TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:45 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:44 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 3:24 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun May 12, 2024 10:47 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


புதிய அறிவிப்புகள்.. ஆளுனர் உரை முக்கிய அம்சங்கள்!

2 posters

Go down

புதிய அறிவிப்புகள்.. ஆளுனர் உரை முக்கிய அம்சங்கள்! Empty புதிய அறிவிப்புகள்.. ஆளுனர் உரை முக்கிய அம்சங்கள்!

Post by mmani Fri Jan 07, 2011 4:45 pm

சென்னை, ஜன.7,2011
சென்னை - ஒமந்தூரார் அரசினர் தோட்டத்தில்
உள்ள புதிய சட்டப்பேரவை மற்றும் தலைமை செயலக வளாகத்தில் தமிழக
சட்டப்பேரவையின் 15-வது கூட்டம் இன்று காலை கூடியது.
இதில் ஆளுனர் சுர்ஜித் சிங் பர்னாலா தனது தொடக்க உரையில் வெளியிட்ட அறிவிப்புகளின் முக்கிய அம்சங்களாவன:
முதல்வருக்கு புகழாரங்கள்..
* மனிதகுல வரலாற்றில் மூலாதார இடம்பெற்ற
திராவிடப் பண்பாட்டைக் கட்டிக் காப்பதில் தன்னிகரற்ற தலைவராகத் திகழும்
முதலமைச்சர் கருணாநிதி, ஐந்தாவது முறையாக முதலமைச்சராகப் பொறுப்பேற்றுத்
தமிழகத்தின் முன்னேற்றத்திற்கு அயராது பாடுபட்டு வருவதும், தமிழ் இனப்
பண்பாட்டு அடையாளங்களைப் பேணுவதற்கு அவர் தொடர்ந்து எடுத்து வரும்
முயற்சிகளும் பாராட்டுக்குரியவை.

புதிய அறிவிப்புகள்.. ஆளுனர் உரை முக்கிய அம்சங்கள்! Governer
* தமிழர் திருநாளாம் பொங்கல் விழாவினைக் கொண்டாடும் தைத் திங்கள் முதல் நாளைத்
தமிழ் ஆண்டின் தொடக்கமாக 2008 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் நாளன்று
அறிவித்தார். இந்த ஆண்டு அனைத்துத் தரப்பு மக்களும் மனமகிழ்வோடு தமிழ்ப்
புத்தாண்டைத் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளன்று கொண்டாட இலவச பொங்கல்
பை வழங்கிய முதலமைச்சரை பாராட்டுகிறேன்.
* தமிழ்மொழியின் தொன்மையையும்
தனித்தன்மையையும் காத்திட, காலத்திற்கு ஏற்றாற்போல் அதைச்
செழுமைப்படுத்தும் நோக்குடன், தமிழ்மொழியைச் செம்மொழியாக்கி அதன் முதல்
மாநாட்டை உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடாகக் கோவையில், கடந்த ஆண்டு சூன்
மாதம் 23 ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரையில் சீரோடும் சிறப்போடும்
நடத்தியுள்ளார். உலகம் முழுவதும் விரவிப் பரவியிருக்கும் தமிழ்ச் சமுதாயம்
மட்டுமன்றி, அனைத்துத் தரப்பு மக்களும் இதை வியந்து பாராட்டியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து தமிழ்மொழியின் ஆக்கபூர்வமான வளர்ச்சிக்கு வலுவான
அடித்தளமிட எடுக்கப்பட்ட முயற்சிகளுக்கு பாராட்டுகள்.










புதிய சட்டப்பேரவை கட்டடம், தேர்தல்
வாக்குறுதிகளை நீறைவேற்றியது, சட்டம் ஒழுங்கைப் பேணியது, சமுதாய
நல்லிணக்கம் பேணி, சாதி சமய பேதமற்ற சமுதாயத்தை நிலைநிறுத்த இந்த அரசு
தொடர்ந்து முயற்சிகள் செய்து வருகிறது.
இலங்கைத் தமிழருக்காக...
* சிந்திய கண்ணீரும், செத்து மடிந்த உயிர்களும் போதாது என்று இன்னமும் ஆயிரக்கணக்கான
தமிழர்கள் இலங்கையில் முள்வேலி முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருப்பதும்;
முகாம்களிலிருந்து சொந்த இடங்களுக்கு அனுப்பப்பட்ட தமிழர்களுக்கான
மறுவாழ்வு நடவடிக்கைகள் முழுமை அடையாமல் இருப்பதும்; நீண்ட காலமாகப்
பேசப்பட்டு வரும் அரசியல் தீர்வுக்கான
ஆரம்பகட்ட முயற்சிகள்கூட இதுவரை மேற்கொள்ளப் படாமலிருப்பதும்; தொடர்ந்து
தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் தாக்கப்படுவதும் தமிழக அரசுக்கு
மிகுந்த கவலையை அளிக்கிறது.
தமிழக மீனவர்களைப் பாதுகாக்கவும், இலங்கைத்
தமிழர்களின் இன்னல்கள் களைந்திடவும் மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை
மேற்கொள்ள வேண்டுமென்று இந்த அரசு வலியுறுத்துகிறது.
* பனை, தென்னை விவசாயிகளின் நலன் கருதி பனை
நுங்குச் சாறும், தென்னை இளநீரும் பக்குவப்படுத்தப்பட்டுத்
தயாரிக்கப்படுகிற சுவைநீர், காதி கிராமத் தொழிற்சங்கங்கள்
வாயிலாக விற்பனை செய்யப்படும். தென்னை விவசாயிகள் நலவாரியம் மூலம்
தேங்காயைக் கொள்முதல் செய்து கொப்பரை தயாரிக்கவும், இந்த வாரியம் மூலம்
தயாரிக்கப்படுகின்ற தேங்காய் எண்ணையைச் சத்துணவுத் திட்டத்தில் தற்போது
வழங்கப்படும் பாமாயிலுக்குப் பதில் பயன்படுத்தவும், கூட்டுறவு அங்காடிகள்
மூலம் விற்பனை செய்யவும் இந்த அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ளும்.
பசுமைத் திட்டம்...
* தமிழ்நாட்டில் வனவளத்தைப் பாதுகாக்க ரூபாய் 686 கோடி மதிப்பீட்டில் ஜப்பான் பன்னாட்டு நிதி
நிறுவன உதவியுடன், "தமிழ்நாடு உயிர்ப்பன்மை பாதுகாப்பு மற்றும் பசுமைத் திட்டத்தினை” செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
கல்வி...
* காஞ்சிபுரம் மாவட்டம் - ராஜீவ் காந்தி சாலைக்கும், கிழக்கு கடற்கரைச் சாலைக்கும் இடையில்
உள்ள நெம்மேலியிலும்; தூத்துக்குடி மாவட்டம் - நாகலாபுரத்திலும்; தருமபுரி
மாவட்டம் - அரூரிலும்; விழுப்புரம் மாவட்டம் - கள்ளக்குறிச்சியிலும்;
விருதுநகர் மாவட்டம் - திருச்சுழியிலும் அரசு கலை மற்றும் அறிவியல்
கல்லூரிகள் புதிதாகத் தொடங்கப்படும்.
* வேளாண்மைத் தொழிலை வாழ்வாதாரமாக கொண்டுள்ள
விவசாயிகள் நிறைந்த நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சை மாவட்டங்களில் உள்ள
மாணவர்கள் பெரிதும் பயன்பெற வேண்டுமென்ற
எண்ணத்தோடு, நாகை மாவட்டத்தில் உள்ள கீவளூரில் இந்த ஆண்டு புதிதாக விவசாயக் கல்லூரி ஒன்று தொடங்கப்படும்.
* அண்மையில் நடைபெற்ற வேளாண்மை அலுவலர்கள் மாநாட்டில் முதலமைச்சர் கருணாநிதி
அறிவித்ததற்கு இணங்க, இந்தியாவிலேயே முதன் முதலாக கால்நடைப் பல்கலைக்
கழகத்தையும், கோவையில் வேளாண்மை பல்கலைக்கழகத்தையும் தொடங்கிப் பெருமை
சேர்த்த இந்த அரசு, வேளாண்மையின் எதிர்காலம் என்று கருதப்படும்
தோட்டக்கலைக்கெனத் தனியே "தோட்டக்கலைப் பல்கலைக்கழகம்" ஒன்றைக் கிருஷ்ணகிரி
மாவட்டத்தில், இந்த ஆண்டில் தொடங்கும் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்
கொள்கிறேன்.
* முதலமைச்சரின் அரிய முயற்சியால் மத்திய
அரசு மத்திய பல்கலைக்கழகத்தைத் திருவாரூரிலும், இந்திய மேலாண்மைக்
கழகத்தைத் திருச்சியிலும் அமைத்துள்ளது. உலகத் தரம் மிக்க
பல்கலைக்கழகத்தைக் கோவையில் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
அறிவியல் நகரம்..
* அறிவியல் நகரம் அமையவில்லை என்பது ஒரு பெருங்குறையாகவே உள்ளதால்,
சென்னையில், அண்ணா பல்கலைக் கழகம், இந்திய தொழில்நுட்ப நிறுவனம் போன்ற 69
க்கும் மேற்பட்ட உயர்கல்வி ஆய்வு நிறுவனங்கள் அமைந்துள்ள பகுதிகள்
அனைத்தையும் ஒருங்கிணைத்து, உயர் அறிவியல் ஆய்வுக்கு உகந்த வசதிகளை
உள்ளடக்கி இளைய
தலைமுறையினரின் அறிவு வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கும் தூய்மைப் பகுதியாக
விளங்கிட உலகத்தரம் மிக்க "அறிவியல் பெருநகரம்" அமைக்கப்படும் என்ற
மகிழ்ச்சியான செய்தியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
வேலை வாய்ப்பு...
* ஒரு இலட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
அரசு மேற்கொண்டு வரும் பயிற்சியுடன் கூடிய இந்த வேலைவாய்ப்புத் திட்டத்தின்
அடுத்த கட்டமாகப் பள்ளிகள், கல்லூரிகளுடன் தொழில் நிறுவனங்களின் நேரடித்
தொடர்பை ஏற்படுத்தி, அந்தத் தொழில் நிறுவனங்களுக்குத் தேவைப்படும் வகையில்
மாணவ மாணவியர்க்குப் பயிற்சிகள் அளித்திடும் கல்வித் திட்டங்களை உரியவாறு
மாற்றியமைத்து, மொழியாற்றல் போன்ற கூடுதல் திறன் வளர்ப்புப் பயிற்சியையும்
கல்வி நிறுவனங்களிலேயே வழங்கிப் பட்டம் பெற்றவுடன்
இளைஞர்கள் பணியில் அமரக் கூடிய சூழ்நிலை ஏற்படுத்தப்படும்.
சுகாதாரம்...
* உலக வங்கி உதவியுடன் ரூபாய் 506 கோடி செலவில் செயல்படுத்தப்பட்ட தமிழ்நாடு
சுகாதாரத் திட்டம் இரண்டாம் கட்டத்துக்கு நீட்டிக்கப்பட்டு கூடுதலாக ரூபாய்
627 கோடி வழங்க உலக வங்கி ஒப்புதல் அளித்துள்ளது. இத்திட்டத்தில் பெண்கள்
மற்றும் குழந்தைகள் நலம், தொற்றுநோய் அல்லாத பிற நோய்களான இதய நோய்,
நீரிழிவு நோய், மார்பகப் புற்றுநோய் மற்றும் கருப்பை வாய்ப்புற்றுநோய் ஆகிய
நோய்களைத் தடுத்தல், கண்டறிந்து சிகிச்சை அளித்தல் போன்ற பணிகள் தமிழகம்
முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
* பச்சிளங்குழந்தைகளின் இறப்பு விகிதம் 2006
ஆம் ஆண்டில் ஆயிரம் பிறப்புகளுக்கு 37 லிருந்து 2010 ஆம் ஆண்டில் 31
ஆகவும் பேறு காலத்தில் பெண்களின் இறப்பு இதே காலகட்டத்தில் இலட்சத்திற்கு
111 என்பதிலிருந்து 79 ஆகவும் குறைந்துள்ளது. பச்சிளம் குழந்தைகளின் இறப்பு
விகிதத்தை மேலும் குறைத்து, பிறந்த குழந்தைகள் அனைவரையும் காத்திட உதவும்
வகையில்,
அங்கீகரிக்கப்பட்ட தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளின் உதவியோடு ஒரு வயது வரையுள்ள
பச்சிளம் குழந்தைகளுக்கான "தீவிர அவசர சிகிச்சைத் திட்டம்" என்னும் புதிய
திட்டத்தினை இந்த ஆண்டில் ரூபாய் 10 கோடி செலவில் அறிமுகம் செய்திடவும்,
அடுத்த ஆண்டில்
இத்திட்டத்தினை ரூபாய் 15 கோடி நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்திடவும் இந்த அரசு முடிவெடுத்துள்ளது.
* பின்தங்கிய மாவட்டங்களான சிவகங்கை, பெரம்பலூர், திருவண்ணாமலை ஆகிய
இடங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகளை அமைக்கும் பணிகள் நடைபெற்று
வருகின்றன. "மாவட்டந்தோறும் மருத்துவக் கல்லூரி" என்னும் இந்த அரசின்
நோக்கத்தைத் தொடர்ந்து நிறைவேற்றிடும் வகையில்; அடுத்தபடியாக இராமநாதபுரம்,
கடலூர் மற்றும் திண்டுக்கல்லிலும் அரசு மருத்துவக் கல்லூரிகள்
தொடங்கப்படும். இதன் மூலம் வருங்காலத்தில் தகுதியுடைய மருத்துவர்களின்
எண்ணிக்கை தமிழகத்தில் கணிசமாக உயர வாய்ப்புள்ளது.
* பாரம்பரியம் மிக்க இந்திய
மருத்துவத்தையும் மற்றும் ஓமியோபதி மருத்துவத்தையும் வளர்த்தெடுக்க
தற்போதுள்ள ஆறு அரசு இந்திய மருத்துவ மற்றும் ஓமியோபதி கல்லூரிகளையும்,
இதுபோன்ற 26 தனியார் கல்லூரிகளையும் உள்ளடக்கி தனியாக இந்திய மருத்துவ
மற்றும் ஓமியோபதி பல்கலைக்கழகம் ஒன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் இந்த
ஆண்டு தொடங்கப்படும்.
வெளிநாடு வாழ் தமிழர்கள் நல வாரியம்..
* தமிழ்நாட்டிலிருந்து சென்று வெளிநாட்டில் பணிபுரியும் தமிழர்களின் நலனுக்காக வெளிநாடு வாழ்
தமிழர்கள் நலவாரியம் ஒன்றை அமைக்க இந்த அரசு உத்தரவிட்டுள்ளது.
* தமிழகத்தில் பல்லாண்டு காலத்திற்கு முன்பு வழங்கப்பட்ட பஞ்சமி நிலங்களை பஞ்சமர்கள்
அல்லாதவர்கள் பட்டா மாறுதல் செய்து வைத்திருப்பதாகவும் காலப்போக்கில்
அவற்றைப் பல்வேறு தரப்பினர் ஆக்கிரமிப்பு செய்து அனுபவித்து வருவதாகவும்
ஆக்கிரமிப்பு செய்த நிலங்கள் பலவற்றில் தொழிற்சாலைகள்
நிறுவப்பட்டுள்ளதாகவும்; ஒப்படை நிபந்தனைகள் மீறப்பட்டு, கிரயம்
செய்யப்பட்டு பலருக்குக் கைமாற்றப்பட்டுள்ளதாகவும்; அடிக்கடி அரசுக்கு
முறையீடுகள்
வருவதோடு, ஏடுகளிலும் செய்திகள் வருகின்றன. பஞ்சமி நிலம் தொடர்பான பல்வேறு
பிரச்சினைகளையும் சட்டவிதிமுறைகளுக்கு உட்பட்டு, பரிசீலனை செய்து,
அவர்களிடமே திரும்ப ஒப்படைக்கப் படுவதற்கான சாத்தியக் கூறுகள் பற்றி ஆய்வு
செய்து, அரசுக்குப் பரிந்துரைகள்
வழங்குவதற்கு, உயர்நீதிமன்றத்திலிருந்து ஓய்வு பெற்ற நீதியரசர் ஒருவர் தலைமையில் குழு அமைப்பதென அரசு முடிவு செய்துள்ளது.
அடிப்படை வசதிகள்...
* நகர்ப்புரத்திற்கு இணையான அடிப்படை வசதிகளை ஊரகப் பகுதிகளிலும் ஏற்படுத்துவதை ஒரு
முக்கிய நோக்கமாகக் கொண்டு இணைப்புச் சாலைகள், தெரு விளக்குகள், குடிநீர்
வசதி, வடிகால் வசதி, நூலகங்கள், குளம், விளையாட்டுத் திடல், மயானம் போன்ற
அடிப்படை
வசதிகளை ஏற்படுத்துவதற்கு "அனைத்துக் கிராம அண்ணா மறுமலர்ச்சித்
திட்டத்தினை" உருவாக்கி அதன் மூலம் 12,618 கிராம ஊராட்சிகளிலும் ஐந்து
ஆண்டுகளில் ரூபாய் 2,549 கோடி மதிப்பீட்டில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு
வருகின்றன.
* நகராட்சிகளிலும் குடிநீர், சாலைகள், கழிவு
நீர் வசதி, திடக் கழிவு மேலாண்மை, மின்விளக்கு போன்ற பல்வேறு அடிப்படை
வசதிகளை ஏற்படுத்தித் தர அடுத்த 5 ஆண்டுகளுக்கு சுமார் ரூபாய் 15,000 கோடி
தேவை என மதிப்பிடப்பட்டுள்ளது. இதற்கான நிதி ஆதாரத்தை மாநிலத்தின் நிதி
ஆதாரத்திலிருந்தும், சர்வதேச நிதியுதவி அமைப்புகளிடமிருந்து நிதியுதவி
பெற்றும் தரம் மிக்க
அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தர உரிய நடவடிக்கைகளை இந்த அரசு மேற்கொள்ளும்.
* ஃபுளூரைடு பிரச்சினையால் வெகுவாக
பாதிக்கப்பட்ட தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட மக்கள் பயன்பெறத்தக்க
வகையில் இந்த அரசு எடுத்த பெருமுயற்சியின் பயனாக ஒகேனக்கல் கூட்டுக்
குடிநீர்த் திட்டம் ரூபாய் 1,929 கோடி செலவில் தொடங்கப்பட்டு பணிகள்
விரைவாக நடைபெற்று வருகின்றன. இப்பணிகள் டிசம்பர் 2012 ல் நிறைவுபெறும்.
இத்திட்டத்தினால் தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள 30
இலட்சம் மக்களின் குடிநீர்ப் பிரச்சினைகளுக்கு ஒரு நிரந்தரத் தீர்வு
ஏற்படும்.
* சென்னை நகருக்கான குடிநீர் ஆதாரத்தை
மேம்படுத்த மீஞ்சூரில் ஒரு நாளைக்கு 100 மில்லியன் லிட்டர் வழங்கக்கூடிய,
கடல் நீரை நன்னீராக்கும் திட்டம், பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
இதேபோல் மத்திய அரசு நிதியுதவியுடன் ரூபாய் 533 கோடி மூலதனச் செலவில் கடல்
நீரை நன்னீராக்கும் திட்டப் பணிகள் நெமிலியில் நடைபெற்று வருகின்றன.
வீடு வழங்கும் திட்டம்..
* ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள்
தமிழகத்தை குடிசைகள் அற்ற மாநிலமாக மாற்ற 'கருணாநிதி வீடு வழங்கும்
திட்டம்' என்னும் ஓர் உன்னதமான மனித நேயத் திட்டத்தை இந்த அரசு அறிவித்தது.
குடிசைகளே இல்லாத தமிழகத்தைக் காண வேண்டுமென்ற நமது முதலமைச்சர் கருணாநிதி
கனவு நனவாக கிராமப்புறங்களில் உள்ள குடிசை வீடுகளின் கணக்கெடுப்பு
முடிக்கப்பட்டு
தமிழகத்திலே உள்ள 21 இலட்சம் குடிசைகளையும் ஆறு ஆண்டு காலத்தில் கான்கிரீட்
வீடுகளாக மாற்றி அமைத்திடத் திட்டமிட்டு அதற்காக அரசின் சார்பில் வீடு
ஒன்றுக்கு 60 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்தது.
அந்தத் தொகை போதுமானதாக இல்லை என்ற
வேண்டுகோள் எழுந்ததன் காரணமாக அந்தத் தொகையை வீடு ஒன்றுக்கு 75 ஆயிரம்
ரூபாய் என்று அரசு உயர்த்தியது. முதல் கட்டமாக இந்த ஆண்டு தொடங்கப்பட்ட
மூன்று இலட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்படும் நிலையில் உள்ளன.
2010-2011 ஆம் ஆண்டிற்கு இதற்கென ரூபாய் 2,250 கோடி ஒதுக்கீடு
செய்யப்பட்டுள்ளது. ஆனால், இன்னமும் ஒரு சாரார் இந்த 75 ஆயிரம் ரூபாயும்
போதாது, குடிசைவாசிகள்
மேலும் கடன் பெற்று வீடுகளைத் தங்கள் வசதிக்கேற்ப கட்ட வேண்டிய நிலை உள்ளது என்று தெரிவித்துவருகிறது.
இதனால் 75 ஆயிரம் ரூபாயில் தாங்கள்
விரும்புவது போல் வீடுகளை கட்டிக்கொள்ள முடியாத நிலையில் கூடுதல் நிதி
தேவைப்படுபவர்களுக்கு மட்டும் மேலும் 20 ஆயிரம் ரூபாய் வரை தேசிய
மயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் குறைந்த வட்டியில் கடனாகப் பெற்றுக் கொள்ள
இந்த அரசு தேவையான முயற்சிகளை எடுத்து வருகிறது. அந்த 20 ஆயிரம் ரூபாய்
கடனை தவணை முறையில் திரும்பச் செலுத்திக் கொள்ளலாம்.
இந்த மூன்று இலட்சம் பயனாளிகள் தவிர, மற்ற
தகுதியான பயனாளிகளுக்கும் வீடுகள் பெறுவதற்கான அடையாள அட்டைகள்
வழங்கப்பட்டுள்ளன. நடப்பாண்டில் மேற்கொள்ளப்பட்டுள்ள கான்கிரீட் வீடுகள்
கட்டும் பணி வேகமாக நடைபெற்று வருவதால், அடையாள அட்டை வழங்கப்பட்ட
பயனாளிகளில் முதல் கட்டமாக மூன்று இலட்சம் பேருக்கு வீடுகள் கட்டி
முடிப்பதன்னியில் அடுத்த கட்டமாக இந்த ஆண்டிலேயே மேலும் மூன்று இலட்சம்
பயனாளிகளுக்கு வீடுகள் கட்டும் பணிகளைத் தொடங்க அனுமதியளிக்கப்படும்.
தமிழ்நாட்டில் குடிசைகளற்ற கிராமங்களை
உருவாக்குவது போல் குடிசைப்பகுதிகளற்ற நகரங்களையும் உருவாக்க இந்த
அரசால்தான் 1970 ஆம் ஆண்டில் தமிழ்நாடு குடிசைமாற்று வாரியம்
தொடங்கப்பட்டது. இதுவரை இந்த வாரியம் மூலம் ஒரு இலட்சத்து 6 ஆயிரம்
வீடுகள் கட்டப்பட்டுள்ளன.
இந்த முயற்சியைத் தீவிரப்படுத்த 2011-2012 ஆம் ஆண்டில் தொடங்கி அடுத்த ஐந்து
ஆண்டுகளில் தமிழ்நாட்டிலுள்ள அனைத்துப் பேரூராட்சிகளிலும் உள்ள சுமார் இரண்டரை இலட்சம்
குடிசைகளை கான்கிரீட் வீடுகளாக மாற்ற இந்த அரசு உரிய நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது.
* தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் பல ஆண்டு காலமாக நடைமுறையில் இருந்து வரும் அரசின்
விருப்புரிமையில் வீடுகள் மற்றும் மனைகள் ஒதுக்கீடு செய்யும் முறை இன்று முதல் ரத்து செய்யப்படுகிறது.
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

புதிய அறிவிப்புகள்.. ஆளுனர் உரை முக்கிய அம்சங்கள்! Empty Re: புதிய அறிவிப்புகள்.. ஆளுனர் உரை முக்கிய அம்சங்கள்!

Post by sureshkumarrane Fri Jan 07, 2011 9:08 pm

இலங்கை தமிழர்களுக்காக இந்த அரசு செய்துள்ள பல சாதனைகளை பார்த்து உலகமே வியக்கிறது.
avatar
sureshkumarrane
உதய நிலா
உதய நிலா

Posts : 43
Join date : 04/12/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum