TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 17, 2024 8:41 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 17, 2024 5:06 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Thu May 16, 2024 8:45 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun May 12, 2024 10:47 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


மின் தட்டுப்பாடு படிப்படியாக சரியாகும்: முதல்வர் உறுதி

Go down

மின் தட்டுப்பாடு படிப்படியாக சரியாகும்: முதல்வர் உறுதி Empty மின் தட்டுப்பாடு படிப்படியாக சரியாகும்: முதல்வர் உறுதி

Post by அருள் Sat Feb 04, 2012 9:24 pm


மின் தட்டுப்பாடு படிப்படியாக சரியாகும்: முதல்வர் உறுதி Jayalalitha





சென்னை, பிப்.4: தமிழகத்தில் மின் தட்டுப்பாடு படிப்படியாக விரவில் சரியாகும் என்று முதல்வர் கூறியுள்ளார்.இன்று சட்டமன்றத்தில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய அவர் பேசிய கருத்து...எதிர்க்கட்சி
உறுப்பினர்கள் பலரும் தமிழகத்தில் நிலவும் மின் நிலைமை குறித்த தங்களது
கவலைகளை எடுத்துரைத்தனர். மின்வெட்டு தீர்க்கப்படும் என மக்களுக்கு தேர்தல்
வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தும், அது இன்னமும் நிறைவேற்றப்படவில்லை
என்பதை சுட்டிக்காட்டும் வகையில் தங்களது கருத்துகளை தெரிவித்தனர். எனவே,
தமிழ்நாட்டின் மின் நிலைமை தொடர்பான விளக்கங்களை அளிப்பது எனது கடமை என்று
கருதுகிறேன். 2006-ஆம் ஆண்டில் நாங்கள் ஆட்சிப்
பொறுப்பை விட்டுச் சென்ற போது, தமிழ்நாடு மின் மிகை மாநிலமாகத்தான்
இருந்தது. பின்னர் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தினையடுத்து, 2007-ஆம்
ஆண்டு முதல் தமிழகத்தில் ஏற்பட்ட மின் பற்றாக்குறை; 2008-ஆம் ஆண்டு மிகவும்
அதிகரித்து; நாங்கள் மீண்டும் 2011-ஆம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பை ஏற்கும்
வரை அத்தகைய நிலைமை தொடர்ந்து இருந்தது. 2008-ஆம் ஆண்டு தமிழ்நாட்டின்
மின் தேவை 10,909 மெகாவாட் என்று இருந்த போது, நமக்குக் கிடைக்கப்பெற்ற
மின்சாரத்தின் அளவு 9,459 மெகாவாட் ஆகும். இந்த 9,459 மெகாவாட்
மின்சாரத்தில், வெளிச் சந்தையிலிருந்து பெறப்பட்ட 1,200 மெகாவாட்
மின்சாரமும் அடங்கும். அதாவது 1,450 மெகாவாட் என்ற அளவில் மின் பற்றாக்குறை
இருந்தது. இதனையடுத்து, 1.11.2008 முதல் மிக அதிகமான
மின் கட்டுப்பாட்டு முறைகளை, முந்தைய மைனாரிட்டி தி.மு.க. அரசு கொண்டு
வந்தது. இதன்படி, உயர் அழுத்த தொழிற்சாலைகள் மற்றும் வணிக மின்
பயனீட்டாளர்களுக்கு 40 விழுக்காடு மின்வெட்டும்; குறைவழுத்த தொழிற்சாலைகள்
மற்றும் வணிக மின் பயனீட்டாளர்களுக்கு 20 விழுக்காடு மின்வெட்டும்; சென்னை
பெருநகரில் 1ஙூ மணி நேர மின்வெட்டும்; மாநிலத்தின் பிற பகுதிகளில் 2 மணி
நேர மின்வெட்டும்; மின்சாரம் அதிகமாக பயன்படுத்தும் தருணங்களில் சென்னையை
தவிர்த்து பிற இடங்களில் 1 மணி நேர மின் வெட்டும் நடைமுறைப்படுத்தப்பட்டன.
இது தவிர அறிவிக்கப்படாத மின்வெட்டும் பல மணி நேரம் இருந்தது. மேலும்,
விவசாய பயனீட்டாளர்களுக்கு 10 மணி நேரம் மட்டுமே மின் விநியோகம்
செய்யப்படும் என்ற கட்டுப்பாட்டையும் முந்தைய மைனாரிட்டி தி.மு.க. அரசு
விதித்தது. இது மட்டுமல்லாமல், உயர் அழுத்த தொழிற்சாலைகள் மற்றும் வணிக
மின் பயனீட்டாளர்கள் மாலை 6.00 மணி முதல் இரவு 10.00 மணி வரையிலான
காலத்திற்கு 5 விழுக்காட்டிற்குள் மின்சாரம் பயன்படுத்த வேண்டும் என்ற
கட்டுப்பாடும், முந்தைய மைனாரிட்டி தி.மு.க. அரசால் விதிக்கப்பட்டது.
பின்னர் இந்தக் கட்டுப்பாடுகள் சிறிதளவு தளர்வு செய்யப்பட்டன.
எனது தலைமையிலான அரசு பதவியேற்ற உடன், பழுதடைந்த நிலையில் இருந்த மின்
நிலையங்களை உடனடியாக சரி செய்ய போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள்
மேற்கொள்ளப்பட்டன. ஜனவரி 2010 முதல் பழுதடைந்த நிலையில் இருந்த வழுதுர்
எரிவாயு சுழலி மின் நிலையம், கடந்த ஜூன் மாதம் எனது அரசால் இயக்கி
வைக்கப்பட்டது. இதே போன்று, பழுதடைந்திருந்த குத்தாலம் எரிவாயு சுழலி மின்
நிலையம், கடந்த ஜூன் மாதம் இந்த அரசால் சரி செய்யப்பட்டது. இது தவிர,
எனது அரசின் திறமையான நிர்வாக நடவடிக்கை காரணமாக, தற்போதுள்ள மின் உற்பத்தி
நிலையங்களின் மின் உற்பத்தி கணிசமான அளவு அதிகரிக்கப்பட்டது.
கடந்த மைனாரிட்டி தி.மு.க. ஆட்சியில் கூடுதலாக நிறுவப்பட்ட மின் நிறுவு
திறன் வெறும் 206 மெகாவாட் மட்டுமே. ஆனால் 2001 முதல் 2006 வரையிலான எனது
முந்தைய ஆட்சிக் காலத்தில், 2518 மெகாவாட் மின் நிறுவு திறன் கூடுதலாக
நிறுவப்பட்டது. கடந்த தி.மு.க. ஆட்சியில் கூடுதல் மின் நிறுவு திறன்
ஏற்படுத்தாமல் இருந்தது தான், இன்றைக்கும் தொடர்ந்து கொண்டிருக்கும் மின்
பற்றாக்குறைக்கு முக்கிய காரணமாகும். ஆனால், இந்த விவாதத்தில் கலந்து
கொண்டு பேசிய தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களோ தங்கள் ஆட்சிக் காலத்தில் பல
புதிய மின் திட்டங்கள் தீட்டப்பட்டதாக தெரிவித்தார்கள்.
மின் திட்டங்கள் தீட்டப்படுவது ஒரு புறம் இருக்கட்டும். எனது முந்தைய
ஆட்சிக் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட திட்டங்களை, கடந்த ஐந்து ஆண்டுகளில்
முந்தைய மைனாரிட்டி தி.மு.க. அரசு செயல்படுத்தியிருந்தாலே தமிழகம் மின்
பற்றாக்குறையை சந்தித்து இருக்காது. உதாரணமாக, வட
சென்னை அருகில், வல்லூரில் 1000 மெகாவாட் திறன் கொண்ட அனல் மின் நிலையத்தை
தேசிய மின் கழகத்துடன் இணைந்து நிறுவ 12.7.2002 அன்று எனது முன்னிலையில்
புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. தூத்துக்குடியில் 1000
மெகாவாட் திறன் கொண்ட அனல் மின் நிலையத்தை, நெய்வேலி பழுப்பு நிலக்கரி
நிறுவனத்தோடு கூட்டு முயற்சியில் நிறுவ, 19.6.2003 அன்று புரிந்துணர்வு
ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்தத் திட்டங்களுக்குத் தேவையான நிலங்கள்
ஒதுக்கீடு பெறவும்; அனுமதிகளை பெற ஆய்வுகள் நடத்தவும் நடவடிக்கைகள்
மேற்கொள்ளப்பட்டன. வட சென்னை அனல் மின் நிலையத்தில், 500 மெகாவாட் அனல்
மின் நிலையத்தை நிறுவ 12.12.2005-அன்று அரசு ஒப்புதல் வழங்கப்பட்டது. 500
மெகாவாட் திறன் கொண்ட குந்தா நீரேற்று மின் நிலையம் அமைத்திடுவதற்கான
கருத்துருவும் அரசால் ஒப்புக் கொள்ளப்பட்டு, முதற்கட்ட பணிகளை தமிழ்நாடு
மின்சார வாரியம் 8.9.2005 அன்று துவக்கியது. இவை முந்தைய மைனாரிட்டி
தி.மு.க. ஆட்சியில் நிறைவேற்றப்பட்டிருந்தாலே 3,000 மெகாவாட் மின்சாரம்
கூடுதலாக கிடைத்திருக்கும். புதிய மின் திட்டங்களை
தங்களது ஆட்சிக் காலத்தில் துவக்கியதாக தி.மு.க. உறுப்பினர்கள்
கூறியுள்ளார்கள். கடலூர் பவர் கம்பெனி என்னும் நிறுவனத்திற்கு 1,320
மெகாவாட் திறன் கொண்ட அனல் மின் நிலையம் அமைக்க அனுமதி அளித்து;
அதிலிருந்து பெறப்படும் மின்சாரத்தை கொள்முதல் செய்வதற்காக, தமிழ்நாடு
மின்சார வாரியம் அந்த நிறுவனத்துடன் 28.9.2006 அன்று ஓர் ஒப்பந்தத்தை
ஏற்படுத்திக் கொண்டது. ஆனால் தி.மு.க. ஆட்சி முடியும் வரை இந்தத் திட்டம்
நிறைவேற்றப்படுவதில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இது தான் மின்
உற்பத்தியில் முந்தைய தி.மு.க. அரசு செலுத்திய அக்கறை.
தற்போது எனது அரசு பதவியேற்ற பின், தமிழக மின் நிலைமையை சீர் செய்வதற்காக
பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். தற்போது பணிகள் நடைபெற்று வரும்
மின் திட்டங்களை துரிதமாக நிறைவேற்ற எனது அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளை
நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். 600 மெகாவாட் மின்
திறன் கொண்ட வடசென்னை விரிவாக்க மின் திட்டம் யூனிட்-1 விரைவில் பலனுக்கு
வரும் வகையில் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. இருப்பினும், எதிர்பாராத
விதமாக ஹரித்வாரில் உள்ள பாரத் மிகு மின் நிறுவனத்திலிருந்து மின்னாக்கி
ஸ்டேட்டர், அதாவது ழுநநேசயவடிச ளுவயவடிச, எடுத்து வரும் வழியில் மத்தியப்
பிரதேசத்தில் பாலம் இடிந்து ளுவயவடிச ஆற்றில் விழுந்துவிட்டது. இதன்
விளைவாக, இந்தத் திட்டம் நிறைவேற்றப்படுவதில் 7 மாத காலதாமதம்
ஏற்பட்டுவிட்டது. இந்தத் திட்டம் இந்த ஆண்டு ஜூன் மாதம் செயல்பாட்டிற்கு
வரும். 500 மெகாவாட் மின் திறன் கொண்ட வல்லூர் கூட்டு
முயற்சி மின் திட்டம்-ஐ, தேசிய அனல் மின் கழகம் (சூகூஞஊ) மற்றும் தமிழ்நாடு
மின்சார வாரியம் (கூசூநுக்ஷ) ஆகிய நிறுவனங்கள் இணைந்து செயல்படுத்தும்
திட்டம் ஆகும். இதன் மூலம், தமிழகத்திற்கு 375 மெகாவாட் மின்சாரம்
கிடைக்கும். இந்தத் திட்டம் 2010-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முடிக்கப்பட்டு
இருக்க வேண்டும். இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுவதை முந்தைய மைனாரிட்டி
தி.மு.க. அரசு சரியாக கண்காணிக்கத் தவறியதால் காலதாமதம் ஏற்பட்டது.
தற்போது, எங்களது அரசு பொறுப்பேற்றவுடன், இந்தத் திட்டத்தின் நிறுவுப்
பணிகளை தீவிரமாக கண்காணித்து வந்ததன் பயனாக, இந்த ஆண்டு மார்ச் மாதம்
இத்திட்டம் செயல்பாட்டிற்கு வரவுள்ளது. இதே போன்று
தேசிய அனல் மின் கழகம் (சூகூஞஊ) மற்றும் தமிழ்நாடு மின்சார வாரியம்
(கூசூநுக்ஷ) ஆகிய நிறுவனங்கள் இணைந்து செயல்படுத்தும் 500 மெகாவாட் மின்
திறன் கொண்ட வல்லூர் கூட்டு முயற்சி மின் திட்டம்-ஐஐ, 2011 ஆம் ஆண்டு
மார்ச் மாதமே செயல்பாட்டிற்கு வந்திருக்க வேண்டும். ஆனால், முந்தைய
மைனாரிட்டி தி.மு.க. அரசின் அக்கறையின்மை காரணமாக, குறித்த காலத்தில்
இந்தத் திட்டம் செயல்பாட்டிற்கு வரவில்லை. அந்தப் பணிகளையும், தற்போது
நாங்கள் துரிதப்படுத்தி வருகிறோம். இந்த யூனிட் - ஐஐ, இந்த ஆண்டு ஜூன்
மாதம் செயல்பாட்டிற்கு கொண்டு வரப்படும். மேலும், 500
மொகாவாட் மின் திறன் கொண்ட மூன்றாவது யூனிட், அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம்
முதல் செயல்பாட்டிற்கு கொண்டு வரப்படும். 600 மொகாவாட்
மின் திறன் கொண்ட, மேட்டூர் அனல் மின் நிலையத்தின் மூன்றாவது நிலை கடந்த
செப்டம்பர் மாதமே செயல்பாட்டிற்கு வந்திருக்க வேண்டும். முந்தைய தி.மு.க.
ஆட்சிக் காலத்தில் இந்தத் திட்டத்திற்கான பணிகள் ஆமை வேகத்தில்
நடைபெற்றதால், குறிப்பிட்ட காலத்திற்குள், இந்தத் திட்டத்தை
செயல்பாட்டிற்கு கொண்டு வர முடியவில்லை. நாங்கள் எடுத்து வரும் துரித
நடவடிக்கை காரணமாக, இந்தத் திட்டம் இந்த ஆண்டு மார்ச் மாதம்
செயல்பாட்டிற்கு வரும். 600 மெகாவாட் மின் திறன் கொண்ட
வடசென்னை அனல் மின் நிலையத்தின் திட்டம் யூனிட் - ஐஐ, இந்த ஆண்டு அக்டோபர்
மாதத்தில் செயல்பாட்டிற்கு வரும். அதாவது, இந்த ஆண்டு
ஜூன் மாதத்தில் 1950 மெகாவாட் மின்சாரமும்; அக்டோபர் மாதத்தில் மேலும் 600
மெகாவாட் மின்சாரமும் கூடுதலாக கிடைப்பதற்கு வழிவகை செய்துள்ளோம்.
இந்த அரசு பொறுப்பேற்ற பிறகு, அனல் மின் நிலையங்கள் முறையாக
பராமரிக்கப்பட்டு, சிறப்பாக கண்காணிக்கப்படுவதால் அவை மீண்டும் திறம்பட
செயல்படத் துவங்கியுள்ளன. தூத்துக்குடி அனல் மின் நிலையத்தின் கடந்த ஆண்டு
உற்பத்தித் திறன் 82.05 விழுக்காடு தான். தற்போது இதன் உற்பத்தித் திறன்
90.36 விழுக்காடாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதே போன்று, மேட்டூர் அனல் மின்
நிலையத்தின் உற்பத்தித் திறன் 86.88 விழுக்காட்டிலிருந்து 93.19
விழுக்காடாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதே போன்று,
வடசென்னை அனல் மின் நிலைய உற்பத்தித் திறனும் 81.41 விழுக்காட்டிலிருந்து
92.43 விழுக்காடாக அதிகரிக்கப்பட்டுள்ளது. சிறந்த நிர்வாக நடவடிக்கைகளினால்
உற்பத்தித் திறன் இவ்வாறு அதிகரிக்கப்பட்டதன் காரணமாக, இந்த மூன்று அனல்
மின் நிலையங்களிலிருந்தும் 1836 மில்லியன் யூனிட்டுகள் அளவுக்கு மின்சாரம்
கூடுதலாக உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக, தமிழ்நாடு மின்சார
வாரியத்திற்கு 642 கோடி ரூபாய் சேமிப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இது தவிர, வெளிச் சந்தைகளிலிருந்து குறைந்த விலைக்கு மின்சாரம்
பெறப்படுவதன் மூலம் 1020 கோடி ரூபாய் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு
சேமிப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. ! தமிழகத்தில் உள்ள
மின் உற்பத்தி நிலையங்களில் பணிகளை விரைந்து முடிப்பதற்கான நடவடிக்கைகள்
துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வந்தாலும்; தற்போதுள்ள மின் பற்றாக்குறையை
தீர்ப்பதற்கு, வெளிச் சந்தையிலிருந்து தேவையான மின்சாரத்தை கொள்முதல்
செய்யலாமே என்ற வினா பலர் மனதிலும் எழக்கூடும். வெளிச்
சந்தைகளிலிருந்து போதிய மின்சாரத்தைப் பெறுவதில் பல்வேறு தடைகள் உள்ளன.
தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தற்போதைய ஒட்டுமொத்த கடன் சுமை 50,000 கோடி
ரூபாய்க்கு மேல் உள்ளது. மின்சாரம் விற்பனை செய்தவர்களுக்கும்,
ஒப்பந்ததாரர்களுக்கும் கொடுக்கப்பட வேண்டிய நிலுவைத் தொகை 11,500 கோடி
ரூபாய் ஆகும். கடந்த சில ஆண்டுகளாக மின்சார வாரியம் புதியதாக கடனைப்
பெற்று, அதிலிருந்து பழைய கடனுக்கான தவணைத் தொகையையும், வட்டியையும்
செலுத்தி வருகிறது. 2010-2011 ஆம் ஆண்டு 21,385 கோடியே 70 லட்சம் ரூபாய்
கடன் பெற்று, 15,000 கோடி ரூபாய்க்கு மேல் கடனுக்கான தவணைத் தொகையையும்,
வட்டியையும் செலுத்தியுள்ளது. இவ்வாறான கடன் சுமையில் மின்சார வாரியம்
உள்ளதாலும்; மின்சாரம் விற்பனை செய்தவர்களுக்கு பணம் வழங்காததாலும்;
தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு மின்சாரம் வழங்க மின் உற்பத்தியாளர்களும்,
மின் வணிகர்களும் தயக்கம் காட்டுகின்றனர். இதன் காரணமாக, மின்
உற்பத்தியாளர்கள் அதிக விலை கோருகின்றனர். இது மட்டுமல்லாமல், இந்தியாவின்
பல்வேறு பகுதிகளிலும் தற்போது மின்வெட்டு நடைமுறையில் உள்ளது. உதாரணமாக,
ஐதராபாத் நகரில் 3 மணி நேர மின் வெட்டும், ஆந்திர பிரதேசத்தின் பிற
பகுதிகளில் 7 மணி நேர மின்வெட்டும்; கர்நாடக மாநிலத்தின் நகர்ப் பகுதிகளில்
2 மணி நேர மின்வெட்டும், ஊரகப் பகுதிகளில் 6 மணி நேர மின்வெட்டும்
நடைமுறையில் உள்ளன. மின் உற்பத்தியாளர்கள் மின்சாரத்திற்கான விலையை
உயர்த்துவதற்கு இதுவும் ஒரு காரணமாக அமைந்துவிட்டது.
இந்தச் சூழ்நிலையிலும் வெளிச் சந்தையிலிருந்து அதிக விலை கொடுத்தாவது
மின்சாரம் வாங்கி மின்வெட்டை நீக்கலாம் என்றாலும்; அந்த மின்சாரத்தை
தமிழகத்திற்கு கொண்டு வருவதற்கு வழிவகை இல்லாத சூழ்நிலை உள்ளது.
இந்தியாவின் தென் பிராந்தியத்திற்கும், நாட்டின் இதர பிராந்தியங்களுக்கும்
இடையே ஒருங்கிணைந்த மின் கட்டமைப்பு வசதிகள் இல்லை. தென்
பிராந்தியங்களுக்குத் தேவையான மின் தொடரை மத்திய அரசு உருவாக்கவில்லை.
எனவே மின் கடத்தும் மின் தொடர் அமைப்பில், அதாவது, கூசயளேஅளைளiடிn
ஊடிசசனைடிச-ல் மின் தொடர் நெருக்கடி உள்ளதன் காரணமாக, வெளி
மாநிலங்களிலிருந்து தேவையான மின்சாரம் பெற இயலவில்லை. உதாரணமாக, குஜராத்
மாநிலத்திலிருந்து யூனிட் ஒன்றுக்கு 4 ரூபாய் 20 காசு என்ற விலையில் 500
மெகாவாட் மின்சாரம் பெறுவதற்கான ஒரு ஒப்பந்தம் தற்போது நடைமுறையில்
உள்ளது. ஆனாலும், மின் தொடர் நெருக்கடி காரணமாக, தற்போது 235 மெகாவாட்
அளவிற்கே மின்சாரம் பெற இயலுகிறது. வெளிச்
சந்தைகளிலிருந்து மின்சாரம் பெறுவதில் மிகுந்த இடர்பாடுகள் உள்ள
சூழ்நிலையில், நமது மாநிலத்தில் துவக்கப்பட்டுள்ள மின் திட்டங்களை விரைந்து
செயலாக்கத்திற்கு கொண்டு வருவது தான் மின் பற்றாக்குறைக்கு நிரந்தரத்
தீர்வாக அமையும் என்பதால் தான், தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு நடப்பு
நிதியாண்டில் 6,455 கோடி ரூபாய் அளவுக்கு நிதி உதவி அளிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாகத்தான், நான் ஏற்கெனவே தெரிவித்தபடி இந்த ஜூன் மாதத்திலேயே
1,950 மெகாவாட் அளவுக்கு மின்சாரம் கிடைக்கப் பெறும்.
நான் இதுவரை விரிவாக எடுத்துக் கூறிய காரணங்களால் தான் மின் பற்றாக்குறையை
இன்னமும் சீராக்க இயலவில்லை. இந்த மின் பற்றாக்குறை நடப்பாண்டு ஜூன் மாதம்
முதல் படிப்படியாக குறைக்கப்பட்டு, அடுத்த ஆண்டு, அதாவது 2013 மத்தியில்,
மின் பற்றாக்குறை முழுவதுமாக நீக்கப்பட்டுவிடும் என்பதைத் தெரிவித்துக்
கொள்கிறேன்.
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» மின் தட்டுப்பாடு: இன்று அறிக்கை சமர்ப்பிக்கிறது மின் வாரியம்
» மலைவாழ் மக்களுக்கு மின் விசிறிக்குப் பதில் மின் அடுப்பு: முதல்வர்
» நிலக்கரி இருப்பு குறைவதால் மின் தட்டுப்பாடு ஆபத்து
» தெலுங்கானா பிரச்னையால் தமிழகத்தில் மின் தட்டுப்பாடு ஆபத்து
» மின் தட்டுப்பாடு போக்க சூரிய மின்சக்தி திட்டம் தயார்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum