TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 4:08 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Wed May 08, 2024 11:33 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 07, 2024 3:00 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


முல்லைப் பெரியாறுக்கு கேரளத்தால் ஆபத்து: பொறியாளர்கள் எச்சரிக்கை

Go down

முல்லைப் பெரியாறுக்கு கேரளத்தால் ஆபத்து: பொறியாளர்கள் எச்சரிக்கை Empty முல்லைப் பெரியாறுக்கு கேரளத்தால் ஆபத்து: பொறியாளர்கள் எச்சரிக்கை

Post by ஜனனி Tue May 15, 2012 7:33 am


முல்லைப் பெரியாறுக்கு கேரளத்தால் ஆபத்து: பொறியாளர்கள் எச்சரிக்கை 13engi



செய்தியாளர்களுக்குப் பேட்டியளிக்கும்
(இடமிருந்து) தமிழ்நாடு பொதுப்பணித்துறை முதுநிலை பொறியாளர்கள் சங்க துணைத்
தலைவர் நடராஜன், ஆலோசகர் சுப்பிரமணியன், ப


சென்னை, மே 14: முல்லைப் பெரியாறு அணை பலவீனமாகாமல் தடுக்க 8 சோதனைத் துளைகளை
உடனடியாக தமிழக போலீஸ் துணையுடன் அடைக்க வேண்டும். இல்லையெனில் அணைக்கு ஆபத்து
ஏற்படும் என்று தமிழ்நாடு பொதுப்பணித் துறை மூத்த பொறியாளர்கள் சங்கம்
எச்சரித்துள்ளது.
இது குறித்து அந்த சங்கத்தைச் சேர்ந்த துணைத் தலைவர்கள் ஆர்.வி.எஸ்.
விஜயகுமார், நடராஜன், சட்ட ஆலோசகர் சுப்பிரமணியன், பொதுச்செயலர் வீரப்பன், பொருளாளர்
செல்வராஜ் ஆகியோர் சென்னையில் திங்கள்கிழமை அளித்த பேட்டி:
முல்லை பெரியாறு அணையை ஆய்வு செய்த நீதிபதி ஆனந்த் தலைமையிலான குழு உச்ச நீதி
மன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது. இதில் முல்லைப் பெரியாறு அணை கட்டுமான தாங்கு
திறனுடையதாகவும், நீரழுத்தத்தையும் நில நடுக்கத்தையும் தாங்கும் வகையிலும்
பாதுகாப்பாக உள்ளது. எனவே அணையின் நீர்மட்டத்தை 136 அடியிலிருந்து 142 அடிக்கு
உயர்த்திக்கொள்ளலாம் என்று கூறியுள்ளது.
அத்துடன் அணையின் நீர்மட்டத்தை 142 அடியிலிருந்து 152 அடிக்கு உயர்த்த மற்றொரு
வல்லுனர் குழு அமைக்கப்பட வேண்டும். இந்திய அரசின் திட்டக்குழு மற்றும்
சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதியுடன் கேரளம் தனது சொந்த செலவில் ஒரு புதிய
அணையைக் கட்டிக்கொள்ளலாம். அதுவரை 1886 மற்றும் 1976-ம் ஆண்டு ஒப்பந்தப்படி முல்லைப்
பெரியாறு அணையின் அனைத்து உரிமைகளும் தமிழக அரசுக்கு உண்டு. புதிய அணை இயக்கம்
மற்றும் பராமரிப்பிற்கான புதிய ஒப்பந்தத்தை இருமாநிலங்களும் செய்து கொள்ளவேண்டும்.
இதற்காக இரண்டு மாநில அரசுகளின் பிரதிநிதிகள் கொண்ட குழுவை அமைக்க வேண்டும். ஆபத்து
காலத்தில் நீரை வெளியேற்ற சுரங்க மதகு புதிதாக கட்ட வேண்டும் என்று ஆலோசனைகளையும்
அளித்துள்ளது. இந்த ஆலோசனைகள் கேரள அரசுக்கு சாதகமானவை. இந்த ஆலோசனைகளை அந்த
வல்லுனர் குழு வழங்க தேவையில்லாதது.
ஆக்கிரமிப்பு: முல்லைப்பெரியாறு அணையின் தற்போதுள்ள நீர்த்தேக்க அளவான 136
டிக்குமேல் உள்ள சுமார் 3600 ஏக்கர் பரப்பளவில் முறையான அனுமதியின்றி ஹோட்டல்கள்,
தங்கும் விடுதிகள் கட்டப்பட்டு சுற்றுலாத்தலமாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது.
இந்தக் கட்டடங்களின் உரிமையாளர்கள் கேரளத்தைச் சேர்ந்தவர்கள். இதனால் கேரள
சுற்றுலாத் துறைக்கு பல கோடி ரூபாய் லாபம் வருகிறது. அணையின் உயரத்தை
அதிகப்படுத்தினால் இந்த கட்டடங்களுக்கு பாதிப்பு வரும் அதனால்தான் கேரள அரசு அணையின்
உயரத்தை அதிகப்படுத்த தடைபோடுகிறது. அணை தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இருந்தும்கூட
இந்த ஆக்கிரமிப்பு தடுக்கப்படவில்லை.
போலீஸ் பாதுகாப்புடன்... நீதிபதி ஆனந்த் தலைமையிலான ஐவர் குழு அணையின் வலுவைச்
சோதித்திட 130 முதல் 190 அடி வரையிலான ஆழத்தில் 8 அடி விட்டத்தில் துளைகளை போட்டு
மாதிரி சேகரித்துள்ளது. கடந்த 4 மாதங்களாக அந்த துளைகள் அப்படியே உள்ளன. அடுத்த
மாதம் பருவ மழை தொடங்க உள்ளது. அதற்குள் துளைகளை அடைக்கவேண்டும். அந்த துளைகள்
அப்படியே இருந்தால் தண்ணீர் உள்புகுந்து அணை பலவீனமாக்கூடும். அந்த துளைகளை
கான்கிரீட் கொண்டு அடைக்க தமிழக பொறியாளர்கள் முயல்வதை அணைக்கு பாதுகாப்புக்கு
இருக்கும் கேரள போலீஸôர் தடுத்துவருகின்றனர். இது ஆய்வுக்குழுவுக்கு
தெரிவிக்கப்பட்டும் எந்த நடவடிக்கையும் இல்லை.
1961-ல் தமிழக போலீûஸ பாதுகாப்பு பணியில் இருந்து விலக்கிக்கொண்டு கேரள
போலீஸôர் பாதுகாப்புக்கு நியமிக்கப்பட்டனர். அந்த போலீஸôருக்கு தமிழக அரசு ஊதியம்
வழங்கிக் கொண்டு இருக்கிறது. எனவே அணையின் பாதுகாப்புப் பணிக்கு தமிழக போலீûஸ
நியமித்து அவர்கள் உதவியுடன் அந்த துளைகளை அடைக்க வேண்டும். துளைகள்
அடைக்கப்படாவிட்டால் கேரளத்தால் அணைக்கு ஆபத்து வரக்கூட வாய்ப்பு உள்ளது.
சட்டப்படியும், ஒப்பந்தப்படியும் முல்லைப் பெரியாறு அணை தமிழகத்தின் சொத்து.
அதன் முழு உரிமையும் தமிழக அரசுக்கே உள்ளது. இது ஒரு முறைக்கு பல முறை
உச்சநீதி மன்றத்தால் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனந்த் குழுவும் அதன் அறிக்கையில்
உறுதி செய்துள்ளது. எனவே முல்லைப்பெரியாறு அணையை பாதுகாக்க தமிழக அரசு விரைவாகச்
செயல்பட்டு, தமிழக போலீஸ் படையை நிறுத்தி உரிமையை நிலை நாட்டவேண்டும் என்று அவர்கள்
கூறினர்.
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» இந்திய ஒருமைப்பாட்டுக்கு ஆபத்து: வைகோ எச்சரிக்கை
» ஷியோமி போன் மூலம் ஆபத்து:இந்திய விமானப்படை எச்சரிக்கை
» 2020 இல் பூமிக்குக் காத்திருக்கும் ஆபத்து!: விஞ்ஞானிகள் எச்சரிக்கை!
» அணு ஆயுதம் பொருத்திய சீன ஏவுகணையால் இந்தியாவுக்கு ஆபத்து; அமெரிக்கா எச்சரிக்கை
» காஷ்மீர் பிரச்சினை: உலக அமைதிக்கு ஆபத்து என பாக். பிரதமர் எச்சரிக்கை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum