TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon May 27, 2024 8:13 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu May 23, 2024 4:07 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 21, 2024 2:55 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 12:02 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


அன்னை மரியா வடித்த இரத்தக்கண்ணீர்

Go down

அன்னை மரியா வடித்த இரத்தக்கண்ணீர் Empty அன்னை மரியா வடித்த இரத்தக்கண்ணீர்

Post by sakthy Thu Aug 11, 2011 9:17 pm

சமூகத்தின் கறைகள் -13 மரியா,மடோனாவின் கண்ணீர்.
உள்ளதைச் சொல்வேன் சொன்னதை செய்வேன் வேறொன்றும் தெரியாது.
உள்ளத்தில் இருப்பதை வார்த்தையால் மறைக்கும் கபடம் தெரியாது.

கடவுள் இருக்கிறாரா என்று கேள்வியை வைத்திருக்கும் இன்றைய அறிவியல் உலகில்,கடவுளை நம்ப செய்வதற்கும்,தங்கள் மதங்களை உண்மையான மதம் என்று காட்டவும் மதத் தலைவர்களும்,மத வெறி கொண்டவர்களும் முயன்று வருவதை நாம் தினமும் கண்டு வருகிறோம். இரண்டாயிரம் வருடங்களாக ஆரியர்கள் தென் இந்தியர்களையும்,தமிழர்களையும் குறி வைத்து தங்கள் மத கோட்பாடுகளை பரப்பவும்,அதில் வெற்றியும் கண்டார்கள். புத்தமதமோ ஆசிய நாடுகளையும்,இஸ்லாம் அராபிய நாடுகளை சுற்றியுள்ள நாடுகளையும்,கிறிஸ்தவம் உலகெங்கும் பரப்பியது. கிறிஸ்தவம் பரவியதற்கு அவர்கள் வாழ்ந்த நாடுகளின் படையெடுப்புக்கள் துணை போனதும், இஸ்லாம் பரவுவதற்கு அவர்களின் வர்த்தகம் துணை போனதும் நாம் அறிந்ததே..
ஆனால் தற்போது கிறிஸ்தவம் அதி வேகமாக மதத்தை பரப்பவும்,மதமாற்றம் செய்யவும் ஆரம்பித்தாலும் கூட, பல நூறு ஆண்டுகளுக்கு முன்னர் போல் இன்றைய மதமாற்றம் அதிக அளவில் பலன்தரவில்லை என்றே சொல்லலாம். அன்று ஆரியர்கள் அச்சத்தையும்,மூட நம்பிக்கைகளையும்,இரண்டு இதிகாசக்கதைகளையும் வைத்து மதக் கோட்பாடுகளை திணிக்க செயல்பட்டது போல், இன்று கிறிஸ்தவம் வேறு சில வழிகளை தேர்ந்தெடுத்துக் கொண்டது. எப்படி?
1917 ஜூலை 13 ஆம் ஆண்டு போர்த்துக்கல் நாட்டில் உள்ள பாத்திமா என்ற நகரில் மரியாவினால் மூன்று குழந்தைகளுக்கு சொல்லப்பட்ட மூன்று செய்தி உண்மையானதா? அந்த செய்தியின் மூன்றாவது நிகழ்ச்சியை நிரூபிக்க 1986 மார்ச் 13 ல் ஜொகனஸ் பவுல், பாப்பரசர்,துருக்கி நாட்டு இஸ்லாமிய தீவிரவாதி அலி அக்சனால் சுடப்பட்டாரா? அதன் பின் ஒரு முறை அலியை பார்க்க சிறைக்கு விஷயம் செய்த ஜொகனஸ் பவுல், அலியிடம் இரகசியமாக பேசியது என்ன? அதை ஜொகனஸ் பவுலோ அன்றி வத்திக்கானோ வெளியிட மறுத்தது ஏன்? 1917 ல் சொல்லப்பட்டதை காப்பாற்ற, மத நம்பிக்கையை வளர்க்க, செய்த திட்டமிட்ட செயல்களா? பல கேள்விகளுக்கு, வத்திக்கானின் மௌனத்தால், பதில் தர முடியாது இருப்பதாக சொல்கிறார்கள்.
இந்த கொலை முயற்சிக்குப் பின் ஜொகனஸ் பவுல் 1986 ல் கரிபியன் தீவான சாந்த லூசியாவிற்கு சென்ற போது, ஒரு உடல் ஊனமுற்ற குழந்தை, ஒரு கடுமையான நோய் வாய்ப்பட்ட பெண் உட்பட பல உடல் ஊனமற்றவர்களை குணமடைய செய்ததாக செய்திகள் வந்தன. இதை அறிந்து கொள்ள சென்ற அறிவியலாளர்கள், 90 வீதமான கத்தோலிக்க மதத்தை சேர்ந்தவர்கள் மத நம்பிக்கையுடன் வாழும் அந்த நாட்டில் இருந்து எந்த உண்மைகளையும் பெற முடியாது என்று திரும்பினார்கள். ஆனாலும் அங்குள்ளவர்களின் பொதுவான கருத்துக்களின்படி அந்த செய்திகள் அனைத்தும் சோடிக்கப்பட்ட கதைகள் என்றும்,உண்மையற்றவை என்ற முடிவோடும், குணமாக்கப்பட்டவர்களின் டாக்டர் சொன்னவை சந்தேக்கப்படும்படியாகவே உள்ளன என்ற கருத்தையும் முன் வைத்தனர்.
மதத்தை காப்பாற்றவும்,மத நம்பிக்கையை ஏற்படுத்தவும்,மத மாற்றம செய்யவும் உருவ வழிபாடு கொண்ட மதங்களான புத்த,இந்து,கிறிஸ்தவ மதங்கள் சில பொய்யான வழிமுறைகளை கையாளுகின்றனவா என்ற கேள்வி எழுந்து வருகிறது.ஆரிய இந்து மதத்தின் மூட நம்பிக்கைகளான சோதிடம்,பேய் பில்லி சூனியம்,அருள்; கிறிஸ்தவர்களின் மரியாவின் சிலையில் இருந்து கண்ணீர், என்ற கதைகளும் சந்தேகங்களை ஏற்படுத்துகிறது. தமிழர்களின் சமயமான சைவம் ஒரே கடவுளை,சிவனை, வற்புறுத்துவதால், அந்த சிவனின் கண்ணில் இருந்து கண்ணீரை யாரும் வரவழைக்க முயற்சிக்கவில்லை. ஆனால் இஸ்லாமிய மதத்தில் உருவ வழிபாடு இல்லாததால் இந்தக் கண்ணீர் கதைகளில் இருந்து அது தப்பித்துக் கொண்டாலும்,ஆரிய மதக் கோட்பாடுகளில் சிக்கிக் கொண்ட ஒரு சிலர்,இஸ்லாத்திற்கு மாறாக இன்னமும் பேய் பில்லி சூனியம் என்ற மூட நம்பிக்கைகளில் சிக்கியே உள்ளனர். இதை தமிழ்நாட்டிலும் கேரளா போன்ற மாநிலங்களிலும், இலங்கையிலும் காண முடிகிறது.
இந்த மரியா,மடோனா,மீரியம் என்று அழைக்கப்படும் மரியாவின் உருவத்தில் இருந்து எப்படி கண்ணீர் வருகிறது?
1995 மார்ச் 15 ஆம் திகதி இத்தாலி ரோமிலிருந்து 70 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள செவிட்டோபசியா என்ற நகரில் உள்ள மரியாவின் கண்களில் இருந்து இரத்தக் கண்ணீர் வரும் செய்தி அறிந்து,அந்த உருவ சிலைக்கு சொந்தக்காரரான கிரிகோரியின் வீட்டிற்கு மக்கள் படை எடுத்தனர்.,அதே போல் ஏஞ்சலோ என்ற மதகுருவால் போஸ்னியா நாட்டில் இருந்து கொண்டு வரப்பட்ட உருவத்தில் இருந்தும் இரத்தக் கண்ணீர் வருவதாக செய்திகள் பரவின. இத்தாலி குற்றவியல் சட்டத்தின்படி இந்த செயல்கள் பொய்யாகும் பட்சத்தில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் தண்டிக்கவும் இடமுண்டு.ஒரு சிலரின் குற்றச்சாட்டை அடுத்து, போலீசார் தீவிர நடவடிக்கையில் இறங்கினார்கள். கிறிக்கோரி வீட்டில் இருந்த உருவத்தில் இருந்து கண்ணீர் வந்ததை தொடர்ந்து,மக்கள் கொடுக்கும் பணம் அவரிடம் குவியத் தொடங்கியது என்கிறார்கள். ஒரு சில தினங்களில் கண்ணீரையும் காணவில்லை,கிரிகோரியையும் காணவில்லை.கிறிகோறியை தேடி சென்றவர்கள்,அங்கு யாரும் இல்லாமல் வீடு பூட்டப்பட்டிருந்ததையும் கண்டார்கள். ஆனாலும் விசாரணைகள் தொடர்ந்தன. மரியாவின் கண்களில் இருந்து வந்த கண்ணீரை ஆய்வுக்கு உட்படுத்தினார்கள். அந்த இரத்தம் ஒரு ஆணின் இரத்தம் என்று கண்டு பிடிக்கப்பட்டது. மரியாவின் கண்களில் இருந்து ஆண்மகனின் இரத்தமா? இதை ஆய்வு நடத்திய இராசாயண பகுப்பாளர் புரோபசர் கெல்லி, இரண்டு கருத்தை முன் வைத்தார்.ஒன்று சம்பந்தப்பட்டவர் தனது விரலில் ஊசியால் குத்தி இரத்தத்தை பூசி ஏமாற்றி இருக்கலாம்,இல்லையேல் தலையின் உள்ளே பின்புற வழியாக ஏதாவது செய்திருக்க முடியும் என்றும்,அதை அவரே எப்படி என்பதை செய்து காட்டி நிரூபித்தார்.
மத நம்பிக்கைகளை வளர்ப்பதற்கும்,மதமாற்றம் செய்வதற்கும்,சும்மா இருந்து சொகுசாக வாழ்வத்ற்கும், எப்படி எல்லாம் ரூம் போட்டு யோசிக்கிறார்கள் என்று தெரியாது சிலர் விழித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த சும்மா இருந்து சொகுசாக வாழ நம் சோதிடர்களும்,சாமியார்களும் எப்போதுமே தயாராக காத்திருந்தாலும், இளைஞர்களாகிய நாம் கண்ணை மூடிக் கொண்டு பணத்தை இவர்களிடம் கோட்டை விடலாமா,ஏமாறலாமா,துணை போகலாமா?சிந்தியுங்கள்.
விஞ்ஞான வளர்ச்சி அடைந்துள்ள இந்த காலத்தில் மரியா எப்படி கண்ணீர் வடிக்கிறாள் அல்லது வடிக்க வைக்க வைக்கப்படுகிறாள்?
இரசாயண ஆய்வாளர்கள் தந்த தகவலை வைத்து,நம் இராசாயண ஆய்வுக்கூடத்தில் பரிசோதித்தோம்.
Ferricchloride ( FeCl 3) + Water (H2O) + Sodiumchloride (NaCl) + Calciumchloride (CaCl 2) இவ்ற்றை சேர்க்கும் போது பசை போல் (Thixotropy) வரும். அதை சிலைக்கு உள்ளே, கண்களின் பின்னே ஒட்ட வைத்துவிட வேண்டும். பிறகென்ன. சிறிய அசைவு ஏற்படும் போதோ அதிகம் பேர் வரும்போது ஏற்படும் அழுத்தம் காரணமாகவோ மரியா இரத்தக் கண்ணீர் விடுவாள். இந்த அசைவோ,அழுத்தமோ நிற்கும் போது கண்ணீரும் நின்றுவிடும். இலட்சக்கணக்காக ஈழத் தமிழர்கள் கொல்லப்படும் போதும்,பெண்கள் பாலியல் தொல்லைகளுக்கு உள்ளாக்கப்பட்ட போதும்,பெண் என்ற முறையிலாவது மரியா,என்ற மடோனா கண்ணீர் விடவில்லையே!?
ஸ்கொட்லன்ட் நாட்டை சேர்ந்த Stevie,Starr (45) என்பவர் தான் விழுங்கிய பொருட்களை வயிற்றில் இருந்து அப்படியே எந்த தண்ணீர் பிடிப்பும் இல்லாது,நாம் கேட்கும் போது வெளியே எடுத்துக் காட்டுகிறார்.இதில் மிக விசேடமானது சர்க்கரையை அப்படியே உள்ளே அனுப்பி, பின் அப்படியே வெளியே எடுக்கிறார். எந்த அழுக்கும்,தண்ணீர் தன்மையும் இருக்கவில்லை.சிறுவர் விடுதியில் வளர்ந்த இவர் 4 வயதில் இருந்து ,மற்றவர்களிடம் இருந்து காசுகளை மறைக்க,வயிற்றில் மறைத்து வைத்து, பின் வெளியே எடுத்ததாக கூறுகிறார்.இதை நேரில் கவனித்த மருத்துவர்கள்,இது மாஜிக் காட்டுபவர்கள் போல், ஏதாவது தில்லு முல்லு செய்கிறார், ஆனாலும் அவரின் வயிற்றை பரிசோதித்து எதையும் கண்டு பிடிக்க முடியவில்லை என்கிறார்கள்.சாய்பாபா சிவலிங்கத்தை வாயில் இருந்து எடுத்து கொடுத்தார். சாயிபாவாவிடமிருந்து சிவலிங்கமும்,திருநீறும் எப்படி வந்தன? Illusion,delusion,miracle,wonder,Reality? ஏதோ ஒண்ணு.
இது பற்றி மத நம்பிக்கைகள் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும் டாக்டர் மன்பிரெட் என்பவரைக் கேட்டோம். ´மதநம்பிக்கைகளில் மூழ்கிப் போயிருக்கும் மக்களை ,அவ்வளவு எளிதில் அங்கிருந்து வெளியே கொண்டு வருவது சுலபமல்ல. அவ்ர்களுக்கு உண்மையில் இவை எல்லாம் ஏமாற்று என்பதை புரிய வைக்க வேண்டும். இன்றைய இளைஞர்கள் இவற்றை புரிந்து கொண்டாலும்,மற்றவர்களை புரிய வைக்க, இந்த சம்பவங்கள் போலி என்பதை அறிவியலாளர்கள் உடனுக்குடன் நிரூபித்தால் மட்டுமே சாத்தியமாகும்.` என்றார்.
எந்த மதமும் இறைவனால் உருவாக்கப்படவில்லை. மதங்கள், கடவுள் இருக்கிறார் என்று நம்ப வைப்பதற்காக இல்லாமல்,மக்களின் வாழ்க்கையை,நல்ல வழியில் நடத்தி செல்வதற்கான ஊன்றுகோலாக இருக்க வேண்டுமே அல்லாது, பொய்யிலும், கட்டுப்பாட்டிலும், கட்டாயத்தின் பேரிலும் மக்களை வழி நடத்தி செல்லக் கூடாது. மதங்கள் வியாபாரமாகி விட்டதால்தான், மதமாற்றமும்,மதக்கலவரங்களும்,மதப் பயங்கரவாதமும், தலைதூக்கி ஆடிக் கொண்டிருக்கிறது. இவற்றை தூண்டி வழிநடத்தும் மத போதகர்கள்,மதத் தலைவர்கள்,மத வெறியர்கள் பற்றி மக்கள் விழிப்புணர்வுடன் இருந்தால் ஒன்றுபட்ட சமுதாயத்தை கட்டி எழுப்ப முடியும்.
சில தினங்களுக்கு முன்னர் ஒரு தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட நிகழ்ச்சி ஒன்றில், திருச்சி மாவட்டத்தில் நிகழ்ந்த அருள் சொல்லும் சம்பவம் பற்றி, சமூகத்தின் கறைகள் அண்ணா ஒருவர் உடன் அந்த இடத்திற்கு சென்று மக்களிடம் கேட்ட போது,அருள் சொல்பவர் மது,மாது,மற்றும் பலவற்றில் ஈடுபட்டு வரும் ஏமாற்றுக்காரர் என்றும் தெரிய வந்தது. இரண்டு வருடங்களுக்கு முன் ஜேர்மன் நாட்டில் இருவர், அதிலொருவர் வட இந்தியாவை சேர்ந்தவர், உண்மை சொல்பவர்(அருள் சொல்வது போல்,வீட்டில்) ஏமாற்றி வந்து,அவர்கள் மீது சட்டம் நடவடிக்கை எடுத்தது. ஆனால் நம் நாட்டில் காவல் துறையுடன் பாதுகாப்புடன் நடக்கும் இப்படியான ஏமாற்றுக்கள்,எவ்வளவு தூரம் தமிழர்களிடையில் ஆரிய மூடநம்பிக்கைகள் ஊன்றி உள்ளது என்பதற்கு சான்றாக உள்ளது.சிங்கள ஆரியத்திடம் அடிமையாகி விட்ட ஈழத்தில், சோழர்தமிழரசு புலிக் கொடியின் கீழ்,ஆரிய மதக் கொள்கைகள், மூடநம்பிக்கைகள் இல்லாத தமிழீழம் உருவாகும் என்ற நம்பிக்கையுடன், மீண்டும் அடுத்த வாரம்.......... டாக்டர் சக்தி.
avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» 50 ஆண்டுகளாக கைதியாக சங்கிலியால் கட்டப்பட்டு பிச்சை எடுத்த யானை விடுதலையான பிறகு வடித்த ஆனந்தக் கண்ணீர்
» மே 6: மாணவர்களுக்கு மிகப் பிடித்த கல்வி முறையை உருவாக்கிய மரியா மாண்டிச்சோரியின் நினைவு நாள் இன்று.
» Firefox 16 கொஞ்சம் பொறுங்கள் + நம்ம மரியா தந்த நகைகளை சுத்தம் செய்யும் முறைகள்.
» என் அன்னை
» அன்னை இல்லம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum