TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:45 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:44 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 3:24 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun May 12, 2024 10:47 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


தகவல் ஆணையம் மூலம் அரசை மிரட்ட தி.மு.க., முயற்சி: ஸ்ரீபதி நிலை என்ன?

Go down

தகவல் ஆணையம் மூலம் அரசை மிரட்ட தி.மு.க., முயற்சி: ஸ்ரீபதி நிலை என்ன? Empty தகவல் ஆணையம் மூலம் அரசை மிரட்ட தி.மு.க., முயற்சி: ஸ்ரீபதி நிலை என்ன?

Post by மாலதி Thu Sep 22, 2011 8:38 am

தகவல் ஆணையம் மூலம் அரசை மிரட்ட தி.மு.க., முயற்சி: ஸ்ரீபதி நிலை என்ன? Large_317745
"தகவல் ஆணையத்தையும், தலைமை தகவல் கமிஷனர் ஸ்ரீபதியையும் பயன்படுத்தி,
தமிழக அரசை மிரட்ட தி.மு.க.,வினர் முயற்சிக்கின்றனர்' என, தகவல் பெறும்
உரிமை சட்ட ஆர்வலர்கள் புகார் தெரிவித்தனர்.

அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத் தன்மையை உறுதி செய்வதற்காக, 2005ம்
ஆண்டு தகவல் பெறும் உரிமைச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதன்
அமலாக்கத்துக்காக, தமிழகத்தில் 2006ம் ஆண்டு மாநிலத் தகவல் ஆணையம்
ஏற்படுத்தப்பட்டது. தலைமை தகவல் கமிஷனராக கே.எஸ். ஸ்ரீபதி நியமிக்கப்பட்டதை
எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு ஐகோர்ட்டில் நிலுவையில் உள்ளது. பு.ஏ.
ராமையா, சி. மனோகரன், ஏ. ஆறுமுக நயினார் ஆகியோரை கமிஷனர்களாக நியமித்து,
சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முந்தையநாள், தமிழக அரசு உத்தரவு
பிறப்பித்தது. ஆனால், சட்டப்படியான வழிமுறைகள் கடைபிடிக்கப்படவில்லை என்று
கூறி, இந்த நியமனங்களை எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதில்
புதிய கமிஷனர்கள் நியமன உத்தரவுக்கு கோர்ட், இடைக்கால தடை விதித்தது.
அப்போது எதிர்க்கட்சியாக இருந்த அ.தி.மு.க., தற்போது ஆளுங்கட்சியாக
உள்ளதால், கமிஷனர்கள் நியமனம் தொடர்பான வழக்குகளில் தமிழக அரசின்
நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்பது இதுவரை தெளிவாகவில்லை.

யார் எதை விசாரிப்பது?: மாநில தகவல் ஆணையத்தில் தலைமை கமிஷனர்
கே.எஸ்.ஸ்ரீபதி, பெருமாள் சாமி, சீனிவாசன் ஆகியோர் இடையே, மேல்முறையீட்டு
மனுக்களை விசாரிப்பது தொடர்பாக பணிப்பகிர்வுகள் அண்மையில் முடிவு
செய்யப்பட்டன. இதன்படி, காவல்துறை, நீதித்துறை, தேர்தல்கள் உள்ளிட்ட
குறிப்பிட்ட சில துறைகள் தொடர்பான, மேல்முறையீட்டு மனுக்களை தலைமை தகவல்
கமிஷனர் ஸ்ரீபதி விசாரிப்பார் என்றும், பிற மாவட்டங்களில் இருந்து வரும்
மற்ற துறைகள் தொடர்பான மனுக்களை பெருமாள்சாமியும், சீனிவாசனும்
விசாரிப்பார்கள் என்றும் முடிவு செய்யப்பட்டது.

எத்தனை வழக்குகள்?: இதில் ஸ்ரீபதி, வாரத்தில் ஒரு நாளில் 10
வழக்குகள் வீதம் மாதம் ஒன்றுக்கு அதிகபட்சமாக 40 முதல் 50 வழக்குகளையே
விசாரிக்கிறார். மற்ற இரு கமிஷனர்களும், நாளொன்றுக்கு தலா 10 முதல் 15
வழக்குகள் வீதம் மாதத்துக்கு மொத்தம் 250 மனுக்களை விசாரிக்கின்றனர்.
மொத்தத்தில் ஒரு மாதத்தில் மூன்று கமிஷனர்களும் சேர்ந்து, 300
மேல்முறையீட்டு மனுக்களை விசாரிக்கின்றனர். ஆனால், ஆணையத்தில் தாக்கலாகும்
மேல்முறையீட்டு மனுக்கள் எண்ணிக்கை மாதம்தோறும் சில ஆயிரங்களை தாண்டுகிறது.
"இதில், விசாரிக்கப்படும் வழக்குகளிலும் தெளிவான உத்தரவுகள்
பிறப்பிக்கப்படாமல், பொது தகவல் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்கள் மட்டுமே
வழங்கப்படுகிறது' என மனுதாரர்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.

தி.மு.க., மிரட்டல்: தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்,
முந்தைய ஆட்சியில் நில அபகரிப்பில் ஈடுபட்ட தி.மு.க., பிரமுகர்கள்,
முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்கு தொடரப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு
வருகிறது. இந்த வழக்குகளில் சிக்கியவர்களை காப்பாற்ற, தகவல் பெறும் உரிமை
சட்டத்தை பயன்படுத்தி, அதிக கேள்விகளை கேட்டு பதில்களை பெற நடவடிக்கை
எடுக்குமாறு, அண்மையில் தனது கட்சி வழக்கறிஞர்கள் கூட்டத்தில் பேசிய
தி.மு.க., தலைவர் கருணாநிதி வலியுறுத்தினார். இதன்படி, தி.மு.க.,
வழக்கறிஞர்கள் சார்பில் நில அபகரிப்பு வழக்குகள் தொடர்பாக, ஏராளமான
மனுக்கள் போலீஸ் அதிகாரிகளிடம் குவிந்து வருகின்றன. இதற்கு, அந்தந்த பொது
தகவல் அதிகாரிகள் பதில் அளிக்காவிட்டால், அவர்கள் தகவல் ஆணையத்தில்
மேல்முறையீடு செய்வார்கள். இவ்வாறு மேல்முறையீட்டு மனுக்கள் வரும் போது
அனைத்து மனுக்களும், காவல்துறை, நீதித்துறை விவகாரங்களை விசாரிக்கும்
ஸ்ரீபதியிடம் விசாரணைக்கு வரும். "அப்போது தி.மு.க., வினரின்
மேல்முறையீட்டு மனுக்கள் வரும் நிலையில் அதில் ஸ்ரீபதியின் நிலைபாடு
இப்போது போலவே அறிவுறுத்தல் தீர்ப்புகளாக இருக்குமா அல்லது வழக்கு ஆவணங்களை
தி.மு.க.,வினருக்கு பெற்று தருவதாக இருக்குமா என்பதே இப்போது எழுந்துள்ள
கேள்வி' என தகவல் பெறும் உரிமை சட்ட ஆர்வலரும், "தாயகம்' என்ற தன்னார்வ
அமைப்பின் நிறுவனர் பாஸ்கரன் கூறினார்.

"அரசு நிர்வாகத்தில் நடைமுறை தகவல்களை, பொது மக்கள் அறிந்து கொள்ள
கொண்டுவரப்பட்ட தகவல் பெறும் உரிமை சட்டத்தையும், தலைமை தகவல் கமிஷனரையும்
பயன்படுத்தி அரசை மிரட்ட தி.மு.க.,வினர் முயற்சிப்பதே இதன் மூலம் தெரிய
வருகிறது' என பல்வேறு தகவல் உரிமை சட்டஆர்வலர்கள் கருத்து
தெரிவித்துள்ளனர். கடந்தாண்டு புதிய தலைமை தகவல் கமிஷனர் நியமனத்தின் போது,
அதற்கான குழுவில் இருந்த தி.மு.க.,வை சேர்ந்த முதல்வர் கருணாநிதியும்,
மூத்த அமைச்சர் அன்பழகனும் சேர்ந்து, குழுவின் மற்றொரு உறுப்பினரான
அ.தி.மு.க.,வை சேர்ந்த எதிர்கட்சித் தலைவர் ஜெயலலிதாவின் எதிர்ப்பை மீறி
ஸ்ரீபதியை நியமித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகாரமும்; தீர்ப்புகளும்!

தகவல் ஆணையத்தின் அதிகாரங்களும், பணிகளும், மேல்முறையீடுகளும்,
தண்டனைகள் குறித்து தகவல் பெறும் உரிமை சட்டத்தின் ஐந்தாவது இயலில் 18, 19,
20 ஆகிய பிரிவுகளில் விவரிக்கப்பட்டுள்ளன. மனுதாரர் கேட்கும் தகவல்களை
அளிக்க, ஒரு பொது தகவல் அதிகாரி சட்டத்துக்கு புறம்பாக மறுக்கும் நிலையில்,
அது மேல்முறையீட்டு விசாரணை மூலம் உறுதி செய்யப்பட்டால், அந்த
சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு, நாளொன்றுக்கு 250 ரூபாய் வீதம் மனுதாரருக்கு
தகவல் கிடைக்கும் நாள் வரை, கணக்கிட்டு அபராதம் விதிக்கலாம். இந்த அபராதம்
அதிகபட்சமாக 25 ஆயிரத்துக்குள் இருக்க வேண்டும். இது தொடர்பான விசாரணைக்கு,
ஆஜராகாமல் இருக்கும் பொது தகவல் அதிகாரியை கைது செய்யவும், தகவல்
கமிஷனர்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. தமிழக தலைமை ஆணையராக, ஸ்ரீபதி
பொறுப்பேற்றது முதல், இந்த சட்டத்தின் அதிகாரங்களை முழுமையாகவும்,
முறையாகவும் பயன்படுத்தாமல், "மனுதாரருக்கு பதில் அளிக்க நடவடிக்கை
எடுக்கவும்' என, பொது தகவல் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்கள் மட்டுமே
தீர்ப்பாக அளிக்கப்பட்டு வருகிறது. இந்த அறிவுறுத்தல்களை, எந்த பொது தகவல்
அதிகாரியும் மதிப்பதில்லை. இதனால், மனுதாரர்கள் மீண்டும், தகவல் ஆணையத்தையே
நாட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். கடந்த ஆறு மாதங்களில், ஓரிரு
அதிகாரிகளுக்கு மட்டுமே அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக மனு தாரர்கள்
கூறுகின்றனர். தமிழக தகவல் ஆணையத்தின், இந்த போக்கு தகவல் பெறும் உரிமை
சட்டத்தை படிப்படியாக செயலற்றதாக்குவதுடன், இதன் மீதான மக்களின்
நம்பிக்கையை குலைப்பதாகவும் அமைந்துள்ளது என, தகவல் பெறும் உரிமை
ஆர்வலர்கள் கூறினர்.

தகவல் ஆணையத்தில் இதுவரை...

தமிழக தகவல் ஆணையம் அமைக்கப்பட்டது முதல் இதுவரை நடந்த நிர்வாக மாற்றங்கள் ஆண்டு வாரியாக விவரம்:

2006 ஜனவரி : மாநில தகவல் ஆணையம் அமைப்பு.

2006 ஜனவரி 28 : ஓய்வு பெற்ற அரசு அதிகாரி எஸ்.ராமகிருஷ்ணன் தலைமைத்
தகவல் கமிஷனராகவும், ஜி.ராமகிருஷ்ணன், ரத்தினசாமி ஆகியோர் தகவல்
கமிஷனர்களாக நியமனம்.

2008 மே 7 : டி.ஆர். ராமசாமி, பெருமாள்சாமி, சீனிவாசன், சாரதா நம்பி ஆரூரன் ஆகியோர் தகவல் கமிஷனர்களாக நியமனம்.

2009 மே 12 : தகவல் கமிஷனர் ரத்தினசாமி ஓய்வு.

2010 ஆகஸ்ட் 30 : தலைமைத் தகவல் கமிஷனர் எஸ். ராமகிருஷ்ணன் ஓய்வு.

2010 செப்டம்பர் 1 : தலைமை தகவல் கமிஷனராக கே.எஸ். ஸ்ரீபதி நியமனம்.

2010 அக்டோபர் 9 : தகவல் கமிஷனர் ஜி. ராமகிருஷ்ணன் ஓய்வு.

2010 அக்டோபர் 30 : தகவல் கமிஷனர் டி.ஆர். ராமசாமி காலமானார்.

2011 மார்ச் : தகவல் கமிஷனர்களாக பு.ஏ. ராமையா, சி. மனோகரன், ஏ. ஆறுமுக நயினார் நியமனம். (ஐகோர்ட் இடைக்கால தடை)

2011 ஜூலை 31: தகவல் கமிஷனர் சாரதா நம்பி ஆரூரன் ஓய்வு.

- வி.கிருஷ்ணமூர்த்தி -
thanks:http://www.dinamalar.com/News_Detail.asp?Id=317745


[You must be registered and logged in to see this link.]
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» மகாத்மா காந்திக்கு தேசத்தந்தை அந்தஸ்து: தகவல் இல்லை என்கிறது தகவல் ஆணையம்
» சுவிசில் நாடுகடந்த தமிழீழ அரசை சீர்குலைக்க முயற்சி! மக்கள் அதிர்ச்சி!
» மூவர் தொடர்பான கருணை மனு தகவல்களை வெளியிட மத்திய அரசுக்கு தகவல் ஆணையம் உத்தரவு
» மோடி பதவிஏற்பு... நம்மவர் நிலை என்ன? புஸ்வாணமா?
» தகவல் அறியும் உரிமைச் சட்டம் அரசியல் கட்சிகளுக்கும் பொருந்தும்! – தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum