TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 5:06 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:45 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:44 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun May 12, 2024 10:47 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


குழந்தை வளர்ப்பு குறித்த பெற்றோரின் கனவும், வழி நடத்தலும்.

Go down

குழந்தை வளர்ப்பு குறித்த பெற்றோரின் கனவும், வழி நடத்தலும். Empty குழந்தை வளர்ப்பு குறித்த பெற்றோரின் கனவும், வழி நடத்தலும்.

Post by Tamil Tue Jan 05, 2010 11:48 pm

உங்கள் குழந்தைகள் உங்கள் குழந்தைகள் அல்ல;
அவர்கள் வாழ்க்கை தமக்கென்று வேண்டிய குழந்தைகள்
அவர்கள் உங்கள் மூலமாக வந்திருக்கிறார்கள்; உங்களிடமிருந்தல்ல
அவர்கள் உங்களுடன் இருந்தாலும் உங்களுக்குச் சொந்தமானவர்கள் அல்ல
உங்கள் அன்பை நீங்கள் அவர்களுக்குத் தரலாம்
உங்கள் எண்ணங்களை அல்ல
அவர்களுக்கென்று தனி சிந்தனைகள் உண்டு
அவர்களின் உடல்களுத்தான் நீங்கள் பாதுகாப்பு தரமுடியும்
அவர்களின் ஆன்பாக்கள் நாளைய வீட்டில் வாழ்பவை
அங்கே நீங்கள் செல்ல முடியாது
உங்கள் கனவுகளிலும் கூட.
அவர்களைப் போலிருக்க நீங்கள் முயற்சி செய்யலாம், ஆனால்
அவர்களை உங்களைப் போல ஆக்கிவிடாதீர்கள்.
வாழ்க்கை பின் திரும்பிச் செல்லாது; நேற்றுடன் ஒத்துப் போகாது
நீங்கள் வில்கள். உங்களிடமிருந்து எய்யப்படும் உயிருள்ள அம்புகளே குழந்தைகள்



கலீல் கிப்ரானின் ‘தீர்க்கதரிசி’எனும் கவிதை பெற்றோருக்கு பல விடயங்களை கற்றுத்தருகின்றது.

ஆம்
குழந்தைகள் என்பவர்கள் யார்?…அவர்களை நான் எப்படி நடத்த
வேண்டும்?அவர்களைக்குறித்த பெற்றோரின் கனவுகள் என்னவாக இருக்க வேண்டும்?
வழி நடத்தல்கள் எப்படிப்பட்டதாக அமையும் போது அவர்கள் எதிர்காலம் சிறந்த
தாக அமையும் என்பதைக்குறித்தெல்லாம் பெற்றோராகிய நான் சிந்தித்து வளர்க்க
வேண்டும் .

தங்கள் குழந்தைகளை எவ்வாறு வழி நடத்துவது? என்பது
குறித்த திட்டத்தை பெற்றோர் இணைந்து தீர்மானித்து திட்டமிடல்
வேண்டும்.இருவரும் ஒரு விசயத்தில் ஒத்த கருத்தில் இருந்து தான் குழந்தைகளை
நெறிப்படுத்த முடியும்.எந்த விடயத்திலும் பெற்றோர்களில் ஒருவர் சம்மதித்து
இன்னொருவர் சம்மதிக்கா விட்டால் பெற்றோரில் ஒருவரின் மீது குழந்தைகளுக்கு
வெறுப்புணர்வு ஏற்படும்.எனவே இது விசயமாக கலந்தோலசித்து முடிவு
சொல்கின்றோம் என்று குழந்தைக்குக் கூறி பின்னர்,குழந்தைகள் இல்லாத
சூழ்நிலைகளில் அந்த விவகாரத்தை கலந்தாலோசித்து முடிவெடுக்க முயற்சிக்க
வேண்டும் . குழந்தைகளை வைத்துக் கொண்டு கலந்தாலோசனையில் ஈடுபடாததோடு
எடுத்த முடிவில் இருவரும் உறுதியாக இருந்து வழி நடத்துவதும் அவசியம் ….

நாம் நம் குழந்தையை கண்டிப்பாக நம்ப வேண்டும்.அவ்வாறு நம்புவதால் மட்டுமே
குழந்தைகள் சரியாக இருக்கும் என்று அர்த்தம் கொள்ள முடியாது.அவர்களை
நம்புவதும் நம்பிக்கையை வளர்ப்பதும் பெற்றோர்களின் கடமைகளில் ஒன்று.
பெற்றோர்கள் முடிந்தவரை பெற்றோராக,தாயாக,தந்தையாக,அவர்களே சகோதர,
சகோதரிகளாக,நண்பர்களாக,நல்ல ஆலோசகராக,ஆசிரியர்களாக,வழிகாட்டியாக, சில
நேரங்களில் குழந்தையாக நடந்து கொள்வதும் பெற்றோர்களின் கடமையாகும் அதே
நேரம் அவசியம் அவர்களை படிக்கின்ற இடம்,விளையாடுகின்ற இடம், பழகுகின்ற
இடம்,பழகும் நண்பர்களையும் கண்கானித்து தெரிந்து வைத்திருக்க வேண்டும் . .

தாம்
பெற்ற குழந்தைகளுக்கு உண்ண உணவு,உடுக்க உடை,தங்குவதற்கு இடம்,
அறிவு,கல்வி,ஆதரவு,அன்பு மற்றும் பாசம் போன்றவைகளை அளிப்பதும் , தாங்கள்
கஷ்டப்பட்டாலும் தங்களின் பிள்ளைகள் கஷ்டப்படக் கூடாது என்று அவர்களுக்கு
கஷ்டம் தெரியாமல் நல்லபடியாக படிக்க வைத்து அவர்களை நல்வழியில் வழிநடத்தி
பெரிய மனிதர்களாகவும் நல்ல மனிதர்களாகவும், செய்வதும் பெற்றோரின்
கடமைகளில் ஒன்று.

நம்மில் எல்லோர்க்குமே ஒன்றின் மீது
மட்டுமே ஆசையும், கவனமும் அதிகம் இருக்கும்என்றாலும் கூட குழந்தைகள்
விடயத்தில் பெற்றோர் ஒரு குழந்தைக்கும் மற்றொரு குழந்தைக்கும் இடையில்
பாகுபாடு காட்டக்கூடாது. அவ்வாறு ஒரு குழந்தையின் மீது மட்டும் நாம் அதிக
பாசம்,அன்பு கொள்ளலாம் அவ்வாறு இருப்பினும் நாம் அதை அதிகம் வெளியில்
காட்டிக் கொள்ளக் கூடாது. எல்லோரையும் ஒரே சமமாக நடத்தவேண்டும் அது
அவர்களின் மனநிலையை அதிகம் பாதிப்பதுடன் தாழ்வு மனப்பான்மையை உண்டாக்கும்.

அதேபோல்
குழந்தைகள் எல்லாவற்றையும் கற்றுக்கொள்ள வேண்டும் எனும் ஆசையில் நமக்கே
தெரியாத பலதையும் அவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என நினைத்து அவர்கள் மீது
திணிக்காமலும் இருக்க வேண்டும்.வாழ்க்கையை விட சிறந்த ஆசிரியன்
யாருமில்லை.நாம் அவர்களுக்கு அன்புத் துணையாக இருந்து நல்ல சூழல்களை
உருவாக்கித் தந்தால் போதும்,அற்புதமான குழந்தைகள் உருவார்கள்.குழந்தைகள்
குழந்தைகளாகவே இருப்பார்கள்.

பெற்றோர்கள் எப்பொழுதும் வேலை வேலை
என்று பணம் சம்பாதிப்பதையும், வசதிகளை தேடி ஓடி வாழ்க்கையின் இனிமையான
தருணங்களை தொலைத்துவிட்டு பிறகு அழுது புலம்புவதாலும் பயனில்லை.குழந்தைகள்
நம் வாழ்வின் பொக்கிஷங்கள்.அவர்கள் இயற்கையிலேயே மலர்ச்சியானவர்கள்.
அவர்கள்எதிலும் பின் தங்கிப் போய்விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது
கட்டாயம்.

ஒரு குறிப்பிட்ட கால கட்டத்தில் வாழ்க்கையின் திசையை
தீர்மானிக்கும் நேரத்தில் யார் அதை தீமானிக்கிறார்கள் என்பதை
பொறுத்துத்தான் அவர்கள் வாழ்க்கையின் வெற்றி இருக்கிறது பொதுவாக அவர்கள்
செல்ல வேண்டிய திசையை பல நேரங்களில் அவர்களாக அல்ல
வழிகாட்டிகளானபெற்றோர்தான்தீர்மானிக்கிறார்கள். இதுவும் தவறே பொறியாளராக
வேண்டும் என்ற கனவுள்ள பையனை மருத்துவம் படிதக்க வைத்தால் ஒரு நாள்
மருத்துவனாகவும் ஆவான் .. ஆனால் ஒரு நாளும் சிறந்த மருத்துவனாக விளங்க
மாட்டான். அதில் சாதனையாளனாக திகழ
முயற்சிக்கமாட்டான்.தன்விருப்பத்தையும்நிறைவேற்றிக்கொள்ளமுடியாமல்பெற்றோர்விருப்பதையும்
நிறைவேற்றாமல் கடைசியில் எதுவாகவும் விளங்காமல் போவதற்கும் வாய்ப்புக்கள்
உண்டு.

தங்கள் கனவுகளை தங்கள் குழந்தைகள் நனவாக்க வேண்டும் என்று
எதிர்பார்த்து தன் விருப்பத் துறையை பரிந்துரைக்கும் பெற்றோராக நாம்
இருக்கக்கூடாது. உதாரணமாக மருத்துவமனையில் அட்டெண்டராக வேலை பார்ப்பவர்
மருத்துவரை பார்க்கும் போதெல்லாம் தனக்குள் ஏற்படுகிற கனவை தன்
குழந்தையின் மூலம் நிறைவேற்ற நினைக்கக்கூடாது.ஒவ்வொரு மனிதரும் தன்
வாழ்க்கையில் தனக்கே தனக்கென்று சொந்த இலக்குகளை கொண்டுள்ளார்கள்.அதே போல்
தான் குழந்தைகளும் தமக்கென் ஒரு இலக்கை வைத்திருப்பார்கள்.

குழந்தைகளின்
பாதுகாப்பான எதிர்காலத்திற்காக ஒரு துறையை தேர்ந்தெடுக்க விரும்பும்
பெற்றோர்கள் முதலில் கவனிப்பது அத்துறையில் உள்ள வருமான வாய்ப்பு.மற்றும்
தங்கள் வாழ்வில் சந்தித்த பொருளாதார பிரச்சனைகளின் நினைவுகளிலிருந்து
முடிவெடுக்கும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் பணக்கஷ்டம் படக்கூடாது
என்று முடிவெடுப்பது சரியாக இருந்தாலும் . மருத்துவரானால் பொறியாளனானால்
நன்றாக சம்பாதிக்கலாம் என்கிற வருமான வாய்ப்புகள் மட்டும் கொண்டு
குழந்தைகளின் எதிர்கால வாழ்க்கையை தீர்மானிப்பதால் குழந்தைகளின் சுய
விருப்பங்கள் அடிபட்டு போகிறது விருப்பமில்லாத துறையில் யாராலும் விரைவாக
முன்னேறவும் முடியாது. நிறைவாக சம்பாதிக்கவும் முடியாது. என்பதை நான்
புரிந்து கொள்ள வேண்டும்

பொருள் தேடல் தவறென்பது அல்ல .
விருப்பத்துறையிலேயே அதைச் செய்ய ஊக்குவிக்கும் போது குழந்தைகள் அதில்
சாதனையாளர்களாக திகழ பெற்றோராகிய நாம் களம் அமைத்து கொடுக்கிறோம் என்பதை
உணர வேண்டும் .

உண்மையில் நம் குழந்தைகள் பொருள் நிறைவான வாழ்க்கையவாழவேண்டுமா? அல்லது பொருளோடு மனநிறைவான வாழ்க்கையை வாழ வேண்டுமா?
எதை விரும்புகிறோம்? என்பதை தீர்மானிக்க வேண்டும் .

பெற்றோர்களாகிய
ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும் குழந்தைகள நாம் வழி நடத்தும் போது இந்த
துறைதான் என்றில்லை,எந்த ஒரு துறையிலும் மிகச்சிறந்து விளங்கினால்
வெற்றிகள் குவிக்கலாம். சாதனைகள் படைக்கலாம். நன்றாக வளரலாம்.எனவே
குழந்தைகள் எந்தத் துறையில் சாதிக்க விரும்புகிறார்களோ அதைத்
தேர்ந்தெடுக்க அனுமதியுங்கள். அதில் தொடர்ந்து தன் திறன்களை
வளர்த்துக்கொள்ள உதவுங்கள். அத்துறையின் உச்சத்தை அவன் தொடுகிறபோது அவன்
கனவும் நிறைவேறும். அவன் வாழ்வில் வெற்றி பெறவேண்டும் என்ற உங்கள் கனவும்
நிறைவேறும்.

உங்கள் குழந்தை நான் இந்தத் துறையை
தேர்ந்தெடுக்கிறேன் என்று சொன்னால்,‘உன்னால் இதில் வெற்றி பெறமுடியும்”
என்று சொல்லி குழந்தைக்கு அதிகமான சுயமதிப்பும் நம்பிக்கையையும் கொடுத்து
உற்சாகப்படுத்துங்கள். .

குழந்தைகள் எதில் தன்னை மறந்து ஈடுபடுகிறார்கள் என்பதை கவனித்து அதிலேயே இலக்கை ஏற்படுத்திக் கொள்ள உதவுங்கள்

உங்கள்
குழந்தைகள் எந்தப் படிப்பை தேர்ந்தெடுக்கிறார்கள் என்பதில் அல்ல. அதை
அவர்கள் எப்படி படிக்கிறார்கள் என்பதில்தான் அவர்களின் வெற்றி இருக்கிறது.
எனவே
உங்கள் குழந்தைகள் வெற்றி பெற உதவுங்கள். இதெல்லாம் நிறைவேறுகிறபோது நாம்
பெறப்போவது வீட்டிற்குள் மட்டுமல்ல, நாட்டிற்குள்ளும் வெற்றி.


யோசித்துப்பாருங்கள்.
நம்மிடம் ஏன் இன்னும் ஒரு ராமானுஜம், இன்னும் ஒரு ஜி.டி. நாயுடு
தோன்றவில்லை? நாமகத்திணிக்காமல் தானாக முயலும் போது.விரும்புகிற துறையில்
நிச்சயம் வெற்றி கிடைக்கும் .

அடுத்து அவன் சாதனையாளனாக திகழ
கற்பதற்கு இருக்கும் வாய்ப்புகள் என்ன? அவற்றுள் சிறந்தவற்றை
தேர்ந்தெடுப்பது எப்படி? என்பதையெல்லாம் அறிந்து கொள்ள உதவுங்கள்.சரியான
முடிவெடுக்க கற்றுக் கொடுங்கள். ஆனால் அவர்கள் சார்பாக நீங்கள்
முடிவெடுக்காதீர்கள்.

பெற்றோர்களின் வேலை குழந்தைகளுக்காக முடிவெடுப்பதல்ல…… குழந்தைகளுக்கு முடிவெடுக்க கற்றுத்தருவது.

கற்றுத்தருவோம் . நம் குழந்தைக்கு நல் வழிகட்டி நாமும் நிமிர்ந்து நிற்போம்
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum