TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:33 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 07, 2024 3:00 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat May 04, 2024 5:18 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


சுகி சிவம் அவர்களே ஈழத்தமிழர்களின் வாழ்க்கையை ஒரு முறை வாழ்ந்து பாருங்கள், புரியும் - ஜெயதாஸன்:

Go down

சுகி சிவம் அவர்களே ஈழத்தமிழர்களின் வாழ்க்கையை ஒரு முறை வாழ்ந்து பாருங்கள், புரியும் - ஜெயதாஸன்: Empty சுகி சிவம் அவர்களே ஈழத்தமிழர்களின் வாழ்க்கையை ஒரு முறை வாழ்ந்து பாருங்கள், புரியும் - ஜெயதாஸன்:

Post by mmani Thu Jan 13, 2011 1:51 pm

சுகி சிவம் அவர்களே ஈழத்தமிழர்களின் வாழ்க்கையை ஒரு முறை வாழ்ந்து பாருங்கள், புரியும் - ஜெயதாஸன்:-
13 ஜனவரி 2011

சுகி சிவம் அவர்களே ஈழத்தமிழர்களின் வாழ்க்கையை ஒரு முறை வாழ்ந்து பாருங்கள், புரியும் - ஜெயதாஸன்:-


அண்மை நாட்களில் எனக்கு ஒரு மின்னஞ்சல் வந்தது.அந்த மின்னஞ்சலில் ஆன்மீகச்
சொற்பொழிவாளர் திரு.சுகி சிவம் அவர்கள் சன் தொலைகாட்சியில் ஆற்றிய
சொற்பொழிவு இடம்பெற்றிருந்தது.

இந்தச் சொற்பொழிவில் திரு.சுகி சிவம் அவர்கள் இலங்கைக்கு
சென்றுவந்ததாகவும், தான் இலக்கியங்களில் வாசித்த மணிபல்லவம் என்ற நயினா
தீவிற்கு சென்றுவந்ததாகவும் குறிப்பிட்ட அவர் புலம்பெயர் தமிழர்களும்
தமிழகத் தமிழர்களும் தேவையற்ற செயல்களில் ஈடுபட்டு வருவதாக உலகத்தமிழர்களை
சாடியிருந்தார்.

அவர் பேச்சிலிருந்து, அவர் இப்படி பேசுவதற்காக அனுப்பி வைக்கப்பட்டாரா
அல்லது அழைக்கப்பட்டாரா எனச் சந்தேகங் கொள்ள வேண்டியுள்ளது. ஒரு ஆன்மீகவாதி
சொன்னால் அவையெல்லாம் உண்மைதான் என தமிழர்கள் நம்புவார்கள் என்ற
திட்டத்திற்கமையவே இவர் ஆற்றிய சொற்பொழிவு இருந்தது.
இவர் என்ன ஆற்றியிருக்கிறார் என்றால், கடந்த காலங்களில் தமிழர்கள்
அனுபவித்த துன்பங்களை மறந்து இலங்கை அரசை குறை சொல்வதை நிறுத்திவிட்டு,
எதிரகாலத்தைப்பற்றி சிந்திக்க வேண்டும் எனக் கூறியிருப்பதுடன் புலம்பெயர்
தமிழர்களும்; தமிழகத் தமிழர்களும் செய்து வரும் போராட்டங்கள் யாவும் வீண்
வேலைகள் எனக் கூறியுமிருக்கின்றார்.

இவரின் சொற்பொழிவிற்குள் காணப்பட்ட கருத்துக்கள் யாவும் புலம்பெயர்
தமிழர்களையும் தமிழகத் தமிழர்களையும் குறைகூறுவதாகவே அமைந்திருந்தன.
இலங்கைத் தமிழர்கள் தமது உரிமைக்காக ஜனநாயக மரபுகளைத் தழுவிய அகிம்சா வழிப்
போராட்டங்களை சுமார் 30 வருடங்களாக நடத்தி அதனால் அவர்கள் என்ன பலன்களைப்
பெற்றார்கள் என்பதை திரு.சுகி சிவம் அவர்கள் அறிந்திருக்கிறாரா?.

இலங்கைத் தமிழர்கள் எவ்விதமான உரிமைகளையும் பெற்றுக் கொள்ளாது இரண்டாந்தர
மனிதர்களாகவே அவர்கள் இலங்கையை ஆண்ட அரசுகளால் நடத்தப்பட்டார்கள் என்பது
இவருக்குத் தெரியுமா?. ஈழத்து தந்தை என்று இலங்கைத் தமிழர்களால் அன்பு
செலுத்தப்பட்டு வந்த அமரர் எஸ.ஜே.வி.செல்வநாயகம் அவர்கள் தமிழர்களின்
உரிமைக்காக தமிழகத்திற்கு வந்து போயிருப்பதாவது இவருக்குத் தெரியுமா அல்லது
அறிந்திருக்கிறாரா?. இந்தியாவின் சுதந்திரத்திற்காக எந்த வழியை அமரர்
மகாத்மா காந்தி பின்பற்றினாரோ அதே வழியை உரிமை பெறுதலுக்காக பின்பற்றிய
போது சத்தியாக்கிரகிகள் தாக்கப்பட்டனர் சிறையில் அடைக்கப்பட்டனர் என்பதாவது
இவருக்குத் தெரியுமா?.

தன்னைக் கொல்ல வரும் பசுவையும் கொல்லலாம் என்று கிருஸ்ண பகவான் கூறியிருந்த
வழியிலேயேதான் இலங்கைத் தமிழர்கள் வேறு வழியின்றி தமது உரிமையை பெற்றுக்
கொள்வதற்காக ஆயுதத்தை கையிலெடுத்தார்கள் என்பது எப்படித் தவறாகும்.
அப்படியானால் தன்னைக் கொல்ல வரும் பசுவைக் கொல் என்று சொன்ன கிருஸ்ண பகவான்
பயங்கரவாதியா?.

பஞ்சபாண்டவருக்கும் நூற்றியொருவருக்குமிடையில் நடந்த போருக்கு இரண்டு
குடும்பங்களுக்கிடையில் ஏற்பட்ட தனிப்பட்ட பகையே. துரியோதனனுக்கு
பஞ்சபாண்டவர் மீது எற்பட்ட காழ்பு;பணர்ச்சியினால் ஏற்பட்டதே இந்தப் போர்.
அநீதிக்கும் நீதிக்கும் இடையில் எற்பட்டதே இந்தப் போரென்று
அடையாளப்படுத்தப்படுமானால் அதே அநீதிக்கம் நீதிக்கும் இடையில் நடந்த போரே
இலங்கைத் தமிழரின் விடுதலைப் போர். ஆனால் அதற்கு பயங்காரவாதம் என முத்திரை
குத்தி ஒரு சிறுபான்மையினத்தின் உணர்வுகளை அழித்தமை எப்படி நியாயமாகும்?.

திரு.சுகி சிவம் அவர்களே! ஆன்மீக தளத்தில் நின்று ஆற்றிவரும்
கருத்துக்களின் அடிப்படையிலேயே தங்களிடம் எமது உணர்வுகளையும் கேள்விகளையும்
கருத்துக்களையும் முன் வைக்கின்றோம். ஆன்மீகம் என்றாலே ஆன்மாவின் ஈகம்
என்பது பொருள்படுமே. ஈகம் என்பது கருணையாகும். கருணையின் ஊற்றே உயிர்களை
மதிப்பதாகும். உயிர்களை மதிப்பது என்பது அவரவருக்கு இந்த உலகில் வாழும்
தனிமனித உரிமையை எற்றுக் கொள்வதாகும்.

இதனை தாங்கள் தங்கள் சொற்பொழிவுகளில் சொல்லியதை நான் பலமுறை
கேட்டிருக்கின்றேன். இலங்கையில் தமிழர்களின் வாழும் உரிமை ஏற்றுக்
கொள்ளப்பட்டிருக்கின்றதா?. அவர்கள் ஒவ்வொரு விநாடிப் பொழுதுகளையும்
அச்சத்துடனேயே கழிக்கிறார்கள் என்பதை தங்களால் உணரவே முடியாது. அந்த
வாழ்க்கையை வாழ்ந்து பார்க்க வேண்டும. சுற்றுலா ரீதியில் போய் வரும்
தங்களுக்கு அதனைப் புரிந்து கொள்ள முடியாது. தங்களுக்கு கிடைத்திருக்கும்
வரவேற்புகளை கணக்கில் வைத்து தமிழர்களின் வாழ்க்கையும் இவ்வாறுதான்
இருக்கும் எனத் தப்புக் கணக்கு போட்டிருக்கின்றீர்கள்.

கடந்த காலங்களில் நடந்தவற்றை மறந்துவிட்டு எதிர்காலத்தைப் பற்றிச்
சிந்திக்க வேண்டும், கடந்த காலத்தைப் பற்றிச் சிந்திப்பதால் எவ்வித பலனும்
இல்லையெனவும் சொல்லிருக்கின்றீர்கள். இன்று என்பது இல்லாவிட்டால் நேற்று
என்பது கிடையாது. நேற்றாகிய இன்றைய பொழுது நடந்த வலிகளே தமிழர்களை
ஆக்கிரமித்து நிற்கின்றன என்பதை ஆன்மீகவாதியாகிய தாங்கள் ஏன் உணர்ந்து
கொள்ளவில்லை அறிந்து கொள்ளவில்லை?.
இனக்கலவரங்கள் தொடங்கி 2009 ஆண்டுவரை தமிழர்கள் தமது உரிமைக்காக உயிரையே
விட்டிருக்கிறார்கள். இலங்கையரசுகள் தமிழர்களின் உயிர்களை
பறித்திருக்கின்றன. முள்ளிவாய்க்கால் என்ற படுகொலைக்களத்தில் 40,000
மேற்பட்ட பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டு எல்லாமாக ஒரு இலட்சம் பேர்
போரினால் கொலை செய்யப்பட்டிருக்கின்றார்கள். இதுவரை 90,000 தமிழ்ப் பெண்கள்
விதவையாக்கப்பட் டிருக்கிறார்கள். 25,0000N மற்பட்டவர்கள் அங்கவீனர்கள்
ஆக்கப்பட்டிருக்கின்றார்கள்.

பார்த்துப் பார்த்துக் கட்டிய தமிழர்களின் வீடுகள் இலங்கையரசினால் தகர்த்து
எறியப்பட்டிருக்கின்றன. முள்கம்பி வேலிகளுக்குள் மந்தைகளாக தமிழர்கள்
அடைக்கப்படடு இருக்கின்றார்கள். தமிழர்கள் அழகாக வாழ்ந்த வீடுகள்
புதர்மண்டிக் கிடக்கின்றன, இவ்வாறு தமிழர்களின் அவலங்கள் தொடர்கின்றன.

தமிழர்களின் மீது கொடுமைகள் புரிந்த இராணுவத்திற்கு யார் பொறுப்பு?. இலங்கை
ஜனாதிபதியேதான் பொறுப்பு என்பதே அரசியல் உண்மை. எனவே தமிழர்களைக் கொன்றவர்
அவரேதான். அவரேதான் போர்க் குற்றவாளி. அந்த குற்றவாளிக்கு எதிராக
தமிழர்கள் தமது எதிர்ப்பை காட்டியிருந்தார்கள். இதிலென்ன தவறு?.

ஒரு நாளல்ல இரு நாளல்ல இலங்கைத் தமிழர்கள் சுமார் 60 ஆண்டுகாலமாக
வேதனையுடன் வாழ்பவர்கள். கருணையின் வடிவான கௌதம புத்தரின் சமயநெறிக்
கொள்கையை தழுவிய மண்ணில்,மணிமேகலை கோயில் அமைத்து வாழ்ந்த தாங்கள் சொல்லும்
மணிபல்லவத் தீவை வைத்திருக்கும் இலங்கைத் தீவில்தான் தமிழர்கள் கொலை
செய்யப்படுகிறார்கள்.

எறும்புகூட தங்கள் கால்களில் மிதிபட்டு இறந்துவிடக் கூடாதே என்பதற்காக
மயில்பீலி கொண்டு தாங்கள் போகும் பாதையில் காணப்படும் எறும்புகளை மெதுவாக
ஒதுக்கிவிட்டு செல்வதாக சொல்லப்படுகின்ற புத்த தருமம் வாழும் நாட்டிலேதான்
தமிழர்மீதான கொடுமைகள் இடம்பெறுகின்றன.

தமிழர்கள் மீது கடந்தகாலங்களில் மேற்கொள்ளப்பட்ட கொடுமைகளை மறக்கச் சொன்ன தங்களிடம் சில கேள்விகள்.

ஆன்மீகவாதி திரு.சுகி சிவம் அவர்களே!,
இனக்கலவரங்களின் போதெல்லாம் எரியும் நெருப்பிற்குள் உயிருடன் தூக்கியெறியப்பட்ட தமிழர்களை மறக்கச் சொல்லுகின்றீர்களா?

தமிழ்ப பெண்களின் மார்புத்துணியை கிழித்தெறிந்து அதிலே சுடுதாரால் சிங்களச்
சிறீ எழுதியதை மறக்கச் சொல்லுகின்றீர்களா?. தமிழப் பெண்களை நடுவீதியில்
வைத்து பாலியல் கொடுமை செய்தார்களே அதை மறக்கச் சொல்லுகின்றீர்களா?

தமிழர்களின் வீடுகள் கடைகள் என இனக்கலவரங்களின் போது தீக்கிரையாக்கப்பட்டனவே அவற்றை மறக்கச் சொல்லுகின்றீர்களா?

போர்க் காலங்களில்கணவனுக்கு முன்னால் மனைவியும் பெற்றோருக்கு முன்னால்
பெண்பிள்ளைகளும் இராணுவத்தினரால் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டனரே
அதை மறக்கச் சொல்லுகின்றீர்களா?

மனைவிக்கு முன்னால் கணவனும் பெற்றோருக்கு முன்னால் பிள்ளைகளும்
இராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டனரே அதை மறக்கச் சொல்லுகின்றீர்களா?

கைதுசெய்யப்பட்டட ஆண்களும் பெண்களும் போர் விதிமுறைகளுக்கப்பால் கைகள்
பின்னால் கட்டப்பட்டு தலையில் சுட்டுக் கொன்றார்களே அதை மறககச்
சொல்லுகின்றீர்களா?

கைது செய்யப்பட்ட இளம் பெண்கள் பாலியல் கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டு சுட்டுக் கொன்றார்களே அதை மறக்கச் சொல்லுகின்றீர்களா?

இராணுவத்தால் கைது செய்யப்பட்டவர்கள் காணாமல் போய் வருடக் கணக்காகியும்
வருவார்களா வரமாட்டார்களா என ஏங்கித் தவித்து நிற்கும் கணவன் மனைவி
பெற்றோர் எனக் கண்ணீருடன் காத்திருப்பதை மறக்கச் சொல்லுகின்றீர்களா?.
இதில் எந்தக் கொடுமையை தாங்கள் அனுபவித்து இருக்கிறீர்கள். இந்தக் கொடுமையை
அனுபவித்தவர்கள் அப்பாவாய், அம்மாவாய், அண்ணனாய், தம்பியாய், அக்காவாய்,
தங்கையாய், கணவனாய், மனைவியாய், மாமனாய், மச்சானாய் நண்பனாய் நண்பியாய்
உள்ள புலம்பெயர் தமிழர்களின் தொபு;புள் கொடி உறவுகளே.

தானாடாவிட்டாலும் தசையாடும் என்பார்களே அதைப்போலத்தான் தமிழகத் தமிழர்கள் இலங்கைத் தமிழர்களுக்காக குரல் கொடுக்கிறார்கள்.

ஆன்மீகவாதி திரு.சுகி சிவம் அவர்களே! இலங்கைத் தமிழனின் அவல வாழ்வை ஒரு
முறை வாழந்து பாருங்கள். அறிவுரை சொல்வது எவ்வளவு எளிது என்பதை புரிந்து
கொள்வீர்கள். இந்த அறிவுரையை இலங்கை ஜனாதிபதியிடமும் புத்த
குருமாரிடமும்ஏன் தமிழர்களுக்கு இப்படிக் கொடுமைகளைச் செய்கிறீர்கள் எனத்
தங்களால் சொல்ல முடியுமா?.
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» தண்ணீரின் அருமை பாருங்கள் புரியும்
» காவல்துறை உங்கள் நண்பன் பாருங்கள் உங்களுக்கு புரியும்
»  இந்த காணொளியை பாருங்கள் அதன் மதிப்பு என்னவென புரியும்
» ஏன் ஆஸ்திரேலியர்கள் ஒருபோதும்அரபு நாட்டிற்கு செல்வது இல்லை? பாருங்கள் புரியும்
» தமிழ்நாடு சாதிகள் பட்டியல் (தலை சுத்துதுடா சாமி!!!)...பாருங்கள் உங்களுக்கு புரியும்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum