TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 17, 2024 8:41 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 17, 2024 5:06 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Thu May 16, 2024 8:45 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun May 12, 2024 10:47 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


திருப்பூர் சாயஆலை பிரச்னை: அரசு மீது ஜெ. சாடல்

Go down

திருப்பூர் சாயஆலை பிரச்னை: அரசு மீது ஜெ. சாடல்  Empty திருப்பூர் சாயஆலை பிரச்னை: அரசு மீது ஜெ. சாடல்

Post by ஜனனி Sun Feb 06, 2011 9:35 am

சென்னை, பிப்.5,2011

திருப்பூர் சாய ஆலைகள் பிரச்னையில் கவனம் செலுத்தாமல் தமிழக அரசு வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்பதால், லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா குற்றம்சாட்டியுள்ளார்.




மேலும், இந்தப் பிரச்னையில் கருணாநிதி தலைமையிலான தி.மு.க. அரசு நிர்வாகத் திறமையற்ற, செயலற்ற அரசு என்பதை சென்னை உயர் நீதிமன்றம் தனது தீர்ப்பின் மூலம் உறுதி செய்துள்ளது என்றும் அவர் சாடியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், "காவிரி ஆற்றின் கிளை நதியான நொய்யல் ஆற்றில் திருப்பூரில் உள்ள சாய, சலவை ஆலைகளிலிருந்து வெளியேறும் கழிவுநீர் கலப்பதாக புகார் தெரிவித்து அதை தடுத்து நிறுத்துமாறு நொய்யல் பாசன விவசாயிகள் சங்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது.

இந்த வழக்கினை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், அனைத்து சாய, சலவை ஆலைகளும் 31.7.2007-க்குள் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்திடமிருந்து "ஜீரோ டிஸ்சார்ஜ்"சான்றிதழை பெற வேண்டும் என்றும், இந்தக் காலகட்டத்திற்குள் கழிவு நீரை வெளியேற்றும் ஆலைகள் அதற்கான அபராதத் தொகையை செலுத்த வேண்டும் என்றும் தெரிவித்து 22.10.2006 அன்று ஓர் உத்தரவினை பிறப்பித்தது. இது மட்டுமல்லாமல் சாய மற்றும் சலவை ஆலைகளில் கூடுதலாக உள்ள இயந்திரங்களை நீக்குமாறு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு 28.4.2008 அன்று ஓர் இடைக்கால உத்தரவினையும் பிறப்பித்தது.

சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவினை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை செயல்படுத்த மூன்று மாத கால அவகாசத்தை அளித்து 6.10.2009 அன்று தீர்ப்பளித்தது. உச்ச நீதிமன்றம் அளித்த இந்த கால அவகாசம் 2011-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முடிவுக்கு வந்துவிட்டது. இந்தச் சூழ்நிலையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை நொய்யல் பாசன விவசாயிகள் சங்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.

இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் 'ஜீரோ டிஸ்சார்ஜ்' சான்று பெறாத ஆலைகள், பொது மற்றும் தனியார் சுத்திகரிப்பு நிலையங்கள் உடனடியாக மூடப்பட வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது. சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவினையடுத்து திருப்பூரில் உள்ள சுமார் 750 ஆலைகளிலும் மின் இடைப்பு துண்டிக்கப்பட்டு விட்டதாகவும், இந்த மின் இடைப்பு துண்டிப்பு காரணமாக தங்களது இயந்திரங்களை சமூக விரோதிகள் எடுத்துச் சென்று விடுவார்களோ என்ற அச்சம் ஆலை உரிமையாளர்களிடையே ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வருகின்றன.

இது மட்டுமல்லாமல், இந்த ஆலைகளில் பணிபுரியும் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு 50 லட்சம் ரூபாய் அளவுக்கு தொழிலாளர்களுக்கு வருமான இழப்பு ஏற்பட்டு இருக்கிறது. இது மட்டுமல்லாமல், ஒரு நாளைக்கு 5 கோடி ரூபாய் வரை உற்பத்தி இழப்பு ஏற்பட்டு இருக்கிறது. இந்த நிலை நீடித்தால் பின்னலாடை தொழில் முடங்கும் அபாயம் ஏற்பட்டுவிடும் என்றும், இதன் விளைவாக 50 கோடி ரூபாய் அளவுக்கு வர்த்தக இழப்பு ஏற்படும் என்றும், அந்நியச் செலாவணி இழப்பு ஏற்படும் என்றும் இந்தத் துறையில் உள்ளவர்கள் தெரிவிக்கின்றனர்.

சென்னை உயர் நீதிமன்றம் இவ்வாறு உத்தரவு பிறப்பிப்பதற்கு முக்கியக் காரணம் தி.மு.க. அரசின் அலட்சியப் போக்கு தான். நீதிமன்ற உத்தரவை செயல்படுத்த நடவடிக்கை எடுக்காமல் தமிழ்நாடு மாசுக் கட்டுபாட்டு வாரியம் தூங்கிக் கொண்டிருப்பது அவர்கள் சமர்ப்பித்த மனுவிலிருந்து தெரிய வருகிறது என்று சென்னை உயர் நீதிமன்றம் தன்னுடைய உத்தரவில் தெளிவாக குறிப்பிட்டு இருக்கிறது. தி.மு.க. அரசு செயலற்ற அரசு என்பதற்கு இதைவிட சிறந்த சான்று தேவையில்லை.

2006-ஆம் ஆண்டைய சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி, சாய, சலவை ஆலைகளைச் சேர்ந்த நிர்வாகத்தினரையும், நொய்யல் பாசன விவசாயிகள் சங்கத்தினரையும் அழைத்துப் பேசி, 'ஜீரோ டிஸ்சார்ஜ்' கழிவு நீரை ஆலைகள் வெளியேற்றும் அளவுக்கு தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் மூலம் ஓர் ஒருங்கிடைப்பு நடவடிக்கையை தி.மு.க. அரசு எடுத்திருக்குமேயானால் இது போன்றதொரு சிக்கல் தற்போது ஏற்பட்டு இருக்காது. சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி, 95 கோடி ரூபாய் அளவுக்கு அபராதத் தொகை செலுத்தியுள்ளதாக சாய, சலவை ஆலைகள் தெரிவிக்கின்றன. இருப்பினும், ஆலைகளை மூட வேண்டிய அவல நிலைமை அவர்களுக்கு ஏற்பட்டு இருக்கிறது.

திருப்பூர், ஈரோடு, கரூர் மாவட்டங்களில் உள்ள சாயத் தொழிற்சாலைகளில் சுத்திகரிக்கப்பட்ட உப்பு நீரைக் கடலுக்குக் கொண்டு செல்லும் திட்டத்திற்கு 200 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு இருப்பதாக 19.3.2010 அன்று தி.மு.க. அரசால் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

ஆனால், இந்தத் திட்டத்தை நிறைவேற்ற எந்த நடவடிக்கையையும் தி.மு.க. அரசு எடுக்கவில்லை. தி.மு.க. அரசின் பெரும்பாலான நடவடிக்கைகள் இதே போன்று காகித வடிவில் தான் இருக்கின்றன. திருப்பூர் சாய ஆலைகள் பிரச்னையில் கவனம் செலுத்தாமல் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கின்ற தி.மு.க. அரசுக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வயிற்றில் அடித்த கருணாநிதிக்கு வருகின்ற தேர்தலில் மக்கள் மரண அடி கொடுக்கப் போவது உறுதி," என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» மீனவர்கள் மீது தொடரும் தாக்குதல்: மத்திய அரசு மீது தமிழக அரசு புகார்
» உதட்டில் வெல்லம், உள்ளத்தில் விஷம் : கருணாநிதி மீது ஜெயலலிதா கடும் சாடல்
» கொள்ளையரை பிடிக்க சென்றவர்கள் மீது கொலை வழக்கு: திருப்பூர் போலீசார் தவிப்பு
» மீனவர்கள் பிரச்னையில் தமிழகத்தில் ஒரு நிலை, டெல்லியில் ஒரு நிலை: பா.ஜ.க. மீது ஜெயலலிதா சாடல்
» காவிரி: கர்நாடக அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: தமிழக அரசு முடிவு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum