TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 17, 2024 8:41 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 17, 2024 5:06 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Thu May 16, 2024 8:45 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun May 12, 2024 10:47 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


நகைச்சுவைக் கதைகள்

Go down

நகைச்சுவைக் கதைகள் Empty நகைச்சுவைக் கதைகள்

Post by mmani Sat Dec 10, 2011 9:14 pm

பீர்பால்..புகையிலை போடும் பழக்கம் உள்ளவர்.


ஒருநாள் அக்பரும்,அவரும் உலாவச் சென்றனர்.வழியில்...புகையிலை தோட்டத்தின்
நடுவே செல்ல நேர்ந்தது.அங்கே அப்போது நுழைந்த கழுதை ஒன்று..புகையிலை
நெடியால் முகத்தை திருப்பிக் கொண்டது.

உடனே..அக்பர்...'பார்த்தாயா..பீர்பால், புகையிலையை கழுதை கூட விரும்பவில்லை' என்றார்.

தமது புகையிலையைப் போடும் பழக்கத்தையே அவ்வாறு கிண்டல் செய்கிறார் என்பதை
அறிந்த பிர்பால்.ஆம்..மன்னா..கழுதைகள்தான் புகையிலையை விரும்பாது என்றார்.

------------------

ஒரு அடுக்கு மாடில தீப்பிடிச்சிருச்சாம்.உடனே தீயணைப்பு வீரர்கள் உடனே
வந்து மாடில இருக்கிறவங்கள குதிக்க சொல்லி கீழ வலையோட நின்னாங்க.

முதல்ல ஒரு
ஆப்ரிக்க பொண்ணு குதிச்சது,சரியா பிடிக்காததால கீழ விழுந்துடுச்சு,லேசான
அடி.

ரெண்டாவது சீனாப்பொண்ணு இதுவும் குதிச்சது சரியான டைரக் ஷன் இல்லாம
வலையை அங்கயும் இங்கயும் ஆட்டி இதுவும் மிஸ்ஸாகி கீழே
விழுந்துடுச்சு.

அடுத்தது ப்ளான்ட் பொண்ணு வந்து நின்னது,கீழ தீயணைப்பு
வீரர்கள் “குதி, குதி”ன்னாங்க, ஒரு நிமிஷம் யோசிச்சுட்டு சத்தமா
சொன்னிச்சு,” நான் உங்கள நம்ப மாட்டேன், வலையை கீழே வச்சுட்டு விலகி
நில்லுங்க”

--------------------

ஒரு சர்தார்ஜி பால்கனில வேடிக்கை பார்த்துட்டு இருந்தப்போ ஒருத்தன் ஓடி வந்து
பூட்டாசிங் உன் தம்பி ஆக்ஸிடன்ட்ல பூட்டான்ன்னான்.

தம்பியே செத்துட்டான் இனி எனக்கென்ன?ன்னு பொசுக்குன்னு மாடில இருந்து
குதிச்சிட்டார்.

பாதி வழில ஒரு பைப்பை புடிச்சுக்கிட்டு 'ஓ'ன்னு அழ
ஆரம்பிச்சார்.
மாடில தகவல் சொன்னவன் ஏன்யா அழறன்னு கேட்டான்,

இவரு,எனக்கு
தம்பியே இல்லைப்பா, இவ்ளோ முட்டாளா இருக்கேனேன்னு திரும்ப குதிச்சார்.

ஆனா
காயத்தோட தப்பிச்சிட்டார், திரும்ப 'ஓ'ன்னு அழ ஆரம்பிச்சார்.
இப்ப ஏன்யா அழற?

நான் பூட்டாசிங்கே இல்லைப்பா

--------------------

நம்ம அம்மாஞ்சி வேலைக்கு அப்ளிகேஷன் போட ஃபார்ம் எழுதிட்டிருக்கார்.

பேரு,
ஊரு, முகவரி எல்லாமே எழுதிட்டார்.

நடுவில "Salary Expected" அப்டின்னு
வந்திருக்கு , ரொம்ப நேரம் யோசிச்சு தயங்கி தயங்கி கடைசியா எழுதினார்
"Yes".
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

நகைச்சுவைக் கதைகள் Empty Re: நகைச்சுவைக் கதைகள்

Post by mmani Sat Dec 10, 2011 9:14 pm

ஒரு சர்தார்ஜி பெங்களூருக்கு பஸ்சில் வந்து கொண்டு இருந்தார்.பெங்களூர் வந்தவுடன்,



சர்தார்: [சத்தமாக...] "Banglore Banglore Banglore Banglore"

கண்டக்டர்: பி சைலண்ட்.....

சர்தார்: "Anglore Anglore Anglore Anglore"








அந்த தளத்தில் கதைகளில் சர்தார்ஜி என்ற பெயரை மாற்றி வேறு பெயருடன் வந்து கொண்டிருந்தது.

இப்போது சர்தார்ஜி என்றே இருக்கிறதே.

இது பெயரை மாற்ற நேரமின்மை காரணமா? அல்லது இது பெயரை மாற்றி வெளியிட முடிவு செய்யும் முன் இட்ட பதிவா? தெரியவில்லை
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

நகைச்சுவைக் கதைகள் Empty Re: நகைச்சுவைக் கதைகள்

Post by mmani Sat Dec 10, 2011 9:14 pm

Smile)))

இரண்டு நண்பர்கள் பாரில்...


சார்ஸ்: சே!.. இந்த பொண்டாடிங்களை அடக்கவே முடியாது போல.. நீ எப்டிடா?


முமூ: நேத்து என் பொண்டாட்டி முட்டி போட்டு நடக்க வச்சேன்.


சார்ஸ்: ஆஆ.. அப்புறம்?



முமூ: அப்புறம் சொன்னா.. "மரியாதையா, ஆம்பள மாதிரி கட்டிலுக்கு கீழ இருந்து வெளிய வந்து சண்ட போடுன்னு!"


---------------

சர்தார்ஜி ஒருவர் இரயில் நிலைய அதிகாரி பதவிக்கான இண்டர்வியூவில் கலந்து
கொண்டார். இரண்டு இரயில்கள் அதிவேகமாக எதிரெதிரே ஒரே பிளாட்பாரத்தில்
வருவதை அறிந்தால் நீங்கள் முதலில் என்ன செய்வீர்கள் என்று அதிகாரி கேட்க,
அதற்கு சர்தார்ஜி இவ்வாறு பதில் சொன்னாராம், "நான் முதலில் திரு. பாண்டா
சிங் அவர்களுக்குத் தகவல் தெரிவிப்பேன்".


யார் அந்த பாண்டா சிங்
என்று அதிகாரி கேட்டார். சர்தார்ஜி சொன்னார், "பாண்டா சிங் என் தம்பி. அவன்
இது வரை ஒரு இரயில் விபத்தைக் கூட நேரில் பார்த்ததேயில்லை."


-----------------


வீட்டிற்கு
சாயங்காலம் அவசரமாக வந்த சார்ஸ் மனைவியிடம், "இன்னைக்கு நைட் நண்பன்
உதய்யை வீட்டுக்கு சாப்பிட கூப்பிட்டிருக்கேன்" என்றான்.


அவள்
அவசரமாக,"என்ன விளையாடுறீங்களா? வீடு குப்பையாட்டம் கெடக்கு, நான் இன்னும்
ஷாப்பிங் ஏதும் செய்யல ஸ்பெஷலா ஒண்ணும் வாங்கல அதில்லாம நைட் ஸ்பெஷல் டிஷ்
எதும் பண்ற ஐடியா எதுவும் எனக்கு இல்ல, இதெல்லாம் தெரியாம எதுக்கு
கூப்டீங்க?"

"இதெல்லாம் தெரியும் அதனால தான் கூப்டேன்"

"தெரிஞ்சும் எதுக்கு கூப்டீங்க?"

"இல்ல... அவன் கல்யாணம் பண்ணிக்க ஆசைப்பட்டான் அதான்..."
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

நகைச்சுவைக் கதைகள் Empty Re: நகைச்சுவைக் கதைகள்

Post by mmani Sat Dec 10, 2011 9:15 pm

புதிதாக
பள்ளிக்கு வந்த ஆசிரியை ஒருவர் வகுப்பறையில் பாடம் எடுக்க நுழைந்தார்.

மாண
வர்களிடம் கலகலப்பாக பழக வேண்டும் என்ற காரணத்திற்காக, இந்த வகுப்பில்
யார் முட்டாளோ அவர்கள் எழுந்து நிற்கலாம். நான் ஒன்றும் கோபித்து கொள்ள
மாட்டேன் என்றார்.

மாணவர்கள்
மவுனமாக அமர்ந்திருந்தனர். அப்போது குறும்புக்கார மாணவன் ஒருவன்,
நாற்காலியின் மீது ஏறி நின்றான். ஆசிரியையும் பரவாயில்லையே தைரியமாக
எழுந்து நிற்கிறாயே என்றார். அதற்கு
அந்த மாணவன், இல்லை டீச்சர் நீங்கள் மட்டும் தனியாக நின்று
கொண்டிருக்கிறீர்கள். எனக்கு மிகவும் கஷ்டமாக இருந் தது. அதனால் தான்
துணைக்கு நானும் நிற்கிறேன் என்றான்.

-----------------------

ஒரு
ஊரில் முட்டாள் பணக் காரர் ஒருவர் வசித்து வந்தார். தன் வேலைக்காரனை எப்பொ
ழுதும் சந்தேகத்துடன் விசாரித்து வருவது அவரது வழக்கம்.

ஒரு நாள் தன்
வேலைக்காரனிடம் 500 ரூபாய் கொடுத்து சமையல் செய் வதற்கு தேவையான எண் ணெய்யை
வாங்கி வரச் சொன்னார்.


வேலைக்காரனும்
கடைவீதிக் குச் சென்று 500 ரூபாய்க்கு பெருமானமுள்ள எண்ணெய் டின் ஒன்றை
வாங்கி வந்தான். வேர்த்து விறுவிறுத்து வீட்டி ற்குள் நுழைந்த அவனை
சந்தேகத்துடன் பார்த்த பணக்காரர், ஏன் இப்படி பயந்து நடுங்குகிறாய் என்று
கேட்டு, எண்ணெய் டின்னை பார்த்தார்.

எண்ணெய் சிறிது குறைவாக இருந்தது. ஏன்
என்று கேட்டார். அதற்கு வேலைக்காரன், டின் அடியில் ஓட்டை இருந்தது அத னால்
கீழே வழிந்து விட்டது என்று கூறினான். அதற்கு பணக் காரர், கீழே ஓட்டை
என்றால் கீழே தானே குறைந்திருக்க வேண்டும், எப்படி மேலே குறைந்தது என்று
கத்தினார்


--------------


ஒரு
ஊரில் ஒரு முட்டாள் பணக்காரர் இருந்தார். அவர் பெரிய பங்களா ஒன்று
கட்டினார். அவை பார்வையிட தன் நண்பர்களுக்கு விருந்து ஒன்றை ஏற்பாடு
செய்தார்.

வந்திருந்தவர்கள் அனைவரும் பங்களாவின் அழகை வெகுவாக பாராட்டினர்.
பின்பு பங்களாவின் பின்புறம் சென்று பார்த்தனர்.

அங்கு மூன்று நீச்சல்
குளங்கள் இருந்தது. அனைவரும் ஆச்சர்யத்துடன் எதற்காக 3 நீச்சல் குளங்கள்
என்று கேட்டனர்.

அதற்கு அந்த பணக்காரர் ஒன்று வெந்நீர் குளியல் வேண்டும்
என்பவர்களுக்காக, மற்றொன்று குளிர்ந்த நீர் வேண்டும் என்பவர்களுக்காக
என்றார்.

அனைவரும் வெந்நீர் சரி, தண்ணீர் சரி. காலியாக இருக்கின்றதே அது
எதற்கு என்று கேட்டனர். அது நீச்சல் தெரியாதவர்களுக்காக என்றார்
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

நகைச்சுவைக் கதைகள் Empty Re: நகைச்சுவைக் கதைகள்

Post by mmani Sat Dec 10, 2011 9:17 pm

ஒரு அமெரிக்க இளைஞன்,இங்கிலாந்தில் ஒரு புகை வண்டியில் பயணம் செய்ய
ஏறினான்.எல்லா இருக்கைகளிலும் ஆட்கள் இருந்ததால் அவனுக்கு உட்கார இருக்கை
கிடைக்கவில்லை.ஒரு ஆங்கிலப் பெண்மணி,தன அருகில் ஒரு இருக்கையில் தன நாயை
வைத்திருந்தார்.

அமெரிக்க இளைஞன் அந்தப் பெண்மணியிடம் பணிவாக,''நான் இந்த
இருக்கையில் அமர்ந்து கொள்ளலாமா?''என்று கேட்டான்.

அந்தப் பெண்மணி காது
கேளாதவர் போல இருந்ததால் மீண்டும் கேட்டான். அப்போதும் அந்தப் பெண் அவனை
சட்டை செய்யவில்லை. உடனே விறுவிறுவென்று போய் அந்த நாயைத் தூக்கி ஒரு
ஜன்னலைத் திறந்து,வெளியே வீசிவிட்டு அமைதியாக அந்த இருக்கையில் அமர்ந்து
கொண்டான்.சுற்றிலும் ஒரே அமைதி.

அப்போது எதிர் வரிசையில் அமர்ந்திருந்த ஒரு
வயதான ஆங்கிலேயர் அவனைப் பார்த்து,
''இந்த அமெரிக்கர்களே
இப்படித்தான்.எல்லாமே தவறாகத்தான் செய்வார்கள்.சாலையில் நாம் இடது புறம்
காரை ஓட்டினால் இவர்கள் வலது புறம் ஓட்டுவார்கள்.முள் கரண்டியை இடது கையில்
வைத்து சாப்பிடுவார்கள்.இப்போது கூடப் பாரேன், நீ தவறாக நாய்க்குட்டியை
வண்டியிலிருந்து வெளியே எறிந்துவிட்டாய்.'' என்றார்

--------------


''நேற்று இரவு நான் இல்லாதபோது என் வீட்டிற்கு ஒரு திருடன்
வந்துவிட்டான்.என் மனைவி அவனை அடித்து நொறுக்கி விட்டாள். அவன் அலறி
அடித்து ஓடி விட்டான்.''என்றான் ஒருவன் தன் நண்பனிடம்.

நண்பன்
சொன்னான்,''பரவாயில்லை..உன் மனைவி தைரியம் மிக்கவர் போலும்,''

அவன்
நண்பனின் காதருகே வந்து மெதுவாக சொன்னான்,''அப்படி இல்லை.அவள்
பயந்தவள்தான்.ஆனால் இருட்டில் நான்தான் தாமதமாக வந்துள்ளேன் என்று நினைத்து
விட்டாள்.''
------------------

இரண்டு கழுதைகள் சந்தித்துப் பேசிக்கொண்டிருந்தன.ஒரு கழுதை நன்றாகக்
கொழுத்துஇருந்தது.மற்றது எலும்பும் தோலுமாக காணப்பட்டது.இளைத்த கழுதையைப்
பார்த்து வலுத்த கழுதை கேட்டது,''எப்படி இருந்த நீ இப்படி
ஆகிவிட்டாயே?''மெலிந்த கழுதை சொன்னது,''என் முதலாளி கல் நெஞ்சன்.நாள்
முழுவதும் வேலை வாங்குவான்.ஆனால் ஒழுங்காகத் தீனி போட மாட்டான்.அடி உதை
வேறு அவ்வப்போது கிடைக்கும்.''பலமான கழுதை,''பின் ஏன் அங்கேயே
இருக்கிறாய்?ஓடி வந்து விட வேண்டியதுதானே?'' என்று கேட்டது.உடனே பதில்
வந்தது,''என் முதலாளிக்கு ஒரு அழகான பெண் இருக்கிறாள்.அவளையும் அவன்
கண்டபடி அடிப்பான்.''வலுத்த கழுதை கேட்டது,''அந்தப் பெண்ணுக்கும் உனக்கும்
என்ன சம்பந்தம்?''அதற்கு அந்த மெலிந்த கழுதை சொன்னது,''ஒவ்வொரு முறை என்
முதலாளி தன பெண்ணை அடிக்கும்போது ,'உன்னை இந்தக் கழுதைக்குத்தான் கட்டி
வைக்கப்போகிறேன்'என்பான்.அதனால்தான் நானும் பொறுமையாய் காத்துக்
கொண்டிருக்கிறேன் .''


-------------
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

நகைச்சுவைக் கதைகள் Empty Re: நகைச்சுவைக் கதைகள்

Post by mmani Sat Dec 10, 2011 9:18 pm

வெளி நாட்டிற்குப் போன மகன் அன்று திரும்ப வருவதாக இருந்தது.தந்தை தன
நெருங்கிய நண்பரை அழைத்து தன மகனுக்குத் தான் ஒதுக்கிய அறையைக் காட்டி தான்
அவன் எந்தத் துறைக்கு ஏற்றவன் என்பதைத் தேர்வு செய்யப்போவதாகக்
கூறினார்.

மேஜை மீது நான்கு பொருட்கள் இருப்பதை சுட்டிக்காட்டி,''என் பையன்
பணத்தை எடுத்துக் கொண்டால் வியாபாரத் துறைக்கு ஏற்றவன்.பைபிளை எடுத்துக்
கொண்டால் மத சேவைக்கு ஏற்றவன்.மது புட்டியை எடுத்துக் கொண்டால்
உதவாக்கரையாவான். துப்பாக்கியை எடுத்துக் கொண்டால் அவன்
கொள்ளைக்காரனாவான்.'' என்றார்.

அந்த அறைக்குள் வந்த மகன் என்ன செய்யப்
போகிறான் என்பதை ஆவலுடன் இருவரும் மறைவிலிருந்து கவனித்தார்கள்.

பையன்
அறைக்குள் நுழைந்து இருக்கும்பொருட்களை நோட்டம் விட்டான்.மதுப் புட்டியைத்
திறந்து வாயில் ஊற்றிக் கொண்டான்.பின் பணத்தை எடுத்துப் பையில் போட்டுக்
கொண்டான்.ஒரு கையில் பைபிளையும் இன்னொரு கையில் துப்பாக்கியையும்
எடுத்துக் கொண்டான்.தந்தை உற்சாகத்தில் கத்தினார்,''என் மகன் மந்திரியாகப்
போகிறான்.''
---குஷ்வந்த்சிங்

-------------------

நண்பர்கள் இருவர் நீண்ட நாட்களுக்குப் பின் சந்தித்துக் கொண்டனர். ஒருவர்
தான் நன்றாய் இருப்பதாகக் கூறிவிட்டு அடுத்தவரிடம் அவரைப்பற்றிக் கேட்க
அவர் சொன்னார்,''எனக்கு நான்கு பையன்கள்.ஒருவன் டாக்டர்,அடுத்தவன்
எஞ்சினியர்,இன்னொருவன் வக்கீல்.

நான்காவது பையன்தான் உருப்படாமல்
போய்விட்டான்.எட்டாம் வகுப்பைத் தாண்டவில்லை.அவன் இப்போது பார்பராக
இருக்கிறான்.

''நண்பர் கேட்டார்,''அப்படிப்பட்ட பையனை வீட்டை விட்டுத்
துரத்த வேண்டியதுதானே.''அவர் பதில் சொன்னார்,''அவனைத் துரத்திவிட்டு
நாங்கள் என்ன செய்வது?அவன் ஒருவன் தானே எங்கள் வீட்டில் சம்பாதிப்பது.''
---------

கதவு தட்டப்பட்டது உடனே வீட்டில் இருந்த வாலிபன் கதவைத் திறந்தான்.

வாசலில்
நின்று கொண்டிருந்தவரிடம் என்ன வேண்டும் என்று கேட்டான்.''நான் உங்கள்
வயலினை சரி செய்ய வந்திருக்கிறேன்.''என்றான் வந்தவன்.

வாலிபன்
ஆச்சரியத்துடன்,''நான் ஒன்றும் வரச்சொல்லவில்லையே?''என்று கேட்டான்.வந்தவன்
சொன்னான்,''உங்கள் அடுத்த வீட்டுக்காரர் தான் உங்கள் வயலினை சரி
செய்யச்சொல்லி போன் செய்தார்.''
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

நகைச்சுவைக் கதைகள் Empty Re: நகைச்சுவைக் கதைகள்

Post by mmani Sat Dec 10, 2011 9:18 pm

தாறுமாறாக ஒருவன் காரை ஓட்டிவருவதைக் கண்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் காரை
நிறுத்தினார்.

குடித்துவிட்டு காரை அவன் ஓட்டி வந்திருக்கிறான் என்று
சந்தேகப்பட்ட அவர் அவை சோதிப்பதற்கான கருவியின்முன் ஊதச் சொன்னார்.

அவன்
சொன்னான்,''அதுமட்டும் என்னால் முடியாது.எனக்குக் கடுமையான ஆஸ்த்மா.பலமாக
ஊதினால் எனக்கு மூச்சுத் திணறல் வந்துவிடும்.'' என்று.

அதை ஏற்றுக்கொண்ட
இன்ஸ்பெக்டர் அவனை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று சிறுநீர்
சோதனைக்கு ஒரு பாட்டிலில் சிறுநீர் சேகரித்துத் தரச் சொன்னார்..

உடனே அவன்
பெருங்குரலில்,''இதுவும் என்னால் முடியாது. நான் நீரழிவு நோய்க்காரன்.நான்
திடீரென சிறுநீர் கழித்தால் என் இரத்தத்தில் சர்க்கரை அளவு குறைந்து
விடும்.அதனால் நான் இறக்கக் கூடும்,''

அதையும் ஏற்றுக்கொண்ட அதிகாரி அவன்
இரத்தத்தை சோதனை செய்ய முடிவெடுத்தார்.உடனே ஓட்டுனர்,''இதுவும் என்னால்
முடியாது.எனக்கு ஒருவிதமான நோய் உள்ளது அதனால் என் உடலிலிருந்து இரத்தம்
எடுத்தால் அதற்குப்பின் இரத்தம் நிற்காமல் வந்து கொண்டேயிருக்கும்.''

சற்று
மனம் தளராத அதிகாரி சொன்னார்,''சரி,பரவாயில்லை.எனக்காக இதோ, தரையில் போடப்பட்டிருக்கும் வெள்ளைக் கோட்டில் சரியாக நடந்து வா.''

இப்போது அவன்
கத்தினான்,''கோட்டின்மேல் நேராக நடக்க என்னால் முடியாது.''

“ஏன்” என்று இன்ஸ்பெக்டர் கேட்டார்.

அவன் சொன்னான்,''ஏனென்றால்,நான் குடித்திருக்கிறேன்.'' என்று. இன்ஸ்பெக்டர்
புன்முறுவலுடன் அவனை கைது செய்தார்.

--------------------

கிராமவாசி ஒருவன்,சிறிது கூட நாகரீகம்
இல்லாது அவ்வூர் ஆலயத்தின் முன் அசிங்கம் செய்துவிட்டான்.கோபம் கொண்ட
கோவில் அதிகாரி அவனை ஊர்த்தலைவர் முன்
கொண்டுபோய் நிறுத்தினார்.

தலைவர் கேட்டார்,''கோவிலை அவமதித்தாயா?''

அவன்
சொன்னான்,''அய்யா,நான் வழக்கமாகக் கோவில் வழியாக அடிக்கடி சென்று
வருவேன்.அன்று திடீரென அடக்க முடியாது சிறுநீர் வந்ததால் வேறு வழியில்லாது
கொவில்முன் இருந்துவிட்டேன்.மற்றபடி கோவிலை அவமதிக்கும் எண்ணம் எனக்கு
இல்லை.''

தலைவர்,''என்ன இருந்தாலும் நீ செய்தது தவறான காரியம் உனக்கு ஐநூறு
ரூபாய் அபராதம் விதிக்கிறேன்,''என்றார்.அவனும் மறுபேச்சு பேசாது
பையிலிருந்து ஒரு ஆயிரம் ரூபாய் நோட்டை எடுத்து தலைவரிடம்
கொடுத்தான்.

தலைவர் அதை வாங்கித்தான் பையில் வைத்துக்கொண்டே
சொன்னார்,''இப்போது என்னிடம் மீதி கொடுக்க ஐநூறு ரூபாய் இல்லை. அதனால்
பரவாயில்லை.நாளைக்கு கோவில் முன்னால் இன்னொரு முறை அசிங்கம் செய்துகொள்.''


-------------------------

கணவனும் மனைவியும் திருவிழாவுக்குப் போயிருந்தார்கள்.கூட்ட நெரிசலில் மனைவி
காணாமல் போய்விட்டாள்.

கணவன் காவல் நிலையத்தில் புகார்
செய்தான்.செய்தித்தாள்களில் விளம்பரம் செய்தான். ஆனால் மனைவி
கிடைக்கவில்லை.

அருகில் இருந்த ராமர் கோவிலுக்கு சென்று மனம் உருக
வேண்டினான்,

''காணாமல் போன என் மனைவி கிடைக்க அருள் புரியுங்கள்.''


''இதே சாலை வழியாகப் போனால்,அனுமார் கோவில் வரும்.அங்கு போய்
வேண்டிக்கொள்.என் மனைவி காணாமல் போனபோது தேடிக் கண்டு பிடித்தது
அவர்தான்,'' ராமர் தான் பேசினார்.
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

நகைச்சுவைக் கதைகள் Empty Re: நகைச்சுவைக் கதைகள்

Post by mmani Sat Dec 10, 2011 9:19 pm

அமெரிக்கன்: நாங்கதான் நிலவில் முதலில் கால் வைத்தோம்.

இந்தியன்: நீ நிலாலதாண்டா கால வச்ச... நாங்க சூரியன்லயே கால
வச்சோம்டா வென்று....

அமெரிக்கன்: பொய் சொல்லாதீங்கடா...சூரியனுக்குப் போனா
சாம்பலாயிடுவீங்க..

இந்தியன்: அடிங் ங்கொய்யால... நாங்க போனது நைட்லடா...
நன்னாரிப்பயலுகளா....


-----------



ஒரு கணவனும் மனைவியும் மாலை நேரத்தில் பால்கனியில் அமர்ந்திருக்க,கணவன் மது அருந்திக் கொண்டிருந்தான்.

அந்தக் கணவன் மது அருந்தியவாறே சொன்னான்”உன்னை நான் மிக விரும்புகிறேன்;நீ
இல்லாமல் என்னால் வாழவே முடியாது.அப்படி ஒரு வாழ்க்கையை என்னால்
நினைத்துப்பார்க்கவே இயலவில்லை”

மனைவி கேட்டாள்”என்ன மிக ரொமாண்டிக் மூட் போல!நீங்கள் பேசுகிறீர்களா உங்களுக்குள் போன மது பேசுகிறதா?”

கனவன் சொன்னான்”நான்தான் பேசுகிறேன்.மதுவோடு பேசிக் கொண்டிருக்கிறேன்!!”

----------------

அ‌திக குசு‌ம்பு ‌பிடி‌த்த ஒரு‌த்த‌‌ர், செ‌ன்‌ட்ர‌ல் ர‌யி‌ல்‌நிலைய‌த்‌தி‌ல் அருகிலிருந்தவரை கேட்டார்.


ஹெளராஹ் எக்‌ஸ்‌பிர‌ஸ் எத்தனை மணிக்கு புறப்படும்?
10.30 மணி.
பெங்களூர் மெயில்?

11.25.
தமிழ்நாடு எக்‌ஸ்‌பிர‌ஸ்?
1.15.
சதாப்தி எக்‌ஸ்‌பிர‌ஸ்?
பக்கத்திலிருந்தவர் எரிச்சலோடு - 3.00 மணிக்கு.

பிருந்தாவன் எக்‌ஸ்‌பிர‌ஸ்?
பொறுமையிழந்த அவ‌ர், நீங்கள் எந்த ஊரு‌க்கு‌ப் போக வேண்டும்?













நா‌ன் எ‌ந்த ஊரு‌க்கு‌ப் போக‌வி‌ல்லை, தண்டவாளத்தைத் தாண்டணும் அதா‌ன் கே‌ட்டே‌ன்.

----------

ஆண்கள் நிரம்பிய கூட்டத்தில் பேச்சாளர் கேட்டார்,''இங்கு தன மனைவியுடன் சொர்க்கம் போக விரும்புபவர்கள் கை தூக்குங்கள்.''













ஒருவனைத் தவிர அனைவரும் கை தூக்கினர்.பேச்சாளர் கேட்டார்,''ஏனய்யா,உனக்கு மட்டும் மனைவியுடன் சொர்க்கம் போக ஆசையில்லையா?''

'என் மனைவி மட்டும் சொர்க்கம் போனால் போதும்'

''ஏன்அப்படிச் சொல்கிறீர்கள்?''













'என் மனைவி சொர்க்கம் போய் விட்டால்,பூலோகமே எனக்கு சொர்க்கம் போல் தான் இருக்கும்.'
---------

''டாக்டர்,என் கனவில் எலிகள் கால் பந்து விளையாடுகின்றன.''













'அப்படியானால் இன்று இரவிலிருந்து நான் கொடுக்கும் மருந்தை சாப்பிடுங்கள்.'

''நாளையிலிருந்து ஆரம்பிக்கட்டுமா,டாக்டர்?'

'இன்றைக்கு ஏன் வேண்டாம்?'

''இன்று தான் இறுதி மேட்ச்.''













-----------
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

நகைச்சுவைக் கதைகள் Empty Re: நகைச்சுவைக் கதைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum