TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:45 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:44 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 3:24 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun May 12, 2024 10:47 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


சிங்கள அரசை அச்சத்திற்குள்ளாக்கும் புலம் பெயர் தமிழர்கள்!

Go down

சிங்கள அரசை அச்சத்திற்குள்ளாக்கும் புலம் பெயர் தமிழர்கள்! Empty சிங்கள அரசை அச்சத்திற்குள்ளாக்கும் புலம் பெயர் தமிழர்கள்!

Post by ஜனனி Tue Dec 06, 2011 8:48 am


சிங்கள அரசை அச்சத்திற்குள்ளாக்கும் புலம் பெயர் தமிழர்கள்!


- நிரூபன்!












ஈழப் போராட்ட வரலாற்றில் புலம் பெயர் தமிழர்களின் தியாங்களும்,
அர்ப்பணிப்புக்களும், கடுமையான உழைப்பின் மூலம் ஈழ மக்கள் வாழ்விற்காகவும்,
போராட்ட நகர்விற்காகவும் அவர்கள் திரட்டி அனுப்பிய பொருளுதவிகளும் என்றும்
நினைவில் கொள்ளத் தக்கவை. ஈழப் போராட்டத்தின் நவீன தள வடிவ (நவீன ஆயுத
களமுனை நகர்வு) நகர்விற்குப் பக்க பலமாகத் தோள் கொடுத்து தம் வியர்வைத்
துளிகளையெல்லாம் பணமாக்கி ஈழ மக்களின் வீரத்தினை உலகறியச் செய்வதற்கு
உழைத்த பெருமைக்குரியவர்கள் எம் புலம் பெயர் தமிழ்ச் சொந்தங்கள்.



சிங்கள அரசை அச்சத்திற்குள்ளாக்கும் புலம் பெயர் தமிழர்கள்! Pulam+Peyar+Makkal




வன்னியில் விடுதலைப் புலிகளின் பிரச்சாரக் கூட்டங்களில் ஆட்களைச்
சேர்க்கும் நடவடிக்கையில் புலிப் போராளிகளும், பிரச்சாரக் குழுவினர்களும்
களமிறங்கும் போதெல்லாம் புலம் பெயர் தமிழர்களைப் பற்றி யாராவது கேள்விக்
கணைகள் தொடுத்தால் புலிகள் அடிக்கடி நினைவு கூருகின்ற ஓர் வாக்கியம் தான்
"ஜெயசிக்குறுச் சமர் காலத்தில் சிங்கள அரசினை விரட்டி அடிப்பதற்காக
ஏவப்பட்ட ஒவ்வோர் ஆட்டிலறிச் ஷெல்களிலும் புலம் பெயர் தமிழர்களின் கடின
உழைப்புத் தான் செறிந்திருக்கிறது" எனும் வாக்கியமாகும்.




ஈழத்தில் நிகழ்ந்த கொடுமைகள், தமிழர் தாயகப் பகுதிகளில் நிலவிய நிம்மதியற்ற
வாழ்க்கை முறை காரணமாக புலம் பெயர்ந்த தமிழர்களிடத்தே போராட்ட உணர்வும்,
போராட்டத்திற்குப் பங்களிப்புச் செய்யும் நல் உணர்வுகளும் மங்கி விடவில்லை
என்பதனை தன் தொலை நோக்குப் பார்வை மூலம் அறிந்து கொண்ட தமிழீழத் விடுதலைப்
புலிகள் அமைப்பின் தலைவர் திரு.வே.பிரபாகரன் அவர்கள் தமிழீழ விடுதலைப்
போராட்டத்தில் படை நடத்துவது தொடக்கம், திட்டமிடல்களை மேற் கொள்ளும்
செயற்பாடுகள் வரை தலைவருக்கு நிகராகச் செயற்படவல்ல ஒரேயொருவரான கேணல்
கிட்டு அவர்களை 1989ம் ஆண்டு அக்டோபர் (ஐப்பசி) மாதமளவில்
பிரித்தானியாவிற்கு அனுப்பி வைக்கின்றார்.




அந்நிய தேசத்தில் தம் வாழ்க்கையினைக் கட்டியெழுப்பும் நோக்கில் பல்வேறு
ஊர்களிலும், பல நாடுகளிலும் வாழ்ந்த புலம் பெயர் மக்களை ஒன்று திரட்டி
புலிகளின் அனைத்துலக தொடர்பகத்தினூடாகப் புலம் பெயர் மக்களை விடுதலை
நோக்கிய பயணத்திற்காகத் தயார்படுத்திய பெருமை கேணல் கிட்டு அவர்களையே
சாரும். லண்டலின் புலம் பெயர் மக்களின் உணர்வுகளைத் தட்டி எழுப்பும்
வகையில் களத்தில் எனும் பத்திரிகையினையும், பிரான்ஸில் எரிமலை எனும்
சஞ்சிகையினையும் வெளியிட்டுப் புலம் பெயர் மக்களினை ஈழப் போராட்டத்துடன்
இரண்டறக் கலக்கச் செய்யும் பணியில் ஈடுபட்டார் கேணல் கிட்டு.




பிரான்ஸில் வெளியான எரிமலைப் பத்திரிகையினைத் தொடர்ந்து ஈழமுரசுப்
பத்திரிகையின் உருவாக்கத்திற்காகவும் அடித்தளமிட்டவர் கேணல் கிட்டு
அவர்களே! (ஈழமுரசினை உருவாக்கியவர் கிட்டு அல்ல) தம் தாய்த் தேசத்தை
விட்டுப் பல்வேறு காரணங்களாக தூரப் பறந்த ஊர்க் குருவிகளான புலம் பெயர்
மக்களின் உணர்வுகள், எண்ணங்கள் யாவும் தமீழம் எனும் கனவு தேசத்தை
நோக்கியதாக - தாய் நிலக் காற்றினைச் சுவாசித்து மகிழ வேண்டும் எனும்
எண்ணத்தைக் கொண்டிருக்க வேண்டும் எனும் எண்ணத்திற்கமைவாக கலை பண்பாட்டுக்
கழகங்களை அமைத்ததோடு, புலம் பெயர் மண்ணில் ஊடகங்கள் வாயிலாகவும் போராட்டம்
பற்றிய கருத்துக்கள் மக்களிற்கு உரிய வழியில் சென்று சேருவதற்கான
அடித்தளத்தினைத் தான் வாழ்ந்த காலத்தில் உருவாக்கினார் கேணல் கிட்டு
அவர்கள்.




பின்னர் கேணல் கிட்டு அவர்களின் செயற்பாடுகளைத் தொடர்ந்து அரசியல் ரீதியில்
தலைவர் வே.பிரபாகரன் அவர்களின் எண்ணக் கருத்துக்களைச் சிந்தனைகளை திரு.
அன்ரன் பாலசிங்கம் அவர்கள் புலம் பெயர் மண்ணில் நெறிப்படுத்தினார். தமிழர்
தம் வரலாற்றுப் பாதையில் 240 வருடங்களாகத் தமிழர்களின் கைகளிற்கு எட்டாக்
கனியாக இருந்த ஆனையிறவு எனப்படும் வரலாற்றுச் சிறப்பு மிக்க கோட்டையினைப்
புலிகள் 2000ம் ஆண்டு கைப்பற்றிய போது கேணல் கிட்டு அவர்களால்
அடித்தளமிடப்பட்ட புலம் பெயர் தமிழ் சொந்தங்களின் ஒருங்கிணைந்த
எழுச்சியானது பேரெழுச்சி பெறுகின்றது. அன்ரன் பாலசிங்கம் அவர்கள் சமாதான
காலத்தில் வன்னிக்கு வந்து போராளிகளுடன் பேசும் போது அடிக்கடி பின் வரும்
சம்பவத்தினை நினைவு கூருவார்.




"லண்டன் மாநகரின் அலெக்ஸாந்ரா ப்ளேஸ் (பலஸ்) மண்டபத்தில் ஆனையிறவு வெற்றிச்
சமரைத் தொடர்ந்து இடம் பெற்ற ஓர் நிகழ்வில் தான் பேசிய போது புலம் பெயர்
சொந்தங்கள் பணத்தினையும், நகையினையும் அள்ளி வழங்கினார்களாம். ஒரு
கட்டத்தில் தன்னுடைய தாயகம் பற்றிய அரசியல் கருத்துக்களையும், தேசியத்
தலைவரின் சிந்தனைகளையும் கேட்ட மக்கள், தம் கழுத்தில் அணிந்திருந்த தாலிக்
கொடிகளையும் கழற்றிக் கொடுத்தார்கள். அப்போது தனக்கு கண்ணீர் விட்டு அழ
வேண்டும் போல இருந்ததாம்.ஆனாலும் மண்டபத்தினை உரிய நேரத்திற்கு கையளிக்க
வேண்டிய நிலமையால் உரை குழம்பக் கூடாது எனும் நோக்கில் அழுகையை அடக்கித்
பேச்சினை முடித்ததாக அடிக்கடி வன்னியில் அரசியற் துறைப் போராளிகளிடம்
சொல்லிப் புலம் பெயர் தமிழர்களின் உணர்வுகளை நினைவு கூர்ந்து கொள்ளுவார்.




தமிழன் இல்லா நாடும் இல்லைத் தமிழனுக்கு என்றோர் நாடும் இல்லை எனும் கவிஞர்
புதுவை இரத்தினதுரையின் கவி வரிகளிற்கு அமைவாக உலகம் எங்கும் பரந்து
வாழும் புலம் பெயர் தமிழ்ச் சொந்தங்களால் தான் வன்னியில் இடம் பெற்ற இன
அழிப்புக்கள் முதல், பல்வேறுபட்ட மனிதப் பேரவலங்கள் வரை அனைத்து
விடயங்களுமே உலகின் காதுகளை எட்டியது. தமிழ் மக்கள் சர்வதேசத்
தொடர்பேதுமின்றிப் பூண்டோடு அழிக்கப்பட்டு விடுவார்கள் எனப் பிரச்சாரம்
செய்த அரசின் காதுகளுக்குப் புலம் பெயர் தமிழர்களின் பேரெழுச்சி என்பது
அச்சமூட்டும் ஓர் விடயமாகவே இருந்தது. எழுக தமிழ் எனும் நிகழ்வினை
அனைத்துலகத்திலும் செயற்படுத்தித் தமிழனுக்கு என்றோர் தனி நாடு வேண்டும்
என்பதனைச் செயற்படுத்திய புலம் பெயர் சொந்தங்கள் தம் சொந்தங்கள் ஈழத்தில்
இராணுவத்தினரது மிலேச்சத்தனமான தாக்குதலுக்கு ஆளாகிக் கொலப்படும் போது
பார்த்துக் கொண்டிருப்பார்களா?

சிங்கள அரசை அச்சத்திற்குள்ளாக்கும் புலம் பெயர் தமிழர்கள்! Pulam+Peyar+Makkal+Ezhuchchi





2008ம் ஆண்டில் அகில உலகெங்கும் அலையெனத் திரண்டு வீதிகளில் இறங்கி உலக
நாட்டுத் தலைவர்களுக்கு இலங்கையில் இடம் பெறும் மனிதப் பேரவலம் பற்றிய
உண்மையினை எடுத்துரைத்தார்கள். ஐநாவின் முன்றலில் முருகதாசன் எனும் சகோதரன்
தீக்குளித்து "எங்கள் அனைவரின் உணர்வுகளும் தீயாய் எரிகின்றனவே நீங்கள்
கலங்க வேண்டாம். சர்வதேசம் ஈழ மக்களுக்காய் கண் திறக்கும்!" எனும்
நம்பிக்கையினைக் கொடுத்தார். ஈழத்தில் இறுதி யுத்தத்தில் மக்கள் பெட்டி
வடிவ வேலிக்குள் முடக்கப்பட்ட போது பிரித்தானியாவில் வணங்கா மண் எனும்
கப்பல் மூலம் உணவுப் பொருட்களைச் சேகரித்து பல்வேறு தடைகள், தடங்கல்களின்
மத்தியிலும் ஈழத்த்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என அயராது
பாடுபட்டவர்களும் புலம் பெயர் மக்களே!




இலங்கையில் இறுதி யுத்தத்தின் பின்னர் இலங்கை அரச படைகள்
நாற்பதாயிரத்திற்கும் மேற்பட்ட மக்களைக் கொன்று விட்டு, தாம் போர்க்
குற்றங்களைச் செய்யவில்லை, மக்களைக் கொல்லவில்லை என ஐநா செயலாளர்
பான்கிமூனை அழைத்து வந்து முள்ளிவாய்க்காலைச் சுற்றிக் காட்டி உலகின்
வாயினை மூடிடலாம் எனச் சிங்கள தேசம் நினைத்துத் தம் செயற்பாடுகளை
முன்னெடுத்த போது, ஆதாரங்களுடன் இலங்கை அரசு செய்த போர்க் குற்ற விடயங்களை
அம்பலப்படுத்தி இலங்கை அரசின் கோர முகத்தினையும், பொய் நாடகத்தினையும்
உலகறியச் செய்தவர்களும் எம் புலம் பெயர் சொந்தங்கள் தான்.




இன்று இறுதி யுத்தத்தில் படை நடத்திய படைத் தளபதிகளையும், இலங்கை அரச
தலைவர் மகிந்த ராஜபக்ஸ அவர்களையும் அச்சத்திற்கு உள்ளாக்கும் பெரு
நெருப்பாக மிளாசிக் கொண்டிருப்பவர்களும் புலம் பெயர் சொந்தங்கள் தான். உலக
நாடுகளின் மத்தியில் இலங்கை அரசிற்குத் தலை குனிவையும் - அவமானத்தினையும்
உருவாக்கியதோடு, இலங்கை அமைச்சர்கள், போர்க் குற்றத்தில் ஈடுபட்ட
பிரமுகர்கள் ஆகியோர் எங்கும் - எந் நாட்டிலும் - எந் நேரத்திலும் வைத்துக்
கைது செய்யப்படலாம் எனும் அச்ச நிலையினை உருவாக்கியவர்களும் எம் சொந்தங்கள்
தான். ஈழத்தில் ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டாலும், ஈழ மக்களின் அடி
மனதில் பிரிந்து சென்று தமக்கான தனி நாடு ஒன்றினைப் பெற்று வாழ வேண்டும்
எனும் கனவு இன்றும் அணையாத விடுதலைத் தீயாக எரிந்து கொண்டு தான்
இருக்கின்றது என்பதனை உணர்ந்து தமிழருக்கான தனியரசு நோக்கிய விடுதலைச்
செயற்பாடுகளை முன்னெடுக்கின்ற தார்மீக கடமையினைச் செய்கின்றார்கள் எம்
புலம் பெயர் தமிழ்ச் சொந்தங்கள்.




ஆயுதப் போராட்டம், புலிகள் அமைப்பு ஈழத்தில் இலங்கை அரசால் அழிக்கப்பட்ட
பின்னர், புலம் பெயர் நாடுகளில் அரசியல் ரீதியில் தமிழர்களின் பலம்
மேலோங்குகின்றதே எனும் அச்ச நிலையினை இலங்கை அரசிற்கு ஏற்படுத்தி
வைத்திருக்கின்றார்கள் புலம் பெயர் தமிழ்ச் சொந்தங்கள். ஈழத்தில் உள்ள
மக்கள் இன்று மேய்ப்பாரற்று நடு வெளியில் விடப்பட்ட ஆடுகளைப் போல தம்
விடுதலைக் கனவோடு வாழும் வேளையிலும் தமக்கான கனவினைப் புலம் பெயர் மக்கள்
அணைய விடமாட்டார்கள் எனத் திடமாக நம்புகின்றார்கள். போராட்டம் நடை பெறும்
போது எவ்வாறு வாரி வாரிப் புலம் பெயர்ந்த மக்கள் அள்ளி வழங்கினார்களோ அது
போல இன்றும் போரில் சிதைந்த தம் வாழ்க்கையினை மீளக் கட்டியெழுப்பிட, மனதுள்
புதைந்துள்ள கனவு தேசத்தினை மீளுருவாக்கம் செய்திட நம்பியிருக்கும்
ஒரேயொரு சக்தியாக இப் புலம் பெயர் சொந்தங்கள் விளங்குகின்றார்கள்.




ஈழ மக்களின் உணர்வுகளைப் புரிந்தவர்களாக புலம் பெயர் மக்கள் தமது
செயற்பாடுகளை விரிவுபடுத்த வேண்டும் என்பதே ஈழத்தில் வாழும் மக்களின்
எண்ணமாக இருக்கின்றது. ஈழ மக்களுக்கான வாழ்க்கையினை மீளக்
கட்டியெழுப்பிடவும், ஈழ மக்கள் பற்றிய வாழ்வாதாரப் பிரச்சினைகளை உலகறியச்
செய்து, இலங்கை அரசினூடாக அல்லாது நேரடியாக உலக நாடுகளின் தலையீட்டினை
வன்னி மக்களுக்குப் பெற்றுக் கொடுத்து எம் மக்களின் வாழ்வு சிறக்க இப்
புலம் பெயர் சொந்தங்கள் செயற்பட வேண்டும் என்பதே ஈழத்தில் வாழும்
எல்லோரினதும் அவா. இதனை எம் சொந்தங்கள் செய்வார்களா?




புலம் பெயர் தேசங்களிலுள்ள ஊடகங்கள், பத்திரிகைகள் ஊடாக ஈழ மக்கள் வாழ்வு
பற்றிய சீரான கருத்துக்களை வழங்கி ஈழ மக்கள் வாழ்க்கையினைக்
கட்டியெழுப்பும் செயற்பாடுகளிற்கு புலம் பெயர் மக்கள் அனைவரும் பங்களிப்பு
நல்கும் வகையில் புலம் பெயர் ஊடகவியலாளர்கள் செயற்பட்டால் பாதிக்கப்பட்ட
மக்கள் தொடர்பான சர்வதேசத்தின் பார்வை வெகு விரைவில் ஈழத்தின் பக்கம்
திரும்ப உதவியாக இருக்கும் அல்லவா? இதனையும் எம் சொந்தங்கள் செய்வார்கள்
எனும் நம்பிக்கையுடன் ஈழத்தில் உள்ள மக்கள் காத்திருக்கிறார்கள். ஈழப்
போராட்டத்தின் புதிய தள வடிவத்தினை புலம் பெயர் தேச மக்கள் அற வழியில் தம்
கைகளில் ஏந்தியிருக்கிறார்கள்.




ஈழ மக்கள் கனவினை நனவாக்கும் வகையில் புலம் பெயர் தேச மக்கள் தம்
ஒருங்கிணைந்த செயற்பாடுகளை மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டவர்களாக
வெளிப்படுத்தி, போராட்டத்தினை வேகப்படுத்துவார்களா? இப்போது காலம் தன்
கடமையினை புலம் பெயர் மக்களிடம் ஒப்படைத்துள்ளது. ஞாலத்தில் ஈழத் தமிழர்கள்
வாழ்வு சிறக்கப் புலம் பெயர் தமிழர்கள் இன்னும் வேகத்துடன் செயற்பட
வேண்டும் என்பதே அனைவரினதும் அவா! பொறுத்திருந்து பார்ப்போம்! புலம் பெயர்
மக்கள் ஈழ மக்களைக் கைவிடார்கள் எனும் நம்பிக்கையோடு!
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» இலங்கையில் 11 வயது சிறுமியை பலாத்காரம் செய்த சிங்கள கடற்படை வீரர்: தமிழர்கள் கொந்தளிப்பு ...
» தயாளு பெயர் சேர்க்கப்படாதது ஏன்? சாட்சிகளின் வரிசையில் 143வது பெயர்
» மார்ச் 4 - சிங்கள கொலைகார அரசை எதிர்த்து, தமிழமெங்கும் கருப்புக்கொடி கண்டன அறப்போர் சென்னையில் இலங்கைத் தூதரகம் முற்றுகை - வைகோ அறிக்கை
» இலங்கை வேண்டுமா? தமிழகத் தமிழர்கள் வேண்டுமா?: மத்திய அரசை மிரட்டிய எம்.பி. திருச்சி சிவா
» மீள் குடியேற்றம் எனும் பெயரில் சிங்கள பயங்கரவாத அரசால் காட்டில் விடப்படும் தமிழர்கள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum