TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:45 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:44 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 3:24 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun May 12, 2024 10:47 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


ரமழானின் மகிமை

Go down

ரமழானின் மகிமை Empty ரமழானின் மகிமை

Post by piraba Fri Jul 29, 2011 3:39 pm

மர்லின் மரிக்கார்... -


ரமழான், இஸ்லாமிய வருட கணிப்பில் ஒன்பதாவது மாதமாகும். இது அதிக சிறப்புக்கும்
மகிமைக்குமுரிய மாதம். அத்தோடு இறையருள் நிறைந்த மகத்துவம் மிக்க மாதமாகவும்
திகழுகிறது இந்த ரமழான்.
சர்வ வல்லமை படைத்த அல்லாஹ் தஆலா இந்த மாதத்தில் தான் அருள் மறையான அல்-குர்ஆனை
அருளத் தொடங்கினான். இதனை அவன் தன் திருமறையிலேயே சொல்லி வைத்திருக்கின்றான்.
‘ரமழான் மாதம் எத்தகைய (மகத்துவமுடைய) தென்றால் அதில் தான் மனிதர்களுக்கு நேர்வழி
காட்டும் அல்- குர்ஆன் (என்னும் வேதம்) இறக்கப்பட்டது. அது (நன்மை, தீமையைப் )பிரித்தறிவித்து
நேரான வழியைத் தெளிவாக்கக்கூடிய வசனங்களை உடையதாகவும் இருக்கின்றது. ஆகவே உங்களில்
எவர் அம்மாதத்தை அடைகிறாரோ அவர் அதில் நோன்பு நோற்கவும்.
அல் குர்ஆன் 2 : 185
அதேநேரம் இந்த அருள் மறையை ரமழான் மாதத்தின் எந்த நாளில் அருளத் தொடங்கினோம்
என்பதையும் அல்லாஹ் தன் அருள் மறையில் குறிப்பிட்டிருக்கிறான்.
‘நிச்சயமாக நாம் இந்தக் குர்ஆனை (மிக்க கண்ணியமுள்ள) ‘லைலத்துல் கத்ர்’ எனும் ஓர்
இரவில் (முதலாவதாக) இறக்கி வைத்தோம். (நபியே!) அந்தக் கண்ணியமுள்ள இரவின் மகிமையை
நீங்கள் அறிவீர்களா? கண்ணியம் மிக்க அந்த இரவு ஆயிரம் மாதங்களை விடவும் மேலானதாகும்.

அதில் மலக்குகளும், ஜிப்ரீலும் தங்கள் இறைவனின் கட்டளையின் பேரில் (நடைபெற வேண்டிய)
எல்லாக் காரியங்களுடன் இறங்குகின்றனர். (அவ்விரவு) விடியற்காலை உதயமாகும் வரையில்
முற்றிலும் சாந்தியும், சமாதானமும் உடையது.’
அல் – குர்ஆன் 97 : 1 - 5
அல் – குர்ஆன் என்பது உலகிற்கான அல்லாஹ்வின் இறுதித் தூது. இது மனிதனின் ஈருலக
வாழ்வுக்கும் நேர்வழி காட்டக்கூடியது. நன்மை, தீமையை பிரித்தறிவிக்கக் கூடியது.
இத்தூதின் பின்னர் அல்லாஹ்வின் புறத்திலிருந்து எந்தவொரு இறைத் தூதும் உலகிற்கு
அருளப்படமாட்டாது.

அதற்கான தேவையோ, இடமோ கிடையாது. எல்லாக் கால, இட,
சூழ்நிலைகளுக்கும் பொருத்தமான முழுமையான வாழ்க்கை நெறியாக அவன் இத்தூதை ஆக்கி
வைத்திருக்கிறான். அதனால் இதில் குறைகளையோ, தவறுகளையோ காணவே முடியாது. அதேநேரம்
இதனுள் புதிதாக எதுவொன்றையும் சேர்ப்பதற்கும் அவன் இடம் வைத்ததில்லை.
இந்தப் பூரணத்துவம் மிக்க இறைத் தூதை அவன் தன் இறுதித் தூதரான முஹம்மத் (ஸல்)
அவர்களுக்குக் கட்டம், கட்டமாக அருளினான். கால, இட, சூழ்நிலை பொருத்தப்பாடுகளுக்கு
ஏற்ப அவன் இத்தூதை அருளி 23 வருடங்களில் முழுமைப்படுத்தினான். அத்தோடு இத்தூது
நடைமுறைச் சாத்தியமான பூரணத்துவம் மிக்க வாழ்க்கை நெறி என்பதைத் தன் இறுதித் தூதர்
ஊடாக அவரது தோழர்கள் மூலம் அவன் செயலுருப்படுத்தியும் காட்டியுள்ளான்.
அந்த வகையில் உலகம் இருக்கும் வரையும் பிறக்கின்ற ஒவ்வொருவருக்கும் ஈருலக
வாழ்விலும் சுபீட்சத்தையும், விமோசனத்தையும் பெற்றுத்தரக் கூடிய முன்மாதிரி மிக்க
வாழ்க்கை நெறி இது. இதனை ஒரு தூய நேர் வழிகாட்டலாக அவன் ஆக்கி வைத்திருக்கிறான்.

அதனால் தான் அல்லாஹ் த ஆலா உலக மானிடருக்கென தம்மிடம் அங்கீகரிக்கப்பட்டிருக்கும்
ஒரே வாழ்க்கை நெறி இது தான் என்றும் அறிவித்திருக்கின்றான்.
இவ்வாறு சிறப்பும், மகத்துவமும் மிக்க இறைத் தூதை அல்லாஹ் த ஆலா ரமழான் மாதத்தில்
உலகிற்கு அருளத் தொடங்கியதன் மூலம் அவன் இம்மாதத்தைக் கண்ணியப்படுத்தி
வைத்திருக்கிறான். அதனால் தான் இம்மாதத்தை அடைபவர்களை நோன்பு நோற்குமாறு அவன்
கட்டளை இட்டிருக்கிறான். இம் மாதத்தில் நோன்பு நோற்பதன் மூலம் ‘இறையச்சம்
உடையவர்களாக ஆகலாம்’ என்றும் அவன் தன் அருள் மறையில் சூரத்துல் பக்ராவின் 183வது
வசனத்தில் குறிப்பிட்டிருக்கிறான்.
அதேநேரம் முஹம்மத் (ஸல்) அவர்கள் ‘யார் ரமழான் மாதத்தில் நம்பிக்கையுடனும், நன்மையை
எதிர்பார்த்தும் நோன்பு நோக்கிறாரோ அவர் அதற்கு முன் செய்துள்ள பாவங்கள்
மன்னிக்கப்பட்டுவிடும்’ என்று கூறியுள்ளார்கள்.
ஆதாரம் : புஹாரி, முஸ்லிம்.
மற்றொரு சந்தர்ப்பத்தில் ‘யார் ரமழானில் நன்மையை எதிர்பார்த்து, ஈமானுடன் இரவுத்
தொழுகையில் ஈடுபடுகிறாரோ அவர் முன்செய்த பாவங்கள் மன்னிக்கப்பட்டுவிடும்’ என்றும்
நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
ஆதாரம் : புஹாரி முஸ்லிம்
மேலும் முஹம்மத் (ஸல்) அவர்கள், ‘ரமழான் மாதம் வந்துவிட்டால் வானத்தின் வாசல்கள்
திறக்கப்படுகின்றன. நரகின் வாசல்கள் மூடப்படுகின்றன. ஷைத்தான்கள்
விலங்கிடப்படுகின்றன’ என்று அறிவித்ததாக அபூஹுரைரா (ரலி) கூறியுள்ளார்கள்.
ஆதாரம் : புகாரி 1899.
இவ்வாறு சிறப்பிக்கப்பட்டிருக்கும் ரமழான் மாதத்தின் எந்த நாளில் அருள் மறையான அல்-
குர்ஆன் அருளப்பட ஆரம்பமானது என்பதையும், அந்த இரவின் சிறப்பையும், அந்த இரவு
விடியற்காலை வரையும் எவ்வாறு இருக்கும் என்ற விபரத்தையும் கூட அல்லாஹ் சொல்லி
வைத்திருக்கின்றான்.

இவ்வாறான நிலையில் அவன் தன் அருள்மறை அருளப்பட ஆரம்பமான இரவை
தம் இறுதித் தூதர் முஹம்மத் (ஸல்) ஊடாக உலகிற்கு சரியாக அறிவித்துவிட நாடுகின்றான்.
இது தொடர்பாக உபாதா பின் ஸாமித் (ரலி) இவ்வாறு அறிவித்திருக்கிறார்.
‘ஒரு முறை முஹம்மத் (ஸல்) அவர்கள் ‘லைலத்துல் கத்ர்’ பற்றி எங்களுக்கு
அறிவிப்பதற்காக புறப்பட்டு வந்தார்கள். அப்போது இரண்டு முஸ்லிம்கள் சச்சரவில்
ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அச்சமயம் நபி (ஸல்) அவர்கள் ‘லைலத்துல் கத்ர்’ பற்றி
உங்களுக்கு அறிவிப்பதற்காக புறப்பட்டு வந்தேன்.

இவ்வேளையில் இன்னாரும், இன்னாரும்
சச்சரவில் ஈடுபட்டிருந்தனர் அதனால் அது (பற்றிய விளக்கம்) நீக்கப்பட்டு விட்டது.
அது உங்களுக்கு நன்மையாக இருக்கலாம். ஆகவே ‘லைலத்துல் கத்ர்’ இரவை ரமழான் மாதத்தின்
இருபத்தொன்பதாம் இரவிலும், இருபத்தேழாம் இரவிலும், இருபத்தைந்தாம் இரவிலும்
தேடுங்கள்’ என்றார்கள்.
ஆதாரம் : புகாரி 2023
இதேவேளை ஆயிஷா (ரலி) அவர்கள் ‘ரமழான் மாதத்தின் கடைசிப் பத்து நாட்களில் உள்ள
ஒற்றைப் படையான இரவுகளில் லைலத்துல் கத்ரை தேடுங்கள்’ என்று நபி (ஸல்) அவர்கள்
கூறியதாக அறிவித்திருக்கிறார்கள்.
ஆதாரம் : புகாரி 2017
இதன்படி ரமழான் மாதத்தின் கடைசி பத்து நாட்களிலும் வருகின்ற ஒற்றைப் படையான ஒரு
நாளில் தான் அல்- குர்ஆன் அருளப்பட ஆரம்பமாகியுள்ளது என்ற முடிவுக்கு வரலாம்.
இதன் காரணத்தினால் தான் ‘ரமழான் மாதத்தின் கடைசிப் பத்து நாட்கள் வந்து விட்டால்
நபி (ஸல்) அவர்கள் இல்லறத் தொடர்பை நிறுத்திக் கொள்ளுவார்கள். இரவை (அல்லாஹ்வைத்
தொழுது) உயிர்ப்பிப்பார்கள் (அல்லாஹ்வை வணங்குவதற்காக) குடும்பத்தினரை எழுப்பி
விடுவார்கள்’ என்றும் ஆயிஷா (ரலி) கூறியுள்ளார்.
ஆதாரம் : புகாரி 2024
அத்தோடு ‘முஹம்மத் (ஸல்) அவர்கள் மற்ற எந்த நாட்களிலும் வணக்கத்தில் ஈடுபடாத
அளவுக்கு ரமழானின் கடைசிப் பத்து நாட்களில் வணக்கத்தில் ஈடுபடுவார்’ என்றும் ஆயிஷா
(ரலி) தெரிவித்திருக்கிறார்.
ஆதாரம் : முஸ்லிம்.
‘ரமழானின் கடைசிப் பத்து நாட்களும் நபி (ஸல்) அவர்கள் இஃதிகாப் இருப்பார்கள்’ என்று
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள்.
ஆதாரம் : புகாரி 2025
ஆகவே அல்-குர்ஆன் அருளப்பட ஆரம்பமான ‘லைலத்துல் கத்ர்’ இரவை அடைந்து கொள்ளுவதிலும்,
அவ்விரவில் கூடுதலான இறை வணக்கங்களில் ஈடுபட்டு அல்லாஹ்வின் அன்பையும்,
அவனிடமிருந்து அதிக நன்மைகளையும் பெற்றுக்கொள்ளுவதில் மாத்திரமல்லாமல்
அருள்பாலிக்கப்பட்டிருக்கும் முழு ரமழான் மாதத்திலும் உச்ச பயனைப்
பெற்றுக்கொள்ளுவதையுமே நோக்காகக் கொண்டு தான் அன்னார் செயற்பட்டிருக்கிறார். இதில்
ஐயமில்லை. இதற்கு நிறையவே சான்றுகள் உள்ளன.
இம்மாதத்தில் புரியப்படுகின்ற ஒவ்வொரு இறைவணக்கத்திற்கும், நற்காரியத்திற்கும் பல
மடங்கு நன்மைகளை அல்லாஹ் வழங்குகின்றான். இதனையும் நபி (ஸல்) அவர்கள்
தெளிவுபடுத்தியுள்ளார்கள். அந்த நன்மைகளைப் பெற்றுக்கொள்ளும் வழிமுறைகளையும்
அன்னார் செய்தும் காட்டியுள்ளார்கள். அந்த வழிமுறைகளைப் பின்பற்றி இம்மாதத்தில்
உச்ச பயனைப் பெற்றுக்கொள்ள ஒவ்வொருவரும் முயற்சி செய்ய வேண்டும். அதுவே ஈருலகிலும்
விமோசனத்தை பெற்றுத் தரும்.


ரமழானின் மகிமை NEWIM_zps788c3e8e
piraba
piraba
பண்பாளர்
பண்பாளர்

Posts : 1302
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum