TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 17, 2024 8:41 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 17, 2024 5:06 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Thu May 16, 2024 8:45 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun May 12, 2024 10:47 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


ஸ்பெக்ட்ரம் விவகாரம்: ராசாவை பதவி நீக்கம் செய்ய ஜெயலலிதா வலியுறுத்தல்

Go down

ஸ்பெக்ட்ரம் விவகாரம்: ராசாவை பதவி நீக்கம் செய்ய ஜெயலலிதா வலியுறுத்தல் Empty ஸ்பெக்ட்ரம் விவகாரம்: ராசாவை பதவி நீக்கம் செய்ய ஜெயலலிதா வலியுறுத்தல்

Post by logu Sat Mar 20, 2010 9:15 pm


ஸ்பெக்ட்ரம் விவகாரம்: ராசாவை பதவி நீக்கம் செய்ய ஜெயலலிதா வலியுறுத்தல் Araja





சென்னை,
மார்ச் 20- ஸ்பெக்ட்ரம் ஊழலில் பங்கு இருப்பதால் மத்திய அமைச்சர்
பதவியிலிருந்து ஆர.ராசாவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று அதிமுக
பொதுச்செயலர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை உரிமங்கள் ஒதுக்கீட்டிற்கான விண்ணப்பங்கள்
தாக்கல் செய்ய கடைசி நாள் 1.10.2007 என தெரிவித்து ஒரு பத்திரிகைச்
செய்தியை 24.9.2007 அன்று இரவு தொலைதொடர்புத் துறை வெளியிட்டது.
பெரும்பாலான நிறுவனங்கள் தங்களது விண்ணப்பங்களை தாக்கல் செய்துவிட்டன.
இந்தச் சூழ்நிலையில், எவ்வித காரணமும் குறிப்பிடாமல், இரண்டாம்
அலைவரிசை ஒதுக்கீட்டிற்கான விண்ணப்பங்களை தாக்கல் செய்ய நிர்ணயிக்கப்பட்டு
இருந்த 1.10.2007 என்பதை 25.9.2007 என மாற்றி 10.1.2008 அன்று பிற்பகல்
2.45 மணிக்கு ஒரு பத்திரிகைச் செய்தியை தொலைதொடர்புத் துறை திடீரென
வெளியிட்டது! அதே நாளன்று பிற்பகல் 3.30 மணியிலிருந்து 4.30 மணிக்குள்
அலைவரிசை ஒதுக்கீட்டிற்கான கட்டணமும் செலுத்தப்பட வேண்டும் என்றும் அந்தச்
செய்திக் குறிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டது.
யார் ஒதுக்கீட்டாளர்கள் என்ற தகவல் முன்கூட்டியே விண்ணப்பதாரர்களுக்கு
தரப்பட்டாலொழிய அவர்களால் ஒரு மணி நேரத்திற்குள் 1,500 கோடி ரூபாய்க்கான
வரைவோலையை சமர்ப்பிக்க எப்படி ஏற்பாடு செய்ய முடியும் என்பது புரியாத
புதிராக உள்ளது. இந்த நடவடிக்கையின் மூலம் பகிரங்கமாக சலுகை
அளிக்கப்பட்டிருப்பதும், உள்ளுக்குள் பேரம் நடைபெற்றிருப்பதும்
தெளிவாகிறது.
இந்தச் சதித் திட்டத்தை தெரிந்து கொள்ளாததன் காரணமாக, பெரும்பாலான
விண்ணப்பதாரர்கள் தங்களுடைய வரைவோலையை குறிப்பிட்ட நேரத்திற்குள்
சமர்ப்பிக்க முடியவில்லை. விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கடைசி நாளை
பின்னுக்கு கொண்டு சென்றுவிட்டதால், 25.9.2007 க்கு பிறகு
சமர்ப்பிக்கப்பட்ட தங்கள் விண்ணப்பங்கள் தகுதியற்றவை ஆகிவிட்டன என்பதை
எஸ்டெல் போன்ற நிறுவனங்கள் பிறகு கண்டுபிடித்தன!
விண்ணப்பங்களை பெறுவதற்கான கடைசி நாளை முன்தேதியிட்டு மாற்றியமைத்த திடீர் முடிவை எதிர்த்துத்தான் எஸ்டெல் நிறுவனம்
டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கில் எஸ்டெல் நிறுவனத்திற்கு வெற்றி கிடைத்தது. இந்தத்
தீர்ப்பை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான
நீதிபதிகள் அமர்வு முன்பாக தொலைத்தொடர்புத் துறை மேல் முறையீடு செய்தது.
அங்கும் தனி நீதிபதியின் தீர்ப்பு உறுதி செய்யப்பட்டது. நீதிபதிகள் அமர்வு
முன்பாக நடைபெற்ற வழக்கில் ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஓதுக்கீட்டை முதலில்
வருபவருக்கு முதலில் கொடுப்பது என்ற கொள்கை மற்றும் விண்ணப்பிப்பதற்கான
கடைசித் தேதியை மாற்றி அமைத்தது ஆகியவை பிரதமரின் ஒப்புதலுடன்
எடுக்கப்பட்ட முடிவுகள் என தொலைத்தொடர்புத் துறை தெரிவித்தது. ஆனால்,
ஊடகங்கள் வெளியிட்டுள்ள விரிவான ஆவணங்கள், இந்த சர்ச்சைக்குரிய
முடிவுகளில் பிரதமருககு எந்தவிதப் பங்கும் இல்லை என்பதை சுட்டிக்
காட்டுகின்றன.
தொலை தொடர்புத் துறையின் வாதங்களையும், விளக்கங்களையும் டெல்லி உயர்
நீதிமன்ற தலைமை நீதிபதி நிராகரித்தவுடன், அதனை எதிர்த்து தொலை தொடர்புத்
துறை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதில்
வேடிக்கை என்னவென்றால், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் திரு. பி. சுதர்ஷன்
ரெட்டி மற்றும் திரு. எஸ்.எஸ். நிஜார் ஆகியோர் முன்பு தாக்கல் செய்யப்பட்ட
பிரமாணப் பத்திரத்தில் “அனைத்து நடவடிக்கைகளுக்கும் பிரதமர் ஒப்புதல்
அளித்துள்ளார்” என்ற வாக்கியத்தை தொலை தொடர்புத் துறை நீக்கியுள்ளது.
உச்ச நீதிமன்றத்தின் முன்பு உள்ள மேல்முறையீடு வெகு விரைவில்
நிராகரிக்கப்படும் என்பது தெளிவாகிவிட்டது. இந்தச் சூழ்நிலையில் தன்னுடைய
அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி, மூன்று வட்டங்களில் பணிகளை ஆரம்பித்த
புகார்தாரரான எஸ்டெல் நிறுவனத்திற்கு நிர்ப்பந்தம் கொடுக்க முடிவு
செய்தார் ராசா. இதனையடுத்து, “பாதுகாப்பு காரணத்தை முன்னிட்டு தங்களது
பணிகள் நிறுத்தப்படுகின்றன” என்ற அளவில் இரண்டு வரி ஆணையை அலுவலக நேரம்
முடிந்த பிறகு, கீழ் நிலையிலுள்ள தொலை தொடர்பு அதிகாரி மூலம் 6.3.2010
அன்று அனுப்பி வைத்தார் தொலை தொடர்புத் துறை அமைச்சர் ராசா.
“பாதுகாப்பு காரணம்” என்பது என்னவென்று விவரிக்கப்படவில்லை. இதற்கான முன்னறிவிப்பு ஏதும் அந்த நிறுவனத்திற்கு அளிக்கப்படவுமில்லை.
முன்னறிவிப்பு ஏதும் கொடுக்காமல், பணிகளை நிறுத்த தொலை தொடர்பு துறை
உத்தரவு பிறப்பித்தது இது தான் முதன் முறை. தங்களுடைய வியாபாரத்தை
பாதுகாத்துக் கொள்ளும் பொருட்டு, தொலை தொடர்புத் துறை அமைச்சருக்கு எதிரான
புகாரை எஸ்டெல் நிறுவனம் வேறு வழியின்றி 8.3.2010 அன்று திரும்பப்
பெற்றுக் கொண்டது.
இதன் பிறகு, சமாதான ஒப்பந்தம் ஒன்று தயாரித்து கையொப்பமிடப்பட்டது.
தொலைத் தொடர்புத் துறை சார்பில், அந்த ஒப்பந்தத்தை உச்ச நீதிமன்றத்தின்
முன்பு இந்திய தலைமை வழக்கறிஞர் தாக்கல் செய்தார். ஆனாலும், ராசாவுக்கு
நிவாரணம் அளிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.
இதன் மூலம், ஒரு லட்சம் கோடி ரூபாய் ஸ்பெக்ட்ரம் ஊழலில் ராசாவிற்கு
பங்கு இருக்கிறது என்பது எவ்வித சந்தேகமுமின்றி தெளிவாகிறது. தனக்கு
எதிரான நடவடிக்கைகளை தடை செய்ய மத்திய அமைச்சர் பதவியை ராசா தவறாக
பயன்படுத்த தயங்க மாட்டார் என்பது அவரது இடைவிடா செயல்களின் மூலம் நன்கு
தெளிவாகிறது. மத்திய புலனாய்வுத் துறை இந்த வழக்கை தற்போது விசாரித்துக்
கொண்டிருக்கிறது.
ராசா கடந்து வந்த பாதையை வைத்துப் பார்த்தால், மத்திய புலனாய்வுத் துறை
உண்மையைக் வெளிக் கொணருவதை தடுக்க தன்னால் முடிந்த அனைத்து
நடவடிக்கைகளையும் எடுப்பார் என்பது தெளிவாகிறது. நீதி நிலைநாட்டப்பட
வேண்டுமென்றால் மத்திய அமைச்சர் பதவியிலிருந்து ராசா நீக்கப்பட வேண்டும்.
தற்போது உச்ச நீதிமன்ற ஆணையும் அதற்கு ஆதரவாக உள்ளது. எனவே, ராசாவை
பதவி நீக்கம் செய்ய பாரதப் பிரதமர் மன்மோகன் சிங் மேலும் தயக்கம் காட்டக்
கூடாது. மத்திய அமைச்சர் ராசாவை பதவி நீக்கம் செய்வதன் மூலம் தான் ஊழல்
நடவடிக்கைகளை ‘துளிகூட சகித்துக் கொள்ள முடியாது’ என்ற பாரதப் பிரதமரின்
கூற்றை மக்கள் நம்புவார்கள்.
இவ்வாறு ஜெயலலிதா தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

Back to top

- Similar topics
» ராஜாவை கைது செய்ய ஜெயலலிதா வலியுறுத்தல்
» ராஜாவை கைது செய்ய ஜெயலலிதா வலியுறுத்தல்
» "ஸ்பெக்ட்ரம்' வழக்கில் கருணாநிதி, குடும்பத்தினரை சேர்க்க வேண்டும்: ஜெ., வலியுறுத்தல்
» "2ஜி' ஸ்பெக்ட்ரம் விவகாரம் : ராஜா உதவியாளருக்கு சம்மன்
» ஆதாரங்களை திருத்தியதாக ஆம் ஆத்மி மந்திரி மீது குற்றசாட்டு: பதவி விலக எதிர்கட்சிகள் வலியுறுத்தல்.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum