Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 8:45 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:44 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 3:24 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun May 12, 2024 10:47 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm
தமிழக சரணாலயங்கள்
TamilYes :: இது உங்கள் பகுதி :: சுற்றுலா
Page 1 of 1
தமிழக சரணாலயங்கள்
கோடிக்கரை
தமிழ்நாட்டில் உள்ள இந்த சரணாலயம் வன விலங்குகள் சரணாலயம், பறவைகள் சரணாலயம், இரண்டுமே ஒன்றிணைந்ததாக உள்ளது.
இதன் அருகே அமைந்துள்ள விமான நிலையமான திருச்சி விமான நிலையம்
இங்கிருந்து 232 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. கோடிக்கரை ரயில்
நிலையத்திலிருந்து மேற்கே அரை கிலோ மீட்டர் தூரத்தில் இந்த சரணாலயம்
அமைந்துள்ளது.
இங்கே 17 சதுர கிலோ மீட்டர் பரப்பு தான் வன விலங்குகள் சரணாலயப்
பகுதியாக ஒதுக்கப்பட்டிருந்தாலும் இதற்கு மேற்கே 80 கிலோ மீட்டர்
தூரத்தில் உள்ள ராஜாமடம் வரை சதுப்பு நிலக் காடுகள் உள்ளன. இந்தக் காடுகள்
இரண்டு இடங்களில் உப்பங்கழிகளாக கடல் நீர் புகுந்து உப்பு ஏரியாக 30 கிலோ
மீட்டர் நீளம் 5 கிலோ மீட்டர் அகலத்துக்கு நிற்கின்றது.
இந்த உப்பு ஏரிகளில் முத்துப்பேட்டை, திருத்துறை பூண்டி மற்றும்
மேல்மருதூர் பகுதியிலிருந்து மூன்று நதிகள் சங்கமம் ஆகின்றன. ஆகவே இந்த
உப்பேரியில் நிற்கும் தண்ணீர் கடல் நீர் அளவு உப்பாக இல்லை. இந்த ஏரி அதிக
ஆழம் இல்லை. இந்த ஏரி நீரில் உள்ள மீன்கள் ஏராளம். இதோடு கடல் நீர் உயர்
அலையின் போது நிலப்பகுதியில் ஏறி வரும். பிறகு வடியும். இப்படி வடியும்
போது பள்ளப் பகுதியில் ஏறி வந்த நீர் கடலுக்குத் திரும்பிப் போகாது.
பள்ளங்களில் அப்படியே தேங்கிவிடும். இப்படித் தேங்கும் நீரில் சிக்கிக்
கொண்ட மீன்கள் கடலுக்குத் திரும்பிப் போக இயலாது தவித்து நிற்கும்.
இப்படித் தவித்து நிற்கும் மீன்கள் பறவைகளுக்கு நல்ல விருந்தாகும். ஆகவே
தங்களுக்கு எளிதாக உணவு கிடைக்கும் இந்த இடத்தை நீர்ப்பறவைகள் மிகுதியாக
விரும்பி இங்கே வந்து குவிகின்றன. மரங்களில் கூடுகள் அமைத்துக் கொண்டு
வாழுகின்றன.
ராஜஹம்சம் (ஹம்சம் - அன்னம்) மரங்களில் கூடுகட்டி வாழக் கூடியது
அல்ல. அது பகல் இரவு எந்த நேரமும் தண்ணீரில் இருக்கக் கூடியது.
தண்ணீரிலேயே தூங்கவும் கூடியது. இதன் பிரதான ஆகாரம் மீன். இதற்கு
தங்குவதற்கான நீர் வசதியும் மீனும் இங்கே கிடைப்பதால் அவையும் இங்கே தேடி
வருகின்றன. குஜராத்தில் கட்ச் பகுதியிலிருந்து அக்டோபரில் ராஜஹம்சங்கள்
இங்கு வரத் தொடங்குகின்றன. நான்கு மாதங்கள் இங்கு வசிக்கின்றன. பிறகு
ஜனவரி பிப்ரவரியில் திரும்பிப் போய் விடுகின்றன. நெடுந்தூரம் பறந்து
செல்லும் சக்தியை இழந்த நிலையில் உள்ள அன்னங்கள் மட்டும் இங்கேயே
நிரந்தரமாகத் தங்கி விடுகின்றன. வயோதிக நிலையில் இவை இருப்பதால் இங்கு அவை
முட்டையிடுவதும் இல்லை, குஞ்சு பொரிப்பதும் இல்லை. வருடம் சுமார் 40
ஆயிரம் ராஜஹம்சங்கள் இங்கே வந்து போகின்றன.
நீர் வாத்துக்களும் இந்த இடத்தை விரும்பி வருகின்றன. வருடம் சுமார்
இரண்டாயிரம் நீர் வாத்துக்கள் பருவ காலத்தில் இங்கு வந்து போகின்றன.
இங்கே உள்ள வன விலங்குச் சரணாலயத்தில் பலவித மான்கள் முக்கியமாக கருமான்கள் மற்றும் காட்டுப் பன்றிகள் அதிகமாக உள்ளன.
பருவகாலம் ஜனவரியிலிருந்து செப்டம்பர் வரை.
முண்டன்துறை
முண்டன்துறை
தமிழ்நாட்டில் உள்ள முண்டன்துறை புலிகள் சரணாலயமாகும்.
திருநெல்வேலியில் இருந்து சுமார் 56 கி.மீ தூரத்தில் முண்டன்துறை
வனவிலங்கு சரணாலயம் உள்ளது. சுமார் 567 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில்
அமைந்துள்ளது. இதன் அருகிலுள்ள ரயில் நிலையம் நெல்லை-தென்காசி ரயில்
பிரிவில் உள்ள அம்பாசமுத்திரம் ஆகும். இது 6 கிலோ மீட்டர் தொலைவில்
உள்ளது. பருவ காலம் செப்டம்பர் தொடங்கி நவம்பர் வரை ஆகும்.
குற்றாலத்துக்கு 75 கிலோ மீட்டர் தெற்கே உள்ள இந்த சரணாலயம் மேற்குத் தொடர்ச்சி மலையின் கிழக்குச் சரிவில் அமைந்துள்ளது.
இந்த சரணாலயத்தில் புலிகள் மட்டுமின்றி சித்தல் (Chital), கடம்பை
மான்கள், காட்டுப் பன்றிகள், சிங்கவால் குரங்குகள் மிகுதியாக வாழ்கின்றன.
இந்த சரணாலயப் பகுதியில் பாண தீர்த்தம் மற்றும் பாபநாசம் ஆகிய இரண்டு
நீர் வீழ்ச்சிகள் உள்ளன. தாமிரபரணி நதியும் அதன் சில உப நதிகளும் இந்த
சரணாலயப் பகுதியில் ஓடுகின்றன.
வனத்துறையிடம் அனுமதி பெற்று இங்கு மலையேற்றத்தில் (டிரெக்கிங்)
ஈடுபடலாம். காட்டுக்குள் தங்கு வதற்கு வனத்துறை விருந்தினர் மாளிகை
மற்றும் அருகில் அம்பாச முத்திரத்தில் பொதுப்பணித்துறை ஓய்வு இல்லம்
போன்றவை உண்டு.
வேடந்தாங்கல்
வேடந்தாங்கல்
தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் வேடந்தாங்கல் என்ற ஊரில்
பறவைகள் நீர் சரணாலயம் அமைந்துள்ளது. சென்னை மீனம்பாக்கம்
விமானநிலையத்திலிருந்து சுமார் 70 தென்மேற்கே உள்ளது.
செங்கற்பட்டிலிருந்து 28 கிலோமீட்டர் தென்மேற்கே இது உள்ளது. இந்தச்
சரணாலயத்தின் பரப்பு சுமார் 0.3 சதுர கிலோமீட்டர். இதன் பருவ காலம்
நவம்பரிலிருந்து பிப்ரவரி வரை ஆகும்.
1797 ஆம் ஆண்டு செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராக இருந்த இலயோனசு பிளெசு
என்பவர் வேடந்தாங்கலைப் பறவைகள் சரணாலயம் என்று ஆய்வு செய்து பத்திரம்
வெளியிட்டார்.
மதுராந்தகம் ஏரிக்கு மேற்கே மேல்மருவத்தூருக்கு வடக்கே
வந்தவாசிக்குக் கிழக்கே இது உள்ளது. சுமார் 50 ஏக்கர் பரப்புள்ள ஏரியில்
அடம்பு மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளன. இந்த மரங்கள் உயர்ந்து
வளரக்கூடியவை அல்ல. படர்ந்து வளரக்கூடியவை. இதனால் இந்த மரங்கள் அந்த
ஏரியில் படர்ந்து ஏரி நீருக்கு மேல் ஒரு மேடை அமைந்தது போல் உள்ளன.
மழைக்காலத்தில் இந்த ஏரி நீர் நிரம்பி அடிமரங்கள் நீரில் மூழ்கிய
நிலையிலிருக்கும். மேல் உள்ள கிளைகள் நீர்மட்டத்துக்கு மேல் மேடை போல்
சிறிது உயர்ந்திருக்கும். இதனால் கிளைப்பகுதி குளுகுளுவென்று இருக்கும்.
நீர்ல் வாழும் மீன்களைச் சாப்பிட்டு வாழும் நீர்ப்பறவைகள் இந்த இடத்தை
விரும்பு வருவதற்கு இது முக்கிய காரணமாகும். செப்டம்பர் - அக்டோபரில்
பெய்யும் வடகிழக்குப் பருவக்காற்று மழை காரணமாக வேடந்தாங்கல் மற்றும்
அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள நீர் நிலைகள் நிரம்பி அவற்றில் மீன்கள்
தாராளமாக கிடைக்கும்.
ஆண்டுதோறும் உலகின் பல பகுதிகளில் இருந்தும் பறவைகள்
இனப்பெருக்கத்திற்காக இங்கு வருகின்றன. கனடா, சைபீரியா, பங்களாதேசம்,
பர்மா, ஆசுத்திரேலியா முதலிய நாடுகளில் இருந்து பறவைகள் வருகின்றன.
அக்டோபர் முதல் மார்ச் வரையிலான பருவத்தில் ஆயிரக்கணக்கான பறவைகள் இங்கு
தங்கி முட்டையிட்டுக் குஞ்சு பொறிக்கும்.
இங்கு வரும் பறவைகளில் நாரைகள், கூழைக்கடா, நீர்க்கோழி போன்றவை குறிப்பிடத்தக்கவை.
வேடந்தாங்கல் வரும் சுற்றுலா பயணிகள் இப்பறவைகளை கண்டுகளிக்க
'ஆப்சர்வேடரி டவர்ஸ்' (Observatory Towers) என்ற கோபுரங்கள் இந்த ஏரியை
ஒட்டி அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் ஏறி அமர்ந்தபடி பறவைகளைக் கண்டு
மகிழலாம். ஏரியின் கரைவழியாக உலாவச் செல்லுவதன் மூலமும் கண்டுகளிக்கலாம்.
இங்கு தங்குவதற்கு பாரஸ்ட் ரெஸ்ட் ஹவுஸ் ஒன்று உள்ளது. பொதுப்பணித்துறை தங்கும் விடுதி கருங்குழி என்ற இடத்தில் உள்ளது.
மேலும் தகவலுக்கு:
வனவிலங்கு பாதுகாவலர்,
டி.எம்.எஸ். வளாகம்,
எண், 256, அண்ணா சாலை,
தேனாம்பேட்டை,
சென்னை - 600 006.
Similar topics
» தமிழக நினைவிடங்கள்
» தமிழ்நாட்டில் உள்ள பறவைகள் சரணாலயங்கள் (புகலிடங்கள்)In Tamil Nadu, the birds sanctuaries
» தமிழக உரிமைகளை பாதுகாக்க மத்திய அரசுடன் போராடும் முதல்வருக்கு கட்சிகளுக்கு அப்பாற்பட்டு தமிழக மக்கள் துணையாக நிற்க வேண்டியது கடமை-பழ. நெடுமாறன்
» தமிழக அரசு மனு!கர்நாடகா 10 டிஎம்சி நீர் தரக்கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல்.
» தமிழக பல்கலைக்கழகங்கள்
» தமிழ்நாட்டில் உள்ள பறவைகள் சரணாலயங்கள் (புகலிடங்கள்)In Tamil Nadu, the birds sanctuaries
» தமிழக உரிமைகளை பாதுகாக்க மத்திய அரசுடன் போராடும் முதல்வருக்கு கட்சிகளுக்கு அப்பாற்பட்டு தமிழக மக்கள் துணையாக நிற்க வேண்டியது கடமை-பழ. நெடுமாறன்
» தமிழக அரசு மனு!கர்நாடகா 10 டிஎம்சி நீர் தரக்கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல்.
» தமிழக பல்கலைக்கழகங்கள்
TamilYes :: இது உங்கள் பகுதி :: சுற்றுலா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|