TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 17, 2024 8:41 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 17, 2024 5:06 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Thu May 16, 2024 8:45 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun May 12, 2024 10:47 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


ஈழத் தமிழினத்தின் விடுதலைப் போராட்டம் குருதியில் தொடங்கிக் குருதியில் முடிந்திருக்கிறது.

Go down

ஈழத் தமிழினத்தின் விடுதலைப் போராட்டம் குருதியில் தொடங்கிக் குருதியில் முடிந்திருக்கிறது. Empty ஈழத் தமிழினத்தின் விடுதலைப் போராட்டம் குருதியில் தொடங்கிக் குருதியில் முடிந்திருக்கிறது.

Post by மாலதி Sun May 27, 2012 7:02 pm

ஈழத் தமிழினத்தின் விடுதலைப் போராட்டம் குருதியில் தொடங்கிக் குருதியில் முடிந்திருக்கிறது. Vanni_war03கடந்த
56 வருடமாக அறவழியாகவும் ஆயுத ரீதியாகவும் நடந்த தமிழ்த் தலைவர்களால் காலி
முகத்திடலில் 1956ல் ஆரம்பிக்கப்பட்ட சத்தியாகிரகத்தில் சிங்களக்
குண்டர்களின் தாக்குதலில் தமிழன் குருதி தரையில் கொட்டியது.

இது தான் ஆரம்பம். 2009 மே மாதத்தில் வீட்டையும் நாட்டையும் துயிலும்
இல்லத்தையும் இழந்தோம். வலி சுமந்த மே மாதத்தில் ஈழத் தமிழினம்
முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்டது. விடுதலைக்காகப் புறப்பட்ட ஈழத்
தமிழினம் குருதி சிந்திய நிலையில் இரண்டு இலட்சம் மக்களை இழந்துள்ளது.

மூன்று இலட்சத்திற்கும் மேற்பட்ட ஈழத் தமிழர்கள் உள்ளுரில்
இடம்பெயர்ந்தவர்களாய், பத்து இலட்சத்திற்கும் மேற்பட்டோர் அனைத்துலகிலும்
இடம்பெயர்ந்தவர்களாய், பெருந்தொகையானோர் புனர்வாழ்வு என்ற பெயரில் முகவரி
இல்லாத முட்கம்பி வேலிக்குள் அடைக்கப்பட்டிருக்கிறார்கள்.

முள்ளிவாய்க்கால் ஈழத் தமிழர்களை வீழ்த்தியது ஆனால் விடுதலை வேட்கையைப்
பறிக்க அதனால் முடியவில்லை. ஈழத் தமிழர்களுக்கு எதிரான இறுதிக் கட்டப்
போரில் இளைக்கப்பட்ட கொடூரங்களை உலகம் இன்னும் மறக்கவில்லை. சில உலக
நாடுகள் சிங்கள தேசம் நடத்திய போருக்கு தூண்டு கருவியாக இருந்தன.

சிங்கள தேசமும் தமிழீழமும் பொருதிய சமச்சீரான போராக அது அமையவில்லை.
தனியே இரு நாடுகளும் மோதி இருந்திருப்பின் போரின் முடிவு தமிழினத்திற்குச்
சார்பாக இருந்திருக்கும். இதை உலக நாடுகள் விரும்பவில்லை.

அயல் நாடு ஆயுத உதவி, ஆளணி உதவி, வேவுத் தகவல், இராசதந்திர அனுசரணை,
போர் நிறுத்தம் ஏற்படாமல் பார்த்தல் போன்ற உதவிகளை வலிந்து வழங்கியது.
உலகத் தமிழர்களின் தலைவர்; என்று தனக்குத் தானே பட்டம் சூட்டிய முன்னாள்
தமிழக முதல்வர் ஈழத் தமிழினப் படுகொலைக்கு ஆதரவு வழங்கினார்.

மொழி, இனம், தொப்புள் கொடி உறவு பற்றிப் பேசியவர்கள் முள்ளிவாய்க்கால்
இன அழிப்பின் போது கழுத்தைத் திருப்பிக் கொண்டார்கள். சொந்தச் சகோதரர்கள்
இறப்பது கண்டு இரங்காதவர்கள் இப்போது தமிழீழத்திற்கான கருத்துக் கணிப்பு
பற்றிப் பேசுகின்றனர். அது போதாதென்று தமிழீழம் நிறுவும் நோக்குடன்
இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி செயற்பட்டதாகவும் அவர் உயிர்
வாழ்ந்திருந்தால் நிட்சயம் தமிழீழம் நிறுவப்பட்டிருக்கும் என்ற ஆதரமற்ற
வரலாற்றுப் புனைசுருட்டை கருணாநிதி இந்த வராம் அறிக்கை இட்டுள்ளார்.

ஈழத் தமிழினத்தின் விடுதலைப் போராட்டம் குருதியில் தொடங்கிக் குருதியில் முடிந்திருக்கிறது. KARUNANIDHI_8799e

“ உண்மையும் நீதியும் நிரந்தரமானவை. அவை நிலைத்துள்ளன. அவை என்றும்
நிலைத்து நிற்பன” என்று தோமாஸ் ஜெபேர்சன 1810ம் ஆண்டு சாமுவேல் நொக்ஸ்
பாதிரியாருக்கு எழுதினார்.

முள்ளிவாய்க்காலில் சில வரலாற்று உண்மைகள் புதைந்து கிடக்கின்றன.
பாதுகாப்பு உத்தரவாதம் வழங்கிய பிறகு சிறிலங்கா அரசு ஜந்து கி.மீ ஒடுங்கல்
பிரதேசத்திற்குள் முடங்கிய மூன்று இலட்சத்திற்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள்
மீது கனரக ஆயுதத் தாக்குதல் நடத்தியது.

ஜநா, பாதுகாப்பு சபை, அயல் நாடு இந்தியா என்பன நடுநிலை என்ற பெயரில்
ஒதுங்கி நின்றன. பொது மக்கள் உயிரிழப்பு பற்றிய கரிசனை அவற்றிடம்
இருக்கவில்லை. உணவும் குடிநீரும் இல்லாத இலங்கையின் வட கிழக்கு
முள்ளிவாய்க்கால் கடற்கரையில் ஒரு அப்பட்டமான இன அழிப்பு அரங்கேறியது.

சர்வதேச சமூகத்தின் விட்டுக் கொடுப்பால் தைரியமடைந்த அரச படைகள்
வெறித்தனமாகத்தாக்கின. இறந்தோர், காணாமற் போனோரின் மொத்த எண்ணிக்கை
100.000த்திற்கும் கூடுதலாகும். இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு குறுகிய
நாட்களில், குறுகிய நிலப்பரப்பில் நடந்த மிகப் பெரும் படுகொலை இது வாகும்.

அரசு தனது ஊடகங்கள் ஊடாகப் தாக்குதல்கள் இல்லாத பாதுகாப்பான பிரதேசமாக (No Fire Zone)
மூன்று வலயங்களை ஒன்றின் பின் ஒன்றாகப் பிரகடனப் படுத்தியது. முதலாவது
வலயம் 21 ஜனவரி 2009ம் நாள் பிரகடனப் படுத்தப்பட்டு 12 பெப்ரவரி 2009ம்
நாள் அகற்றப்பட்டது.

இரண்டாவது வலயம் 12 பெப்பிரவரி 2009ல் பிரகடனப் படுத்தப்பட்டு 08 மே
2009ம் நாள் அகற்றப்பட்டது. மூன்றாவது வலயம் 08 மே 2009ம் நாள்
பிரகடனப்படுத்தப்பட்டு 18 மே 2009ம் நாள் முடிவுக்கு வந்தது.

முதலாவது வலயத்தின் பரப்பளவு 35.5 சதுர கி.மீ இரண்டாவது வலயத்தின்
பரப்பளவு 14 சதுர கி.மீ மூன்றாவதும் இறுதியுமான வலயத்தின் பரப்பளவு 5 சதுர
கி.மீ. மூன்றாவது வலயமாக முள்ளிவாய்க்கால் அமைந்தது. இது ஏறத்தாழப் 10
நாட்கள் மாத்திரம் நிலைத்தது. ஒவ்வொரு பாதுகாப்பான வலயத்தின் மீதும் அரச
படைகள் விமானக் குண்டு வீச்சு, பீரங்கித் தாக்குதல், தடைசெய்யப்பட்ட
கொத்துக் குண்டுத் தாக்குதல், வெள்ளைப் பொஸ்பரஸ் எரிகுண்டுத் தாக்குதல்,
விஷ வாயு குண்டுத் தாக்குதல் என்பனவற்றை நடத்தி அடுத்த வலயத்திற்குள்
தள்ளின.

ஈழத் தமிழினத்தின் விடுதலைப் போராட்டம் குருதியில் தொடங்கிக் குருதியில் முடிந்திருக்கிறது. %E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D.%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D2008ம்
ஆண்டு நடுப்பகுதி தொடக்கம் தர்மபுரம், புதுக்குடியிருப்பு ஆகிய இடங்கள்
மீது தடை செய்யப்பட்ட கொத்துக் குண்டுகள் வீசப்பட்டன. முதன் முதலாகப்
போடப்பட்ட கொத்துக் குண்டுகள் அடைக்கப்பட்ட “பீப்பாவின்” வெளிப்புறத்தில்
ருஷ்ய மொழிச் சிறிலிக் (Cyrillic) எழுத்துக்கள் காணப்பட்டன.

இதைச் சர்வதேச சமூகத்தின் கவனத்திற்குக் கொண்டு வந்த பிறகு ருஷ்ய மொழி எழுத்துக்கள்ஈழத் தமிழினத்தின் விடுதலைப் போராட்டம் குருதியில் தொடங்கிக் குருதியில் முடிந்திருக்கிறது. Adolf-hitler
மீது தார் பூசி மறைக்கப்பட்ட பின் அதே குண்டுகள் தாக்குதலுக்குப்
பயன்படுத்தப்பட்டன. ஜேர்மன் சர்வாதிகாரி ஆடொல்ப் கிற்லர் நடத்திய யூத இன
அழிப்பிற்கு நிகரான இன அழிப்பை துருக்கி அரசு 1915 தொடக்கம் 1923 வரையான
காலத்தில் நடத்தியது. கிறிஸ்தவ ஆர்மீனியன் மக்கள் இஸ்லாமிய துருக்கி
சாம்ராச்சியத்தில் இருந்து இராணுவ நடவடிக்கை மூலம் விரட்டப்பட்டனர்.

உணவும் நீரும் வழங்காமல் ஆர்மீனியன் மக்கள் குடும்பம் குடும்பமாக பல
நூறு மைல் நீளமான கால் நடைப் பயணமாக சீரியாப் பாலைவனத்திற்கு
அனுப்பப்பட்டனர். இதில் இறந்த குழந்தைகள் தொடக்கம் முதியோர் வரையானோர்
எண்ணிக்கை 1.5 மில்லியனாக இருக்கலாம் என்று மதிப்பிடப்படுகிறது.

இதே வகையான “மரணப் பயண” உத்தியை (Death March) ஆடொல்ப்
கிற்லர் படைகள் ஒக்ரோபர் 15,1944ல் ஹங்கேரி நாட்டில் நடத்தின. ஹங்கேரி
வாழ் யூதர்கள் கால் நடையாக 200 கி.மீ நீளமான பயணம் மூலம் போலாந்தின்
அவுஸ்விற்ஸ் (Auschwitz) கொலைக்களத்திற்கு அனுப்பப்பட்டனர்.

நவம்பர் மாதக் கொட்டும் பனியில் நடந்து சென்ற பாதையில் கொல்லப்பட்ட
யூதர்கள் எண்ணிக்கை மாத்திரம் 10,000 இருக்கலாம் என்று மதிப்பிடப்படுகிறது.
சுவீடன், சுவற்சர்லாந்துத் தூதரக அதிகாரிகள், குறிப்பாக சுவீடன் நாட்டு
றவுல் வலன்பேர்க். (Raoul Wallenberg) போன்றோர் சில பெறுமதிமிக்க மீட்புப் பணிகளைச் செய்தனர். என்றாலும் நடை பயணமும் படுகொலைகளும் தொடர்ந்தன.

கிளிநொச்சி தொடக்கம் முள்ளிவாய்க்கால் வரை தமிழீழ மக்கள் சிங்களப்
படையினரால் விரட்டிச் செல்லப்பட்டனர். சடலங்களை அடக்கம் செய்வதற்கு அவகாசம்
வழங்கப்படவில்லை. முள்ளிவாய்க்காலில் இன அழிப்பின் இறுதிக் கட்டம்
நிறைவேற்றப்பட்டது.

முள்ளிவாய்க்கால் முற்றாகச் சுற்றி வளைக்கப்பட்டது. கள நிலவரம்
இராணுவத்திற்குச் சாதகமாக இருந்தது. தாக்குதல் இல்லாமல் முள்ளிவாய்க்காலைக்
கைப்பற்றியிருக்க முடியும் ஆனால் படைகள் படுகொலைக் குறிக்கோளை
நிறைவேற்றின.

முள்ளிவாய்க்கால் நோக்கிய படை நகர்வை அமெரிக்க, இந்திய உளவுப் படையினர்
தரை மார்க்கமாகவும் செய்மதி மூலமாகவும் கண்காணித்தனர். இந்திய உளவுப்படை
அதிகாரிகள் ஜம்பது பேர் வன்னிக் காட்டில் முகாமிட்டு கண்காணிப்பில்
ஈடுபட்டனர். ஜனவரி 2009ல் கிளிநொச்சி வீழ்ச்சி அடைந்த பிறகு இந்திய
உளவுப்படை அதிகாரிகள் விமானம் மூலம் கண்காணிக்கத் தொடங்கினர்.

ஜநா நியமித்த சிறிலங்கா போர் குற்றங்களை ஆய்வு செய்த நிபுணர் குழுவினர்
தமது அறிக்கையில் ஜெனோசைற் என்ற இனப் படுகொலையைக் குறிப்பிடும் சொல்லைப்
பயன்படுத்தாமல் விட்டுள்ளனர். இதற்குக் காரணம் இருக்கிறது. சர்வதேச
சட்டத்தின் கீழ் ஜெனோசைற் ஒரு பாரிய குற்றச் செயல். அதைத் தடுப்பது,
தண்டிப்பது, அதில் ஈடுபடாமல் இருப்பது ஒவ்வொரு நாட்டின் பொறுப்பாகும்.

முள்ளிவாய்க்கால் இனப் படுகொலை நடந்த போது தடுக்க வேண்டிய பொறுப்பு
வாய்ந்த உலக நாடுகள் இனப் படுகொலைக்கு அனுசரணையும் ஊக்குவிப்பும் வழங்கின.
இதை நன்கு அறிந்த நிபுணர்குழு அந்தச் சொல்லைப் பயன்படுத்தாமல் விட்டுள்ளது.

ஈழத் தமிழினத்தின் விடுதலைப் போராட்டம் குருதியில் தொடங்கிக் குருதியில் முடிந்திருக்கிறது. Sre%2001

பொஸ்னியா போர் நடந்த காலத்தில் சிறேபிறெனிக்காவில் (Srebrenica)
8000 முஸ்லிம் ஆண்களும் சிறுவர்களும் சேர்பியப் படைகளால் யூலை 1995ல்
படுகொலை செய்யப்பட்டனர். 400 பேர் கொண்ட நெதர்லாந்தைச் சேர்ந்த ஜநா
பாதுகாப்புப் படை காவலுக்கு நின்றது. ஆனால் அவர்கள் படுகொலையை
நிறுத்தவில்லை.

ஈழத் தமிழினத்தின் விடுதலைப் போராட்டம் குருதியில் தொடங்கிக் குருதியில் முடிந்திருக்கிறது. Sre

இந்தப் படுகொலையை விசாரணை செய்த ஜநாவின் சர்வதேச நீதி மன்றம் (Un International Court of Justice)
அதை ஜெனோசைற் என்று 2007ல் தீர்ப்பு வழங்கியது. சிறேபிறேனிக்காவில்
கொல்லப்பட்டோரிலும் பார்க்கப் பன்மடங்கானோர் முள்ளிவாய்க்காலில் படுகொலை
செய்யப்பட்டனர். அதை ஜெனோசைற் என்று தீர்ப்பு வழங்க ஏன் தயக்கம்
காட்டப்படுகிறது.

ஜநா வரலாற்றில் சிறேபிறேனிக்கா படுகொலைகள் ஒரு கறுப்பு அத்தியாயமாக இடம்
பெறுகிறது. முள்ளிவாய்க்கால் ஜநா வரலாற்றில் படுமோசமான இருள் சூழ்ந்த
அத்தியாயமாக அமைகிறது. முள்ளிவாய்க்கால் படுகொலைகள் நடைபெற்ற போது சர்வதேச
சமூகத்திற்கு அறைகூவல் விடுக்கப்பட்டது.

தமிழர் புனர்வாழ்வுக் கழகத் தலைவர் லோறன்ஸ் திலகர் பாதுகாக்கும் பொறுப்பு (Responsibility to Protect – R2P) என்ற கோட்பாட்டின் கீழ் இனப் படுகொலையை தடுத்து நிறுத்தும் படி சர்வதேச சமூகத்தை கேட்டார்.

ஆனால் போருக்கு எல்லா வகையிலும் உதவிய சர்வதேச சமூகத்தால் அவருடைய
கோரிக்கைக்கு செவி சாய்க்க முடியவில்லை. ஈழத் தமிழர்களுக்கு
முள்ளிவாய்க்கால் தொடர்பான சில முக்கிய கடமைகள் இருக்கின்றன.

1. முள்ளிவாய்க்கால் படுகொலை தொடர்பான முழு விபரங்களும் திரட்டப்பட்டு
ஆவணப் படுத்தப் படவேண்டும். நீதி விசாரணைக்கான பிரசார முயற்சிகளை எடுக்க
வேண்டும்.

2. முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்டோர், காணமற் போனோரின் பெயர்,
முகவரி விவரங்கள் சேகரிக்கப்பட வேண்டும். ஒரு ஈழத் தமிழனாவது பெயர் முகவரி
இல்லாமல் சாகக் கூடாது.

3. முள்ளிவாய்க்காலில் வீழ்ந்தோரின் சடலங்களுக்கு என்ன நடந்தது என்று கண்டறியப்பட வேண்டும்.

தமிழீழ தனி நாட்டுக் கோரிக்கையை முள்ளிவாய்க்கால் நிறுத்தப் போவதில்லை.
சுய நிர்ணயக் கோட்பாட்டின் அடிப்படையில் தமிழீழத் தனி நாட்டின் தோற்றம்
சாத்தியமே. இதற்கான உழைப்பை உலகத் தமிழினம் சிரமம் பாராது மேற்கொள்ள
வேண்டும்.
– செண்பகத்தார்
http://www.eelamview.com/2012/05/26/mullivaikal-3/


மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» செங்கல்பட்டு முகாமில் ஈழத் தமிழர்கள் 9 வது நாளாக பட்டினிப் போராட்டம்! மரத்தில் ஏறியும் போராட்டம்
» விடுதலைப் போராட்டம் ஏன் தொடங்கியது, விடுதலைப் புலிகள் எவ்வாறு உருவாகினார்கள்
» விடுதலைப் போராட்டம் ஏன் தொடங்கியது, விடுதலைப் புலிகள் எவ்வாறு உருவாகினார்கள், அவர்கள் எங்கிருந்து உருவாகினார்கள், அவர்களின் போராட்ட வரலாறு என்ன, அவர்கள் எதற்காகப் போராடினார்கள்?
»  ஒரு விடுதலைப் போராட்டம் வெற்றி பெற்றது
» 1 மில்லியன் எலும்புகள்: வெள்ளை மாளிகைக்கு முன்னர் ஈழத் தமிழர் போராட்டம் !

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum