TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 5:06 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:45 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:44 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun May 12, 2024 10:47 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


கவர்ச்சி நடிகை அல்போன்சாவின் காதலன் தூக்கிட்டு தற்கொலை

Go down

கவர்ச்சி நடிகை அல்போன்சாவின் காதலன் தூக்கிட்டு தற்கொலை Empty கவர்ச்சி நடிகை அல்போன்சாவின் காதலன் தூக்கிட்டு தற்கொலை

Post by ஜனனி Mon Mar 05, 2012 7:41 pm

கவர்ச்சி நடிகை அல்போன்சாவின் காதலன் தூக்கிட்டு தற்கொலை Evening-Tamil-News-Paper_14745295048
சென்னை: பிரபல கவர்ச்சி நடிகை அல்போன்சாவின் காதலர், அவரது சேலையிலேயே
தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சென்னை விருகம்பாக்கத்தில்
அல்போன்சாவின் வீட்டில் நள்ளிரவில் நடந்த இந்த சம்பவம், அப்பகுதியில்
பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் கல்பாக்கம்
புதுப்பட்டினத்தைச் சேர்ந்தவர் வினோத்குமார் (28). இவர், சினிமாவில்
நடிப்பதற்காக தனது பெயரை சாய் என்று மாற்றிக் கொண்டார். மறைந்த நடிகர்
முரளி சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு படம் தயாரித்தார். அந்தப் படத்தில் சாய்
ஹீரோவாக நடித்துக் கொண்டிருந்தார். ஆனால் அந்தப் படம் பாதிலேயே
நின்றுவிட்டது. பிறகு கவசம் என்ற படத்தில் ஹீரோவாக நடித்தார்.

தமிழில்
சில படங்களில் கவர்ச்சி வேடங்களில் நடித்திருப்பவர் அல்போன்சா. தில்
படத்தில் மச்சான் மீசை வீச்சருவா உள்பட பல படங்களில் கவர்ச்சி நடனம்
ஆடியுள்ளார். இவரது அண்ணனுடன் வினோத்குமாருக்கு பழக்கம் ஏற்பட்டது.
இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்தனர். இதனால் அல்போன்சா வீட்டுக்கு
வினோத்குமார் அடிக்கடி சென்று வந்தார். இந்நிலையில் தனது கணவர் நோபலுடன்
(32) அல்போன்சாவுக்கு தகராறு ஏற்பட்டதால் இருவரும் பிரிந்துவிட்டனர்.
இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. அந்த குழந்தையுடன் அல்போன்சா,
விருகம்பாக்கம் போலீஸ்நிலையம் எதிரே உள்ள சிப்ரா சியாமளா கார்டன்
அடுக்குமாடி குடியிருப்பில் முதல்மாடியில் வசித்து வருகிறார்.

இந்நிலையில்
அல்போன்சாவுக்கும், வினோத்குமாருக்கும் காதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் அல்போன்சாவின் வீட்டிலேயே வினோத்குமாரும் தங்கியிருந்தார். அப்போது
தன்னை திருமணம் செய்யும்படி அல்போன்சாவிடம் வினோத்குமார் வற்புறுத்தி
வந்துள்ளார். ஆனால் அல்போன்சாவோ, ‘எனக்கு ஒரு குழந்தை உள்ளது. எப்படி நாம்
திருமணம் செய்து கொள்ள முடியும்?’ என்று கூறி திருமண பேச்சை தவிர்த்து
வந்திருக்கிறார். இதனால் அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்தநிலையில்
நேற்று காலையிலும் அதேபோல¢ திருமணத்துக்கு வினோத்குமார்
வற்புறுத்தியுள்ளார். இதற்கு அல்போன்சா மறுத்து வந்தார். நேற்றிரவு
இருவரும் தனித்தனி அறையில் தூங்கினர். நள்ளிரவில் திடீரென்று எழுந்து
சென்று அல்போன்சா பார்த்தபோது, சேலையில் தூக்கிட்டு வினோத்குமார் தொங்கிக்
கொண்டிருந்ததை பார்த்து அதிர்ந்தார். உடனே, அருகில் உள்ள டாக்டரை அல்போன்சா
வரவழைத்தார். அவர் பரிசோதித்துப் பார்த்து விட்டு வினோத்குமார்
இறந்துவிட்டதாக தெரிவித்தார்.

இதுகுறித்து விருகம்பாக்கம்
போலீசுக்கு அல்போன்சா தகவல் தெரிவித்தார். போலீசார் விரைந்து வந்து சடலத்தை
கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு
ஏற்பட்டது. இதற்கிடையில் வினோத்குமாரின் பெற்றோருக்கு தகவல் தெரிந்ததும்,
அவர்கள் இன்று காலை விருகம்பாக்கம் காவல் நிலையத்துக்கு வந்தனர். அங்கு
அவர்கள் அளித்த புகாரில் எங்கள் மகன் மரணத்தில் மர்மம் உள்ளது. அவன்
கொல்லப்பட்டிருக்கிறான். அவன் சாவுக்கு அல்போன்சாதான் காரணம் என்று
குற்றம்சாட்டியுள்ளனர். இந்த சம்பவம் சினிமா உலகில் பெரும் பரபரப்பை
ஏற்படுத்தியுள்ளது.

அல்போன்சா தற்கொலை முயற்சி

வினோத்குமார் தற்கொலை செய்து கொண்ட தகவல் கிடைத்ததும் விருகம்பாக்கம் போலீசார், அன்போன்சா வீட¢டில் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில்
வீட்டில் இருந்த அல்போன்சா, திடீரென்று ஏராளமான தூக்க மாத்திரைகளை
சாப்பிட்டு மயங்கி விழுந்தார். உடனே அவரது வீட்டில் இருந்தவர்கள்,
அல்போன்சாவை வடபழனியில் உள்ள சூர்யா மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு
அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
காதலன் தற்கொலை செய்து கொண்ட நிலையில், அல்போன்சாவும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பணம் பறிக்க திட்டம் தீட்டி கொன்று விட்டனர்

இறந்துபோன வினோத் குமாரின் மாமா சுகுமாறன். விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் இன்று காலை அளித்த புகார் மனுவில கூறியிருப்பதாவது:
வினோத்
குமாரின் குடும்பம் வசதியானது. அவரிடம் பணம் அதிகமாக இருப்பதை நோட்டம்
விட்ட ராபர்ட் அதை பறிக்க திட்டம் தீட்டியுள்ளார். வினோத் குமாருடன் தனது
தங்கை அல்போன்சாவை பழக வைத்தார். பணம் பறிக்கும் முயற்சியில் கடைசி கட்டமாக
அண்ணன், தங்கை இருவரும் சேர்ந்து வினோத் குமாரை கழுத்து நெறித்து கொன்று
விட்டனர். அவர்களை உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு கூறியுள்ளார்.

வினோத் அவசரப்பட்டுவிட்டார் : அல்போன்சா அம்மா கதறல்

வடபழனியில்
உள்ள தனியார் மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் அல்போன்சா
சிகிச்சை பெற்று வருகிறார். அவரது தாய் ஓமணா, நிருபர்களிடம் கூறியது:
வளசரவாக்கத்தில் வசித்து வருகிறேன். சம்பவம் குறித்து அல்போன்சா எனக்கு
போனில் தகவல் தெரிவித்தாள். நான் பதறியடித்து வந்தபோது, அப்போன்சாவும்
தூக்க மாத்திரை சாப்பிட்டு மயங்கி கிடந்தாள். அவளை மருத்துவமனையில்
சேர்த்தேன். ஏற்கனவே ஒருவரை காதலித்து அல்போன்சா திருமணம் செய்தாள். ஒரு
குழந்தையும் உள்ளது. கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்த அவளது கணவர்
துபாயில் வசிக்கிறார். இந்நிலையில்தான் வினோத் குமார் எனது மகளை
காதலித்தார். விவாகரத்து வாங்கியதும் வினோத்தை திருமணம் செய்ய அல்போன்சா
முடிவு செய்திருந்தாள். அதற்குள் வினோத் குமார் அவரசரப்பட்டு இந்த முடிவை
எடுத்துவிட்டார். அவர் தற்கொலைக்கு என்ன காரணம் என்பது எனக்கு தெரியவில்லை.

ரத்த காயம் இருந்தது : தந்தை பேட்டி

வினோத்குமாரின்
அப்பா பாண்டியன் நிருபர்களிடம் கூறியதாவது: ரியல் எஸ்டேட் தொழில்
செய்கிறேன். காஞ்சிபுரம் மாவட்டம், திருக்கழுக்குன்றம் எம்ஜிஆர் மன்ற இணை
செயலாளராக உள்ளேன். சினிமாவில் சாதிக்க வேண்டும் என்று வினோத் வெறியாக
இருந்தான். இதனால் வளசரவாக்கத்தில் வீடு எடுத்துக் கொடுத்தேன். டான்ஸ்
மாஸ்டர் ராபர்ட் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இவர் அல்போன்சாவின் அண்ணன்.
என் மகனிடம் எப்போதும் பணம் இருக்கும். அந்த பணத்துக்கு ஆசைப்பட்டுத்தான்
ராபர்ட் தன்னுடன் வினோத்தை சேர்த்துக் கொண்டார். சங்கு என்ற படத்தை
தயாரிக்கும்படி வினோத்திடம் ராபர்ட் கூறினார்.

இந்தப் படத்தில்
ராபர்ட்டை டான்ஸ் மாஸ்டராகவும், அல்போன்சாவை முக்கிய வேடத்திலும் நடிக்க
வைக்க வேண்டும் என்று வினோத்தை வற்புறுத்தினர். இந்த நிலையில், நேற்று
நள்ளிரவு 1 மணிக்கு, எனது 2வது மகன் மோகனுக்கு அல்போன்சா போன் செய்தார்.
உங்க அண்ணன் தூக்குப் போட்டு இறந்து விட்டார் என்றார். அல்போன்சா வீட்டின்
கீழ் தளத்தில் வினோத்தின் சடலம் இருந்தது. அவனது வாய், மூக்கு, தலையில்
ரத்த காயம் இருந்தது. வினோத்குமாரை அடித்துக் கொலை செய்துள்ளனர். இவ்வாறு
பாண்டியன் கூறினார்.
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» இளம் மனைவி மற்றும் குழந்தையைக் கொன்று தானும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட கணவன்
» தெலுங்கானாவுக்காக தற்கொலை செய்துகொள்ளத் தயார் – நடிகை விஜயசாந்தி
» திருமணம் செய்து கொள்ள மறுத்த காதலன் வீட்டில் காதலி தற்கொலை
» முகம் பார்க்காமல் வளர்ந்த காதல்: சந்திப்புக்கு பின் காதலன் தற்கொலை
» தேசிய கொடியை அணிந்து கவர்ச்சி போஸ் நடிகை மல்லிகா ஷெராவத்தை கைது செய்ய ஆர்எஸ்எஸ் போராட்டம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum