமிய சட்டம். அதற்காகவே குருதிப் பணத்தை விதித்து தீர்ப்பு வழங்கப் பட்டுள்ளது. எனினும் வேறு நியாயமான காரணங்கள் இருப்பின் அதற்காக மேல் முறையீட்டுக்கான உரிமை குழந்தையின் தாய்க்கு வழங்கப் பட்டுள்ளது.

அவர் தனது மகளை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி கொலை செய்தார் எனும் தகவல் மேற்கு ஊடகங்களின் மூலம் உண்மைக்கு மாற்றமான திரிபு படுத்தப்பட்ட செய்தி என்பதை அரபு ஊடகங்களின் செய்திகளைப் படிப்பவர்கள் மிக எளிதில் உணர்ந்து கொள்வர்.
அதே நேரத்தில் அவர் இஸ்லாமிய மார்க்கத்தைக் கற்றறிந்த மார்க்க அறிஞர் இல்லை. முன்னாள் அனுபவமுள்ளவர் என்ற வகையில் சிகரட், குடி மற்றும் போதை பொருட்களுக்கு அடிமையாகி உள்ளவர்களை விழிப்பூட்டும் நடவடிக்கைகளிலேயே ஈடுபட்டு வந்துள்ளார் என்பதை
அரபு மொழி ஊடகங்கள் தெளிவு படுத்துகின்றன.

குழந்தை மீதுள்ள எல்லை மீறிய அக்கறையே அவரை இக்கொடூர செயலில் தள்ளிவிட்டுள்ளது என்பது அவர் கூறும் காரணத்திலிருந்து புலப்படுகிறது. அவர் கூறுவது உண்மையாக இருந்தால் குழந்தையை கொலை செய்ய வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு இருந்திருக்க வாய்ப்பில்லை. எனினும் அவருக்கு குழந்தை மீது ஏற்பட்டுள்ள சந்தேகத்தினால் உருவான கட்டுப்படுத்த முடியாத கோபத்தினால் காட்டுமிராண்டித் தனமாக குழந்தையை தாக்கியுள்ளார்.
இது தண்டிக்கப் படவேண்டிய குற்றச் செயலே. இதற்கு காரணம் அவர் வாழ்ந்து பழக்கப் பட்டுள்ள கடந்த கால வாழ்க்கையாகும். படிப்பினைக்காக அரபு ஊடகமொன்றில் வெளியான வாழ்க்கை அவரின் வரலாற்றை இங்கே தருகிறேன்,

பைஹான் அல் காமிதியின் தந்தைக்கு இரண்டு குழந்தைகள் மூத்தவர் இவரும், இவரின் தம்பி முஹம்மத் அல் காமிதியுமாவர். இவருக்கு 1 வருடமும் மூன்று மாதங்களே ஆன நிலையில் இவரின் தாய் தந்தையருக்கு தகராறு ஏற்பட்டு இருவரும் விவாகரத்து செய்து கொள்கின்றனர். இப்படி இருக்கும் நிலையில் இவரின் தந்தை செய்த குற்றமொன்றுக்காக சிறை வைக்கப்படுகிறார். இவரின் தாயோ மறுமணம் முடித்து வேறு வாழ்க்கை வாழ ஆரம்பித்து விடுகிறார்.

இப்படியாக அநாதரவாக்கப் பட்ட இவரை இவரின் பாட்டியும், சகோதரரை வேறொரு உறவினரும் பொறுப்பேற்கின்றனர்.

சரியான பாசத்தை பெரும் வாய்ப்பு அவருக்கு அங்கே கிடைக்கவில்லை; காட்டுமிராண்டித் தனமாக நடாத்தப் படுகிறார். எதற்கெடுத்தாலும் அடி, உதை… இப்படியாக நரக வாழ்க்கையே அவர் வாழ்ந்துள்ளார்.

ஒன்பது வயதை அடைந்த காமிதி தனது தாயிடம் சேர வேண்டும் என்று எண்ணி தாயை தேடி அலைந்துள்ளார். தனது தாய் இருக்கும் இடத்தை அறிந்து கொண்டதும் அவரிடம் செல்லவே அங்கே தாயின் கணவர் இவரை ஏற்க மறுத்து விடுகிறார். இதனால் அநாதை இல்லத்தில் தஞ்சமடைய வேண்டிய நிர்பந்த நிலைக்குத் தள்ளப் படுகிறார்.
அங்கே தனது 13 ம் வயது வரை வாழ்கின்றார்.

அங்கிருந்து வெளியான பிறகு தனிமைப் படுத்தப் பட்ட நிலையில் மது, போதைக்கு அடிமையாகி இருள் சூழ்ந்த வாழ்க்கை வாழ்கிறார் பைஹான் அல் காமிதி. இப்படி இருக்கும் வேளையில் ஒரு நாள் எதிர் பாராமல் தனது சகோதரர் முஹம்மத் அல் காமிதியை சந்திக்கிறார். அவரை பொறுப்பெடுத்த உறவினர் நல்ல முறையில் பராமரித்துள்ளார்.

தனது தம்பியை சந்தித்த களிப்பில் இருந்த இவருக்கு இன்னுமொரு அதிர்ச்சி தகவல் காத்திருக்கும் என்பதை இவர் உணர்ந்திருக்கவில்லை. அதுதான் அவரின் தம்பி முஹம்மத் வீதி விபத்தில் பலியாகி விட்டார் எனும் செய்தி.

இப்படியாக காலம் கடத்தி வந்த இவர் ஒரு நாள் ரமலான் மாதத்தில் தனது காரில் இருக்கும் போது போதனைக்குரிய பாடல் ஒன்றை கேற்கிறார். இதனால் தாக்கமடைந்த இவர் தனது கடந்த கால சீரழிந்த வாழ்வை நினைத்து கைசேதப் பட்டு சீர் திருந்தி தனது வாழ்வை மாற்றிக் கொள்கிறார். எல்லா தீய பழக்கங்களையும் தூர எரிந்து விட்டு ஒரு புதிய வாழ்க்கையை தனது 26 வது வயதில் ஆரம்பிக்கிறார் பைஹான் அல் காமிதி. தான் வாழ்ந்த முற்றிலும் இருள் சூழ்ந்த வாழ்க்கை யாரும் வாழக் கூடாது என்பதற்காக வாலிபர்களுக்கு அறிவுறுத்த ஆரம்பிக்கிறார். இதனால் பிரபல்யம் அடைந்த இவரை சில உள்நாட்டு தொலைக் காட்சி நிறுவனங்களும் இவரை அழைத்து நிகழ்ச்சிகள் நடாத்தியுள்ளன.

இதுதான் இவரின் கதை! மற்றபடி ஊடகங்கள் சொல்லுவது போன்று பெரிய மதபோதகர் இல்லை.

கரடு முரடான பாதையை கடந்து வந்த இவர் மீண்டும் அதே பாதையை நோக்கியே பயணித்துள்ளார். அது தான் உண்மை!

பிள்ளைகளின் நலனில் அக்கறைக் கொள்ளாமல் விவாகரத்து செய்து கொள்ளும் தம்பதியினருக்கும், பிள்ளைகளை அளவுக்கு அதிகமாக கண்டிக்கும், தண்டிக்கும் பெற்றோருக்கும் இது பெரும் பாடமாகும். குழந்தைகளுக்கு உரிய நேரத்தில் உரிய பாசம் வழங்கப் படாத போது அவர்கள் பெரிய வயதை அடைந்து விட்ட போதும் அது தாக்கம் செலுத்த வாய்ப்புள்ளதை இதன் மூலம் உணர்ந்து கொள்ள முடியும்
navas
navas
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 291
Join date : 24/03/2010
Location : dubai and india

http://indianrailwaytimes.blogspot.com/

Back to top Go down

சவூதி அரேபியாவின் நல்ல நீதிக்கோர் உதாரணம்.- மகளை கொலை செய்த சவூதி அரேபியாவின் மதகுரு விடுதலை. Empty Re: சவூதி அரேபியாவின் நல்ல நீதிக்கோர் உதாரணம்.- மகளை கொலை செய்த சவூதி அரேபியாவின் மதகுரு விடுதலை.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum