TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 3:01 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 3:03 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Apr 24, 2024 2:31 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 22, 2024 9:07 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


முல்லைப் பெரியாறு அணையை உடைக்க முயன்றால் கேரளா செல்லும் சாலைகளில் நிரந்தரத் தடை: வைகோ

Go down

முல்லைப் பெரியாறு அணையை உடைக்க முயன்றால் கேரளா செல்லும் சாலைகளில் நிரந்தரத் தடை: வைகோ Empty முல்லைப் பெரியாறு அணையை உடைக்க முயன்றால் கேரளா செல்லும் சாலைகளில் நிரந்தரத் தடை: வைகோ

Post by ஜனனி Sun May 20, 2012 6:11 pm


முல்லைப் பெரியாறு அணையை உடைக்க முயன்றால் கேரளா செல்லும் சாலைகளில் நிரந்தரத் தடை: வைகோ Vaiko





சென்னை,
மே.20: முல்லைப் பெரியாறு அணையை உடைக்க முயன்றால் கேரளா செல்லும்
சாலைகளில் நிரந்தரத் தடை ஏற்படுத்தி பொருளாதார முற்றுகை போடுவதை தவிர்க்க
இயலாது என்று மதிமுக பொதுச்செயலர் வைகோ எச்சரித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: நேற்றைய
தினம் கேரள முதல்வர் உம்மன்சாண்டி, முல்லைப் பெரியாறு அணை பிரச்னை
குறித்து தமிழக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த விரும்புவதாகவும், தமிழக
விவசாயிகளின் பிரதிநிதிகளோடும், வைகோ அவர்களோடும் பேச்சுவார்த்தை நடத்தத்
தயார் என்று அறிவித்த செய்தி கேரள ஊடகங்களில் வெளியாகியுள்ளது.இது
கேரள அரசின் வஞ்சகமான ஒரு சூழ்ச்சித் திட்டமாகும். பென்னிக் குயிக் கட்டிய
முல்லைப் பெரியாறு அணை இன்னும் 900 ஆண்டுகளுக்கு தமிழ் நாட்டிற்கே
சட்டபூர்வமான உரிமையுள்ள அணையாகும். அதற்குப் பின்னரும் அந்த உரிமையை
நிலைநாட்டிக் கொள்ளும் விதத்தில்தான் ஒப்பந்தம் முன்னர் போடப்பட்டது.இடுக்கி
அணைக்கு தண்ணீர் கொண்டுபோகவேண்டும் என்பதற்காக 1979 இல் முல்லைப் பெரியாறு
அணைக்கு ஆபத்து என்று அப்பட்டமான ஒரு பொய்யை கேரளத்தின் சில ஏடுகளும்,
ஆட்சியாளர்களும் பரப்பியதால் நியாயமற்ற முறையில் அன்றைய முக்கூட்டுப்
பேச்சுவார்த்தையில் ஒரு முடிவு எடுக்கப்பட்டு அணை நீர்மட்டம் 152
அடியிலிருந்து 136 அடியாக குறைக்கப்பட்டது.2001 ஜனவரியில் மத்திய
நீர்வள ஆணையத் தலைவர் கே.சி.தாமஸ் முல்லைப் பெரியாறு அணை வலுவாக இருக்கிறது
என்றும், நீர் மட்டத்தை 145 அடி வரை உயர்த்திக்கொள்ளலாம் என்றும்
அறிவித்ததால் கேரள அரசு சட்டமன்றதைக்கூட்டி நீர்மட்டத்தை 136 அடிக்கு மேல்
உயர்த்தக்கூடாது என்று தீர்மானம் நிறைவேற்றியது.கேரள முதலமைச்சரும்,
தமிழக முதலமைச்சரும் இதனை அடுத்து டெல்லியில் சந்தித்து இதுபற்றி நடத்திய
பேச்சுவார்த்தை 20 நிமிடங்களில் கவைக்கு உதவாமல் போயிற்று. ஏற்கனவே
இப்பிரச்சினை குறித்து முதலமைச்சர்கள் மட்டத்தில், நீர்ப்பாசனத்துறை
அமைச்சர்கள் மட்டத்தில், அதிகாரிகள் மட்டத்தில் 22 முறை நடைபெற்று கேரளம்
கடைப்பிடித்த நியாயமற்ற அநீதியான அணுகுமுறையால் பலனற்றுப் போயிற்று.அணை
வலிமை குறித்து பிரார் தலைமையிலான குழுவும், மிட்டல் தலைமையிலான குழுவும்
ஆய்வு செய்து அணை வலுவாக இருக்கிறது. பூகம்பத்தாலும் ஆபத்து நேராது என்று
அறிக்கைகள் தந்த பின்னணியில், உச்ச நீதிமன்றம் 2006 பிப்ரவரி 27 இல் அணை
பலமானது என்றும், தண்ணீர் மட்டத்தை 142 அடியாக உயர்த்திக்கொள்ளலாம்
என்றும், பேபி அணையை வலுப்படுத்திக்கொண்டு 152 அடி வரை உயர்த்தலாம் என்றும்
கேரள அரசு இதற்கு எந்த முட்டுக்கட்டையும் போடக்கூடாது என்றும் தீர்ப்பு
அளித்தது. ஆனால் கேரள அரசு அந்தத் தீர்ப்பை காலில் போட்டு மிதித்துவிட்டு,
முல்லைப் பெரியாறு அணையை கேரள அரசின் அணைப்பட்டியலில் புதிதாகச்
சேர்த்துக்கொண்டு நீர் மட்டம் 136 அடி தான் என்றும் முல்லைப் பெரியாறு
அணையை உடைப்பதற்கு கேரள அரசுக்கு உரிமை உண்டு என்று இந்திய இறையாண்மைக்கும்
ஒருமைப்பாட்டுக்கும் சவால் விடுத்து அக்கிரமமான சட்டத்தை நிறைவேற்றியது.
அந்தச் சட்டத்தை செல்லாததாக ஆக்கவேண்டும் என்று தமிழக அரசு உச்ச
நீதிமன்றத்தில் தொடுத்த வழக்குதான் தற்போது நிலுவையில் இருக்கிறது.கேரளம்
நயவஞ்சகமாக வழக்கை வாய்தா கேட்டு இழுத்தடித்து உச்சநீதிமன்றத்தின் மூன்று
நீதிபதிகள்அமர்வு தீர்ப்பு அளிக்க இருந்த சமயத்தில் வழக்கை அரசியல் சட்ட
அமர்வுக்கு மாற்ற வேண்டும் எனக்கூறியதற்கு அன்றைய தி.மு.க. அரசும்
உடன்பட்டதால், வழக்கு அரசியல் சட்ட அமர்வுக்குச் சென்றது.அதனால்தான்
நீதிபதி ஆனந்த் தலைமையில் ஐந்துபேர்கொண்ட உயர்மட்ட அதிகாரக்குழு
அமைக்கப்பட்டது. அந்தக் குழுவும் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு பென்னி
குயிக் அணை வலுவாக உள்ளது என்றும், அணைக்கு ஆபத்து இல்லை என்றும், நீர்
மட்டத்தை 142 வரை உயர்த்திக்கொள்ளலாம் என்றும், உச்ச நீதிமன்றத்தில்
அறிக்கை தாக்கல் செய்தது. ஆனால், அதே குழு நியாயமற்ற முறையில் மத்திய
அரசின் அனுமதி பெற்று கேரளம் புதிய அணையும் கட்டிக்கொள்லாம் என்றும் யோசனை
கூறியுள்ளது. இதில்தான் தமிழ்நாட்டிற்கு ஆபத்து காத்திருக்கிறது. கேரள அரசு
ஏற்கனவே புதிய அணை கட்ட 660 கோடி ஒதுக்கப்படும் என்றும், தமிழகத்திற்கு
உரிமையான பென்னி குயிக் அணையை உடைப்பதற்கு 50 கோடி ஒதுக்கப்படும் என்றும்
அறிவித்துள்ளது.ஏற்கனவே நீர்மட்டம் 136 அடியாக
குறைக்கப்பட்டுள்ளதால், இதுவரை ஆண்டுக்கு 130 கோடி வீதம் 32 ஆண்டுகளில்
4,160 கோடி ரூபாய் நட்டம் தமிழகத்திற்கு ஏற்பட்டுள்ளது.தண்ணீர்
மட்டத்தை 136 அடிக்கு மேல் உயர்த்தக்கூடாது என்று தமிழக நலனுக்கு
எதிராகத்தான் கே.டி.தாமஸ் கருத்தை பதிவு செய்துள்ளார். பென்னி குயிக் அணை
பாதுப்பாக இருக்கிறது என்று ஐவர் குழு கருத்துக்கு உடன்பட்டதனால்தான்
கேரளத்தில் அவருக்கு கண்டனமும் எதிர்ப்பும் ஏற்பட்டது.இதற்கிடையில்
கடந்த வருடம் கேரள சட்டமன்றத்தில் தண்ணீர் மட்டத்தை 120 அடிக்கு குறைக்க
வேண்டும் என்று மேலும் அக்கிரமமான தீர்மானத்தை நிறைவேற்றினார்கள். கேரள
அரசு வழக்கறிஞர் தண்டபாணி கேரள உயர்நீதிமன்றத்தில் கடந்த டிசம்பரில் அணை
பாதுகாப்பானது என்றும், வாதத்திற்காக உடையும் என்றாலும் 142 அடிக்கு உயத்தி
இருந்தாலும் வெறும் 6 டி.எம்.சி. கொள்ளளவு நீர்தான் வெளியேறும் என்றும்,
70 டி.எம்.சி.கொள்ளவு கொண்ட இடுக்கி அணை அதனை ஏற்றுக்கொள்ளும் என்றும்,
முல்லைப்பெரியாறு அணைக்குக் கீழே மொத்தம் 450 குடும்பங்கள்தான்
வசிக்கின்றனர் என்றும் கூறி கேரள அரசின் பித்தலாட்டத்தை
அம்பலப்படுத்தினார்.ஆனந்த் தலைமையிலான குழுவின் ஆய்வுக்கு உள்ளான
பென்னிக் குயிக் அணையில் போடப்பட்ட 8 ஆழ்துளைகளை மூடவிடாமல் தமிழக அரசின்
பொறியாளர்களை கேரள அதிகாரிகள் அராஜகம் செய்து தடுத்து வருகின்றனர்.அணையை
உடைப்பதற்கான கேரளத்தின் சதித் திட்டமும் அச்சுறுத்திக்கொண்டு இருக்கிறது.
பென்னி குயிக் அணையால் கேரளாவிற்கு எந்த ஆபத்தும் ஏற்படாது என்பதை கேரள
மக்கள் உணர்ந்துகொள்ள வேண்டும்.தமிழ்நாட்டிலே இருந்துதான்
கேரளாவிற்கு அரிசி, பருப்பு, காய்கறி, பால், ஆடு மாடுகள் சென்றாக வேண்டும்.
பென்னிக் குயிக் அணையை கேரளம் உடைக்க முயற்சித்தால் அனைத்துச் சாலைகளிலும்
நிரந்தரத் தடை ஏற்படுத்தி பொருளாதார முற்றுகை போடுவது தவிர்க்க இயலாது
என்பதையும், அதனால் கேரள மக்களுக்கு ஏற்படும் இன்னல்களையும், அணையை
உடைத்தால் இருதரப்பிலும் ஏற்படும் விபரீதங்கள் துன்பத்தில் முடியும்
என்பதையும் கேரள மக்கள் உணர்ந்துகொள்ள வேண்டும்.எனவே கேரள முதல்வர்கூறும் பேச்சு வார்த்தை என்பது ஒரு தந்திரமான ஏமாற்று வேலையாகும்.புதிய
அணை கட்ட மத்திய அரசு ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது. நமக்கு உரிமையான
பென்னிக் குயிக் அணையை உடைப்பதற்கு கேரள அரசும், அரசியல் கட்சிகளும்
சதித்திட்டம் தீட்டி வருவதால் தமிழக அரசும் தமிழக மக்களும் மிகவும்
விழிப்போடு இருந்து நமது அணையையும் தென்தமிழ்நாட்டையும் பாதுகாக்க
வேண்டியது நம் கடமையாகும்.
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» முல்லைப் பெரியாறு அணையை மீண்டும் பார்வையிட அனுமதிக்கலாம்: ஜெ.,
» முல்லைப் பெரியாறு அணையை உடைத்தால் விபரீத விளைவுகள்
» முல்லைப் பெரியாறு அணையை பராமரிக்க தமிழகத்துக்கு அனுமதி
» முல்லைப் பெரியாறு அணை தமிழகத்திற்கு சொந்தமானதுதான்: கேரளா ஒப்புதல்
» சென்னையில் நாளை மறுநாள் முல்லைப் பெரியாறு அணையை பாதுகாக்க போராட்டம்: பாரதிராஜா- தங்கர்பச்சான் பேட்டி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum