TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Apr 24, 2024 2:31 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Apr 23, 2024 12:00 am

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 22, 2024 9:07 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri Apr 19, 2024 9:02 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்

2 posters

Go down

ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள் Empty ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்

Post by ந.க. துறைவன் Sat Jun 07, 2014 9:15 am

*
,இலைகளை அசைத்து…!!.

*

எதிர்ப்பார்த்து காத்திருக்கிறார்கள்
பருவமழை தொடங்கி வி்ட்டதா?
மேகமூட்டமாயிருக்கிறது வானம்.
*
கருத்து வருகிறது மேகம்
குளிர்க் காற்றில்
பறந்து திரிகின்றன ஈசல்கள
*
பருவமழையை
மரங்கள் வரவேற்கின்றன
இலைகளை அசைத்து…
*
உயர்ந்தும் தாழ்ந்தும் மிக
வேகமாய வருகின்றன
ஆர்பாட்ட அலைகள்.
*
சேமித்துக் கொள்கிறது
மழை நீரை
வளமான பூமி.
*
ந.க. துறைவன்
ந.க. துறைவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 608
Join date : 27/02/2014

Back to top Go down

ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள் Empty Re: ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்

Post by ந.க. துறைவன் Sun Jun 08, 2014 8:58 am

*
குபேரன் பொம்மை….!!.
*
உடலைச் சிலிர்த்துத்
துவட்டிக் கொள்கின்றன
மழையில் நனைந்தப் பறவைகள்.
*
குழந்தைக்குப் பால்
கொண்டு வரச் சொல்லி
கொக்கை அழைக்கிறாள் தாய்.
*
முகத்தைச் சுளித்து
வாயிலிருந்ததைத் துப்பினான்
புளிப்புத் திராட்சை.
*
பணம் சேரும் என்ற நப்பாசை
குபேரன் பொம்மை வாங்கி வைத்தான்
உடைத்துவிட்டுச் சிரித்தது குழந்தை.
* .

ந.க. துறைவன்
ந.க. துறைவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 608
Join date : 27/02/2014

Back to top Go down

ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள் Empty Re: ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்

Post by ந.க. துறைவன் Mon Jun 09, 2014 11:44 am

*
வாழ்வை அனுபவி…!!
*
இயற்கையின் பரிந்துணர்வை
என்றுமே சலிப்பதில்லை
வாழ்வை அனுபவிக்கும் மரங்கள்.
*
யாரும் கவனிப்பதில்லை என்று
எப்பொழுதும் வருந்துவதில்லை
தும்பைப் பூக்கள்.
*
கிளிகளும் பார்த்ததில்லை
நானும் பார்த்ததில்லை
அத்தி மரம் பூப்பதை….
*
பெண்கள் அனைவரும்
அரவணைக்கிறார்கள்
கள்ளிச் செடிகளை….
*
அமைதியாயிருக்கிறது
அணில் பசியாறும் வரை
பப்பாளி பழம்.
*
ந.க. துறைவன்
ந.க. துறைவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 608
Join date : 27/02/2014

Back to top Go down

ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள் Empty Re: ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்

Post by ந.க. துறைவன் Mon Jun 09, 2014 11:45 am

*
வாழ்வை அனுபவி…!!
*
இயற்கையின் பரிந்துணர்வை
என்றுமே சலிப்பதில்லை
வாழ்வை அனுபவிக்கும் மரங்கள்.
*
யாரும் கவனிப்பதில்லை என்று
எப்பொழுதும் வருந்துவதில்லை
தும்பைப் பூக்கள்.
*
கிளிகளும் பார்த்ததில்லை
நானும் பார்த்ததில்லை
அத்தி மரம் பூப்பதை….
*
பெண்கள் அனைவரும்
அரவணைக்கிறார்கள்
கள்ளிச் செடிகளை….
*
அமைதியாயிருக்கிறது
அணில் பசியாறும் வரை
பப்பாளி பழம்.
*
ந.க. துறைவன்
ந.க. துறைவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 608
Join date : 27/02/2014

Back to top Go down

ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள் Empty Re: ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்

Post by ந.க. துறைவன் Fri Jul 04, 2014 10:46 am

* .

அழகை ரசிக்கும் நதி…!!
*
,இரவில் குளிக்கின்றன
நதியில் விளையாடி
வெட்கப்படாமல் விண்மீன்கள்.
*
நீருக்குள் தெரிகிறது
கரையில் மரங்கள்
பூக்களின் அழகை ரசிக்கும் நதி.
*
குளிர்ந்தக் காற்று
நீரில் அலைகள்
நதியில் மிதக்கும் படகுகள்.
*
ந.க. துறைவன்
ந.க. துறைவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 608
Join date : 27/02/2014

Back to top Go down

ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள் Empty Re: ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்

Post by ந.க. துறைவன் Fri Jul 11, 2014 3:50 pm

கண் விழித்து….!!
*
தூர்வாரிய குளத்தில் கிடைத்தன
நூற்றாண்டு கால
ஐம்பொன் சிலைகள்.
*
வாழைத் தோப்பை அழித்தன
நீர்த் தேடி ஊருக்குள் புகுந்தக்
காட்டு யானைகள்.
*
மாந்தோப்புக்கு காவல்
இரவு கண்விழித்து
மௌனமாய் ஆந்தைகள்.
*



ந.க. துறைவன்
ந.க. துறைவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 608
Join date : 27/02/2014

Back to top Go down

ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள் Empty Re: ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்

Post by ந.க. துறைவன் Sat Jul 12, 2014 4:00 pm

*
பிம்ப இரயில்….!!
*
நதியில் நீர் பெருக்கு
கரையை இணைக்கும் பாலம்
பாய்ந்து கடக்கும் இரயில்.
*
பாலத்தில் ஒடுகிறது
நதி நீரின் கீழ்
பிம்ப இரயில்.
*


ந.க. துறைவன்
ந.க. துறைவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 608
Join date : 27/02/2014

Back to top Go down

ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள் Empty Re: ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்

Post by ந.க. துறைவன் Wed Jul 16, 2014 4:15 pm

நதிக்கரைகளில்…!!
*
மரணித்தவர்கள் எல்லாம்
வாழ்கிறார்கள் என்றும்
நதிக் கரைகளில்…
*
பயிர்களுக்கு உயிர் தருகிறது
மனிதருக்கு உணவு தருகிறது
நதிக்கரை நிலங்கள்.
*
ந.க. துறைவன்
ந.க. துறைவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 608
Join date : 27/02/2014

Back to top Go down

ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள் Empty Re: ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்

Post by ந.க. துறைவன் Fri Jul 25, 2014 10:21 am

பொதுச் சொத்து...!!
*
எவருக்கும் சொந்தமில்லை
ஜீவநதிகளின் நீர்
பிரபஞ்சத்தின் பொதுச் சொத்து.
*
நரம்புகளில் ஒடும்
பூமியின் இரத்தமோ?
நதிகளின் நீர்.
*
ந.க. துறைவன்
ந.க. துறைவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 608
Join date : 27/02/2014

Back to top Go down

ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள் Empty Re: ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்

Post by ந.க. துறைவன் Mon Jul 28, 2014 8:50 am

எதிர்திசையில்…..!!
*
எந்நேரமும் விண்ணிலிருந்து
இறங்கி காற்றில் கலந்து
பூமிக்கு வருகிறது அணுத்துகள்கள்.
*
அத்துமீறும் மனம்
ஆசைகளைக் கட்டுப்படுத்தும்
வாழ்வின் அறநெறிகள்.
*
எனக்கு எதிர்திசையில்
பயணிக்கின்றன
இயற்கைக் காட்சிகள்.
*

ந.க. துறைவன்
ந.க. துறைவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 608
Join date : 27/02/2014

Back to top Go down

ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள் Empty Re: ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்

Post by ந.க. துறைவன் Thu Jul 31, 2014 3:46 pm

*
கொக்குகள் நடனம்…!! [ ஹைக்கூ ]
*

தரிசு நிலங்களில்
புல்லைத் தேடுகின்றன
பொறுமையாய் எருமைகள்.
*
பாதையில்லா பாதையில்
மனம் போல் திரிகின்றன
காட்டில் கரடிகள்.
*
நதிக்கரை வயல்களில்
கொக்குகள் நடனம்
வேடிக்கைப் பார்க்கின்றன வாத்துகள்.
*
ந.க. துறைவன்
ந.க. துறைவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 608
Join date : 27/02/2014

Back to top Go down

ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள் Empty Re: ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்

Post by ந.க. துறைவன் Thu Aug 14, 2014 2:24 pm

*
ஆலயம்….!!
*
ஆகம விதிகளாலானது
ஆன்ம லயம் நிறைந்தது
பக்தர்கள் தரசிக்கும் ஆலயம்.
*
அதிர்வலைகளின் சுழல் வட்டம்
எங்கும் பரவி, மேனியை
சிலிர்க்க வைக்கிறது பிராணசக்தி.
*
பஞ்ச பூதங்களுக்கு நடக்கும்
பூசையைத் தரிசிக்கிறார்கள்
பஞ்ச பூதங்களாலான மனிதர்கள்.
*
உள்ளே நுழைந்ததும்
மௌனமாக்கி விடுகிறது
மந்திரங்களின் ஒலி.
*
எங்கிருந்து வருகிறது?
பரபஞ்ச மந்திரம்
“ ஓம் ” கார ஓலி.
*
ஊன் உடம்பு ஆலயம்
நாதன் உள்ளிருக்கிறான்
நம்மை நாமே தரிசிக்கலாம்.
*
சூன்யத்திலிருந்து இறங்கிய
பிகாசமான சூன்யம்
நிரம்பியதே மூலஸ்தானம்.
*
ந.க. துறைவன்
ந.க. துறைவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 608
Join date : 27/02/2014

Back to top Go down

ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள் Empty Re: ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்

Post by அனுராகவன் Thu Aug 14, 2014 5:55 pm

அருமை அண்ணா..
அனுராகவன்
அனுராகவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 342
Join date : 31/07/2012
Location : madurai

Back to top Go down

ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள் Empty Re: ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்

Post by ந.க. துறைவன் Mon Aug 18, 2014 9:51 am

மணல்…!!.
*
ஆற்றில் வாழும்
நத்தைகளுக்குத் தெரியும்?
மணலைப் பற்றிய அறிவு.
*
எல்லோருக்கும் கைவருமா?
மணலைக் கயிறாகத் திரிக்கும்
வாக்குச் சாதுர்யம்.
*
மணல் மெத்தையில்
அமைதியாகப் படுத்துறங்குகிறது
நீரில் வாழும் மீன்கள்.
*


ந.க. துறைவன்
ந.க. துறைவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 608
Join date : 27/02/2014

Back to top Go down

ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள் Empty Re: ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்

Post by ந.க. துறைவன் Mon Aug 25, 2014 2:44 pm

*
வண்டுகள்…!!
*
பூமியின் இரகசியங்கள்
புலன்களால் உணர்ந்திடும்
மண்வளம் புரிந்த வண்டுகள்.
*
பொன் வண்டின் உலகப்
பொதுமொழி
இன்னிசை கீதம் “ ரீங்காரம் ”.
*
சைவமா? அசைவமா? சொல்
வீட்டிற்குள் வந்த என்
விருந்தாளி வண்டே…!!
*
உறங்கும் குழந்தையை
எதற்காகக் கடித்தாய்?
வண்டின் வன்குணம்.
*
பயிருக்கு உரம் போட
மலஉருண்டை
உருட்டி வரும் வண்டுகள்.
*

ந.க. துறைவன்
ந.க. துறைவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 608
Join date : 27/02/2014

Back to top Go down

ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள் Empty Re: ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்

Post by ந.க. துறைவன் Tue Aug 26, 2014 9:46 am

பசுமை தங்கம்…!!
*
ஏகாந்த வெளியில் பறந்துத் திரியும்
பறவைக்குத் தெரியுமா?
பால்வெளியின் ரகசியம்.
*
முதல் வாஸ்து விஞ்ஞானி
தென்னாட்டுக் கலைஞன்
சிற்பி மயன்.
*
வீட்டிற்கு அழகு செய்கிறது
காட்டின் பசுமைத் தங்கம்
தேவதாரு மரங்கள்.
*
வீட்டில் யாருமில்லை
விளையாடுகிறது ஏறிஇறங்கி
ஊஞ்சலில் எலிகள்.
*
வெளிநாட்டில் கணவன்
உள்நாட்டில் மனைவி
உறவை இணைக்கிறது செல்போன்.
*
ந.க. துறைவன்
ந.க. துறைவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 608
Join date : 27/02/2014

Back to top Go down

ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள் Empty Re: ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்

Post by ந.க. துறைவன் Sun Aug 31, 2014 12:24 pm

*
புரியாமல்…!!
*
புரிந்துக் கொண்டிருப்பாய் என
நினைத்தேன் எப்படியின்னும்
புரிந்துக்கொள்ளாமல் அனிச்சப்பூவே…!!
*
புரிந்துக் கொள்வது கடினம்
புரியாமலிருப்பது எளிது
கவலைப்படாமல் போகிறது சிட்டு.
*
புரிந்தால் தலைக் கவிழும்
புன்னகைப் புரியும் உதடுகள்
உரசி எம்பிப் பறக்கிறது தும்பிகள்.
*
ந.க. துறைவன்
ந.க. துறைவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 608
Join date : 27/02/2014

Back to top Go down

ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள் Empty Re: ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்

Post by ந.க. துறைவன் Sat Sep 13, 2014 11:25 am

மழை நாள்…!!.
*
மழையில் நனைந்து ஈரமாய்
சன்னலோரம் ஓதுங்கியது
சிட்டுக் குருவிகள்.
*
இன்றும் நினைவிலிருக்கிறது
இருவரும் தொப்பலாய் நனைந்த
அந்த மழை நாள்.
*
எங்கும் ஒரே மாதிரியாய்
பெய்வது ஒய்வதில்லை
பருவ மழை.
*
ந.க. துறைவன்
ந.க. துறைவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 608
Join date : 27/02/2014

Back to top Go down

ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள் Empty Re: ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்

Post by ந.க. துறைவன் Sun Sep 21, 2014 12:00 pm

பறத்தல்…!!
*
நினைவுகளிலிருந்து எழுகிறது
அவ்வப்பொழுது மறக்காமல்
மறக்க நினைத்தச் சம்பவம்.
*
இடுப்பிலிருந்தக் குழந்தை
கீழே இறங்கியோடியது
பறந்து விட்டது சிட்டுக்குருவி.
*
பார்க்காமலிருக்க முடியாது?
பார்த்தாலும் யாருக்கும் தெரியாது?
விண்ணில் கிரகங்கள்.
*
ந.க. துறைவன்
ந.க. துறைவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 608
Join date : 27/02/2014

Back to top Go down

ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள் Empty Re: ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்

Post by ந.க. துறைவன் Wed Oct 01, 2014 3:31 pm

வெளிச்சம்…!!
*
இருளைக் கண்டு அச்சப்பட்டது
வெளிச்சம் கண்டதும்
துணிச்சல் பெற்றது மனம்.
*
அந்தரங்கமானவள் அம்மா
அறிந்தவள் மகள்
உதிரமே உதிரம் அறியும்.
*
பகிர்ந்துக் கொள்வதற்கு
பக்குவமான மனம் வேண்டும்
உணர்த்துகின்றன பறவைகள்.
*
ந.க. துறைவன்
ந.க. துறைவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 608
Join date : 27/02/2014

Back to top Go down

ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள் Empty Re: ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்

Post by ந.க. துறைவன் Thu Oct 09, 2014 10:10 am

மண்குதிரை….!!
*
ஆற்றில் இறங்கி
வேகமாய் நடக்கின்றது
மண்குதிரை.
*
ஆணவம் மிகும் மனம்
சிதைவடைகின்றன
முதிர்ந்த அனுபவங்கள்.
*
உறங்குகின்றன அயர்ந்து
பூ மெத்தையில்
வண்டுகள்.
ந.க. துறைவன்
ந.க. துறைவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 608
Join date : 27/02/2014

Back to top Go down

ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள் Empty Re: ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்

Post by ந.க. துறைவன் Mon Oct 27, 2014 9:48 am

அற்புதம்…!!
*
இயற்கைப் படைப்பின் அற்புதம்
தரிசிக்கத் தோன்றுகிறது
நாகலிங்கப் பூக்கள்.
*
உற்சாகமாய் கொண்டாடுகின்றன
உறவுகளோடு பறவைகள்
பிறந்த நாள்.
*
காற்றில் மிதந்துப் பறக்கின்றன
பறவைகள் உதிர்த்த
இறகுகள்.
*
தேடுவது கிடைக்காமல்
தேடிக்கொண்டேயிருக்கின்றன
இரவில் மின்மினிகள்.
*
ந.க. துறைவன்
ந.க. துறைவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 608
Join date : 27/02/2014

Back to top Go down

ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள் Empty Re: ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்

Post by ந.க. துறைவன் Mon Nov 03, 2014 9:04 am

இளகிய நெஞ்சம்…!!
*
மனசில் பொறாமை
பூமிக்குள் மறைந்த வேர்களாய்
வெளியில் சிரிக்கும் இலைகள்.
*
தேன் கொடுக்கும் பூக்கள்
வர்ணிக்க ஆசையா?
பேசாத வண்ணத்துப் பூச்சிகள்.
*
இறுகிய உருவமெனினும்
இளகிய நெஞ்சம்
ஈரம் கசியும் பாறை.
ந.க. துறைவன்
ந.க. துறைவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 608
Join date : 27/02/2014

Back to top Go down

ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள் Empty Re: ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்

Post by ந.க. துறைவன் Tue Nov 04, 2014 4:42 pm


தனிமையில் ஆழந்தச் சிந்தனை
கவனத்தைக் கலைத்தது
தலையில் விழுந்த ஆலம்பழம்
*
அடுக்கு மாடி அடுக்ககங்கள்
உயர்ந்து எழுந்தன
காணவில்லை தாமரைக்குளம்.
*
வனத்தில் சீதை, தேடலில் ராமன்
ஆட்சியில் பரதன்
அயோத்தியில் சோகம்.
*
ந.க. துறைவன்
ந.க. துறைவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 608
Join date : 27/02/2014

Back to top Go down

ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள் Empty Re: ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்

Post by ந.க. துறைவன் Thu Nov 06, 2014 9:50 am

பொன்னிறமான நெல்மணிகள்
அறுவடைக்கு காத்திருக்கின்றது
அழித்துவிட்டது புயல்வெள்ளம்.
*
விவசாயியின் உழைப்பு
நீர்சூழ்ந்த வயல்
மிதக்கின்றன பயிர்கள்.
*
வரப்பு உயரவில்லை
வாழ்க்கை உயரவில்லை
அழிவின் விளிம்பில் விவசாயி.
*
ந.க. துறைவன்
ந.க. துறைவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 608
Join date : 27/02/2014

Back to top Go down

ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள் Empty Re: ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum