TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 17, 2024 8:41 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 17, 2024 5:06 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Thu May 16, 2024 8:45 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun May 12, 2024 10:47 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


அமெரிக்கக் குழுவினரின் யாழ் பயணம் - புலம்பெயர்ந்த தமிழர்கள் செய்யவேண்டிய பணி என்ன?

Go down

  அமெரிக்கக் குழுவினரின் யாழ் பயணம் - புலம்பெயர்ந்த தமிழர்கள் செய்யவேண்டிய பணி என்ன? Empty அமெரிக்கக் குழுவினரின் யாழ் பயணம் - புலம்பெயர்ந்த தமிழர்கள் செய்யவேண்டிய பணி என்ன?

Post by மாலதி Wed Jan 30, 2013 7:42 am



முப்பது வருடங்களாக தமிழர் தாயகத்தில் இடம்பெற்ற இன அழிப்பு யுத்தம்
தமிழ் மக்களின் வாழ்க்கையைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கியிருக்கின்ற
நிலையில், இந்த மக்களை தொடர்ந்தும் இக்கட்டான சூழ்நிலைக்குள் தள்ளவே சிங்கள
அரசாங்கம் சிந்தித்து அதற்கேற்ப திட்டங்களைப் போட்டுக்கொண்டிருக்கிறது.

  அமெரிக்கக் குழுவினரின் யாழ் பயணம் - புலம்பெயர்ந்த தமிழர்கள் செய்யவேண்டிய பணி என்ன? IMG_0280

இந்தத் திட்டங்களிலிருந்து தமிழ் மக்களை மீட்டெடுக்கவேண்டிய பாரிய
பொறுப்பு சர்வதேச நாடுகளிடமே இருக்கின்றது. தமிழ் மக்களின் பிரச்சினைகளின்
தீர்விற்கான பந்து தற்போது சர்வதேசத்திடமே இருக்கின்றது என்பதை பலரும்
ஏற்கனவே தெரிவித்து வந்த நிலையில் தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும்
இந்தக் கருத்தை அமெரிக்காவிடம் தெளிவாக வலியுறுத்தியுள்ளது.

தமிழ் மக்களுக்கு சர்வதேசமே பொறுப்புக்கூறவேண்டுமென்று அமெரிக்காவிடம்
கூட்டமைப்பு கேட்டுக்கொண்டிருக்கின்றது. அமெரிக்காவின் உயரதிகாரிகள்
குழுவொன்று கடந்த வாரம் சிறீலங்காவிற்கான பயணத்தை மேற்கொண்டிருந்தது.
அமெரிக்காவின் உதவி வெளிவிவகாரச் செயலர் ஜேம்ஸ் முர்ரே, உதவி வெளிவிவகாரச்
செயலர் ஜேன் கிம் மர்மான், பிரதி பாதுகாப்புச் செயலாளர் விக்ரம் சிங் ஆகிய
உயரதிகாரிகள் சிறீலங்காவிற்கு வருகை தந்தபோது தமிழ்த் தேசியக்
கூட்டமைப்பைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர். தமிழ்த் தேசியக்
கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர்களான சிறிதரன்
மற்றும் சுமந்திரன் ஆகியோர் அமெரிக்காவின் மேற்படி உயரதிகாரிகளுடன்
கலந்துரையாடியுள்ளனர்.

இந்தச் சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்ட விடயங்கள் அனைத்தும் தமிழ்
மக்களைப் பொறுத்த வரை முக்கியத்துவம் மிக்கவையாக உள்ளன. குறிப்பாக தமிழ்
மக்களின் எதிர்காலம் தொடர்பாகவும் மீள்கட்டுமானங்கள் தொடர்பாகவும் கடந்த
தடவை நடைபெற்ற ஐ.நா மனித உரிமைகள் அமர்வில் அமெரிக்காவால் கொண்டுவரப்பட்ட
தீர்மானத்தை சிங்கள தேசம் இதுவரை கடைப்பிடிக்காமை மற்றும் நிறைவேற்றாமை
குறித்தும் இங்கு ஆராயப்பட்டிருக்கிறது. இந்த நிலையிலேயே இலங்கைத் தீவில்
தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகளுக்கும் அவலங்களுக்கும் சர்வதேசமே
பொறுப்புக் கூற வேண்டுமென்று இங்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
தெரிவித்திருக்கிறது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்தச் சந்திப்பில் முக்கியமான விடயங்களை
வலியுறுத்தியமையை தமிழ் மக்கள் வரவேற்றிருக்கின்றனர். இந்தச் சந்திப்பின்
போது, ‘கடந்த வருடம் மார்ச் மாதம் இடம்பெற்ற மனித உரிமைகள் சபையின் கூட்டத்
தொடரில் சிறீலங்கா அரசுக்கு எதிராக அமெரிக்காவால் கொண்டுவரப்பட்டு
நிறைவேற்றப்பட்ட பிரேரணையை நடைமுறைப்படுத்துவதில் சிறீலங்கா அரசு
பின்னடிப்பதை ஆதாரங்களுடன் அமெரிக்க அதிகாரிகளுடன் சுட்டிக்காட்டியதாக
கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்தார்.

அத்துடன் தமிழர் தாயகப் பகுதிகளான வடக்கு, கிழக்கில் சிறீலங்கா அரசால்
திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்பட்டு வருகின்ற சிங்களக் குடியேற்றங்கள்,
இராணுவ விஸ்தரிப்பு, இராணுவத்தால் யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்பட்ட,
மேற்கொள்ளப்பட்டு வருகின்ற அராஜக நடவடிக்கைகள் தொடர்பிலும் விளக்கமாக
எடுத்துரைத்ததாக சுமந்திரன் கூறியிருக்கிறார். வடக்கு கிழக்கில் இடம்பெற்ற
யுத்தத்திற்கான காரணங்கள் மற்றும் அதற்கான நிவாரண நடவடிக்கைகள் தொடர்பாக
அறிக்கை தயாரிப்பதற்கென சிறீலங்கா அரசால் நியமிக்கப்பட்ட நல்லிணக்க
ஆணைக்குழுவின் பரிந்துரைகளையே சிறீலங்கா அரசு நடைமுறைப்படுத்தவில்லை.
பொறுப்புக் கூறுதலுக்கான முயற்சியை சிறீலங்கா இன்னமும் உருவாக்கவில்லை
என்றும் கூட்டமைப்பு சுட்டிக்காட்டியிருக்கிறது.

மேலும், சிறீலங்கா அரசால் கடந்த வருடம் தயாரிக்கப்பட்ட செயற்றிட்டத்தில்
சிறீலங்கா இராணுவமும் பங்குவகித்திருந்தது. ஆனால், அந்தச்
செயற்றிட்டத்துக்கு அமைவாக தங்களால் செயற்பட முடியாது என்று தற்போது
இராணுவம் தெரிவித்துள்ளமை தொடர்பிலும் அமெரிக்க குழுவுக்கு விரிவாக
கூட்டமைப்பு விளக்கமளித்திருக்கிறது.

இந்தக் கருத்துக்களைக் கேட்டறிந்த அமெரிக்கப் பிரதிநிதிகளும் தமது பதில்
கருத்துக்களைக் கூறியிருக்கின்றனர். அதாவது எதிர்வரும் மார்ச் மாதம்
ஜெனிவாவில் நடைபெறவுள்ள மனித உரிமைகள் மாநாட்டின் போது சிறீலங்காவிற்கு
எதிராகப் பிரேரணை கொண்டுவருவதற்கு தாங்கள் தயாராகி வருவதாக அமெரிக்கா
உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால், கடந்த ஆண்டு கொண்டுவந்து
நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தையே சிறீலங்கா அரசு உதாசீனம் செய்து வருவதால்,
புதிய தீர்மானத்தை எவ்வாறு கொண்டு வருவது என்பது தொடர்பில் அமெரிக்கப்
பிரதிநிதிகள் கூட்டமைப்புடன் கலந்துரையாடியுள்ளனர்.

அமெரிக்காவின் சிறீலங்காவிற்கான இந்தப் பயணம் மற்றும் கூட்டமைப்புடனான
சந்திப்பு, இங்கு பரிமாறப்பட்ட கருத்துக்கள் என்பன முற்றுமுழுதாக
இராஜதந்திரம் நிறைந்ததொரு செயற்பாடாகும். அதாவது, உலக வல்லரசு என்ற
நிலையைத் தொடர்ந்தும் தக்க வைப்பதில் அமெரிக்க அரசாங்கம், அமெரிக்க
இராணுவம் என்பதற்கு அப்பால் ஒவ்வொரு அமெரிக்க குடிமக்களும் மிக அக்கறையாக
இருக்கின்றனர். அதற்கேற்றாற் போலவே அமெரிக்காவின் நகர்வுகள் அமைந்து
வருகின்றன.

இந்த நிலையில் இலங்கைத் தீவில் மனித உரிமை மீறப்பட்ட விடயங்கள் தொடர்பாக
அமெரிக்கா உண்மையிலேயே கவனம் செலுத்தியிருந்தது. இதன் வெளிப்பாடே கடந்த
ஐ.நா மனித உரிமைகள் மாநாட்டின் போது அமெரிக்காவால் சிறீலங்காவிற்கு
எதிராகக் கொண்டுவரப்பட்ட தீர்மானம். மேற்படி தீர்மானத்தை நடைமுறைப்படுத்தாத
சிறீலங்கா அரசாங்கம் தொடர்ந்தும் தமிழ் மக்களுக்கெதிரான அடக்குமுறைகளைக்
கட்டவிழ்த்துக் கொண்டுதானிருக்கிறது.

இதற்கு அப்பால் அண்மையில் தென்னிலங்கையில் நடைபெற்ற நிகழ்வொன்றில்
உரையாற்றிய கோத்தபாய ராஜபக்ச அமெரிக்காவைக் கடுமையாகச் சாடியிருந்தார்.
இந்த நிலமைகளின் பின்னணியிலேயே அமெரிக்கா உயரதிகாரிகள் குழுவொன்று
சிறீலங்காவிற்கு வந்திருக்கிறது. இது கூட்டமைப்புடன் சந்திப்பை
ஏற்படுத்தியதன் மூலமும் கூட்டமைப்புடன் வித்தியாசமான முறையில்
கலந்துரையாடியதன் மூலமும் சிறீலங்கா அரசுக்கு கடும் அழுத்தத்தை
ஏற்படுத்தியிருக்கின்றனர்.

சிறீலங்கா அரசு இனியாவது நல்ல நோக்கத்தை வெளிக்காட்டாத பட்சத்தில்
எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள அமர்வில் மீண்டும் இறுக்கமான
தீர்மானத்தைக் கொண்டுவர அமெரிக்கா முயற்சிக்கும் என்ற செய்தியை மறைமுகமாக
அரசுக்கு வெளிப்படுத்தியிருக்கிறது. ஜனநாயகச் செயற்பாடுகளைப் பின்பற்றும்
நாடுகள் என்ற ரீதியில் இன்று எந்தவொரு நாடும் மற்றைய நாடுகளுக்கு எதிராக
வன்முறைக் கருத்துக்களை முன்வைக்காத நிலையில் இன்று உலகிலும் ஐ.நா
சபையிலும் தனது ஆதிக்கத்தைத் தக்க வைத்திருக்கின்ற அமெரிக்கா சிறீலங்கா
போன்ற நாடுகளின் விடயத்தில் தலையிட வேண்டிய பெரும் கடப்பாட்டைக்
கொண்டிருக்கின்றன.

அமெரிக்காவின் இந்த நோக்கம் நல்லபடியாக அமைய வேண்டுமாயின் உலகிலுள்ள
சிறுபான்மை மக்கள் மத்தியில் அமெரிக்கா தனது நற்பெயரைப் பாதுகாக்க
வேண்டும். இதற்காக சிறுபான்மை மக்களை அடக்கியாளும் நாடுகள் மீது அமெரிக்கா
தனது பலத்தைப் பிரயோகிக்க வேண்டும். சில நாடுகளில் தனது அரசியல் பலத்தையும்
வேறு சில நாடுகளில் தனது இராணுவ பலத்தையும் காட்டி வெற்றி பெற்ற அமெரிக்கா
சிறுபான்மை மக்கள் அடக்கியாளப்படுகின்ற இலங்கைத் தீவிலும் தனது பலத்தைப்
பிரயோகிக்க வேண்டும். ஏற்கனவே கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை
நடைமுறைப்படுத்தாத சிறீலங்கா மீது மற்றுமொரு தீர்மானம் கொண்டுவர
எத்தனிப்பதானது தமிழ் மக்களின் பிரச்சினைகளை இழுத்தடிப்பதற்கு காலம்
கடத்தும் ஒரு செயற்பாடாகவே அமையும். இதற்கு மாறாக எதிர்வரும் மார்ச் மாதம்
நடைபெறவுள்ள மாநாட்டில் அமெரிக்கா உடனடி நடவடிக்கைகள் சிலவற்றில் ஈடுபட
வேண்டும்.

எனவே, சிறீலங்காவின் விடயத்தில் அமெரிக்கா வித்தியாசமான முறையில்
செயற்பட வேண்டுமென்று சர்வதேசம் பூராகவுமுள்ள புலம்பெயர் தமிழ் மக்கள்
அமெரிக்காவிற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். எதிர்வரும் மார்ச் மாதம்
நடைபெறவுள்ள ஜெனிவா அமர்வில் எப்படிச் செயற்பட வேண்டும் என்பது தொடர்பாக
அமெரிக்காவிடம் தெளிவான நிலைப்பாடொன்று இருக்கலாம். ஆனால், புலம்பெயர்
தமிழ் மக்கள் முயற்சி செய்வது ஈழத்தமிழ் மக்களுக்கு சாதகமாக அமையலாம்.

புலம்பெயர் தமிழ் மக்கள் அந்தந்த நாடுகளிலுள்ள அமெரிக்கா
தூதரகங்களுக்கு முன்பாக அமைதியான முறையில் ஒன்றுகூடி அமெரிக்காவிற்கு
அழுத்தமொன்றைக் கொடுக்க வேண்டும். அத்துடன் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவிற்கு
இலத்திரனியல் கடிதம் (ஈ-மெயில்) மற்றும் தந்தி என்பன அனுப்புவதன் மூலமும்
இதனைச் சாதிக்க முடியும். இந்த விடயங்களில் புலம்பெயர் தமிழ் மக்கள் அக்கறை
எடுக்க வேண்டுமென்று ஈழத்தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

சிறப்புப் பார்வை - தாயகத்திலிருந்து வீரமணி
நன்றி: ஈழமுரசு
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» தமிழர்கள் நீதிக்காக யாரிடம் செல்வது? - யாழ், மன்னார் மாவட்ட ஆயர்கள் கனடா, நோர்வே தூதுவர்களிடம் கேள்வி
» நவநீதம்பிள்ளையின் பயணம் நீதியை வழங்குமா என உலகத் தமிழர்கள் எதிர்ப்பார்த்திருப்பதாக மதிமுக பொதுச் செயலர் வைகோ அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.
» யாழ் பலகலைக்கழகத்தில் நடந்தது என்ன? வீடியோ இணைப்பு
» இந்தியாவின் சோதனைசாலையா தமிழ்நாடு? தமிழர்கள் என்ன சோதனை எலிகளா?
» இந்தோனேசியாவில் இருந்து கொழும்பு சென்|ற மூன்று தமிழர்கள் கட்டு நாயக்காவில் கைது. என்ன ஆனார்கள் என தகவல் இல்லை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum