TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:28 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:25 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Mar 23, 2024 3:17 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Mar 18, 2024 4:17 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


கே இனியவனின் பல்வகை கவிதைகள்

Page 1 of 2 1, 2  Next

Go down

கே இனியவனின் பல்வகை கவிதைகள்  Empty கே இனியவனின் பல்வகை கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Fri Jul 24, 2015 9:14 am

நீ
சிரித்த சின்ன சிரிப்பு ...
என் சிந்தைவரை ...
நிலைத்துவிட்டது ....!!!

எத்தனை துன்பம் வந்தும் ...
அத்தனைக்கும் மருந்து ....
உன் கன்னகுழி சிரிப்புதான் ...
உன்னை நினைக்காத இதயம் ....
எனக்கு தேவையே இல்லை ...!!!
+
கே இனியவனின்
பல்வகை கவிதைகள்
காதல் கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 3193
Join date : 14/04/2014
Location : இலங்கை -யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவனின் பல்வகை கவிதைகள்  Empty Re: கே இனியவனின் பல்வகை கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Fri Jul 24, 2015 9:33 am

நட்பு , நண்பன் ....
ஒன்று இல்லாவிட்டால் ..
மயான உலகில் ....
வந்திருப்பேன் ....!!!

எந்த துன்பம் வந்தாலும் ....
அருகில் இருந்து ஆறுதல் .....
எந்த இன்பம் வந்தாலும் ....
வஞ்சகம் இல்லாத உறவு ....
இன்பத்திலும் ....
துன்பத்திலும்
நட்பு ஒரு தராசு ....!!!

+
கே இனியவனின்
பல்வகை கவிதைகள்
நட்பு கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 3193
Join date : 14/04/2014
Location : இலங்கை -யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவனின் பல்வகை கவிதைகள்  Empty Re: கே இனியவனின் பல்வகை கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Fri Jul 24, 2015 9:39 am

வாழ்கை தொடக்கம்
வாழ்கை முடிவு
பூ மாலை

+
கே இனியவனின்
பல்வகை கவிதைகள்
ஹைக்கூ
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 3193
Join date : 14/04/2014
Location : இலங்கை -யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவனின் பல்வகை கவிதைகள்  Empty Re: கே இனியவனின் பல்வகை கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Fri Jul 24, 2015 9:51 am

உன்னோடு ....
எடுத்த செல்ஃ யும்
நீ பேசிய வார்த்தையின் ....
கைபேசி பதிவும் ....
உன் ப்ரோஃ பைல் படமும் ...
நாம் பிரிந்திருந்தாலும் .....
நினைவுகளை உயிர்கிறது ...!!!

+
கே இனியவனின்
பல்வகை கவிதைகள்
கைபேசி கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 3193
Join date : 14/04/2014
Location : இலங்கை -யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவனின் பல்வகை கவிதைகள்  Empty Re: கே இனியவனின் பல்வகை கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Fri Jul 24, 2015 10:06 am

காதலுக்கு
தெரியவில்லை எல்லை ...
அதிகம் நேசித்துவிட்டேன் ....
விஷத்தை பருகிய ...
அவஸ்தை படுகிறேன் ....!!!

நீ
என்னை விலக்கும்
போதெலாம் -தனிமையின்
கொடுமையை உணர்கிறேன் ....!!!

+
கே இனியவனின்
பல்வகை கவிதைகள்
காதல்தோல்வி கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 3193
Join date : 14/04/2014
Location : இலங்கை -யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவனின் பல்வகை கவிதைகள்  Empty Re: கே இனியவனின் பல்வகை கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Fri Jul 24, 2015 10:17 am

நீண்டுகொண்டே போகிறது ...
தொலைகாட்சி தொடர்கள் ....
சுருங்கிக்கொண்டே போகிறது ...
உறவுகளின் தொடர்பு ....!!!

வந்த உறவை வரவேற்க .....
நேரமற்று... விருப்பமற்று ....
படலையுடன் திருப்பியனுப்பும்....
தொ(ல் )லைக்காட்சி ஆதிக்கம் ....!!!

+
கே இனியவனின்
பல்வகை கவிதைகள்
வாழ்கை கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 3193
Join date : 14/04/2014
Location : இலங்கை -யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவனின் பல்வகை கவிதைகள்  Empty Re: கே இனியவனின் பல்வகை கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon Jul 27, 2015 8:25 am

தமிழ்மொழி இனிமை மொழி .....
உலகின் பழமொழி தோற்றதுக்கு ....
உயிர் கொடுத்த மூலமொழி .....
" ழ் " என்ற சிறப்பு உச்சரிப்பை .....
உன்னதமாய் கொண்ட மொழி ....!!!

என் தமிழ் மொழி ....
தேன் சுரக்கும் இனியமொழி ....
உச்சரிக்ககூடிய் எளிய மொழி ,,,,,
மொழிகளில் பழமை மொழி .....
மொழிகளில் சிறப்பு மொழி .....
உலகத்திலே தனித்துவ மொழி ....!!!

தமிழன் என்றால் ஒழுக்கமே ....
தமிழன் என்றால் பண்பாடே .....
தமிழன் என்றால் கற்பே ......
தமிழன் என்றால் வீரமே ....
கற்று கொடுப்பது என்றும் ....
எங்கள் தமிழ் மொழியே .....!!!

+
கே இனியவனின்
பல்வகை கவிதைகள்
தமிழ் மொழிகவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 3193
Join date : 14/04/2014
Location : இலங்கை -யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவனின் பல்வகை கவிதைகள்  Empty Re: கே இனியவனின் பல்வகை கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon Jul 27, 2015 9:06 am

காற்றோட்டம் பெற .....
மரங்களுக்கிடையில் ....
நடந்துசென்றேன் .....
மரங்கள் என்னோடு ....
பேசத்தொடங்கின .....!!!


வேப்பமரம் ....!
ஏய் இனியவரே .....
எனக்கு கீழ் ஒரு அம்மன் ....
உருவத்தை வைத்துவிட்டு ....
செல் என்றது - திகைத்தேன் ....
நான் என்ன ஞானியா ...?
மந்திர வாதியா ....?
சிலையை உடன் வரவழைக்க ....?


அரசமரம் .....!
ஏய் இனியவரே ....
எனக்கு கீழ் ஒரு பிள்ளையார் ....
சிலையொன்றை வைத்துவிட்டு ...
செல் என்றது - புன்னகைத்துவிட்டு ....
மேலும் சென்றேன் .....!!!


ஆலமரம் .....!
ஏய் இனியவரே ....
எனக்கு கீழ் ஒரு பைரவர் ...
சூலத்தை வைத்துவிட்டு ...
செல் என்றது - ஒரு பெரு மூச்சை ...
ஆழமாக எடுத்துவிட்டு சென்றேன் ....


அடுத்த மரம் என்னிடம் .....
எதையும் கேட்கவில்லை .....
வியப்படைந்தேன் - ஏய் மரமே ....
உனக்கு கடவுள் நம்பிக்கை ....
இல்லையா ...? ஏன் எதையும் ....
கேட்கவில்லை என்று நான் ...
வினாவினேன் .....!!!


போங்க இனியவரே ....
அவைகளெல்லாம் ஞானத்தால் ....
சிலைகளை கேட்கவில்லை ....
தம்மை விட்டிவிடகூடாது ...
என்ற பயத்தால் கேட்கிறார்கள் ....
அப்படியென்றாலும் தம்மை ....
வெட்டும் அளவு குறையுமே ....
அற்ப ஆசை தான் இனியவரே .....!!!


அப்போ உன் நிலை ....?
என்னை விலைபேசி விட்டார்கள் ....
இன்று நான் இறக்கபோகிறேன் ....
எதையும் நான் கேட்டு பயனில்லை .....
முடிந்தால் இனியவரே ....
அவர்களை காப்பாற்றுங்கள் ....
அவர்கள் விரும்பியதை செய்யுங்கள் ...!!!


இப்போதுதான் புரிந்தது .....
மூத்தாதையர் மூடநம்பிக்கையால் ....
சிலைகளை வைக்கவில்லை ....
தூய காற்று தரும் மரங்களை ....
பாதுகாக்கவே சிலைகளை ...
வைத்தார்கள் - அன்றைய கருவி ....
அன்றைய விழிப்புணர்வு இவைகளே ....!


இன்றைய நவீன உலகில் வாழும் ....
மேதாவிகள் இதனை மூடநம்பிக்கை ....
அறிவிலிகள் என்கிறார்கள் ....!!!

+
கே இனியவனின்
பல்வகை கவிதைகள்
இயற்கை கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 3193
Join date : 14/04/2014
Location : இலங்கை -யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவனின் பல்வகை கவிதைகள்  Empty Re: கே இனியவனின் பல்வகை கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon Jul 27, 2015 9:25 am

முயற்சிக்க கூடாததை ...
முயற்சிக்காதே ....
முயற்சிக்க கூடியதை ....
முயற்சிக்காமல் இருக்காதே ....!!!

முயற்சி
தெருவில் இருப்பவனையும் ....
திருவினையாக்கும்
முயற்சி இல்லாதவன் ...
முழுவதையும் இழப்பான் ....!!!

+
கே இனியவனின்
பல்வகை கவிதைகள்
முயற்சி கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 3193
Join date : 14/04/2014
Location : இலங்கை -யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவனின் பல்வகை கவிதைகள்  Empty Re: கே இனியவனின் பல்வகை கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon Jul 27, 2015 9:46 am

ஒரு உடலில் இரண்டு ....
இதயம் - என்ன ஆச்சிரியமா ....?
ஒவ்வொரு தாயும் ....
கருவுற்றிருக்கும் போது ....
இரண்டு இதயம் தானே ....!!!

வாழ்கை ஒரு சுமை ....
சுமந்து காட்டியவர் -நம்
அன்னை .....!!!
வாழ்கையை சுமையாய் ....
நினைக்காதே -வாழ்ந்து
காட்டியவர் - அன்னை ....!!!
+
கே இனியவனின்
பல்வகை கவிதைகள்
அம்மா கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 3193
Join date : 14/04/2014
Location : இலங்கை -யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவனின் பல்வகை கவிதைகள்  Empty Re: கே இனியவனின் பல்வகை கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon Jul 27, 2015 10:00 am

நாம் ஒவ்வொருவரும் ...
பொய்யர்கள் தான் ...
நம் நிழல் காட்டுகிறது ....!!!
+
கே இனியவனின்
பல்வகை கவிதைகள்
குறுங்கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 3193
Join date : 14/04/2014
Location : இலங்கை -யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவனின் பல்வகை கவிதைகள்  Empty Re: கே இனியவனின் பல்வகை கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon Jul 27, 2015 8:21 pm

ஒருசொல்லை ....
தினமும் உச்சரித்துகொள்.....
ஒவ்வொரு மணியும் உச்சரித்துகொள்....
ஒவ்வொரு நிமிடமும் உச்சரித்துகொள்....
ஒவ்வொரு நொடியும் உச்சரித்துகொள்....
அதுவே உனது மூலமந்திரம் ....!
மந்திரமென்று எதுவும் இல்லை ....!!!

ஒன்றில்
அன்புவை ......
காதல் செய் .....
தினமும் அதனை நேசி .....
ஒவ்வொரு மணியும் நேசி
ஒவ்வொரு நிமிடமும் நேசி ....
ஒவ்வொரு நொடியும் நேசி ....
அதுவே உனது இறைவன்.....!!!

+
கே இனியவனின்
பல்வகை கவிதைகள்
ஆன்மீக கவிதை

கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 3193
Join date : 14/04/2014
Location : இலங்கை -யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவனின் பல்வகை கவிதைகள்  Empty Re: கே இனியவனின் பல்வகை கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed Jul 29, 2015 7:02 am

உன் விழியில் இருக்க அனுமதி கொடு ...
இல்லையேல் விழிமடலில் அனுமதி கொடு ..
நீ கண் சிமிட்டும்போதாவது இணைவோம் ...!!!

+
கே இனியவனின்
பல்வகை கவிதைகள்
மூன்றுவரி கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 3193
Join date : 14/04/2014
Location : இலங்கை -யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவனின் பல்வகை கவிதைகள்  Empty Re: கே இனியவனின் பல்வகை கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed Jul 29, 2015 7:08 am

சுவருக்குள் சண்டை
பரகசியமாகிறது
தொலைகாட்சி நிகழ்சி

$$$

குழந்தையால் முடியாது
தாத்தாவால் முடியாது
புஸ்பம்

$$$

உயிரில்லை
பேசிகொண்டிருக்கும்
தொலைக்காட்சி

$$$

பலதிருமணம்
சட்டம் தடுக்காது
திரைப்படம்

$$$

கடவுளே பாதுகாத்திடு
கோயிலில் வேண்டுதல்
வாசலில் புதுச்செருப்பு

$$$

கே இனியவனின்
பல்வகை கவிதைகள்
சென்ரியூக்கள்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 3193
Join date : 14/04/2014
Location : இலங்கை -யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவனின் பல்வகை கவிதைகள்  Empty Re: கே இனியவனின் பல்வகை கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon Aug 03, 2015 4:37 pm

காதலுக்காக
கையை கிழிப்பது ....
சூடு வைப்பது
காதலை மதிக்காதவர்கள்
செய்யும் முட்டாள் தனம் ...!!!

காதல்
ஆத்மாவின் வெளிப்பாடு ....
அது உடலை விரும்பாது ...
உடலை வருத்தாது ....
காதலை உணர்வால் உணர்ந்தால்
காதலோடு வாழலாம் ...!!!
+
அறிவுரை காதல் கவிதைகள்
கே இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 3193
Join date : 14/04/2014
Location : இலங்கை -யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவனின் பல்வகை கவிதைகள்  Empty Re: கே இனியவனின் பல்வகை கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue Aug 04, 2015 8:54 am

என்னவளே ....
உனக்கு கவிதை எழுதி எழுதி ....
கவிதை அகராதியாகிவிட்டாய் ....
ஒருவரி எழுத தடம் புரண்ட நான் ....
கவிஞனாகிவிட்டேன் ....
காதலித்துப்பார் கவிதைவரும் ...
உண்மைதான் உயரே ....!!!

+
கே இனியவனின்
பல்வகை கவிதைகள்
காதல் கவிதை 02
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 3193
Join date : 14/04/2014
Location : இலங்கை -யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவனின் பல்வகை கவிதைகள்  Empty Re: கே இனியவனின் பல்வகை கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue Aug 04, 2015 2:08 pm

நட்பு ...
நட்சத்திரம்போல் ....
இரவில் பிரகாசிக்கும் ....
பகலில் மறைந்திருக்கும் ....
நட்பும் அவ்வாறே .....!!!

இன்பத்தை விட ...
துன்பகாலத்தில் ....
எமக்கு ஓடிவந்து ...
உதவும் - இரவு
நட்சத்திரம்போல் ....
நட்பு ஜொலிக்கும் ....!!!

+
கே இனியவனின்
பல்வகை கவிதைகள்
நட்பு கவிதை 02
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 3193
Join date : 14/04/2014
Location : இலங்கை -யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவனின் பல்வகை கவிதைகள்  Empty Re: கே இனியவனின் பல்வகை கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue Aug 04, 2015 2:17 pm

தாயே உலகம்
தாயே உணவு
குழந்தை பருவம்

@@@

தாயே உலகம்
கல்வியே உயர்வு
பள்ளி பருவம்

@@@

தாயே கடவுள்
உழைப்பே உலகம்
இளமைப்பருவம்

+
கே இனியவனின்
பல்வகை கவிதைகள்
ஹைக்கூ கவிதை 03

கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 3193
Join date : 14/04/2014
Location : இலங்கை -யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவனின் பல்வகை கவிதைகள்  Empty Re: கே இனியவனின் பல்வகை கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue Aug 04, 2015 2:24 pm

உன் கைபிடித்து ....
காதல் செய்தததை ....
கைபேசி செய்கிறது ....!!!

உன்னையும்
விட முடியவில்லை ...
கைபேசியையும் ....
விடமுடியவில்லை ....!!!

+
கே இனியவனின்
பல்வகை கவிதைகள்
கைபேசி கவிதை 02
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 3193
Join date : 14/04/2014
Location : இலங்கை -யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவனின் பல்வகை கவிதைகள்  Empty Re: கே இனியவனின் பல்வகை கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue Aug 04, 2015 2:36 pm

தண்ணீரால் என் முகம்
ஈரமாகியத்தை காட்டிலும் ....
கண்ணீரால் ஈரமாகியதே ....
அதிகம் .....!!!

என்
சுவாசம் உன் நிவைவுகள் .....
வருவதும் போவதுமாய் ....
இருகிறதே ....!!!

+
கே இனியவனின்
பல்வகை கவிதைகள்
காதல் தோல்வி கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 3193
Join date : 14/04/2014
Location : இலங்கை -யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவனின் பல்வகை கவிதைகள்  Empty Re: கே இனியவனின் பல்வகை கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue Aug 04, 2015 2:46 pm

பிறக்கும்போதே வாழ்கையை ...
கற்று பிறப்பவர் யாருமில்லை ...
இறக்கும் போது வாழ்க்கையை ...
கற்காமல் இறப்பதில்லை ....!!!

அனுபவங்களே
வாழ்கையின் சிறந்த ஆசான் ....
தோல்விகள் அறிவை கூட்டும் ....
வெற்றிகள் அறிவை சேமிக்கும் ...!!!

+
கே இனியவனின்
பல்வகை கவிதைகள்
வாழ்க்கை கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 3193
Join date : 14/04/2014
Location : இலங்கை -யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவனின் பல்வகை கவிதைகள்  Empty Re: கே இனியவனின் பல்வகை கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue Aug 04, 2015 3:08 pm

" அ " அன்புக்கு அம்மா
"ஆ " ஆசீவாதத்துக்கு ஆண்டவன்
"இ " இரண்டும் கிடைத்தால் இன்பம் ...
"ஈ " ஈகை செய்தால் வள்ளல் ...
"உ " உலகம் உன் கையில் ....
"ஊ " ஊணுண்னும் போது பகிர்ந்து உண் ....
"எ " எழுத்தை கற்றுதந்தவர் இறைவன் ....
"ஏ " ஏர் பிடித்தவரே ஏற்றமானவர்கள் ....
"ஐ " ஐம்பூதங்களை ரசிப்பவர் ஞானி ....
"ஒ " ஒருவருடனேயே உறவை பகிர்ந்துகொள் ....
"ஓ " பிரபஞ்ச்சத்தின் உன்னத ஓசை .....

+
கே இனியவனின்
பல்வகை கவிதைகள்
தமிழ் மொழி கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 3193
Join date : 14/04/2014
Location : இலங்கை -யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவனின் பல்வகை கவிதைகள்  Empty Re: கே இனியவனின் பல்வகை கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue Aug 04, 2015 3:23 pm

மனிதனும்
மண் பானையும் ...
மண்ணில் தோன்றி ...
மண்ணில் முடிகிறது ....!!!

மனித மனசும் ....
மண் பானையும் ...
இருக்கும் வரை அழகு ...
உடைந்தால் இணையாது !!!

+
கே இனியவனின்
பல்வகை கவிதைகள்
குறுங்கவிதை

கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 3193
Join date : 14/04/2014
Location : இலங்கை -யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவனின் பல்வகை கவிதைகள்  Empty Re: கே இனியவனின் பல்வகை கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue Aug 04, 2015 3:31 pm

இயற்கையின் அற்புதத்தை ....
பார்த்தாயா ....?
மனிதனுக்கு ஓட்சிசனை தந்து ....
வாழவைக்கிறது ....!
மனிதன் வெளியேற்றும் ....
காபனீர் ஓட்சைட்டில் ....
தாவரத்தை வாழவைக்கிறது ....!

+
கே இனியவனின்
பல்வகை கவிதைகள்
இயற்கை கவிதை

கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 3193
Join date : 14/04/2014
Location : இலங்கை -யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவனின் பல்வகை கவிதைகள்  Empty Re: கே இனியவனின் பல்வகை கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue Aug 04, 2015 3:46 pm

முயற்சியாளன்...
ஆபத்தை சந்திக்கிறான் ....
வெற்றி பெறும்போது ...
மறு முதலீடு செய்கிறான் ....
தோல்வியடையும்போது ....
புதுமையை தேடுகிறான் ....!!!
நான் ஒரு முயற்சியாளன் ...!!!

+
கே இனியவனின்
பல்வகை கவிதைகள்
முயற்சி கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 3193
Join date : 14/04/2014
Location : இலங்கை -யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவனின் பல்வகை கவிதைகள்  Empty Re: கே இனியவனின் பல்வகை கவிதைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum