TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 17, 2024 8:41 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 17, 2024 5:06 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Thu May 16, 2024 8:45 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun May 12, 2024 10:47 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


"டெசோ மாநாட்டில் எனக்கு நம்பிக்கை இல்லை! தமிழர்களை ஏமாற்றும் நோக்கமே!- சிவந்தன் செவ்வி"

Go down

"டெசோ மாநாட்டில் எனக்கு நம்பிக்கை இல்லை! தமிழர்களை ஏமாற்றும் நோக்கமே!- சிவந்தன் செவ்வி" Empty "டெசோ மாநாட்டில் எனக்கு நம்பிக்கை இல்லை! தமிழர்களை ஏமாற்றும் நோக்கமே!- சிவந்தன் செவ்வி"

Post by ஜனனி Sun Aug 12, 2012 7:21 am

"டெசோ மாநாட்டில் எனக்கு நம்பிக்கை இல்லை! தமிழர்களை ஏமாற்றும் நோக்கமே!- சிவந்தன் செவ்வி" 578831_271484122955507_2035314975_n
"டெசோ மாநாட்டில் எனக்கு நம்பிக்கை இல்லை! தமிழர்களை ஏமாற்றும் நோக்கமே!- சிவந்தன் செவ்வி"
டெசோ மாநாட்டில் தமிழீழ மக்களுக்கு நம்பிக்கை இல்லை எனவும், தமிழ் மக்களை
ஏமாற்றுவதே இம்மாநாட்டின் நோக்கம் என்றும் லண்டனில் இன்று இருபத்தோராவது
நாளாகவும் உண்ணாவிரத்த்தை தொடர்ந்துகொண்டிருக்கும் கோபி சிவந்தன் அவர்கள்
தெரிவித்துள்ளார்.


புதிய தலைமுறை செய்தி ஊடகத்துக்கு வழங்கிய செவ்வியிலேயே இக்கருத்தை தெரிவித்துள்ளார்.

நடைபெறவிருக்கும் டெசோ மாநாட்டினால் தனி ஈழம் கிடக்கும் என
நம்புகின்றீர்களா என கேட்கப்பட்ட கேள்விக்கே அவர் மேற்படி
தெரிவித்துள்ளார்.

அத்துடன் லண்டனில் உண்ணாவிரதம் இருக்கும்
என்னை உயிரை வருத்த வேண்டாம் சிவந்தன் உடனடியாக உண்ணாவிரதத்தைக் கைவிட
வேண்டும் என கோரிக்கை விடுக்கும் திமுக தலைவர் கருணாநிதி, தான் தமிழக
முதல்வராக பதவி வகித்த காலத்தில், இலங்கை வன்னியில் பல்லாயிரக்கணக்கான
எமது தமிழ் மக்கள் அழியும் போது இதே கலைஞர் எங்கே போனார்? எனவும்
கேள்வியெழுப்பினார்.
எமது உறவுகள் கொல்லப்பட்டபோது பார்த்துக் கொண்டிருந்த கலைஞர் என்மீது அக்கறைப்படுவது வேடிக்கையானது” – சிவந்தன்

இருபத்தியொரு நாட்களாக உண்ணாநிலைப்போராட்டதை மேற்கொண்டுவரும் திரு.
சிவந்தன் கோபி அவர்களை போராட்டத்தை நிறுத்துமாறு தமிழகத்தின் முன்னாள்
முதலமைச்சர் திரு. மு. கருணாநிதி அறிக்கை மூலம் கேட்டிருந்ததாக தமிழக
ஊடகமொன்று செய்தி வெளியிட்டிருந்தது.

இது தொடர்பாக “புதிய
தலைமுறை” தொலைக்காட்சியின் செய்தியாளர் சக்தி கேட்டிருந்த கேள்வி ஒன்றுக்கு
பதிலளிக்கும்போதே திரு. சிவந்தன் மேற்கண்டவாறு குறிப்பிட்டிருந்தார்.

நேற்று திரு. சிவந்தன் உண்ணாநிலைப் போராட்டத்தை மேற்கொண்டுவரும்
கூடாரத்துக்கு வந்த “புதிய தலைமுறை” தொலைக்காட்சியினர் அவரது விரிவான
நேர்காணலை ஒளிப்பதிவு செய்தனர்.

ரெசோ மாநாடு தொடர்பாக எழுந்துள்ள
சர்ச்சைகள் தொடர்பாகவும் இம்மாநாட்டின் மூலம் தமிழ் ஈழம் அமையுமா என்ற
கேள்விக்கு பதிலளித்த திரு. சிவந்தன் “ரெசோ மாநாட்டில் எனக்கு எந்தவித
நம்பிக்கையும் இல்லை. இது எனது தனிப்பட்ட கருத்தாக இருந்தபோதிலும் ஒட்டு
மொத்த தமிழ் மக்களின் கருத்தும் இதுவாகத்தானிருக்கும் என நம்புகிறேன்.
எங்களது மக்கள் கொத்துக் கொத்தாக கொல்லப்பட்டபோது அவர்களது பரிதாபநிலையைப்
பார்த்த பின்பும் ஒரு முடிவினை எடுக்கமுடியாத கலைஞர் கருணாநிதி அவர்கள்
தற்போது எங்களுக்கு ஒரு தீர்வுத்திட்டத்தினை பெற்றுத்தருவதாகக் கூறுவதும்
ஈழத்திற்கான பிரேரணை கொண்டுவருவதும் தமிழ்மக்கள் மத்தியில் வெறுப்புணர்வைத்
தோற்றுவித்துள்ளது. எங்களை ஏமாற்றுவதற்கான ஒரு வேலைத்திட்டமாகவே நான்
இதனைப் பார்க்கிறேன. இது ஈழத்தமிழர்களுக்கு எதனையும் பெற்றுத்
தரப்போவதில்லை” எனத் தெரிவித்தார்.
ரெசோ மாநாடு நடைபெற்றாலும் அதில்
தனி(தமிழ்) ஈழம் என்ற சொல் உபயோகப்படுத்தக் கூடாது என இந்தி
வெளியுறவுத்துறைச் செயலகம் வெளியிட்டுள்ள அறிக்கை பற்றியும் திரு.
சிவந்தனிடம் கேட்கப்பட்டது. “ரெசோ என்றால் தமிழீழ ஆதரவாளர்கள் அமைப்பு
என்று கூறினார்கள். ஆனால் அங்கு தமிழீழம் பற்றி பேசக்கூடாது என்றால்
எப்படி? ஈழத் தமிழ் மக்கள் தமிழீழம் என்பதனையே தமது இறுதி இலட்சியமாக
கொண்டிருக்கிறார்கள். அவர்கள் ஐக்கிய இலங்கைக்குள் வாழப்போகிறார்களா
இல்லையா என்பதனை அவர்களே முடிவு செய்யவேண்டும். இந்நிலையில் ஈழத்திற்கான
மாநாட்டில் ஈழம் பற்றி பேசக் கூடாது என்பது கேலிக் கூத்தாகவே அமைகிறது”
என்றார்.

திட்டமிட்டிருந்தபடி ஒலிம்பிக் போட்டிகளின் இறுதிநாளான
நாளை ஞாயிற்றுக்கிழமை மாலை திரு. சிவந்தன் தனது உண்ணாநிலைப் போராட்டத்தை
நிறைவு செய்யவிருக்கிறார். நாளை காலையிலிருந்து திரு. சிவந்தன் அமர்ந்துள்ள
ஸ்ரற்போர்ட் இலகு தொடருந்து நிலைய அருகாமையில் 9Stratford High Street
DLR, London E15 2SP) மக்கள் கூடவிருக்கிறார்கள். மாலை 5.30 மணிக்கு
உண்ணாநிலைப் போராட்டத்தை நிறைவு செய்வதுடன் ஆரம்பநாள் நிகழ்ச்சியின்போது
கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்ற அதே இடத்தில் Aspen Way, London E14
5ST (Billingsgate மீன் அங்காடிக்கு எதிரில்) மாலை 6 மணி தொடக்கம் 8 மணி
வரை கவனயீர்ப்புப் போராட்டத்தை நடாத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இறுதிநாள் போராட்டங்களில் கலந்துகொள்வதற்காக ஐரோப்பிய நாடுகளிலிருந்து
பேருந்துகள் மூலமும் வாகனங்கள் மூலமும் வருவதற்கான ஏற்பாடுகள் அந்தந்த
நாடுகளின் தமிழர் ஒருங்கிணைப்பு குழுக்கள் மூலம் செய்யப்பட்டுள்ளன.

இப்போராட்டத்தினை வெற்றிப்பெறச் செய்யவதற்காக மக்களை பெருமளவில் வந்து
கலந்து கொள்ளுமாறு தமிழர் ஒருங்கிணைப்பு குழு –பிரித்தானியா வேண்டுகோள்
விடுத்துள்ளது
[You must be registered and logged in to see this link.]
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

"டெசோ மாநாட்டில் எனக்கு நம்பிக்கை இல்லை! தமிழர்களை ஏமாற்றும் நோக்கமே!- சிவந்தன் செவ்வி" Empty Re: "டெசோ மாநாட்டில் எனக்கு நம்பிக்கை இல்லை! தமிழர்களை ஏமாற்றும் நோக்கமே!- சிவந்தன் செவ்வி"

Post by ஜனனி Sun Aug 12, 2012 7:35 am

"நீதியின்மேல் தாகம் கொண்டு நிற்கும் சிவந்தனின் உண்ணாநிலைப் போராட்டம்"
சிவந்தனின் உண்ணாநிலைப் போராட்டம் தமிழ் இளம் சமுதாயம் நீதியின்மேல் தாகம்
கொண்டு நிற்கிறது என்பதற்கான உதாரணமாகிறது என நாடுகடந்த தமிழீழ
அரசாங்கத்தின் உதவிப் பிரதமர்களில் ஒருவரான உருத்திராபதி சேகர் அவர்கள்
தெரிவித்துள்ளார்.


ஈழத்தமிழர்களின் நியாயமான விடுதலைப்
போராட்டத்தினை முன்னிறுத்தியும் ஈழத்தமிழர்களுக்கான நீதியைக் கோரியும்
ஒலிம்பிக் போட்டி இடம்பெற்று வரும் பிரித்தானிய மண்ணில் ஒலிம்பிக் தொடக்க
நாள் முதல் சிவந்தன் அவர்கள் உண்ணாநிலைப் போராட்டத்தினை முன்னெடுத்து
வருகின்றார்.

ஒலிம்பிக் போட்டிகள் நிறைவுறும் நாளான நாளை ஞாயிற்றுக்கிமை இந்த உண்ணாநிலைப் போராட்டமும் நிறைவுறவுள்ளது.

இந்நிலையில் இவ்வுண்ணாநிலைப் போராட்டம் தொடர்பில் உதவிப் பிரதமர் உ.சேகர் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையின் முழுவடிவம் :

சிவந்தனின் உண்ணாநோன்பு, இலங்கையில் வரலாற்றுக்கு முற்பட்ட காலம் முதல்
வாழ்ந்து வரும் தமிழ் மக்களின் மேல் நடாத்தப்படுகின்ற இனஅழிப்புக்கு
நீதிகோரும் அறப்போராட்டம்.

இந்த சத்திய வேள்வியில் ஜூலை 27முதல்
ஆகஸ்ட் 12 வரை தன் உயிர்க்கு உறுதுணையான உணவினைச் சிவந்தன் உட்கொள்ள மறுத்த
செயலானது எத்தனை தூரத்துக்குத் தமிழ் இளம் சமுதாயம் நீதியின்மேல் தாகம்
கொண்டு நிற்கிறது என்பதற்கான உதாரணமாகிறது.

இயேசுவின்
மலைப்பொழிவில் 'நீதிநிலைநாட்டும் வேட்கை கொண்டோர் பேறுபெற்றோர், ஏனெனில்
அவர்கள் நிறைவு பெறுவர்' என்று கூறியது, நீண்டகாலமாக கிறிஸ்தவத்துடன்
கட்டுப்பட்டுக் கிடக்கும் கதை எங்கள் கதை என்று உணரத் தோன்றுகின்றது.

நாங்கள் ஆன்மீகசக்தியே அல்லால் வேறு ஒன்றுமில்லை என்று சொன்ன முன்னாள்
பிரித்தானியப் பிரதமர் மாகிரெட் தச்சரின் கூற்றை நினைவு கூர்ந்து
சிவந்தனின் உண்ணாநோன்பும் ஒரு 'ஆன்மீகசக்தியே' என்பதனை உங்களுக்கு
எடுத்துக் கூறவிரும்புகின்றேன்
இப்பொழுது பட்டினியாய் இருப்போரே
நீங்கள் பேறு பெற்றோர் ஏனெனில் நீங்கள் நிறைவு பெறுவீர்கள்'. இப்பொழுது
அழுது கொண்டிருப்போரே நீங்கள் பேறுபெற்றோர் ஆதலால் நீங்கள் சிரித்து
மகிழ்வீர்கள்' என்று கிறிஸ்து தந்த அந்த ஆன்மீக நம்பிக்கைதான் இன்று
சிவந்தனை இந்த உண்ணாநோன்பில் நம்பிக்கை கொள்ள வைத்துள்ளது.


மகாத்மா காந்தி உண்ணா நோன்பை உலக அரசியலில் அறிமுகம் செய்தார் என்று
பேசப்பட்டாலும் அதனை அவருக்கு முன்பே உலகிற்கு அறிமுகம் செய்தவர்
திருநாவுக்கரசு சுவாமிகள் என்னும் தமிழ்ப் புனிதர் என்பதையும் கி பி 7ம்
நூற்றாண்டில் பாடலிபுரத்தில் சமணர்களால் இடிக்கப்பட்ட சிவாலயம் மீண்டும்
அவ்விடத்தில் நிறுவப்பட வேண்டுமென உலகின் முதல் உண்ணா நோன்பு பல்லவ அரசை
நோக்கி நடாத்தப்பட்டது என்பதையும் இவ்விடத்தில் நினைவு கூர
விரும்புகின்றேன்.

இது பெருமைக்காக அல்ல. தமிழர்கள்
பயங்கரவாதிகள் அல்ல. சாத்வீகப் போராட்டங்கள் பலவற்றை உலகிற்கு அறிமுகம்
செய்தவர்கள் என்பதை எடுத்துக்காட்டவே இதனைக் கூறவேண்டியுள்ளது.


அந்த வழியிலேயே நவீன அரசியலிலும் தியாகி திலீபனும், அன்னை பூபதியும் தங்கள்
இன்னுயிர்களை அர்ப்பணித்து எங்கள் மக்களின் சுதந்திர வாழ்வுக்கான மக்கள்
சக்தியை எழும்படி கேட்டனர்.

2009ல் இலங்கை அரசாங்கம் தமிழர்களை
இனஅழிப்புச் செய்த நேரத்தில், பிரித்தானியத் தலைவர்கள் எமது மக்களுக்கான
பாதுகாப்புடன் கூடிய அமைதியை ஏற்படுத்துவதற்கு அனைத்துலக மட்டத்தில்
முயற்சிப்போம் எனக் கொடுத்த நம்பிக்கை வாக்குறுதிகள் காற்றில் பறந்தன, எமது
அமைதிவழியான போராட்டங்களின் தன்மைகளை, எமது மக்களின் உள்ளக் குமுறல்களை
இந்த உலகம் உதாசீனம் செய்தது, ஆதலால் நாற்பதினாயிரம் முதல் நூறாயிரம்
வரையிலான தமிழ் மக்கள் இனஅழிப்புக்கு உள்ளான வரலாற்றையே தமிழர்கள் கண்டனர்.


கடந்த மூன்று ஆண்டுகளாக இனஅழிப்பு குறித்த அனைத்துலக
நீதிவிசாரணைகள் எதுவும் நடைபெறாத நிலையில், 'இனப்படுகொலை தொடர்பான சுயாதீன
விசாரணை','தமிழர் பகுதிகளில் இடம்பெறும் பௌத்த மயமாக்கல்' மற்றும் 'நில
அபகரிப்பை நிறுத்த வேண்டும்','தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய
வேண்டும்' என்பன உட்பட ஐந்து பிரதான கோரிக்கைகளை முன்வைத்து இந்த
உண்ணாநோன்பை சிவந்தன் மேற்கொண்டுள்ளார்.
உண்மையில் ஒவ்வொரு தமிழனதும் இதய உணர்வின் புறவெளிப்பாடாகவே இந்த இளைஞனின் இந்த அறவழிப்போராட்டம் நிகழ்ந்துகொண்டிருக்கின்றது.
இலண்டன் 2012ஒலிம்பிக் உலக மக்களை இணைத்த நேரத்தில் கண்ணியத்துடனும்,
கட்டுப்பாட்டுடனும் தமிழ் மக்களின் நிலையை உலக மக்களுக்கும் உலக
நாடுகளுக்கும் எடுத்துரைக்க இந்த உண்ணா நோன்பை இவ்விளைஞன் தன் உயிரைத்
துச்சமென நினைந்து மேற்கொண்டுள்ளார்.

இவர் சுவிட்சிலாந்திலுள்ள
ஐக்கியநாடுகள் சபைக்கு இலண்டனிலிருந்து நடந்து சென்று இதே கோரிக்கையினை
கையளித்த உள்ள உறுதியையும் இந்நேரத்தில் நினைவு கூறுகின்றேன். அவரது அந்தப்
போராட்டம் தமிழ் மக்களுக்கும், இளையோருக்கும் அந்த நேரத்தில் ஒரு
புத்துணர்ச்சியைக் கொடுத்தது என்பதே உண்மையாகும்.

இவரைப் போல்
எத்தனையோ தமிழ் இளையவர்கள் தங்கள் இனத்திற்கு நீதி கிடைக்க வேண்டும்,
சுதந்திர வாழ்வு கிடைக்க வேண்டுமென்று துடித்துக் கொண்டிருக்கின்றார்கள்.


அவர்களது உள்ளத்துடிப்புகளையும், உணர்வுகளையும் இந்த உலகம் தொடர்ந்து
உதாசீனம் செய்வதானது உலகில் 'மனிதாபிமானம்' செத்துக்கொண்டிருக்கின்றதா? அல்லது செத்துவிட்டதா? என எண்ணத் தோன்றுகின்றது.

ஆயினும் தாங்கள் வாழும் நாடுகளின் மக்களின் நாளாந்த வாழ்வுக்கும்
சட்டதிட்டங்களுக்கும் பங்கம் வராத வகையில் தங்கள் போராட்டங்களை நடாத்தும்
உயர் அரசியல் கலாச்சாரம் கொண்டவர்களாகவும் இவ்விளையோர் உள்ளனர்.


இதனால் இவர்களின் இதய உணர்வையும் அவர்கள் உலக மக்கள் மீதும், உலக
நிறுவனங்கள் மீதும், உலக நாடுகள் மீதும் கொண்டுள்ள உறுதியான
நம்பிக்கையையும் கவனத்தில் எடுத்து அவர்களின் மனித உரிமைக்கும்,
ஐனநாயகத்திற்கும், நல்லாட்சிக்கும் மேலான நம்பிக்கைகள் சிதைந்து போகாதவாறு
செயற்படுங்கள் என மனிதநேய உணர்வுள்ள அனைத்து அரசாங்கங்களையும்
வேண்டுகின்றோம்
வேண்டுகோள் மேல் வேண்டுகோள் விடுத்துக் கொண்டு நிற்கும்
நிலையில் தமிழர்கள் இல்லை. காரணம் இப்பிரச்சினைக்கான தீர்வு காணப்படாத
ஒவ்வொரு நிமிடமும் இலங்கையின் தமிழின அழிப்பு நடவடிக்கைகள் பரந்து விரிந்து
கொண்டே செல்கிறது.

சுருக்கமாகச் சொன்னால் இன்றைய நாகரிக
அரசுக்கள் இனஅழிப்புக்குற்றத்தை அனுமதித்து நிற்கும் ஒரு அவலநிலையாகத்தான்
இதனை உலகத் தமிழர்கள் பார்க்கின்றனர். இதனால் உலக ஒருமைப்பாடு,


மனிதநேயம், மனித உரிமைகள் மற்றும் நல்லாட்சி தத்துவங்கள் எல்லாமே
சிறிலங்காவால் சிதறடிக்கப்பட்ட வண்ணம் உள்ளது. இதனை உலக அரசியல்
நெருக்கடியாகக் கருதாவிட்டால் தமிழினத்தை அழிக்க இலங்கை கையாண்ட,
கையாளுகின்ற இந்தச் செயற்பாடுகள் உலகின் அமைதிக்கும் பாதுகாப்புக்கும்
குந்தகம் விளைவிக்கும் நிரந்தர உதாரணங்களாக மாறிவிடும்.

எனவே
எமது மக்களின் பெயராலும், உலகில் சமாதானத்தின் மேலும், மனித உரிமைகள்
மேலும், நல்லாட்சியின் மேலும் அக்கறை உள்ள ஒவ்வொருவரையும் சிவந்தன்
விடுத்துள்ள கோரிக்கைகளுக்கு உடன் துணைநிற்குமாறு பணிவன்பாக
வேண்டுகின்றோம்.

அமைதி ஏற்படுத்துவோர் பேறுபெற்றோர் ஏனெனில்
அவர்கள் கடவுளின் மக்கள் என அழைக்கப்படுவர்' என்ற இயேசுவின் வார்த்தைகள்
வழி எமது மக்களுக்கும் மண்ணுக்கும் பாதுகாப்பான அமைதியை ஏற்படுத்துங்கள் என
உலகினை வேண்டிநிற்கின்றேன்.

உண்ணா நோன்பினை நடாத்த அனுமதித்த
இந்நாட்டின் ஜனநாயகம் போற்றும் பண்புக்கும் உண்ணா நோன்பில் உங்களை பல்வேறு
நிலைகளிலும் இணைத்துக்கொண்டிருக்கின்ற அனைவருக்கும், எம்மக்கள் துன்பத்தைத்
தன் துன்பமாகவே தாங்கி வாழும் சிவந்தனுக்கும் எனது இதய நன்றிகள்.

இவ்வாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் உதவிப் பிரதமர் உருத்திராபதி சேகர் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» "தமிழர்களுக்கென டெசோ மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட பல தீர்மானங்கள்"
» தமிழர்களை மீண்டும் அடி முட்டாளாக்கும் கருணாநிதியின் டெசோ மாநாடு.
» டெசோ மாநாட்டில் பங்கேற்கும் சரத் பவார், பரூக் அப்துல்லா
» தனித் தமிழீழத்துக்காக பொது வாக்கெடுப்பு: டெசோ மாநாட்டில் தீர்மானம்
» டெசோ மாநாட்டில் கட்சிக் கொடி, கட்சி முழக்கம் கூடாது : கருணாநிதி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum