Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:28 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:25 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Mar 23, 2024 3:17 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Mar 18, 2024 4:17 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
Page 2 of 4
Page 2 of 4 • 1, 2, 3, 4
Re: திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
கவலை படாதே நண்பா ....
கவலை படாதே நண்பா ....
நீ செய்த செயலால் நான் ...
வருந்தவில்லை ....
எனக்கு தீமையாகிவிட்டதே...
என்று கவலைபப்படாதே ...!!!
நீ
அறியாமல் செய்யவில்லை ...
என் மீதுள்ள உரிமையால் ..
செய்த தவறை மன்னிக்கிறேன் ....
இல்லையேல் நம் நட்பில் ...
என்ன பயனுண்டு .....?
+
குறள் 805
+
பழைமை
+
பேதைமை ஒன்றோ பெருங்கிழமை என்றுணர்க
நோதக்க நட்டார் செயின்.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் -25
கவலை படாதே நண்பா ....
நீ செய்த செயலால் நான் ...
வருந்தவில்லை ....
எனக்கு தீமையாகிவிட்டதே...
என்று கவலைபப்படாதே ...!!!
நீ
அறியாமல் செய்யவில்லை ...
என் மீதுள்ள உரிமையால் ..
செய்த தவறை மன்னிக்கிறேன் ....
இல்லையேல் நம் நட்பில் ...
என்ன பயனுண்டு .....?
+
குறள் 805
+
பழைமை
+
பேதைமை ஒன்றோ பெருங்கிழமை என்றுணர்க
நோதக்க நட்டார் செயின்.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் -25
Re: திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
நட்பு பிரியாது தோழா ....!!!
நண்பனே ....
நாம் கொண்ட நட்பு .....
எல்லை தாண்டாத நட்பு ....
எல்லையற்ற நட்பு ....!!!
உன்னால் எனக்கு துன்பம் ...
எதற்காக கலங்குகிறாய் ....?
என் உயிர் பிரிந்தாலும் -நம் ....
நட்பு பிரியாது தோழா ....!!!
+
குறள் 806
+
பழைமை
+
எல்லைக்கண் நின்றார் துறவார் தொலைவிடத்தும்
தொல்லைக்கண் நின்றார் தொடர்பு.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் -26
நண்பனே ....
நாம் கொண்ட நட்பு .....
எல்லை தாண்டாத நட்பு ....
எல்லையற்ற நட்பு ....!!!
உன்னால் எனக்கு துன்பம் ...
எதற்காக கலங்குகிறாய் ....?
என் உயிர் பிரிந்தாலும் -நம் ....
நட்பு பிரியாது தோழா ....!!!
+
குறள் 806
+
பழைமை
+
எல்லைக்கண் நின்றார் துறவார் தொலைவிடத்தும்
தொல்லைக்கண் நின்றார் தொடர்பு.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் -26
Re: திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
கவலை எனக்கேதுமில்லை ....!!!
தெரியும் நண்பா....
நீ செய்வது எனக்கு ....
தீமையில் முடியும் ....
அறிந்திருந்தேன் ....
என்றாலும் கவலை ...
எனக்கேதுமில்லை ....!!!
சிறுவயதிலிருந்து ....
நாம் பேணும் நட்பு ....
தீமைகள் வந்தாலும் ...
பொருத்துகொள்ளும்...
நண்பனே ....!!!
+
குறள் 807
+
பழைமை
+
அழிவந்த செய்யினும் அன்பறார் அன்பின்
வழிவந்த கேண்மை யவர்.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் -27
தெரியும் நண்பா....
நீ செய்வது எனக்கு ....
தீமையில் முடியும் ....
அறிந்திருந்தேன் ....
என்றாலும் கவலை ...
எனக்கேதுமில்லை ....!!!
சிறுவயதிலிருந்து ....
நாம் பேணும் நட்பு ....
தீமைகள் வந்தாலும் ...
பொருத்துகொள்ளும்...
நண்பனே ....!!!
+
குறள் 807
+
பழைமை
+
அழிவந்த செய்யினும் அன்பறார் அன்பின்
வழிவந்த கேண்மை யவர்.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் -27
Re: திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
அச்சமடைகிறேன் நண்பா ...!!!
கூறினார்கள் நண்பா .....
நீ தப்பாக என் உரிமையை ....
பயன்படுத்தி தப்பு செய்கிறாய் ....
அயலவர் கூறினார்கள்....
என்றாலும் நம்பவில்லை ....!!!
உண்மையில் நண்பா ....
நீ தப்புசெய்திருந்தால் ....
இத்தனை நாள் நாம் கொண்ட ....
நட்பு வீணாகிவிடுமே ...
அச்சமடைகிறேன் நண்பா ...!!!
+
குறள் 808
+
பழைமை
+
கேளிழுக்கம் கேளாக் கெழுதகைமை வல்லார்க்கு
நாளிழுக்கம் நட்டார் செயின்.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் -28
கூறினார்கள் நண்பா .....
நீ தப்பாக என் உரிமையை ....
பயன்படுத்தி தப்பு செய்கிறாய் ....
அயலவர் கூறினார்கள்....
என்றாலும் நம்பவில்லை ....!!!
உண்மையில் நண்பா ....
நீ தப்புசெய்திருந்தால் ....
இத்தனை நாள் நாம் கொண்ட ....
நட்பு வீணாகிவிடுமே ...
அச்சமடைகிறேன் நண்பா ...!!!
+
குறள் 808
+
பழைமை
+
கேளிழுக்கம் கேளாக் கெழுதகைமை வல்லார்க்கு
நாளிழுக்கம் நட்டார் செயின்.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் -28
Re: திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
நம் நட்பின் உறவை உலகம் அறியும் ....!!!
உன்
உரிமையை நீயும் ....
என்
உரிமையை நானும் ....
விட்டுகொடுக்காமல் ....
நீண்டகாலம் நட்பு ...
கொள்கிறோம் ......!!!
எமக்கிடையே ...
கெடுதல் வந்தாலும் ....
நாம் பிரியோம் ....
நம் நட்பின் உறவை ....
உலகம் அறியும் ....!!!
+
குறள் 809
+
பழைமை
+
கெடாஅ வழிவந்த கேண்மையார் கேண்மை
விடாஅர் விழையும் உலகு.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் -29
உன்
உரிமையை நீயும் ....
என்
உரிமையை நானும் ....
விட்டுகொடுக்காமல் ....
நீண்டகாலம் நட்பு ...
கொள்கிறோம் ......!!!
எமக்கிடையே ...
கெடுதல் வந்தாலும் ....
நாம் பிரியோம் ....
நம் நட்பின் உறவை ....
உலகம் அறியும் ....!!!
+
குறள் 809
+
பழைமை
+
கெடாஅ வழிவந்த கேண்மையார் கேண்மை
விடாஅர் விழையும் உலகு.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் -29
Re: திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
பகைவன் கூட நட்பை விரும்புவான் ....!!!
நீண்ட கால நட்பு ....
தவறுகள் செய்தாலும் ....
அறிவுடைய நண்பர்கள் ....
பொறுத்துகொள்வர் ....!!!
அறிவுள்ள நட்பை ....
பிரியாதோரை.....
அவர்களின் பகைவன்கூட .....
மனதார விரும்புவர் ....!!!
+
குறள் 810
+
பழைமை
+
விழையார் விழையப் படுப பழையார்கண்
பண்பின் தலைப்பிரியா தார்.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் -30
நீண்ட கால நட்பு ....
தவறுகள் செய்தாலும் ....
அறிவுடைய நண்பர்கள் ....
பொறுத்துகொள்வர் ....!!!
அறிவுள்ள நட்பை ....
பிரியாதோரை.....
அவர்களின் பகைவன்கூட .....
மனதார விரும்புவர் ....!!!
+
குறள் 810
+
பழைமை
+
விழையார் விழையப் படுப பழையார்கண்
பண்பின் தலைப்பிரியா தார்.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் -30
Re: திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
நடிப்பு நட்பு வேண்டாம் ...
உயிராய் உருகுவதுபோல்
உனக்கே வாழ்வதுபோல்
நடிப்பு நட்பு வேண்டாம் ...
அது தீ நட்பு .....!!!
உள்ளத்தில் இருந்து ...
தோன்றாத நடப்பும்
உதட்டில் தோன்றும்
நட்பும் வேண்டாம் ....
தீய வளர்வதை -நீ
வெட்டி விடுவதே .....
நன்றோ நன்று ....!!!
+
குறள் 811
+
தீ நட்பு,
+
பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மை
பெருகலிற் குன்றல் இனிது.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் -31
உயிராய் உருகுவதுபோல்
உனக்கே வாழ்வதுபோல்
நடிப்பு நட்பு வேண்டாம் ...
அது தீ நட்பு .....!!!
உள்ளத்தில் இருந்து ...
தோன்றாத நடப்பும்
உதட்டில் தோன்றும்
நட்பும் வேண்டாம் ....
தீய வளர்வதை -நீ
வெட்டி விடுவதே .....
நன்றோ நன்று ....!!!
+
குறள் 811
+
தீ நட்பு,
+
பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மை
பெருகலிற் குன்றல் இனிது.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் -31
Re: திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
விலக்கும் நட்பும் வேண்டாம் ....!!!
பயன் இருந்தால் பழகும்
நட்பும் வேண்டாம் ....
பயனில்லாவிட்டால் ....
விலக்கும் நட்பும் வேண்டாம் ....!!!
துன்பத்தில் சரிபாதியும் ....
இன்பத்தில் சரிபாதியும் .....
இணையாத நட்பு ....
இருதென்ன பயன் ....?
+
குறள் 812
+
தீ நட்பு,
+
உறின்நட்டு அறின்ஙருஉம் ஒப்பிலார் கேண்மை
பெறினும் இழப்பினும் என்.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் -32
பயன் இருந்தால் பழகும்
நட்பும் வேண்டாம் ....
பயனில்லாவிட்டால் ....
விலக்கும் நட்பும் வேண்டாம் ....!!!
துன்பத்தில் சரிபாதியும் ....
இன்பத்தில் சரிபாதியும் .....
இணையாத நட்பு ....
இருதென்ன பயன் ....?
+
குறள் 812
+
தீ நட்பு,
+
உறின்நட்டு அறின்ஙருஉம் ஒப்பிலார் கேண்மை
பெறினும் இழப்பினும் என்.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் -32
Re: திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
பயனோடு பழகும் நட்பு ....
பயனோடு பழகும் நட்பு ....
திருடர்களோடு பழகுவதும் ....
ஒன்றே ....!!!
பயனோடு பழகும் ....
நட்பானது ....
விலைமாதருக்கு சமனே ...
பயனொடு பழகுவதை ....
பயனற்றதாக்குனதே அறிவு ....!!!
+
குறள் 813
+
தீ நட்பு,
+
உறுவது சீர்தூக்கும் நட்பும் பெறுவது
கொள்வாரும் கள்வரும் நேர்.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் -33
பயனோடு பழகும் நட்பு ....
திருடர்களோடு பழகுவதும் ....
ஒன்றே ....!!!
பயனோடு பழகும் ....
நட்பானது ....
விலைமாதருக்கு சமனே ...
பயனொடு பழகுவதை ....
பயனற்றதாக்குனதே அறிவு ....!!!
+
குறள் 813
+
தீ நட்பு,
+
உறுவது சீர்தூக்கும் நட்பும் பெறுவது
கொள்வாரும் கள்வரும் நேர்.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் -33
Re: திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
பேராபத்து நட்பால் வரும் ....
பேராபத்து நட்பால் வரும் ....
இவன் நட்பால் கெடுதல் ...
வரும் என்றால் ஏன் தொடர்கிறாய் ...?
தீய நட்பை ....!!!
போர்க்களத்தில் கலை வாரும்
என்ற குதிரைமீது -யார் ,,,?
போர் செய்வார்கள் ....?
விலக்கிவிடு அந்த குதிரையை ...!!!
+
குறள் 814
+
தீ நட்பு,
+
அமரகத்து ஆற்றறுக்கும் கல்லாமா அன்னார்
தமரின் தனிமை தலை.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் -34
பேராபத்து நட்பால் வரும் ....
இவன் நட்பால் கெடுதல் ...
வரும் என்றால் ஏன் தொடர்கிறாய் ...?
தீய நட்பை ....!!!
போர்க்களத்தில் கலை வாரும்
என்ற குதிரைமீது -யார் ,,,?
போர் செய்வார்கள் ....?
விலக்கிவிடு அந்த குதிரையை ...!!!
+
குறள் 814
+
தீ நட்பு,
+
அமரகத்து ஆற்றறுக்கும் கல்லாமா அன்னார்
தமரின் தனிமை தலை.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் -34
Re: திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
நட்பே வேண்டாம் கேடு நட்பு ....!!!
ஓடி ஓடி உதவி செய்தாலும் ....
எதிர்பாராத உதவி செய்தாலும் ....
யாருமே இதுவரை செய்யாத
உதவி செய்தாலும் வேண்டாம்
தீய நட்பு ....!!!
பாதுகாப்பு இல்லாத நட்பு ....
பயனற்ற நட்பாகும் ...
எதற்கு இந்த நட்பு -நட்பே ....
வேண்டாம் இந்த கேடு நட்பு ....!!!
+
குறள் 815
+
தீ நட்பு,
+
செய்தேமஞ் சாராச் சிறியவர் புன்கேண்மை
எய்தலின் எய்தாமை நன்று.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் -35
ஓடி ஓடி உதவி செய்தாலும் ....
எதிர்பாராத உதவி செய்தாலும் ....
யாருமே இதுவரை செய்யாத
உதவி செய்தாலும் வேண்டாம்
தீய நட்பு ....!!!
பாதுகாப்பு இல்லாத நட்பு ....
பயனற்ற நட்பாகும் ...
எதற்கு இந்த நட்பு -நட்பே ....
வேண்டாம் இந்த கேடு நட்பு ....!!!
+
குறள் 815
+
தீ நட்பு,
+
செய்தேமஞ் சாராச் சிறியவர் புன்கேண்மை
எய்தலின் எய்தாமை நன்று.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் -35
Re: திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
உயிருக்கு உயிராய் பழகினாலும் ...
--
அறிவற்றவனின் நட்பு .....
உயிருக்கு உயிராய் பழகினாலும் ...
உயிரைதருவேன் என கூறினாலும் ....
தீய நட்பு தீயதே -தொடராதீர் ....!!!
அறிவற்றவனின்
நட்பை காட்டிலும் .....
அறிவுள்ளவனின் பகை .....
பலமடங்கு உத்தமம் .......!!!
+
குறள் 816
+
தீ நட்பு,
+
பேதை பெருங்கெழீஇ நட்பின் அறிவுடையார்
ஏதின்மை கோடி உறும்.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் -36
--
அறிவற்றவனின் நட்பு .....
உயிருக்கு உயிராய் பழகினாலும் ...
உயிரைதருவேன் என கூறினாலும் ....
தீய நட்பு தீயதே -தொடராதீர் ....!!!
அறிவற்றவனின்
நட்பை காட்டிலும் .....
அறிவுள்ளவனின் பகை .....
பலமடங்கு உத்தமம் .......!!!
+
குறள் 816
+
தீ நட்பு,
+
பேதை பெருங்கெழீஇ நட்பின் அறிவுடையார்
ஏதின்மை கோடி உறும்.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் -36
Re: திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
பகை கொண்ட நட்பு மேல் ....!!!
சிரித்து சிரித்து பழகும் ....
கெட்ட நட்பை காட்டிலும் ....
வெறுத்து வெறுத்து பேசும் ....
பகை கொண்ட நட்பு மேல் ....!!!
கெட்ட நட்பால் ....
சில நன்மைகள் கிடைப்பதை ....
காட்டிலும் - பகை நட்பால் ....
ஆயிரம் தீமைகள் வருவது ....
எவ்வளவோ மேல் .....!!!
+
குறள் 817
+
தீ நட்பு,
+
நகைவகைய ராகிய நட்பின் பகைவரால்
பத்தடுத்த கோடி உறும்.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் -37
சிரித்து சிரித்து பழகும் ....
கெட்ட நட்பை காட்டிலும் ....
வெறுத்து வெறுத்து பேசும் ....
பகை கொண்ட நட்பு மேல் ....!!!
கெட்ட நட்பால் ....
சில நன்மைகள் கிடைப்பதை ....
காட்டிலும் - பகை நட்பால் ....
ஆயிரம் தீமைகள் வருவது ....
எவ்வளவோ மேல் .....!!!
+
குறள் 817
+
தீ நட்பு,
+
நகைவகைய ராகிய நட்பின் பகைவரால்
பத்தடுத்த கோடி உறும்.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் -37
Re: திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
நடிப்போடு பழகும் நட்பைவிடு
செய்ய கூடிய உதவியை ....
செய்ய முடியாததுபோல் ....
பாசாங்கு காட்டும் நட்பை ....
தொடராதே....!!!
நடிப்போடு பழகும் நட்பை ....
மெல்ல மெல்ல விலக்குவதே ....
அறிவுடைய ஒருவனின் ......
அற்புதமான செயலாகும் ....!!!
+
குறள் 818
+
தீ நட்பு,
+
ஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மை
சொல்லாடார் சோர விடல்.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் -38
செய்ய கூடிய உதவியை ....
செய்ய முடியாததுபோல் ....
பாசாங்கு காட்டும் நட்பை ....
தொடராதே....!!!
நடிப்போடு பழகும் நட்பை ....
மெல்ல மெல்ல விலக்குவதே ....
அறிவுடைய ஒருவனின் ......
அற்புதமான செயலாகும் ....!!!
+
குறள் 818
+
தீ நட்பு,
+
ஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மை
சொல்லாடார் சோர விடல்.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் -38
Re: திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
கனவிலும் துன்பம் தரும் ....!!!
சொல்வதொன்று ....
செய்வதொன்று ....
உள்ளொன்று ....
புறமொன்று .....
கொண்ட நப்பு ......!!!
இரு தலை பண்பை .....
கொண்ட நட்புகள் ....
நிஜத்தில் மட்டுமல்ல ....
கனவிலும் துன்பம் தரும் ....!!!
+
குறள் 819
+
தீ நட்பு,
+
கனவினும் இன்னாது மன்னோ வினைவேறு
சொல்வேறு பட்டார் தொடர்பு.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் -39
சொல்வதொன்று ....
செய்வதொன்று ....
உள்ளொன்று ....
புறமொன்று .....
கொண்ட நப்பு ......!!!
இரு தலை பண்பை .....
கொண்ட நட்புகள் ....
நிஜத்தில் மட்டுமல்ல ....
கனவிலும் துன்பம் தரும் ....!!!
+
குறள் 819
+
தீ நட்பு,
+
கனவினும் இன்னாது மன்னோ வினைவேறு
சொல்வேறு பட்டார் தொடர்பு.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் -39
Re: திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
உன்னை இழிவுபடுத்தும் நட்பு
உன்னோடு தனிமையில் ....
உயிராய் பழகுவதுபோல் .....
உயிரை கொடுத்து பழகிய ....
நப்பு ......!!!
கூட்டத்தின் நடுவே ....
உன்னை இழிவுபடுத்தும் ....
சொல்லையும் செயலையும் ....
செய்யுமாயின் -வேண்டாம் ...
அந்த நட்பு .....!!!
+
குறள் 820
+
தீ நட்பு,
+
எனைத்தும் குறுகுதல் ஓம்பல் மனைக்கெழீஇ
மன்றில் பழிப்பார் தொடர்பு.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் - 40
உன்னோடு தனிமையில் ....
உயிராய் பழகுவதுபோல் .....
உயிரை கொடுத்து பழகிய ....
நப்பு ......!!!
கூட்டத்தின் நடுவே ....
உன்னை இழிவுபடுத்தும் ....
சொல்லையும் செயலையும் ....
செய்யுமாயின் -வேண்டாம் ...
அந்த நட்பு .....!!!
+
குறள் 820
+
தீ நட்பு,
+
எனைத்தும் குறுகுதல் ஓம்பல் மனைக்கெழீஇ
மன்றில் பழிப்பார் தொடர்பு.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் - 40
Re: திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
மனதால் நேசிக்காத நட்பு
மனதால் நேசிக்காத நட்பு ....
நேசிப்பதுபோல் நடிக்கும் நட்பு ....
காரியத்துக்காய் பழகும் நட்பு ....
ஆருயிர் போல் பழகினாலும் ....
அது கூடா நட்பே ....!!!
உள் ஒன்று வைத்து ....
புறமொன்று பழகும் நட்பை ....
வளர்ப்பதை விட ஆரம்பத்தில் ...
வெட்டி எரிவதே சிறப்பு ....!!!
+
குறள் 821
+
கூடாநட்பு
+
சீரிடம் காணின் எறிதற்குப் பட்டடை
நேரா நிரந்தவர் நட்பு.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் - 41
மனதால் நேசிக்காத நட்பு ....
நேசிப்பதுபோல் நடிக்கும் நட்பு ....
காரியத்துக்காய் பழகும் நட்பு ....
ஆருயிர் போல் பழகினாலும் ....
அது கூடா நட்பே ....!!!
உள் ஒன்று வைத்து ....
புறமொன்று பழகும் நட்பை ....
வளர்ப்பதை விட ஆரம்பத்தில் ...
வெட்டி எரிவதே சிறப்பு ....!!!
+
குறள் 821
+
கூடாநட்பு
+
சீரிடம் காணின் எறிதற்குப் பட்டடை
நேரா நிரந்தவர் நட்பு.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் - 41
Re: திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
மனமில்லாமல் பழகும் நட்பு ....
---
வேண்டும் ஆனால் வேண்டாம் ...
அன்பு இருக்கும் , இருக்காது
சந்தேகத்துடன் பழகும் நட்பு .....
சங்கடத்தில் முடியும் .....!!!
மனமில்லாமல் பழகும் நட்பு ....
மனமில்லாமல் பழகும் ....
பாலியல் இன்பத்துக்கு நிகர் ....
இரண்டுமே வேண்டாம் மனமே ....!!!
+
குறள் 822
+
கூடாநட்பு
+
இனம்போன்று இனமல்லார் கேண்மை மகளிர்
மனம்போல வேறு படும்.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் - 42
---
வேண்டும் ஆனால் வேண்டாம் ...
அன்பு இருக்கும் , இருக்காது
சந்தேகத்துடன் பழகும் நட்பு .....
சங்கடத்தில் முடியும் .....!!!
மனமில்லாமல் பழகும் நட்பு ....
மனமில்லாமல் பழகும் ....
பாலியல் இன்பத்துக்கு நிகர் ....
இரண்டுமே வேண்டாம் மனமே ....!!!
+
குறள் 822
+
கூடாநட்பு
+
இனம்போன்று இனமல்லார் கேண்மை மகளிர்
மனம்போல வேறு படும்.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் - 42
Re: திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
நல் நட்பாக மாறிவிடாது ....!!!
---
மனதால் பொருந்தாத நட்பு ....
அமிர்தம்போல் பழகினாலும் ....
உடைந்த மட்பாண்டாமே.....!!!
மனதுக்கு பொருந்தாத நட்பு ....
ஆயிரம் ஆயிரம் நூல்களை ...
வாசித்து அறிவை பெற்றாலும் ....
நல் நட்பாக மாறிவிடாது ....!!!
+
குறள் 823
+
கூடாநட்பு
+
பலநல்ல கற்றக் கடைத்து மனநல்லர்
ஆகுதல் மாணார்க் கரிது.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் - 43
---
மனதால் பொருந்தாத நட்பு ....
அமிர்தம்போல் பழகினாலும் ....
உடைந்த மட்பாண்டாமே.....!!!
மனதுக்கு பொருந்தாத நட்பு ....
ஆயிரம் ஆயிரம் நூல்களை ...
வாசித்து அறிவை பெற்றாலும் ....
நல் நட்பாக மாறிவிடாது ....!!!
+
குறள் 823
+
கூடாநட்பு
+
பலநல்ல கற்றக் கடைத்து மனநல்லர்
ஆகுதல் மாணார்க் கரிது.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் - 43
Re: திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
சென்றவுடன் வெறுக்கும் நட்பு ....
---
காணும்போது சிரித்தும் ....
காணாதபோது வெறுத்தும் ....
பழகும் நட்பை தொடராதே ....!!!
கண்டவுடன் பழகும் நட்பு ...
சென்றவுடன் வெறுக்கும் நட்பு ....
நெஞ்சு முழுதும் நஞ்சை கொண்டு ....
பழகும் நட்பு - பகைவனுக்கு நிகர் ...!!!
+
குறள் 824
+
கூடாநட்பு
+
முகத்தின் இனிய நகாஅ அகத்தின்னா
வஞ்சரை அஞ்சப் படும்.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் - 44
---
காணும்போது சிரித்தும் ....
காணாதபோது வெறுத்தும் ....
பழகும் நட்பை தொடராதே ....!!!
கண்டவுடன் பழகும் நட்பு ...
சென்றவுடன் வெறுக்கும் நட்பு ....
நெஞ்சு முழுதும் நஞ்சை கொண்டு ....
பழகும் நட்பு - பகைவனுக்கு நிகர் ...!!!
+
குறள் 824
+
கூடாநட்பு
+
முகத்தின் இனிய நகாஅ அகத்தின்னா
வஞ்சரை அஞ்சப் படும்.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் - 44
Re: திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
நம்பிக்கை இல்லாத நட்பே ....!!!
---
மனத்தால் நேசிக்காத நட்பு ....
மனம் நிறைந்த வார்த்தை ....
வாயார உரைத்தாலும் ....
உண்மை நட்பு அல்ல ....!!!
ஆயிரம் ஆயிரம் ....
வார்த்தைகளை உதிர்த்தாலும் ....
உயிரைப்போல நடித்தாலும் ...
மனத்தால் இணையாத நட்பு ....
நம்பிக்கை இல்லாத நட்பே ....!!!
+
குறள் 825
+
கூடாநட்பு
+
மனத்தின் அமையா தவரை எனைத்தொன்றும்
சொல்லினால் தேறற்பாற்று அன்று.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் - 45
---
மனத்தால் நேசிக்காத நட்பு ....
மனம் நிறைந்த வார்த்தை ....
வாயார உரைத்தாலும் ....
உண்மை நட்பு அல்ல ....!!!
ஆயிரம் ஆயிரம் ....
வார்த்தைகளை உதிர்த்தாலும் ....
உயிரைப்போல நடித்தாலும் ...
மனத்தால் இணையாத நட்பு ....
நம்பிக்கை இல்லாத நட்பே ....!!!
+
குறள் 825
+
கூடாநட்பு
+
மனத்தின் அமையா தவரை எனைத்தொன்றும்
சொல்லினால் தேறற்பாற்று அன்று.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் - 45
Re: திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
நல்லவர்போல் நடித்தாலும் ....
காக்கை
அன்னநடை நடந்தாலும் ....
காக்கை காக்கைதான் ...
அதுபோல் கெட்டவர்கள்....
நல்லவர்போல் நடித்தாலும் ....
கெட்டவரே......!!!
அறிந்தேன் ....
நீ பேசிய வார்த்தையில் ....
எவ்வளவோ நல்லவன் போல் .....
நடித்தாலும் உன் முகமூடி ....
கிழிந்ததை கண்டேன் நட்பே ....!!!
+
குறள் 826
+
கூடாநட்பு
+
நட்டார்போல் நல்லவை சொல்லினும் ஒட்டார்சொல்
ஒல்லை உணரப் படும்.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் - 46
காக்கை
அன்னநடை நடந்தாலும் ....
காக்கை காக்கைதான் ...
அதுபோல் கெட்டவர்கள்....
நல்லவர்போல் நடித்தாலும் ....
கெட்டவரே......!!!
அறிந்தேன் ....
நீ பேசிய வார்த்தையில் ....
எவ்வளவோ நல்லவன் போல் .....
நடித்தாலும் உன் முகமூடி ....
கிழிந்ததை கண்டேன் நட்பே ....!!!
+
குறள் 826
+
கூடாநட்பு
+
நட்டார்போல் நல்லவை சொல்லினும் ஒட்டார்சொல்
ஒல்லை உணரப் படும்.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் - 46
Re: திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
வேஷங்கள் அடுத்தநொடி அழிந்துவிடும் .....!!!
வேஷம்
போட்டு ராஜாவானாலும் ...
ஓட்டாண்டி ஓட்டாண்டிதான் ....
வேஷங்கள் அடுத்தநொடி .......
அழிந்துவிடும் .....!!!
வில்
வளைவது அம்பை ....
எய்வதற்கே -அழகாயினும்...
வில் ஆபத்தானதே .....
கெட்டவர்கள் நல்லவார்த்தை ....
பேசினாலும் கேட்டவரே ....!!!
+
குறள் 827
+
கூடாநட்பு
+
சொல்வணக்கம் ஒன்னார்கண் கொள்ளற்க வில்வணக்கம்
தீங்கு குறித்தமை யான்.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் - 47
வேஷம்
போட்டு ராஜாவானாலும் ...
ஓட்டாண்டி ஓட்டாண்டிதான் ....
வேஷங்கள் அடுத்தநொடி .......
அழிந்துவிடும் .....!!!
வில்
வளைவது அம்பை ....
எய்வதற்கே -அழகாயினும்...
வில் ஆபத்தானதே .....
கெட்டவர்கள் நல்லவார்த்தை ....
பேசினாலும் கேட்டவரே ....!!!
+
குறள் 827
+
கூடாநட்பு
+
சொல்வணக்கம் ஒன்னார்கண் கொள்ளற்க வில்வணக்கம்
தீங்கு குறித்தமை யான்.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் - 47
Re: திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
பகைவரின் நட்பு கொலைகருவி
பகைவன் ....
கையெடுத்து கும்பிட்டாலும் ....
கைக்குள் துப்பாக்கி ...
மறைந்திருக்கும் ......!!!
பகைவரின் ...
கண்ணீருக்குளும் ...
ஒரு கொலைக்கருவி ...
நிச்சயம் மறைந்திருக்கும் ....
பகைவரின் நட்பு கொலை...
கருவிக்கு ஒப்பானதே .....!!!
+
குறள் 828
+
கூடாநட்பு
+
தொழுதகை யுள்ளும் படையொடுங்கும் ஒன்னார்
அழுதகண் ணீரும் அனைத்து.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் - 48
பகைவன் ....
கையெடுத்து கும்பிட்டாலும் ....
கைக்குள் துப்பாக்கி ...
மறைந்திருக்கும் ......!!!
பகைவரின் ...
கண்ணீருக்குளும் ...
ஒரு கொலைக்கருவி ...
நிச்சயம் மறைந்திருக்கும் ....
பகைவரின் நட்பு கொலை...
கருவிக்கு ஒப்பானதே .....!!!
+
குறள் 828
+
கூடாநட்பு
+
தொழுதகை யுள்ளும் படையொடுங்கும் ஒன்னார்
அழுதகண் ணீரும் அனைத்து.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் - 48
Re: திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
பசுத்தோல் போர்த்த புலிபோல் ....
பசுத்தோல் போர்த்த புலிபோல் ....
வெளியில் மென்மையும் ...
உள்ளே கொடுமையும் ....
கொண்ட நட்பு வேண்டாம் ....!!!
முகம் சிரிப்பை காட்டி பேசும் ....
அகம் சாக்கடைக்குள் இருக்கும் ....
நாமும் அதுபோல் இருதலையாய் ....
பழகுவது போலி நட்பு .....!!!
+
குறள் 829
+
கூடாநட்பு
+
மிகச்செய்து தம்மெள்ளு வாரை நகச்செய்து
நட்பினுள் சாப்புல்லற் பாற்று.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் - 49
பசுத்தோல் போர்த்த புலிபோல் ....
வெளியில் மென்மையும் ...
உள்ளே கொடுமையும் ....
கொண்ட நட்பு வேண்டாம் ....!!!
முகம் சிரிப்பை காட்டி பேசும் ....
அகம் சாக்கடைக்குள் இருக்கும் ....
நாமும் அதுபோல் இருதலையாய் ....
பழகுவது போலி நட்பு .....!!!
+
குறள் 829
+
கூடாநட்பு
+
மிகச்செய்து தம்மெள்ளு வாரை நகச்செய்து
நட்பினுள் சாப்புல்லற் பாற்று.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் - 49
Re: திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
முகத்தால் பழகி அகத்தால் வெறு....
நெல்லோடு இணைந்து ....
புல்லும் சமமாக வளரும் ....
நெல் எது ,,,? புல் எது ...?
கண்டறிவது கடினம் .....!!!
தீயவரோடு நட்பு .....
வைத்தால் நானும் ......
ஓடும் புளியம் பழம் போல் ,,,,
பழகிடனும் முகத்தால்....
பழகி அகத்தால் வெறுப்பதே ....
அறிவான நட்பு ....!!!
+
குறள் 830
+
கூடாநட்பு
+
பகைநட்பாம் காலம் வருங்கால் முகநட்டு
அகநட்பு ஒரீஇ விடல்.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் - 50
நெல்லோடு இணைந்து ....
புல்லும் சமமாக வளரும் ....
நெல் எது ,,,? புல் எது ...?
கண்டறிவது கடினம் .....!!!
தீயவரோடு நட்பு .....
வைத்தால் நானும் ......
ஓடும் புளியம் பழம் போல் ,,,,
பழகிடனும் முகத்தால்....
பழகி அகத்தால் வெறுப்பதே ....
அறிவான நட்பு ....!!!
+
குறள் 830
+
கூடாநட்பு
+
பகைநட்பாம் காலம் வருங்கால் முகநட்டு
அகநட்பு ஒரீஇ விடல்.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் - 50
Page 2 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
» கவிதையும் வினாவும் - விடை தாருங்கள்
» என் காதலும் நீ என் கவிதையும் நீ
» காட்சியும் கவிதையும்
» காதல் கவிதையும் தத்துவமும்
» கவிதையும் வினாவும் - விடை தாருங்கள்
» என் காதலும் நீ என் கவிதையும் நீ
» காட்சியும் கவிதையும்
» காதல் கவிதையும் தத்துவமும்
Page 2 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|