TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 4:08 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Wed May 08, 2024 11:33 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 07, 2024 3:00 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


புதைகிறது குளத்தில் கட்டிய அடுக்குமாடி கட்டடம் : அரசு அதிகாரிகள் கடும் அதிர்ச்சி

3 posters

Go down

புதைகிறது குளத்தில் கட்டிய அடுக்குமாடி கட்டடம் : அரசு அதிகாரிகள் கடும் அதிர்ச்சி Empty புதைகிறது குளத்தில் கட்டிய அடுக்குமாடி கட்டடம் : அரசு அதிகாரிகள் கடும் அதிர்ச்சி

Post by மாலதி Sun Apr 04, 2010 5:50 am

புதைகிறது குளத்தில் கட்டிய அடுக்குமாடி கட்டடம் : அரசு அதிகாரிகள் கடும் அதிர்ச்சி Tbltopnews1_68874323369



கோவை
: அரசு சார்பில் கோவை அம்மன் குளத்தில் கட்டிய அடுக்குமாடி கட்டடம்,
கட்டுமானப்பணி பெரும்பகுதி முடிந்த நிலையில், மண்ணில் புதைய துவங்கியது,
அரசு அதிகாரிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜவஹர்லால் நேரு தேசிய நகர புனரமைப்புத்
திட்டப்படி, கோவை மாநகரில் ஏழை மக்களுக்கு வீடு கட்டித்தரும் பணி
நடக்கிறது. உக்கடத்தில் 2,904 வீடுகளும், அம்மன் குளத்தில் 936 வீடுகளும்,
118 கோடி ரூபாயில் கட்டப்படுகின்றன. கடந்த 1989ல் வருவாய்த்துறையால்
நத்தம் புறம்போக்காக மாற்றப்பட்ட அம்மன் குளம், இப்போது மழை பெய்தாலும்
வெள்ளக்காடாக மாறி விடும். ஒரு காலத்தில், தண்ணீர் நிரம்பியிருந்த
குளத்தில், சிறிது சிறிதாக ஆக்கிரமிப்புகள் ஏற்பட்டன. அதை பயன்படுத்தி,
அரசும் குளத்தை மேடாக்கி, கட்டடம் கட்டும் வேலையை துவக்கியது. அம்மன்
குளத்தில், முதலில் 44 கோடி ரூபாய் மதிப்பில் 1,608 வீடு கட்ட முடிவானது.
ஆனால், மொத்தமுள்ள 15 ஏக்கரில், ஏழு ஏக்கரை மட்டுமே காலி செய்ய
முடிந்ததால், 936 வீடுகள் மட்டுமே கட்டப்படுகின்றன; மீதமுள்ள 672 வீடுகள்,
உக்கடம் பகுதிக்கு மாற்றப்பட்டு விட்டன. அம்மன் குளத்தில், தரை தளம்
மற்றும் மூன்று தளங்களுடன் 18 அடுக்கு மாடிக் குடியிருப்பு கட்ட பணி
நடந்து வருகிறது. ஈரோட்டைச் சேர்ந்த 'எஸ்.பி.சுந்தரசாமி அன் கோ' என்ற
நிறுவனம், பணி மேற்கொள்கிறது.

கடந்த ஆகஸ்ட்டில் துவங்கிய இந்த பணியை, வரும்
ஜூனுக்குள் முடிப்பது அரசின் திட்டம். செம்மொழி மாநாட்டுக்கு முன்பாக,
இந்த வீடுகளை பயனாளிகளிடம் ஒப்படைக்க வேண்டுமென்ற காரணத்தால், இரு
இடங்களிலும் பணிகள் அதி தீவிரமாக நடக்கின்றன. கட்டுமானப் பணி முடிந்து
விட்டது, பூச்சு, உள் அலங்கார வேலை மட்டுமே மிச்சமிருக்கின்றன.
இந்நிலையில், அம்மன்குளத்தில் கட்டப்படும் 18 அடுக்கு மாடிக்
குடியிருப்புகளில், இரண்டு கட்டடங்கள் லேசாக சாய்ந்திருப்பதை, அப்பகுதி
மக்கள் நேற்று பார்த்து பெரும் அதிர்ச்சியடைந்தனர். நேற்று முன் தினமே,
இந்த கட்டடத்தில் வேலை பார்த்த சிலர், கட்டடம் ஆடுவதை உணர்ந்துள்ளனர்.
நேற்று காலையில் அந்தத் தகவல் பரவியதும், அங்கு பெரும் கூட்டம் கூடியது.
அரசு கட்டிய அடுக்குமாடி கட்டடம் சாய்வதை அறிந்து, மக்கள் ஆவேசம் அடைவதை
கண்டதும், அங்கு பணியிலிருந்து குடிசை மாற்று வாரிய அலுவலர்கள் நகர்ந்து
விட்டனர். போலீசார் அங்கு குவிந்தனர். ஒலி பெருக்கியில், 'எல்லோரும் அந்த
இடத்தை விட்டு நகர்ந்து விடுங்கள்' என்று எச்சரித்தனர். வேடிக்கை பார்க்க
வந்த மக்கள் கூட்டத்தைத் துரத்தினர்.

சிறிது நேரத்தில் மாநகராட்சி கமிஷனர் அன்சுல்
மிஸ்ரா, இன்ஜினியர்கள் பூபதி, லட்சுமணன், சுகுமார் வந்தனர். சாய்ந்த
கட்டடத்தையும், சாயாத கட்டடத்தையும் கயிற்றால் அளந்து, இரு கட்டடங்களும்
ஒன்று முதல் ஒன்றரை அடி வரை, மண்ணில் புதைந்திருப்பதை அவர்கள்
கண்டறிந்தனர். அவர்கள் இருக்கும்போதே, கலெக்டர் உமாநாத் அங்கு வந்தார்.
அவரும், இரு கட்டடங்களையும் பார்த்து விட்டு, 'இதை இடிக்காமல் காப்பாற்ற
வழி இருக்கிறதா' என்று கேட்க, 'வாய்ப்பில்லை' என்று மாநகராட்சி
இன்ஜினியர்கள் கூறினர். அவர்களைத் தொடர்ந்து, அங்கு வந்த அமைச்சர்
பழனிச்சாமியும், கட்டடம் சாய்ந்திருப்பதை உறுதி செய்தார்.

அவர் கூறுகையில், ''எனது தொகுதிக்குட்பட்ட
அம்மன் குளத்தில், ஜவஹர்லால் நேரு தேசிய நகர புனரமைப்புத் திட்டத்தில்
கட்டிய கட்டடம், அரை மீட்டர் அளவுக்கு சாய்ந்திருப்பதாகத் தகவல் வந்தது.
இப்போது பார்த்ததில் தலா 24 வீடுகள் கொண்ட 2 'பிளாக்' கட்டடங்கள்
சாய்ந்துள்ளன. அவற்றை இடித்து விட்டு, மீண்டும் மண் பரிசோதனை செய்து,
பாதுகாப்பான இடத்தில் இந்த வீடுகள் கட்டப்படும்,'' என்றார். செம்மொழி
மாநாட்டுக்கு முன்பாக, இந்த வீடுகளைக் கட்டி முடித்து, பயனாளிகள் வசம்
ஒப்படைக்க அரசு முடிவு செய்திருந்த நிலையில், திடீரென இந்த கட்டடங்கள்
மண்ணில் புதைந்திருப்பது, மக்களிடம் மட்டுமின்றி, அதிகாரிகளையும்
அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.

மண் பரிசோதனை செய்தோம்!
'நீர் நிலை இருந்த பகுதிகளில் அடுக்கு மாடிகளைக் கட்டக்கூடாது' என்று
சுற்றுச்சூழல் அமைப்புகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. ஆனால், இதை
அரசும், மக்களும் ஏற்பதில்லை. அதன் விளைவாக, இப்போது இந்த பாதிப்பு
ஏற்பட்டுள்ளது. ஒரு வேளை, இந்த வீடுகள் கட்டி முடித்து, பயனாளிகளிடம்
ஒப்படைத்த பின், ஏதாவது விபரீதம் நடந்திருந்தால், உயிர் பலி ஏற்பட்டிருக்க
வாய்ப்புண்டு. இவ்வளவு பெரிய கட்டடம் கட்டுவதற்கு முன்பாக, மண் பரிசோதனை
செய்யப்பட்டிருக்க வேண்டும். 'அந்த சோதனை சரியாக செய்யப்பட்டதா' என்று
தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய நிர்வாகப் பொறியாளர் கோபியிடம் கேட்டபோது,
''முறைப்படி மண் பரிசோதனை செய்து, கட்டடம் கட்ட ஏற்ற பகுதி என்று தெரிந்த
பின்பே, பணியைத் துவக்கினோம். அது மட்டுமின்றி, மூன்றரை மீட்டர்
ஆழத்துக்கு அஸ்திவாரமும் போடப்பட்டுள்ளது. திடீரென கட்டடம் இறங்குவது
எங்களுக்கே புரியாத புதிராகவுள்ளது,'' என்றார்.

இன்று மீண்டும் ஆய்வு? 'மண்
பரிசோதனை ஏற்கனவே செய்யப்பட்டுள்ளது' என்று தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய
அதிகாரிகள் கூறினாலும், திடீரென இப்படி கட்டடம் இறங்கியிருப்பது, பெரும்
அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. அதனால், ஒரு கட்டடத்துக்கு 1.2 கோடி
வீதமாக, இரண்டு அடுக்கு மாடிக் குடியிருப்புக் கட்டடங்களை இடிக்க 2.4 கோடி
ரூபாய் வீணாகிறது. இதை ஒப்பந்ததாரர் ஏற்க வேண்டுமென்கிறார் அமைச்சரும்,
இந்த தொகுதி எம்.எல்.ஏ.வுமான பழனிச்சாமி. மண் பரிசோதனை செய்து கொடுத்த
அரசுத்துறை மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்பது தெரியவில்லை. 936
வீடுகள் கட்டி முடிக்கப்பட்ட நிலையில், இன்று இந்த இடத்திலுள்ள மண்ணின்
தன்மையை அறிய சென்னை அண்ணா பல்கலையில் இருந்து நிபுணர்கள் குழு வருவதாக
கலெக்டர் உமாநாத் தெரிவித்தார். ஒரு வேளை, 'இந்த மண்ணுக்கு நான்கு மாடிக்
கட்டடத்தைத் தாங்கும் சக்தியில்லை' என்று அந்தக் குழுவினர் சொன்னால்,
இங்கு கட்டப்பட்ட கட்டடங்கள் அனைத்தும் இடிக்கப்படுமா என்ற கேள்வியும்
எழுகிறது. அரசு தான் பதில் சொல்ல வேண்டும்.

அங்கே பிரச்னை இல்லை; அமைச்சர்:
இந்தப் பகுதியில் பல ஆண்டுகளாக வசிக்கும் மக்கள், தங்கள் வாழும்
இடத்துக்குப் பட்டா வேண்டுமென்று கோருகின்றனர். ஆனால், ஒரு வீட்டுக்கு 2
லட்சத்து 77 ஆயிரம் ரூபாய் செலவழித்து அரசு, இலவச வீடே கட்டித்தருகிறது.
பல லட்ச ரூபாய் மதிப்புள்ள வீடாக இருந்தாலும், 'பாதுகாப்பு இருக்குமா'
என்ற அச்சம், மக்களிடம் எழுந்துள்ளது. இதனால், மற்ற வீடுகளிலும் மக்கள்
குடியேறுவார்களா என்ற சந்தேகமும் கிளம்பி இருக்கிறது. அப்பகுதியைச்
சேர்ந்த ஜான்சிராணி (26) என்ற வக்கீல் கூறுகையில், ''எங்களுக்கு பட்டா
கொடுத்தால் போதும்; பாதுகாப்பற்ற வீடு தேவையில்லை,'' என்றார். மற்ற
வீடுகளில் மக்கள் குடியேற பயப்படுவது குறித்து, அமைச்சர் பழனிச்சாமியிடம்
கேட்டபோது, ''இந்த இரண்டு பிளாக் மட்டும் தான் பிரச்னை; மற்ற கட்டடங்களில்
பிரச்னையில்லை; இருப்பினும், எல்லாவற்றையும் நன்கு சோதித்த பின்பே,
மக்களிடம் ஒப்படைக்கப்படும்,'' என்றார்.

இதுதான் அந்த கட்டடம்!
ஜே.என்.என்.யு.ஆர்.எம். திட்டத்தில் ஓராண்டுக்கு முன்பே, கட்டத் துவங்கி
விட்ட இந்த வீடுகளைத்தான், செம்மொழி மாநாட்டுக்காக கோவையில் 3,840 வீடுகள்
கட்ட, முதல்வர் உத்தரவிட்டதாக அரசு தரப்பில் செய்தி வெளியிடப்பட்டது.
இதுபற்றி, சட்டசபையிலும் பிரச்னை கிளப்பப்பட்டது. செம்மொழி மாநாடுக்காக
இதைக் கட்டாவிட்டாலும், அதற்கு முன்பாக முடித்து, பயனாளிகளிடம்
ஒப்படைக்கலாம் என்று அரசு திட்டமிட்டிருந்தது. இந்த சூழலில், கட்டடம்
மண்ணுக்குள் புதைந்து வருவது அரசுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

புதைகிறது குளத்தில் கட்டிய அடுக்குமாடி கட்டடம் : அரசு அதிகாரிகள் கடும் அதிர்ச்சி Empty Re: புதைகிறது குளத்தில் கட்டிய அடுக்குமாடி கட்டடம் : அரசு அதிகாரிகள் கடும் அதிர்ச்சி

Post by Rikaz Sun Apr 04, 2010 1:46 pm

போயும் குளத்திலா கட்டிடம் கட்டுவது?
Rikaz
Rikaz
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 662
Join date : 28/01/2010

Back to top Go down

புதைகிறது குளத்தில் கட்டிய அடுக்குமாடி கட்டடம் : அரசு அதிகாரிகள் கடும் அதிர்ச்சி Empty Re: புதைகிறது குளத்தில் கட்டிய அடுக்குமாடி கட்டடம் : அரசு அதிகாரிகள் கடும் அதிர்ச்சி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» அணு உலை குறித்து எதிர்ப்பாளர்கள் எழுப்பும் கேள்விகள்: அதிகாரிகள் அதிர்ச்சி
» இனி ஓய்வூதியம், பணிக்கொடை கிடைக்காது: அரசு ஊழியர்கள் கடும் அதிர்ச்சி
» அடுக்குமாடி கட்டடங்களில் 'சோலார்' மின் உற்பத்தி கட்டாயம் - தமிழக அரசு
» "கார்களில் கருப்பு கண்ணாடியை அகற்ற தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்; இல்லாவிடில் கடும் நடவடிக்கை எடுக்க நேரிடும்," என காவல்துறைக்கு உச்சநீதிமன்றம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆனால் இன்று கரூர் அரசு சுகாதாரத்துறையில் கண்ட காட்சி...
» நக்ஸல்கள் கூட்டத்தில் அதிகாரிகள்: உள்துறைச் செயலர் அதிர்ச்சி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum