TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:45 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:44 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 3:24 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun May 12, 2024 10:47 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


மருது பாண்டியரின் வீரமும் .. காளையார்கோவிலும் ;

2 posters

Go down

மருது பாண்டியரின் வீரமும் .. காளையார்கோவிலும் ; Empty மருது பாண்டியரின் வீரமும் .. காளையார்கோவிலும் ;

Post by மாலதி Mon Aug 06, 2012 8:27 pm

மருது பாண்டியரின் வீரமும் .. காளையார்கோவிலும் ;
மருது பாண்டியரின் வீரமும் .. காளையார்கோவிலும் ; 530210_391571864229276_1351284620_n
பெரிய மருதுவே சிவகங்கையின் ஆட்சியாளர் என்று கருதப்பட்டாலும்
சின்ன மருதுவே சிவகங்கையின் உண்மையான ஆட்சியாளராக
விளங்கினார்.
இவர் சிறுவயலைத் தமது தலைமையிடமாகக்கொண்டு ஆட்சி புரிந்தர்.
ஆங்கிலேயரிடம் ஏராளமாகக் கடன்பட்ட நவாப் முகம்மதலி,
தமது கடன் தொகையைத் திருப்பித் தரும்வரை, தென்னாட்டில்
வரி வசூலிக்கும் உரிமையை ஆங்கிலேயருக்குக் கொடுத்தார்.
ஆனால், அந்நியரான ஆங்கிலேயர்கள் தங்கள் தாயகத்தில்
வரி வசூலிப்பதை மருது சகோதரர்கள் எதிர்த்தனர். இவர்களது
சுதந்தர உணர்ச்சியால் சிவகங்கையில் விடுதலைக் கொடி பறந்தது.
பிரான் மலையும், காளையார் கோவிலும் இவர்களது இராணுவக்
கோட்டைகளாக விளங்கின. தங்களை எதிர்த்த கட்டபொம்மனை
ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியார் தூக்கிலிட்டுக் கொன்றனர்
(1799). கட்டபொம்மன் இறந்தபின் அவர் சகோதரர் ஊமைத்துரை
மருது சகோதரர்களுடன் சேர்ந்தார். மருது சசோதரர்கள்,
பாஞ்சாலக்குறிச்சியின் ஊமைத்துரை, விருப்பாச்சி பாளையக்காரர்
கோபால நாயக்கர், இதர சில பாளையக்காரர்கள் ஆகியோர்
கி.பி. 1800-1801இல் ஆங்கிலேயரை எதிர்த்துப் போரிட்டனர்.
இப்போராட்டத்தின் பொழுது சிவகங்கைப் பகுதியில் நடந்த
சிறுவயல் போரும், காளையார் கோவில் போரும் குறிப்பிடத்
தக்கவையாகும். 1801 ஜூனில் திருச்சியில் வெளியிடப்பட்ட
மருது பாண்டியரின் சுதந்தரப் பிரகடனம் தமிழ் மக்களை
ஆங்கிலேயரின் ஆதிக்கத்திற்கு எதிராகக் கிளர்ந்தெழும்படி
கூறியது.

1801 மே 28முதல், 1801 அக்டோபர் 27வரை இந்த
இராணுவப் போராட்டம் கடுமையாக இருந்தது. சிவகங்கையின்

துறைமுகமான தொண்டிக்கு மருது சகோதரர்களால்
அனுப்பப்பட்ட தோணிகள் பாக் நீரிணைப்பு வழியாக அரிசியைக்
கொண்டு செல்லும் தோணிகளைத் தாக்கி அந்த அரிசியைக்
கைப்பற்றிச் சிவகங்கைக்குக் கொண்டு சென்றன. மருது
சகோதரர்களின் இச்செயலைக் கண்ட ஆங்கில மாவட்ட ஆட்சித்
தலைவர் லூசிங்டன் சிவகங்கைத் தோணிகளைத் தாக்குவதற்கு
உத்தரவிட்டார். இறுதியில் சிவகங்கையின் தோணிகள் சில,
ஆங்கிலேயரால் பிடிக்கப்பட்டன. சில தோணிகள்
எரிக்கப்பட்டன. தொண்டிப் பகுதியில் நடந்த இந்த
‘சிறு கடற்போர்’ சிவகங்கையை ஆட்சி புரிந்த மருது
சகோதரர்கள், ஆங்கிலேயரை எவ்வாறு துணிச்சலுடன்
எதிர்த்துப் போரிட்டனர் என்பதைக் காட்டுகிறது.
ஆங்கிலத் தளபதி அக்னூவின் தலைமையில் படைகள்
மருது சகோதரர்களின் தலைநகராக விளங்கிய சிறுவயலை
1801, ஜூலை இறுதியில் தாக்கிப் பிடித்தன. பின்
ஆங்கிலப்படை காடுகளைக் கடந்து காளையார் கோவில்
செல்ல முற்பட்டது. ஆனால், அடர்ந்த காடுகளைக் கடந்து
செல்ல ஒரு வழியும் இல்லாததால், ஆகஸ்ட் (1801) முழுவதும்
முயன்றும் அப்படை காளையார் கோவிலை அடைய முடியவில்லை
என்று தளபதி வெல்ஷ் கூறிய குறிப்பிலிருந்து அறியப்படுகிறது.
செப்டம்பரில் (1801) காடுகளை அழித்து ஆங்கிலப் படைகள்
காளையார் கோவிலை அடைந்தன. அக்டோபர் 1, (1801)இல்
காளையார் கோவில் வீழ்ந்தது. மருது சகோதரர்கள் சிறைப்
பிடிக்கப்பட்டனர். 1801, அக்டோபர் 27இல் இந்த வீர
சகோதரர்கள், திருப்பத்தூரில் ஆங்கிலேயர்களால்
தூக்கிலிடப்பட்டனர்.

அந்நியரை எதிர்த்து அஞ்சா நெஞ்சத்துடன் விடுதலைப்
போர் புரிந்த மருது சகோதரர்கள் ஆட்சி புரிந்த சிவகங்கைச்
சீமையின் வரலாறு நமக்குப் பெருமையளிக்கிறது.

மருது சகோதரர்களின் வீழ்ச்சிக்குப்பின் ஆங்கிலக்
கிழக்கிந்தியக் கம்பெனியார், சிவகங்கையை ஆட்சி புரிய
கவுரிவல்லப பெரிய உடையத் தேவரை ஜமீன்தாராக
நியமித்தனர் (1801).

சிவகங்கையின் வரலாற்றில் எழுந்துள்ள பண்பாட்டுச்
சின்னங்களாகச் சிவகங்கை மன்னர்களின் அரண்மனைப்
பகுதிகள் சில உள்ளன. கல்யாண மண்டபம் எனப்படும் கட்டடம்,
அதன் முன்னுள்ள ஒரு மாடிக் கட்டடம், அந்தப்புர நீச்சல்
குளம், இராஜராஜேஸ்வரி கோவில் ஆகியவை அரண்மனையின்
எஞ்சிய பகுதிகளாக உள்ளன. கல்யாண மண்டபத்தின் தூண்கள்,
திருமலை மன்னரின் மதுரை அரண்மனைத் தூண்கள்போல்
உள்ளன. இக்கட்டடத்தின் பின்பகுதியில் மன்னர்
வீற்றிருப்பதற்கான மண்டபத்தில், ஒரே கல்லாலான அழகிய
ஆசனங்கள் உள்ளன. அந்தப்புரம் அருகிலுள்ள நீச்சல்குளம்
இன்றும் பயன்படும் நிலையில் உள்ளது. அரண்மனையின்
எஞ்சிய பகுதிகளில் இராஜ ராஜேஸ்வரி கோவில் முற்றிலும்
நல்ல நிலையில் உள்ளது. சிவகங்கைச் சீமையை ஆட்சி புரிந்த
கவுரி வல்லபத் திருமரபினரின் குலதெய்வமாக இக்கோவில்
விளங்கிற்று. சிவகங்கைச் சீமையை நிறுவிய கவுரி வல்லப
சசிவர்ண ராஜாவால் கி.பி. 1730இல் இக்கோவில் கட்டப்பட்டது.
அவர் மறைவிற்குப்பின் அவர் வழிவந்த 16 மன்னர்களும்,
ராணியரும் இக்கோவிலின் தாசர்களாக இருந்தனர். கடைசி
தாசரும் கவுரிவல்லபருமாக இருந்தவர் கார்த்திகேய
வேங்கடாஜலபதி ராஜா ஆவார்.
அந்தப்புரத்தின் இருமாடிக் கட்டடம், மற்றும்
அரண்மனையின் முக்கிய பகுதிகள் யாவும் அழிந்துவிட்டன.
விலையுயர்ந்த மர உத்திரங்களுக்காகவும், மரஜன்னல்,
கதவுகளுக்காகவும் இவ்வரண்மனை இடிக்கப்பட்டதாகத்
தெரிகிறது. அரண்மனை அழிக்கப்படாமல்
பாதுகாக்கப்பட்டிருந்தால், சிவகங்கையின் பெருமைமிக்க வரலாற்றை
என்றும் நினைவு கொள்ள இது ஒரு நல்ல சின்னமாக
இருந்திருக்கும். சிவகங்கை தேவஸ்தானத்தின்
நிர்வாகத்திற்குட்பட்ட கோவில்களுக்கு அறங்காவலராகத்
தற்பொழுது விளங்குபவர் சிவகங்கை ராணி அபராஜித
பங்கஜவல்லி நாச்சியார் ஆவார்.
காளையார் கோவில்
சிவகங்கையிலிருந்து 18 கி.மீ. தொலைவில் காளையார்
கோவில் என்ற ஊர் உள்ளது. இதன் பண்டைய பெயர் கானப்பேர்
ஆகும். சங்ககாலப் பாண்டிய மன்னன் உக்கிரப் பெருவழுதி இந்த
இடத்தை ஆண்டுவந்த வேங்கை மார்பன் என்ற மன்னனை
வென்று ‘கானப்பேரெயில் கடந்த உக்கிரப் பெருவழுதி’ என்ற
சிறப்புப் பெயரைப் பெற்றார். பாண்டியர் ஆட்சிக்குப்பின் மதுரை
நாயக்க மன்னர்கள், இராமநாதபுர சேதுபதி மன்னர்கள்,
சிவகங்கை மன்னர்கள் ஆகியோரின் ஆட்சியில் இவ்வூர்
வந்தது. காளையார் கோவில் மருது சகோதரர்களுக்கு ஒரு
பலம்மிக்க இராணுவக் கோட்டையாக இருந்தது. இவர்கள்
ஆங்கிலேயரை எதிர்த்துப் போராடிய பொழுது (1800-1810)
காளையார் கோவில் ஒரு முக்கிய போர்க்களமாக இருந்தது.
1801, அக்டோபர் 1இல் ஆங்கிலேயர்கள் காளையார்
கோவிலைக் கைப்பற்றினர்.

காளையார் கோவிலில் பழமைமிக்க சிவாலயம் ஒன்று
உள்ளது. காளீஸ்வரர், சோமேஸ்வரர், சுந்தரேஸ்வரர்
என்று மூன்று தெய்வங்களின் சந்நிதிகள் இவ்வாலயத்தில்
உள்ளன. காளீஸ்வரர் சந்நிதியிலுள்ள ‘கருவறை லிங்கம்’
தனிச்சிறப்பு வாய்ந்ததாகும். இங்குள்ள அம்மன் சொர்ணவல்லி
ஆவார். சோமேஸ்வரர் சந்நிதிக்கு எதிரிலுள்ள இராஜ கோபுரம்
மருது சகோதரர்களால் கட்டப்பெற்றதாகும் (கி.பி. 18ஆம்
நூற்றாண்டு). சோமேஸ்வரர் ஆலயத்தின் அம்மன் சௌந்திர
நாயகி எனப்படுகிறார். இவ்வம்மனின் கருவறை சிற்ப
வேலைப்பாடு மிக்கதாகும். காளீசுவரர் சந்நிதி முன்னுள்ள
கோபுரமும், சுந்தரேசுவரர்-மீனாஷி ஆலயமும் வரகுண
பாண்டியன் திருப்பணியாகும். சிவகங்கை தேவஸ்தானத்தைச்
சேர்ந்த இக்கோவிலுக்கு தேவகோட்டை நகரத்தார்கள் சீரிய
திருப்பணி ஆற்றியுள்ளனர்.

காளீஸ்வரர் சந்நிதி வாயிலருகில் பெரிய மருது, சின்ன
மருது ஆகியோரின் ஆளுயரச் சிற்பங்களும், சேதுபதி
மன்னரின் உருவமும் உள்ளன.
இச்சந்நிதிக்கு எதிரிலுள்ள ‘மருதுபாண்டியன் வீதி‘யின் கடைசியில் மருது
சகோதரர்கள் உடலின் ஒரு பாகம் அடக்கம் செய்யப்பட்டு எழுப்பப்பட்ட கல்லறை
உள்ளது.


மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

மருது பாண்டியரின் வீரமும் .. காளையார்கோவிலும் ; Empty Re: மருது பாண்டியரின் வீரமும் .. காளையார்கோவிலும் ;

Post by ஜனனி Tue Aug 07, 2012 8:32 am

மருது பாண்டியரின் வீரமும் .. காளையார்கோவிலும் ; 917304 மருது பாண்டியரின் வீரமும் .. காளையார்கோவிலும் ; 917304
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum