TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:28 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:25 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Mar 23, 2024 3:17 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Mar 18, 2024 4:17 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்

Go down

தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள் Empty தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue Jul 21, 2015 8:04 am

இ னிய
இ னிமையான
இ ன்பமான
இ ல்லத்தில்
இ றையருள்மிக்க
இ ல்லறவாழ்க்கை
இ ன்றும் என்றும்
இ றையருளால்
இ டையூறுகள் நீங்கி
இ ன்பமே
இ டைவிடாமல் கிடைக்க
இ ந்தநாள் மட்டுமல்ல
இ தயத்துடிப்பு உள்ளவரை
இ ன்பலோகத்தில் வாழ
இ ந்த
இ னியவனில்
இ தயம் கனிந்த
இ னிய வணக்கம்
இ யன்றவரை அயலவரையும்
இ ன்பமாய் வைத்திருங்கள்
இ றைவன் விரும்புவதும்
இ வ்வுலகில் எல்லோரும்
இ ன்பமாய் வாழவைக்கும்
இயல்புடைய மனிதனை தான் ....!!!


Last edited by கவிப்புயல் இனியவன் on Wed Nov 11, 2015 7:13 am; edited 1 time in total
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 3193
Join date : 14/04/2014
Location : இலங்கை -யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள் Empty Re: தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed Jul 22, 2015 7:50 am

அ ன்பு உள்ளங்களே.....
அ ன்பு காலை வணக்கம் .....
அ திகாலை எழுத்தவன் ......
அ திசக்தி ஆதவ்னையே.....
அ ருகில் வரவைப்பான்......!!!

அ ன்பினால் ...
அ கிலத்தையே வெல்லலாம் ....
அ ங்கிகள் தொடக்கம் ...
அ ருகில் உள்ள உயிர்வரை ...
அ ன்பு செலுத்துங்கள் .....!!!

அ ற்புதங்கள் என்பது ....
அ திசயம் செய்வதல்ல ...
அ ன்புக்கு கட்டுபட்டு ...
அ ண்ட சராசரத்தோடு ....
அ டக்கமாவதே .........!!!

அ ன்று சொன்னதை செய்ததை ....
அ ன்றே மறப்பவனே ....
அ தி உயர் மனிதன் ....
அ தையே நினைத்துகொண்டிருந்தால் ...
அ ன்றைய இன்பத்தை இழப்பாய் ....!!!

அ ந்தி சாயும் நேரம் ....
அ ன்றைய நிகழ்சிகளை ...
அ சைபோட்டுபாருங்கள் ....
அ ருவருப்பான செயல் எது ...?
அ ரவணைப்பு செயல் எதுவென .....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 3193
Join date : 14/04/2014
Location : இலங்கை -யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள் Empty Re: தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Jul 23, 2015 9:42 am

ஆதவன் துயில் எழமுன் ....
ஆராவாரத்துடன் எழுந்த .....
ஆருயிர் நண்பர்களே ....
ஆண்டவன் கிருபையால் .....
ஆசீர் வதிக்கப்படுகிறோம்.....!!!

ஆனந்தம் பொங்கிட ....
ஆத்மா திருப்தியுடன் ....
ஆரம்பிப்போம் பணிகளை ....
ஆயிரம் பணிவந்தாலும் ....
ஆர்வத்துடன் பணிசெய்வோம் ....!!!

ஆரம்பிக்கும் வாழ்க்கை ...
ஆலயத்துக்கு சமனாகட்டும்....
ஆண்டவன் வீட்டில் குடிகொள்ளடும் ....
ஆனந்தத்தால் பொங்கி வழியட்டும் ...
ஆருயிர் உறவுகளே வாழ்க வளமுடன் ......!!!

ஆத்திரமே பகையின் சூத்திரவாதி ....
ஆத்திரத்தை வென்றவன் ...
ஆண்டவனை வெல்கிறான் ....
ஆண்டாண்டுகாலம் நட்புடன் ....
ஆட்சி செய்கிறான் உலகை .....!!!

ஆதியும் அந்தமும் இல்லாத ....
ஆண்டவனை தினமும் தொழு ....
ஆயிரமளவு அதிஷ்டம் குவியும் ....
ஆருயிர் குடும்பத்துடன் ....
ஆனந்தமாய் வாழ்ந்திடுவோம் ....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 3193
Join date : 14/04/2014
Location : இலங்கை -யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள் Empty Re: தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Fri Jul 24, 2015 8:41 am

ஈர விழிகளை திறந்து ....
ஈசன் நினைவில் இருக்கும்
ஈரமான இனிய உள்ளங்களே ...
ஈரேழுலக இன்பம் பெற ...
ஈசன் அடிபணிந்து வாழ்த்துகிறேன் ....!!!

ஈகை கொண்ட இதயம் ...
ஈசன் குடியிருக்கும் இதயம் ....
ஈகையுடன் வாழ்பவர்கள் ....
ஈரேழு தலைமுறை வாழ்வர் ....
ஈகை தலைமுறை காக்கும் ....!!!

ஈட்டி முனைபோல் பேசாதே ....
ஈவிரக்கமின்றி துன்பம் செய்யாதே ....
ஈகையை விளம்பரமாக்காதே ...
ஈன செயல் எதையும் செய்யாதே ....
ஈன்ற தாய்க்கு இழுக்கி வைக்காதே ...!!!

ஈரமான பார்வையே இரக்கபார்வை....
ஈரமான செயலே உயர் சேவை ....
ஈரமான ஈரமான என்றால்....?
ஈசனை இதயத்தில் நினைத்து ....
ஈசனைபோல் வாழும் வாழ்கை ...!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 3193
Join date : 14/04/2014
Location : இலங்கை -யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள் Empty Re: தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon Jul 27, 2015 7:44 am

உள்ளம் தூய்மையாக இருப்பின்...
உள்ளிருக்கும் மனது இறைவன்......!
உள்ளதூய்மை என்பது ....
உயிரினங்கள் அனைத்திலும் ....
உள்அன்பை செலுத்துவதாகும் ....!!!

உறவுகளே எனது இனிமையான ....
உள்ளங்கனிந்த வாழ்த்துக்கள் ....
உழைப்பை உயிராய் மதிப்போம் ....
உற்றார் உறவினரை மகிழ்விப்போம் .....
உற்சாகமாய் வாழ்ந்திடுவோம் .....!!!

உள்ளொன்று வைத்து புறம்பேசாதே.....
உள்ளவனுக்கு பகட்டுக்கு உதவிசெய்யாதே .....
உண்டு களித்தே உடலை நோயாக்காதே.....
உண்மை அன்பை உதறி விடாதே .....
உள்ளத்தை ஊனமாக்கிடாதே.....!!!

உள்ளதை கொண்டு இன்பமாய் வாழ்வோம் ....
உலகிற்கு ஏதேனும் செய்துவிட்டு இறப்போம் .....
உள்ளதில் ஓரளவேணும் ஈகை செய்வோம் ....
உள்வரவு எதிர்பார்க்காமல் உதவி செய்வோம்
உயிர்பிரிந்தபின்னும் உலகோடு வாழ்வோம் ......!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 3193
Join date : 14/04/2014
Location : இலங்கை -யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள் Empty Re: தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue Aug 04, 2015 8:19 am

ஊரோடு ஒற்றுமையாய் வாழ்...
ஊன் இல்லாதோருக்கு கொடுத்துதவு.....
ஊனம் என்பது உடலில் இல்லை .....
ஊத்தை கொண்ட உள்ளம் இருப்பதே ....
ஊர்போற்ற வாழ்ந்து காட்டு ....!!!

ஊரூராய் நல்லவை செயப்பழக்கு.....
ஊட்டி வளர்த்த உறவுகளை மறவாதே .....
ஊதாரியாய் செலவு செய்யாதே .....
ஊர்வனவற்றை சித்திரைவதை செய்யாதே ....
ஊகத்தில் பேசிப்பழகாதே ......!!!

ஊக்கத்துக்கு எப்போது ஊக்கம் கொடு ....
ஊதியத்தை இயன்றவரை பெற்றுவிடு ....
ஊழியம் செய்வதை உயர்வாய் நினை ....
ஊழி அழியும்வரை உயர்வாய் வாழ்வாய் ....
ஊர்ச்சிதம் ஆகும் உன் பிறப்பின் உன்னதம் ....!!!

ஊர் கண் விழிக்கமுன் துயில் எழு ....
ஊற்றுபோல் பெருக்கிவிடு அறிவை .....
ஊர் உலகம் தேடிவரும் உன்னடியில் ....
ஊன்றிவிடு உன் உழைப்பை உலகத்துக்கு ....
ஊன்று கோளாய் இரு இளையோருக்கு ....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 3193
Join date : 14/04/2014
Location : இலங்கை -யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள் Empty Re: தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed Aug 05, 2015 8:26 am

எழுந்திரு மனிதா ....
எழுச்சி மிகு வெற்றி காத்திருக்கிறது ....
என்றும் இனிமையாய் வாழ்வதற்கு .....
எழுந்திரு அதிகாலை - விரைந்திடு ....
எட்டு திசையும் பரப்பிடு பணியை ....!!!

எவன் பிறருக்காய் வாழ்கிறானோ .....
எவன் பிறர் துன்பம் துடைகிறானோ.....
எவனல்ல அவன் - இறைவன் .....!
எல்லோர் இதயத்திலும் இருக்கும்
எல்லையற்றவன் அவன் ....!!!

எங்கே செல்கிறோம் சரியாக தீர்மானி ....
எப்போது செல்கிறோம் உறுதியாக முடிவெடு ...
எதற்கு செல்கிறோம் நிதானமாக இருந்திடு ....
எந்த தடைவரினும் அனைத்தையும் உடைத்தெறி .....
எல்லாம் சிறப்பாக நிச்சயம் அமைந்திடும் ....!!!

எதிரியென்று ஒருவனை நினைத்துவிடாதே ....
எடுப்பார் கைபிள்ளைபோல் வாழ்ந்துவிடாதே .....
எல்லாம் எனக்கே என்று ஆசைபடாதே .....
எடுத்த காரியத்தை இடையில் நிறுத்தி விடாதே .....
எல்லாம் வல்ல இறைவன் இருப்பதை மறந்துவிடாதே .......!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 3193
Join date : 14/04/2014
Location : இலங்கை -யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள் Empty Re: தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Aug 06, 2015 7:54 am

ஏன் என்று கேள்வி கேள் ....
ஏளனமாக இருந்துவிடாதே ....
ஏராளமான பிரச்சனைக்கு காரணம் ....
ஏன் நமக்கு இந்த வில்லங்கம் என்று ....
ஏளனமாக இருந்தமையே .....!!!

ஏகாதிபத்தியம் பல தோன்றியதால் ....
ஏழைகளின் வாழ்க்கை இறங்கிசெல்ல....
ஏற்றமானவர் வாழ்கை ஏறிசெல்கிறது ....
ஏற்றத்தாழ்வை தோற்றுவித்தது ...
ஏகாதிபத்திய பொருளாதாரம் ......!!!

ஏணிபோல் படிப்படியாக வாழ்கையில் ....
ஏறிசென்று வாழ்க்கை உச்சத்தையடை.....
ஏகலைவன் போல் குருபக்தி கொண்டிரு ....
ஏகன் அடியே போற்றியேன்று சரணடை ...
ஏழேழு ஜென்மத்துக்கு இன்பமடைவாய் .....!!!

ஏர் பூட்டிய விவசாயியே ஏகன் ....
ஏடு தொடக்கிய ஆசானும் ஏகன் .....
ஏமாற்றுபவனை காட்டிலும் ....
ஏமாறுபவனே புத்தி அற்றவன் .....
ஏமாறாதே அத்துடன் ஏமாற்றாதே .....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 3193
Join date : 14/04/2014
Location : இலங்கை -யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள் Empty Re: தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Fri Aug 14, 2015 7:21 am

ஐம் பொறியை அடக்கி ....
ஐயங்களை தெளிவுபடுத்தி ....
ஐம்பூதத்தை வசப்படுத்தி .....
ஐந்து வகை நிலத்தை ஆழும் ...
ஐயன்- நீ - விழிப்போடு வாழ் மனிதா ....!!!

ஐயங்களை தூக்கி எறிந்து விடு ....
ஐக்கியத்தோடு வாழ்ந்து பழகு ....
ஐயக்காட்சிக்கு இடமளிக்காதே .....
ஐயமின்றிஇனிமையாய் பேசிப்பழகு .....
ஐயங்கரன் என்றும் துணையிருப்பான் ......!!!

ஐசுவரியத்தை நேர்மையாய் உழை ....
ஐக்கிய உணர்வோடு எப்போது வாழ் .....
ஐயிரண்டு கைவிரலால் கடினமாய் போராடு ....
ஐயிரண்டு கால்விரலால் இலக்கில் பயணம் செய் .....
ஐம்முகன் ஆசி என்று உனக்கு இருக்கும் ....!!!

ஐயா என்று பணிபோடு முதியோரை அழை ....
ஐயர் (தேவர் ) ஆசீர்வாதம் உனக்கு வரும் ....!
ஐம்புல அறிவோடு அகிலத்தை நேசி .....
ஐவாய் (சிங்கம் ) போல் அரசனாய் வாழ்வாய் ...!
ஐயனே என் அன்பனே என்றும் இன்பமாய் இரு ...!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 3193
Join date : 14/04/2014
Location : இலங்கை -யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள் Empty Re: தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sat Aug 15, 2015 7:53 am

ஒளி கொண்ட இதயங்களே .....
ஒன்றுபட்டு வாழ்வோம் வாருங்கள் ....
ஒற்றுமைதான் உலகத்தின் தேவை ....
ஒன்றே குலம் ஒருவனே தேவன் ......!!!

ஒடுக்கு முறைகள் நிலைப்பதில்லை .....
ஒன்று கூடியே துடைத்தெறிந்தோம் .....
ஒற்றர் கூட்டம் ஒற்றுமையை கெடுக்கும் ....
ஒரு அணியில் வாழ்வோம் வாரீர் .....!!!

ஒழுக்கமாக வாழ்ந்தால் உலகை .....
ஒரு குடையின் கீழ் கொண்டு வரலாம் .....
ஒற்றுமையின்றியும் ஒழுகமின்றியும் வாழ்ந்தால் ....
ஒற்றர்களின் நோக்கமே நிறைவேறும் .....!!!

ஒளிவட்டம் போல் இதயத்தை மாற்று .....
ஒளிவு மறைவின்றி பேசிப்பழகு .....
ஒளி கொண்ட அறிவை பெருக்கிடு .....
ஒடுக்கு முறைக்கு ஒடுக்கு முறைசெய்....!!!

கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 3193
Join date : 14/04/2014
Location : இலங்கை -யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள் Empty Re: தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sun Aug 16, 2015 8:38 am

ஓகோ என்று வாழ ஆசைப்படாதே .....
ஓர்மம் மட்டும்கொண்டும் வாழ்ந்திடாதே ....
ஓடம்போல் தத்தளிக்கும் முடிவெடுக்காதே .....
ஓடு ஓடு இலக்கு அடையும் வரை ஓடு .....!!!

ஓட்டுக்காக அரசியல் நடத்தாதீர் .....
ஓரங்கட்டி மக்களை ஒத்துக்காதீர் ....
ஓரம்போய் மக்களை விற்காதீர் .....
ஓலமிட்டு மக்களை மயக்காதீர் .....!!!

ஓவியம் போல் மனதை அழகாக்கு....
ஓசையின் சொற்களை இனிமையாக்கு ....
ஓலை போல் விழுந்தாலும் பயன் கொடு .....
ஓய்வெறாலும் அளவோடு பயன்படுத்து .......!!!

ஓர் அறிவு தாவரம் முதல் அன்பு செய் ....
ஓராயிரம் உதவிசெய். பெருமைகொள்ளாதே....
ஓதல் மூலம் உலகை விழிப்படைய செய் ...
ஓரினமே உண்டு அதுவே மனித இனம் ....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 3193
Join date : 14/04/2014
Location : இலங்கை -யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள் Empty Re: தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed Aug 19, 2015 7:46 am

கண்ணில் காந்த சக்தியுடன் ....
கடமையை மூச்சாய் கொண்டு....
கதிரவன் முக மலர்வுடன் ஆசியுடன் ...
கண்ணியத்துடன் பணிகளை தொடர்வோம் ....!!!

கட்டளை செய்துவிட்டு நீ மட்டும் ....
கடப்பாட்டில் இருந்து விலக்கிவிடாதே .....
கண்டதே காட்சி கொண்டதே கோலமாகிவிடதே ....
கண்ணால் கண்டதும் கேட்டதும் பொய் .....!!!

கரும்புபோல் பேச்சில் இனிமையும் .......
கதிரவன் போல் மனதில் ஒளிமையும் .........
கற்பூரம் போல்சிந்தனையில் விரைவும் .......
கல்வியும் உடையவனே மாமனிதன் .......!!!

கம்பீரம் என்பது உடல் அல்ல ,செயல் .....
கண்ணியம் என்பது பேச்சல்ல ,நடத்தை ....
கருணை என்பது உதவியல்ல ,அன்பு ......
கடவுள் இருப்பது வெளியே இல்லை ,உள்ளே ......!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 3193
Join date : 14/04/2014
Location : இலங்கை -யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள் Empty Re: தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed Aug 19, 2015 8:29 am

காற்றை போல் பலமாய் இரு ....
காற்றை போல் மறைமுகமாய் இரு ....
காற்றை அசுத்தபடுத்தாதே .....
காற்று போனால் பேச்சு போகிடும் ....!!!

காடுகளை அழிக்காதீர் ....
காடு மிருகங்களின் வீடு ......
காடுகளை போணுவோம் .....
காடு சமூகத்தில் பொதுச்சொத்து .......!!

காக்கை போல் ஒன்று கூடி வாழ்வோம் ....
காக்கை போல் கற்புடன் வாழ்வோம் ....
காக்கைக்கு கண்மணி ஒன்று பார்வை தெளிவு ......
காக்கை போல் சூழலை பாதுகாப்போம் ........!!!

காதல் என்பது இருபால் கவர்சியல்ல .....
காதல் எல்லாவற்றிலும் அன்பு செலுத்துவது ....
காதல் செய்யுங்கள் இயற்கைமீது ....
காதலோடு காலமெல்லாம் வாழ்ந்திடுவோம் ....!!!
+

இயற்கை மேல் அன்பு செலுத்துவோம்
இயற்கை கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 3193
Join date : 14/04/2014
Location : இலங்கை -யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள் Empty Re: தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed Sep 09, 2015 9:18 am

கிழக்கில் இருந்து ஆதவன் ....
கிழந்தெழும்பும் போதே ....
கிழம்பிவிடு... போராடு ....
கிழக்கின் ஆதவன் நீதான் ....!!!

கிரகதோசத்தை காரணம் காட்டி ....
கிடைக்க பெறும் வாய்பை இழக்காதே ...
கிடைத்த சந்தர்பத்தை பயன்படுத்து .....
கிரகபதி என்றும் நீதான் .....!!!

கிரகித்தல் திறனை வளர்த்துக்கொள் .....
கிராமமாக அறிவை பெற்றுக்கொள் ....
கிலியை முற்றாக அறுத்து எறி ......
கிருபாகரனின் கிருபை கிடைக்கும் ....!!!

கிறுக்கன் என்று பெயர் எடுக்காதே ....
கிரக சித்திரம் நிம்மதியை கெடுக்கும் .....
கிரக பெயர்ச்சி வானில் ஏற்படும் நிகழ்வு ......
கிரகப்பேர்ச்சியை சாட்டி வாழாதே ....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 3193
Join date : 14/04/2014
Location : இலங்கை -யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள் Empty Re: தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Sep 10, 2015 7:40 am

கீரியும் பாம்பும் போல் வாழாதே .....
கீதமும் ஓசையும் போல் வாழ்.....
கீழ்மரம்(அச்சு) போல் எதையும் தாங்கு ....
கீர்த்தியுடனும் ஆயுளுடனும் வாழ்வாய் ....!!!

கீர்த்தனை மனதுக்கு நன்று .....
கீரை கண்ணுக்கு நன்று ....
கீரம்(பால்) ஆரோக்கியத்துக்கு நன்று ....
கீழ் கிழங்கு உணவை தவிர்ப்பது நன்று ...!!!

கீழ்பால் என்று யாரும் இல்லை ....
கீழ்நிலை என்று எவரையும் எண்ணாதே .....
கீறல் இல்லாமல் வாழ்கை வாழ்ந்திடு ......
கீழ்மை(பண்பு) கொண்டு வாழ்ந்திட பழகு ....!!!

கீர்(சொல்) உறுதி வேண்டும் ....
கீளுடையில் சுத்தம் வேண்டும் ....
கீறலிலும் தெளிவுவேண்டும் ....
கீதை நெறி வாழவேண்டும் .....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 3193
Join date : 14/04/2014
Location : இலங்கை -யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள் Empty Re: தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Fri Sep 11, 2015 8:25 am

குப்பையில் போட்டாலும் ....
குண்டுமணி மங்காது .....
குடிசையில் வாழ்ந்தாலும் ....
குடிகள் போற்றும்படி வாழ்.....!!!

குடி குடியை கெடுக்கும் ....
குணம் கெட்டாலும் குடி கெடும் .....
குப்பை கூடினாலும் குடி கெடும் ....
குருவோடு பகைக்கின் குடி கெடும் ....!!!

கும்பிடு பெற்றோரை கும்பிடு .....
குரல் கொடு அநீதிக்கு குரல் கொடு ....
குறிப்பெடு படிப்பில் குறிப்பெடு.....
குறள் வழிவாழ் குறிக்கோளோடு வாழ் ....!!!

குற்றம் செய்யாதே தலை குனியாதே ....
குன்னம் (அவமானம்) படாதே அவதி படாதே ....
குறிக்கோள் ஒன்றில்லாமல் வாழ்ந்து பழகாதே ....
குருவின் துணையிலாமல் வித்தை பழகாதே.....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 3193
Join date : 14/04/2014
Location : இலங்கை -யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள் Empty Re: தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sat Sep 12, 2015 8:32 am

கூடு துறந்து போனால் .....
கூச்சலிட்டு பயனில்லை ....
கூட்டுறவு வாழ்கை முறையில் ....
கூச்சலிடல் தவிர்க்க முடியாது ....!!!

கூடா ஒழுக்கம் வாழ்க்கைக்கு கேடு .....
கூட்டு குடும்பம் வாழ்கைக்கு பலம் .....
கூடி பேசுதல் சச்சரவை கொண்டுவரும் .....
கூடி பேசினால் மனக்குழப்பம் தீரும் .....!!!

கூத்தாடி பிழைப்பது குற்றமில்லை .....
கூத்தாடியே ஊர் சுற்றுவது கேவலம் .....
கூத்து தமிழனின் பாரம்பரியம் .....
கூட்டத்தோடு கூத்தை ஆதரிப்போம் ....!!!

கூக்குரல் கூட்டத்தில் எழுந்தே தீரும் .....
கூனல் முதுமையில் வந்தே தீரும் .....
கூந்தல் என்றால் உதிர்ந்தே தீரும் .....
கூட்டம் என்றால் குழப்பம் இருந்தே தீரும் .....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 3193
Join date : 14/04/2014
Location : இலங்கை -யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள் Empty Re: தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed Nov 11, 2015 7:14 am

10 10
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 3193
Join date : 14/04/2014
Location : இலங்கை -யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள் Empty Re: தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed Nov 11, 2015 8:08 am

கெடுதி கொண்ட உணவுகள் வேண்டாம் ....
கெடுதி கொண்ட உணர்வுகள் வேண்டாம் ....
கெடுதி என தெரிந்த செயல்கள் வேண்டாம் ....
கெடுதி கொண்ட எண்ணங்கள் வேண்டாம் ....
கெடுதிக்கு கெடு வைக்காமல் வாழ்ந்திடுவோம் .....!!!

கெட்ட உணர்வால் கெட்டார் கோவலன் ....
கெட்ட எண்ணத்தால் கெட்டனர் கௌரவர் .....
கெட்ட செய்யலால் கெட்டார் ராவணன் ....
கெட்ட நடத்தையால் கெட்டுப்போகாதே .....
கெட்டவன் என்றபெயர் சடுதியில் நீங்காது ....!!!

கெச்சைக்கு தேர் கொடுத்தான் பாரி ....
கெட்டியாய் வள்ளல் பெயர் பெற்றான் பாரி ....
கெம்பி செய்யும் செயல்களால் கெட்டவர் அதிகம் ......
கெக்கலித்து சிரிக்கவைக்கும் செயல்வேண்டாம் ....
கெடியுடன் கெழி கொண்ட வாழ்க்கை வாழ்வோம் ....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 3193
Join date : 14/04/2014
Location : இலங்கை -யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள் Empty Re: தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue Dec 15, 2015 10:30 am

கேடயம் வாழ்க்கைக்கு ஒழுக்கம் கேடயம் ...
கேவலம் பிறரில் சாந்திருப்பது கேவலம் ....
கேசவன்(இறைவன் ) நினைவில் வாழ்தல் கேடயம் ....
கேள்வன்(கணவன் ) மனைவிக்கு கேடயம் ....

கேட்பார் சொல் கேளாதே
கேட்டவுடன் எதையும் கொடுக்காதே ....
கேள்விக்கு பிழையாய் பதிலளிக்காதே ....
கேவலமானவன் என யாரையும் கருதாதே ....!!!

கேணியில் குளிப்பது மனதுக்கு உறுதி
கேட்டறிதல் அறிவுக்கு உறுதி ....
கேசம் வளர்ப்பது அழகுக்கு உறுதி ....
கேளார் (பகைவர் ) துறத்தல் வாழ்கைக்கு உறுதி ....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 3193
Join date : 14/04/2014
Location : இலங்கை -யாழ்ப்பாணம்

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள் Empty Re: தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum