TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Mar 27, 2024 11:28 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Mar 27, 2024 8:25 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Mar 23, 2024 3:17 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Mar 18, 2024 4:17 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


13 வருட சிறை அனுபவம்! மனம் திறக்கும் குணங்குடி அனீஃபா!...

Go down

13 வருட சிறை அனுபவம்! மனம் திறக்கும் குணங்குடி அனீஃபா!... Empty 13 வருட சிறை அனுபவம்! மனம் திறக்கும் குணங்குடி அனீஃபா!...

Post by navas Sun Jun 06, 2010 10:46 pm

13 வருட சிறை அனுபவம்! மனம் திறக்கும் குணங்குடி அனீஃபா! நக்கீரன் வாரமிருமை இதழுக்கு அளித்த பேட்டி





13 வருட சிறை அனுபவம்! மனம் திறக்கும் குணங்குடி அனீஃபா!... Kunnakudihaniba

13 வருட சிறை அனுபவம்! மனம் திறக்கும் குணங்குடி அனீஃபா!
நக்கீரன் வாரமிருமை இதழுக்கு அளித்த பேட்டி




சுதந்திரக் காற்றை சுவாசிக்கிறார் குணங்குடி அனீஃபா. பா.ம.க.வின் பொருளாளர், பழனி பாபா உருவாக்கிய அகில இந்திய ஜிகாத் கமிட்டியின் தலைவர், த.மு.மு.க.வின் தலைவர் என்கிற பல்வேறு அடையாளங்கள் இவருக்கு உண்டு. ரயில் குண்டு வழக்கில் ஜாமீனே கிடைக்காமல் 13 வருடங்கள் சிறையில் இருந்த அனீஃபாவை கடந்த வெள்ளிக்கிழமை விடுதலை செய்தது பொடா நீதிமன்றம். இவரது விடுதலைக்காக தொடர்ந்து போராடிய முஸ்லிம் இயக்கங் களும் முஸ்லிம் சமூகமும் இந்த விடுதலையை கொண்டாடுகின்றன. இந்தச் சூழலில், பேத்தியுடன் கொஞ்சிக்கொண்டிருந்த அனீஃபாவை அவரது வீட்டில் சந்தித்தோம்.

பதிமூன்று வருஷங்களுக்கு முன்பு நீங் கள் கைது செய்யப்பட்ட சம்பவம் இன்னும் உங்கள் நினைவுகளில் இருக்கிறதா?

மறந்துவிடுகிற சம்பவமா அது? இன்று நினைத்தாலும் காவல்துறை மீது கோபம் கோபமாகத்தான் வருகிறது. ஆனா, மனசு பக்குவப்பட்டுவிட்டதால் அந்தக் கோபம் அமைதியாகிவிடுகிறது. தேவகோட்டை அருகே உள்ள அனுமந்தகுடி கிராமம்தான் என் சொந்த ஊர். இங்குள்ள என் வீட்டில் எனது ஒரே மகளின் திரு மணம் 15.2.98 அன்று வெகு விமரிசையாக நடந்தது. அப்போது நுழைந்த தேவகோட்டை போலீ ஸார், "கோவை வெடிகுண்டு சம்பவம் தொடர் பாக விசாரிக்க வேண்டும் என்று அழைத்துப் போய் கோவை வெடிகுண்டு சம்பவத்தில் சதி ஆலோசனையில் ஈடுபட்டதாக வழக்குப் பதிவு செய்து என்னை கைது செய்தனர்.
13 வருட சிறை அனுபவம்! மனம் திறக்கும் குணங்குடி அனீஃபா!... Kunnakudihaniba1

இந்த வழக்கிற்காக திருச்சி மற்றும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டேன். ஒரு அஞ்சல் அலுவலகத்தில் இருந்துகொண்டு சதி ஆலோசனையில் ஈடுபட்டபோது நான் கைது செய்யப்பட்டதாக போலீஸ் தரப்பில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால், எனது மகளின் திருமணத்தில்தான் கைது செய்யப்பட்டேன் என்கிற வீடியோ ஆதாரத்தை கோர்ட்டில் சமர்ப்பித்தோம். இதன் உண்மை தன்மையை ஆராய்ந்த நீதிபதி என்மீது போடப்பட்டிருப்பது பொய் வழக்கு என்று கூறி என்னை விடுதலை செய் தார். அதேசமயம், இந்த வழக்கில் என்னைக் குற்ற வாளியாக கோர்ட்டில் நிரூபிக்க முடியாது என்பதை உணர்ந்திருந்த போலீஸார், இந்த வழக்கிற்காக சிறையில் நான் இருந்தபோதே திருச்சி, ஈரோடு, ஆலப்புழை ஆகிய 3 இடங்களில் நடந்த ரயில் குண்டு வெடிப்பு சம்பவத்தை என்னோடு இணைத்து அதில் கைது செய்தனர். அந்த வழக்குதான் 13 வருடங்களாக நீடித்து... இப்போது விடுதலையாகியிருக்கிறேன்.

13 வருடங்களாகவே ஜாமீனே கொடுக்கப்படாத இந்த வழக்கில், நீங்கள் குற்றமற்றவர் என்பதை எப்படி நிரூபித்தீர்கள்?

இந்த வழக்கில் எனக்கு எதிராக பூந்தமல்லி பொடா நீதிமன்றத்தில் முகமது அலி, தாஸ் என்கிற 2 பேரை ஐ விட்னஸாக முன்னிறுத் தியது போலீஸ். 8 பேரை வைத்துக்கொண்டு நான் சதி ஆலோசனை நடத்தியதாகவும் அதனை இந்த 2 பேரும் கவனித்த தாகவும் போலீஸ் தரப்பில் புனையப்பட்டிருந்தது. ஆனால், இறுதிகட்ட விசாரணையில் போலீஸின் இந்த 2 சாட்சிகளும் "அனீஃபாவை நாங்கள் பார்த்ததே இல்லை. போலீஸ் நீட்டிய கடிதத்தில் கையெழுத்திட் டோம். அவ்வளவுதான்' என்று பகிரங்கமாகவே உண்மையை ஒப்புக்கொண்டனர். போலீஸாரின் பொய் வழக்கிற்கு என் மீதான வழக்கின் தீர்ப்பு ஒரு நெத்தியடி.

இந்த வழக்கு தொடர்பாக சிறையில் சாகும்வரை உண்ணாவிரதம் இருந்தீர்களே?
உண்மைதான். பொடா நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடந்தபோது, வழக்கை விரைந்து முடிக்க போலீஸ் நினைக்கவே இல்லை. வழக்கு விசாரிக்கப்பட்டு தீர்ப்புக்கான தேதி குறிக்கப்படும் என்கிற எதிர்பார்ப்பு உருவாகும் நிலையில் நீதிபதி மாற்றப்பட்டுவிடுவார். இதுவரை 8 நீதிபதிகள் இப்படி மாறிவிட்டனர். பொடா கோர்ட்டின் தற்போதைய நீதிபதி பிரேம்குமார், வழக்கு விசாரணையை முடித்து தீர்ப்பு தேதியை குறித்தார். ஆனால், இதனை விரும்பாத காவல்துறையினர், நீதிபதியை மாற்ற முயற்சித்தனர்.

இதனைக் கண்டித்து சிறையினுள்ளே உண்ணாவிரதப் போராட்டம் துவக்கினோம். அனைத்து சிறைவாசிகளும் எங்களுக்கு ஆதரவாக நின்றனர். அதே சமயம், இந்த மாதம் 5-ந் தேதி இதே கோரிக்கையை வலியுறுத்தி... பேராசிரியர் ஜவாஹிருல்லா தலைமையில் த.மு. மு.க.வினர் கோர்ட்டை முற்றுகையிடும் போராட்டத்தை பெரிய அளவில் நடத்தினர். இதன் விளைவாக, சிறைத்துறை அதிகாரிகள், "நீதிபதியை மாற்றமாட் டோம்னு நீதித்துறை உத்திர வாதம் தந்திருக்கிறது. போ ராட்டத்தை கைவிடுங்கள்' என்றனர். அதனை ஏற்று உண்ணாவிரதத்தை விலக்கிக் கொண்டோம். இந்த மாதம் 21-ந் தேதி "இந்த வழக் கில் ஒரு குற்றச்சாட்டைக் கூட போலீஸ் தரப்பு நிரூபிக்கவில்லை. எந்த ஆதாரத் தையும் அவர்கள் சமர்ப்பிக்கவில்லை' என்று கூறி நீதிபதி விடுதலை செய்தார்.
13 வருட சிறை அனுபவம்! மனம் திறக்கும் குணங்குடி அனீஃபா!... Kunnakudihaniba2

இந்த 13 வருட சிறைவாசத்தில் ஏற்பட்ட அனுபவங்கள்?

மிக திடகாத்திரமான உடலுடன், மனத் தைரியத்துடன் சிறைக்குச் சென்றேன். ஆனால், இன்றைக்கு ஊன்றுகோல் உதவியில்லாமல் நடக்க முடியாது என்கிற நிலையில் வெளியே வந்திருக்கிறேன். காரணம் 13 வருடங்களாக எனக்கு ஏற்பட்ட மன உளைச்சல்தான். எனக்கு எந்த நோயும் இருந்ததில்லை. ஆனால், இப்போது ரத்தக் கொதிப்பு, நீரிழிவு நோய், முதுகுத்தண்டு தேய்மானம், கண் பார்வை கோளாறு என அனைத்தும் இருக்கிறது. மன உளைச்சல்கள் தந்த பரிசு இது. எந்தத் தவறுமே செய்யாமல் தண்டிக்கப்படுகிறோமே என்கிற மன உளைச்சல்கள்தான்.

என்னை சிறையில் சந்திக்க என் மனைவி ஹமீதாபீவி வருவார். அவரைப் பார்க்கும்போதெல்லாம் "கணவன் உயிரோடு இருந்தும் விதவையாக இருக்கிறாளே' என்று நெக்குருகிப் போவேன். இந்தக் கவலையும் என்னை மன நோயாளி யாக்கியது. இஸ்லாத்தில் தற்கொலைக்கு இடம் கிடையாது. அதனால், தற்கொலை எண்ணத்தில் இருந்து இறைவனால் தடுக்கப்பட்டேன்.

சிறைகளில் உங்களின் நாட்கள் எப்படிக் கழிந்தது?

இந்த 13 வருடங்களில் 5 வருடங்கள் மதுரை மத்திய சிறையிலும், 5 வருடங்கள் சென்னை பழைய மத்திய சிறையிலும், கடைசி 3 வருடங்கள் புழல் மத்திய சிறை யிலும் இருந்தேன். மதுரை சிறைச் சாலையை கொடுஞ் சாலை என்றுதான் வர்ணிக்க வேண்டும். அந்தளவுக்கு இருந்தது அந்த சிறைச்சாலை. காலைக்கடன் கழிக்க வும் குளிக்கவும் ஒரு அரைமணி நேரம் தருவார்கள். அதன் பிறகு சாப்பிடுவதற்கு 15 நிமிடம்... அவ்வளவுதான்! பிறகு ஒரு சிறிய அறையில் போட்டு பூட்டிவிடுவார்கள். மதியம் சாப்பாடு வாங்க அரை மணி நேரம். அதேபோல சாயந்தரம். இதைத்தாண்டி வெளிக் காற்றே சுவாசிக்க முடியாது. எவரிடமும் பேசக்கூடாது. பேசினால்... ஒருமையில் திட்டுவார்கள். சாப்பிடுகிற நேரத்தைத் தவிர, தாகத்திற்கு ஒருவாய் தண்ணீர் கேட்டால்கூட அவ்வளவு எளிதாக கிடைக்காது. இதே நிலைதான் சென்னை மத்திய சிறையிலும் இருந்தது.

சிறைவாசிகள் என்பவர்கள் "அடிமைகள்' என்பதுதான் அதிகாரிகளின் பார்வை. புழல் சிறையில் இங்கு கொஞ்சம் வித்தியாசம் இருந்தது. அதாவது, சிறைவாசிகளுக்கு மின்விசிறி ஏற்பாடு செய்திருந்தார் முதல்வர் கலைஞர். மன உளைச்சலில் இருந்த என்னைப் போன்றவர்களுக்கு மனப் புழுக்கத்தை போக்கியது இந்த மின்விசிறிகள்.

நான் இருக்கும் பகுதிக்கு பாதுகாப்பு தொகுதி-1 என்று பெயர். இதனைச் சுற்றி சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் காலி இடம் இருக்கு. இதனை பசுமையாக வைத்துக் கொள்ள விரும்பி சிறைத்துறையிடம் அனுமதி கேட்டபோது ஒப்புக் கொண்டனர். இந்த நிலத்தில் 10 பலா கன்றுகள், 10 மாங் கன்றுகள், 25-க்கும் மேற்பட்ட தென்னங்கன்றுகள், 25 வேப்பங் கன்றுகள் மற்றும் செடி-கொடிகளை நட்டு வைத்திருக்கிறேன். பகல் நேரங்களில், எங்கள் தொகுதியில் அடைக்கப்பட்டிருந்த 15 சிறைவாசிகளுக்கும் பசுமை நிலப்பரப்பில் உலாவ அனுமதி கிடைக்கும். அப்போதெல்லாம், நான் நட்டு வைத்த கன்றுகளுடனும், செடி-கொடிகளுடனும் பேசிக் கொண்டிருப்பேன். மன உளைச்சலில் தவித்து நோயாளியாகி விட்ட எனக்கு, இதுதான் மருந்தாக இருந்தது.

அதே நேரத்தில் 400 சிறைவாசிகளுக்கு 1 டாக்டர் இருக்க வேண்டுமென்கிறது விதி. ஆனால், 2000 சிறைவாசிகளுக்கும் 2 டாக்டர்கள்தான் இருக்கின்றனர். இதனால் நோய்களில் அவ திப்படுவது அதிகரிக்கிறது. ஹார்ட் அட்டாக் போன்ற பிரச்சினைகள் வந்தால் உடனடியாக வெளி மருத்துவமனைக்கு சிறைவாசிகளை அழைத்துப் போக வேண்டும். இதற்கான உடனடி வசதிகள் சிறையில் இல்லை. காவல்துறைக்கு தகவல் கொடுத்து, அவர்கள் ஆக்ஷன் எடுப்பதற்குள் சிறையிலேயே நோயாளி இறந்து விடுகிறார். இதுபோன்ற பல்வேறு பிரச்சினைகளை தடுக்க நடவடிக்கை எடுப்பதில்லை. இதுபோன்று நிறைய பிரச்சினைகளை அனுபவப்பூர்வமாக பார்த்திருக்கிறேன். சிறை வாழ்க்கையை பற்றி உணர்வுப்பூர்வமாக அனுபவித்த கலைஞர்தான், சிறைத்துறையை சீர்படுத்த முடியும். அவரை விட்டால் வேறு யாரும் இதனை செய்ய மாட்டார்கள்.

சிறையிலிருந்து விடுதலை பெற்று விட்டீர்கள். த.மு.மு.க.வின் அரசியல் கட்சியான ம.ம.க.வின் தலைவராக நியமிக்கப்படுவீர்கள் என்கிற பேச்சு எதிரொலிக்கிறதே?

நான் சிறைக்கு செல்லும்போது, கொள்கைகளுக்கு மக்களிடம் மரியாதை இருந்தது. ஆனால், இன்றைக்கு கொள்கைகள் பின்னுக்கு தள்ளப்பட்டு வேறு சில அற்ப விஷயங்களுக்கு முக்கியத்துவம் தரப்படுகிற அளவுக்கு மக்களின் மனநிலை மாறிவிட்டது. இந்த சூழலில் தீவிர அரசியலில் ஈடுபட மனது விரும்பவில்லை. 25 ஆண்டுகளுக்கு முன்பு என்னால் துவக்கப்பட்ட த.மு.மு.க., இன்று பொது பிரச்சினைகளில் மனித நேயத்துடன் மிகவும் வலிமையாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. பேராசிரியர் ஜவாஹிருல்லா பொது வாழ்வில் நேர்மையானவராகவும், தூய்மை யானவராகவும் இருக்கிறார். அதனால், அவரது தலைமையை ஏற்று, த.மு.மு.க. மூலம் சமூக பணி செய்யவே விரும்புகிறேன். அதேசமயம், த.மு.மு.க. தலைமை என்ன வேலைத்திட்டம் கொடுத்தாலும் அதை செய்ய வேண்டி யது என் கடமை. அது அரசியலாக இருந்தாலும் கூட.

உங்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்திய காவல்துறை உயரதிகாரிகள் குறித்து?
என் மீது பொய் வழக்குகள் போட்ட உயரதிகாரிகள் ஓய்வு பெற்று விட்டார்கள். அவர்களை சபிக்க நான் விரும்பவில்லை. இன்று நாங்கள் விடுதலையாகி விட்டோம். இதனை அவர்கள் அறிந்திருப்பார்கள். மன சாட்சி இருந்தால் அவர்கள் கடவுளிடம் சத்தமில்லாமல் மன்னிப்பு கேட்கட்டும்.

-சந்திப்பு: இளையசெல்வன்
படங்கள் : ஸ்டாலின்
navas
navas
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 291
Join date : 24/03/2010
Location : dubai and india

http://indianrailwaytimes.blogspot.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» "சும்மா சொல்லக்கூடாதுங்க, புழல் சிறை சொர்க்கம்': சிறை பறவையின் நேரடி அனுபவம்
» கருணாநிதி பற்றி -மனம் திறக்கும் எஸ்.எஸ்.ஆர்.
» விளையாடக் கூட ஆளில்லாமல் தவித்த பிரபாகரன் மகன்.. மனம் திறக்கும் பாடிகார்ட்
» அபோத்பாத் தாக்குதல் தொடங்கிய தருணம், என் வாழ்நாளில் மிக நீண்ட 40 நிமிடம்!: மனம் திறக்கும் ஒபாமா
» “இந்த தமிழ் மண்ணுலதான் என்ட உயிர் போகணும்”!- முதல் முறையாக மனம் திறக்கும் முருகனின் தாயார் !

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum