TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:28 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:25 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Mar 23, 2024 3:17 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Mar 18, 2024 4:17 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


ந.க.துறைவனின் புதுக் கவிதைகள்

+4
மாலதி
mmani
அருள்
ந.க. துறைவன்
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

ந.க.துறைவனின் புதுக் கவிதைகள் Empty ந.க.துறைவனின் புதுக் கவிதைகள்

Post by ந.க. துறைவன் Mon Mar 17, 2014 10:40 am


*
தூக்கமே விழிப்பு{புதுக் கவிதை}
*
தூக்கம் வரவில்லை எனப்
புரண்டுப் புரண்டுப் படுத்தான்.
தூக்காமல் எவ்வளவு நேரந்தான்
விழித்திருப்பதென எழுந்துப் போய்
தண்ணீர்க் குடித்து விட்டு வந்து
படுக்கையில் உட்கார்ந்தான்.
எதையோ யோசித்தவாறு மீண்டும்
படுக்கையில் சாயந்தான்.
*
தூக்கம் வரவில்லை துங்க முயற்சித்தான்
படுத்தவாறே தியானப்
பயிற்சி செய்துப் பார்த்தான்.
தூக்கம் வருவதாகக் காணோம்
மீண்டும் எழுந்துப் போய்
சிறுநீர்க் கழித்து விட்டுவந்துக்
கடிகாரத்தில் நேரம் பார்த்தான்
மணி ஐந்துக் காட்டியது முள்கள்.
*
தூங்க முயற்சிக்காமல் விழித்திருந்தான்
வாசலில் காலிங் பெல் அடிக்கும்
சத்தங் கேட்டுப் போய் கதவைத் திறந்தான்.
எதிரில்,பயணக் களைப்பும்
அசதியுமாய் கலைந்தக் கூந்தலுமாய்
நின்றிருந்தாள். ஊருக்குப் போய்த்
திரும்பி வந்த மனைவி, குழந்தைகள்
அவனுக்குப் பின்னாலேயே நின்று
அவர்களை வரவேற்றதுப் பூனைக் குட்டி…!!
ந.க. துறைவன்
ந.க. துறைவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 608
Join date : 27/02/2014

Back to top Go down

ந.க.துறைவனின் புதுக் கவிதைகள் Empty Re: ந.க.துறைவனின் புதுக் கவிதைகள்

Post by அருள் Mon Mar 17, 2014 4:34 pm

கடத்தப்பட்ட அண்ணாவைக் கேட்ட சிறுமியும் கடத்தப்பட்டாள்!

அண்ணாவை காணவில்லை என
அழுதாள் தங்கச்சி
அவளும் காணாமல் போனாள்..!!!

என்ர பிள்ளையை திருப்பித்தாங்கோ என
கதறினாள் ஒரு தாய்
அவளும் காணாமல் போனாள்..!!!

இதயமே இல்லாத
இரும்புமனிதர்கள் தேசத்தில்
கண்ணீர் வடிப்பது தண்டனைக்குரிய குற்றம்!

மனிதமே இல்லாத மிருகங்கள் தேசத்தில்
அழுபவனுக்கு மரண தண்டனை!

நீதியே இல்லாத நிர்வாண நாட்டில்
கோமணத்தோடு திரிபவன் குற்றவாளி!

கேட்க நாதியற்ற இனமாய் இருப்பதால்
நாய் கூட துணிந்து காலைத்தூக்கும் நரக தேசம்!

விசர் நாய்க்கு தண்ணீருக்குப் பயம்
வெறிநாய்களுக்கு தமிழனின் கண்ணீருக்குப் பயம்!

இரத்தக்காட்டேறிகளின் தேசத்தில்
இரத்தமே குடிபானம்!-தமிழனின்
கண்ணீரே கறை கழுவும் தண்ணீர்!

என் அண்ணா எங்கே என கேட்டவளும் இல்லை
அவர்களை பெற்றவளும் இல்லை

உலக மனிதாபிமான கனவான்களே!!!

மலேசியன் விமானத்தை தேடும்போது
இவர்களையும் கொஞ்சம் தேடுங்கள்....
ஏனெனில்...
தமிழர்களும் மனிதர்கள் தான்!!!
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

ந.க.துறைவனின் புதுக் கவிதைகள் Empty Re: ந.க.துறைவனின் புதுக் கவிதைகள்

Post by ந.க. துறைவன் Mon Mar 17, 2014 5:29 pm

அருமையான பகிர்வு அருள் நன்றி...
ந.க. துறைவன்
ந.க. துறைவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 608
Join date : 27/02/2014

Back to top Go down

ந.க.துறைவனின் புதுக் கவிதைகள் Empty Re: ந.க.துறைவனின் புதுக் கவிதைகள்

Post by ந.க. துறைவன் Mon Mar 17, 2014 5:29 pm

அருமையான பகிர்வு அருள் நன்றி...
ந.க. துறைவன்
ந.க. துறைவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 608
Join date : 27/02/2014

Back to top Go down

ந.க.துறைவனின் புதுக் கவிதைகள் Empty Re: ந.க.துறைவனின் புதுக் கவிதைகள்

Post by mmani Mon Mar 17, 2014 6:07 pm

ந.க. துறைவன் wrote:அருமையான பகிர்வு அருள்  நன்றி...
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

ந.க.துறைவனின் புதுக் கவிதைகள் Empty Re: ந.க.துறைவனின் புதுக் கவிதைகள்

Post by ந.க. துறைவன் Tue Mar 18, 2014 11:20 am

சமாளிப்பு{புதுக் கவிதை}
*
தாமதமாகப் போகக் கூடாதென்று
சீக்கிரமாய் வந்துக் காத்திருந்தேன்.
பஸ் போய் வி்ட்டாத வென
அருகிலிருந்தவரிடம் கேட்டேன்
பஸ் போய்விட்டது என்றார்கள்.
வேறொன்றில் போகலாமென
விசாரித்தால்
ரோடு வேலை நடக்கிறது
அந்தப் பக்கம் போகாது என்றார்கள்.
வேறு பஸ் எப்பொழுது வரும் என்று
சொல்வதற்கில்லை.காத்திருப்பதும்
காலவிரயமென சேர் ஆட்டோவில்
ஏறப் போனால் உள்ளே கூட்ட நெரிசல்
உட்கார இடமில்லை.
அடுதது, என்ன செய்வ தென்று
முடிவெடுப்பதற்குள் போக வேண்டிய
பஸ் வந்து நின்றது. ஏறினேன்.
எப்படியோ,
தாமதத்திற்குக் காரணம்
கேட்டால் என்ன சொல்லி
சமாளிக்கலாம்? என்ற சிந்தனையோடு
உள்ளே நுழைந்தேன். சட்டென
மூலையில் உதித்ததொரு
சின்னக் காரணம்…
ந.க. துறைவன்
ந.க. துறைவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 608
Join date : 27/02/2014

Back to top Go down

ந.க.துறைவனின் புதுக் கவிதைகள் Empty Re: ந.க.துறைவனின் புதுக் கவிதைகள்

Post by மாலதி Wed Mar 19, 2014 7:37 am

சின்னக் காரணம்… ?
 hmmm  hmmm  hmmm 


மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

ந.க.துறைவனின் புதுக் கவிதைகள் Empty Re: ந.க.துறைவனின் புதுக் கவிதைகள்

Post by ந.க. துறைவன் Wed Mar 19, 2014 8:55 am

பெரும் தயக்கம்{புதுக் கவிதை}
*
ஊரிலிருந்து வந்தவர்
யாரென்று எனக்குத் தெரியவில்லை.
நீங்க யாரென்று கேட்டதற்கு
உறவினர் ஒருவரின்
பெயரைச் சொல்லி
அவர்களுக்குச் சொந்த மென்று
விவரமாய்ச் சொன்னார்.
என்ன விஷயமாக வந்தீர்கள்
என்று கேட்டேன். தேடி வந்தச்
செய்தியைச் சொன்னார்.
*
ஊர்காரர் என்றாலும்
அறிமுகமில்லாதவர்க்கு
எப்படி உதவி செய்வ தென்று
பெரும் தயக்கம்.
சரி பார்க்கலாம் என்றேன்.
”கொஞ்சம் பார்த்து செய்யுங்க” என்று
கெஞ்சிக் கேட்டு விடைப் பெற்றார்.
மறு முனையிலிருந்து
போன் வந்தது.
“நம்ம ஊரிலிருந்து பையன்
ஒருத்தன் வருவா, வந்தா?
ஏதாச்சும் சொல்லி
சமாளியப்போ” என்றார்
அனுப்பி வைத்த உறவுக்காரர்.
ந.க. துறைவன்
ந.க. துறைவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 608
Join date : 27/02/2014

Back to top Go down

ந.க.துறைவனின் புதுக் கவிதைகள் Empty Re: ந.க.துறைவனின் புதுக் கவிதைகள்

Post by mmani Wed Mar 19, 2014 1:13 pm

அனுப்பி வைத்த உறவுக்காரர். 7  7  7 
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

ந.க.துறைவனின் புதுக் கவிதைகள் Empty Re: ந.க.துறைவனின் புதுக் கவிதைகள்

Post by ந.க. துறைவன் Thu Mar 20, 2014 11:32 am

நன்றி மணி சார்...
ந.க. துறைவன்
ந.க. துறைவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 608
Join date : 27/02/2014

Back to top Go down

ந.க.துறைவனின் புதுக் கவிதைகள் Empty Re: ந.க.துறைவனின் புதுக் கவிதைகள்

Post by ந.க. துறைவன் Sat Mar 22, 2014 10:00 am

இன்று அதிகம்….!! {புதுக்கவிதை}
*
நம்பிக்கை,அவநம்பிக்கை என்பது
அவரவர்களின் மனநிலைத்
தீர்மானக்கும் செயல்
ஒருத்தரை எப்படி நம்புவது
என்றொரு சந்தேகம் மனதில்
எழுகிறது அனைவருக்கும்.

நம்பிக்கையாளன் என்று
நம்புவதற்கு ஏதேனும்
அளவுக் கோல் உண்டோ? உண்டு.
நம்பிக்கையானவர் என்று
நம்புவதற்கு நம்பிக்கையான
ஒருவர் உறுதியளித்தால்
நம்பி்க்கையாளன் என்று
நம்புகிறார்கள் சந்தேகத்தோடு,
எப்பொழுதும், யாரையும் எடுத்த
எடுப்பிலேயே நம்புவதில்லை.
நம்பிக்கையான மனிதர்களைப்
பார்ப்பதே அபூர்வமாக இருக்கிறது
.இன்று.

சொல்லும் செயலும்
நம்பிக்கைக் குரியதாக இருந்தாலும்
ஏனோ, அவர்களின் மீது
நம்பிக்கை வருவதில்லை சட்டென
நம்பிக்கையோடு நம்புவர்கள்
கொஞ்சம் பேர் தான்.
நம்பிக்கையோடு ஏமாறுபவர்கள் தான்
அதிகம் இன்று…!!


ந.க. துறைவன்
ந.க. துறைவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 608
Join date : 27/02/2014

Back to top Go down

ந.க.துறைவனின் புதுக் கவிதைகள் Empty Re: ந.க.துறைவனின் புதுக் கவிதைகள்

Post by logu Sat Mar 22, 2014 10:39 pm

நம்பிக்கையோடு ஏமாறுபவர்கள் தான்
அதிகம் இன்று…!! 
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

ந.க.துறைவனின் புதுக் கவிதைகள் Empty Re: ந.க.துறைவனின் புதுக் கவிதைகள்

Post by ந.க. துறைவன் Sun Mar 23, 2014 10:42 am

நன்றி லோகு சார்....
ந.க. துறைவன்
ந.க. துறைவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 608
Join date : 27/02/2014

Back to top Go down

ந.க.துறைவனின் புதுக் கவிதைகள் Empty Re: ந.க.துறைவனின் புதுக் கவிதைகள்

Post by ஜனனி Mon Mar 24, 2014 9:56 am

logu wrote: நம்பிக்கையோடு ஏமாறுபவர்கள் தான்
அதிகம் இன்று…!! 
 நல்ல இருக்கு  நல்ல இருக்கு
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

ந.க.துறைவனின் புதுக் கவிதைகள் Empty Re: ந.க.துறைவனின் புதுக் கவிதைகள்

Post by ந.க. துறைவன் Mon Mar 24, 2014 4:05 pm

நன்றி மேடம்
ந.க. துறைவன்
ந.க. துறைவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 608
Join date : 27/02/2014

Back to top Go down

ந.க.துறைவனின் புதுக் கவிதைகள் Empty Re: ந.க.துறைவனின் புதுக் கவிதைகள்

Post by ந.க. துறைவன் Tue Mar 25, 2014 10:12 am

மாயா ஜாலம் { புதுக் கவிதை}
*
வெளியிலிருந்துப்
பார்த்தேன்
உள்ளிருப்பது
எதுவும் தெரியவில்லை
உள்ளிலிருந்துப்
பார்த்தேன்
வெளியிலிருப்ப தெல்லாம்
நன்குத் தெரிந்ததுக்
எல்லாம், அந்தக்
கண்ணாடிக் காட்டும்
மாயா ஜாலம்.

ந.க. துறைவன்
ந.க. துறைவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 608
Join date : 27/02/2014

Back to top Go down

ந.க.துறைவனின் புதுக் கவிதைகள் Empty Re: ந.க.துறைவனின் புதுக் கவிதைகள்

Post by mmani Tue Mar 25, 2014 12:57 pm

எல்லாம், அந்தக்
கண்ணாடிக் காட்டும்
மாயா ஜாலம்.  நல்ல இருக்கு  நல்ல இருக்கு  நல்ல இருக்கு 
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

ந.க.துறைவனின் புதுக் கவிதைகள் Empty Re: ந.க.துறைவனின் புதுக் கவிதைகள்

Post by ந.க. துறைவன் Tue Mar 25, 2014 5:15 pm

நன்றி மணி சார்...
ந.க. துறைவன்
ந.க. துறைவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 608
Join date : 27/02/2014

Back to top Go down

ந.க.துறைவனின் புதுக் கவிதைகள் Empty Re: ந.க.துறைவனின் புதுக் கவிதைகள்

Post by krishnaamma Wed Mar 26, 2014 8:36 am

mmani wrote:எல்லாம், அந்தக்
கண்ணாடிக் காட்டும்
மாயா ஜாலம்.  நல்ல இருக்கு  நல்ல இருக்கு  நல்ல இருக்கு 
krishnaamma
krishnaamma
பண்பாளர்
பண்பாளர்

Posts : 955
Join date : 14/01/2014

Back to top Go down

ந.க.துறைவனின் புதுக் கவிதைகள் Empty Re: ந.க.துறைவனின் புதுக் கவிதைகள்

Post by ந.க. துறைவன் Wed Mar 26, 2014 9:51 am

அய்யனாரு…!!
*
அய்யனாரு உருவம் பாரு
கண்களிலே கோபம் பாரு
கருத்த மீசை அழகைப் பாரு
பெரிய வாளைக் கையில் பாரு.
*
குதிரையிலே அய்யனாரு
குந்தியிருக்கும் ஜோரைப் பாரு
பக்கத்திலே துணையைப் பாரு
பத்தினிப் பெண் தாயைப் பாரு.
*
சுட்டெரிக்கும் வெயில் பாரு
வெட்ட வெளியின் தகிப்பைப் பாரு
வேப்ப மர நிழலைப் பாரு
வெப்பந் தணியும் உணர்ந்துப் பாரு.
*
குழந்தைகளின் ஆட்டம் பாரு
வாலிபர்கள் சேட்டைப் பாரு
கன்னிப் பெண்கள் கண்ணைப் பாரு
ஆண்களின் அரட்டைப் பாரு.
*
கிழவிகளின் பக்திப் பாரு
முதியவர்களின் குசும்பைப் பாரு.
பலியாடு முழிப்பைப் பாரு
பூசாரியின் சிரிப்பைப் பாரு.
*
பொங்கப் பானைப் பொங்குதுப் பாரு
பொண்ணுங்க முகத்தில் சிரிப்பைப் பாரு
வாழையிலைப் படையல் பாரு
மாவிளக்கு வரிசைப் பாரு.
*
கற்பூர ஆரத்திப் பாரு
கன்னத்திலே போட்டுப் பாரு
குல தெய்வத்தை வணங்கிப் பாரு
வரம் கொடுப்பாள் நாளும் பாரு.
ந.க. துறைவன்
ந.க. துறைவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 608
Join date : 27/02/2014

Back to top Go down

ந.க.துறைவனின் புதுக் கவிதைகள் Empty Re: ந.க.துறைவனின் புதுக் கவிதைகள்

Post by ந.க. துறைவன் Thu Mar 27, 2014 2:52 pm

அவன்…!!
*
அவன் எப்படிப்பட்ட
மனம் படைத்தவ னென்று
குயிலிடம் கேட்டார்கள்
அதற்குச் சொல்லத் தெரியவில்லை.
*
அவன் எப்படிப்பட்ட
குணவா னென்று
குருவியிடம் கேட்டார்கள்
அதற்குச் சொல்லத் தெரியவில்லை.
*
அவன் எப்படிப்பட்ட
இயல்புடையவ னென்று
வண்ணத்துப் பூச்சியிடம் கேட்டார்கள்
அதற்குச் சொல்லத் தெரியவில்லை.
*
அவன் எப்படிப்பட்ட
செயல்பாடுகள் நிறைந்தவன் என்று
காக்கையிடம் கேட்டார்கள்
அதற்குச் சொல்லத் தெரியவில்லை.
*
அவன் எப்படிப்பட்டப்
பேச்சாளன் என்று கிளிகளிடம்
கேட்டார்கள்
அதற்குச் சொல்லத் தெரியவில்லை
*
அவன் எப்படிப்பட்ட
இல்லறத்தான் என்று
அவன் வீட்டின்
பல்லியிடம் கேட்டார்கள்ர
அதற்குச் சொல்லத் தெரியவில்லை.
*
அவன் எப்படிப்பட்ட
விசுவாசமுள்ளவன் என்று
அவன் வீட்டில் வளரும்
நாயிடம் விசாரித்தார்கள்
அதற்குச் சொல்லத் தெரியவில்லை
*
அவன் எப்படிப்பட்டவன் என்று
ஒரு மனிதனிடம் கேட்டார்கள்
அவன் படபட வென்று
தப்பும் தவறுமாய்
அவனைப் பற்றின
உண்மையைப் புராணத்தைத்
தைரியமாய் சில நொடிகளில்
புட்டுப் புட்டு வைத்தான்.
*

ந.க. துறைவன்
ந.க. துறைவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 608
Join date : 27/02/2014

Back to top Go down

ந.க.துறைவனின் புதுக் கவிதைகள் Empty Re: ந.க.துறைவனின் புதுக் கவிதைகள்

Post by ந.க. துறைவன் Fri Mar 28, 2014 12:38 pm

தனிமை {புதுக் கவிதை}
*
தனிமையிலிருந்து
தனிமையை உணர்ந்து
அமைதி பெறலா மென்று
தனிமையிலிருந்தேன்
தனிமையிலிருக்கும்
என்னைப் பார்த்து
நக்கலாய்ச் சிரித்தது
சுவரிலிருந்தப் பல்லி.
*
ந.க. துறைவன்
ந.க. துறைவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 608
Join date : 27/02/2014

Back to top Go down

ந.க.துறைவனின் புதுக் கவிதைகள் Empty Re: ந.க.துறைவனின் புதுக் கவிதைகள்

Post by logu Sat Mar 29, 2014 8:05 am

நீங்க அதிகமாக தனிமையில் இருப்பீங்க போல
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

ந.க.துறைவனின் புதுக் கவிதைகள் Empty Re: ந.க.துறைவனின் புதுக் கவிதைகள்

Post by ந.க. துறைவன் Sat Mar 29, 2014 4:07 pm

இல்லீங்க லோகு....
ந.க. துறைவன்
ந.க. துறைவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 608
Join date : 27/02/2014

Back to top Go down

ந.க.துறைவனின் புதுக் கவிதைகள் Empty Re: ந.க.துறைவனின் புதுக் கவிதைகள்

Post by ஜனனி Sun Mar 30, 2014 6:56 am

ந.க. துறைவன் wrote:இல்லீங்க லோகு....
அப்படியா ?
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

ந.க.துறைவனின் புதுக் கவிதைகள் Empty Re: ந.க.துறைவனின் புதுக் கவிதைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum