TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Apr 24, 2024 2:31 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Apr 23, 2024 12:00 am

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 22, 2024 9:07 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri Apr 19, 2024 9:02 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


கூழாங்கற்கள்....!! [ கவிதை ].

2 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

கூழாங்கற்கள்....!!  [ கவிதை ]. Empty கூழாங்கற்கள்....!! [ கவிதை ].

Post by ந.க. துறைவன் Fri Jul 04, 2014 1:17 pm

*
விரும்பியது எதுவும்…‘‘ [ கவிதை ]
*
விரும்பும் போது
விரும்பியது கிடைக்கிறது
விரும்பாத போதும்
கிடைக்கிறது
விரும்பியது
எதுவும்…!!.
*

ந.க. துறைவன்
ந.க. துறைவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 608
Join date : 27/02/2014

Back to top Go down

கூழாங்கற்கள்....!!  [ கவிதை ]. Empty Re: கூழாங்கற்கள்....!! [ கவிதை ].

Post by ந.க. துறைவன் Sat Jul 05, 2014 11:04 am

*
இல்லாத போது….!
*
அவன்
இல்லாத போது
எங்கே? என்று
கேட்கிறார்கள்.
அவன்
இருக்கும் போது
அவனை யாரும்
கேட்பதில்லை.
எதற்காக
கேட்கிறார்கள் என்று
எவருக்கும்
புரியவில்லை
இன்னும்….!!
*
ந.க. துறைவன்
ந.க. துறைவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 608
Join date : 27/02/2014

Back to top Go down

கூழாங்கற்கள்....!!  [ கவிதை ]. Empty Re: கூழாங்கற்கள்....!! [ கவிதை ].

Post by ந.க. துறைவன் Fri Jul 11, 2014 12:53 pm

*
உடனே புறப்பட்டு வா…!!
*
ஒட்டல் சாப்பாடு
சரியில்லையென்று
குறைப்பட்டுச் சொல்லி
ஊருக்குப் போன
மனைவியை
உடனே பறப்பட்டு
வரச்சொல்லி
குறுந்தகவல்
அனுப்பினான்
கணவன்.
*
ந.க. துறைவன்
ந.க. துறைவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 608
Join date : 27/02/2014

Back to top Go down

கூழாங்கற்கள்....!!  [ கவிதை ]. Empty Re: கூழாங்கற்கள்....!! [ கவிதை ].

Post by ந.க. துறைவன் Tue Jul 15, 2014 10:56 am

*
குரல்கள்…!!
*
இருப்பவர்களின்
குரல்கள் எப்போதும்
எடுபடாமல்
அடங்கிப் போகிறது.
இறந்தவர்களின்
குரல்கள் எப்போதும்
நினைவுக் கூர்ந்து
எதிரொலிக்கிறது
இன்றும்… என்றும்… !!
*
ந.க. துறைவன்
ந.க. துறைவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 608
Join date : 27/02/2014

Back to top Go down

கூழாங்கற்கள்....!!  [ கவிதை ]. Empty Re: கூழாங்கற்கள்....!! [ கவிதை ].

Post by ந.க. துறைவன் Thu Jul 17, 2014 9:47 am

*
மீசை….மீசை….!!
*
ஆண்கள் முகத்தில்
மீசையை விதவிமாய்
வைத்துக்கொண்டு
கம்பீரமாய் தெரிகிறார்கள்.
மீசையொரு
கௌரவ அந்தஸ்துப்
பெற்று மற்றவர்களின்
கவனத்தைப் பெற்றுவிடுகிறது.
மீசை
வைத்திருப்பவர்கள்
எதற்காகவோ அதை
எடுத்து விடுகிறார்கள்.
மீசை
இல்லாமலிருந்தவர்கள்
ஆசையோடு அதை
வைத்துக் கொள்கிறார்கள்.
மீசை
அழகின் அடையாளமா?
ஆண்மையின் அடையாளமா?
அகத்தின் ஆசையே
முகத்தில் மீசை….!!
*
ந.க. துறைவன்
ந.க. துறைவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 608
Join date : 27/02/2014

Back to top Go down

கூழாங்கற்கள்....!!  [ கவிதை ]. Empty Re: கூழாங்கற்கள்....!! [ கவிதை ].

Post by ந.க. துறைவன் Fri Jul 25, 2014 9:55 am

*
அவமானங்கள்….!!
*
நீ
பெற்ற பெருமை
புகழ் அனைத்தையும்
மறந்தாலும்,
நீ
பெற்ற பெரும்
அவமானங்களை
மட்டும் என்றும்
மறவாதே…!
அந்த
அவமானங்களே
உன் வாழ்வின்
உயர்வுக்கான
உந்து சக்தியாகும்
சன்மானங்களாகும்.
*
ந.க. துறைவன்
ந.க. துறைவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 608
Join date : 27/02/2014

Back to top Go down

கூழாங்கற்கள்....!!  [ கவிதை ]. Empty Re: கூழாங்கற்கள்....!! [ கவிதை ].

Post by Tamil Fri Jul 25, 2014 6:50 pm

உயர்வுக்கான
உந்து சக்தியாகும்
சன்மானங்களாகும்
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

கூழாங்கற்கள்....!!  [ கவிதை ]. Empty Re: கூழாங்கற்கள்....!! [ கவிதை ].

Post by ந.க. துறைவன் Sat Jul 26, 2014 11:25 am

நன்றி தமிழ்...
ந.க. துறைவன்
ந.க. துறைவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 608
Join date : 27/02/2014

Back to top Go down

கூழாங்கற்கள்....!!  [ கவிதை ]. Empty Re: கூழாங்கற்கள்....!! [ கவிதை ].

Post by ந.க. துறைவன் Sun Jul 27, 2014 9:08 am

சந்தேகம்…!!
*
எவருக்கும் தெரியாமல்
மறைவாய்
செல்போனின்
இன்பாக்ஸ் திறந்துக்
குறுஞ்செய்தியைப்
படித்து வேவு பார்த்து
மனந் தெளிகிறார்கள்
சந்தேகப் பேர்வழிகள்
உஷார்… உஷார்….!!.
*
ந.க. துறைவன்
ந.க. துறைவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 608
Join date : 27/02/2014

Back to top Go down

கூழாங்கற்கள்....!!  [ கவிதை ]. Empty Re: கூழாங்கற்கள்....!! [ கவிதை ].

Post by ந.க. துறைவன் Mon Jul 28, 2014 11:05 am

*
சோழியம்….!!
*
ஆடிமாசம்
ஆத்தாளுக்குப்
பொங்கல் வை.
செவ்வாய், வெள்ளி
துர்க்கையம்மனுக்கு
எலுமிச்சை விளக்கேற்றி
வணங்கி வா...
பொன்னான
மாப்பிள்ளைப் பையன்
பொறுப்பா வந்து
கைப்பிடிப்பான் – என்று
சோழியை உருட்டி
சோசியம் கணித்து
அருள் வாக்கு சொன்னாள்
பாதையோரம்
கடைவிரித்திருந்தப்
பொன்னாத்தா கிழவி.
*
*
ந.க. துறைவன்
ந.க. துறைவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 608
Join date : 27/02/2014

Back to top Go down

கூழாங்கற்கள்....!!  [ கவிதை ]. Empty Re: கூழாங்கற்கள்....!! [ கவிதை ].

Post by ந.க. துறைவன் Fri Aug 15, 2014 10:56 am

*
விடுமுறை ஜாலியா?
*
என்ன தம்பி,
ரொம்ப சந்தோஷமாயிருக்கே
தெரியாதா?
மூணு நாளைக்கு
அய்யாவுக்கு விடுமுறை.
அதான்
சுதந்திரமா மகிழ்ச்சியா?
இருக்கேன் போதுமா?
ந.க. துறைவன்
ந.க. துறைவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 608
Join date : 27/02/2014

Back to top Go down

கூழாங்கற்கள்....!!  [ கவிதை ]. Empty Re: கூழாங்கற்கள்....!! [ கவிதை ].

Post by ந.க. துறைவன் Fri Aug 15, 2014 3:45 pm

*
தடை…!!
*
பூக்களோடு
பேசக் கூடாதென்று
தடை.
வண்டுகளைக்
காதலிக்கக்
கூடாதென்று
தடை.
ஆடைக் கட்டிய
பால் அருந்தக்
கூடாதென்று
தடை.
காக்கைகள்
பானையில் தண்ணீர்
குடிக்கக் கூடாதென்று
தடை.
என் அப்பா
எனக்குப் போட்டத்
தடை.
ஏனென்று தெரியுமா?
யாருக்கேனும்
அதற்கான விடை?.
*
ந.க. துறைவன்
ந.க. துறைவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 608
Join date : 27/02/2014

Back to top Go down

கூழாங்கற்கள்....!!  [ கவிதை ]. Empty Re: கூழாங்கற்கள்....!! [ கவிதை ].

Post by ந.க. துறைவன் Fri Aug 15, 2014 3:45 pm

*
தடை…!!
*
பூக்களோடு
பேசக் கூடாதென்று
தடை.
வண்டுகளைக்
காதலிக்கக்
கூடாதென்று
தடை.
ஆடைக் கட்டிய
பால் அருந்தக்
கூடாதென்று
தடை.
காக்கைகள்
பானையில் தண்ணீர்
குடிக்கக் கூடாதென்று
தடை.
என் அப்பா
எனக்குப் போட்டத்
தடை.
ஏனென்று தெரியுமா?
யாருக்கேனும்
அதற்கான விடை?.
*
ந.க. துறைவன்
ந.க. துறைவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 608
Join date : 27/02/2014

Back to top Go down

கூழாங்கற்கள்....!!  [ கவிதை ]. Empty Re: கூழாங்கற்கள்....!! [ கவிதை ].

Post by ந.க. துறைவன் Mon Aug 18, 2014 10:09 am

*
திரும்பி வந்தான்…!!
*
கிராமத்திலிருந்து
நகரத்திற்குப் போனான்.
பிழைப்பதற்கு,
மீண்டும் ஊர்
திரும்பி வந்தான்
உழைப்பதற்கு….!!
*
சாணித் தெளிக்கும்
பெண்ணைப்
பார்த்துவிட்டு
எழுந்து ஒடியது
வேகமாய்
தெரு நாய்…!!.
*
உயரமான மரத்தில்
எத்தனை அழகாக
வரிசையில் போய்
அச்சமின்றி ஏறுகிறது
கட்டெறும்புகள்….!!.
*
ந.க. துறைவன்
ந.க. துறைவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 608
Join date : 27/02/2014

Back to top Go down

கூழாங்கற்கள்....!!  [ கவிதை ]. Empty Re: கூழாங்கற்கள்....!! [ கவிதை ].

Post by ந.க. துறைவன் Wed Aug 20, 2014 9:38 am

*
குடியிருப்பு..!!.
*
யார் குடியிருக்கவோ?
அழகானக் குகைப் போன்று
மரத்தைப்
பொந்து பொந்துவாக்கிக்
கட்டியிருக்கிறது
வீடுகளாய்
மரக்கொத்திப் பறவைகள்…!!.
*
ந.க. துறைவன்
ந.க. துறைவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 608
Join date : 27/02/2014

Back to top Go down

கூழாங்கற்கள்....!!  [ கவிதை ]. Empty Re: கூழாங்கற்கள்....!! [ கவிதை ].

Post by ந.க. துறைவன் Thu Aug 21, 2014 3:05 pm

*
மனச் சலிப்பு…!!
*
பெண்வீட்டாருக்கு மாப்பிள்ளைப்
பிடித்திருந்தது.
மாப்பிள்ளை வீட்டாருக்கு
பெண்வீட்டாரின் குடும்பப்
பின்னணிப் பிடிக்கவில்லை
பிடிப்பதும் பிடிக்காததும்
அவரவர்கள் விருப்பம்
பெண் மனம் சலித்தாள்
மாப்பிள்ளை மனம் அலுத்தான்.
*
ந.க. துறைவன்
ந.க. துறைவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 608
Join date : 27/02/2014

Back to top Go down

கூழாங்கற்கள்....!!  [ கவிதை ]. Empty Re: கூழாங்கற்கள்....!! [ கவிதை ].

Post by ந.க. துறைவன் Tue Aug 26, 2014 10:44 am

*
எளிது… எளிது…!!“
*
எது விரும்புகின்றோமோ
அது எளிதில் கிடைப்பதில்லை.
எது விருப்பமில்லையோ
அது எளிதில் கிடைத்துவிடுகிறது.
இது மனசின்
விளையாட்டா? விசித்திரமா?
உங்கள் அனுபவம் எப்படி?
*
ந.க. துறைவன்
ந.க. துறைவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 608
Join date : 27/02/2014

Back to top Go down

கூழாங்கற்கள்....!!  [ கவிதை ]. Empty Re: கூழாங்கற்கள்....!! [ கவிதை ].

Post by ந.க. துறைவன் Tue Sep 09, 2014 4:39 pm

வெற்றி…!!
*
இளமையில் தோல்வி
கல்வியில் தோல்வி
காதலில் தோல்வி
வேலையில் தோல்வி
வாழ்க்கையில் தோல்வி
கடைசியாய்
அவனுக்குக் கிடைத்தது
மரணத்தில் வெற்றி…!!.
*
ந.க. துறைவன்
ந.க. துறைவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 608
Join date : 27/02/2014

Back to top Go down

கூழாங்கற்கள்....!!  [ கவிதை ]. Empty Re: கூழாங்கற்கள்....!! [ கவிதை ].

Post by ந.க. துறைவன் Sat Sep 13, 2014 9:43 am

கம்மங் கதிரு…!!

காடுகழனிப் பார்த்து ரொம்ப
வருஷமாச்சின்னு
காலார நடந்துப் போய்
பார்த்து வரலாமுன்னு
நினைச்சி புறப்பட்டுப் போனேன்.
பச்சை பசேல்லுன்னு அங்கே
பசுமையான அழகு காட்சி.
வரப்பிலே நடந்து போகையில்
குருவிங்களெல்லாம் உற்சாகமா
தலைக்கு மேலே பறக்கின்றன.
வரப்பிலிருந்தவாறே
செண்டாக முதிர்ந்த ரெண்டு
கம்மங் கதிரை கைநீட்டி பறிச்சி
உள்ளங்கையில் வைச்சி
நுமிட்டி நுமிட்டி ஊதி ஊதி
வாயிலிட்டுச் சுவைத்தேன்
பச்சைக் கதிரி்ன் பால்சுவை
அத்தனையும் ருசியான
தெவிட்டாத தேன்சுவை.
செழிப்பான மண்ணின்சுவை.
மீண்டும் நடந்தபோது எதிரில்
எதிர்ப்பட்டது என் மாணவப்
பருவத்து காதலி.
அவள் இன்று இரண்டு
குழந்தைகளின் தாய்.
அவளின் அழகு முன்னைவிட
மங்கலமாய் பிரகாசிக்கின்றது.
அவளை நலம் விசாரித்து
அவளுக்கே தெரியாமல்
கண்ணீர் வெளியி்ல் தெரியாமல்
வரப்புப் பார்த்து வழிநடந்தேன்
பசுமையான நினைவுகளோடு…!!.
*.
ந.க. துறைவன்
ந.க. துறைவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 608
Join date : 27/02/2014

Back to top Go down

கூழாங்கற்கள்....!!  [ கவிதை ]. Empty Re: கூழாங்கற்கள்....!! [ கவிதை ].

Post by ந.க. துறைவன் Tue Sep 16, 2014 5:48 pm

அடைக்கலம்…!!.
*
வாய்விட்டு சொல்லாமல்
மனசுக்குள்ளேயே வைச்சி
எத்தனையோ பேருக்கு
இரகசியமாய்
அடைக்கலம் கொடுத்து
பாதுகாத்திருக்கின்றது
மௌனமான – அந்த
மறைவான
மலைக் குன்றுகள்…!!..
*

ந.க. துறைவன்
ந.க. துறைவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 608
Join date : 27/02/2014

Back to top Go down

கூழாங்கற்கள்....!!  [ கவிதை ]. Empty Re: கூழாங்கற்கள்....!! [ கவிதை ].

Post by ந.க. துறைவன் Mon Sep 22, 2014 11:57 am

பழைய டைரி…!!
*
பரணையிலிருந்து கிடைத்தது
தாத்தாவின் பழைய டைரி
பிரித்துப் படித்தால்
பக்கமெல்லாம் எழுதியிருந்தது
கடன் கணக்கு.
*
அந்தக் காலத்துப்
பாட்டிகளெல்லாம்
குடும்பத்திற்கு
வழிகாட்டிகள்
இப்பொழுது
அனைவருக்கும்
அவர்கள் வெறும்
மூதாட்டிகள்.
*
தாத்தா நிலம்
வாங்கிப் போட்டார்.
அப்பா வீடு
கட்டி வாழ்ந்தார்.
விற்று தீர்த்தான்
குடிகார மகன்.
*
ந.க. துறைவன்
ந.க. துறைவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 608
Join date : 27/02/2014

Back to top Go down

கூழாங்கற்கள்....!!  [ கவிதை ]. Empty Re: கூழாங்கற்கள்....!! [ கவிதை ].

Post by ந.க. துறைவன் Tue Oct 14, 2014 10:12 am

துணை…!!
*
பாதையில்
நடந்துப் போகையில்
அழகானப் பெண்
எதிரில் வந்தாள்.
ரசிக்காமலிருக்க
முடியவில்லை
யார் அந்தப் பெண்?
இளம் பசுமாடு….!!
*
தூக்கம்
வரவில்லையென
தவிப்பவர்க்கு
தூக்க மாத்திரையே
துணை…!!
ந.க. துறைவன்
ந.க. துறைவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 608
Join date : 27/02/2014

Back to top Go down

கூழாங்கற்கள்....!!  [ கவிதை ]. Empty Re: கூழாங்கற்கள்....!! [ கவிதை ].

Post by ந.க. துறைவன் Fri Oct 31, 2014 5:28 pm

சிலந்தி…!!
*
எப்பொழுது
வெளியேறலாமென்று
எதிர்ப்பார்த்துக்
காத்திருக்கின்றது
அடக்கி
வைக்கப்படடடிருக்கும்
பெருந் துக்கம்.
*
உறவினருக்கு
உபசரிக்கக் கொண்டு
வந்து வைத்தப்
பிஸ்கடடும் மிக்ஸரும்
மறைக்கின்றன
பீங்கான் தட்டில்
வரைந்துள்ள
அழகான ஓவியங்கள்.
*

கவலையைப் பற்றி
கவிதை எழுத
நினைத்தேன்.
சிரித்துக் கொண்டே
வலையில் நகர்ந்தது
சிலந்தி.
*
ந.க. துறைவன்
ந.க. துறைவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 608
Join date : 27/02/2014

Back to top Go down

கூழாங்கற்கள்....!!  [ கவிதை ]. Empty Re: கூழாங்கற்கள்....!! [ கவிதை ].

Post by ந.க. துறைவன் Sat Nov 01, 2014 4:10 pm

மயக்கம்…!!
*
பொழுது சாய்ந்தால்
பூக்களுக்கு
மயக்கம் வரும்
உதிர்கிறோமே என்று
தயக்கம் வரும்
விதியை நொந்து
துக்கம் வரும்
*
காலையில் எழுந்து
இரைத் தேடிக்
குப்பையைக் கிளறிக்
கொண்டிருக்கின்றன
கூவி முடித்தக்
கோழிகள்.
*
உபயோகப்படுத்தாமல்
பரண்மேல்
சும்மா
படுத்திருக்கின்றது
நெல்லுக் குத்தும்
உலக்கை.
*
கோள்மூட்டிகளின் பொறாமைப்
பேச்சினைக் கேட்டு
மனம் நொறுங்கிப் போனாள்
நெருங்கிய நண்பி.
ந.க. துறைவன்
ந.க. துறைவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 608
Join date : 27/02/2014

Back to top Go down

கூழாங்கற்கள்....!!  [ கவிதை ]. Empty Re: கூழாங்கற்கள்....!! [ கவிதை ].

Post by ந.க. துறைவன் Sun Nov 02, 2014 9:19 am

வாடாமல்லி…!!
*
பொருத்தமானப்
பெயர்.
வாழ்க்கையில்
வாடுவதில்லை
வாடாமல்லிப் பூக்கள்
*
தாய்ப் பால்
ஒன்று மட்டுமே
விலையேற்ற முடியாதச்
சக்தி மிகுந்தப் பால்.
*
ஐஸ் கட்டிப் போன்றது
காதல்.
அது எப்பொழுதும்
உருகிக் கொணடே
இருக்கும்.
இனிமையாய்
சுவைக்கும்.
ந.க. துறைவன்
ந.க. துறைவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 608
Join date : 27/02/2014

Back to top Go down

கூழாங்கற்கள்....!!  [ கவிதை ]. Empty Re: கூழாங்கற்கள்....!! [ கவிதை ].

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum