TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:42 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 6:34 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun May 12, 2024 10:47 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Sun May 12, 2024 10:39 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


திரைப்படம் :இனி அவன் ,இறுதி யுத்தத்தின் பின் யுத்த வடுக்கள் மாறாத இடங்கள்

Go down

திரைப்படம் :இனி அவன் ,இறுதி யுத்தத்தின் பின் யுத்த வடுக்கள் மாறாத இடங்கள் Empty திரைப்படம் :இனி அவன் ,இறுதி யுத்தத்தின் பின் யுத்த வடுக்கள் மாறாத இடங்கள்

Post by மாலதி Mon Dec 24, 2012 8:07 am

திரைப்படம் :இனி அவன் ,இறுதி யுத்தத்தின் பின் யுத்த வடுக்கள் மாறாத இடங்கள்
**திரைப்படம் :இனி அவன் ,இறுதி யுத்தத்தின் பின் யுத்த வடுக்கள் மாறாத இடங்கள் 16626_295388240582673_1245451847_n**********************************************

ஈழ யுத்தம் முடிந்து மூன்றரை ஆண்டுகள் கழிந்து விட்டன. ஆனால் யுத்த
வடுக்கள் மாறாத இடங்கள் மட்டுமல்ல மனிதர்களும் நடைப்பிணங்களாய் வாழும் நிலை
தொடரும் சூழலில் “இனி அவன்” என்ற தமிழ் பேசும் திரைப்படம்
வெளிவந்திருக்கிறது. சமுதாயம் என்ற இலங்கையில் தயாரிக்கப்பட முதல் தமிழ்த்
திரைப்படத்தைத் தொடர்ந்து எழுபதுகளில் ஈழத்துத் தமிழ் சினிமாவின்
பொற்காலம் என்று சொல்லக்கூடிய நிலை இருந்து, எடுத்த படங்களும் 1983 ஆம்
ஆண்டு இனக்கலவரத்தில் தீக்கிரையாக்கப்பட்டு, ஆங்காங்கே எஞ்சியது என்று
எண்ணிப்பார்த்தால் பத்துக்கும் குறைந்த படங்களே நம் ஈழ சினிமாவின் கதை
சொல்லும். ஈழப்போராட்ட காலத்தில் நிதர்சனம் என்ற தொலைக்காட்சியை தமிழீழ
விடுதலைப்புலிகள் ஆரம்பித்த பின்னர், அடுத்த கட்டமாக போர்க்கால வாழ்வியல்
பேசும் திரைப்படங்கள் வீடியோ கமராவில் எடுக்கப்பட்டு அகன்ற திரைகளில்
காண்பிக்கப்பட்ட வரலாறும் உண்டு. இப்போது வந்திருக்கும் “இனி அவன்” என்ற
திரைப்படம் தொழில் நுட்ப ரீதியில் முழு நீள சினிமாவுக்கான இலட்சணங்களோடு
வந்திருக்கிறது.

எந்த ஒரு தீர்வுமில்லாது இருந்ததையும் அழித்துத்
துடைத்த ஈழ யுத்தம் முடிவடைந்த பின்னர், கடந்த மூன்று ஆண்டுகளில் இந்த
யுத்தத்துக்குப் பின்னான விளைவுகளின் தரிசனமாகவே ஈழத்தின்
தமிழ்ப்பிரதேசங்கள் சாட்சியம் பகிர்கின்றன. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர்
நான் இயங்கும் வானொலி மூலம் வன்னிப்பிரதேசப் பாடசாலை மாணவருக்கான
அடிப்படைத் தேவைகள் பற்றிய உதவித்திட்டம் செய்ய முன் வந்தபோதுதாய் மட்டும்
உள்ள பிள்ளை, தந்தை மட்டும் உள்ள பிள்ளை, தாயும் தந்தையும் இல்லாத பிள்ளை,
பெற்றோர் இருந்தும் தன் அங்கங்களை இழந்த பிள்ளை என்று ஒவ்வொரு
மாணவருக்குப் பின்னால் இருந்த இழப்புக்களைப் பட்டியலிட்டிருந்தது.
ஈழப்போரில் முக்கியமாகப் பாதிக்கப்பட்ட வன்னிப்பெரு நிலப்பரப்பு மக்களைப்
பொறுத்தவரை அவர்கள் ஆண்டாண்டு காலமாக வேளாண்மை செய்து வாழ்வை
நடத்தியவர்கள். யாழ்ப்பாணம் போன்ற பகுதிகளில் இருந்து யுத்த காலத்தில்
வெளிநாடுகளுக்கு இடம்பெயர்ந்தவர்களோடு ஒப்பிடும் போது அந்த எண்ணிக்கையும்
மிக மிகக் குறைவே. எனவே யுத்தம் ஓய்ந்த பின்னர் வன்னிவாழ் மக்களது
பொருளாதாரம் குறித்த இருப்பும் பெரும் கேள்விக்குறியாகத் தொடர்கின்றது.

மேற்சொன்னவை ஒருபுறமிருக்க, ஈழப்போரில் போராளிகளாகப் பங்கெடுத்தவர்களில்,
இறந்தவர்கள் தவிர இராணுவத்திடம் சரணடைந்து இப்போது மீண்டும் பொதுவாழ்வில்
தம்மை இணைத்துக் கொள்ள விரும்பும் சகோதரர்களின் வாழ்வு இன்னொரு அவலக் கதை
பேசும். அதைத்தான் “இனி அவன்” திரைப்படத்தின் முக்கிய பாத்திரம் வழியாகச்
சொல்லப்படுகின்றது. புனர்வாழ்வு முகாமிலிருந்து வரும் அவனின் வாழ்வில்
அடுத்த பக்கங்களாக இந்தத் திரைப்படம் கொண்டு செல்லப்படுகின்றது. ஈழத்துச்
சிங்களப் படைப்பாளிகளைப் பொறுத்தவரையில் பிரசன்ன விதானகே, அசோகா கந்தகம
போன்ற விரல்விட்டு எண்ணக்கூடியவர்களே ஓரளவு தமிழர் பிரச்சனையின் நியாயங்களை
உள்வாங்கிக் கொள்ளக்கூடிய நிலையில் இப்போதும் இருக்கின்றார்கள். அவர்களின்
படைப்புக்களில் வெளிப்படும் நியாய தர்மங்கள் என்பது பொது நோக்கிலன்றி
தனியே அவர்கள் எடுத்துக் கொண்ட கதையம்சத்தோடு வைத்துப்
பார்க்கப்படவேண்டியது.

இனி அவன் படத்துக்கு முன்னரேயே அசோகா
கந்தகமவின் Me Mage Sandaiஎன்ற படத்தையும் பார்த்திருக்கின்றேன். ஈழப்போர்
நடந்து கொண்டிருந்த காலப்பகுதியில் கிட்டத்தட்ட 12 ஆண்டுகளுக்கு முன்னர்
வந்த அந்தப் படத்தில் சிங்கள இராணுவச்சிப்பாயோடு அவனின் கிராமத்துக்கு
வரும் தமிழ்ப்பெண்ணை அந்த ஊர் மக்கள் எவ்வாறு எதிர்கொள்கின்றார்கள் என்ற
ரீதியில் எடுக்கப்பட்ட படம் அது. அந்தப் படத்தோடு ஒப்பிடும் போது இனி அவன்
படத்தின் தயாரிப்பில் அசோகா கந்தகமவும் அவர் சார்ந்த குழுவும் இன்னும்
அதிகப்படியான Home work செய்திருக்கிறார்கள் என்றே சொல்லவேண்டும். மிக
முக்கியமாக, இனி அவன் திரைப்படத்துக்கான நாயகன் தர்ஷன் தர்மராஜ், அவனோடு
தொழில் செய்யக்கூடப் பயணிக்கும் ஏழைப்பெண்ணாக நிரஞ்சனி சண்முகராஜா, அவனின்
காதலியாக வரும் சுபாஷினி பாலசுப்ரமணியம் உள்ளிட்ட எல்லாப் பாத்திரங்களுமே
பொருத்தமாக அமைகின்றன. ஆனால் இந்தப் படத்தின் சூழல் யாழ்ப்பாணப் பிரதேசக்
கிராமம் ஒன்றில் இயங்கும் போது, நாயகனின் தமிழில் இந்தியத் தமிழ்
பேச்சுவழக்கின் பாதிப்பில் உச்சரிப்பு அமைவது சிறிது உறுத்தல்.


புனர்வாழ்வு முகாமிலிருந்து வெளியேறும் முன்னாள் போராளி தன் வாழ்க்கையை
இன்னொரு பக்கத்திலிருந்து தொடங்கும் போது, யாழ்ப்பாணச் சமூகம் அவனை எவ்வளவு
தூரம் ஏற்றுக்கொள்கிறது என்பதைப் படத்தின் ஆரம்பக் காட்சிகளில் இயல்பாகக்
காட்டப்படுகின்றது. சில உண்மைகள் கசப்பானவை என்றாலும் அங்கே இயங்கும்
தற்போதைய சூழலின் பரிமாணமாக அமையும் போது என்ன செய்ய முடியும்.
இயக்கத்துக்குப் போக முன்னர், சாதிப்பாகுபாடால் இன்னொருவருக்கு
வாழ்க்கைப்படும் காதலியை, போராளியாகிப் பின்னர் புனர்வாழ்வு
முகாமிலிருந்து வந்து பழைய வாழ்க்கையை வாழ முனையும் போது சந்திப்பது கதையை
அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்கின்றது. படத்தின் இன்னொரு முக்கிய
கதாபாத்திரமாக அமைகிறது, இருந்த தொழிலையும் பறிகொடுத்த கணவனையும்
பிள்ளைகளையும் காப்பாற்றவேண்டி, இவனோடு இணையும் பெண் பாத்திரம். வெளி
நாட்டில் இருந்து வந்த அரைக்காற்சட்டை இளைஞன், சில்லறைக்கடை வர்த்தகர்
உள்ளிட்ட பாத்திரங்கள் கூட நம் மத்தியில் உலாவருபவர்கள் தான்.


இந்தத் திரைப்படத்தைப் பொறுத்தவரையில் ஆரம்பத்தில் இருந்து மெல்ல மெல்ல
ஆக்கிரமிக்கும் காட்சிகளினூடு யுத்தத்தின் பின் விளைவுகளைக் காட்டிய
இயல்பான வடிவம், பின்னர் அவன் தனக்கான ஒரு வாழ்க்கையைத் தேடச் செல்வதன்
பின்னரான திரைக்கதை தடம் மாறுவது போல ஒரு பிரமை. நகைக்கடை முதலாளியின்
இன்னொரு சொரூபம் நாம் தென்னிந்திய சினிமாக்களில் அதிகம் பார்த்ததாலோ என்னவோ
அது யதார்த்தம் மீறிய சினிமாப் படம் என்ற எல்லைக்குள் செல்லும் அபாயம்
இறுதிக்காட்சிகளில் தென்படுகின்றது. படத்தின் திரைக்கதையில் நுணுக்கமான சில
விஷயங்களை, உதாரணமாக, வீட்டுக் காணியில் தங்க நகைகளைத் புதைத்து
வைத்திருப்பது, யாழ்ப்பாணத்தின் சாதீயத் திமிர், சந்தர்ப்ப
சூழ்நிலைகளுக்கேற்ப மாறும் இரட்டைத் தேசியம் பேசும் மனிதர்கள் என்று
காட்சிகளின் வாயிலாக வெளிப்படுத்திய திறமான உத்தியைப் படத்தின் முடிவை
நோக்கிய திரைக்கதையிலும் கொண்டிருக்கலாம். காட்சிகளை எடுக்கத் தகுந்த
நடிகர்கள் கிட்டியது போல, யாழ்ப்பாணப் பிரதேசத்தில் பொருத்தமான இடங்களையும்
ஒளிப்பதிவாளர் கச்சிதமாகக் கவர்ந்திருக்கிறார்.

படத்தின்
இயல்பைச் சிதைக்குமாற்போல் பாடல்களைப் புகுத்தி மசாலா ஆக்காது,
காட்சிகளுக்கு மெருகூட்டும் மென் இசையும் பெரும் பங்கு வகிக்கின்றது.
ஒவ்வொரு காட்சிகளையும் நாடகப்பாணி விழுங்கிடாது பெருமளவு காப்பாற்றுகின்றது
இயக்கமும் படத்தொகுப்பும். சிங்கள இயக்குனருக்கு நம் தமிழ்ப்பிரதேச
வாழ்வியல், சிக்கல்கள், மொழிப்பயன்பாடு போன்றவற்றை காட்சிப்படுத்தும் போது
வரக்கூடிய சவால்களைப் போக்குகின்றது வதீஸ் வருணன், தர்மலிங்கம் ஆகியோரது
உதவி இயக்கம்.

போருக்குப் பின்னான வாழ்வியலை ஒரு முன்னாள்
போராளியை முக்கிய பாத்திரமாகக் கொண்டு நகர்த்தும் போது அவன் சார்ந்த
சூழலையே முக்கியப்படுத்தப்படுகின்றது. படத்தின் திரைக்கதை அமைப்பில்
யுத்தம் ஏற்படுத்திய உளவியல் சிக்கல்களை இன்னும் விரிவாக எடுத்துக்
காட்டியிருக்கலாமோ? ஆனாலும் என்ன, அந்த முக்கிய பாத்திரம் இந்த வலியைத்
தனக்குள்ளே புழுங்கி வெளிப்படுத்துமாற்போல அமையும் காட்சிகள் பலம்
சேர்க்கின்றன.

தேசிய இனப்பிரச்சனையில் இப்படியான படைப்புக்களை
வழங்கும்போது சார்பு நிலை குறித்த சிக்கல் வரும். ஆனால் ஒவ்வொரு
மனிதருக்குப் பின்னால் இருக்கும் கதைகள் ஒத்தவை அல்லவே, அதே நேரம் தனி
ஒருவர் ஒரு முழுச்சமூகத்தைப் பிரதிபலிக்கக்கூடிய அளவுக்கு எவ்வளவு தூரம்
கதாபாத்திரமாக மாறமுடியும் என்ற சவாலைப் படைப்பாளியின் கண் கொண்டு
சிந்திக்கவேண்டும். எது சரி, எது பிழை என்பதை விட, இப்படியான கதைகளும்
நிஜங்களாக உலாவருகின்றன என்பதைத் தான் சொல்லிவைக்கின்றது இனி அவன். இதை
விடவும், இன்னும் பல பேசப்படாத அவலங்கள் உண்டு. அவை இனிவரும்
படைப்புக்களில் எடுத்துக் கொள்ளப்படவேண்டியவை. அந்தவகையில் இனி அவன் ஒரு
ஆரம்பம் என்றும் சொல்லலாம்.

யுத்த சூழல், அதன் பின்னான வாழ்வியல்,
ஆமிக்காறன், விடுதலைப்புலிகள் என்று எல்லா விஷயத்தையும் ஒரே படத்தில்
காட்ட வேண்டும் என்று எதிர்பார்க்கும் சராசரி சினிமா ரசிகனாக இல்லாமல்,
இந்தப் படம் சொல்லும் சங்கதி என்ன , நாம் எங்கே போகிறோம் என்பதைப்
பற்றியெல்லாம் படம் முடிந்த பின்னரும் கொஞ்சமாவது சிந்திக்க
வைத்திருப்பதற்காகவே கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய திரைப்படம் இது. —


திரைப்படம் :இனி அவன் ,இறுதி யுத்தத்தின் பின் யுத்த வடுக்கள் மாறாத இடங்கள் Dd10


மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» இறுதி யுத்த உயிரிழப்புக்களை கூறவேண்டாம் என கட்டாயப்படுத்தப்பட்டேன்
» இறுதி யுத்தத்தின் போது 40,000 பொதுமக்கள் கொல்லப்பட்டனர் - காலம் கடந்து
»  இறுதிக்கட்ட யுத்தத்தின் இறுதி அத்தியாயத்தில் இந்தியா போர் நிறுத்தத்துக்கு வலியுறுத்தியது
» இறுதி யுத்தத்தின் போது சிங்கள காடையர்களால் வெட்டபட்ட தமிழர் தலைகள் (Photo in)
» இறுதி யுத்தத்தின் போது இந்தியா ஆயுத ரீதியாகவும் இலங்கைக்கு ஆதரவளித்தது: மகிந்த

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum