TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Apr 24, 2024 2:31 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Apr 23, 2024 12:00 am

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 22, 2024 9:07 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri Apr 19, 2024 9:02 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }

Go down

ஈச்சங்குலை...!!. {கவிதைகள் } Empty ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }

Post by ந.க. துறைவன் Tue Jul 01, 2014 3:38 pm

மகிழும் தவளைகள்….!!
*
விளையாட்டு காட்டுகிறது பூக்களுக்கு
இரவில் ஒளி சிந்தி மின்மினிகள்
*
இருளில் எவரை வேவு பார்க்கின்றன
இரவில் விழித்திருக்கும் ஆந்தைகள்.
*
காதல் கிளிகளின் கூடுகளை
எட்டி.ப்பார்க்கின்றன காக்கைகள்.
*
இரவுமில்லை பகலுமில்லை
நீரில் வாழும் மீன்களுக்கு…
*
மழை நின்றபின் இரவெல்லாம்
கொண்டாட்டம் கத்தி மகிழும தவளைகள்.
*

ந.க. துறைவன்
ந.க. துறைவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 608
Join date : 27/02/2014

Back to top Go down

ஈச்சங்குலை...!!. {கவிதைகள் } Empty Re: ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }

Post by ந.க. துறைவன் Tue Jul 08, 2014 10:21 am

*
பூமியே அழகு தானே….
*
பெருக்கி பெருக்கி சுத்தப் படுத்தினாலும்
பூக்களை உதிர்க்கிறது பவழமல்லி மரங்கள்.
*
சருகு இலையைக் கொண்டு வந்து
சேர்த்து விட்டுப் போகிறது காற்று.
*
பாதையில் போகும் மனிதர்கள்
மனம் நிறையக் குப்பைகள்.
-

ந.க. துறைவன்
ந.க. துறைவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 608
Join date : 27/02/2014

Back to top Go down

ஈச்சங்குலை...!!. {கவிதைகள் } Empty Re: ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }

Post by ந.க. துறைவன் Sat Jul 12, 2014 9:45 am

*
மனக்குப்பை….!!
*
மக்காதக் குப்பைகள் போலாகி விட்டது
மனிதர்களின் எண்ணங்கள்.
*
மக்கும் குப்பைகள் பூமிக்கு உரம்
மக்காத குப்பைகள் பூமிக்கு நஞ்சு.
*
வாரி வாரி போகிறது நகராட்சி
லாரி நிறைய குப்பைகள்..
*
ந.க. துறைவன்
ந.க. துறைவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 608
Join date : 27/02/2014

Back to top Go down

ஈச்சங்குலை...!!. {கவிதைகள் } Empty Re: ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }

Post by ந.க. துறைவன் Wed Jul 16, 2014 11:21 am

*
தேடுகிறார்கள்…!!
*
நீரின் அழுக்கைச் சுத்தப் படுத்தி
சுகாதாரமாய் வாழ்கின்றன மீன்கள்.
*
பொறாமைகள் தீயில் எரிகிறது
திகுதிகுவென்று குப்பைத் தொட்டி.
*
சுத்தம் பாதி குப்பைகள் பாதியாய்
என்றும் காட்சியளிக்கிறது நகரவீதி.
*
குப்பையில் தேடியெடுக்கிறார்கள்
பொருட்கள் விற்று பிழைப்பதற்கு….
*
ந.க. துறைவன்
ந.க. துறைவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 608
Join date : 27/02/2014

Back to top Go down

ஈச்சங்குலை...!!. {கவிதைகள் } Empty Re: ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }

Post by ந.க. துறைவன் Fri Jul 25, 2014 3:27 pm

*
தேனீர்….!! [கவிதை].
*
ஊற்சாகமாய் பேசி கலகலப் பாக்குகிறார்
டீ குடித்த நண்பர்.
*
நட்பை உருவாக்குகிறது
ஒரு கப் தேனீர்.
*
ந.க. துறைவன்
ந.க. துறைவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 608
Join date : 27/02/2014

Back to top Go down

ஈச்சங்குலை...!!. {கவிதைகள் } Empty Re: ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }

Post by ந.க. துறைவன் Tue Jul 29, 2014 11:35 am

மண் வாசனை…!!
*
மண்வாசனை வீசுகிறது
வரும் போலிருக்கிறது மழை.
*
பாடலின் பொருள் தெரியாமல்
இசையைக் கேட்கிறது குழந்தை.
*
நினைத்தபோது பார்க்க முடியவில்லை
நினைக்காதபோது பார்க்க முடிகிறது.
*
ந.க. துறைவன்
ந.க. துறைவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 608
Join date : 27/02/2014

Back to top Go down

ஈச்சங்குலை...!!. {கவிதைகள் } Empty Re: ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }

Post by ந.க. துறைவன் Fri Aug 01, 2014 4:13 pm

*
அச்சத்துடன்…!!
*
ஆலங்கட்டி மழை வேகத்தில்
மடமடவென கிழிந்தன வாழையிலைகள்.
*
ஈரப்பதமான காற்றின் குளுமையை
அனுபவித்துத் திரிகின்றன ஈசல்கள்.
*
ஆடு கோழிகள் அச்சத்துடன் திரிகின்றன
ஆடியில் அம்மனுக்குப் பலி.
*
ந.க. துறைவன்
ந.க. துறைவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 608
Join date : 27/02/2014

Back to top Go down

ஈச்சங்குலை...!!. {கவிதைகள் } Empty Re: ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }

Post by ந.க. துறைவன் Sun Aug 03, 2014 12:35 pm

ஊசிநூல்….!!
*
பூசைக்கு உபயோகிப்பதில்லை
தேக்கு மரப் பூக்கள்.
*
ஆசைகளைச் சுமந்து மேலே வருகிறது
கிணற்றிலிருந்து வாளி நிறைய தண்ணீர்.
*
வெட்டுவது கத்திரிக்கோல்
நட்பை இணைப்பது ஊசிநூல்.
*
ந.க. துறைவன்
ந.க. துறைவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 608
Join date : 27/02/2014

Back to top Go down

ஈச்சங்குலை...!!. {கவிதைகள் } Empty Re: ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }

Post by ந.க. துறைவன் Wed Aug 13, 2014 5:16 pm

*
மாதிரி…!! [ கவிதை ]
*
வருத்தப்படுவது மாதிரி தெரிகிறார்கள்
யார் முகத்திலும் வருத்தமில்லை.
*
உடல் பரிசோதனைச் செய்கிறார்கள்
பாதையோரம் குடையின் கீழ்….
*
இன்னும் நோஞ்சானகவே இருக்கிறார்கள்
சத்துணவு சாப்பிடும் குழந்தைகள்.
*
ந.க. துறைவன்
ந.க. துறைவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 608
Join date : 27/02/2014

Back to top Go down

ஈச்சங்குலை...!!. {கவிதைகள் } Empty Re: ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }

Post by ந.க. துறைவன் Wed Aug 20, 2014 10:10 am

*
இடம்விட்டு…!!
*
சொல்லி என்னவாகப் போகிறது?
சொல்லி இருக்கலாமே…!!.
*
படுத்திருந்தவர் எழுந்தார்
படுக்க வந்தவருக்கு இடம்விட்டு…!!.
*
வார்த்தைகள் கண்டபடி வந்தது
சண்டை உடனே வந்தது
*
தலைகுனிந்து வெட்கப்பட்டான்
சிரித்தவள் துக்கப்பட்டாள்.
*
ந.க. துறைவன்
ந.க. துறைவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 608
Join date : 27/02/2014

Back to top Go down

ஈச்சங்குலை...!!. {கவிதைகள் } Empty Re: ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }

Post by ந.க. துறைவன் Wed Aug 27, 2014 11:01 am

*
நினைவுகள்…!!
*
அழுக்கு நீங்கச் சுத்தம் செய்கிறோம்
சுத்தம் செய்யசெய்ய அழுக்கு சேர்கிறது.
*
மனமெல்லாம் காதல் நினைவுகள்
மரம் நிறையச் செம்பருத்திப் பூக்கள்.
*
சிரித்தவன் வாய் துர்நாற்றம்
வெண்பற்கள் பான்பராக் நிறமாற்றம்.
*
என்ன சும்மா இருக்கீங்க?
சும்மா இருக்கத்துானே சொன்னாங்க….
*
செல்லக் குழந்தைக்குப் பாராட்டு
தாய்ப்பாடி மகிழ்வாள் தாலாட்டு.
*
நெஞ்சுருக அம்பாளின் பாசுரம்
பாடினாள் தருவாள் வேண்டும் வரம்.
*
ந.க. துறைவன்
ந.க. துறைவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 608
Join date : 27/02/2014

Back to top Go down

ஈச்சங்குலை...!!. {கவிதைகள் } Empty Re: ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }

Post by ந.க. துறைவன் Tue Sep 02, 2014 9:58 am

மறுப்பு…!!
*
வரச் சொன்னவர் வரவில்லை
வராதவர் வந்திருந்தார் இன்று.
*
சுடர்ந்து அணைந்திருந்தது
கோயில் வாசல்படியில் விளக்கு
*
இறங்க மறுக்கிறது.
ஏறுகின்ற விலை.
*
பாவம் போக்க புண்ணியம் செய்கிறார்கள்
புண்ணியம் சேர்க்க தர்மம் செய்கிறார்கள்.
*
ஆரோக்கியம் தேடித் தேடி
அருவியில் குளிக்கிறார்கள்.
*
ந.க. துறைவன்
ந.க. துறைவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 608
Join date : 27/02/2014

Back to top Go down

ஈச்சங்குலை...!!. {கவிதைகள் } Empty Re: ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }

Post by ந.க. துறைவன் Wed Sep 03, 2014 9:23 am

*
நினைவு….!!
*
நினைவிலிருந்து மறந்து விட்டது
நினைவிற்கு வந்தது திடீரென இன்று.
*
அருந்தியவனுக்குத் தெரியும்
அருகம்புல்லின் மருத்துவக் குணம்.
*
வீழ்த்தப்பட்டவர்கள் எழுவார்கள்
வீழ்த்தியவர்கள் வீழ்வார்கள்.
*
கத்திரிப்பூ பூத்திருச்சி
காதல் மலர்ந்திருச்சி.
*
தினமொரு ஆடையணிகிறது
ஜவுளிக் கடைப் பொம்மைகள்
*
ந.க. துறைவன்
ந.க. துறைவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 608
Join date : 27/02/2014

Back to top Go down

ஈச்சங்குலை...!!. {கவிதைகள் } Empty Re: ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }

Post by ந.க. துறைவன் Wed Sep 03, 2014 9:24 am

*
நினைவு….!!
*
நினைவிலிருந்து மறந்து விட்டது
நினைவிற்கு வந்தது திடீரென இன்று.
*
அருந்தியவனுக்குத் தெரியும்
அருகம்புல்லின் மருத்துவக் குணம்.
*
வீழ்த்தப்பட்டவர்கள் எழுவார்கள்
வீழ்த்தியவர்கள் வீழ்வார்கள்.
*
கத்திரிப்பூ பூத்திருச்சி
காதல் மலர்ந்திருச்சி.
*
தினமொரு ஆடையணிகிறது
ஜவுளிக் கடைப் பொம்மைகள்
*
ந.க. துறைவன்
ந.க. துறைவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 608
Join date : 27/02/2014

Back to top Go down

ஈச்சங்குலை...!!. {கவிதைகள் } Empty Re: ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }

Post by ந.க. துறைவன் Mon Sep 15, 2014 12:43 pm

அத்திப் பழம்…!!
*
தவளைகள் தூங்கவில்லை
இரவெல்லாம் கனத்த மழை.
*
வண்டுகள் பொய் சொன்னாலும்
செவிமடுப்பதில்லை பூக்கள்.
*
உள்ளே புழு பூச்சிகள் நெளிகிறது
இனிக்கும் அழகான அத்திப் பழம்.
*
நெருப்பென்றால் வாய் சுடும்
ஐஸ் என்றால் வாய் இனிக்கும்
*
வெளியில் தெரியாது எப்பொழுதும்
உள்ளிருக்கும் பொறாமை.
*

ந.க. துறைவன்
ந.க. துறைவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 608
Join date : 27/02/2014

Back to top Go down

ஈச்சங்குலை...!!. {கவிதைகள் } Empty Re: ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }

Post by ந.க. துறைவன் Wed Oct 08, 2014 9:30 am

மாற்றம்…!!
*
மாற்றத்தை தானே செய்துக் கொள்கின்றன
மாற்றத்தை விரும்பும் இயற்கை.
*
மாற்றத்தை செய்து காட்டுவார்கள்
மாற்றத்தை விரும்பும் மக்கள்.
*
வலிந்து திணிப்பதல்ல மாற்றம்
மனதிலிருந்து எழுவதே மாற்றம்.
*
மாற்றத்திலிருந்து உதிப்பதே
மாற்றுச் சிந்தனை.
*
மாற்றங்களையும் ஏமாற்றங்களையும்
பகுத்தறிந்துக் கொள்ளும் அறிவு.
*
ந.க. துறைவன்
ந.க. துறைவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 608
Join date : 27/02/2014

Back to top Go down

ஈச்சங்குலை...!!. {கவிதைகள் } Empty Re: ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }

Post by ந.க. துறைவன் Mon Oct 13, 2014 9:19 am

அதீதம்….!!
*
ஆபத்தானதாகி விடுகிறது
அதீதமான சிந்தனை.
*
கனவுகள் பொய்யல்ல, எப்போதேனும்
நிஜமாகின்றன கனவுகள்.
*
குழந்தைகள் கற்றுக் கொடுக்கிறார்கள்
பெரியவர்களுக்குப் பாடங்கள்.
*
ந.க. துறைவன்
ந.க. துறைவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 608
Join date : 27/02/2014

Back to top Go down

ஈச்சங்குலை...!!. {கவிதைகள் } Empty Re: ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }

Post by ந.க. துறைவன் Fri Oct 24, 2014 10:20 am

சொல்…!!
*
சொல்வதற்கு ஒன்றுமில்லையென்று
சொல்லிக் கொண்டேயிருக்கிறார்கள்.
*
சொல்வது யாருக்கும் எளிது
சொல்லாமல் இருப்பதுதான் கடினம்.
*
படபடவென்று பேசுவோர்கள்
பயன்படுத்துவர் பயனற்ற பலசொல்.
*
சொல்பேச்சை யாரும் கேட்கவில்லை என்று
சொல்லிக் குறைபடுவர் பெற்றோர்.
*
உபயோகமான சொல் அன்பு வளர்க்கும்
உதவாதச் சொல் உபத்திரம் தரும்.
*
ந.க. துறைவன்
ந.க. துறைவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 608
Join date : 27/02/2014

Back to top Go down

ஈச்சங்குலை...!!. {கவிதைகள் } Empty Re: ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }

Post by ந.க. துறைவன் Tue Nov 04, 2014 9:16 am

பெயர்கள்…!!
*
மனவிரிசல்களை நொடிக்குள் தீர்த்து
வைக்கின்றது இருவரின் சுகந்த மௌனம்.
*
ஆண் – பெண் அடையாளமே
அழைக்கும் நம் பெயர்கள்.
*
உதயமாகும் புதுபுதுக் கட்சிகள்
உடைந்து உடைந்து வளர்கிறது.
*
குற்றங்களை நியாயப் படுத்துகின்றது
ஓங்கி ஓலிக்கும் பக்திக் குரல்கள்.
*
முன்னும் பின்னும் பின் தொடர்கிறது
என்னை என் நிஜநிழல்.
*
ந.க. துறைவன்
ந.க. துறைவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 608
Join date : 27/02/2014

Back to top Go down

ஈச்சங்குலை...!!. {கவிதைகள் } Empty Re: ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }

Post by ந.க. துறைவன் Fri Nov 07, 2014 9:57 am

மிஸ்டுகால்….!!
*
தொலைத்தவர்கள் தேடுகிறார்கள்
தேடுகிறவர்கள் அடைகிறார்கள்.
*
அம்மையப்பன் அரசு
தமிழ்நாட்டிற்று மிகப் பழசு.
*
உண்டி கொடுப்பவர்க்கு
உதவிகள் செய்வோரில்லை.
*
உலகில் அதிக உறுப்பினர்கள் கொண்டது
மிஸ்டுகால் உபயோகிப்போர் சங்கம்.
ந.க. துறைவன்
ந.க. துறைவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 608
Join date : 27/02/2014

Back to top Go down

ஈச்சங்குலை...!!. {கவிதைகள் } Empty Re: ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum