TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon May 27, 2024 8:13 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu May 23, 2024 4:07 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 21, 2024 2:55 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 12:02 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


நீரிழிவு விழித்திரை நோய்!

Go down

 நீரிழிவு விழித்திரை நோய்! Empty நீரிழிவு விழித்திரை நோய்!

Post by ஜனனி Fri Nov 25, 2011 9:36 am

நீரிழிவு
நோய்.. 21-ம் நூற்றாண்டின் மனித இனத்துக்கே சவால் விடும் ஒரு சுகாதாரம்
மற்றும் சமூகவியல் சார்ந்த பிரச்னையாக உருவெடுத்துள்ளது.



கடந்த
1922-ம் ஆண்டில் ஃப்ரெடெரிக் பாண்ட்டிங்க் என்ற விஞ்ஞானி, சார்லஸ் பெஸ்ட்
என்பவருடன் இணைந்து நீரிழிவு நோயாளிகளின் உயிர் காக்கும் இன்சுலினைக்
கண்டுபிடித்தார். பொதுமக்களிடையே நீரிழிவைப் பற்றிய விழிப்பு உணர்வை
மேம்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் பன்னாட்டு நீரிழிவு நோய்
கூட்டமைப்பும் உலக சுகாதார நிறுவனமும் இணைந்து, ஃப்ரெடெரிக்
பாண்ட்டிங்க்கின் பிறந்தநாளை உலக நீரிழிவு தினமாக அறிவித்தது.

அதன்படி,
உலக சுகாதார நிறுவனத்தால் அறிவிக்கப்பட்டு, ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் 14-ம்
நாள் 'உலக நீரிழிவு தினமாக' அனுசரிக்கப்படுகிறது.

உலக சுகாதார
நிறுவனத்தின் புள்ளி விவரப்படி, தற்போது உலக அளவில் 346 மில்லியன் பேர்
நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், இந்தியாவில் நீரிழிவின்
பாதிப்பு மிக அதிகம். எவ்வளவு தெரியுமா? 62.4 மில்லியன். மேலும், அடுத்த
10 ஆண்டுகளுக்குள் இன்னும் 77.2 மில்லியன் பேருக்கு நீரிழிவு பிரச்னை
வரக்கூடிய வாய்ப்பு உள்ளதாம்.

நமது உடலில் நீரிழிவினால் அதிகம் பாதிக்கக்கூடிய உடல் உறுப்புகள் - இதயம், கண், சிறுநீரகம் மற்றும் பாதம் ஆகும்.

[You must be registered and logged in to see this image.]உலக நீரிழிவு தினமான இன்று, நீரிழிவு விழித்திரை நோய் (Diabetic Retinopathy) பற்றி இங்கே பகிர விரும்புகிறேன்.

1. பார்வையிழப்பு முதலிடம்

இப்பரந்த
பூமியில் பார்வையிழப்பு என்னும் சுமையை மிக அதிக அளவில்
தாங்கிக்கொண்டிருக்கும் தேசம் நமது தேசம். 108 கோடி மக்களைக் கொண்ட நமது
தேசத்தில் 270 லட்சம் பேர் பார்வைக்குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

2. டயபெடிஸ் மெல்லிடஸ்

டயபெடிஸ்
மெல்லிடஸ் (diabetes mellitus) எனும் சர்க்கரை வியாதி அல்லது நீரிழிவு
குறைபாடானது, நம் உடலின் சர்க்கரை சேமிப்பையும் அதன் உபயோகத்தையும்
சேதப்படுத்துகிறது. நீரிழிவு குறைபாடானது கண்களில் ஏற்படும் புரை
(கேடராக்ட்), கண் நீர் அழுத்த நோய் (க்ளகோமா), மற்றும் டயபீடிக்
ரெட்டினோபதி எனப்படும் கண்ணில் உள்ளே உள்ள விழித்திரையின் ரத்தகுழாய்களை
சிதைத்தல் போன்றவற்றிற்க்கும் காரணமாகிறது.

3. கேட்டராக்ட்

நமது
கண்களில் உள்ள லென்ஸின் ஒளி ஊடுருவும் தன்மை பாதிக்கப்படுவது கேட்டராக்ட்
(cataract) எனப்படுகிறது. நீரிழிவு பிரச்னை உள்ளவர்களுக்கு இந்த நிலை
மிகக்குரைந்த வயதிலேயே ஏற்ப்படுகிறது.

4. க்ளகோமா

நமது
கண்ணின் முன் அறையில் சுரக்கும் திரவத்தின் அழுத்தம் அதிகமாகும்போது,
பார்வை நரம்பில் ஏற்படும் பாதிப்பு க்ளகோமா (Glaucoma) எனப்படுகிறது. மற்ற
காரணங்களால் இந்த பாதிப்பு ஏற்படுபவர்களின் எண்ணிக்கையோடு
கணக்கிடும்போது, நீரிழிவு பிரச்னை காரணமாக க்ளகோமா உள்ளவர்கள் இரண்டு
மடங்கு என்கிறது புள்ளி விவரங்கள்.

5. டயபீடிக் ரெட்டினோபதி

நீரிழிவு
பிரச்னை உள்ளவர்களின் கண்களின் விழித்திரையில் உள்ள ரத்தக்குழாய்களில்
ஏற்படும் பாதிப்பு நீரிழிவு விழித்திரை நோய் (டயபீடிக் ரெட்டினோபதி -
Diabetic Retinopathy) எனப்படுகிறது.

6. விழித்திரை (Retina) என்பது என்ன?

நமது
கண்க்ளை போட்டொ கேமராவுக்கு ஒப்பிடலாம். (ஃப்லிம் கேமரா - டிஜிட்டல் கேமரா
இல்லை). விழித்திரை என்பது கேமராவினுள் இருக்கும் காணப்படும் ஃப்லிம்
போன்றது. நாம் பார்க்கும் பொருளிலிருந்து வரும் ஒளிக்கதிர்கள் நம் கண்ணின்
முன்புறம் உள்ள கார்னியா (Cornea) எனப்படும் விழிவெண்படலத்தின் வழியே
சென்று,லென்ஸில் ஊடுருவிச் சென்று கண்ணின் பின்புறம் - உட்புறச் சுவரான
விழித்திரையில் பிம்பம் பதிவாகிறது.

விழித்திரையிலுள்ள சிறப்பான
செல்கள் பார்வைக்கான தூண்டல்களைப் பெற்று பார்வை நரம்பு வழியாக மூளைக்கு
மாற்றியனுப்புகிறது. மேலும் விழித்திரையின் மையப்பகுதில் உள்ள மாக்குலா
(Macula) என்னும் பகுதி நுட்பமான பார்வைக்கு மிகவும் அவசியமான
பகுதியாகும்.

7. நீரிழிவு விழித்திரை நோய் யாருக்கு அதிகமாக வருகிறது?

நீரிழிவு
விழித்திரை நோய், நீரிழிவு பிரச்னை உள்ள யாருக்கு வேண்டுமானாலும் வரலாம்.
நீண்ட நாட்களாக நீரிழிவு பிரச்னை உள்ள ஆண்கள் பெண்கள் இருபாலாருக்குமே
அதிகமாக வருகிறது. நீரிழிவு உள்ளவர்களில் பாதிபேருக்கு அவர்கள் வாழ்நாளில்
ஒரு குறிப்பிட்ட அளவு டயபீடிக் ரெட்டினோபதியினால் பாதிக்கப்படுகிறார்கள்.

8. டயபீடிக் ரெட்டினொபதியின் பல்வேறு நிலைகள்

a.
Mild Non-proliferative Retinopathy எனப்படும் லேசான ஃபைப்ரோ வாஸ்க்குலார்
ப்ராலிஃபரேஷன் என்னும் இழை போன்ற திசு உருவாகாத நிலை நீரிழிவு விழித்திரை
நோய். விழித்திரையில் உள்ள மிகவும் சிறிய ரத்தக்குழாய்களில் நீரிழிவு
பாதிப்புடைய ரத்தம் கண்ணின் விழித்திரையில் செல்லும்போது விழித்திரையில்
மைக்ரோ அனெரிஸம் அல்லது மைக்ரோ ஆஞ்சியோபதி எனப்படும் மாற்றத்தை
விளைவிக்கிறது. இதனால் ரத்தமும் நீர்க்கசிவும் ஏற்பட்டு விழித்திரை
வீக்கம் அடைகிறது.இந்நிலையில் ரத்தக்குழாய்களில் சிறிய பலூன் போன்ற
வீக்கம் ஏற்படுகிறது.

b. Moderate Non-proliferative Retinopathy
எனப்படும் சாதாரண ஃபைப்ரோ வாஸ்க்குலார் ப்ராலிஃபரேஷன் என்னும் இழை போன்ற
திசு உருவாகாத நிலை நீரிழிவு விழித்திரை நோய். விழித்திரையில் உள்ள
மிகவும் சிறிய ரத்தக்குழாய்களில் நீரிழிவு பாதிப்புடைய ரத்தம் கண்ணின்
விழித்திரையில் செல்லும்போது விழித்திரையில் மைக்ரோ அனெரிஸம் எனப்படும்
மாற்றம் ஏற்படுகிறது. இந்நிலையில் ரத்தக்குழாய்களில் சிறிய பலூன் போன்ற
வீக்கம் காரணமாக விழித்திரைக்கு சத்துக்களை எடுத்துச் செல்லும்
ரத்தக்குழய்களில் அடைப்பு ஏற்படுகிறது.


[You must be registered and logged in to see this image.]

c.
Severe Non-proliferative Retinopathy எனப்படும் தீவிரமான ஃபைப்ரோ
வாஸ்க்குலார் ப்ராலிஃபரேஷன் என்னும் இழை போன்ற திசு உருவாகாத நிலை
நீரிழிவு விழித்திரை நோய் நிலையில் மேலும் பல ரத்தக்குழாய்களில் அடைப்பு
ஏற்படுகிறது. இதனால் விழித்திரை தனது பல பகுதிகளில் சத்து குறைவதனால்
ஏற்படும் சிரமத்தை உடலுக்கு சிக்னல்களாக வெளிப்படுத்தி, விழித்திரையின்
ஆரோக்கியத்திற்கு தேவையான சத்துக்களை வழங்குவதற்க்காக மேலும் புதிய
ரத்தக்குழாய்களை வளரவைக்கிறது.

d. Proliferative Retinopathy
எனப்படும் முதிர்ச்சியடைந்த ஃபைப்ரோ வாஸ்க்குலார் ப்ராலிஃபரேஷன் என்னும்
இழை போன்ற திசு உருவாகியுள்ள நிலை நீரிழிவு விழித்திரை நோய் நிலையில்
விழித்திரை தனக்கு தேவையான சத்துக்களைப் பெறுவதற்க்காக சிக்னல்களை
அனுப்பியதன் காரணமாக புதிய ரத்தக்குழாய்கள் உருவாகின.

அந்த புதிய
ரத்தக்குழாய்கள் அசாதாரணமானவை மற்றும் பலவீனமான ரத்தக்குழாய்கள் ஆகும்.
அவை விழித்திரையின் அடுக்குகளிலும், விட்ரியஸ் ஜெல் திரவத்தின்
படிமத்திலும் உருவாகுகின்றன.எனவே இந்த ரத்தக்குழாய்கள் சத்துகுறைவின்
காரணமாக ஏற்படும் பார்வையிழப்பிற்க்கு காரணமாகவோ அல்லது அறிகுறிகளுக்கு
காரணமாகவோ இருப்பதில்லை. ஆனால் இந்த ரத்தக்குழாய்கள் அசாதாரணமானதாகவும்
மற்றும் பலவீனமானதாகவும் இருப்பதால் உடைந்து ரத்தம் வெளியேற காரணமாகின்றன.
எனவே பார்வைக்குறைவு அல்லது பார்வையிழப்பு நேரிடுவதற்கு காரணமாகின்றன.

9. டயபீடிக் ரெட்டினொபதியினால் பார்வையிழப்பு எவ்வாறு நிகழ்கிறது?

Proliferative
Retinopathy எனப்படும் முதிர்ச்சியடைந்த ஃபைப்ரோ வாஸ்க்குலார்
ப்ராலிஃபரேஷன் என்னும் இழை போன்ற திசு உருவாகியுள்ள நிலை என்கிற நான்காவது
நிலையில் புதிய ரத்தக்குழாய்கள் அசாதாரணமானதாகவும் மற்றும்
பலவீனமானதாகவும் இருப்பதால் உடைந்து ரத்தம் வெளியேறுகின்றன. அந்த
ரத்தமானது கண்ணின் மையப்பகுதிக்கு வருவதால் மங்கலான அல்லது தெளிவற்ற
பார்வை அல்லது பார்வைக்குறைபாட்டிற்க்கு காரணமாகின்றன.


அடுத்து
அந்த ரத்தம் மற்றும் நீர்க்கசிவு விழித்திரையின் மையப்பகுதில் உள்ள
மாக்குலா (Macula) என்னும் நுட்பமான பார்வைக்கு மிகவும் அவசியமான
பகுதியையும் பாதிக்கிறது. இதன் காரணமாக நடுப்பகுதி பார்வை பாதிப்பு
ஏற்படுகிறது. இந்நிலை மாக்குலா இடிமா (Macula Edema) எனப்படுகிறது.

10. டயபீடிக் ரெட்டினொபதியினால் விழித்திரையில் என்ன நிகழ்கிறது?

நீரிழிவு
பாதிப்புடைய ரத்தம் கண்ணின் விழித்திரையில் செல்லும்போது விழித்திரையில்
சில மாற்றங்களை ஏற்படுத்துகிறது. இந்த மாற்றங்கள் விழித்திரையின் சிறிய
ரத்தக்குழாய்களில் மைக்ரோ ஆஞ்சியோபதி எனப்படும் மாற்றத்தை விளைவிக்கிறது.
இதனால் ரத்தமும் நீர்க்கசிவும் ஏற்பட்டு விழித்திரை வீக்கம் அடைகிறது.

இந்த
கசிவுகள் ரெட்டினல் இடிமா மற்றும் கடின கசிவு (Hard exudated) எனப்படும்
லைப்போ புரோட்டீன் வஸ்துகளையும் சேமித்து வைக்கிறது. இந்த கசிவு
விழித்திரையின் முக்கிய பகுதியான மாக்குலாவை பாதிக்கும்போது பார்வை
குரையும். படித்தல் மற்றும் நுண்ணிய பொருட்களை பார்ப்பதில் சிரமம்
ஏற்படும்.

11. டயபீடிக் ரெட்டினோபதி முழுமையான பார்வையிழப்பினை எற்படுத்துமா?

இந்த
நோயினை கட்டுக்குள் வைத்துக்கொள்வதற்க்கு தொடர்ந்த கண் பரிசோதனை மற்றும்
கண் மருத்துவரின் ஆலோசனை தேவை. அதனை தவிர்ப்பது முழுமையான
பார்வையிழப்பிற்க்கு காரணமாகலாம்.

12. டயபீடிக் ரெட்டினோபதி ஒருவருக்கு இருக்கிறது என்பதை எப்படி தெரிந்து கொள்ளமுடியும்?

உங்களுக்கோ
அல்லது தாய் அல்லது தந்தை அல்லது இருவருக்குமே நீரிழிவு நோய் இருந்தால்
நீங்கள் உங்களுக்கும் நீரிழிவு பிரச்சினை இருக்கிறதா என்று பரிசோதித்துக்
கொள்வது நல்லது. உங்களுக்கு நீரிழிவு பிரச்சினை இருக்கிறது என்றால் ஒரு
கண் மருத்துவமனைக்குச் சென்று முழுமையான கண் பரிசோதனை செய்து கொள்வது
நல்லது.

டயபீடிக் ரெட்டினோபதி எப்போதும் தீவிரமான நிலைக்கு வரும்
வரை நம் பார்வையை பாதிப்பதில்லை. ஆனால் தீவிரமான நிலையில் சிகிச்சை
அளிப்பதில் சிரமம் ஏற்படும். தொடர்ந்த பரிசோதனை, ஆரம்ப கட்ட நிலையில் நோயை
கண்டுபிடித்தல், வெற்றிகரமான சிகிச்சை இவையே பார்வையிழப்பிற்க்கான
சாத்தியக்கூறினை குறைக்கிறது.

13. டயபீடிக் ரெட்டினோபதி ஒருவருக்கு இருக்கிறதா என்பதை அறிய அவரது கண்கள் எவ்வாறு பரிசோதிக்கப்படுகிறது?

- கண்ணின் வெளிப்புறத் தோற்றம்
- பார்வைத் திறன்
- கண் நீர் அழுத்தம்
- பார்வைக்குறைபாடு
- நிறக்குறைபாடு

இவ்வாறான
அடிப்படை பரிசோதனைகளை செய்துவிட்டு கண்ணின் பாப்பா (pupil) விரிவதற்க்காக
சொட்டு மருந்திடப்படுகிறது. சுமார் 15 நிமிடங்கள் காத்திருந்து, கண்ணின்
உள்ளறையை - கண்ணின் பின்புறத்தை இன்டைரக்ட் ஆப்தால்மாஸ்கோப் என்னும்
கருவியைக் கொண்டு விழித்திரையை முழுமையாகப் பார்ப்பதற்கு உதவும் வலியேதும்
இல்லாத பரிசோதனையை செய்யபடுகிறது.

குறிப்பு 8-ல் கூறப்பட்டுள்ள
மாற்றங்கள் ஏதும் விழித்திரையில் ஏற்பட்டுள்ளதா என்பது கண்டறியப்படுகிறது.
விழித்திரையில் பாதிப்பு ஏதும் இருக்குமேயானால் மேலும் சில
பரிசோதனைகளுக்கு பரிந்துரைக்கப்பட்டு அவையும் செய்யப்பட்டு நோய்
இருக்கிறதா இல்லையா என்பது உறுதி படுத்தப்படுகிறது.

* குறிப்பாக உங்கள் கண் மருத்துவர் உங்கள் விழித்திரையில் ரத்தகசிவு அல்லது நீர்க்கசிவு உள்ளதா என்று கவனமாக சோதனை செய்வார்.

* விழித்திரையில் வீக்கம் ஏதும் உள்ளதா? அல்லது மாக்குலாவில் பாதிப்பு ஏதும் இருக்கிறதா என்பதை கவனிப்பார்.

*
விழித்திரையை ஒட்டி ஏதேனும் கசிவு அல்லது கலங்கலான திட்டு ஏதும்
சேர்ந்துள்ளதா என்பதனை கவனிப்பார். (இது ரத்தக்கசிவு உள்ளதா என்பதை உறுதி
செய்வதற்க்காக).

* பார்வை நரம்பில் பாதிப்பு ஏதேனும் உள்ளதா என்று ஆராய்வார்.

* வேறு ஏதேனும் மாற்றங்கள் ரத்தக்குழாயில் ஏற்ப்பட்டுள்ளதா என்று கவனிப்பார்.

*
ஒருவேளை உங்களுக்கு மாக்குலாவில் பாதிப்பு ஏதும் ஏற்ப்பட்டிருப்பதாக
அல்லது சிகிச்சை தேவைப்படுவதாக உங்கள் கண் மருத்துவ நிபுணர் கருதினால்
fundus fluorescein angiogram என்ற பரிசோதனையை செய்ய அறிவுறுத்தலாம். இந்த
சோதனையின்போது உங்கள் கையில் ரத்தக்குழாயின் வழியாக ஒரு கரைசல்
செழுத்தப்பட்டு அது உங்கள் கண்ணின் விழித்திரையில் உள்ள ரத்தக்குழாயில்
செல்வது புகைப்படமாக எடுக்கப்படுகிறது. அது விழித்திரையில் உள்ள
ரத்தக்குழாயில் ரத்தக்கசிவு இருக்கும் இடத்தையும், அளவையும் தெரிந்து
சிகிச்சை அளிக்க உதவியாக இருக்கும்.

14. டயபீடிக் ரெட்டினோபதிக்கு தீர்வு என்ன?

முதல்
நிலையில் சிகிச்சை ஏதும் தேவைப்படுவதில்லை என்றாலும், நீரிழிவு விழித்திரை
நோயைத் தவிர்ப்பதற்க்காக, நீரிழிவு பிரச்சினை உள்ளவர்கள் ரத்த
சர்க்கரையின் அளவு, ரத்த அழுத்த அளவு, ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவு
போன்றவை கட்டுக்குள் இருக்கும்படி வாழ்க்கை முறையை அமைத்துக்கொள்ளும்படி
அறிவுறுத்துவார்கள். நோயாளிக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்பின்
அளவைப்பொறுத்து மருந்துகள், அல்லது லேசர் சிகிச்சை அல்லது அறுவை
சிகிச்சையை உங்கள் மருத்துவர் பரிந்துரை செய்யலாம். உங்கள் கண்
மருத்துவரின் ஆலோசனைப்படி நடப்பதே சிறந்தது.

15. டயபீடிக் ரெட்டினோபதிக்கான அறிகுறிகள் என்ன?

*
அடிப்படையில் டயபீடிக் ரெட்டினோபதிக்கு என்று ஆரம்ப கட்ட நிலையில் எந்த
அறிகுறியுமே கிடையாது என்பதே உண்மை. உங்களுக்கு நீரிழிவு இருப்பதாக
நிச்சயிக்கப்பட்டால் வருடம் ஒரு முறை முழுமையான கண் பரிசோதனையை செய்து
கொள்வதே நல்லது.(அவ்வாறு பரிசோதனை செய்துகொள்ளச் செல்லும்போது உங்கள் கண்
மருத்துவரிடம் உங்களுக்கு நீரிழிவு பிரச்சினை இருப்பதை மறக்காமல்
முதலிலேயே சொல்லவும்)

* ஒரு பொருளைப்பார்க்கும்போது அந்தப்
பொருளின் மையப்பகுதி தெளிவாகத் தெரியவில்லை என்றால், அல்லது கலங்கலாகத்
தெரிந்தால், கண்ணின் மாக்குலா என்ற பகுதியில் மாக்குலா இடிமா என்ற நோயின்
அறிகுறியாக எடுத்துக் கொள்ளலாம். உடனடியாக கண் மருத்துவரின் கவனம் தேவை
என்பதை மறவாதீர்கள்.

* ஒருவேளை முதலில் குறிப்பிட்ட விழித்திரையின்
மேலடுக்குகளில் உருவான புதிய ரத்தக்குழாய்கள் பாதிக்கப்பட்டு ரத்தம்
கசிந்தால், பார்வை மறைக்கலாம்.

* ஒரு சில நேரங்களில் மறைக்கப்பட்ட
பகுதிகள் சிகிச்சை எடுத்துக் கொள்ளாமலேயே தெளிவாகி பார்வை தெளிவாகத்
தெரியலாம். இருந்தாலும் ரத்தக்கசிவு மற்றும் நீர்க்கசிவு எப்போது
வேண்டுமானாலும் மீண்டும் ஏற்படலாம். எனவே முதல் முறையாக பார்வையில்
தெளிவின்மை உணர்ந்தால் உடனடியாக கண் சிகிச்சை நிபுணரை சந்தித்து சிகிச்சை
பெறுவதே பார்வையிழப்பை காப்பாற்றுவதற்க்கான வழி.

* Proliferative
டயபீடிக் ரெட்டினோபதிக்கான சிகிச்சையை இடையிலேயே நிறுத்துவதும் முழுமையான
பார்வையிழப்பை ஏற்படுத்தலாம். எனவே தொடர்ந்த கண்காணிப்பு மிகவும் அவசியம்.

16. லேசர் சிகிச்சை எதற்காக தேவைப்படுகிறது?

Proliferative
Retinopathy எனப்படும் நிலையில் ரத்தக்குழாய்கள் அசாதாரணமானதாகவும்
மற்றும் பலவீனமானதாகவும் இருப்பதால் உடைந்து ரத்தம் வெளியேற காரணமாகின்றன.
எனவே பார்வைக்குறைவு அல்லது பார்வையிழப்பு நேரிடுவதற்கு காரணமாகின்றன.
இழந்த பார்வையை மீட்க முடியாவிட்டாலும் இருக்கின்ற பார்வையை காப்பாற்ற
வேண்டி லேசர் சிகிச்சை வழங்கப்படுகிறது.

இந்த லேசர் சிகிச்சையில்
1000 முதல் 2000 லேசர் கற்றைகள் பாய்ச்சப்பட்டு பாதிப்பை
ஏற்ப்படுத்தக்கூடிய புதிதாக உருவான அசாதரணமான மற்றும் பலவீனமான
ரத்தக்குழாய்கள் எரிக்கப்படுகின்றன. அதன் மூலம் ரத்தம் மற்றும்
நீர்க்கசிவு ஏற்ப்பட்டு பார்வை பாதிப்பது அல்லது பறிக்கப்படுவது
தடுக்கப்படுகிறது.

பொதுவாக சிகிச்சை முழுமையடைய இரண்டு அல்லது
மூன்று அமர்வுகள் ஒவ்வொரு நோயாளிக்கும் தேவைப்படலாம். இந்த புதிய
ரத்தக்குழாய்கள் ரத்தக்கசிவை ஏற்படுத்துவதற்க்கு முன்பே லேசர் சிகிச்சை
அளிப்பது பார்வையை தக்க வைத்துக்கொள்வதற்க்கு பயன்படும். புதிய பலவீனமான
அசாதாரணமான ரத்தக்குழாய்கள் எப்போது வேண்டுமானாலும் உருவாகலாம்.


எனவேதான்
லேசர் சிகிச்சை சிகிச்சை எடுத்துக்கொண்டாலும் தொடர்ச்சியான கண்
மருத்துவரின் கண்காணிப்பு தேவைப்படுகிறது. ரத்தக்கசிவு இருந்தாலும்,
கசிவின் அளவு மற்றும் தன்மையை பொறுத்து சிகிச்சை வழங்கப்படலாம். பொதுவாக
பல நோயாளிகளுக்கு சிகிச்சை பார்வையை பாதுகாத்து மேலும் பார்வை குறைவதை
தடுக்க உதவுகிறது. பார்வையிழப்பின் சிரமத்தை 50 சதவீதம் வரை
குறைக்கிறது.இது கரும்புள்ளிகளி நீக்குவதில்லை.

மேலும், விட்ரியஸ்
பகுதியில் ஏற்க்கெனெவே ரத்தக்கசிவு ஏற்பட்டிருக்கும் பட்சத்தில் அவற்றை
சரி செய்வதில்லை. லேசர் சிகிச்சையின் மூலம் நோயில் முன்னேற்றம் கண்டாலும்,
சிறிதளவு பார்வையிழப்புக்கும் வாய்ப்பு உள்ளது.

17. லேசர் சிகிச்சை பாதுகாப்பானதா?

லேசர்
சிகிச்சை பாதுகாப்பானதே. டயபீடிக் ரெட்டினோபதிக்கான லேசர் சிகிச்சைக்குப்
பிறகு சில மணி நேரங்கள் பார்வை மங்கலாகத் தெரியும்.
பக்கவாட்டுப்பார்வையும், இருட்டுக்குள் பழகுவதும் பாதிக்கப்படலாம்.
ரத்தக்கசிவு மற்றும் நீர்க்கசிவு மிக அதிகமாக உள்ள நோயாளிகளுக்கு லேசர்
சிகிச்சைக்குப்பின்னரும் பொஆர்வையிழப்பிற்க்கான வாய்ப்பு இருப்பதால்
அவர்களுக்கு விட்ரெக்டமி எனப்படும் ஆபரேஷன் தேவைப்படும் என்பதையும்
டயபீடிக் ரெட்டினோபதி நோயாளிகள் தெரிந்து கொள்ளவேண்டியதாகும்.

18. விட்ரெக்டமி ஆபரேஷன்...

புதிய
வளர்ச்சியடைந்த ஆபரேஷன் முறையில் விட்ரெக்டமி மற்றும் விட்ரியஸ் மைக்ரோ
சர்ஜரி மூலமாக 60 % முதல் 70% வரை டயபீடிக் ரெட்டினோபதியினால்
பாதிக்கப்பட்டவர்களுக்கு பார்வையில் முன்னேற்றம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
விட்ரெக்டமி ஆபரேஷனின் நோக்கம், கண்ணின் மையப்பகுதியில் உள்ள ரத்தத்தையும்
அசாதரணமாக பாதிக்கப்பட்ட திசுக்களை நீக்குவதுமே ஆகும்.

விட்ரெக்டமி
ஆபரேஷனில் கண்ணின் மையப்பகுதியில் உள்ள அதிகமான ரத்தக்கசிவினால்
பாதிக்கப்பட்ட, பார்வையிழப்பை ஏற்படுத்தும் விட்ரியஸ் திரவம் நீக்கப்பட்டு
வேறு உப்புக்கரைசல் நிரப்பப்படுகிறது. இந்த ஆபரேஷன் மூலம் பார்வை மேலும்
குறையும் அபாயத்தையும், விழித்திரை பிரிதல் (Retinal Detachment)
எனப்படும் நோயின் இறுதிக்கட்டத்தையும் தடுக்க முடியும்.

19. நீரிழிவு
பற்றியும் டயபீடிக் ரெட்டினோபதி பற்றியும் சரியாகத் தெரிந்திராத
காரணத்தால் அல்லது வேறு காரணத்தால் டயபீடிக் ரெட்டினோபதியினால் அதிக
அளவில் பார்வையை இழந்து விட்டேன். பார்வையை மீட்டுக் கொள்ள எனக்கு ஏதேனும்
வாய்ப்பு இருக்கிறதா?

நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். டயபீடிக்
ரெட்டினோபதிக்கான சிகிச்சை என்பது இழந்த பார்வையை மீட்பதற்க்கான முயற்சி
அல்ல. இருக்கின்ற பார்வையை காத்துக் கொள்வதும், மேலும் அதிக அளவில்
ஏற்படவிருக்கும் பார்வையிழப்பை தடுப்பதற்க்கான வாய்ப்பே.

டயபீடிக்
ரெட்டினோபதியினால் அதிகமான அளவில் பார்வையை இழந்தவர்கள், இழந்ததை எண்ணி
கவலைப்படாமல், உங்கள் கண் மருத்துவரை சந்தித்து, நீங்கள் பெற்றுக்கொண்ட
சிகிச்சையின் முழு விவரத்தையும் அதற்கான மருத்துவ அறிக்கைகளோடு ஆலோசனை
செய்யலாம். குறைவான பார்வையோடு நிறைவான பயனுள்ள வாழ்க்கையை வாழ "லோ விஷன்
எய்டு" எனப்படும் பார்வை உபகரண்ங்கள் மற்றும் கருவிகள் வந்துவிட்டன.
அவற்றின் உதவியோடு ஒளிமயமான வாழ்க்கை வாழ முடியும்.

20. நீரிழிவு நோயாளிகள் தங்கள் கண் பார்வையை பாதுகாத்துக்கொள்ள சில முக்கியமான குறிப்புகளை கண்டிப்பாகத் தெரிந்து கொள்ள வேண்டும். அவை:

* நீரிழிவு நோயாளிகள் பத்தில் இரண்டு பேர் டயபீடிக் ரெட்டினோபதியினால் பாதிக்கப்படுகிறார்கள்.

* ஆரம்ப காலத்தில் இந்த டயபீடிக் ரெட்டினோபதிக்கு எந்த விதமான முன்னறிவிப்பும் இருப்பதில்லை.

* நீரிழிவு நோயினால் ஏற்படும் கண் பாதிப்பு மிகச்சிறிய அளவில் பாதித்தாலும் நாளடைவில் அது பார்வையை இழக்கச் செய்யலாம்.

* இந்தியாவில் இன்று கண் பார்வை இஅழப்பிற்க்கு நீரிழிவு நோய் ஒரு மிகப் பெரிய காரணமாக இருக்கிறது.

* நீரிழிவு நோய் நல்ல கட்டுப்பாட்டில் இருந்தாலும் கண் பார்வையில் பழுது ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.

* முறையான திட்டமிட்ட கண் பரிசோதனைகள் மூலமும் தக்க சமயத்தில் எடுத்துக் கொள்ளும் சிகிச்சையும் கண் பார்வையை பாதுகாக்கும்.

* லேசர் சிகிச்சை மூலம் பலருக்கு பார்வை இழப்பை தடுக்கலாம்.

* நீரிழிவு நோய் உள்ளவர்கள் வருடம்தோறும் கண் பரிசோதனை செய்துகொள்வது தற்காப்பு நடவடிக்கையாகும்.

*
அநேகமாக அனவருக்கும் தக்க சமயத்தில் டயபீடிக் ரெட்டினோபதி
கண்டறியப்பட்டால் நல்ல முறையில் சிகிச்சை பெற்று கண் பார்வையை
பாதுகாத்துக் கொள்ளலாம்.

* கண் பார்வை நமக்கு மிக மிக முக்கியம்.
நாம் சுதந்திரமாக நடமாட வேண்டும் என்றால் வருடாந்திர கண் பரிசோதனை
மனதிற்கு நிம்மதி கொடுக்கும். வரும் முன் காப்போம். ஆரம்பத்திலேயே
கண்டறிவோம். உடன் சிகிச்சை பெறுவோம். கண் பார்வையை தக்க வைப்போம்.
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum