TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:45 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:44 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 3:24 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun May 12, 2024 10:47 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


புகையாகும் வாழ்க்கை!

Go down

புகையாகும் வாழ்க்கை! Empty புகையாகும் வாழ்க்கை!

Post by ஜனனி Mon Dec 26, 2011 7:51 am

[You must be registered and logged in to see this image.]புகை
பிடிக்கும் பழக்கம் எவ்வளவு கெடுதல் என்பதை பெரும்பாலானோர் நன்கு அறிவர்.
அரசாங்கம் அதனை பல வகையிலும் தெளிவுபடுத்தியும், அதன் தீமைகளைக் கருத்தில்
கொண்டு, பொது இடங்களில் புகை பிடிப்பதையும் தடை செய்துள்ளது. இருந்தும்
உலகளவில் இன்றும் புகை பிடிப்பவர்கள் எண்ணிக்கை மிகவும் அதிகம். ஒரு
கருத்தரங்கில் ஒரு அமெரிக்க விஞ்ஞாணி, உலகத்தில் பிடிக்கப்படும் சிகரெட்
எல்லாவற்றையும் ஒன்றின் பின் ஒன்றாக நிறுத்தினால் நிலாவினை தொட்டு திரும்பி
விடலாம் என்றார். புகைப்பழக்கம் புகைப்பவரை மட்டும் அன்றி உடன்
இருப்பவரையும் பாதிக்கும். உடன்பாட்டு புகைப்பழக்கம் ( passive smoking).
உடலில் பல பாகங்களைப் பாதிக்கக் கூடியது. இருதயத்தையும் நுரையீரலையும்
அந்தக் கொடிய பழக்கம் எப்படி பாதிக்கிறது என்பதைக் காண்போம்.

இருதயம் என்பது நம் உடல் உறுப்புகளில்
மிகவும் முக்கியமான ஒன்று. நுரையீரல், சிறுநீரகம் போன்ற மற்ற முக்கிய
உறுப்புகள் இரண்டிரண்டாக இருக்கும் உடலில் மூளை, இருதயம், ஈரல், மற்றும்
கருப்பை போன்றவைகள் , ஒன்று மட்டும் இருப்பது இதை உணர்த்தும். நம் உடலில்
உள்ள அனைத்து உறுப்புகளுக்கும் அது தன் கடமையைச் செய்ய பிராணவாயு (Oxygen)
மற்றும் குளுகோஸ்(Glucose) தேவை கையளவு இதயம் அவற்றை உடல் முழுவதும் தமனி
(Arteries) எனப்படும் இரத்தநாளங்கள் மூலம் அதை அனுப்பும். இதயத்திற்கும்
அது தன் கடமையைச் செய்யவும் பிராணவாயு மற்றும் குளுகோஸ் தேவை. இவை
இருதயத்தில் உள்ள இரத்தநாளங்களின் வழியாக இருதயத்தின் தசையைச் சென்றடையும்.

கரோனரி தமனி (Coronary arteries) எனப்படும்
இந்த இரத்தநாளங்கள் மிகவும் முக்கியமானவை. இவை கொழுப்பு படிந்து
(Atherosclerosis) குறுகலாகும் பட்சத்தில் இருதயம் தனக்குத் தேவையான உணவு
கிடைக்காமல் தவிக்கும் அந்தத் தவிப்பே நெஞ்சுவலியாக (angina)
உருவெடுக்கிறது. நீரிழிவு (Diabetes) நோய் இந்த இரத்தநாளங்களின் அடைபடும்
செய்கையை மிக அதிகமாக்கும். புகைப் பிடிக்கும் பழக்கம் இருதய
இரத்தநாளங்களைத் தடிக்கச் செய்து அவை குறுகி விரியும் (arteriosclerosis)
தன்மையை மிகவும் பாதிக்கும். கொழுப்புப் படிவது நாளங்கள் எல்லாவற்றையும்
பாதித்தாலும் ஓரிரு இடங்களில் மிகவும் குறுகும் (critical stenosis)
பட்சத்தில் மாரடைப்பு (Heart attack/ Myocardial infarction) வருகிறது.
குறுகிய நாளங்களை பைபாஸ் (Coronary Artery Bypass Graft (CABG)) சிகிச்சையோ
அஞ்சியோப்லாச்ட்டியோ (angioplasty) செய்து இரத்த ஓட்டத்தை மீண்டும்
பெருகச் செய்யலாம். புகை பிடிப்போரின் இரத்தநாளங்களை தடிக்கச் செய்து அவை
குறுகி விரியும் தன்மையை இழந்திருப்பதால் சிகிச்சையின் முழு பயனும்
கிடைப்பதில்லை. இதனால் தான் மேலை நாடுகளில் ஏன் இந்தியாவின் சில
மருத்துவமனைகளில் புகை பிடிப்பதை நிறுத்த மறுக்கும் நபர்களுக்கு சிகிச்சை
செய்ய மறுத்து விடுவார்கள்.

புகைபிடிப்பது இருதயத்தை மட்டுமன்றி
நுரையீரல்களை மிகவும் அதிகமாக பாதிக்கும், ஏனென்றால் இழுக்கும் புகை
முதலில் சென்றடைவது நுரையீரல்களைத் தானே. நுரையீரல்கள் நாம் சுவாசிக்கும்
மூச்சைக் கொடுத்து அதில் உள்ள பிராணவாயுவை எடுத்து நம் உடலில் உள்ள துஷ்ட
வாயுவை (carbon di oxide) வெளியேற்றும் முக்கியப் பணி உடையவை. புகை
பிடிப்பது நம் மூச்சுக் குழாயில் உள்ள சிறிய நுண்ணிய முடிபோன்ற
அமைப்புகளின் வேலையைப் பாதிக்கும், இவை நம் மூச்சுக் குழாயில் உள்ள கபம்,
சளி மற்றும் கிருமிகளை வெளியேற்றும் முக்கிய வேலை செய்வன. எனவே தான்
புகைபிடிப்போர் இருமி இவற்றை வெளியேற்றுவர். (Smoker’s Cough). நீண்ட நாள்
புகை பிடிப்பது நுரையீரல் வாயு மாற்றும் தன்மையை (gas exchange and
diffusion) பாதித்து மூச்சு முட்ட வைக்கும். நாளடைவில் பிராணவாயு இல்லாமல்
இவர்களால் உயிர் வாழ முடியாது. மேலும் புகை நுரையீரல்களின் குறுகி விரியும்
தன்மையை (elasticity) பாதித்து சில இடங்களில் நுரையீரல்களை அதிகமாக
விரியச் செய்யும் , அதிகமாக விரிந்த நுரையீரல் பகுதி (emphysematous bulla)
மற்ற பகுதிகள் விரியமுடியாத நிலையை ஏற்படுத்தி மேலும் மூச்சு முட்ட
வைக்கும்.

புகை பிடிப்பது நுரையீரல்
புற்றுநோய்க்கு(Lung Cancer) மிக முக்கிய காரணகர்தா, புற்றுநோயானது
சிலசமயங்களில் உடனே தோன்றினாலும் பெரும்பாலானவர்களுக்கு பல வருடங்கள்
கழித்தே தான் துர்செயலை காட்டும்.

புற்று நோயானது உயிர் எடுக்கும் ஒரு நோய்.
ஆரம்ப கட்ட நோய்களுக்கே அறுவை சிகிச்சை (curative surgery) மற்றும்
கதிரியக்கம் (radiotherapy) மூலம் குணப்படுத்தும் வைப்பு உள்ளது. நோய்
முற்றிய கட்டத்தில் நோயைப் பரவாமலும் நோயினால் ஏற்படும் பிற உபாதைகளைத்
தடுக்கவும் (palliation) வேதிச்சிகிச்சை (Chemotherapy) மற்றும்
கதிரியக்கம் (radiotherapy) உதவும்.

புகையினால் உண்டாகும் புற்றுநோய் மற்றும்
நுரையீரல் நோய்கள் எவ்வளவு நாள் எவ்வளவு சிகரெட்டு புகைத்தார்கள் என்பதைப்
பொருத்து அதன் விளைவு அதிகமாகவோ, குறைவாகவோ இருக்கும். இதனைப் பாக்கெட்
வருடம் (pack years) என்று கூறுவார்கள். ஒரு பாக்கெட்டில் 20 என்ற விதம்
இந்த கணக்கு செய்யபடுகிறது, ஒரு நாளைக்கு ஒரு பக்கெட் புகைப்பவர் ஒரு
வருடம் புகைத்தால் அது 1 பாக்கெட் வருடம், அதே ஒரு நாளைக்கு 10 சிகரெட்டு
புகைப்பவர் ஒரு வருடம் புகைத்தால் அது 1/2 பாக்கெட் வருடம், ஒரு நாளைக்கு
ஒரு பாக்கெட் புகைப்பவர் 20 வருடம் புகைத்தால் அது 20 பாக்கெட் வருடம்,
பாக்கெட் வருடம் எவ்வளவு அதிகமோ அந்த அளவு புகை பழக்கத்தால் வரும்
துர்விளைவுகளும் அதிகரிக்கும்.

புகை பிடிப்பது என்பது இன்று ஒரு கலாசார
பண்பாகிவிட்டது, அதன் பின் விளைவுகளை அறிந்து உடனே நிறுத்தினால் உடல்
நலத்திற்கும் பாதுகாப்பு , குடும்ப நலத்திற்கும் நன்மை. மிக முக்கியமாக
பணவிரயம் குறையும். இந்தப் புகையினால் வந்த உடல் உபாதைகளால்
துன்பப்படுவோர்களுக்கு புகை பிடிப்பதன் பாதிப்புகள் 20-30 வருடங்களுக்கு
முன் தெரியாது, இன்று அதன் விளைவை அனுபவிப்போர் அன்றே யாராவது
சொல்லியிருந்தார்கள் என்றால் புகை பிடித்திருக்கவே மாட்டேனே என்பார்கள்.
ஆனால் இன்றைய சமுதாயத்திற்கு அது தெரியும் மாற்றம் என்பது நம் மனதில் தான்.
அடுத்த முறை ஒரு சிகரெட்டை பற்றவைக்கும் போது 20 வருடங்களில் என் பெண்
கல்யாணத்திற்கு நான் இருப்பேனா? பிள்ளையின் பட்டமளிப்பு விழாவில் நான்
கலந்து கொள்ளமுடியுமா? என்று ஒரு விநாடி யோசித்தால் இந்தப் பழக்கம்
தொலைந்து போகும்.

மீண்டும் வருவேன்…..

மருத்துவரைப் பற்றி அறிய : [You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this image.]




ஸ்ரீதர் ரத்தினம்

டாக்டர் ஸ்ரீதர் ரத்தினம் FRCSEd FRCSEd(CTh),
Consultant Thoracic Surgeon, University Hospitals of Leicester, United Kingdom.

டாக்டர் ஸ்ரீதர் ரத்தினம் மெட்ராஸ் மருத்துவக் கல்லூரியில் தம் இளநிலை
மருத்துவம் பயின்று, பின்னர் சென்னை பொது மருத்துவமனையில் , முதுநிலை அறுவை
சிகிச்சை மருத்துவம் பயின்றார்.பிரிட்டிஷ் கவுன்சில் பெல்லோஷிப் பெற்று
இங்கிலாந்தில் மேல் பயிற்சிக்குச் சென்றார். எடின்பரோவில் FRCS பட்டம்
பெற்று இருதய மற்றும் நெஞ்சக அறுவை சிகிச்சை பயிற்சியை மான்செஸ்டர்,
கிளாஸ்கோ மற்றும் பர்மின்காமில் பயின்று FRCS (CTh ) பட்டம் பெற்றார்.
நெஞ்சக புற்று நோய் அறுவை சிகிச்சையில் சிறப்பு பயிற்சி முடித்து தற்போது,
லெஸ்டர் யுனிவர்சிட்டி மருத்துவமனையில் நெஞ்சக அறுவை சிகிச்சை நிபுணராக
பணிபுரிகிறார். தனது ஆய்வுக் கட்டுரைகளை பல மருத்துவ இதழ்களில்
வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.. தமிழ் இலக்கியம் ,
மொழிபெயர்ப்பு, கல்வி மற்றும் பயிற்சியில் மிகுந்த ஈடுபாடு உள்ளவர்.

வாசகர்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி தங்களுடைய கேள்விகளை
[You must be registered and logged in to see this link.] என்ற முகவரிக்கு அனுப்பி மருத்துவர் ஸ்ரீதர்
ரத்தினம் அவர்களின் மேலான பதிலைப் பெறலாம்.
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum