TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 3:03 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Apr 24, 2024 2:31 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Apr 23, 2024 12:00 am

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 22, 2024 9:07 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


பிராமணர் சமையல்

Go down

பிராமணர் சமையல் Empty பிராமணர் சமையல்

Post by மாலதி Wed Feb 17, 2010 7:39 am

பிராமணர் சமையல் Brahmin
இஞ்சி துவையல்


காலப் போக்கில் நாம் மறந்து போன உணவு வகைகளில் இதுவும் ஒன்று. ஜீரணத்திற்கு மிகவும் உகந்த எளிமையான பக்க உணவு.







தேவையான பொருட்கள்




  • 6 " இஞ்சி துண்டு
  • உளுத்தம் பருப்பு ஒரு கப் (சிறியது)
  • புளி - ஒரு கொட்டை பாக்கு அளவு
  • காய்ந்த மிளகாய் 2
  • உப்பு தேவையான அளவு
  • பெருங்காயம் சிறிதளவு
  • எண்ணெய் -வதக்குவதற்கு




செய்முறை




  • வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி உளுத்தம் பருப்பை லேசாக சிவக்கும் படி வறுக்கவும்.
  • பிறகு காய்ந்த மிளகாயையும் பெருங்காயத்தையும் போட்டு லேசாக வறுத்துக் கொள்ளவும்.
  • பிறகு இஞ்சியை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக், அதையும் நன்கு வறுத்துக் கொள்ளவும்.
  • சூடு ஆறிய பிறகு வறுத்த பொருட்களுடன் உப்பு புளி சேர்த்து மிக்ஸியில் நற நற வென்று அரைக்கவும்.





குறிப்பு:

இதை
சாதத்துடன் பிசைந்து சாப்பிடவோ அல்லது மோர் சாதத்திற்குத் தொட்டுக்
கொள்ளவோ மிகவும் நன்றாக இருக்கும். அதிக காரம் சாப்பிடாதவர்கள் சிறிது
தேங்காயும் வறுத்து சேர்த்து அரைத்துக் கொள்ளலாம்.


வழங்கியவர்


srividhyamohan
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

பிராமணர் சமையல் Empty கீரை அவியல்

Post by மாலதி Wed Feb 17, 2010 7:46 am

இது கேரளாவில் கீரையில் செய்யகூடியது.







தேவையான பொருட்கள்




  • கீரை - 1 கட்டு
  • துவரம் பருப்பு - 1/4 கப்
  • உப்பு - தேவைகேற்ப்ப
  • மசாலா
  • -----------
  • தேங்காய் - 1/2 கப்
  • சீரகம் - 1/2 தே.க
  • பச்சரிசி - 1/2 தே.க
  • வற்றல் மிளகாய் - 2
  • உப்பு - தேவைகேற்ப்ப
  • தாளிக்க
  • எண்ணெய் - 1 தே.க
  • கடுகு - 1/2 தே.க
  • வற்றல் மிளகாய் - 1
  • பெருங்காயம் - 1/4 தே.க
  • கறிவேப்பிலை - கொஞ்சம்




செய்முறை




  • முதலில் கீரையை நன்றாக மண் போக அலசிவிட்டு
  • பொடியாக அரியவும்.
  • பருப்பை வேகவைக்கவும்.
  • ஒரு பானில் எண்ணெய் விட்டு தாளிக்கயுள்ளதை
  • தாளித்து அதில் கீரையை போட்டு ஐந்து நிமிடம் வதக்கி
  • பின் தண்னிர் விட்டு வேகவிடவும்.
  • பருப்பையும், உப்பு, அரைத்த மசாலா எல்லாம் சேர்த்து
  • நன்றாக பத்து நிமிடம் வேக விடவும்.
  • வாசனைக்கு 1 தே.க தேங்காய எண்ணெய் விட்டு
  • மூடி வைக்கவும்.
  • இது சாத்திற்க்கு நன்றாக இருக்கும்





குறிப்பு:


வெந்தய கீரையை தவிர வேற எல்லா கீரையிலும் செய்யலாம்.



வழங்கியவர்


விஜிடிவிம்





பரிமாறும் அளவு


ஆயத்த நேரம்


சமைக்கும் நேரம்



5

10

20
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

பிராமணர் சமையல் Empty அவல் தேங்காய்பால் பாயசம்

Post by மாலதி Wed Feb 17, 2010 7:46 am

தேவையான பொருட்கள்




  • அவல் -ஒரு கப்
  • தேங்காய்பால் -ஒருகப்
  • பசும்பால் -முக்கால்கப்
  • தண்ணீர் -கால் கப்
  • சீனி -ஒன்றெரை கப்
  • முந்திரி -50கிராம்
  • திராட்சை -50கிராம்
  • நெய் -50கிராம்
  • பன்னீர் -ஒரு பெரியகரண்டி
  • குங்குபப்பூ-சிறிது




செய்முறை




  • அவலை
    மிக்ஸியில் ஒரு சுற்றி சுற்றி பொடித்துக்கொள்ளவும் அதை வெறும் வாணலியில்
    வறுக்கவும் அதில் தண்ணீரை ஊற்றி சிறிது வேகவிடவும் அதனுடனே பாலை சேர்த்து
    நன்கு வேகவிடவும்
  • அதில் சீனியை சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்
    பின் அதில் நெய்யில் வறுத்த முந்திரி திராட்சை பன்னீர் குங்குபப்பூ
    சேர்த்து பரிமாறவும்





குறிப்பு:


பசும் பாலுக்கு சேர்க்காமல் இரண்டு கப் தேங்காய் பாலும் மட்டும் வேண்டுமானலும் சேர்த்துக்கொள்ளலாம் சுவை இன்னும் அதிகரிக்கும்



வழங்கியவர்


ஜீலைஹா நஜீர் -ஃப்ரான்ஸ்





பரிமாறும் அளவு


ஆயத்த நேரம்


சமைக்கும் நேரம்



3நபர்கள்

5நிமிடம்

20நிமிடம்
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

பிராமணர் சமையல் Empty இஞ்சி ரசம்

Post by மாலதி Wed Feb 17, 2010 7:48 am

வயிறு அப்செட் ஆனவர்களுக்கும் குழந்தை பெற்றவர்களுக்கும், குழந்தைகளுக்கும்,மற்றும் குளிர் காலத்திலும் செய்து சாப்பிடலாம்.
சளி, வீசிங் பிராப்ளம் உள்ள பிள்ளைகளுக்கும் இது ரொம்ப நல்லது








தேவையான பொருட்கள்




  • புளி - லெமென் சைஸ்
  • தக்காளி - ஒன்று
  • துவரம் பருப்பு - ஒன்னற மேசை கரண்டி (வேக வைத்தது)
  • மஞ்சள் பொடி - கால் தேக்கரண்டி
  • உப்பு - தேவைக்கு
  • வருத்து அரைக்க
  • -------------
  • நெய் - ஒரு தேக்கரண்டி
  • காஞ்ச மிள்காய் - ஒன்று
  • மிளகு - 9
  • சீரகம் - ஒரு தேக்கரன்டி
  • கருவேப்பிலை - சிறிது
  • பூண்டு - இரண்டு பல்லு
  • முழு தனியா - ஒரு மேசை கரண்டி
  • இஞ்சி - இரண்டு அங்குல துன்டு
  • தாளிக்க
  • -------
  • எண்ணை - ஒரு தேக்கரண்டி
  • கடுகு - அரை தேக்கரண்டி
  • கருவேப்பிலை - ஐந்து ஆர்க்
  • வெந்தயம் - முன்று
  • கொத்து மல்லி தழை - சிறிது




செய்முறை




  • துவரம் பருப்பை அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி வேகவைத்து கொள்ள வேண்டும்.
  • புளியை
    நன்கு முன்று டம்ளர் தண்ணீர் சேர்த்து கரைத்து அதில் தக்காளி பழத்தை
    இரண்டாக (அ) நான்காக அரிந்து போட்டு உப்பு அரை தேக்கரண்டி , மஞ்சள் பொடி
    கால் தேக்கரண்டி போட்டு கொதிக்க விட வேண்டும்.
  • வருத்து அரைக்க கொடுத்துள்ளவைகளை தனியாக நெயில் வருத்து ஆறியதும் அரைத்து தண்ணீர் அரை டம்ளர் சேர்த்து அரைத்து ஊற்றி கொள்ளுங்கள்.
  • உப்பு பார்த்து விட்டு கடைசியில் கூட சேர்த்து கொள்ளுங்கள்
  • தக்காளி வெந்ததும் வருத்து அரைத்து வைத்துள்ளதையும் போட்டு, வேக வைத்த பருப்பு தண்ணியும் ஊற்றிகொதிக்க விட்டு இரக்க வேண்டும்.
  • கடைசியில் கடுகு, கருவேப்பிலை, வெந்தயம் தாளித்து கொட்டி கொத்து மல்லி தழை தூவி இரக்கவும்





குறிப்பு:


இது அஜீரணத்துக்கும் நல்லது



வழங்கியவர்


ஜலீலா





பரிமாறும் அளவு


ஆயத்த நேரம்


சமைக்கும் நேரம்



4 நபர்களுக்கு

10 நிமிடம்

10 நிமிடம்






மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

பிராமணர் சமையல் Empty வெள்ளரிக்காய் தால்

Post by மாலதி Wed Feb 17, 2010 7:49 am

இது தோசகாய என்ற காயில் பண்னினால் நல்லது.
இதே மாதிரி பச்ச கல்ர் தக்காளியிலும் செய்யலாம்.








தேவையான பொருட்கள்




  • துவரம் பருப்பு - 1 கப் வேக வைத்தது
  • தக்காளி - 3
  • வெள்ளரிக்காய் - 1 பெரிய துண்டுகள்
  • கடுகு - 1 தே.க
  • சீரகம் - 1 தே.க
  • பச்ச மிள்காய் - 1
  • கறிவேப்பிலை - கொஞ்சம்
  • பூண்டு - 2 தே,க
  • இஞ்சி துறுவினது - 1 தே,க
  • பிரியாணி இலை - 2 (விரும்பினால்)
  • சோம்பு - விரும்பினால் 1 தே.க
  • மஞ்சள் பொடி - 1 தே.க
  • லெமன் ஜூஸ் - 1 . தே.க
  • சின்ன வெங்காயம் - 8
  • எண்ணெய் - 2 தே,க
  • நெய் - 1 தே.க




செய்முறை




  • முதலில்
    எண்ணெய் விட்டு கடுகு,சிரகம்,பிரியாணி இலை,சோம்பு,பெருங்காயம், போட்டு
    பொறிந்த பிறகு கறிவேப்பிலை, இஞ்ஞி,வெங்காயம் சேர்க்கவும். 10 நிமிடம்
    வதங்கின பிறகு தக்காளி சேர்க்கவும். நிற்ய்ய நேரம் வதங்க வேண்டாம். வெட்டி
    வைத்துள்ள வெள்ளரிக்காய் சேர்த்து 20 நிமிடம் ஆன பிறகு வேகவைத்துள்ள
    பருப்பை சேர்த்து பதினந்து நிமிடம் வேக விடவும். வெந்தபிறகு லெமன் ஜூஸ்
    சேர்க்கவும், கொத்தமல்லி இலை போட்டு அலங்கரிக்கவும்.மேலே உருக்கின் நெய்
    சேர்க்கவும்.





குறிப்பு:


இதை சூடு சாதத்தோடு தொட்டு சாப்பிட நன்றாக இருக்கும்.
காரம் நிற்ய்ய வேண்டுபவர்கள் கூட்டி கொள்ளலாம்.
பச்ச கத்தரிக்காயிலும் செய்யலாம்.(புளி) சேர்க்க வேண்டும்.



வழங்கியவர்


விஜி





பரிமாறும் அளவு


ஆயத்த நேரம்


சமைக்கும் நேரம்



5

15

20
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

பிராமணர் சமையல் Empty வெரி ஈசி திடீர் சாம்பார் சாதம்

Post by மாலதி Wed Feb 17, 2010 7:51 am

சற்று ரிச்சாக வேண்டுமானால் வறுத்த முந்திரியைச் சேர்க்கலாம்.
திடீர் விருந்தினரை சமாளிக்க உதவும்.
இதற்கு அப்பளம், பப்படம், உருளைக்கிழங்கு பொரியல், சிப்ஸ் நல்ல காம்பினேஷன்.








தேவையான பொருட்கள்




  • பச்சரிசி - 1 1/2 கப்
  • துவரம்பருப்பு - 1/2 கப்
  • நறுக்கிய
    காய்கள் (கேரட், பீன்ஸ், பெங்களூர் கத்தரிக்காய், பரங்கிக்காய்,
    பூசணிக்காய், பச்சைப்பட்டாணி, டபுள் பீன்ஸ்) - எல்லாம் சேர்ந்து 2 கப்
  • வெங்காயம் - 1
  • புளி - எலுமிச்சை அளவு
  • சாம்பார் பொடி - 3 டீஸ்பூன்
  • நறுக்கிய கொத்தமல்லித்தழை - 1 கைப்பிடி
  • நெய் - 2 டீஸ்பூன்
  • எண்ணெய் - 1 டீஸ்பூன்
  • கடுகு - 1/2 டீஸ்பூன்
  • பெருங்காயம் - 1/4 டீஸ்பூன்
  • கறிவேப்பிலை - 1 கொத்து




செய்முறை




  • முதலில் குக்கரில் வைக்கும் பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் விட்டு துவரம்பருப்பைப் போட்டு அடுப்பில் வைக்கவும்.
  • காய்களை நறுக்கி, புளி கரைத்து, வெங்காயம் வதக்கி -எல்லாம் ரெடி செய்யும் வரை துவரம்பருப்பு வெந்து கொண்டிருக்கட்டும்.
  • பிறகு அரிசியைக் களைந்து சேர்க்கவும்.
  • எண்ணையில்
    வதக்கிய வெங்காயம், நறுக்கிய காய்கறித்துண்டுகள், கரைத்த புளி, உப்பு,
    சாம்பார் பொடி சேர்த்து குக்கரை மூடி 3 விசில் விட்டு இறக்கி நெய்யில்
    கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை தாளிக்கவும்.
  • பச்சைக் கொத்தமல்லியைத்தூவிக் கிளறி மூடி வைக்கவும்.





வழங்கியவர்


T S JAYANTHI CHENNAI 600 048





பரிமாறும் அளவு


ஆயத்த நேரம்


சமைக்கும் நேரம்



4 நபர்களுக்கு

5 நிமிடங்கள்

20 நிமிடங்கள்
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

பிராமணர் சமையல் Empty Re: பிராமணர் சமையல்

Post by மாலதி Wed Feb 17, 2010 7:51 am

தேவையான பொருட்கள்




  • தேங்காய் - கால் முறி
  • காஞ்ச மிலகாய் - இராண்டு
  • புளி - கொட்டை பாக்களவு
  • கடலை பருப்பு - ஒரு தேக்கரண்டி
  • உளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி
  • பெருங்காயம் - ஒரு பின்ச்
  • எண்ணை - ஒரு தேகரண்டி




செய்முறை




  • மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து பொருட்கலையும் எண்ணையில் வதக்கி ஆறியதும் மிக்சியில் அரைத்தெடுக்கவும்.





வழங்கியவர்


ஜலீலா
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

பிராமணர் சமையல் Empty ஆரஞ்சு தோல் புளி பச்சடி

Post by மாலதி Wed Feb 17, 2010 7:53 am

தோலை
சமைக்க எடுக்கும் போது, அதனுடன் ஒட்டிக் கொண்டிருக்கும் வெள்ளைத் தோலஒ
சுத்தமாக எடுத்து விட வேண்டும். அப்போதுதான் குழம்பு கசக்காமல் இருக்கும்.








தேவையான பொருட்கள்




  • கமலா ஆரஞ்சு தோல் - 2 பழத்தினுடையது,
  • மிளகாய்த்தூள் - 2 தேக்கரண்டி,
  • புளி - 1 பெரிய எலுமிச்சை அளவு,
  • கடுகு - 1/2 டீஸ்பூன்,
  • பெருங்காயம் - சிறிது,
  • கறிவேப்பிலை - 10,
  • வெல்லம் - 1 சிறிய எலுமிச்சை அளவு,
  • அரிசி மாவு - 2 தேக்கரண்டி,
  • உப்பு - தேவையான அளவு,
  • எண்ணெய் - 4 மேசைக்கரண்டி.




செய்முறை




  • ஆரஞ்சு தோலை சுத்தம் செய்து, மிகவும் பொடியாக (பாக்கு போல) நறுக்கவும்.
  • 1 டம்ளர் தண்ணீரில் புளியைக் கரைத்து வைக்கவும்.
  • வாணலியில்
    எண்ணெய் ஊற்றி கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்து, நறுக்கிய தோலை
    சேர்த்து நன்கு வதக்கவும். தோல் அதிலேயே பாதி வெந்து விடும்.
  • பிறுகு கரைத்த புளி, மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
  • புளி கொதித்து திக்காக வந்ததும் வெல்லத்தை தூளாக்கி போட்டு கலந்து விடவும்.
  • அரிசி மாவை 2 ஸ்பூன் தண்ணீரில் கரைத்து ஊற்றி எண்ணெய் பிரிந்து மேலே வரும் வரை விட்டு இறக்கவும்.





குறிப்பு:


சாதத்தில் கலந்து சாப்பிட சுவை அள்ளும். தயிர் சாதத்துக்கு தொட்டுக்கொண்டு
சாப்பிட்டால் வேறு சாதமே வேணடாம்னு தோணும். கர்ப்பிணி பெண்களுக்கு
வாய்க்கும் நன்றாக இருக்கும். மசக்கை வாந்தியை கட்டுப் படுத்தும்.
வாரக்கணக்கில் வைத்துக் கொள்ளலாம்.


வழங்கியவர்


இ. செந்தமிழ்செல்வி, பாண்டிச்சேரி.





சமைக்கும் நேரம்



15 நிமிடங்கள்.
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

பிராமணர் சமையல் Empty வாழைக்காய் துவரம்

Post by மாலதி Wed Feb 17, 2010 7:53 am

தேவையான பொருட்கள்




  • வாழைக்காய் - 2
  • துருவிய தேங்காய் - 1/2 மூடி
  • பச்சை மிளகாய் - 2
  • சீரகம் - 1 டீஸ்பூன்
  • காய்ந்த மிளகாய் - 2
  • மஞ்சள் பொடி - 2 சிட்டிகை
  • கடுகு - 1/2 டீஸ்பூன்
  • தேங்காய் எண்ணெய் - 2 டீஸ்பூன்
  • கறிவேப்பிலை - 1 கொத்து
  • உப்பு - தேவையான அளவு




செய்முறை




  • வாழைக்காயை தோல் சீவி பெரிய துண்டங்களாக நறுக்கித் தண்ணீரில் போட்டு வைக்கவும்.
  • தேங்காய், பச்சை மிளகாய், சீரகம், காய்ந்த மிளகாயை லேசாக சிதைத்துக் கொள்ளவும்.
  • காயை உப்பு, மஞ்சள் பொடி போட்டு கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து குழையாமல் வேக வைக்கவும்.
  • நீர் வற்றியதும் சிதைத்த தேங்காய் கலவையை சேர்த்துக் கிளறி இறக்கவும்.
  • தேங்காய் எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை தாளிக்கவும்.





வழங்கியவர்


T S JAYANTHI CHENNAI 600 048





பரிமாறும் அளவு


ஆயத்த நேரம்


சமைக்கும் நேரம்



3 நபர்களுக்கு

5 நிமிடங்கள்

15 நிமிடங்கள்
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

பிராமணர் சமையல் Empty Re: பிராமணர் சமையல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum