TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:41 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 5:06 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Thu May 16, 2024 8:45 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun May 12, 2024 10:47 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


கனடா இசை நிகழ்ச்சியை நவம்பரில் நடத்த வேண்டாம் - இளையராஜாவுக்கு ஆர்கே செல்வமணி கோரிக்கை

2 posters

Go down

கனடா இசை நிகழ்ச்சியை நவம்பரில் நடத்த வேண்டாம் - இளையராஜாவுக்கு ஆர்கே செல்வமணி கோரிக்கை Empty கனடா இசை நிகழ்ச்சியை நவம்பரில் நடத்த வேண்டாம் - இளையராஜாவுக்கு ஆர்கே செல்வமணி கோரிக்கை

Post by KAPILS Sat Oct 06, 2012 9:55 pm

கனடா இசை நிகழ்ச்சியை நவம்பரில் நடத்த வேண்டாம் - இளையராஜாவுக்கு ஆர்கே செல்வமணி கோரிக்கை 06illayaraja75300
ஈழத் தமிழர்களின் தியாகத்தைப் போற்றும் நவம்பர் மாதத்தில் இசைஞானி இளையராஜா கனடாவில் இசை நிகழ்ச்சி நடத்தக் கூடாது என்று இயக்குநர் ஆர் கே செல்வமணி கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:

ஈழத்திலே தமிழர்களின் உரிமைக்காகவும், சுகந்திரத்திற்காகவும் தமிழ்பெண்ணின் மானத்தை காப்பதற்காகவும் தன்னுயிர் ஈந்த புறநானூற்றைப் புரட்டிப்போட்ட மாவீரர்களின் அளப்பரிய தியாகிகளை ஆண்டுதோறும் நினைவுக்கூரும் மாதந்தான் நவம்பர் மாதமாகும்.

பல்வேறு இயக்கங்களைச் சேர்ந்த இந்த மாவீரர்கள் கடந்த 50 வருட§களாக ஈழத்தமிழர் விடுதலைக்காகவும், நம் சந்ததியின் சுதந்திரத்திற்காகவும் தங்களின் இளமைக்கனவுகளையும், உற்றார்-பெற்றோரையும் மறந்து தங்களையே ஆகுதியாக்கி வீர காவியமானவர்கள் ஆவார்கள்.

வாழவேண்டிய வயதிலே அன்பு மனைவியையும், ஆருயிர்க் கணவனையும், மழலைச் செல்வங்களையும் மறந்து மண்விடுதலைக்காக மரணித்திருக்கின்றார்கள். இப்படி ஆணும் பெண்ணும் சரிசமமாக வீரத்துடன் போராடி காற்றோடு காற்றாகக் கலந்துபோன மாவீரர்களைப் போற்றுகின்ற மாதந்தான் நவம்பர் மாதம்.

இந்த நவம்பர் மாதத்திலே ஈழத்தமிழர் மாத்திரமன்றி உலகத் தமிழர்கள் அத்தனைபேரும் நவம்பர் மாதத்தை தியாகமானதாகவும், வீரமானதாகவும் வணக்கத்திற்குரிய மாதமாகவும் போற்றி வருகின்றார்கள். மாண்டுபோன மாவீரர்களின் நினைவுகளை தம் இனத்திற்கும், சந்ததியினருக்கும் அவர்கள் இரத்தத்திலே ஊற்றி வருகின்றனர்.

இந்த நவம்பர் மாதத்திலே உலகத் தமிழினம் எந்தவொரு இசை விழாக்களையும், களியாட்ட விழாக்களையும் கொண்டாடி மகிழ்வதில்லை.

இம்மாதத்தில் அனைத்துக் களியாட்ட விழாக்களையும் புறக்கணித்து புனிதமான மாவீரர்களைப் போற்றுகின்ற மாதமாகப் போற்றுகின்றது.

வஞ்சகமாக...

ஆனால், இலங்கை அரசாங்கம் இந்த மாவீரர்களின் மாதத்தை மறக்கடிக்க முயல்கிறது. துரோகிகளை பயன்படுத்தி களியாட்டங்களை நடத்தி வீரநிகழ்ச்சிகளை மறக்கடிக்க முயல்கிறது. இதற்காக தமிழ்திரைப்பட துறையே கூட வஞ்சகமாக அவர்களுக்கு தெரியாமல் பயன்படுத்திக்கொள்ளத் துடிக்கிறது.

இதற்காக கருணாவைப்போல், கே.பி யைப்போல் ஈழ தமிழர்களே சில துரோகிகளை பயன்படுத்தி தமிழ்திரைப்பட துறையை விலைபேச நினைக்கிறது.

இலங்கை அரசாங்கத்தின் சூழ்ச்சி அறியாமல் நமது கலைஞர்கள் கனடா நாட்டில் டோராண்டோ மாநகரில் வருகின்ற நவம்பர் 3 ஆம் தேதி ஒரு கலைநிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ளார்கள் என்ற அதிச்ச்சியான செய்தி இப்போது தெரியவந்துள்ளது.

இளையராஜா...

தமிழ்மண்ணிசையை உலகமெங்கும் எடுத்து சென்ற இசை மாமேதை இசைஞானி இளையராஜா அவர்கள் தலைமையில், இதுவரை ஈழப்போராட்டங்களை தலைமையேற்று நடத்திய இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்கள் உட்பட இளையராஜா யுவன்சங்கர் ராஜா, கார்த்திக் ராஜா, யேசுதாஸ், ஹரிஹரன், மனோ, விஜய் யேசுதாஸ், கார்த்திக், சித்ரா, பவதாரணி, சாதனா சர்கம் போன்ற இசைகலைஞர்களும், விவேக், கோபிநாத், சினேகா, பிரசன்னா போன்ற திரைக்கலைஞர்களும் பாரதிராஜா, கௌதம் வாசுதேவ் மேனன், பார்த்திபன் போன்ற மாபெரும் இயக்குநர்களும் கலந்து கொள்ள உள்ளார்கள் என்பது மேலும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இச்செய்தியை அறிந்தவுடன் இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்களைத் தொடர்பு கொண்டபோது இந்நிகழ்ச்சியை நவம்பர் மாதம் தவிர்த்து முன்னதாக அக்டோபர் மாதத்திலோ அல்லது தள்ளி டிசம்பர் மாதத்திலோ நடத்தபட்டால் கலந்துகொள்வேன். இல்லையேனில் கலந்து கொள்ள போவதில்லை என்று உறுதியளித்துள்ளார்.

இசைஞானி இளையராஜா டோராண்டோ நகரில் உள்ளதால் அவரை தொடர்புகொள்ள இயலவில்லை. அவர் சென்னை திரும்பியபுடன் நேரடியாக சந்தித்து நவம்பர் மாதத்தில் நடத்த வேண்டாம் என்று வேண்டுகோள் விடுக்க உள்ளோம்.

மேலும் இந்நிகழ்சியில் கலந்து கொள்வதாக மேலே குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து கலைஞர்களிடமும் மிகவும் பணிவாகக் கேட்டுக்கொள்வது என்னவெனில் தயவுகூர்ந்து அறிந்தோ அறியாமலோ இத்தகைய துரோகங்களுக்குத் துணை போகவேண்டாமெனவும், இவர்களையும் இவர்களின்
செயல்களையும் புறந்தள்ளுவதன் மூலம் நாம் ஒரு மானமுள்ள, கூடவே மனிதமுள்ள கலைஞர்கள் என தொடர்ந்து நிலைநாட்டுவோம்.

ஈகர்களின் புனித மாதமாம் நவம்பர். இனப்படுகொலைகளின் கொடுமை சுமக்கும் வலிதந்த மாதமாம் மே மாதம் எனும் இவ்விரு மாதங்கள் தவிர்ந்த ஏனைய மாதங்கள் பத்திலும் எவராவது எந்தவொரு களியாட்ட விழாக்களைச் செய்வதில் எந்தவொரு ஆட்சேபனையும் இல்லையென்பதனை மிகவும் வினயமாகத் தெரிவித்துக்கொள்கின்றேhம்.

தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம், தென்னிந்திய திரைப்பட நடிகர்கள் சங்கம், தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம்,தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம், விநியோகஸ்தர்கள் சங்கங்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் சம்மேளனம் என திரைப்பட துறையின் அனைத்துப் பிரிவினரும் இதுவரை அனைத்து ஈழதமிழர்களுக்கான அனைத்து போராட்டங்களிலும் தோளோடு தோள்நின்று போராடி வந்திருக்கின்றோம்.

ஈழத்தமிழர்களுக்காக கண்ணீர் சிந்திய தமிழ் திரைப்படதுறை மாவீரர்களின் நினைவுகளை மறக்கடிக்க நினைக்கின்ற இலங்கை அரசின் இந்த சதிக்கு பலி ஆகிவிட கூடாது என்று அன்போடு வேண்டி கேட்டுக்கொள்கிறோம்.
KAPILS
KAPILS
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 4340
Join date : 11/12/2011
Location : Tamilnadu

http://kabiltech.blogspot.in/

Back to top Go down

கனடா இசை நிகழ்ச்சியை நவம்பரில் நடத்த வேண்டாம் - இளையராஜாவுக்கு ஆர்கே செல்வமணி கோரிக்கை Empty Re: கனடா இசை நிகழ்ச்சியை நவம்பரில் நடத்த வேண்டாம் - இளையராஜாவுக்கு ஆர்கே செல்வமணி கோரிக்கை

Post by ஜனனி Sun Oct 07, 2012 7:39 am

"மாவீரர் நினைவைக் குழப்பும் சதித்திட்டம் - கனடா நிகழ்வில் பங்கேற்பதில்லை என பராதிராஜா அறிவிப்பு"
கனடா இசை நிகழ்ச்சியை நவம்பரில் நடத்த வேண்டாம் - இளையராஜாவுக்கு ஆர்கே செல்வமணி கோரிக்கை 598914_288286131275306_126654842_n

மாவீரர் நாளை குழப்புவதற்காக ஏற்கனவே தமிழர்கள் சிலரை பல்வேறு
அமைப்புக்கள் ஊடாக களமிறக்கிவிட்டுள்ள சிறிலங்கா. தற்போது அந்த மாதத்தில்
பல்வேறு தமிழ்க் கலை நிகழ்ச்சிகளை நடத்தி மாவீரர் நாளை மழுங்கடிக்க
முனைந்து வருகின்றது. அவ்வகையில் இசைஞானி இளையராஜா தலைமையில் தமிழகக்
கலைஞர்களைக்கொண்டு கனடா நாட்டில் டோராண்டோ மாநகரில் வருகின்ற நவம்பர் 3ம்
திகதி ஒரு கலைநிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழர்களை
சிலரைக்கொண்டு சிறிலங்கா ஏற்பாடு செய்த இந்த நிகழ்சிக்கு தற்போது கடும்
எதிர்ப்புக் கிளம்பியுள்ளது.

இதேவேளை டோராண்டோ நிகழ்வில்
இயக்குநர் இமயம் பாரதிராஜா, யுவன்சங்கர் ராஜா, கார்த்திக் ராஜா, யேசுதாஸ்,
ஹரிஹரன், மனோ, விஜய் யேசுதாஸ், கார்த்திக், சித்ரா, பவதாரணி, சாதனா சர்கம்
போன்ற இசைகலைஞர்களும், விவேக், கோபிநாத், சினேகா, பிரசன்னா போன்ற
திரைக்கலைஞர்களும் பாரதிராஜா, கௌதம் வாசுதேவ் மேனன், பார்த்திபன் போன்ற
மாபெரும் இயக்குநர்களும் கலந்து கொள்ள உள்ளார்கள் என்பது மேலும்
பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் தற்போது
சிறிலங்காவின் இந்தச் சதித்திட்டத்தை அறிந்துகொண்ட பாரதிராஜா இந்நிகழ்வில்
கலந்துகொள்வதில்லை என்ற முடிவை எடுத்துள்ளார். இது குறித்து அவர்
கூறுகையில் நவம்பர் மாதம் தவிர்த்து முன்னதாக அக்டோபர் மாதத்திலோ அல்லது
தள்ளி டிசம்பர் மாதத்திலோ நடத்தபட்டால் கலந்துகொள்வேன். இல்லையேனில் கலந்து
கொள்ள போவதில்லை என்று உறுதியளித்துள்ளார். இசைஞானி இளையராஜா டோராண்டோ
நகரில் உள்ளதால் அவரை தொடர்புகொள்ள இயலவில்லை. அவர் சென்னை திரும்பியபுடன்
நேரடியாக சந்தித்து நவம்பர் மாதத்தில் நடத்த வேண்டாம் என்று வேண்டுகோள்
விடுக்க உள்ளோம்.

மேலும் இந்நிகழ்சியில் கலந்து கொள்வதாக மேலே
குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து கலைஞர்களிடமும் மிகவும் பணிவாகக்
கேட்டுக்கொள்வது என்னவெனில் தயவுகூர்ந்து அறிந்தோ அறியாமலோ இத்தகைய
துரோகங்களுக்குத் துணை போகவேண்டாமெனவும், இவர்களையும் இவர்களின்
செயல்களையும் புறந்தள்ளுவதன் மூலம் நாம் ஒரு மானமுள்ள கூடவே மனிதமுள்ள
கலைஞர்கள் என தொடர்ந்து நிலைநாட்டுவோம்.

ஈகர்களின் புனித மாதமாம்
நவம்பர். இனப்படுகொலைகளின் கொடுமை சுமக்கும் வலிதந்த மாதமாம் மே மாதம்
எனும் இவ்விரு மாதங்கள் தவிர்ந்த ஏனைய மாதங்கள் பத்திலும் எவராவது எந்தவொரு
களியாட்ட விழாக்களைச் செய்வதில் எந்தவொரு ஆட்சேபனையும் இல்லையென்பதனை
மிகவும் வினயமாகத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

தமிழ்நாடு திரைப்பட
இயக்குநர்கள் சங்கம், தென்னிந்திய திரைப்பட நடிகர்கள் சங்கம், தமிழ்நாடு
திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம்,தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள்
சம்மேளனம், விநியோகஸ்தர்கள் சங்கங்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள்
சம்மேளனம் என திரைப்பட துறையின் அனைத்துப் பிரிவினரும் இதுவரை அனைத்து
ஈழதமிழர்களுக்கான அனைத்து போராட்டங்களிலும் தோளோடு தோள்நின்று போராடி
வந்திருக்கின்றோம்.

ஈழத்தமிழர்களுக்காக கண்ணீர் சிந்திய தமிழ்
திரைப்படதுறை மாவீரர்களின் நினைவுகளை மறக்கடிக்க நினைக்கின்ற சிங்கள அரசின்
இந்த சதிக்கு பலி ஆகிவிட கூடாது என்று அன்போடு வேண்டி கேட்டுக்கொள்கிறோம்
என்று அவர் கூறியுள்ளார்.

இதேவேளை இந்த நிகழ்ச்சி நிரல் பற்றி
அதிகாரபூர்வமாக பத்திரிகையாளர்களிடம் அறிவிப்பதற்காக இளையராஜா கனடா
சென்றிருக்கின்றார். டோரான்டோ நகரில் பத்திரிகையாளர்களை அவர் சந்திப்பதற்கு
ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இளையராஜா நேற்று வெள்ளிக்கிழமை பகல் 11
மணிக்கு அங்கு சென்ற போது இலங்கை தமிழர்களும் சீமானின் நாம் தமிழர்
கட்சியினரும் நூற்றுக்கணக்கில் திரண்டு இளையராஜாவை எதிர்த்து போராட்டம்
நடத்தினர்.

நவம்பர் மாதம் விடுதலைப்புலிகளின் மாவீரர் தினமாக கடை பிடிக்கப்படுகிறது.
அந்த மாதம் முழுவதும் மகிழச்சியான நிகழ்ச்சிகள் எதுவும் நடத்தப்படுவது
இல்லை. எனவே இளையராஜாவின் இசை நிகழ்ச்சியை நடத்தக் கூடாது என கோசம்
போட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. விழாக் குழுவினர் இளையராஜாவை
பாதுகாப்பாக அழைத்து சென்று அறைக்குள் தங்க வைத்தனர். நீண்ட நேரம்
தமிழர்கள் அங்கு முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர் என தமிழகச் செய்திகள்
தெரிவிக்கின்றன.
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» "மாவீரர் மாதத்தில் இசை நிகழ்ச்சியைப் புறக்கணிப்போம்: ஆர். கே. செல்வமணி கோரிக்கை"
» தனி ஈழம் குறித்து வாக்கெடுப்பு நடத்த கோரிக்கை
» தேர்தலை மே மாதத்தில் நடத்த வைகோ கோரிக்கை
» பாலபாடம் நடத்த வேண்டாம்: தே.மு.தி.க., மீது முதல்வர் பாய்ச்சல்
» ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டிகளில் கறுப்பு பண புழக்கம்: விசாரணை நடத்த கோரிக்கை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum