TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 17, 2024 8:41 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 17, 2024 5:06 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Thu May 16, 2024 8:45 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun May 12, 2024 10:47 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


கசப்பான செய்தி,கல்லால் அடிக்காதீர்கள்.

2 posters

Go down

கசப்பான செய்தி,கல்லால் அடிக்காதீர்கள். Empty கசப்பான செய்தி,கல்லால் அடிக்காதீர்கள்.

Post by sakthy Sun Oct 23, 2011 9:12 pm

கசப்பான செய்தி,கல்லால் அடிக்காதீர்கள்.

உள்ளதைச் சொல்வேன் சொன்னதை செய்வேன் வேறொன்றும் தெரியாது.
உள்ளத்தில் இருப்பதை வார்த்தையால் மறைக்கும் கபடம் தெரியாது.

இந்த இணையத்தில் சில தினங்களுக்கு முன் வந்த, கணபதி ஸ்தபதியை நினைவு கூர்ந்த கட்டுரை படித்தேன்.அவரின் கலை வண்ணத்தையும், கைவண்ணத்தையும் ஹவாய் இறைவன் கோயிலில் கண்டேன்.அவரின் நினைவுகளை அங்குள்ள காப்பகத்திலும் காணலாம். யார் யாருக்கோ கலைஞன் பட்டம்,விருது கொடுத்து கௌரவிக்கும் இன்றைய நாளில் ஒரு உண்மையான கலைஞனை, கலைஞனாக இனம் கண்டு நினைவு கூர்ந்ததற்கு நன்றிகள் பல.

நெவேட,ரெனோ பர்னிங்க் மான் னில் இருந்து ஜேர்மன் மூனிச் நகர் அக்டோபர் களியாட்டத்துடன் முடிந்த ஒரு மாத விடுமுறையில், பார்த்தவைகள், படித்தவைகள், தெரிந்தவைகள்,புரிந்து கொண்டவைகள் பல.இருப்பினும் ஒரு விஷயம் மனத்தின் எங்கோ ஒரு மூலையில் குத்தியது. உண்மை கசக்கும் என்பார்கள். உள்ளதை சொல்லும் போது சில சமயம் வலி கவலை ஏற்பட்டாலும்,அதை புரிந்து கொண்டு திருத்திக் கொள்வது மனித குணமாக இருக்க வேண்டும். அப்படி யாரும் செய்யாதது தான் இன்று உலகெங்கும் மனிதநேயம் செத்துப் போவதற்கும்,மிருக குணம் தளைப்பதற்கும் காரணமாகிறது.தவறை ஏற்றுக் கொள்வதில், அதை திருத்திக் கொள்வதில் நாம் ஏன் பின் நிற்கிறோம் என்பதில் உலகெங்கும் உள்ள மனநலவியலாளர்கள் வேறுபடுகிறார்கள்,அது அவர்களிடம் கேள்விக்குறியாகவும் இருந்து வருகிறது.

நான் தெரிவிக்கும் இந்த விஷயம் பற்றி முதலிலேயே உங்களிடம் மன்னிப்புக் கேட்டு விடுகிறேன். கல்லை என் மீது வீசாதீர்கள். வீச வேண்டியவர்கள் யாரோ அவர்கள் மீது வீசுங்கள்.
என்னை என் அப்பா அம்மா இங்கிலிஸ் மீடியத்தில் படிக்க வைக்கிறார்கள் என்றும்,என் பிள்ளையை இங்கிலீஷ் மீடியத்தில் படிக்க வைக்கிறேன் என்றும் தமிழ்நாட்டில் அடிக்கடி பிள்ளைகளும் பெற்றோரும் சொல்லிக் கொள்வதை நாம் கேட்கிறோம்.தமிழர்களுடன் கூட தமிழில் பேசினால் பெற்றோர்களுக்கும்,ஆசிரியர்களுக்கும் கோபம் வந்து விடுகிறது. ஆனால் ஜப்பான்,சீனா,ஐரோப்பிய நாடுகளில் இப்படியான பேச்சை நாம் கேட்க முடியாது. காரணம் அங்கு அவர்கள் தங்கள் தாய் மொழியிலேயே கல்வியை கற்கிறார்கள். ஆங்கில மொழியை இரண்டாவது மொழியாகவும்,வேறு விருப்பமான மொழி ஒன்றை மூன்றாவது மொழியாகவும் கற்கிறார்கள். இந்தியா போன்ற ஆசிய நாடுகளிலும், சில ஆபிரிக்க நாடுகளிலும் ஆங்கில மொழியில் கல்வியை கற்ற போதிலும் கூட ஆங்கில மொழி அறிவு எந்த அளவில் உள்ளது என்பது ஒரு கேள்வியாக உள்ளது.

சமீபத்தில் பாரதி பாஸ்கர் அவர்கள் ஒரு செய்தியை வெளியே கொண்டு வந்தார். நேர்முகப் பரீட்சைக்கு வந்த பலருக்கு சாதாரண கேள்வியை புரிந்து கொள்ளும் அறிவு கூட இருக்கவில்லை என்பதாகும். சுகவீன காரணத்திற்காக இரண்டு நாட்கள் பள்ளி செல்லாத சிறுமி, மறுநாள் காலை பள்ளி செல்ல புறப்படுகிறாள். வெளியே சென்றவள் ஓடி வருகிறாள். அம்மா மன்னிப்புக் கடிதம் வேண்டும் என்கிறாள். காலை வரை எது பற்றியும் கவலையின்றி இருந்த குழந்தையை கண்டித்தபடியே அம்மா கடிதத்தை இரண்டே நிமிடத்தில் எழுதிக் கொடுத்து அனுப்புகிறாள்.அந்த அம்மா படித்ததோ பல வருடங்களுக்கு முன்னர் ஐந்தாவது தான். ஆங்கிலத்திலோ,தமிழிலோ தங்கு தடை இன்றி எழுதிய அவள் அந்தக் காலத்தைய ஐந்தாவது என்று பெருமையும் கொள்கிறாள். ஆனால் இன்றோ இங்கிலிஸ் மீடியம்,குறைந்தது பத்தாவதாவது படித்து இருந்தாலும் கூட பலருக்கு எழுத முடியவில்லை. பத்து பேப்பரை எழுதிக் கிழித்து விட்டு பதினோராவது பல பிழைகளுடன் பவனி வருகிறது.

காரணம் என்ன? இங்கிலிஸ் மீடியம் என்கிறார்கள்,மதிப்பெண்களை வைத்து முன்னேறுகிறார்கள்.அவர்களின் இலக்கு அமெரிக்க வேலையும்,பணமும் தான்.தட்டிக் கேட்டாலோ தமிழில் சரியான சொற்கள் இல்லை,புத்தகங்கள் இல்லை என்கிறார்கள்.தமிழைப் படித்து என்ன செய்ய முடியும் என்கிறார்கள்.

தாக்கி அழிக்கப்பட்ட ஜேர்மனி ஐம்பதிற்குப் பின்னரே தன்னை சுதாரித்திக் கொண்டு எழ ஆரம்பித்து, உலகின் முதல் ஏற்றுமதி நாடாக நிற்கிறது. உலகமே made in Germany என்றால் அதற்கு ஒரு தனித் தன்மை உண்டென்கிறது. எத்தனை கடிகாரங்களை உலகம் உற்பத்தி செய்த போதும் இன்றும் made in Switzerland என்று பெருமையுடன் சொல்லிக் கொள்கிறது. சீனாவில் ஜப்பானில் எங்கிருந்து எப்போது விஞ்ஞான சொற்கள் வந்திறங்கின? எண்ணிப் பார்க்க மறுக்கிறோம்.
ஆங்கிலத்தின் இலக்கணத்தை கையிலே வைத்திருக்கிறோம்.ஆனாலும் சரியான ஆங்கில உச்சரிப்பு எங்களுக்கு வர மறுக்கிறது.

ஆஸ்திரேலியாவிற்கு சென்ற பேச்சரங்க பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார், விமான நிலையத்தில் எனது ஆங்கிலம் அவர்களுக்கு புரியவில்லை.அவர்களின் ஆங்கிலம் எனக்கு புரியவில்லை ஏதோ சமாளித்தேன் என்கிறார்.ஐரோப்பிய ,ஜப்பான்,சீனா போன்ற நாடுகளில் ஆங்கிலத்தை ஒரே ஒரு பாடமாக கற்ற போதும் அவர்கள் அமெரிக்கர்களுடன்,ஆஸ்திரேலியர்களுடன்,பிரிட்டிஷ் காரர்களுடன் சரளமாக ஆங்கிலத்தை, அவர்களைப் போல் பேசுகிறார்கள். நம்மால் அது முடியவில்லை.
அமெரிக்க,பிரிட்டிஷ்,ஆஸ்திரேலியா நாடுகளுக்கு சென்றவர்களில் பலர் பல சிரமங்களை சந்தித்துள்ளனர். கல்வி நிலையங்கள்,தொழில் நிலையங்கள் மூன்று மாத intensive course கொடுத்த பின்னரே படிப்பையும்,தொழிலையும் தொடருகிறார்கள். இல்லையேல் பேசக் கற்றுக் கொள்கிறார்கள். ஆனால் ஐரோப்பியர்கள் ஜப்பான் சீனர்கள் இந்தக் கஷ்டங்களை அனுபவிக்கவில்லை. ஒரு பாடமாக ஆங்கிலத்தை பள்ளியில் கற்றாலும் உச்சரிப்பை சரியான முறையில் கற்பதால் உடனே பேச முடிகிறது. இதில் மாணவர்களை மட்டும் குறை சொல்ல முடியாது.ஆசிரியர்களும் அதே உச்சரிப்பையே பயன்படுத்துவதால் தான் இந்த கோளாறு ஏற்படுகிறது.
இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால்,இந்தியா போன்ற ஆசிய ஆபிரிக்க நாட்டவர்களின் ஆங்கில பேச்சு சரியாக வராததால், இவர்களை விட திறமையில் குறைந்த ஐரோப்பியர்களோ ஜப்பானியர்களோ முன்னேறி சென்று விடுகிறார்கள்.அவர்களுக்கு வரவேற்பும் கிடைக்கிறது. இன்றைய நாகரீக இயந்திர உலகில் புறத் தோற்றமும் போலி வேடமும் ஆட்சி புரிகிறது என்பதை மறுக்க முடியாது. பேச்சை வைத்தே ஆட்சியை கைப்பற்றிய காலத்தை மறக்க முடியுமா.

யாழ் ஈழ தமிழ் உச்சரிப்பை தமிழக தமிழர்களும்,தமிழக தமிழை ஈழத்தவர்களும்,சென்னைத் தமிழை மற்றைய பகுதி தமிழர்களும் புரிந்து கொள்ள முதலில் சிரமப் படுகிறார்கள்.வேறுபட்ட பல சொற்கள் பாவனையில் உள்ளதால் இந்த சிரமம் ஏற்படுகிறது. அது போலவே நமது ஆங்கில உச்சரிப்பை புரிந்து கொள்ள ஆங்கிலம் பேசுவோர் சிரமப் படுகிறார்கள்.அது மட்டுமல்லாது எவ்வளவு இலக்கண சுத்தமாக நாம் ஆங்கிலம் படித்திருந்தாலும்,பேச்சு உச்சரிப்பு சரியாக வராது விட்டால் ஆங்கில நாட்டவர்கள் உடனேயே இவர்களுக்கு ஆங்கிலம் தெரியாது என்றோ,படிக்காதவர்கள் என்றோ முடிவு செய்து விடுகிறார்கள்.

அவுஸ்திரேலிய தொழில் அதிபரும் ஒரு பேராசிரியரும் சமீபத்தில் சொன்ன கருத்து வேறு விதமாக அமைந்திருந்தது. இந்தியாவில் இருந்து வருபவர்களுக்கு ஆங்கில அறிவு குறவானதே என்பதாகும். அவரின் கருத்தை முற்றாக ஏற்க முடியாவிட்டாலும் கூட,ஒரு விஷயத்தை புரிந்து கொள்ள முடிகிறது.அதாவது அவுஸ்திரேலியாவைப் பொறுத்த அளைவில் ,இந்தியர்களை பல கண்களில் பார்க்கிறார்கள். இந்தியர்களும் வெளி நாட்டவர்களும் தங்கள் வேலை வாய்ப்பை தட்டிக் கொள்கிறார்கள் ,தங்கள் பண்பாடு கலாச்சாரத்திற்கு மாறாக இருக்கிறார்கள்,வெளிநாட்டவர்களின் புறத் தோற்றம்,ஆங்கிலக் கல்வி என்பவை ஆகும்.

முதலாவதை ஏற்றுக் கொண்டு, பண்பாடு கலாச்சாரம் என்பதை பார்த்தால்,வெள்ளையர்களும் பழங்குடியினரின் கலாச்சாரம் பண்பாடுகளை எல்லாம் அழித்து விட்டு குடியேறியவர்கள் தான் என்ற உண்மையை அவர்கள் மறந்து விட்டார்களோ என்று எண்ணத் தோன்றும்.. அடுத்து வரும் புறத் தோற்றம், ஆங்கிலக் கல்வியை எடுத்துக் கொண்டால் ,புறத் தோற்றத்தையும் ஆங்கில உச்சரிப்பையும் வைத்தே ஒருவரை எடை போடுவது தெரிகிறது.
நாம் கூட கிராமப் புறங்களில் இருந்து படிப்பதற்கும்,தொழிலுக்கும் வருவோரை அவர்களின் கிராமிய அழகு தமிழை வைத்தும்,புறத் தோற்றத்தை வைத்தும் கிராமம் என்றும் பட்டிக்காடு என்றும்,நாகரீகம் தெரியாது என்றும் ஏளனம் செய்வதை பார்த்திருக்கிறோம்,கேள்விப்பட்டும் இருக்கிறோம். எனவே புறத் தோற்றத்தையும் பேச்சையும் வைத்து எடை போடுகிறார்கள் என்பதை ஏற்றுக் கொண்டு தான் ஆக வேண்டும்.

இந்தக் கட்டுரை எழுதுவதற்கு காரணமான உளவியல் மற்றும் சமூகவியலில் பெரும் பணி ஆற்றி வரும் அமெரிக்க பேராசிரியர் கிறேக்குடன் பேசிய போது, அமெரிக்காவில் இன வேறுபாடு முற்றாக அழிந்து விடா விட்டாலும் ஆசிய நாட்டவர்களும் ஆபிரிக்க நாட்டவர்களும் பேசும் ஆங்கில உச்சரிப்பு காரணமாகவே அவர்களை படிக்காதவர்கள் என்றும் ஆங்கிலம் தெரியாதவர்கள் என்றும் எடை போடுவதாக கூறுகிறார்.
சமீப காலங்களில் சில VIP க்கள் கூட விமான நிலையங்களில் விசாரணைக்கு உள்ளான செய்தி பற்றி அவர் குறிப்பிடும் போதும் அவர் வலியுறுத்தியது, விமான பாதுகாவலர்கள் பேசியதையும்,வந்தவர்கள் பேசியதையும் ஒருவருக்கொருவர் புரிந்து கொள்ள முடியாமல் போனது தான் காரணமாக இருக்கலாம் என்கிறார்.
அது சரியா தவறா என்பதை ஆராய்வதை விட , ஆங்கில உச்சரிப்பை,பேச்சு ஆங்கிலத்தை சரியான முறையில் கற்றுக் கொள்வதும் கற்றுக் கொடுப்பதுமே பிரச்சனைக்கு தீர்வு எனலாம்.
கல்வி சீர்திருத்தம் கொண்டு வருவதும்,தாய் மொழிக் கல்வியை ஊக்கி விப்பதும்,ஒரு மொழியை சரியான முறையில் பயிற்றுவிப்பதும், பயில்வதும்,மதிப்பெண்களுக்கானதும் அமெரிக்க வேலைக்கான கல்வி முறையையும் மாற்றி அமைக்க கல்வியாளர்களும் அரசும் பொது நோக்குடன் சிந்தித்து செயல்பட வேண்டும்.

ஒரு மாத விடுமுறை முடிந்து விட்டதால்,அடிக்கடி வந்து தொல்லை கொடுக்க மாட்டேன் என்ற மகிழ்ச்சியான செய்தியை சொல்லி மீண்டும் அடுத்த வாரம்...............................Dr.சக்தி.
avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

கசப்பான செய்தி,கல்லால் அடிக்காதீர்கள். Empty Re: கசப்பான செய்தி,கல்லால் அடிக்காதீர்கள்.

Post by அருள் Mon Oct 24, 2011 7:26 am

தங்களின் பதிவுகளுக்காக காத்து கொண்டு இருகிறோம். தங்களின் பதிவுகளை தொடர்ந்து அளிக்கவும் .ஆவலுடன் சிந்தனை களத்தின் சார்பாக அறிவிப்பு அறிவிப்பு
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» கசப்பான செய்தி அஜீத் ஆவேசம்!
» அரட்டை அடிக்காதீர்கள்: ஷங்கர்
» சன் டிவி செய்தி ஆசிரியர் கைது! பணியிடத்தில் பெண் செய்தி வாசிப்பாளர் மீது பாலியல் தொந்தரவு!
»  நேற்றைக்கு நடிகை கனகாவை இறந்ததாக செய்தி வாசித்தார்கள் இல்லையா? இப்படி உலகம் முழுக்க யாருக்கெல்லாம் செய்தி வாசித்து இருக்கிறார்கள் என்று பார்ப்போமா?
» ஆந்திராவில் காதல் ஜோடி கல்லால் தாக்கி படுகொலை!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum