TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 17, 2024 8:41 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 17, 2024 5:06 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Thu May 16, 2024 8:45 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun May 12, 2024 10:47 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


இலங்கையை ஐ . நா. மற்றும் இந்தியா கண்காணிக்க வேண்டும்: டெசோ வலியுறுத்தல்!

Go down

இலங்கையை ஐ . நா. மற்றும் இந்தியா கண்காணிக்க வேண்டும்: டெசோ வலியுறுத்தல்! Empty இலங்கையை ஐ . நா. மற்றும் இந்தியா கண்காணிக்க வேண்டும்: டெசோ வலியுறுத்தல்!

Post by மாலதி Mon Aug 13, 2012 12:31 pm

உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து சென்னை ராயப்பேட்டை
ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் திமுக தலைவர் மு.கருணாநிதி தலைமையில் ஈழத்
தமிழர் வாழ்வுரிமை பாதுகாப்பு டெசோ மாநாடு ஞாயிற்றுக்கிழமை மாலை
தொடங்கியது. இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் விவரம் இதோ:-
]இலங்கையை ஐ . நா. மற்றும் இந்தியா கண்காணிக்க வேண்டும்: டெசோ வலியுறுத்தல்! %E0%AE%9F%E0%AF%86%E0%AE%9A%E0%AF%8B-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88
* இலங்கையில் நடைபெற்ற இனப் படுகொலை மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து
ஐ.நா. தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளபடி இலங்கை அரசு நடவடிக்கைகளை
உறுதியுடன் மேற்கொள்கிறதா என்பதைக் கண்காணிப்பதற்கு ஐ.நா. மனித உரிமை
ஆணையம் ஒரு மேற்பார்வைக் குழுவை நியமித்திட வேண்டும்.

*ஐ.நா. அவையின் மனித உரிமைக் குழுவின் சார்பில் சர்வதேசக் குழு ஒன்று
அமைக்கப்பட்டு, அங்கு நடைபெற்ற போர்க் குற்றங்கள் கண்டறியப்பட்டு, போர்க்
குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்.

* இலங்கை அரசின் திட்டங்களில் ஒன்று சிங்கள மக்களை ஈழப் பகுதிகளில் குடியமர்த்தும் முயற்சியாகும். ஈழத் தமிழர்களின்
வழிபாட்டுத் தலங்களான இந்துக் கோயில்கள், மசூதிகள், தேவாலயங்கள்
ஆகியவற்றையும் அழித்து வருவ தோடு, மொழி அடையாளமும் சிதைக்கப்பட்டு
வருகிறது. இத்தகைய கொடுஞ் செயல்களை ஐ.நா. உடனடியாகத் தடுத்து நிறுத்த
வேண்டும்.

* இலங்கையில் உள்ள தமிழ் மக்கள் தாங்கள் விரும்பும் அரசியல் தீர்வை
தாங்களே முடிவு செய்து கொள்ளும் வகையில் அவர்களுக்கு முழுஉரிமை
வழங்குவதற்கு இந்திய அரசு ஐ.நா. மன்றத்தில் தீர்மானம் கொண்டு வரவேண்டும்.

* ஈழப் பகுதிகளில் தமிழ் மக்களின் நிலங்களும் வீடுகளும் வன்பறிப்புக்கு
உள்ளாக்கப்பட்டுள்ளன. சொந்த மண்ணிலேயே அகதிகளாக வாழும் கொடுமைக்கு முடிவு
கட்டும் முயற்சிகளை ஐ.நா. மன்றம் உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.

* இலங்கையில் ஜனநாயக ஆட்சி முறைக்குப் பதிலாக ராணுவத்தின் ஆதிக்கம்
மேலோங்கி இருக்கிறது. ராணுவம், அதன் நடவடிக்கைகளுக்காக, தமிழர் பகுதிகளில்
தமிழர்களுக்குச் சொந்தமான ஏராளமான வீடுகளை கையகப்படுத்திக் கொண்டுள்ளது.
தமிழ் இளைஞர்கள் பலர் மர்மமான முறையில் காணாமல் போயுள்ளனர். பலர்
சித்திரவதை முகாம்களில் சொல்லொணாத வேதனைக்கும், துயரத்துக்கும்
ஆளாக்கப்பட்டு வருகிறார்கள். எனவே, அங்கு ராணுவத்தைத் திரும்பப் பெறுவதை
நேரடியாகக் கண்காணிப்பதற்கு, ஐக்கிய நாடுகள் அவை ஒரு பன்னாட்டுக் குழுவை
ஏற்படுத்த வேண்டும்.

* பன்னெடுங்காலமாகத் தமிழ் மீனவர்கள் வாழ்ந்து வந்த வடக்கு, கிழக்குக்
கடலோரப் பகுதிகளில் சிங்கள மீனவர்கள் குடியமர்த்தப்பட்டு வருகின்றனர்.
இதனால், தமிழ் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதை தடுக்க
ஐ.நா. இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும்.

* இலங்கையிலிருந்து வெளியேறி, பல்வேறு நாடுகளில் அகதிகளாக அல்லலுறும்
தமிழர்கள் மற்றும் உரிய ஆவணங்கள் இல்லாமல் சொந்த நாட்டைவிட்டு
வெளியேறியதால் பிறநாடுகளில் கைதிகளாகச் சிறையில் வாடும் ஈழத் தமிழர்களை
உடனடியாக, ஐக்கிய நாடுகள் அவையின் அகதிகளுக்கான ஆணையரிடம்
ஒப்படைப்பதற்குரிய நடவடிக்கைகளை ஐ.நா. மன்றம் மேற்கொள்ள வேண்டும்.

* இந்தியாவில் அகதிகளாக வாழும் இலங்கை தமிழர்கள் நிம்மதியாக வாழ்வதற்கு
ஏதுவாக, மத்திய அரசு அனைத்து இலங்கை அகதிகளுக்கும் இந்தியக் குடியுரிமை
அல்லது நிரந்தரமாக இந்தியாவில் வாழ்பவர் என்ற நிலை வழங்க வேண்டும்.

* ஈழப் பகுதியில் வாழும் தமிழ் மக்களுக்கு அனைத்து அடிப்படை
வாழ்வுரிமைகளும், ஜனநாயக உரிமைகளும் வழங்கப்பட வேண்டும். அவர்களின்
அடிப்படை உரிமைகள் மீறப்படுவதற்கு முடிவு கட்டாத வரை இலங்கைத் தமிழர்களின்
மறுவாழ்வு என்பது வெறும் கண்துடைப்பாகவும், தொலைதூரக் கனவாகவும் இருக்கும்.
எனவே பின்வரும் செயல்பாடுகளே, ஈழத் தமிழர்களைச் சுயமரியாதையோடும்
உரிமையோடும் வாழவைக்கும் என்று இம்மாநாடு உறுதியாக நம்புகிறது.
இலங்கையை ஐ . நா. மற்றும் இந்தியா கண்காணிக்க வேண்டும்: டெசோ வலியுறுத்தல்! %E0%AE%90-%E0%AE%A8%E0%AE%BE-%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8B
(1) இலங்கைத் தமிழர்களிடம் ஐக்கிய நாடுகள் மன்றத்தின் மூலம் பொது
வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். அது தெற்காசிய மனித உரிமைகள் பிரச்னையாக
முன்னிலைப் படுத்தப்பட வேண்டும்.

(2) ஓர் ஆட்சி மொழிக்கு உரிய தகுதி தரப்படாமல், தமிழ் வலுவிழக்கச்
செய்யப்பட்டு வருகிறது. தமிழர்களின் பாரம்பரியத்தை அழிக்க அனைத்து
முனைகளிலும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

(3) ஆயிரக்கணக்கான தமிழர்கள் சிறை பிடிக்கப்பட்டு இலங்கைச் சிறைகளில்
அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனை வரும் விடுதலை செய்யப்பட வேண்டும்.

(4) பல்வேறு நாடுகளில் குடியேறி வாழும் இலங்கைத் தமிழர்கள், தங்களது
தாய்நாட்டுக்கு எவ்வித தடையுமின்றி பாதுகாப்பாக வந்து போக அனுமதிக்கப்பட
வேண்டும்.

(5) வடக்கு , கிழக்கு மாவட்டங்களில் முழுமையாகச் செயல்படக்கூடிய
பள்ளிகள் மற்றும் பல்கலைக் கழகங்கள் நிறுவுதல் மற்றும் ஆசிரியர் பணி
இடங்களை நிரப்புதல் ஆகியவை முக்கியத் தேவை களாகும்.

(6) கண்முன்னே நடந்த போரினாலும், குடும்பங்களுக்கு நேர்ந்த இழப்பாலும்
தமிழர்களுக்கு ஏற்பட்டுள்ள மனரீதியான அழுத்தங்கள் சரி செய்யப்பட வேண்டும்.
இலங்கையை ஐ . நா. மற்றும் இந்தியா கண்காணிக்க வேண்டும்: டெசோ வலியுறுத்தல்! %E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF
(7) இலங்கை ராணுவத்தினரின் தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட ஈழத் தமிழர்களின்
குடியிருப்புகள், கடைகள், வணிக வளாகங்கள், பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள்,
சாலைகள் போன்றவற்றைச் செப்பனிடவும், சீர் செய்யவும் உதவிடும் வகையில்
இந்திய அரசு, ஈழத் தமிழர் மறுவாழ்வு நிதியாக வழங்கியுள்ள ரூ.500 கோடி
மேற்காணும் பணிகளுக்காக உரிய முறையில் பயன்படுத்தப்பட வேண்டும்.
இத்தீர்வுகளை நடைமுறைப்படுத்துவதில் உலக நாடுகளுடன் இணைந்து இந்தியா தன்
முதன்மைப் பங்கினை ஆற்ற வேண்டும்.

* இலங்கை கடற்படையால் நிராயுத பாணிகளாக இருக்கும் அப்பாவித் தமிழக
மீனவர்கள் ஈவிரக்கமின்றித் தாக்கப்படுகின்றனர்; கைது செய்யப்படுகின்றனர்;
சுட்டுக் கொல்லப்படுகின்றனர்; அவர்களது மீன்பிடிப் படகுகள்
மூழ்கடிக்கப்படுகின்றன; இந்தக் கொடுமைக்கு முடிவுகட்ட, கச்சத்தீவை இந்தியா
மீண்டும் தனது ஆளுகையின் கீழ் கொண்டு வருவதோடு தனுஷ்கோடி அல்லது மண்டபம்
முகா மில் இந்தியக் கடற்படைத் தளம் ஒன்றை இந்திய அரசு நிறுவ வேண்டும்.

* இலங்கை ராணுவத்திற்கு இந்தியாவில் எந்த மாநிலத்திலும் பயிற்சி
கொடுப்பதை இந்த மாநாடு ஏற்க இயலாது என்பதோடு, இனி அப்படிப்பட்ட பயிற்சிகள்
அளிப்பதை அறவே தவிர்க்க வேண்டுமென்றும் மத்திய அரசை இந்த மாநாடு
வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

* ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமைப் பாதுகாப்புக்காகத் தாய்த் தமிழகத்தில்
நடைபெறும் இந்த மாநாட்டினைச் சட்டவிரோதமானது என்றும், இந்த மாநாட்டிலே
கலந்து கொள்வதற்காக, இலங்கையிலிருந்து செல்பவர்கள் மீது கவனம்
செலுத்தப்படும் என்றும் இலங்கை அரசின் சார்பில் மிரட்டலாக அறிவித்துள்ளனர்.
இலங்கை அரசின் இந்த ஜனநாயக எதிர்ப்புத் தன்மையை இம்மாநாடு வன்மையாகக்
கண்டிக்கிறது.

* இலங்கைத் தமிழர் பிரச்சினையில் எப்போதுமே விரோதப் போக்கினைக்
கடைப்பிடிக்கும் அ.தி.மு.க. அரசும், காவல் துறையும் இந்த மாநாட்டை
சென்னையில் நடத்துவதற்குத் தடையாக பல இடையூறுகளைச் செய்தது. காவல் துறை
மூலம் அனுமதி மறுத்து, நீதிமன்றம் சென்றே அனுமதி பெற வேண்டும் என்னும்
நிலையினை உருவாக்கிய அ.தி.மு.க. அரசின் தமிழீழ எதிர்ப்புப் போக்கினை
இம்மாநாடு வன்மையாகக் கண்டிக்கிறது. போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முன்னதாக இம்மாநாடு மாநாடு நடைபெறுவதை யொட்டி தியாகராயநகர் அக்கார்டு
ஓட்டலில் நேறுறு காலை 10 மணிக்கு ஆய்வரங்கம் நடந்த்து .அதில் கலந்து கொண்ட
தி.மு.க. தலைவர் கருணாநிதி பேசியது இதுதான்: ,

எங்களின் அழைப்பை ஏற்று, இந்த மாநாட்டில் கலந்து கொண்டுள்ள அனைவருக்கும்
நன்றி. இந்த மாநாடு தமிழகத்தில் மட்டுமின்றி, இந்தியா மற்றும் உலக
நாடுகளில் தமிழர்கள் சந்தித்து வரும் பிரச்சினைகளை விளக்க கூடிய மாநாடு.

ஈழத்தமிழர்கள் சந்தித்து வரும் பிரச்சினைகளை சர்வதேச கவனத்துக்கு கொண்டு
செல்வதற்காக இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இலங்கையில் போருக்கு
முன்பும், போருக்கு பின்பும் நடைபெற்று வரும் நிகழ்வுகளை கண்டு உலக நாடுகள்
மிகவும் கவலை அடைந்துள்ளன.
இலங்கையை ஐ . நா. மற்றும் இந்தியா கண்காணிக்க வேண்டும்: டெசோ வலியுறுத்தல்! %E0%AE%9F%E0%AF%86%E0%AE%9A%E0%AF%8B-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D
ஈழத்தமிழர்களின் பிரச்சினையானது மனிதாபிமானம், மனித உரிமைகள், சுயமரியாதை
தொடர்புடையது, ஈழத்தமிழர்கள் பிரச்சினை கால்நூற்றாண்டாக எரிந்து
கொண்டிருக்கிற ஒரு பிரச்சினை என்பதை மறக்க முடியாது.

பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் அதிகப்படியாக தாமதம் செய்வது, மேலும்
பல பாதிப்புகளை ஏற்படுத்தி விடும். தம், மொழி, கலாச்சாரம் இவற்றின்
பெயரால் அடக்கு முறைகள் நடைபெற அனு மதிக்க கூடாது. மைனாரிட்டி மக்கள்
மெஜாரிட்டி மக்களால் அடக்குமுறைக்கு ஆளாக கூடாது.

இதற்கு முன்பு, 1986-ம் ஆண்டு மே மாதம் 4-ந்தேதி, மதுரையில் `டெசோ’
சார்பில் மாநாடு நடந்தது. இதில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய், ஆந்திரா
முன்னாள் முதல்- ந்திரி என்.டி.ராமராவ், உத்தரபிரதேச முன்னாள் முதல்-
மந்திரி பகுகுணா மற்றும் முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர்.

அனைத்து தமிழ் மற்றும் போராளி குழுக்களின் பிரதி நிதிகளும் கலந்து
கொண்டனர். `டெசோ’ மாநாட்டுக்கு முன்னதாக 1985-ல் கோவை, திண்டுக்கல்,
தூத்துக்குடி, திருச்சி, சேலம் மற்றும் வேலூரில் மக்களின் ஆதரவை
திரட்டுவதற்காக பேரணி மற்றும் பொதுக் கூட்டங்கள் நடத்தப்பட்டன.

ஈழத்தமிழர் பிரச்சினையில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக உறுதியான மற்றும்
உணர்வுப்பூர்வமான ஆத ரவை தி.மு.க. அளித்து வருகிறது. தொடர்ந்து அவர்களுக்கு
எப்போதும் உறுதணையாக இருப்போம்.

இலங்கையில் 1983-ல் தமிழர்கள் அதிகளவில் படுகொலை செய்யப்பட்ட போது,
அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நானும், பேராசிரியர் அன்பழ கன்
உள்ளிட்ட தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்தோம்.
1983-ல் இலங்கை அரசின் `கறுப்பு சட்டம்’ நகல் எரிப்பு போராட்டத்தை நடத்தினோம். தொடர்ந்து கையெழுத்து இயக்கத்தை நடத்தினோம்.

தமிழ்நாட்டில் 25 ஆண்டுகளாக அகதிகளாக இருந்தும் இலங்கை தமிழர்களுக்கு
இந்திய குடி யுரிமை அளிக்க வேண்டும் என்று 26.9.2009-ல் காஞ்சீபுரம்
மாநாட்டில் வலியுறுத்தினோம்.

ஈழத்தமிழர்களுக்கு ஆதரவு அளித்ததற்காக 2 முறை தி.மு.க. ஆட்சி `டிஸ்மிஸ்’
செய்யப்பட்டது. தமிழக சட்டசபையிலும் ஈழத் தமிழர்களுக்காக நீண்ட நேரம்
உரையாற்றினேன். டந்த 2008-ல் பாரிமுனையில் இருந்து செங்கல்பட்டு வரை 60
கி.மீ. தூரம் மனித சங்கிலி போராட்டம் நடத்திட, லட்சக்கணக்கானோரை பங்கேற்க
செய்தோம்.
இலங்கையை ஐ . நா. மற்றும் இந்தியா கண்காணிக்க வேண்டும்: டெசோ வலியுறுத்தல்! %E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D
இலங்கையில் நடந்த இறுதிக்கட்ட போரின்போது ரத்தம் சிந்துவதை எதிர்த்தும்,
இந்தியா தலையிட கோரியும், அண்ணா நினைவிடத்தில் 27.4.2009 அன்று சாகும்வரை
தொடங்கினேன்.

இலங்கை அரசு மற்றும் இந்திய வெளியுறவு துறை உத்தரவாதம் அளித்து, அதன்
நகல் எனக்கு அனுப்பப் பட்டது. போர் முடிவுக்கு வந்ததாக நினைத்து
உண்ணாவிரதத்தை நான் முடித்துக் கொண்டேன்.

இந்த விஷயத்தில் இலங்கை அரசு இந்தியாவை ஏமாற்றி விட்டது. இலங்கையில்
போருக்கு முன்பும், போருக்கு பின்பும் தமிழர்கள் இரண்டாந்தார குடிமக்களாக
நடத்தப்படுகிறார்கள். அவர்களுக்கு சட்ட உரிமைகள் மறுக்கப்படுகின்றன.

ஈழத்தமிழர்கள் புரிந்த தியாகங்கள், அற்புதமானவை. அவர்கள் அனுபவித்த
சித்ரவதைகளும், அடக்கு முறைகளும் கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாதவை.

தமிழர்களின் அன்றாட வாழ்வில் திட்டமிடப்பட `சிங்களமயமாக்கல்’ எவ்வாறு
நடைபெற்று வருகின்றன என்பதையும் தமிழர்கள் மீது ஏவப்படும் சட்டமீறல்
களையும் கொடுமையான இடைïறுகளையும் இவை தெளிவுப்படுகின்றன.

தமிழர்கள், தங்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவதற்கான பாதையில்
முட்புதர்களும், புதைகுழி களும் நிறைந்துள்ளதை இவை காட்டுகின்றன.
தமிழர்களின் வசிப்பிடங்களில் அவசர நிலை அமலில் உள்ளது போன்ற நிலைமையை
இலங்கை ராணுவம் உருவாக்கி வருவது வேதனை அளிக்கத்தக்கது.

போருக்கு பிந்தைய புனரமைப்பில் இலங்கை அரசு தீவிர கவனம் செலுத்த
வேண்டும் என்று சமீபத்தில் ஜெனீவாவில் இயற்றப்பட்ட தீர்மானத்துக்கு பிறகும்
இவை மேலும் அதிகம் ஆகியுள்ளது.

போரினால் பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களுக்கு மீள் குடியமர்வு, நிவாரணம்,
புணர்வாழ்வு ஆகியவற்றுக்காக அவசர தீர்வு காணப்பட வேண்டும். இடைக்கால
தீர்வாக உள்கட்ட மைப்பு மற்றும் அடிப்படை தேவைகளை நிறைவேற்றி தமிழர்கள்
நிம்மதியாக வாழ வகை செய்ய வேண்டியுள்ளது.
சொத்துரிமை, கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் இதர ஜனநாயக உரிமைகள்
நிலைநாட்டப்பட வேண்டும். அகதிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளும் இதில்
அடங்கும்.
இலங்கையை ஐ . நா. மற்றும் இந்தியா கண்காணிக்க வேண்டும்: டெசோ வலியுறுத்தல்! %E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-2
நிரந்தர தீர்வாக நீண்ட காலமாக விவாதிக்கப்பட்டு வரும் அரசியல் தீர்வு
காணப்படவேண்டும். ஈழத் தமிழர்களுக்கான ஜனநாயக மற்றும் நடைமுறை தீர்வுகளை
ஆய்ந்து உங்களின் மதிப்பிற்குரிய ஆலோசனைகளையும், விமர்சனங்களையும் நீங்கள்
வழங்குவீர்கள் என நம்புகிறேன்.” என்று பேசினார்!


[You must be registered and logged in to see this link.]
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» எல்லைப் பகுதியை கண்காணிக்க 15 ஆளில்லா விமானங்கள்: இந்தியா வாங்குகிறது
» இலங்கையை வேவுபார்க்க ஆரம்பித்துள்ள இந்தியா !
» மாகாணசபைகளுக்கு காணி மற்றும் காவல்துறை அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் - இந்தியா
» அணை 999 படத்துக்கு தடை விதிக்க வேண்டும் : வைகோ வலியுறுத்தல்
» பயங்கரவாதிகளுக்கு நிதி: கண்காணிக்க இந்தியா-அமெரிக்கா உடன்பாடு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum